Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 70
  • Views 5.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஆபிரகாம் லிங்கன், கென்னடி வரிசையில் இப்போது ட்ரம்ப் ........! சிறந்த பழங்களைத்தான் வண்டு துளைக்கும், திறமையான ஜனாதிபதிகளை குண்டு துளைப்பது அமெரிக்காவில் ஒன்றும் புதிதல்ல.......அமெரிக்காவுக்கும் அ

  • இந்த றம்போ அல்லது பைடனோ தமிழினத்தை ஒரு கருத்தாக எடுத்ததாகவே தெரியவில்லை. இருவரும் ஆட்சியில் இருந்தவரும் இருப்பவருமாக உள்ளனர். அவர்களுக்கு தத்தமது கவலை. அமெரிக்காவில் தீர்மானங்களை அரசுத்தலைவர்கள் எடுப்

  • குமாரசாமி
    குமாரசாமி

    இருண்ட தருணங்களிலிருந்து மீண்ட ரம்ப் அவர்கள் நலமடைய வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயக நாட்டில், சனநாயகத்தைப் போற்றும் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சனநாயகத்திற்கெதிரான கொலை முயற்சி. 

அப்போ,.. சனநாயகம் ...சனநாயகம் என்று கூவியதெல்லாம் பொய்யா கோபாலு? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

Trump ஐச் சுற்றியுள்ள ஒருவருக்குமே காயம் இல்லையா? 

எங்கேயோ இடிக்குதே,......

சுட்டவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்,.....

😁

உங்களுக்கு எந்த இடத்திலை இடிக்குது எண்டு சொன்னால் நல்லது :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

Trump ஐச் சுற்றியுள்ள ஒருவருக்குமே காயம் இல்லையா? 

எங்கேயோ இடிக்குதே,......

சுட்டவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்,.....

😁

சுட்டால் சாகணும் அப்பதான் எங்கட சனம் நம்பும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாலி said:

இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் அமெரிக்க மக்களின் வோட்டிங் ட்ரென்ட் பெருமளவில் மாறும் அல்லது ஸிம்பதியை உருவாகும் என நான் கருதவில்லை. சில மாகாணங்கள் எப்பொழுதுமே குடியரசு கட்சி அல்லது ஜனநாய கட்சியின் கோட்டைகளாக இருப்பவை அவற்றின் மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஸ்விங்க் ஸ்டேட்ஸ் தான் தீர்மானம் செய்யப்போகின்ற மாநிலங்கள். அப்படியான ஸ்விங்க் ஸ்டேட்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் ஒருவேளை மாற்றம் ஏற்படலாம். மற்றும்படி பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை.  நல்லதொரு  வலுவான வேட்பளரை நிறுத்தினால் ட்ரம்ப் தோற்கடிக்கப்படலம்.

👍.......

ட்ரம்ப் அவர்களின் கையில் எதுவும் இல்லை. எல்லாம் பைடனின் கையில் தான் உள்ளது. இன்றைய நிலையில் பைடன் நினைத்தால் மட்டுமே ட்ரம்ப் அடுத்த அதிபராக வருவது தவிர்க்கப்படலாம். இந்த வாரம் சூட்டின் சூட்டை ஆற விட்டு, அடுத்த வாரம் பைடன் தான் போட்டியிலிருந்து விலகுவதாக சொன்னால், இறங்கின ரேட்டிங் மீண்டும் ஏறும்.

என்ன ஆனாலும் கலிஃபோர்னியாவில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த மாநிலத்திற்கு எவரும் பிரச்சாரத்திற்கு கூட வருவதில்லை.........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சுட்டால் சாகணும் அப்பதான் எங்கட சனம் நம்பும். 😜

ஒன்று இரண்டு பேர் இறந்ததாகச் செய்திகள் வருகின்றன.

ஆனால் Trump தப்பிவிட்டார். அந்த அளவில் மகிழ்ச்சியே.. 

தாக்குதலாளியைக் கொன்றுவிட்டதால் இந்திய அரசியல்வாதிகள் போன்று எல்லாவற்றையும் இழுத்து மூடிவிடுவார்கள். 

😁

  • கருத்துக்கள உறவுகள்

451507210_883023580529282_22837395838490

 

451108406_883014153863558_51886350248936

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6864.jpeg.1eb6200d989a7748885e

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இறந்திருக்கவேண்டும் - துப்பாக்கி; பிரயோகத்தின் பின்னர் வழங்கிய முதல்பேட்டியில் டிரம்ப்

Published By: RAJEEBAN   15 JUL, 2024 | 12:50 PM

image

படுகொலை முயற்சியிலிருந்து உயிர்தப்பியமை குறித்து தனது மன உணர்வை பகிர்ந்துகொண்டுள்ள  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நான் இறந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நியுயோர்க் போஸ்டிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது முழங்கையில் ஏற்பட்டுள்ள பெரிய காயத்தை செய்தியாளருக்கு காண்பித்துள்ளதுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தன்னை பாதுகாக்க முயன்றவேளை இந்த காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வலதுகாதை சுற்றி தளர்வான பெரும் பான்டேஜ் உடன் டிரம்ப் காணப்பட்டார் அவரை படம்பிடிக்க முடியாது என அவரது பணியாளர்கள் தெரிவித்தனர் என நியுயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

நான் இறந்திருக்க வேண்டும் நான் இங்கே இருக்ககூடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

newyorj_post.jpg

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் மீண்டும் எழுந்து தனது கைமுஷ்டியை உயர்த்தி முகத்தில் இரத்தக்காயத்துடன்  போராடுவோம் என தான் கோசமிடுவதை காண்பிக்கும் புகைப்படம்குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் இது தாங்கள் பார்த்ததிலேயே மிகச்சிறந்த புகைப்படம் என தெரிவிக்கின்றார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னரும் நான் தொடர்ந்து உரையாற்ற விரும்பினேன் ஆனால் இரகசிய சேவை பிரிவினர் நான் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என தெரிவித்தனர் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/188497

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலாளியை நேரே கண்டவர்கள் கூறுவது,......

Trump மீதான கொலை முயற்சிகள் மேலும் தொடரவே வாய்ப்புகள் அதிகம்,...ஏனென்றால் உலக நடப்புகள் அப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சி,..👆

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

Trump கொல்லப்பட வேண்டும் என விரும்பிய அமெரிக்கப்  பிரபலங்கள். 👆

https://x.com/JoeBiden/status/1806745000971296833

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க உளவு துறை மிக பலவீனமாக இருக்க வேண்டும். ஏனேனில் 20 வயது பையன் திட்டமிட்டு தனியே சுட்டிருக்கிறார்.
அல்லது அடுத்த ஜனாதிபதியாகாமல் நீதிமன்றம், வழக்குகள் போட்டு ட்ரம்மை உள்ளே போடமுடியாததால் கொலை முயற்சி எனும் தெரிவை எடுத்து இருக்கலாம்.
வேறு தெரிவுகள்???

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

சனநாயக நாட்டில், சனநாயகத்தைப் போற்றும் மக்களால் மேற்கொள்ளப்பட்ட சனநாயகத்திற்கெதிரான கொலை முயற்சி. 

அப்போ,.. சனநாயகம் ...சனநாயகம் என்று கூவியதெல்லாம் பொய்யா கோபாலு? 

அமெரிக்காவில் காவ‌ல்துறைக்கே அதிக‌ம் சுட்டு இருக்கின‌ம் ர‌வுடிக‌ள்..................டென்மார்க் நாட்டில் காவ‌ல்துறை மீது கைவைக்க‌வே ர‌வுடிக‌ள் தொட்டு மாபியா கும்ப‌ல் ப‌ய‌ப்பிடுவின‌ம்.........................

அமெரிக்கா சிறைக‌ளில் அதிக‌ கைதிக‌ள் இருக்கின‌ம்

முர‌ட்டுத‌ன‌மாய் வாக‌ன‌த்தை ஓட்டுவ‌து அந்த‌ ர‌வுடிய‌ பிடிக்க‌ குறைந்த‌து 8 காவ‌ல்துறை வாக‌ன‌ம் ம‌ற்றும் கெலிக‌ப்ட‌ர்...................

உயிருக்கு உத்த‌ர‌வாத‌ம் இல்லாத‌ நாடு தான் அமெரிக்கா அதுக்கு கார‌ண‌ம் ஆயுத‌ம் யாரும் வேண்ட‌லாம் என்ர‌ ச‌ட்ட‌த்த‌ கொண்டு வ‌ந்த‌ ப‌டியால்....................இப்ப‌ முன்பு போல‌ ஆயுத‌ங்க‌ள் பெரிசா வேண்ட‌ முடியாது என்று நினைக்கிறேன்.....................ஒபாமா ஆட்சியின் போது ம‌ன‌ நோயாளி சிறுவ‌ர்க‌ள் ப‌டிக்கும் பாட‌சாலைக்குள் புகுந்து சுட்ட‌தில் ப‌ல‌ சிறுவ‌ர்க‌ள் சிறுமிக‌ள் இற‌ந்து போனதுக‌ள்

அதுக்கு பிற‌க்கு ஒபாமா குடுத்த‌ பேட்டியில் ஆயுத‌ம் ம‌க்க‌ள் வேண்டும் முறையில் திருத்த‌ம் செய்ய‌னும் என்று சொன்னார் அது ந‌டை முறைக்கு வ‌ந்து இருக்க‌ கூடும்👍....................... 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6864.jpeg.1eb6200d989a7748885e

இந்த நாட்டுக்கு இரண்டு முகங்கள்............. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி, 2 மகள்களை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த நபர் - டிரம்ப் கூட்டத்தில் என்ன நடந்தது?

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மைக் வெண்ட்லிங்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தின் போது, பார்வையாளர்களில் ஒருவர் தனது குடும்பத்தைப் பாதுகாக்க முயன்றபோது இறந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

50 வயதான கோரே கம்பெரடோர், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டபோது, தனது குடும்ப உறுப்பினர்களைக் காக்க அவர்கள் மீது பாய்ந்தார். அப்போது அவர் மீது குண்டு பாய்ந்ததில் இறந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘ஹீரோவாக இறந்தார்’

"கோரே ஒரு ஹீரோவாக இறந்தார்," என்று பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பார்வையாளர் கூட்டத்தில் மேலும் இருவர் சுடப்பட்டனர். அவர்கள் 57 வயதான டேவிட் டச்சு, மற்றும் 74 வயதான ஜேம்ஸ் கோபன்ஹேவர் என்று பென்சில்வேனியா மாகாண போலீசார் தெரிவித்தனர். இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது

பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ, உயிரிழந்த கோரே கம்பெரடோரின் மனைவி மற்றும் இரண்டு மகள்களிடம் தான் பேசியதாகக் கூறினார்.

கோரே கம்பெரடோர், டிரம்ப் பேரணியில் குடும்பத்தைக் காப்பாற்ற முயன்றபோது கொல்லப்பட்ட நபர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,கோரே கம்பெரடோர்

"கோரே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்குச் செல்வார்," என்று அவர் கூறினார். "கோரே தனது சமூகத்தை நேசித்தார். குறிப்பாக, அவர் தனது குடும்பத்தை நேசித்தார்,” என்றார் அவர்.

கோரே கம்பெரடோர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்றும், அவர் சனிக்கிழமை நடந்த பேரணியில் கலந்துகொள்வதில் உற்சாகமாக இருந்ததார் என்றும் கவர்னர் ஷாபிரோ கூறினார்.

“கோரே நம்மில் மிகச் சிறந்த ஒருவர். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்,” என்று கவர்னர் ஷாபிரோ கூறினார்.

"நேற்று இரவு நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசியல் கருத்து வேறுபாடுகளை வன்முறை மூலம் ஒருபோதும் தீர்க்க முடியாது," என்றார் அவர்.

 
பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பென்சில்வேனியா கவர்னர் ஜோஷ் ஷாபிரோ

‘உதவும் குணம் படைத்தவர்’

பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள பட்லர் நகரில் டிரம்பின் பேரணி நடைபெற்றது. அந்த இடத்திலிருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ள சார்வர் என்ற பகுதியில் கம்பெரடோர் வசித்து வந்ததாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

தன்னார்வலராக தீயணைப்புப் பணியில் ஈடுபடுவதுடன், பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தில் திட்டப்பணி மற்றும் கருவி பொறியாளராகவும் பணிபுரிந்தார் என்று அவரது சமூக ஊடக சுயவிவரங்கள் தெரிவிக்கின்றன.

"அவர் ஒரு நல்ல மனிதர்," என்று அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் மாட் அகிலிஸ் என்பவர் பிட்ஸ்பர்க் ட்ரிப்யூன்-ரிவியூ என்ற பத்திரிகையிடம் கூறினார்.

"நாங்கள் அரசியல் கருத்துகளில் ஒத்துப்போகாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதையும் மீறி அவர் ஒரு நல்ல நண்பராகவும், சிறந்த அண்டை வீட்டுக்காரரகவும் இருந்தார்," என்றார் அகிலிஸ்.

"நான் மருத்துவமனையில் இருந்தபோது அவர் மருத்துவச் செலவுகளுக்காகப் பணத்தை நன்கொடையாக வழங்கினார். எங்கள் வீட்டு முற்றத்தில் நாங்கள் ஏற்பாடு செய்யும் சந்தைக்கு அவர் எப்போதும் வருவார். நான் அவரது வீட்டைக் கடந்து செல்லும் போது அவர் எப்போதும் ஹலோ சொல்வார்,” என்று அகிலிஸ் கூறினார்.

 
டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) முன்னாள் அமெரிக்க டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது

சுடப்பட்ட எட்டு குண்டுகள்

காயமடைந்த மற்ற இருவரது குடும்பங்களில் ஒருவரது குடும்பத்தினரிடம் பேசியதாகவும் கவர்னர் ஷாபிரோ கூறினார். ஆனால் அந்த உரையாடல் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பேரணியில் சுடப்பட்ட ஆறு முதல் எட்டு துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று, முன்னாள் அதிபர் டிரம்பின் காதில் பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர், சம்பவம் நடந்த இடத்திலேயே டிரம்பைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரகசிய சேவை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Trump-ஐ சுட்டது இவர் தான்; FBI சொல்லும் நபரின் பின்னணி என்ன? யார் இந்த Thomas Maththew crooks?

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில்,  பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பார்வையாளர் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.  டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 20 வயது மதிக்கத்தக்க தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞரின் பெயரை எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.   தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவரின் பின்னணி என்ன? 

 

  • கருத்துக்கள உறவுகள்

451315394_883445840487056_66706407625971

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதியான தனிமையான தொடர்ந்து கேலி செய்யப்பட்ட சிறுவன் மேத்யூ.. டிரம்ப்பை சுட்ட இளைஞனின் பின்னணி!

அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னால் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிசூடு நடந்தது. குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது.

அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதை எதிர்த்து அவர் எழுதியிருந்த பேப்பர் குறிப்பை பார்பதற்காக அவர் சற்று தலைசாய்த்த நிலையில் நூலிழையில் உயிர்பிழைந்தார். அவர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த தோமஸ் மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. சீக்ரட் சர்வீஸ் பாதுகாவலர்கள் சுட்டதில் மேத்யூ க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயரிலிழந்தார். அவரைப் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

மேத்யூ மிகவும் தனிமையான அமைதியான சமூகத் தொடர்பு இல்லாத பையன் என்று அவனது சக மாணவர்கள் கூறுகின்றனர். எனவே மேத்யூவுக்கு நண்பர்களும் இல்லை. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சரியாக குறிவைக்கும் திறன் இல்லாததால் மேத்யூ நிராகரிக்கப்பட்டுள்ளான். அவனது தோற்றத்தை வைத்து சக மாணவர்கள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்து வம்பிழுத்து வந்துள்ளனர்.

அவன் அணியும் உடைகளை வைத்தும் அவனை அவர்கள் தொடர்ந்து சீண்டியுள்ளனர். தனது தந்தையின் AR ஸ்டைல் செமி ஆட்டோமேட்டிக் ரைபிளை பயன்படுத்தியே மேத்யூ டிரம்பை சுட்டுள்ளான் என்று விசாரணையில் தெரிகிறது. மேலும் அவனது காரில் சில வெடிகுண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் மேத்யூவின் டிரம்பை சுட்டதற்கு எந்த வலுவான காரணமும் இல்லை. எந்த சித்தாந்தத்தின் மீதும் மேத்யூ ஈடுபாடு காட்டவில்லை என்றும் தன்னிச்சையாகவே இந்த செயலில்ஈடுபட்டுள்ளான் என்றும் விசாரணையில் தெரியவருகிறது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேத்யூ கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது.

https://thinakkural.lk/article/306146

  • கருத்துக்கள உறவுகள்

 

ட்ரம்பின் கொலை முயற்சியில் ஈரான் பின்னணியில் உள்ளதாக  சி என் என் (CNN)கூறியுள்ளதாம். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீ. என். என் இப்போது நல்லாய்த்தான் முக்குகின்றது. 😁

கடந்த பல மாதங்களாக அமெரிக்காவில் என்ன நடைபெற்று வருகின்றது என்பது உன்னிப்பாக அவதானிக்கும் அனைவரும் அறிந்ததே. 

டொனால்ட் ரிரம்ப்பை படு கேவலப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக வழக்குகள் தொடுத்தும் குற்றம் சுமத்தியும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பை ஓரம் கட்டினார்கள். ஒதுக்கப்படவேண்டிய கீழ்த்தரமான மனுசன் என நிறுவ படாதபாடு பட்டார்கள். அவர் குடும்பமே வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாவற்றையும் முடியுமான அளவு முடக்கினார்கள்.

இவ்வளவற்றையும் தாண்டி சிங்கம் கர்ச்சித்து எழுந்தது. இப்போது டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு அமோக ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது. எலான் மாஸ்க் மாதம் 40 மில்லியன் டாலர்கள் தொகையை டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒதுக்கி உள்ளார். 

டொனால்ட் டிரம்ப் மீது வெறுப்பை தூண்டியதில் சீ. என். என் ஊடகத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளி சீ. என். என். போன்ற இடது சாரி ஊடகங்களினால் மண்டை கழுவப்பட்ட ஒருவராக விளங்க வாய்ப்பு அதிகம். 

இப்போது தாம் நல்ல பிள்ளை ஆட்டம் காண்பிக்க ஈரான் கதை அளக்கின்றார்கள். 

எவ் பி ஐ தாங்கள் ஏன் டிரம்ப் அவர்கள் சுடப்பட்ட, கொலையாளி உட்கார்ந்த கூரையை கண்காணிக்கவில்லை என்பதற்கு தகுந்த பதில் இல்லை. டிரம்ப் அவர்கள் பாதுகாப்பு விடயத்தில் வேண்டுமென்றே உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்றே கருதவேண்டி உள்ளது. 

இனி ஈரானை இதற்குள் செருகி அதற்குள் ஒளிந்து கொள்ள வேண்டியதுதான். 

ஆனால் ஒன்று ஜனாதிபதியாக சிங்கம் மீண்டும் வந்ததும் டிரம்ப் அவர்களுக்கு எதிராக கூடி நின்று கும்மி அடித்தவர்கள் அனைவரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று கால் பிடரியில் அடிக்க ஓடப்போகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பை சுட்டது சுட்து என்று எல்லோருமே மக்களுக்கு சூட்டைக் கிளப்புகிறர்கள், உண்மை அதுவல்ல… டிரம்பிற்கு சிறுவயதிலேயே காதுகுத்தி விழா கொண்டாடியிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திராது. இன்றைய நவீன உலகில் நவீனமுறையில் மேத்தியூ துப்பாக்கியால் டிரம்புக்கு காதுகுத்தியுள்ளார் அவ்வளவே.🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டதால் அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது - அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்

Published By: RAJEEBAN   17 JUL, 2024 | 11:02 AM

image

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளமை தெரியவந்ததை தொடர்ந்து அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கும் ஈரானின் திட்டத்திற்கும் எந்த தொடர்புமில்லை எனவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 20வயது தோமஸ் மத்தியு குரூக்கினால் எப்படி டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்ள முடிந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

trump_assa_12.jpg

ஈரானினால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கும் டிரம்பின் பிரச்சார குழுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானினால் எழுந்துள்ள அச்சுறுத்தலை தொடர்ந்து ஜூன் மாதம் டிரம்பிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் சிபிஎஸ்ஸிற்கு தெரிவித்துள்ளனர்.

மேலதிக பதில் தாக்குதல் பிரிவினர் டிரம்பின் பாதுகாப்பு பிரிவிற்குள் இணைக்கப்பட்டனர், பதில் சினைப்பர் தாக்குதல் பிரிவினரும் சேர்க்கப்பட்டனர் மேலதிக ஆளில்லா விமானங்கள் மோப்பநாய்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு தகவல் மூலம் டிரம்ப்பை கொலை செய்வதற்கான ஈரானின் முயற்சி குறித்த விபரங்கள் தெரியவந்ததாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

2020 ம் ஆண்டு ஈராக்கில் ஈரானின் முக்கிய இராணுவ தளபதி காசிம் சொலைமானியை கொலை செய்வதற்கான ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதை தொடர்ந்து டிரம்ப் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/188655

  • கருத்துக்கள உறவுகள்

இந்த றம்போ அல்லது பைடனோ தமிழினத்தை ஒரு கருத்தாக எடுத்ததாகவே தெரியவில்லை. இருவரும் ஆட்சியில் இருந்தவரும் இருப்பவருமாக உள்ளனர். அவர்களுக்கு தத்தமது கவலை. அமெரிக்காவில் தீர்மானங்களை அரசுத்தலைவர்கள் எடுப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் வெறும் அம்புகள். கொள்கைவகுப்பாளர்களால் தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் வில்லிலே வென்றுவருபரை ஏற்றிவிடுவர். 

பாவம் தமிழினம் யே.ஆர் காலம்முதல் இன்றைய ரணில் காலம்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படிச் சிங்கள அரசுகளுக்கு முட்டுக்கொடுத்துவருகிறது என்பதை உற்றுநோக்கினால் இவர்களுக்காகவா என்று தோன்றும்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

 

ட்ரம்பின் கொலை முயற்சியில் ஈரான் பின்னணியில் உள்ளதாக  சி என் என் (CNN)கூறியுள்ளதாம். 

 

 

நல்லா வாயில வருகுது,......😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.