Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

மேற்கத்தையவர்களிடம் அறம் இருந்தால் உலகில் கலவரங்களும் போர்களும் மனித அழிவுகளும் நடக்கக்கூடாது அல்லவா?

அறம் இல்லாமலா அண்ணா இத்தனை லட்சம் பேர் இங்கே எமது வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளோம். 

  • Replies 142
  • Views 10.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது..  சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்து

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதை

  • குமாரசாமி
    குமாரசாமி

    விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன். நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால்  அவதிப்படும் மக

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே தமக்கென்று  உயர்தர வாழ்க்கையை அமைத்து கொண்டவர்கள் பச்சை பொய் சொல்வது அறம் அற்ற செயல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவரை எப்படி இந்திய வம்சாவளி கூற முடியும்? இவரது தகப்பன் ஜமேக்கா. தாய் இந்தியா. வம்சம் என்று தகப்பன் வழியைத்தானே கூறுவார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு - துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி

22 JUL, 2024 | 02:51 PM
image
 

திருவாரூர்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதிர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதிர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதியாக  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார்.

பின்னர் அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன்  வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கமலா ஹாரீஸ் கடந்த 2019 ம் ஆண்டு "Truth Be Hold'' என்ற புத்தகத்தில் தனது தாத்தா . கோபாலன் தனக்கு ஊக்க சக்தியாக இருந்ததாகவும் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது தாத்தாவுக்கு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டது இன்றளவும் தனது நினைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதிலிருந்து தனது பொது வாழ்க்கைக்கு இந்திய வம்சாவளி உறவுகள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளதை உணர்ந்திருக்கிறார் என அவரது உறவினர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள்.

https://www.virakesari.lk/article/189090

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அங்கே தமக்கென்று  உயர்தர வாழ்க்கையை அமைத்து கொண்டவர்கள் பச்சை பொய் சொல்வது அறம் அற்ற செயல்.

உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது.. 

சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

அறம் இல்லாமலா அண்ணா இத்தனை லட்சம் பேர் இங்கே எமது வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளோம். 

விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன்.
நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால்  அவதிப்படும் மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள்.
காசா மக்களிடம் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி....
ஆபிரிக்க நாடுகளில் போய் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி...

விசுகர்! அறத்தையும் நன்றிக்கடனையும் ஒரே தராசில் வைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஏராளன் said:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு - துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி

22 JUL, 2024 | 02:51 PM
image
 

திருவாரூர்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதிர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதிர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதியாக  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார்.

பின்னர் அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன்  வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கமலா ஹாரீஸ் கடந்த 2019 ம் ஆண்டு "Truth Be Hold'' என்ற புத்தகத்தில் தனது தாத்தா . கோபாலன் தனக்கு ஊக்க சக்தியாக இருந்ததாகவும் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது தாத்தாவுக்கு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டது இன்றளவும் தனது நினைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதிலிருந்து தனது பொது வாழ்க்கைக்கு இந்திய வம்சாவளி உறவுகள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளதை உணர்ந்திருக்கிறார் என அவரது உறவினர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள்.

https://www.virakesari.lk/article/189090

அமெரிக்காவை கடவுள் காக்க,....🤣

UK யில் ஒரு ரிசி சுனாக் பசு மூத்திரம் குடித்து பதவியிழந்துபோனார். அடுத்தது,...USA யில் ஒரு கமலா மாமி,...😁

2 hours ago, குமாரசாமி said:

மேற்கத்தையவர்களிடம் அறம் இருந்தால் உலகில் கலவரங்களும் போர்களும் மனித அழிவுகளும் நடக்கக்கூடாது அல்லவா?

மேற்குலகிடம் "வியாபாரம்" என்பது மட்டுமே உள்ளது. 

தமிழர்களிடம் மட்டும்தான் அறம், நன்றிக்கடன்,  உண்மை போன்ற சொற்பதங்கள் உள்ளனவோ,? 

ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் பிரபாகரன் அவர்கள் " நாங்கள் அறத்தின் வழி நின்று போராடுபவர்கள்" என்று சாரப்பட கூறுவது வழமை என்று நினைக்கிறேன். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Kapithan said:

உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது.. 

சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். 

 

இரவு பகல் பாராமல்,குளிர் தாங்கமுடியாமல் 12,13 மணித்தியாலங்கள் வேலை செய்து அளவிற்கு மிஞ்சிய வரிகள் கட்டி வாழும் வாழ்க்கையை உயர்தர வாழ்க்கை என்றால் என்ன செய்வது? 🤣

தலைக்கு மிஞ்சிய கடனை வைத்துக்கொண்டு உயர்தர வாழ்க்கை என்றால்.....? 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது.. 

சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். 

 

 

7 minutes ago, குமாரசாமி said:

இரவு பகல் பாராமல்,குளிர் தாங்கமுடியாமல் 12,13 மணித்தியாலங்கள் வேலை செய்து அளவிற்கு மிஞ்சிய வரிகள் கட்டி வாழும் வாழ்க்கையை உயர்தர வாழ்க்கை என்றால் என்ன செய்வது? 🤣

தலைக்கு மிஞ்சிய கடனை வைத்துக்கொண்டு உயர்தர வாழ்க்கை என்றால்.....? 😂

தரமான பதில்👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இரவு பகல் பாராமல்,குளிர் தாங்கமுடியாமல் 12,13 மணித்தியாலங்கள் வேலை செய்து அளவிற்கு மிஞ்சிய வரிகள் கட்டி வாழும் வாழ்க்கையை உயர்தர வாழ்க்கை என்றால் என்ன செய்வது? 🤣

தலைக்கு மிஞ்சிய கடனை வைத்துக்கொண்டு உயர்தர வாழ்க்கை என்றால்.....? 😂

உயர்தர வாழ்க்கை வாழ்பவர்கள் யாரென்று தேடினால் அவர்கள் எல்லோரும் வரி ஏய்ப்புச் செய்யும் வாய்ப்பைக் கொண்டிருப்போரே.

எங்கள் போன்ற முதலாம் தலைமுறையினரில் வரிஏய்ப்புச் செய்ய வாய்ப்புகள் உள்ளவர்கள் மாத்திரமே (Professionals தவிர) வசதியாக வாழ முடியும்.  12/7  வேலை செய்வோர் அந்த வகுப்பிற்குள் வரார் . 

1 hour ago, குமாரசாமி said:

இரவு பகல் பாராமல்,குளிர் தாங்கமுடியாமல் 12,13 மணித்தியாலங்கள் வேலை செய்து அளவிற்கு மிஞ்சிய வரிகள் கட்டி வாழும் வாழ்க்கையை உயர்தர வாழ்க்கை என்றால் என்ன செய்வது? 🤣

தலைக்கு மிஞ்சிய கடனை வைத்துக்கொண்டு உயர்தர வாழ்க்கை என்றால்.....? 😂

உயர்தர வாழ்க்கை வாழ்பவர்கள் யாரென்று தேடினால் அவர்கள் எல்லோரும் வரி ஏய்ப்புச் செய்யும் வாய்ப்பைக் கொண்டிருப்போரே.

எங்கள் போன்ற முதலாம் தலைமுறையினரில் வரிஏய்ப்புச் செய்ய வாய்ப்புகள் உள்ளவர்கள் மாத்திரமே (Professionals தவிர) வசதியாக வாழ முடியும்.  12/7  வேலை செய்வோர் அந்த வகுப்பிற்குள் வரார் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அப்பிடி பார்த்தால் கிலாரி கிளின்ரன் அப்பவே வெண்டிருக்க வேணும் எல்லோ?

ஆமாம் நிச்சியமாக,.......ஆனால் அவரை தோற்கடித்து  அமெரிக்கா தேர்தல் முறை     மாறாக ரம்புடன்.   இல்லை     🤣😂அமெரிக்காவில் பெரும்பான்மை வெற்றியை தீர்மானிப்பது இல்லை  ....வாக்கு வீதம் குறைந்தாலும்.  அங்கத்தவர்கள். எண்ணிக்கை கூட  எடுக்கலாம்  அப்படி தான் வென்றது   மற்றும்படி   ரம்புக்கு   மக்கள் செல்வாக்கு கிடையாது” 😂🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன்.
நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால்  அவதிப்படும் மக்களிடம் போய் கேட்டுப்பாருங்கள்.
காசா மக்களிடம் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி....
ஆபிரிக்க நாடுகளில் போய் கேட்டுப்பாருங்கள் மேற்குலகின் அறம் பற்றி...

விசுகர்! அறத்தையும் நன்றிக்கடனையும் ஒரே தராசில் வைக்க முடியாது.

இந்த நாட்டில் நான் உள் நுழைய அவர்கள் அனுமதித்தது அவர்கள் பல நாடுகள் ஒன்றிணைந்து கையொப்பம் இட்ட அறம் சார்ந்த புரிந்து உணர்வு ஒப்பந்தம். 

எனது பிறந்த மண்ணில் எனக்கு மறுக்கப்பட்ட, தரப்படாத கட்டுப்பாடு அற்ற கல்வி, வேலைவாய்ப்பு, மதம் மற்றும் சமநீதி எந்த விதத்திலும் இவர்களுடன் தொடர்பற்ற எனக்கு தந்து ஏற்றது இவர்களது அறம்.

இவ்வளவையும் அனுபவித்த படி அவர்களுக்கு நன்றியுடன் இருப்பது எனது அறம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இந்த நாட்டில் நான் உள் நுழைய அவர்கள் அனுமதித்தது அவர்கள் பல நாடுகள் ஒன்றிணைந்து கையொப்பம் இட்ட அறம் சார்ந்த புரிந்து உணர்வு ஒப்பந்தம். 

எனது பிறந்த மண்ணில் எனக்கு மறுக்கப்பட்ட, தரப்படாத கட்டுப்பாடு அற்ற கல்வி, வேலைவாய்ப்பு, மதம் மற்றும் சமநீதி எந்த விதத்திலும் இவர்களுடன் தொடர்பற்ற எனக்கு தந்து ஏற்றது இவர்களது அறம்.

இவ்வளவையும் அனுபவித்த படி அவர்களுக்கு நன்றியுடன் இருப்பது எனது அறம். 

உங்கள் அறத்திலிருந்து வரும் நன்றியுணர்ச்சி தொடர்பாக எவருக்கும் சந்தேகம் இல்லை. 

மேற்கு ஏன் அகறிகளை ஏற்றுக்கொள்கிறது என்றும் அதன் பின்னால் அவர்களுக்கு உள்ள தேவையும் தங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

உங்கள் அறத்திலிருந்து வரும் நன்றியுணர்ச்சி தொடர்பாக எவருக்கும் சந்தேகம் இல்லை. 

மேற்கு ஏன் அகறிகளை ஏற்றுக்கொள்கிறது என்றும் அதன் பின்னால் அவர்களுக்கு உள்ள தேவையும் தங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். 

இதைப் போல பேசுவதற்கு நீங்கள் வெட்கப்படணும். 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

உயர்தர வாழ்க்கை வாழ்பவர்கள் யாரென்று தேடினால் அவர்கள் எல்லோரும் வரி ஏய்ப்புச் செய்யும் வாய்ப்பைக் கொண்டிருப்போரே.

எங்கள் போன்ற முதலாம் தலைமுறையினரில் வரிஏய்ப்புச் செய்ய வாய்ப்புகள் உள்ளவர்கள் மாத்திரமே (Professionals தவிர) வசதியாக வாழ முடியும்.  12/7  வேலை செய்வோர் அந்த வகுப்பிற்குள் வரார் . 

உயர்தர வாழ்க்கை வாழ்பவர்கள் யாரென்று தேடினால் அவர்கள் எல்லோரும் வரி ஏய்ப்புச் செய்யும் வாய்ப்பைக் கொண்டிருப்போரே.

எங்கள் போன்ற முதலாம் தலைமுறையினரில் வரிஏய்ப்புச் செய்ய வாய்ப்புகள் உள்ளவர்கள் மாத்திரமே (Professionals தவிர) வசதியாக வாழ முடியும்.  12/7  வேலை செய்வோர் அந்த வகுப்பிற்குள் வரார் 

திருப்தி என்பது அவரது மனதில் உள்ளது.  உங்கள் மனதின் ஆழத்தை அளக்க முடிகிறது. அதற்கு உங்களுக்கு இடம் தந்தவன் பொறுப்பல்ல...

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

இதைப் போல பேசுவதற்கு நீங்கள் வெட்கப்படணும். 

 

20 minutes ago, விசுகு said:

திருப்தி என்பது அவரது மனதில் உள்ளது.  உங்கள் மனதின் ஆழத்தை அளக்க முடிகிறது. அதற்கு உங்களுக்கு இடம் தந்தவன் பொறுப்பல்ல...

நன்றி  😁

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

திருப்தி என்பது அவரது மனதில் உள்ளது.  உங்கள் மனதின் ஆழத்தை அளக்க முடிகிறது. அதற்கு உங்களுக்கு இடம் தந்தவன் பொறுப்பல்ல...

சரி என்பதை சரி என்றும்  என்றும் பிழை என்பதை பிழை என்று கூறாமல் வாயைப் பொத்திக்கொண்டிருக்க என்னால் முடியாது. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். 

ஆமாம் உண்மை   ..   சட்டத்தின் ஆட்சி அறமில்லைய??  அறம் இல்லாமல் எப்படி  சட்டத்தின் ஆட்சியை கொடுக்க முடியும்??    

மேற்கின்.  பிழை யாதுவெனில்.  ரசியா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்  வடகொரியா,   ...........போன்ற நாடுகளில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது       அதற்காக உழைப்பது    இது அறமற்ற. செயலாக.  தெரிகிறது   அவ்வளவுதான் 

மேற்கு. அமைதியாக பார்த்து கொண்டிருந்தால்  அனேகமான. இடங்களில் குறிப்பாக கண்டிப்பாக சட்டத்தின் ஆட்சி இல்லாத இடங்களில்  அனுதினமும். 

முள்ளிவாய்க்கால் ஆக  இருக்கும்   பிறகும்,.......  .. மேற்கை தான்  குற்றச்சாட்டுவீர்கள்.    ஏன் முள்ளிவாய்க்கால் தடுக்கவில்லையென்று    உங்களின் நிரந்தரத் தொழில்  மேற்கை   குற்றச்சாட்டுவது  அது   மேற்கு என்ன செய்தாலும்   குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கவே முடியாது 🙏

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kandiah57 said:

மேற்கின்.  பிழை யாதுவெனில்.  ரசியா ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்  வடகொரியா,   ...........போன்ற நாடுகளில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது       அதற்காக உழைப்பது    இது அறமற்ற. செயலாக.  தெரிகிறது   அவ்வளவுதான் 

நீங்கள் குறிப்பிடும்  அல்லது சில நாடுகளில் மட்டும் தான் உங்கள் மேற்குலகு அறத்தை அமுலாக்க விரும்புகின்றது.😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். 

 

சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளை   உங்கள் இந்த பதில் தெளிவாக சுட்டி காட்டியுள்ளது   அதாவது   இலங்கை தமிழர்கள் வாழத நாடுகள்  சட்டத்தின் ஆட்சி அற்ற நாடுகள்  ......அந்த நாடுகள் தொடர்ந்தும் அப்படியே இருக்க வேண்டும் என்று கருத்துகள் எழுதுவது தான் கொடுமை   

1 minute ago, குமாரசாமி said:

நீங்கள் குறிப்பிடும்  அல்லது சில நாடுகளில் மட்டும் தான் உங்கள் மேற்குலகு அறத்தை அமுலாக்க விரும்புகின்றது.😂

ஆமாம் உண்மை ஒவ்வென்றாகத். தான்   செய்யலாம் 

வழமைபோல கபிதன்.  திரியை   திறமையாக. திட்டமிடப்பட்ட முறையில்  திசை திருப்பி விட்டார் 🤣🙏

இனி அமெரிக்கா தேர்தல் செய்திகளை எதிர்பார்க்கிறேன்…நீங்கள்    ??? 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

சரி என்பதை சரி என்றும்  என்றும் பிழை என்பதை பிழை என்று கூறாமல் வாயைப் பொத்திக்கொண்டிருக்க என்னால் முடியாது. 

😁

என்ன வாக்குறுதிகளை கொடுத்து இங்கே நுழைந்தீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் மீண்டும் படியுங்கள். நான் எனது வாக்குறுதிகளை ஒருபோதும் மறப்பதில்லை. எனது அபாய காலங்களில் கை கொடுத்தோரை உயிர் உள்ளவரை தூசிப்பதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

இந்த நாட்டில் நான் உள் நுழைய அவர்கள் அனுமதித்தது அவர்கள் பல நாடுகள் ஒன்றிணைந்து கையொப்பம் இட்ட அறம் சார்ந்த புரிந்து உணர்வு ஒப்பந்தம். 

இதே அறம் பல எமது உறவுகளை திருப்பி அடாத்தாக மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி  அனுப்பும் போது எங்கே போனது?
உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயமா?

 

1 hour ago, விசுகு said:

எனது பிறந்த மண்ணில் எனக்கு மறுக்கப்பட்ட, தரப்படாத கட்டுப்பாடு அற்ற கல்வி, வேலைவாய்ப்பு, மதம் மற்றும் சமநீதி எந்த விதத்திலும் இவர்களுடன் தொடர்பற்ற எனக்கு தந்து ஏற்றது இவர்களது அறம்.

அப்படியாயின் சந்திரிக்காவின் சொல் கேட்டு புலம்பெயர் தமிழர்களின் குரலாக இருந்த ரிரிஎன் தொலைக்காட்சியின் குரலை நசுக்கினார்களே ஏன்?

1 hour ago, விசுகு said:

இவ்வளவையும் அனுபவித்த படி அவர்களுக்கு நன்றியுடன் இருப்பது எனது அறம். 

அதேதான் என் கருத்தும். நன்றியுடன் இருப்பது எனது அறம். அதற்காக தவறுகளை விமர்ச்சிக்காமல்,சுட்டிக்காட்டாமல் இருப்பது அடிமைத்தனம்.
ஒட்டுமொத்த ஜேர்மனியர்களும் உக்ரேன் போரை விரும்பவில்லை.அவர்களில் நானுமொருவன் அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அந்த குற்றச்செயல்களுக்கு இன்றுவரை ஏதாவது விசாரணைகள் வழக்குகள் நடந்ததா? 

ரம்பின் தேர்தல்நேரம் கில்லாரியை உள்ளே போடு என்ற கோசம் எழுந்தது.ஆனாலும் தவறவிட்டு விட்டார்.

இந்த தடவை வென்றால் ஜனநாயகக் கட்சியினரை கண்ணுக்குள் விரல்விட்டு ஆட்டுகிறாரோ தெரியவில்லை.

அனேகமாக கில்லாரியைத் தூக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்த தடவை வென்றால் ஜனநாயகக் கட்சியினரை கண்ணுக்குள் விரல்விட்டு ஆட்டுகிறாரோ தெரியவில்லை.

அனேகமாக கில்லாரியைத் தூக்கலாம்

சென்ற கிழமை ஜேர்மன் பத்திரிகையில் எதிர்வு  எழுதியிருந்தார்கள். டொனால்ட் ரம்பின்  பழைய நடவடிக்கைகளை கிளறி எடுத்து வழக்கு போடும் வரைக்கும் உதவிபுரிந்தவர் கிலாரி தான் என்ற ஒரு கதையும் உண்டு.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

சென்ற கிழமை ஜேர்மன் பத்திரிகையில் எதிர்வு  எழுதியிருந்தார்கள். டொனால்ட் ரம்பின்  பழைய நடவடிக்கைகளை கிளறி எடுத்து வழக்கு போடும் வரைக்கும் உதவிபுரிந்தவர் கிலாரி தான் என்ற ஒரு கதையும் உண்டு.

கடந்த தேர்தலில் ரம் எங்கு  பிரச்சாரத்துக்கு போனாலும்

Lock her up

lock her up

என்று கத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

US-ல் அடுத்தடுத்து மாறும் காட்சிகள்; அதிபர் தேர்தலில் விலகிய Biden - என்ன தான் நடக்கிறது?

Joe Biden Drops Out : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.