Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரசோதரன் said:

இவர்களின் ஆதாய அரசியலுக்கு எங்களை ஒரு ஆயுதமாகவே இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

💯 நீங்கள் சொன்னது முழுக்க உண்மை.

மீன் களவு எடுக்க வருவதற்கு எதிராக அங்கே யாராவது வாய திறப்பார்களா மாட்டார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்படியா உண்மை நிலைமை. நான் சீமான் சொல்கின்ற கதைகளை கேட்டு வைகோ நெடுமாறனுக்கு பதிலாக சீமான் தான் பக்கத்தில் இருந்திருப்பார் என்று நினைத்துவிட்டேன்.

ஆமாம் வை.கோ  வும் நெடுமாறனும்.  பல ஆண்டுகளாக விடுதலை புலிகள் வளர்வதற்க்கு  எந்தவொரு எதிர்பார்ப்புகள் இல்லாமல்  தமிழ் உணர்வுடன் உதவி செய்தவர்கள்   இதனாலெல்லாம் இந்தியா காவல்துறையினர் பல. கெடுபிடிகளை  கொடுத்து உள்ளார்கள்  அதை எல்லாம் பொறுமையுடன் அனுபவித்துக்கொண்டு  தொடர்ந்தும்  உதவியாக இருந்தார்கள்  இன்றும் கூட அவர்கள் மாறவில்லை  சீமான் அப்படியல்ல  புலிகள் வளர்த்தாதின். பிற்பாடு இணைந்து கொண்டார்.  

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரசோதரன் said:

இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் 'ஆதாய அரசியல்' தான் செய்கின்றார்கள் என்பதில் நாங்கள், ஈழத்தமிழர்கள், ஒரே கருத்தையே கொண்டிருக்கின்றோம். இவர்களின் ஆதாய அரசியல் பெரும்பாலும் இவர்களின் குடும்ப உறவுகளின், வாரிசுகளின் மேம்பாட்டை நோக்கியே. இவர்களில் ஒரு சிலர், இரண்டாம் பட்சமாக, அவர்கள் சார்ந்த சாதி சனங்களிற்காகவும் சில அரசியல் முடிவுகளை எடுக்கின்றனர், உதாரணம்:  பாமகவின் உள் ஒதுக்கீட்டு கோரிக்கை.

முழு தமிழ்நாட்டிற்கு என்றோ, அங்கு வாழும் எல்லா தமிழர்களுக்கும் என்றோ இவர்களிடம் ஒரு பரந்த பார்வை கிடையாது. அப்படியான இவர்கள் ஈழத்தமிழர்களான எங்களை மட்டும் எவ்வாறு பரந்த ஒரு பார்வையுடன் அணுகுகின்றார்கள் என்று நாங்கள் நினைக்கவேண்டும்? இவர்களின் ஆதாய அரசியலுக்கு எங்களை ஒரு ஆயுதமாகவே இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

சரி, என்னவானாலும் இவர்களால் எங்களுக்கு, எங்கள் நோக்கத்திற்கு நன்மை ஏதாவது கிடைத்தால், அது நல்லது தானே என்று நாங்கள் நினைக்கலாம். ஆனால் மிக நெருக்கடியான நேரத்தில், அதே சுய ஆதாயம் கருதி, இவர்கள் எங்களை கைவிடவும் கூடும் அல்லவா.......... கைவிட்டார்கள் என்று தானே நாங்கள் நினைக்கின்றோம்.

தங்கள் தகுதிக்கு மீறிய விடயங்களை நம்பிக்கைகளாக ,பொய்யான வாக்குறுதிகளாக இவர்கள் எல்லோரும் எங்களின் தலைமைக்கு கொடுத்தும் இருக்கலாம் அல்லவா, ஏனென்றால் இவர்களின் முதல் மற்றும் இரவு பகல் தேவை இவர்களின் ஆதாய அரசியல் மட்டுமே, நாங்கள் அல்ல.   

என‌க்கு என்ன‌மோ தெரிய‌ல‌
க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளாக‌ 
த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் மீது அதிக‌ வெறுப்பாய் இருக்கு...........................நேர்மை இல்லா ம‌னித‌ர்க‌ள் அர‌சிய‌லில் இருந்தால் வ‌ள‌ந்தாப் பிற‌க்கு அவ‌ங்க‌ள் எந்த‌ எல்லைக்கும் போவின‌ம்......................எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா☹️............த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ப‌ல‌ மாத்தையா ப‌ல‌ க‌ருணாக்க‌ள் இருக்கின‌ம்☹️...............................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு என்ன‌மோ தெரிய‌ல‌
க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளாக‌ 
த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் மீது அதிக‌ வெறுப்பாய் இருக்கு...........................நேர்மை இல்லா ம‌னித‌ர்க‌ள் அர‌சிய‌லில் இருந்தால் வ‌ள‌ந்தாப் பிற‌க்கு அவ‌ங்க‌ள் எந்த‌ எல்லைக்கும் போவின‌ம்......................எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா☹️............த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ப‌ல‌ மாத்தையா ப‌ல‌ க‌ருணாக்க‌ள் இருக்கின‌ம்☹️...............................

வீரப்பையன் நீங்க சோர்ந்துபோகக்கூடாது. செந்தமிழன் சீமான் அண்ணாவின் ஆடியோக்கள் சில வெளியாகியிருக்கு. இன்னும் சில இனிவரும் காலங்களில் வெளியாக இருக்கு.  இந்த நேரத்தில செந்தமிழன் அண்ணாவுக்காக நீங்கள் உற்சாகமாகக் களமாடவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

அதில் இருந்த உயர்மட்ட அரசியல் தலைவர்கள் உயிரோடு இருந்திருந்தாலாவது  தடை நீக்கத்தை பயன்படுத்தி பழைய  தவறுகளை களைந்து விடுதலைப்புலிகளை மீள அரசியல் அமைப்பாக உருவாக்கி பழைய அனுபவங்களுடனும் புதிய  தந்திரோபாயங்களுடன்  கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படியான நேர்மையான அரசியல் போராளித் தலைவர்கள் எவரும் இன்று இல்லை

இதில் எனக்கு உடன்பாடு எப்போதுமே உண்டு. புலிகள் அமைப்பின் தடை நீக்கப்பட்டால்  புலிகளின் பெயரில் மீண்டும் இயங்க போகிறவர்கள் மிக எளிதாக இந்திய இலங்கை அற்ப சலுகைகளுக்கு வீழ்வார்கள், ஏனெனில் அப்போதிருந்த இரும்பு கோட்டை இப்போது இல்லை,

ஆனானப்பட்ட தலைவன் இருந்தபோதே இந்திய இலங்கை அற்ப சலுகைகளுக்காக  அவர்கள் வலையில் வீழ்ந்த மாத்தையா- கருணா உருவாகியபோது இப்போது எஞ்சிருக்கும் உறுப்பினர்கள் நேர்மை ஆற்றல் எல்லாம்  எந்த மூலைக்கு? அவர்கள் நெஞ்சுரம் நேர்மையாக செயல்படுவார்கள் என்று எதை வைத்து எதிர்பார்ப்பது?

11 hours ago, நிழலி said:

விடுதலைப் புலிகள் என்பது கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால், ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் குறியீடு. எம் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக அடையாளப்படுத்தி வைத்திருக்கும் முறைமை இது. அவர்கள் மீதான தடை என்பது, ஈழத்தமிழர்களின் தமிழ் தேசிய போராட்டத்தின் மீதான தடையாகும்.  எம் மக்களின் உரிமைப் போராட்டத்தின் மீதான தடையாகும். 

ஒரு பேச்சுக்கு இந்தியாவில் விடுதலைபுலிகளின் தடை நீக்கப்பட்டாலும், விடுதலைபுலிகள் வைத்திருந்த நியாயமான கோரிக்கைகளை இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களும் மாறி மாறி வரும் அரசுகளும் ஒருபோதும் ஏற்று எம் பக்கம் நிற்காது, எந்த காலமும் அவர்கள் தமது பிராந்திய நலன் சார்ந்து இலங்கை அரசுகூடவே நிற்பார்கள்.

அதுவும் சீனாவா இந்தியாவா இலங்கைக்கு நெருக்கம் என்று காண்பிக்க நடக்கும் தற்கால போட்டியில் எந்தகாலமும் தமிழர்களுக்காகவும்  தமிழர் தரப்பில் உறுதியாக நின்ற விடுதலைபுலிகளுக்காகவும்   ஒருபோதும் எம் நலனை மைய்யபடுத்தி இயங்கவே மாட்டார்கள்.

புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கினாலும் இலங்கையில் புலிகள் மீதான தடை இருக்கும்போது எந்த வகையிலும் புலிகள் அமைப்பின்  பெயரால் அதன் கொள்கைகளை அரசியலை யாரும் இலங்கையில் தொடர முடியாது.

அப்படி அவர்களின் நியாயமான போராட்டத்தை கோரிக்கைகளை தொடர்வதென்றால் சர்வதேச ஆதரவு அழுத்ததுடனேயே தொடர முடியும், அதற்கு சர்வதேசம் முழுவதுமே புலிகளுக்கு தடை இருக்கும்போது எந்த வகையில் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதற்கும் அதன் தொடர்ச்சி அரசியல் செய்வதற்கும் சாத்தியம்?

எத்தனை இழப்புகளை சந்தித்திருந்தாலும், எத்தனை வசதிகளை சிங்களவன் ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் இன்றுவரை தமிழர்பகுதியின் எந்த மக்களோ போராளிகளோ எமது இயக்கத்தையும் தலைமையையும் குறை சொல்வதே இல்லை, அந்த ஒரு தடை நீக்கம் மட்டும்தான்  எப்போதும் நீடிக்கும் நாம் சாகும்வரை.

மற்றும்படி அனைத்துமே இன்றுபோல் என்றும் வாழும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சீமானும் ஈழப்பிரச்சனையை தன் அரசியலில் சேர்க்காமல் இதர  கொள்கைகளை முன்னெடுத்திருந்தால் உச்சிக்கு சென்றிருப்பார்.

ஈழம் எனும் ஒரு சாக்கடை.

ஈழம் என்பது தமிழின் மறுவடிவம். தமிழ் இனிமையான தேனாகும். இதை நான்மட்டும் சொல்லவில்லை, ஆன்றோரும் சான்றோரும் அறிந்தோரும் இன்றுவரை சொல்கிறார்கள். தேன் தேனாகவே இனிமையுடன் இருக்கும், அது சிலவேளை பழுதடைந்தால் அதற்குக் காரணமும் இதர உயிரினங்களே! 

தேன் தானாக உற்பத்தியாவதில்லை அதனைப் பூக்களே உற்பத்தி செய்கின்றன. உற்பத்திசெய்யும் பூக்கள் வாடும், அழுகும், சருகாகும் ஆனால் தேன் தேனாகவே இருக்கும். ஈழம் ஈழமாகவே இருக்கும். பூக்களைப்போல் வந்த, வரும் மனிதர்களை வைத்து ஈழத்தைக் குறைகாண்பது தவறு.🤔🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

இதில் எனக்கு உடன்பாடு எப்போதுமே உண்டு. புலிகள் அமைப்பின் தடை நீக்கப்பட்டால்  புலிகளின் பெயரில் மீண்டும் இயங்க போகிறவர்கள் மிக எளிதாக இந்திய இலங்கை அற்ப சலுகைகளுக்கு வீழ்வார்கள், ஏனெனில் அப்போதிருந்த இரும்பு கோட்டை இப்போது இல்லை,

ஆனானப்பட்ட தலைவன் இருந்தபோதே இந்திய இலங்கை அற்ப சலுகைகளுக்காக  அவர்கள் வலையில் வீழ்ந்த மாத்தையா- கருணா உருவாகியபோது இப்போது எஞ்சிருக்கும் உறுப்பினர்கள் நேர்மை ஆற்றல் எல்லாம்  எந்த மூலைக்கு? அவர்கள் நெஞ்சுரம் நேர்மையாக செயல்படுவார்கள் என்று எதை வைத்து எதிர்பார்ப்பது?

ஒரு பேச்சுக்கு இந்தியாவில் விடுதலைபுலிகளின் தடை நீக்கப்பட்டாலும், விடுதலைபுலிகள் வைத்திருந்த நியாயமான கோரிக்கைகளை இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களும் மாறி மாறி வரும் அரசுகளும் ஒருபோதும் ஏற்று எம் பக்கம் நிற்காது, எந்த காலமும் அவர்கள் தமது பிராந்திய நலன் சார்ந்து இலங்கை அரசுகூடவே நிற்பார்கள்.

அதுவும் சீனாவா இந்தியாவா இலங்கைக்கு நெருக்கம் என்று காண்பிக்க நடக்கும் தற்கால போட்டியில் எந்தகாலமும் தமிழர்களுக்காகவும்  தமிழர் தரப்பில் உறுதியாக நின்ற விடுதலைபுலிகளுக்காகவும்   ஒருபோதும் எம் நலனை மைய்யபடுத்தி இயங்கவே மாட்டார்கள்.

புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கினாலும் இலங்கையில் புலிகள் மீதான தடை இருக்கும்போது எந்த வகையிலும் புலிகள் அமைப்பின்  பெயரால் அதன் கொள்கைகளை அரசியலை யாரும் இலங்கையில் தொடர முடியாது.

அப்படி அவர்களின் நியாயமான போராட்டத்தை கோரிக்கைகளை தொடர்வதென்றால் சர்வதேச ஆதரவு அழுத்ததுடனேயே தொடர முடியும், அதற்கு சர்வதேசம் முழுவதுமே புலிகளுக்கு தடை இருக்கும்போது எந்த வகையில் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதற்கும் அதன் தொடர்ச்சி அரசியல் செய்வதற்கும் சாத்தியம்?

எத்தனை இழப்புகளை சந்தித்திருந்தாலும், எத்தனை வசதிகளை சிங்களவன் ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும் இன்றுவரை தமிழர்பகுதியின் எந்த மக்களோ போராளிகளோ எமது இயக்கத்தையும் தலைமையையும் குறை சொல்வதே இல்லை, அந்த ஒரு தடை நீக்கம் மட்டும்தான்  எப்போதும் நீடிக்கும் நாம் சாகும்வரை.

மற்றும்படி அனைத்துமே இன்றுபோல் என்றும் வாழும்.

தவறான கருத்து 

தடையை முதல் முதல் போட்டது இந்தியா. எனவே அவர்கள் தடையை முதலில் எடுப்பது தான் ஆரம்பமாக இருக்கவேண்டும். மற்றவை தானே விலகும். 

இதுவரை இலங்கையின் அழுத்தம் அல்ல தொடர்வதற்கும் புதுப்பித்தலுக்கும். இந்தியாவே முதன்மை.

மற்றும் தடை எடுப்பினால் எதுவும் மாற்றப் போவதில்லை என்ற உங்கள் கருத்தை கண்டிக்கிறேன் . சாபப்பட்ட இனமாக நாம் செத்துவிட வேண்டுமா????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மற்றும் தடை எடுப்பினால் எதுவும் மாற்றப் போவதில்லை என்ற உங்கள் கருத்தை கண்டிக்கிறேன் . சாபப்பட்ட இனமாக நாம் செத்துவிட வேண்டுமா????

விசுகு அண்ணா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? தடையை எடுக்கவேண்டியதில்லை என்ற தொனியில் நான் எதும் கூறவில்லை, தடை எடுக்கப்படும் நிலை வந்தாலும் புலிகள் அமைப்பின் தொடர்ச்சியாக அதனை முன்பிருந்த அர்ப்பணிப்பு கட்டுக்கோப்பு  நேர்மை துணிச்சலுடன் தொடர்ந்து நடத்தி செல்ல யாருண்டு என்பதே கருத்தாக இருந்தது,

சரி நீங்களே சொல்லுங்கள் தடை நீக்கப்படின் புலிகளின் சார்பில் அதனை வழிநடத்த  அதே அர்ப்பணிப்புடன் இன்று உங்களால் சுட்டி காட்டக்கூடிய  தலைவர்கள், உறுப்பினர்கள் யார்?

1 hour ago, விசுகு said:

தடையை முதல் முதல் போட்டது இந்தியா. எனவே அவர்கள் தடையை முதலில் எடுப்பது தான் ஆரம்பமாக இருக்கவேண்டும். மற்றவை தானே விலகும். 

இந்தியா எதற்காக புலிகளை தடை செய்தது என்பதை நீங்கள் மீண்டும் சரி பார்த்தால் இந்தியா தடையை எடுக்குமா என்பதற்கு உங்களிடமே பதில் இருக்கும்.

ராஜீவ் ஈழத்தில் செய்தது என்ன என்று நாம் வாதிடலாம் ஆனால் வட இந்திய வெறியர்களும் கட்சிகளும் ஒருபோதும் எமது குரலை செவி சாய்க்கபோவதில்லை,.

நான் சாதக பாதகங்கள் பற்றிதான் பேசுகிறேன் தடையை எடுக்ககூடாது என்ற வன்மத்தில் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

 தடையை எடுக்ககூடாது என்ற வன்மத்தில் அல்ல.

இந்த வன்மம் தற்போது எம்மவரிடேயே பேசுபொருளாகி வருகிறது. அதனால் தான் உங்களில் உரசி பார்த்தேன். நன்றி தம்பி. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2024 at 15:06, island said:

வெளிநாடுகளில் புலிகளை தமது சுய லாபத்துக்கு பயன்படுத்துயவர்களே இன்று  எஞ்சி உள்ள நிலையில் தடை நீக்கம் எதிர்மறை விளைவுகளையே ஈழத்தமிழருக்கு செய்யும்.  தவறானவர்கள் கையில் இயக்கத்தின் பெயர் செல்ல வழி வகுக்கும். எஞ்சியுள்ள மாபியாக்கள் எப்படியும் அந்த இயக்கத்தின்  பெயரை கைப்பற்றி அதனைப் பயன்படுத்தி தமது கொள்ளையை தொடர முயல்வார்கள் என்பதற்கு துவாரகா விடயம் உட்பட மேலும்  பல  சம்பவங்கள் சாட்சியம் 

யேர்மன் Esprit என்ற பாஷன் நிறுவனம் ஒன்று சுவிச்லண்டிலும் ஐரோப்பாவிலும் உள்ளது. நட்டப்பட்டு இறுதியில் முறிந்துவிட்டதாக (bankrupt) அங்கே வேலைபர்த்த ஒருவர் மூலம் அறிந்தேன்.அந்த பெயர் பிரபலமானதால் அதை பயன்படுத்தி இலாபம் அடையலாம் என்பதற்காக வேறு ஒரு பலம் கொண்ட நிறுவனம் அதை வாங்கி நடத்தலாம் என்று எதிர்பார்க்கபட்டதாம் ஆனால் அப்பபடி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் வாங்கிய நிறுவனம் இலாபம் அடைவதோடு அங்கே வேலை செய்பவர்களும் வேலையை இழந்திருக்க மாட்டார்கள்.ஆனால் இங்கே நீங்கள் இருவரும் சொன்தே சரி.  தடை நீக்கப்பட்டால் புலிகள்கட்சியை வழி நடத்த பொறுப்பானவர்கள் இல்லை. புலிகளின் பெயரை பாவித்து தமிழர்களிடம் பணம் கொள்ளை அடிப்பது தான் நடைபெறும்

 

 

13 hours ago, valavan said:

தடை நீக்கப்படின் புலிகளின் சார்பில் அதனை வழிநடத்த  அதே அர்ப்பணிப்புடன் இன்று உங்களால் சுட்டி காட்டக்கூடிய  தலைவர்கள், உறுப்பினர்கள் யார்?

 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2024 at 01:20, Kandiah57 said:

எனக்கும் பிடிக்கும்   அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை  தேடி விரும்பி வாசிப்பேன்.   எங்களை இலங்கை தமிழர்களை ஆதரித்த. காரணத்தால் தான்   இவருக்கு இந்த நிலமை.    அல்லது பல நல்ல அமைச்சர் பதவிகளை வகித்து   சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம்   

வைகோவின் மதிமுக தோன்றிய வரலாறு 2011 இல் யாழில் வந்தது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

வைகோவின் மதிமுக தோன்றிய வரலாறு 2011 இல் யாழில் வந்தது. 

 

நன்றிகள் பல. கத்தப்பு அண்ணை  அருமையான இணைப்பு   சில விடயங்கள் ஏற்கனவே வாசித்து உள்ளேன்  ...   இது மிகவும் பூரணமான. தகவல்கள் அடக்கியது 🙏🌹

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் வை கோ ஐயா.

2009 மே க்குப் பின்னான கசப்பான அனுபவங்களை மறந்து.. தேசிய தலைவர் மீது கொண்டிருந்த தார்மீக ஆதரவுக்கு மதிப்பளித்து வை கோ ஐயா மட்டுமல்ல.. தமிழக நேச சக்திகள் எல்லோரும் ஈழத்தமிழர் விடயத்தில்.. ஒருங்கிணைந்து செயற்படுதல் அவசியம்.  உள்ளூர் அரசியலில் எப்படியான அணுகுமுறைகளை கொண்டிருந்தாலும். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் வை கோ ஐயா.

2009 மே க்குப் பின்னான கசப்பான அனுபவங்களை மறந்து.. தேசிய தலைவர் மீது கொண்டிருந்த தார்மீக ஆதரவுக்கு மதிப்பளித்து வை கோ ஐயா மட்டுமல்ல.. தமிழக நேச சக்திகள் எல்லோரும் ஈழத்தமிழர் விடயத்தில்.. ஒருங்கிணைந்து செயற்படுதல் அவசியம்.  உள்ளூர் அரசியலில் எப்படியான அணுகுமுறைகளை கொண்டிருந்தாலும். 

இதுக்கு த‌மிழ‌க‌த்தில் ம‌க்க‌ள் புர‌ட்ச்சி வெடிச்சால் தான் தீர்வு கிடைக்கும் ம‌ற்ற‌ம் ப‌டி அறிக்கை விட்டு ஒன்றும் ந‌ட‌க்க‌ போவ‌து கிடையாது

 

அல்ல‌து அனைத்து த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் சேர்ந்து ஒருமித்த‌ ப‌டி குர‌ல் கொடுத்து ம‌த்திய‌ அர‌சுக்கு நெருக்க‌டி கொடுத்தால் ஏதும் ந‌ல்ல‌து ந‌ட‌க்கும் இல்லையேன் 

வைக்கோ ஜ‌யாவின் இந்த‌ அறிக்கை குப்பை தொட்டிக்கை தூக்கி போடும் க‌டுதாசி போல‌.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.