Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் 

பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . 

பல வகையான மனிதர்கள்,  பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து  கொழும்பில் உள்ள முதலாம்  குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். 

அந்த இளைஞனின்முழுப்பெயர்  பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் .

கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. .

சொற்ப வருடத்திலேயே  அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது .

கொழும்பின் மலிபன் தெருவிலே அந்த ஹோட்டல் திறக்கப்பட்டதால் , அந்த ஹோட்டலுக்கும் மலிபன் ஹோட்டல் என்ற பெயரையே சூட்டினார் திருவாளர் அப்புஹாமி அவர்கள் .

அவரது உதவி ஒத்தாசைக்கென்ன தங்களின்  சகோதரர்களான A.G.விக்ரமபால மற்றும்  A.G.ஜினதாச ஆகியோரையும் இணைத்து கொண்டார் . 

கூட்டு முயற்சியாலும் , கடின உழைப்பாலும் அவரின் வர்த்தகம் வேகமாக வளர்ந்ததோடு , அது  பல கிளைகளையும்  பரப்பியது .

மலிபன் ஹோட்டலுக்கு மக்களின்  அபிமானமும் , வரவேற்பும் பல மடங்கு பெருகுகிறது.

அதை அப்படியே தக்கவைத்துக்கொண்ட அப்புஹாமி அவர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை சிந்தித்து , செயலாற்ற தொடங்குகிறார் .

அந்த முயற்சியிலே குதிக்கிறார்  .

அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில்  , ஒரு  பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . .

பேக்கரியும் தொடங்கியாயிற்று , அங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த தரம் மற்றும் சுவை கொண்ட தயாரிப்புகளின் மதிப்பும் அதிகரிக்கிறது . 

இதனால் , ஹோட்டலுக்கு போலவே , பேக்கரிக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் , நற்பெயரும் கிடைக்கிறது .

அப்புஹாமி வழங்கிய நல்ல வியாபாரமே , வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு நல்ல மதிப்பை கொடுத்தது .

வியாபாரத்தின் தாரக மந்திரம் வாடிக்கையாளர்கள் என்றால் , அந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் கொடுப்பதும்  சிறப்பானதாய் இருக்க வேண்டும். அப்படி சிறப்பானதை கொடுத்தால் தான் , வாடிக்கையாளர்களையும் நாம் தக்க வைக்க முடியும்.

இதனை செவ்வனவே செய்தார் அப்புஹாமி , விளைவு நல்ல வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டனர் , அந்த வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டதால் , இவரின் வர்த்தக பெயரும் மக்கள் மனதில் பதிந்தது .

வாடிக்கையாளர்களும் உள்ளனர் , நல்ல பெயரும் இருக்கிறது , இது ஒரு வரமல்லவா ?

இப்போது அடுத்த கட்டத்தை பற்றி யோசித்தார் அப்புஹாமி .

ஒரு இயந்திரமயமாக்கல் மூலமான  உணவு உற்பத்தி செயல்முறையை ஆரம்பிக்க முடிவெடுக்கிறார் .

அந்த முடிவே , 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  , நாட்டின் முதலாவது  இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட  பிஸ்கட் உற்பத்தியை இலங்கை தீவுக்கு அறிமுகம் செய்கிறது .

அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் .

1935 ம் ஆண்டு  தொடக்கம் 1954 ம் ஆண்டு வரையான , வெறும் 19 ஆண்டுக்குள் ஒரு இமாலாய சாதனையே இதுவாகும் .

இன்று மலிபன் நிறுவனமானது பிஸ்கட் துறையில் மட்டுமல்ல , பால்மா வியாபாரத்திலும் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது .

சிறிய ஆரம்பமே பெரிய அடைவுகள் என்பதற்கு அப்புஹாமி மெலிபன் வீதியில் ஆரம்பம் செய்த மெலிபன் ஹோட்டலும் , இன்றைய அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறந்த எடுத்துக்காட்டு  .

முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு அப்புஹாமி நல்லதொரு உதாரணம் .

அது போல , கம்பீரமாய் வளர்ந்து நிற்கும் மலிபன் நிறுவனம் ஒரு சான்று .

படித்ததில் பிடித்தது

Copied from : Hafy Abdeen

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0N4hCg53DXZ5xmsoZEyYozSLAkkSA2kGzrfZ88qJNtoxGfS8DDadftdLBUu8h856Cl&id=100068724064386&mibextid=cr9u03

  • கருத்துக்கள உறவுகள்

61s-9L2ACOL.jpg

Maliban Cheese bits Tin 245g | Elephant House 4791034012041_large.gif?v=1716467750

s-l1200.webp

மலிபன் பிஸ்கெட்டுகளின் ரசிகன் நான். இப்போதும் இங்குள்ள  தமிழ்க்கடைக்குப் போனால்... இரண்டு பக்கற்  பிஸ்கெட்டாவது வாங்கிக் கொண்டு வருவேன். அதன் வரலாறை அறியத் தந்த ஈழப்பிரியனுக்கு நன்றி. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மலிபன் பிஸ்கெட்டுகளின் ரசிகன் நான். இப்போதும் இங்குள்ள  தமிழ்க்கடைக்குப் போனால்... இரண்டு பக்கற்  பிஸ்கெட்டாவது வாங்கிக் கொண்டு வருவேன். அதன் வரலாறை அறியத் தந்த ஈழப்பிரியனுக்கு நன்றி. 

எனது பிள்ளைகளுக்கு லெமன் பொவ் பிஸ்கட் என்றால் இப்போதும் அடிபட்டு சாப்பிடுவார்கள்.

படங்கள் இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் .

👍......

அந்த தெருவில் போனாலே மலிபனின் வாசனை வீசும்.........

1 hour ago, தமிழ் சிறி said:

61s-9L2ACOL.jpg

 

 

மலிபன் பிஸ்கெட்டுகளின் ரசிகன் நான். இப்போதும் இங்குள்ள  தமிழ்க்கடைக்குப் போனால்... இரண்டு பக்கற்  பிஸ்கெட்டாவது வாங்கிக் கொண்டு வருவேன். அதன் வரலாறை அறியத் தந்த ஈழப்பிரியனுக்கு நன்றி. 🙂

இந்த தடவை ஊரிலிருந்து வரும் போதும், எத்தனை லெமன் பிஸ்கட்டுகள் வாங்கி வந்தோம்.......... எல்லாம் முடிஞ்சுது.........😌.

இங்கே ஒரு கடை அருகிலேயே இருக்கின்றது. சிங்களவர் ஒருவர் நடத்துகின்றார். இனி இலங்கை போய் வரும் வரையும் அவர் தான் தஞ்சம்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

👍......

அந்த தெருவில் போனாலே மலிபனின் வாசனை வீசும்.........

இந்த தடவை ஊரிலிருந்து வரும் போதும், எத்தனை லெமன் பிஸ்கட்டுகள் வாங்கி வந்தோம்.......... எல்லாம் முடிஞ்சுது.........😌.

இங்கே ஒரு கடை அருகிலேயே இருக்கின்றது. சிங்களவர் ஒருவர் நடத்துகின்றார். இனி இலங்கை போய் வரும் வரையும் அவர் தான் தஞ்சம்..........

கனடாவில் மலிவு.

போனால் வாங்குங்கள்.

கனடாவிலிருந்து யாரும் வரும் போது என்ன வாங்கிவர என்றால்

லெமன் பொவ்

எனக்கு மிக்சர்உம் பகோடாவும்.

சோறு சாப்பிடும் போது கறுக்கு மொறுக்கு என்று கடிபட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மலிபன் பிஸ்கட்டுகள் தரம் சிறப்பானது.......லெமன் பவ் எல்லாம் மூன்று மூன்று பக்கட்டுகளாக சேர்த்து வைத்து விற்பனை செய்வார்கள்.......தூரப்பயணங்களுக்கு நல்லா இருக்கும்.......!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

மலிபன் பிஸ்கட்டுகள் தரம் சிறப்பானது.......லெமன் பவ் எல்லாம் மூன்று மூன்று பக்கட்டுகளாக சேர்த்து வைத்து விற்பனை செய்வார்கள்.......தூரப்பயணங்களுக்கு நல்லா இருக்கும்.......!  😁

எனது நண்பனுக்கு சுகர் வருத்தம்.அவனும் மலிபன் பிஸ்கட் சாப்பிடலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

எனது நண்பனுக்கு சுகர் வருத்தம்.அவனும் மலிபன் பிஸ்கட் சாப்பிடலாமா?

உங்கள் கேள்வி... பக்கத்து இலைக்கு பாயாசம் போலுள்ளது. animiertes-gefuehl-smilies-bild-0048.gif

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

எனது நண்பனுக்கு சுகர் வருத்தம்.அவனும் மலிபன் பிஸ்கட் சாப்பிடலாமா?

அவருக்கு மலிபன் கிறீம்கிறெக்கர் கொடுக்கலாமண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனது நண்பனுக்கு சுகர் வருத்தம்.அவனும் மலிபன் பிஸ்கட் சாப்பிடலாமா?

அதை அவர் தனது உடல் நிலையைப் பொறுத்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்......!

அது அவரது சீனி அளவைப் பொறுத்தது ....... என்வரையில் எனக்கும் சுகர் உண்டு......காலையில் ஒரு அளவான சீனி போட்ட பால்கோப்பி பின் தோட்டத்துக்குள் வேலைகள் செய்வேன்.......10 / 11 க்குள் ஒரு தேநீர் சீனியுடன் அல்லது பனங்கட்டி ஒரு துண்டு + இரண்டு பிஸ்கட் ........ மதியம் ரெண்டு மரக்கறி தயிர் அல்லது மோர், அப்பளம் +மிளகாய்யுடன்  சாப்பாடு சிறிது நேரத்தின்பின் ஒரு மணித்தியாலம் நித்திரை பின் கொஞ்சம் வீட்டு வேலைகள் 4 /5 ல் சீனி போட்ட தேநீர் +நொறுக்குத்தீனி (வாரத்துக்கு ரெண்டு விழாக்கள் நடப்பதால் பலகாரப்பைகள் எப்பவும் மேசையில் இருக்கும்).......இரவு தோசை 3, இடியப்பம் 5, இட்லி 3, நூடில்ஸ் + குஸ்குஸ் ஒரு கையளவு இவற்றுள் ஏதாவது ஒன்று ....... பின் மெட்ரோபோமின் 500 ஒன்று அல்லது இரண்டு குளிசை அதன்பின் உறக்கம்......... கண்டநேரமும் கண்டபடி சாப்பிடுவதில்லை ....... (என்னவோ தெரியாது தோசை + சாம்பல்  சாப்பிடும்போது மட்டும் பாதிகிளாஸ் கொக்கோகோலா குடிப்பேன் அது மிகவும் பிடிக்கும்...... குளிசையும் 2 போடுவேன்).........!

வீட்டில் நிக்கும் நாட்களில் இவை  தவறாமல் நடக்கும்......மற்றும்படி மகள், மகன், பெறாமக்கள் எங்க வீட்டில் நிக்க விடுகினம்.......பாதிநாட்கள் வாகனத்துடன் தெருவிலதான் சீவியம்.......அதனால் பிளாஸ்கில் கோப்பியும் பிஸ்கட்டும்தான் தெய்வம்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அதை அவர் தனது உடல் நிலையைப் பொறுத்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்......!

அது அவரது சீனி அளவைப் பொறுத்தது ....... என்வரையில் எனக்கும் சுகர் உண்டு......காலையில் ஒரு அளவான சீனி போட்ட பால்கோப்பி பின் தோட்டத்துக்குள் வேலைகள் செய்வேன்.......10 / 11 க்குள் ஒரு தேநீர் சீனியுடன் அல்லது பனங்கட்டி ஒரு துண்டு + இரண்டு பிஸ்கட் ........ மதியம் ரெண்டு மரக்கறி தயிர் அல்லது மோர், அப்பளம் +மிளகாய்யுடன்  சாப்பாடு சிறிது நேரத்தின்பின் ஒரு மணித்தியாலம் நித்திரை பின் கொஞ்சம் வீட்டு வேலைகள் 4 /5 ல் சீனி போட்ட தேநீர் +நொறுக்குத்தீனி (வாரத்துக்கு ரெண்டு விழாக்கள் நடப்பதால் பலகாரப்பைகள் எப்பவும் மேசையில் இருக்கும்).......இரவு தோசை 3, இடியப்பம் 5, இட்லி 3, நூடில்ஸ் + குஸ்குஸ் ஒரு கையளவு இவற்றுள் ஏதாவது ஒன்று ....... பின் மெட்ரோபோமின் 500 ஒன்று அல்லது இரண்டு குளிசை அதன்பின் உறக்கம்......... கண்டநேரமும் கண்டபடி சாப்பிடுவதில்லை ....... (என்னவோ தெரியாது தோசை + சாம்பல்  சாப்பிடும்போது மட்டும் பாதிகிளாஸ் கொக்கோகோலா குடிப்பேன் அது மிகவும் பிடிக்கும்...... குளிசையும் 2 போடுவேன்).........!

வீட்டில் நிக்கும் நாட்களில் இவை  தவறாமல் நடக்கும்......மற்றும்படி மகள், மகன், பெறாமக்கள் எங்க வீட்டில் நிக்க விடுகினம்.......பாதிநாட்கள் வாகனத்துடன் தெருவிலதான் சீவியம்.......அதனால் பிளாஸ்கில் கோப்பியும் பிஸ்கட்டும்தான் தெய்வம்......!   😂

அண்ணை தொடர்ந்து இரத்தச் சக்கரை அளவுகளை கண்காணிக்கிறனிங்களா? இரவு உணவின் பின் 12 மணித்தியால விரதத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் பகலில் உணவருந்தி 2 மணிநேரத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் கண்காணிப்பது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

அண்ணை தொடர்ந்து இரத்தச் சக்கரை அளவுகளை கண்காணிக்கிறனிங்களா? இரவு உணவின் பின் 12 மணித்தியால விரதத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் பகலில் உணவருந்தி 2 மணிநேரத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் கண்காணிப்பது அவசியம்.

அந்த மெஷின் இருக்கு அது வாரத்துக்கு ஒருமுறை பார்ப்பது சராசரி 120 ல் இருந்து 160 க்குள் இருக்கும்.......எனக்கு 90 க்கு கீழே போனால் உடம்பில் களைப்பு தெரியும் அப்போது ஒரு யூஸ் ஏதாவது குடிப்பது வழக்கம்........ஆயினும் கடடாயமாக  மூன்று மாதத்துக்கு ஒருதடவை வைத்தியரின் பரிந்துரையுடன் laboratoir றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை உண்டு...... அது 7 / 8க்குள் இருக்கும்......!  😁

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

அந்த மெஷின் இருக்கு அது வாரத்துக்கு ஒருமுறை பார்ப்பது சராசரி 120 ல் இருந்து 160 க்குள் இருக்கும்.......எனக்கு 90 க்கு கீழே போனால் உடம்பில் களைப்பு தெரியும் அப்போது ஒரு யூஸ் ஏதாவது குடிப்பது வழக்கம்........ஆயினும் கடடாயமாக  மூன்று மாதத்துக்கு ஒருதடவை வைத்தியரின் பரிந்துரையுடன் laboratoir றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை உண்டு...... அது 7 / 8க்குள் இருக்கும்......!  😁

நல்ல விடயம் சுவியர். ஒரு வயதுக்கு மேல்... கட்டாயம் நீங்கள் செய்வது போல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வைத்தியரின் நேரடி பார்வைக்கு சென்று வருவது சிறப்பு.  👍 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல விடயம் சுவியர். ஒரு வயதுக்கு மேல்... கட்டாயம் நீங்கள் செய்வது போல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வைத்தியரின் நேரடி பார்வைக்கு சென்று வருவது சிறப்பு.  👍 🙂

ஒரு வயதுக்கு மேல் எல்லாம் எனக்கு சர்க்கரை வியாதி வரவில்லை ......அது 66 வயதுக்கு மேல்தான் வந்தது சிறியர்.......இப்ப அதுக்கு 7 வயது இருக்கும்.........!   (இது பகிடி, சிரிக்க வேண்டும்).....!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

ஆயினும் கடடாயமாக  மூன்று மாதத்துக்கு ஒருதடவை வைத்தியரின் பரிந்துரையுடன் laboratoir றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை உண்டு...... அது 7 / 8க்குள் இருக்கும்......!  😁

எனக்கு ஏறத்தாள 15 வருடங்களாக 6-6.1-6.2 இப்படியே போகிறது.

குளிசை போடுவது நல்லது என்று டாக்ரர் சொல்லுவார்.ஏற்கனவே 1997 இல் இருந்து பல குளிசைகள் போடுறபடியால் இன்னொரு குளிசை தேவையா என்று யோசிக்கிறேன்.

ஆனாலும் 6.4 க்கு மேலே போனால் குளிசை எடுக்கத் தான் வேண்டும்.

97இல் இருந்து 3 மாதத்துக்கொரு தடவை முழு ரத்த சோதனை செய்கிறேன்.

6 minutes ago, suvy said:

ஒரு வயதுக்கு மேல் எல்லாம் எனக்கு சர்க்கரை வியாதி வரவில்லை ......அது 66 வயதுக்கு மேல்தான் வந்தது சிறியர்.......இப்ப அதுக்கு 7 வயது இருக்கும்.........!   (இது பகிடி, சிரிக்க வேண்டும்).....!  😂

எங்களுக்கும் கூட்டல் கழித்தல் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

ஒரு வயதுக்கு மேல் எல்லாம் எனக்கு சர்க்கரை வியாதி வரவில்லை ......அது 66 வயதுக்கு மேல்தான் வந்தது சிறியர்.......இப்ப அதுக்கு 7 வயது இருக்கும்.........!   (இது பகிடி, சிரிக்க வேண்டும்).....!  😂

எங்களது காலத்தில்... வேலையில் ஓய்வூதியம் பெறும் வரைக்கும் பலருக்கும் சர்க்கரை வியாதி வந்ததில்லை. அப்படி இருந்தாலும் வெகு அரிதாகவே இருக்கும். காரணம்... கடின உழைப்பு, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என நினைக்கின்றேன்.
ஆனால்  இப்போதெல்லாம்.... பாடசாலை மாணவர்களுக்கே சர்க்கரை வியாதி உள்ளது எனும் போது அதிர்ச்சியாக உள்ளது. அவர்களின் Fast Food உணவுகள், கொக்கோ  கோலா போன்ற குளிர்பானங்கள், ஒரே இடத்தில் இருந்து கைத் தோலை பேசியை நோண்டுவதாக இருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

எனக்கும் மிகவும் பிடித்த பிஸ்கட் மலிபன் பிஸ்கட்டுகள் தான். இங்கு குக்கீஸ் என்ற பெயரில் கனடியன் பிஸ்கட்டுகளை விற்பார்கள். அவற்றின் சுவைக்கு நாக்கு பழக்கப்படவில்லை என்பதால், பிடிப்பதில்லை. 

மலிபன் மாரி தான் இவற்றில் மிகவும் பிடித்தது. பால் தேத்தண்ணிக்குள் லாவகமாக நனைத்து, அப்படியே சொத சொத என்று வாயுக்குள் போடும் போது, அப்படி ஒரு சுவை. 

லெமன் பப் (Lemon puff) பில் இருக்கும் கிரீமில் உடலுக்கு ஒவ்வாத விடயங்கள் உள்ளன என ஒரு முறை எங்கோ கேள்விப் பட்டமையால் அதைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். 


 

On 25/7/2024 at 12:40, ஈழப்பிரியன் said:

 

அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில்  , ஒரு  பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . .

 

க.பொ.த உயர்தரம் படிக்கும் போது, இதனருகில் இருந்த ராஜேஸ்வரி institute எனும் ரியூட்டரியில் தான் ரியூசனுக்கு சென்றேன். மலிபன் கம்பெனியில் இருந்து வரும் வாசனை மூக்கை துளைத்து பசியை உருவாக்கும்.
 

மலிபன் கம்பெனியின் இன்றைய சரியான பெயர் Little lion  ஆகும். பெயரில் சிங்கம் உள்ளது 

 

22 hours ago, ரசோதரன் said:

👍......

அந்த தெருவில் போனாலே மலிபனின் வாசனை வீசும்.........

 

அவர்களின் கொட்டாஞ்சேனை கம்பெனி உள்ளது Hinniappuhamy Mawatha  எனும் வீதியில். கொட்டாஞ்சேனையின் முக்கிய, ஒடுகலான ஒரு வீதி இது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

அதை அவர் தனது உடல் நிலையைப் பொறுத்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்......!

அது அவரது சீனி அளவைப் பொறுத்தது ....... என்வரையில் எனக்கும் சுகர் உண்டு......காலையில் ஒரு அளவான சீனி போட்ட பால்கோப்பி பின் தோட்டத்துக்குள் வேலைகள் செய்வேன்.......10 / 11 க்குள் ஒரு தேநீர் சீனியுடன் அல்லது பனங்கட்டி ஒரு துண்டு + இரண்டு பிஸ்கட் ........ மதியம் ரெண்டு மரக்கறி தயிர் அல்லது மோர், அப்பளம் +மிளகாய்யுடன்  சாப்பாடு சிறிது நேரத்தின்பின் ஒரு மணித்தியாலம் நித்திரை பின் கொஞ்சம் வீட்டு வேலைகள் 4 /5 ல் சீனி போட்ட தேநீர் +நொறுக்குத்தீனி (வாரத்துக்கு ரெண்டு விழாக்கள் நடப்பதால் பலகாரப்பைகள் எப்பவும் மேசையில் இருக்கும்).......இரவு தோசை 3, இடியப்பம் 5, இட்லி 3, நூடில்ஸ் + குஸ்குஸ் ஒரு கையளவு இவற்றுள் ஏதாவது ஒன்று ....... பின் மெட்ரோபோமின் 500 ஒன்று அல்லது இரண்டு குளிசை அதன்பின் உறக்கம்......... கண்டநேரமும் கண்டபடி சாப்பிடுவதில்லை ....... (என்னவோ தெரியாது தோசை + சாம்பல்  சாப்பிடும்போது மட்டும் பாதிகிளாஸ் கொக்கோகோலா குடிப்பேன் அது மிகவும் பிடிக்கும்...... குளிசையும் 2 போடுவேன்).........!

வீட்டில் நிக்கும் நாட்களில் இவை  தவறாமல் நடக்கும்......மற்றும்படி மகள், மகன், பெறாமக்கள் எங்க வீட்டில் நிக்க விடுகினம்.......பாதிநாட்கள் வாகனத்துடன் தெருவிலதான் சீவியம்.......அதனால் பிளாஸ்கில் கோப்பியும் பிஸ்கட்டும்தான் தெய்வம்......!   😂

ம்..தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யாரும் எதுவும் சொல்ல முடியாது, ஆனால் இது சர்க்கரை வியாதி இன்னும் இல்லாத நான் சாப்பிடும் சீனி, மாவை விட அதிகமாக இருக்கிறதே😂?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

ம்..தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யாரும் எதுவும் சொல்ல முடியாது, ஆனால் இது சர்க்கரை வியாதி இன்னும் இல்லாத நான் சாப்பிடும் சீனி, மாவை விட அதிகமாக இருக்கிறதே😂?

இதையே தான் நானும் யோசித்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மலிபன் பிஸ்கட்ட ஆசை தீர சாப்பிட்டதென்றால் மட்டக்களப்பில் தான்.  மலிபன் பிஸ்கட்டும் கோலாவும் ஒன்று சேர்ந்த சோடிகள். அதுவும் சிலோன் கோலா ஒரு தனி ரகம். அதனுடன் மலிபன் பிஸ்கட்டும் சேர........சொல்லி வேலையில்லை...

ஆத்தோரம் இருக்கும் அந்த தேனீக்கடை..... கடை முதலாளி என்னையும்.....அவ------ கண்டாலே பிஸ்கட் பக்கற்ரை கையில் எடுத்து விடுவார். 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ம்..தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யாரும் எதுவும் சொல்ல முடியாது, ஆனால் இது சர்க்கரை வியாதி இன்னும் இல்லாத நான் சாப்பிடும் சீனி, மாவை விட அதிகமாக இருக்கிறதே😂?

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

இதையே தான் நானும் யோசித்தேன்.

நீங்கள் சொல்வது சரிதான் ........சுகர் அட்டவனைப்படி இது கொஞ்சம் அதிகம்.......பொதுவா  சாதாரணமாக 70 க்கு குறைந்தால் களைப்பு ஏற்படும் .....ஆனால் எனக்கு 90 க்கு குறைந்தால் களைப்பதுபோல் இருக்கும் 130 இருந்தால் சரியாக இருக்கும் ........எது எப்படியோ ஆயுள்வரை இது பூரணமாய் மாறப்போவது இல்லை என்று தெரியும் .......அதுவரை இப்படி இருந்தால்கூடப் போதும்......உடம்பில் வேறு வருத்தங்கள் இல்லை......கடவுளே என்று தலையிடி காச்சல் என்றும்  படுத்தது இல்லை......பார்க்கலாம்......!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

 

நீங்கள் சொல்வது சரிதான் ........சுகர் அட்டவனைப்படி இது கொஞ்சம் அதிகம்.......பொதுவா  சாதாரணமாக 70 க்கு குறைந்தால் களைப்பு ஏற்படும் .....ஆனால் எனக்கு 90 க்கு குறைந்தால் களைப்பதுபோல் இருக்கும் 130 இருந்தால் சரியாக இருக்கும் ........எது எப்படியோ ஆயுள்வரை இது பூரணமாய் மாறப்போவது இல்லை என்று தெரியும் .......அதுவரை இப்படி இருந்தால்கூடப் போதும்......உடம்பில் வேறு வருத்தங்கள் இல்லை......கடவுளே என்று தலையிடி காச்சல் என்றும்  படுத்தது இல்லை......பார்க்கலாம்......!  

சாப்பிட்டதை குளிசையால் கட்டுப்படுத்துகிறீர்கள் போல

நல்லது கவனமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஐயா எனது பிறந்த இடம். மலிபனுக்கு முன்னால் இருக்கும் St. Paul's ஆஸ்பத்திரியிலேயே, நான் பிறந்த்தேன், 5 ‍-  19 வயது வரை இந்த வாசத்தை முகர்ந்து கொண்டல்லவா முன்னால் இருக்கும் பாடசாலயில் படித்து வந்தேன். எந்த திருவிழா என்றாலும் எங்கள் வீட்டில் மெலிமன் இருக்கும். 

தவழ்ந்து, ஒடி விளையாடிய தெருவல்லவ இது. 

மெலிபனும் அதன் சுற்றுவட்டமும் என் வாழ்வின் ஒரு அங்கம். 

போன மாதம் ஒரு நாள் இங்கு வந்து பனிசை சாப்பிட்டுகொண்டு, குளிர் பானத்தை குடித்தவாறு பழைய நினைவுகளை மீட்டினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மலிபன் இன், அதாவது தொடக்கியவரின் தரக்கட்டுப்பாடு ஒழுங்கை  உருவாக்கியது, பிரித்தானிய நிர்வாகத்தின் தரக்கட்டுப்பாடு, மற்றும் சுத்தம், சுகாதாரம் மீதான மிகுந்த இறுக்கமான கட்டுப்பாடு 
என்றே நம்ப வேண்டி இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

எந்த திருவிழா என்றாலும் எங்கள் வீட்டில் மெலிமன் இருக்கும். 

அனேகமாக எல்லோர் வீடுகளிலும் மாறியும் மலிபனும் தான்.

5 hours ago, Kadancha said:

மலிபன் இன், அதாவது தொடக்கியவரின் தரக்கட்டுப்பாடு ஒழுங்கை  உருவாக்கியது, பிரித்தானிய நிர்வாகத்தின் தரக்கட்டுப்பாடு, மற்றும் சுத்தம், சுகாதாரம் மீதான மிகுந்த இறுக்கமான கட்டுப்பாடு 
என்றே நம்ப வேண்டி இருக்கிறது.

அன்றிலிருந்து இன்றுவரை தரமாக உள்ளது.

அதுவே பெரிய வெற்றி தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.