Jump to content

யாழ்.கொள்ளைக்காரி கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.கொள்ளைக்காரி கைது

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அனலைதீவை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, கனடாவில் குடியுரிமை பெற்று வந்து அங்கு வசித்து வந்த நிலையில், விடுமுறையை கழிக்க அனலைதீவுக்கு கடந்த வருடம் வந்து தங்கியிருந்துள்ளது.

அந்நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பணம் , நகைகள் , பொருட்கள் , கடவுசீட்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் , யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு , கொள்ளையடித்துக்கொண்டு மீள படகில் ஏறி தப்பி சென்றமையை கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் 03 நபர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு பெண்மணி ஒருவர் பணம் கொடுத்து  தம்மை கூலிக்கு அமர்த்தி தாக்குதலை மேற்கொள்ள கோரியதன் அடிப்படையிலையே தாம் தாக்குதல் மேற்கொண்டு கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர். 

அதனடிப்படையில் குறித்த பெண் மணியை சுமார் ஒன்றரை வருடங்களாக தேடி வந்த பொலிஸார்   புதன்கிழமை (24) பெண்மணியை கைது செய்துள்ளனர். 

குறித்த பெண்மணியிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , கனடாவில் உள்ள ஐயப்பன் கோவில் தலைவரே தனக்கு பணம் அனுப்பி தாக்குதல் மேற்கொள்ள கூறியதன் அடிப்படையிலையே தான் வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் கொடுத்து தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை  வியாழக்கிழமை (25)  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார் , பெண்ணை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர் 

பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்ற மன்று , பெண்ணனை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதித்துள்ளது. 

அதேவேளை குறித்த பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் , அவருக்கு எதிராக ஏற்கனவே கொலை வழக்கொன்றும் , சில மோசடி வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்-கொள்ளைக்காரி-கைது/71-341068

தொடர்பான திரி:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைங்கம் அதிருகின்ற‌து. யாழ் கொள்ளைக்காரி!!

ரிவெல்வர் ரீட்டா, பிஸ்டல் பரிமளா, கன் பயிட் காஞ்சனா, அரிவாள் சொர்ணக்கா வரிசையில், 
பேதையவள் பெயர் என்னவோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பயங்கர  மாஃபியாக்கள் போல் 3000 டொலரை கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
1) கனடா ஐயப்பன் கோவில் தலைவரிடமிருந்து கொள்ளை அடிக்கச் சொல்லி கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது.
2) கிளிநொச்சியை சேர்ந்த... ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட  பெண்மணி...  மூன்று அடியாட்களை அமர்த்துகின்றார்.
3) அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு, கொள்ளையடித்துக் கொண்டு மீள பிரத்தியேக படகில் ஏறி தப்பி சென்றுள்ளார்கள்.
4) யாழ்.கொள்ளைக்காரி... ஒன்றரை  வருடமாக  பிடிபடாமல் பொலீசுக்கு தண்ணி காட்டியுள்ளார்.

கேள்வி: 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவருக்கு இவர்கள் ஊருக்குப் போகும் விடயம் எப்படி தெரிந்தது. 
2) இவர்கள் ஐயப்பன்  கோவிலுக்குப் போன இடத்தில், இலங்கைக்கு செல்வதாக அவரிடம் தெரிவித்தார்களா... அல்லது வேறு ஆட்களுக்கு சொல்ல... அவர்கள் மூலம் இந்தச் செய்தி பரவி அவரின் காதுக்கு எட்டியதா? 
3) அவர் கனடாவில் வசித்துக் கொண்டு, ஒரு பெரும் பொறுப்பில் இருந்து கொண்டு... 3000 டொலருக்கு ஏன் ஆசைப் பட்டார். 

ஊரில் கொள்ளையடித்தவர்களை சிங்கள போலீஸ் எப்படி கையாளப் போகின்றது என்று தெரியவில்லை. சிலவேளை இரண்டு பக்கமும் காசை வாங்கிக் கொண்டு வழக்கை இழுத்தடித்து காலப் போக்கில் மக்கள் அந்தச் சம்பவத்தை மறந்திருக்கும் நிலையில்... எல்லோரையும் விடுதலை செய்ய சந்தர்ப்பமும் உள்ளது.

ஆனால்... முதலில் இந்த கனடா ஐயப்பன் கோவில் தலைவர் மீது கொலை முயற்சி, கொள்ளை போன்றவற்றை தூண்டியதாக கனடா பொலிசில் ஒரு முறைப்பாடு செய்து 50 வருசமாவது மறியலில் போட வேண்டும்.
ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ...  உலகில் வெளியில் நடமாடவே  அருகதை அற்றவன்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ...  உலகில் வெளியில் நடமாடவே  அருகதை அற்றவன்.

கனடாவில் இருந்து விடுமுறையில் தாயகம் வந்து, ஏழை எளியவர்களை கொள்ளைஅடிப்பதும், சண்டித்தனம் காட்டுவதும் நிறைய நடக்கிறது. ஒன்று இரண்டு செய்திகள் வெளியே வருகிறது. சந்திர மண்டலத்திற்கு போனாலும் பரவணிக்குணம் மாறாது கண்டியளோ!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

 

ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ...  உலகில் வெளியில் நடமாடவே  அருகதை அற்றவன்.

உங்கள் கோபம் நியாயமானது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

கனடாவில் இருந்து விடுமுறையில் தாயகம் வந்து, ஏழை எளியவர்களை கொள்ளைஅடிப்பதும், சண்டித்தனம் காட்டுவதும் நிறைய நடக்கிறது. ஒன்று இரண்டு செய்திகள் வெளியே வருகிறது. சந்திர மண்டலத்திற்கு போனாலும் பரவணிக்குணம் மாறாது கண்டியளோ!  

சென்ற வருடம் கனடாவில் வசிக்கும் ஒருவர்... அங்கிருந்து 50 கிலோ போதைப் பொருளை, ஒரு  மரப் பெட்டியில் அடைத்து யாழ்ப்பாணத்துக்கு விற்க அனுப்பும் போது பிடிபட்டு விட்டது.

நன்றாக உழைத்து சம்பாதிக்கக் கூடிய நாட்டில் இருந்து கொண்டு... ஊருக்கு போதை பொருளை அனுப்பி, அந்தக் காசில்  வாழ நினைக்கின்ற கீழ்த்தரமான் மனிதர்களை கொண்டது எமது இனம். 
நினைக்கவே... அருவருப்பாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

உங்கள் கோபம் நியாயமானது. 🤣

பின்னை என்ன செய்யிறது விசுகர்.
வசிப்பது அனைத்து வசதிகளையும் கொண்ட உயர்தர நாடு.
பலரும்  மதிக்கும் கௌரவமான பதவி, அதுகும்  கோவிலில்... இப்படியான பெருமைகளை கொண்ட ஒருவன் செய்யும் வேலையா இது.  உண்மையிலேயே ஆத்திரம் வருகின்றது. இவனால்... அந்தக் கோவிலுக்கும்,   கனடாவில் வசிக்கும் மக்களுக்கும்... 3000 டொலருக்காக கொள்ளையடிக்க முயன்றவன் என்ற  கெட்ட  பெயர்.  இவனை கோவில் தலைவராக தெரிவு செய்த மக்கள் முகத்தில் சேறை அள்ளி பூசிவிட்டு நிறைகிறான் இந்தப் பர * சி. 

எங்களது மக்கள் எவ்வளவு கேவலமான முன்னுதாரணங்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்க வேதனையாக உள்ளது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கனடாவில இருக்கிற ஐயப்பன் கோயில் பிரச்சனை போல கிடக்கு.....
அனலைதீவிலையும் ஒரு ஐயனார் கோயில் இருக்கு எண்டதையும் இஞ்ச உள்ள பக்த அடியார்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

பயங்கர  மாஃபியாக்கள் போல் 3000 டொலரை கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
1) கனடா ஐயப்பன் கோவில் தலைவரிடமிருந்து கொள்ளை அடிக்கச் சொல்லி கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது.
2) கிளிநொச்சியை சேர்ந்த... ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட  பெண்மணி...  மூன்று அடியாட்களை அமர்த்துகின்றார்.
3) அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு, கொள்ளையடித்துக் கொண்டு மீள பிரத்தியேக படகில் ஏறி தப்பி சென்றுள்ளார்கள்.
4) யாழ்.கொள்ளைக்காரி... ஒன்றரை  வருடமாக  பிடிபடாமல் பொலீசுக்கு தண்ணி காட்டியுள்ளார்.

கேள்வி: 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவருக்கு இவர்கள் ஊருக்குப் போகும் விடயம் எப்படி தெரிந்தது. 
2) இவர்கள் ஐயப்பன்  கோவிலுக்குப் போன இடத்தில், இலங்கைக்கு செல்வதாக அவரிடம் தெரிவித்தார்களா... அல்லது வேறு ஆட்களுக்கு சொல்ல... அவர்கள் மூலம் இந்தச் செய்தி பரவி அவரின் காதுக்கு எட்டியதா? 
3) அவர் கனடாவில் வசித்துக் கொண்டு, ஒரு பெரும் பொறுப்பில் இருந்து கொண்டு... 3000 டொலருக்கு ஏன் ஆசைப் பட்டார். 

ஊரில் கொள்ளையடித்தவர்களை சிங்கள போலீஸ் எப்படி கையாளப் போகின்றது என்று தெரியவில்லை. சிலவேளை இரண்டு பக்கமும் காசை வாங்கிக் கொண்டு வழக்கை இழுத்தடித்து காலப் போக்கில் மக்கள் அந்தச் சம்பவத்தை மறந்திருக்கும் நிலையில்... எல்லோரையும் விடுதலை செய்ய சந்தர்ப்பமும் உள்ளது.

ஆனால்... முதலில் இந்த கனடா ஐயப்பன் கோவில் தலைவர் மீது கொலை முயற்சி, கொள்ளை போன்றவற்றை தூண்டியதாக கனடா பொலிசில் ஒரு முறைப்பாடு செய்து 50 வருசமாவது மறியலில் போட வேண்டும்.
ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ...  உலகில் வெளியில் நடமாடவே  அருகதை அற்றவன்.


அவர்கள் பெரும்பாலும் வெளியிலிருந்து நிர்வாக அங்கத்தவர்களை எடுப்பது அரிது..ஒரு வீட்டில் கொண்டாட்டம் என்றால் மாறி ,மாறி கோயில் உள் வீடே வரும்..அந்தக் கோயில் தெரிந்தவர் ,அறிந்தவர் என்று கொண்டாட்டம் நிரம்பி விடும் ..அதே போல் தான் எல்லாம்..பயண முகவர்களும் அதற்குள் அடக்கம் அண்ண…தற்போதைக்கு நிர்வாகத்தை மாற்றுவது மிகவும் கடினம்.புரியும் என்று நினைக்கிறேன்.

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சென்ற வருடம் கனடாவில் வசிக்கும் ஒருவர்... அங்கிருந்து 50 கிலோ போதைப் பொருளை, ஒரு  மரப் பெட்டியில் அடைத்து யாழ்ப்பாணத்துக்கு விற்க அனுப்பும் போது பிடிபட்டு விட்டது.

நன்றாக உழைத்து சம்பாதிக்கக் கூடிய நாட்டில் இருந்து கொண்டு... ஊருக்கு போதை பொருளை அனுப்பி, அந்தக் காசில்  வாழ நினைக்கின்ற கீழ்த்தரமான் மனிதர்களை கொண்டது எமது இனம். 
நினைக்கவே... அருவருப்பாக உள்ளது.

இந்த போதைப்பொருளை அவர் முன்னாலேயே குடும்பத்தினருக்கு பாவிக்க கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

பின்னை என்ன செய்யிறது விசுகர்.
வசிப்பது அனைத்து வசதிகளையும் கொண்ட உயர்தர நாடு.
பலரும்  மதிக்கும் கௌரவமான பதவி, அதுகும்  கோவிலில்... இப்படியான பெருமைகளை கொண்ட ஒருவன் செய்யும் வேலையா இது.  உண்மையிலேயே ஆத்திரம் வருகின்றது. இவனால்... அந்தக் கோவிலுக்கும்,   கனடாவில் வசிக்கும் மக்களுக்கும்... 3000 டொலருக்காக கொள்ளையடிக்க முயன்றவன் என்ற  கெட்ட  பெயர்.  இவனை கோவில் தலைவராக தெரிவு செய்த மக்கள் முகத்தில் சேறை அள்ளி பூசிவிட்டு நிறைகிறான் இந்தப் பர * சி. 

எங்களது மக்கள் எவ்வளவு கேவலமான முன்னுதாரணங்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்க வேதனையாக உள்ளது. 

இவர்கள் புலத்தில் இருக்கும்போது செய்த தொழில் என்னவென்று ஆராய்ந்தால் புரியும், இலங்கையின் கூலிப்படைகளின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் செய்த சமூக சீர்கேடுகள். சிலது புலிகளை சாட்டி புலம்பெயர்ந்துதுகள், சிலது கூலிப்படையோடு சேர்ந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது எல்லாவற்றையும் கொள்ளையடித்து உரியவர்கள் தட்டிக்கேட்டபோது அதே கூலிப்படையின் அடக்குமுறையை பாவித்து அவர்களின் வாயை அடக்கி, பின் ஆமியால் பாதுகாப்பில்லை என்று படகில் போய் புகலிடம் பெற்றிருக்குதுகள். அந்த நாடும் பரிவிரக்கம் கொண்டு இவர்களை ஏற்று நல்வாழ்வளித்தால், அவர்களால் தம் தொழிலை விட முடிவதில்லை, அந்த நாட்டின் சுதந்திரத்தையும் வசதியையும் அனுபவித்துக்கொண்டு தமது பரவணிக்குணத்தை அரங்கேற்ற விடுமுறை என்கிற பெயரில் நாட்டுக்கு வருவதும், இங்குள்ள சமூக விரோதிகள், இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் காவல் துறை எனும் காவாலித்துறையை பயன்படுத்துவதும், தம்மை ஏதோ  பெரிய பணக்காரர் போல பந்தாகாட்டுவதும், பின்னாளில் சரண் அடைந்த நாட்டில் தாம் அனுபவிக்கும் வசதிகளை இழப்பதோடு  நம் இனத்தின் மீது அந்த நாட்டு மக்கள், அரசு காட்டும் இரக்கத்தையும் அக்கறையையும் நன்மதிப்பையும் எங்களுக்காக அவர்கள்  எழுப்பும் நீதிக்கான குரலையும்  இழக்கச்செய்யும். அதனால் கேடுகெட்ட கூட்டம் வெட்கப்படப்போவதுமில்லை, பாதிக்கப்படப்போவதுமில்லை. அதெல்லாம் உண்மையான உயிர், சொத்து,  தொழில்   உறவுகளைதொலைத்தவர்களையே சேரும்.       

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.