Jump to content

மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

தீர்க்கப்படாத இனப்பிரச்சினை

 

இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்..! | President Ranil Suddenly Met Maavi

 

தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில் சிறந்த அனுபவம் உள்ளதால் ரணில் விக்ரமசிங்க இதனை செய்துமுடிப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்..! | President Ranil Suddenly Met Maavi

தேர்தலின் பின்னர் பாரிய கடமைகள் இருப்பதாகவும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு கண்டு, அந்த நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்று கோரியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

https://tamilwin.com/article/president-ranil-suddenly-met-maavi-1725729737?itm_source=parsely-detail

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆமா ஆமா இதில முதல் வெல்லப்பண்ணுங்க.

அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக வரணும்.

அதுக்கும் உங்கள் ஒத்துழைப்பு தேவை.

அதுக்கிடையில உங்களை ஒன்றா இருக்க விட்டாத் தானே.

இரண்டும் எனது கைக்கு வந்தால் அப்புறம் வழமைபோல பின்பக்கத்தைக் காட்டுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் : இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை நம்பிக்கை !

By kugen
 
1725759825-Ranil_Mavai%20.jpg


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இரண்டு "இயலும் ஸ்ரீலங்கா" வெற்றிப் பேரணிகளில் கலந்து கொண்ட பின்னர் காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தனது இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா அன்புடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, ஜனாதிபதியுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள்,தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீண்ட காலமாக தீர்க்கப்படாத வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பாரிய பொறுப்பு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

 

https://www.battinews.com/2024/09/blog-post_819.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

 

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் : இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை நம்பிக்கை !

நாளைக்கு... சஜித்  பிரேமதாச வந்து, மாவையை அவரின் வீட்டில் வைத்து சந்தித்தால்....
"ஜனாதிபதித் தேர்தலில் சஜித்  பிரேமதாச  வெற்றி பெற்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் : இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை நம்பிக்கை !
என்று மரத்துக்கு மரம் கொப்பு தாவும் கொள்கையுடையவர்தான் மாவை. 😂

மாவை சேனாதிராஜா,  வாழ்க்கையில்... ஒரு நாள் கூட, வேலைக்குப் போய் சம்பாதிக்காதவர் என்று, எத்தனை பேருக்கு தெரியும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை சுமந்திரன்... சஜித்துக்கு ஆதரவு கொடுக்க, 
இங்கை மாவை... ரணிலுக்கு ஆதரவு கொடுக்க, 
அங்காலை ஸ்ரீதரன் அரியநேத்திரனுக்கு ஆதரவு கொடுக்க ஒரே தமாசு தான்... போங்க.

தமிழரசு  கட்சியை.. இப்ப யார் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
பேசாமல் கட்சியை கலைத்து விட்டு, வேலைக்குப் போய்  சம்பாதியுங்கள்.  
பாவம்... செல்வநாயகம் ஆரம்பித்த கட்சியை, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 

  • Thanks 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இருக்கும் பொறுப்பு

வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணிலுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜா இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை மீள அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இரண்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/309073

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசு  கட்சியை.. இப்ப யார் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

முந்தி பெரிய வீடாக 🏡 இருந்தது. இப்ப பலருக்கு “சின்ன வீடாக” ஆகிவிட்டது😂🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முந்தி பெரிய வீடாக 🏡 இருந்தது. இப்ப பலருக்கு “சின்ன வீடாக” ஆகிவிட்டது😂🤣

அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அங்கை சுமந்திரன்... சஜித்துக்கு ஆதரவு கொடுக்க, 
இங்கை மாவை... ரணிலுக்கு ஆதரவு கொடுக்க, 
அங்காலை ஸ்ரீதரன் அரியநேத்திரனுக்கு ஆதரவு கொடுக்க ஒரே தமாசு தான்... போங்க.

தமிழரசு  கட்சியை.. இப்ப யார் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
பேசாமல் கட்சியை கலைத்து விட்டு, வேலைக்குப் போய்  சம்பாதியுங்கள்.  
பாவம்... செல்வநாயகம் ஆரம்பித்த கட்சியை, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 

சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமனும் மருமகளும் ரணிலுக்கும் மாமியும் மருமகனும் சஜித்துக்கு எந்தக்கட்சி சொல்லுங்க பாப்பம்?

Edited by புலவர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.

எல்லாம் டிஜிட்டல் ரெக்னிக் கண்டியளோ...🤣

ஒரு பக்கம் சறுக்கினால் மற்றப் பக்கம் கை குடுக்கும் எல்லோ...😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.

 

6 hours ago, குமாரசாமி said:

எல்லாம் டிஜிட்டல் ரெக்னிக் கண்டியளோ...🤣

ஒரு பக்கம் சறுக்கினால் மற்றப் பக்கம் கை குடுக்கும் எல்லோ...😎

 

14 hours ago, கிருபன் said:

முந்தி பெரிய வீடாக 🏡 இருந்தது. இப்ப பலருக்கு “சின்ன வீடாக” ஆகிவிட்டது😂🤣

 

“தென்னை மரத்துல ஒரு குத்து…பனை மரத்துல ஒரு குத்து”  😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு என்ற ஒரு கட்சி இருக்க இப்ப ? அட கடவுளே. மாவைத்தான் தலைவர் என்பது அவருக்கே தெரியாது ...இன்னும் எவ்வளவு காசு வாங்கி இன்னுமொரு பெரிய வீடு கட்டுவம் என்று அலையுது .... சுத்து .... சொல்லவா வேண்டும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது மகனை பாராளுமன்ற உறுப்பினராக்காமல் ஓயமாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவை இப்போது தமிழரசுக்கட்சித் தலைவராக இருக்கிறார். அதனால்தான் அவர் எம்பியாக இல்லாத பொதும் ரணில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். மாவைக்கு இதுதான் கடைசி பதவி மட:டுமல்ல பெட்டி வாங்குவதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை விட்டால் வேறு சந்தர்பஙகள் வெகு அரிது. அடுத்த தேர்தல்வரை அவர் உடல்நிலை ஒத்துழைக்காது. அடுத்த தேர்தலில் மகனையும் சம்பந்தியைுயும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்குவார். அதற்கிடையில் மாகாண சபை தெர்தல் வந்தால் முதலமச்சர் வேட்பாளராக களம் இறங்குவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

மாவை இப்போது தமிழரசுக்கட்சித் தலைவராக இருக்கிறார். அதனால்தான் அவர் எம்பியாக இல்லாத பொதும் ரணில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். மாவைக்கு இதுதான் கடைசி பதவி மட:டுமல்ல பெட்டி வாங்குவதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை விட்டால் வேறு சந்தர்பஙகள் வெகு அரிது. அடுத்த தேர்தல்வரை அவர் உடல்நிலை ஒத்துழைக்காது. அடுத்த தேர்தலில் மகனையும் சம்பந்தியைுயும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்குவார். அதற்கிடையில் மாகாண சபை தெர்தல் வந்தால் முதலமச்சர் வேட்பாளராக களம் இறங்குவார்.

இது தான் தமிழர்கள் பிரச்சனையா ?? 🤣 எனக்கு ஒன்றும் புரியவில்லை 

23 hours ago, குமாரசாமி said:

எல்லாம் டிஜிட்டல் ரெக்னிக் கண்டியளோ...🤣

ஒரு பக்கம் சறுக்கினால் மற்றப் பக்கம் கை குடுக்கும் எல்லோ...😎

இது   தமிழர்கள் பிரச்சனைக்கு  தீர்வு காண்பதில்.  சரி வராது”   இரண்டு பக்கமும் சறுக்க தான் செய்யும் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபன் பகிடிக்குச் சொல்லியிருப்பாரென நினைக்கிறேன்😎. சிவப்புக் கட்சியின் பழமை வாதக் கொள்கைகளுக்காக அந்தக் கட்சியை ஆதரிப்பது வேறு (அப்படியொரு "பழமை வாத சிவப்புக் கட்சி" இப்போது இல்லை என்பது வேறு கதை!).  "ட்ரம்பை 2020 இற்குப் பின்னர் ஆதரித்து வாக்குப் போடுவது" என்பது சீரியசான பிரச்சினையிருக்கும் ஆட்களால் தான் முடியுமான காரியம். அதுவும், குடியேறிகளாக வந்தவர்கள் இப்போது ட்ரம்பிற்கு வாக்களித்து ஆதரிப்பது, குந்தியிருக்கிற மரத்தின் கிளையை வெட்டுவது போன்ற செயல். ஒஹையோவில் சட்ட பூர்வ குடியேறிகளாக வசிக்கும் ஹெயிற்றி மக்களைப் பற்றிய ட்ரம்ப் கூட்டத்தின் வெறுப்புப் பேச்சின் பின்னரும், ஏனைய நாட்டுக் குடியேறிகள் சிலர் ட்ரம்பை விரும்புகிறார்கள் - மிகவும் ஆச்சரியமான விடயம்!
    • "வரமாக வந்தவளே"     "வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!"     "தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க சரமாலை கொண்டையில் அழகாக ஆட ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே மரணம் பிரித்தாளும் மறவேன் உன்னை!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • மியன்மாரிலுள்ள சைபர் கிரைம் முகாமிலும் இப்படித்தான் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேலைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்த நாடுகளுக்கு எல்லாம் எவரும் வேலைகளுக்கு போகலாமா............. ரஷ்யா, மியன்மார், வட கொரியா, ஈரான்,.............இப்படியான நாடுகளுக்கு ஆதரவாக இன்டெர்நெட்டில், சமூக ஊடகங்களில் எழுதலாம். ஆனால் அங்கே தப்பித்தவறியும் போய் விடக்கூடாது........ 
    • ஆயுதம் ஏந்தி போராடி அழிவுகளைத்தான் கண்டோம். அரியத்தாருடைய சிந்தனை அன்று யாருக்கும் வராமல் போயிற்றே. அப்பொழுதே பொது வேட்பாளரை நிறுத்தி சிங்களத்தை அதிரவிட்டு சர்வதேசத்துக்கும் செய்தி சொல்லியிருக்கலாமே. காலம் கடந்து வந்து சங்கெடுத்து ஊதிக் கொண்டிருக்கிறோம்.
    • கொலை முயற்சியில் ஈடுபட்டவர் பற்றி பல புதிய தகவல்கள் கூறப்படுகின்றன. போகுற போக்கை பார்த்தால் இதன் பின்னால் உள்ளவர் செலன்ஸ்கியோ என்று முடியப்போகுதோ? ஆக மொத்தத்தில் அமெரிக்காவுக்கு வளர்த்த கடாய் மார்பில் பாய்ந்த கதைதானோ. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.