ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
By
பிழம்பு
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
24
பிழம்பு · தொடங்கப்பட்டது
-
Posts
-
அவர் கையில் எதுவுமில்லை.
-
விமானநிலையம் செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகளுக்கு - விசேட அறிவித்தல் 21 SEP, 2024 | 10:16 PM ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/194323
-
இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் சேப்பாக்கம் விக்கெட் எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் 814 நாட்களுக்குப் பின் சதம் அடித்து தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்-இன் அற்புதமான ஆட்டம், சுப்மன் கில்லின் நேர்த்தியான சதம் ஆகியவற்றால் இந்திய அணி வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஏற்கெனவே 227 ரன்கள் முன்னிலை பெற்றதையுடம் சேர்த்து வங்கதேச அணி வெற்றி பெற 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி. சவாலான இலக்கு இரண்டரை நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பும் நோக்கில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. பெரிய இலக்கான 515 ரன்களை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி 2 நாட்களில் எட்டுவது வங்கதேசத்துக்கு கடும் சவாலாக இருக்கும். வங்கதேச அணி 515 இலக்குடன் களமிறங்கியது. 3வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் ஷான்டோ 51 ரன்கள், சஹிப் அல்ஹசன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் வங்கதேசம் கைகளில் 6 விக்கெட்டுகள் உள்ளன, வெற்றிக்கு 357 ரன்கள் சேர்க்க வேண்டியுள்ளது. மெஹதி ஹசன், லிட்டன் தாஸ் விக்கெட்டை இந்திய அணி விரைவாக எடுத்துவிட்டால், இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும். 814 நாட்களுக்குப் பின் ரிஷப் பந்த் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் விரைவாக ரன்கள் சேர்க்க ரிஷப் பந்த்(109), சுப்மான் கில்(119 நாட்-அவுட்) ஆகியோரின் சதம் மற்றும் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாக அமைந்தது. கார் விபத்தில் சிக்கி 634 நாட்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். டெஸ்ட் போட்டியில் ஏறக்குறைய 814 நாட்களுக்குப் பின் தனது 6வது சதத்தை 124 பந்துகளில் பந்த் நிறைவு செய்தார். இதில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். கடைசியாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 1ஆம் தேதி நடந்த டெஸ்டில் ரிஷப் பந்த் சதம் அடித்திருந்தார். அதன்பின் இந்த ஆட்டத்தில் சதம் அடித்துள்ளார். இன்னிங்ஸ் ஸ்கோர் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கும், வங்கதேசம் 149 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. 2வது நாளான நேற்று மட்டும் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்திருந்தது. கில் 33 ரன்களுடனும், பந்த் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய 3வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கில், பந்த் அரைசதம் தொடக்கத்தில் இருந்தே கில், ரிஷப் பந்த் இருவரும் வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அடித்து ஆடி ரன்களை சேர்த்தனர், இருவரின் பேட்டிங்கிலும் ஆக்ரோஷம் காணப்பட்டது. 79 பந்துகளில் சுப்மன் கில் அரைசதத்தை நிறைவு செய்தார். காலை தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பிறகு ரிஷப் பந்த் பேட்டிங் வேகெடுத்தது. சஹிப் அல்ஹசன், மிராஸ் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்த ரிஷப் பந்த் 88 பந்துகளில் அரைசதம் எட்டினார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 205 ரன்கள் சேர்த்திருந்தது. அஸ்வினும் டெஸ்ட் கிரிக்கெட்டும் - ஒரு காதல் கதை!19 செப்டெம்பர் 2024 தோனியின் சாதனை சமன் பட மூலாதாரம்,GETTY IMAGES அதன்பின் களத்துக்கு வந்த ரிஷப் பந்த் ஆட்டத்தில், மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என விளாசி, 124 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்து தோனி அடித்த 6 சதங்களையும் ரிஷப் பந்த் சமன் செய்தார். ரிஷப் பந்த் சதம் அடித்தபோது, அவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடக்கம். நிதானமாக ஆடிய சுப்மன் கில்லும் 161 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை எட்டினார். இருவரின் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்து சென்றது. கடந்த முதல் இன்னிங்ஸில் சாஃப்ட் டிஸ்மிசலில் ஆட்டமிழந்தது போல் இந்த முறை எந்தத் தவறையும் ரிஷப் பந்த் செய்யவில்லை. இதனால் இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடும் பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. சிக்ஸரில் சாதிக்கும் இந்திய அணி சுப்மான் கில் தனது 26வது டெஸ்ட் போட்டியில் 28வது சிக்ஸரை அடித்துள்ளார். அதேபோல ரிஷப் பந்த் 34 டெஸ்ட் போட்டிகளில் 59 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 2024ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டர்கள் மட்டும் 85 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். ஒரு காலண்டர் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை எட்ட இந்திய அணிக்கு இன்னும் 5 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ரிஷப் பந்த் 109 ரன்கள் சேர்த்த நிலையில் மிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு கில், பந்த் கூட்டணி, 167 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த கே.எல்.ராகுல் 22 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இன்னும் இரண்டரை நாட்கள் மீதமிருந்த நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணியித்தது இந்திய அணி. வலுவான தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேச அணி 515 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது. ஜாகிர் ஹசன், இஸ்லாம் இருவரும் முதல் இன்னிங்ஸைவிட சற்று ஆழமாகவே தங்கள் ஆட்டத்தை தொடங்கி ரன்களை சேர்த்தனர். பும்ரா, சிராஜ், ஆகாஷ் பந்துவீச்சை இருவரும் நன்கு சமாளித்து ஆடி ரன்களை சேர்த்தனர். மாலை தேநீர் இடைவேளைக்குப் பின் வங்கதேச அணி முதல் விக்கெட்டை இழந்தது. பும்ராவின் வேகப்பந்துவீச்சில் ஹசன் 33 ரன்கள் சேர்த்த நிலையில் கல்லி பாயின்டில் நின்றிருந்த ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஷான்டோ, இஸ்லாமுடன் சேர்ந்தார். அஸ்வினின் மாயாஜாலம் சென்னை விக்கெட் கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு பலன் அளிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு அஸ்வின் பந்து வீசினார். அதற்குப் பலன் கிடைத்து, இஸ்லாம் 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஷார்ட் மிட்விக்கெட்டில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த மோமினுல் ஹக் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். அதைத் தொடர்ந்து முஸ்பிகுர் ரஹ்மான் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாண்டோ இந்திய பந்துவீச்சை நன்கு சமாளித்து ஆடி அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் வங்கதேசம் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என வலுவாக இருந்தது, ஆனால் கடைசி 10 ஓவர்களில் சீரான இடைவெளையில் 3 விக்கெட்டுகளை இழந்தது. சஹிப் அல் ஹசன் 5, கேப்டன் ஷாண்டோ 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கடைசி 10 ஓவர்களில் அஸ்வின் வீழ்த்திய 3 விக்கெட்டுகள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 357 ரன்கள் தேவை. மீதமுள்ள விக்கெட்டுகளில் லிட்டன் தாஸ், மிராஸ் மட்டுமே ஓரளவு பேட் செய்யக் கூடியவர்கள். இவர்களை வீழ்த்தினால் நாளை இந்திய அணியின் வெற்றி எளிதாகும். சேப்பாக்கத்தில் திடீரென வெளிச்சக் குறைவு ஏற்பட்டதையடுத்து, 9 ஓவர்கள் முன்னதாகவே ஆட்டம் முடிக்கப்பட்டது. கடைசி 2 நாட்களில் சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES சேப்பாக்கம் விக்கெட் என்றாலே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும். ஆனால், இந்த முறை கறுப்பு மண் ஆடுகளத்துக்குப் பதிலாக சிவப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து நன்கு ஒத்துழைத்து ஸ்விங் ஆகும், பவுன்ஸ் ஆகும். வரும் நவம்பர் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்குத் தயாராகும் பொருட்டு இதுபோன்ற ஆடுகளத்தை பிசிசிஐ நிர்வாகம் தயாரித்துள்ளது. இந்த ஆடுகளத்தில் கடைசி 2 நாட்களில் பிளவு ஏற்பட்டு பந்து சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும். முதல் நாளில் வேகப்பந்துவீச்சில் 1.3 டிகிரி வரை ஸ்விங் ஆன நிலையில், 3வது நாளில் 0.4 டிகிரியாக குறைந்தது. ஆடுகளம் நன்கு காய்ந்திருக்கிறது ஆனால், எதிர்பார்த்த பிளவுகள் இன்னும் வரவில்லை. பிளவுகள் வந்தால் அடுத்த இரு நாட்கள் வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சுக்குத்தான் விக்கெட் ஒத்துழைக்கும். இதனால், அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு நன்கு எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியை போல் உதவிய பந்த் பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்றாம் நாள் ஆட்டமான இன்று ரிஷப் பந்த், கில் இருவரும் சிறப்பாக பேட் செய்த நிலையில், திடீரென வங்கதேசத்துக்கு உதவும் வகையில் பந்த் ஃபீல்டிங் செட் செய்து கொடுத்து கேப்டன் ஷாண்டோவுக்கு உதவினார். தோனியை போலவே ரிஷப் பந்த் வங்கதேச கேப்டனுக்கு ஃபீல்டிங் செட் செய்வதில் உதவினார். 22 யார்ட் வட்டத்தின் லெக் திசையில் எந்த பீல்டரும் நிறுத்தவில்லை, அங்கு பீல்டரை நிறுத்துங்கள் என்று வங்கதேச கேப்டனுக்கு பந்த் ஆலோசனை கூறினார். இதைக் கேட்ட கேப்டன் ஷாண்டோ மிட்விக்கெட் திசையில் ஒரு பீல்டரை நிறுத்தினார். ரிஷப் பந்தின் கிரிக்கெட் குருவான தோனியும் இதேபோல வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து உதவியுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, பேட் செய்த தோனி, வங்கதேச வீரர் சபிரீ ரஹ்மானை ஸ்குயர் லெக் திசையில் நிற்குமாறு கூறினார். வங்கதேச கேப்டன் மோர்தசாவிடம் கேட்காமல் தோனி ஃபீல்டிங் செட் செய்தார். தோனி கூறியவுடன், தனது கேப்டன் மோர்தசாவிடம்கூட ஆலோசனை கேட்காமல் தோனி கூறிய திசையில் சபீர் ரஹ்மான் ஃபீல்டிங் செய்ய நின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c148nmk8pzeo
-
By ஏராளன் · பதியப்பட்டது
21 SEP, 2024 | 09:55 PM இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தங்களது ஆவணங்கள், விமான பயணச் சீட்டுகளை தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் அலுவலக அனுமதிப்பத்திரம் மற்றும் ஊழியர் அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும். ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194319
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts