Jump to content

ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 Sep, 2024 | 06:08 PM
image
NSC-_976x90_.gif

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே,

நுவரெலியா 80%

மொனராகலை 77%

பொலன்னறுவை 78%

இரத்தினபுரி 75%

கம்பஹா 80%

கொழும்பு 75% - 80%

அம்பாறை 70%

கிளிநொச்சி 68%

புத்தளம் 78%

களுத்துறை 75%

காலி 74%

வவுனியா 72%

மன்னார் 72%

பதுளை 73%

அம்பாந்தோட்டை 78%

கேகாலை 75%

அநுராதபுரம் 75%

மட்டக்களப்பு 69%

குருணாகல் 75%

திருகோணமலை 76%

கண்டி 78% - 80%

முல்லைத்தீவு 71 %

கிளிநொச்சி 68 %

மாத்தளை 74 %

யாழ்ப்பாணம் 65.9 %

ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் ! | Virakesari.lk

Link to comment
Share on other sites

21 minutes ago, பிழம்பு said:
கிளிநொச்சி 68%

வவுனியா 72%

மன்னார் 72%

மட்டக்களப்பு 69%

முல்லைத்தீவு 71 %

கிளிநொச்சி 68 %

யாழ்ப்பாணம் 65.9 %

வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.

அரியத்துக்கான அலையல்லவா.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியத்துக்கான அலையல்லவா.

அது மட்டுமே இந்த முறை மாறியது. எனவே.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் ,  கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.

 

34 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியத்துக்கான அலையல்லவா.

 

3 minutes ago, விசுகு said:

அது மட்டுமே இந்த முறை மாறியது. எனவே.....?

அரியம் தேர்தலில் நின்றிருக்காவிடில்… தமிழ்ப்பகுதிகளின்  வாக்குப் பதிவு  15 வீதமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியத்துக்கான அலையல்லவா.

இன்னும் சில மணிநேரங்களில் இந்த அலை கரைகண்டுவிடும்! வடக்கு கிடக்கு மாகாணங்கள் எண்றுமே இணைய வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிடும். ஆட்சிக்கு வரப்போகும் அநுரவுக்கு இது பொன்னான சந்தர்ப்பம். வடக்கையும் கிழக்கையும் பிரிக்கவைத்ததே ஜேவிபி தான்.  இனி வாக்களிப்பு புள்ளி விபர அடைப்படையில் இது பேசப்படும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாட்டி… சிங்கள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கும். 

😀

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி… வடக்கையும், கிழக்கையும் இணைக்க… கிழக்கு முஸ்லீம்கள் கூட, விட மாட்டார்கள். இதுதான் கள நிலைமை.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இல்லாட்டி… சிங்கள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கும். 

😀

 

எதிர்பார்த்த  செய்திகளுக்கு  பதிலாக அதிர்ச்சி  தரும்  செய்திகள்  வரத்தொடங்கியிருக்கலாம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அரசியல் புரிதல் அவ்வளவுதான், வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறீர்கள்.😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எதிர்பார்த்த  செய்திகளுக்கு  பதிலாக அதிர்ச்சி  தரும்  செய்திகள்  வரத்தொடங்கியிருக்கலாம்???

 நிலாந்தன் மாஸ்ரரில்…. இனி இன்னும் நல்ல கடுப்பாய் இருப்பார்கள் போல. 😂 🤣

சும்மா கிடந்த ஆளை…. திட்டப் போய், அந்தாளை பெரிய ஆளாக்கி விட்டது தான் கண்ட பலன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

 நிலாந்தன் மாஸ்ரரில்…. இனி இன்னும் நல்ல கடுப்பாய் இருப்பார்கள் போல. 😂 🤣

சும்மா கிடந்த ஆளை…. திட்டப் போய், அந்தாளை பெரிய ஆளாக்கி விட்டது தான் கண்ட பலன். 🤣

 இனியும்  நிலாந்தன் மாஸ்டர் கண்டபடி கட்டுரைகள் எழுதுவாரா மாட்டாரா?  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

 இனியும்  நிலாந்தன் மாஸ்டர் கண்டபடி கட்டுரைகள் எழுதுவாரா மாட்டாரா?  😎

நிலாந்தன் மாஸ்ரர் இப்ப வேறை லெவல்.
அவரை திட்டி, திட்டி…. பெரிய ஆள் ஆக்கி விட்டது, நம்ம பயலுகள்தான். 😂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நிலாந்தன் மாஸ்ரர் இப்ப வேறை லெவல்.
அவரை திட்டி, திட்டி…. பெரிய ஆள் ஆக்கி விட்டது, நம்ம பயலுகள்தான். 😂
 

ஆனால் நிசாந்தனின் மாணவர்கள் அரசியல்  அறிவு  பற்றி  கதைப்பது தானுங்கோ  கொடுமை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஆனால் நிசாந்தனின் மாணவர்கள் அரசியல்  அறிவு  பற்றி  கதைப்பது தானுங்கோ  கொடுமை....

ஒரு வகுப்பில்… எல்லா மாணவர்களும் கெட்டிக்காரராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதானே….
முன் வாங்கு மாணவர்களுக்கும், கடைசி வாங்கு மாணவர்களுக்கும் நிறைய  வித்தியாசம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் ஒரு யாழில் வாக்குப் போட்டு விட்டு, அவன் விரலை படமெடுத்து வாட்ஸ்அப்பில் போட்டிருக்கின்றான். படமும் சரியான முக்கியம் போல...............

'யாருக்கடா போட்டாய்..........' என்று கேட்கவில்லை. அது அடிப்படை உரிமைக்கு எதிரான கேள்வி என்று சொல்கின்றனர். ஆனால் அவனே ஒரு முழுமையான மாற்றம் சிஸ்டத்தில் வர வேண்டும் என்று ஒரு வரியையும் படத்தின் கீழே எழுதியிருக்கின்றான். அவன் ரஜனி ரசிகனும் இல்லை......... அநுரவிற்கு புதிதாக பல ரசிகர்கள் உண்டாகியிருக்கின்றனர்...........😀.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

நண்பன் ஒரு யாழில் வாக்குப் போட்டு விட்டு, அவன் விரலை படமெடுத்து வாட்ஸ்அப்பில் போட்டிருக்கின்றான். படமும் சரியான முக்கியம் போல...............

'யாருக்கடா போட்டாய்..........' என்று கேட்கவில்லை. அது அடிப்படை உரிமைக்கு எதிரான கேள்வி என்று சொல்கின்றனர். ஆனால் அவனே ஒரு முழுமையான மாற்றம் சிஸ்டத்தில் வர வேண்டும் என்று ஒரு வரியையும் படத்தின் கீழே எழுதியிருக்கின்றான். அவன் ரஜனி ரசிகனும் இல்லை......... அநுரவிற்கு புதிதாக பல ரசிகர்கள் உண்டாகியிருக்கின்றனர்...........😀.

ரஜனி… தமிழ் நாட்டில் “சிஸ்ரம் சேஞ்” பண்ண வெளிக்கிட்டு பல்டி அடிக்க…
அதை அனுர கெட்டியாக பிடித்து, தனது கோசமாக்கி…
இன்னும் சில மணித்தியாலங்களில் ஶ்ரீலங்காவின் ஜனாதிபதியாக வருவார் என நினைக்கின்றேன். 
“சிஸ்ரம்” என்ற கோடு போட்டது ரஜனி, அதில் ரோடு போட்டது அனுர. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ரஜனி… தமிழ் நாட்டில் “சிஸ்ரம் சேஞ்” பண்ண வெளிக்கிட்டு பல்டி அடிக்க…
அதை அனுர கெட்டியாக பிடித்து, தனது கோசமாக்கி…
இன்னும் சில மணித்தியாலங்களில் ஶ்ரீலங்காவின் ஜனாதிபதியாக வருவார் என நினைக்கின்றேன். 
“சிஸ்ரம்” என்ற கோடு போட்டது ரஜனி, அதில் ரோடு போட்டது அனுர. 😂

சிறி அண்ணை, எனக்கு இங்க அமெரிக்காவிலேயே வயிற்றைப் பிசையுது அநுராவும், ஜேவிபியும் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கவே............. கடைசியில் அப்படியே நடந்து, இதையும் பட்டுத்தான் தெளிய வேண்டும் போல........... நாங்கள் எல்லாவற்றையும் பட்டுப் பட்டே தெளிய வேண்டியிருக்கின்றதே..........🤣.

அந்த மூன்று மீன்கள் கதையில் நாங்கள் மூன்றாவது மீன்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

சிறி அண்ணை, எனக்கு இங்க அமெரிக்காவிலேயே வயிற்றைப் பிசையுது அநுராவும், ஜேவிபியும் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கவே............. கடைசியில் அப்படியே நடந்து, இதையும் பட்டுத்தான் தெளிய வேண்டும் போல........... நாங்கள் எல்லாவற்றையும் பட்டுப் பட்டே தெளிய வேண்டியிருக்கின்றதே..........🤣.

அந்த மூன்று மீன்கள் கதையில் நாங்கள் மூன்றாவது மீன்.............

பீதியைக் குடுக்காதேங்கோ அண்ணை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

சிறி அண்ணை, எனக்கு இங்க அமெரிக்காவிலேயே வயிற்றைப் பிசையுது அநுராவும், ஜேவிபியும் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கவே............. கடைசியில் அப்படியே நடந்து, இதையும் பட்டுத்தான் தெளிய வேண்டும் போல........... நாங்கள் எல்லாவற்றையும் பட்டுப் பட்டே தெளிய வேண்டியிருக்கின்றதே..........🤣.

அந்த மூன்று மீன்கள் கதையில் நாங்கள் மூன்றாவது மீன்.............

உண்மைதான்…. ரசோதரன்.
இவர்கள் ஆட்சிக்கு வந்து… என்னென்ன புதிய நடைமுறைகளை கொண்டு வரப் போகிறார்களோ தெரியவில்லை.
கட்சியின் தலைமையில் இருந்து, அடி மட்டத் தொண்டன் வரை  கிறுக்கு பிடித்தவர்கள். இவர்கள் வந்தால் தமிழர்களுக்கு உவப்பான செய்தி அல்ல என்பதே உண்மை. 🙂

கொசுறு செய்தி:  டாக்குத்தர் அர்ஜுனா…. இப்போ ஜே.வி.பி.யில் இருக்கின்றார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நாமல் தோற்றுவிட்டான்.

நரியும் தோற்றுவிட்டது.... (ரணில் பின்கதவால் மட்டுமே நுழையமுடியும்)

அனுரவிற்கும் சஜித்திற்கும் தான் போட்டி இப்போது....

சஜித் வெல்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளன...

ஒரு வேளை அனுர வென்றாலும் ஓராண்டிற்குள் அகற்றிவிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறியக்கூடியதாக உள்ளது.

--- உள்ளிருந்து ஒரு தகவல்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், உங்களின் நேரம் நடுச்சாமத்திலிருந்து ஆரம்பிக்குதாம் பேதிக்கான குளிசை எடுத்தல்..............🤣.

நடுராத்திரிலியிருந்து முடிவுகள் வர ஆரம்பிக்கும் என்று தேர்தல் திணைக்களம் சொல்லியிருக்கின்றது.

10 minutes ago, நன்னிச் சோழன் said:

ஒரு வேளை அனுர வென்றாலும் ஓராண்டிற்குள் அகற்றிவிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறியக்கூடியதாக உள்ளது.

--- உள்ளிருந்து ஒரு தகவல்

 

👍...............

சோழருக்கு எங்கும் ஒற்றர்கள் உள்ளார்கள் போல...............🤣

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 minutes ago, ரசோதரன் said:

 

👍...............

சோழருக்கு எங்கும் ஒற்றர்கள் உள்ளார்கள் போல...............🤣

உள்ளிருக்கும் பாசக்கார உறவுகளின் விசுவாசமான தகவல்கள்... 😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான்…. ரசோதரன்.
இவர்கள் ஆட்சிக்கு வந்து… என்னென்ன புதிய நடைமுறைகளை கொண்டு வரப் போகிறார்களோ தெரியவில்லை.
கட்சியின் தலைமையில் இருந்து, அடி மட்டத் தொண்டன் வரை  கிறுக்கு பிடித்தவர்கள். இவர்கள் வந்தால் தமிழர்களுக்கு உவப்பான செய்தி அல்ல என்பதே உண்மை. 🙂

இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்கள இனவாதம் என்று நொந்து போயிருக்கின்றோம் அல்லவா அண்ணை, ஆனால் அதைவிட பலமடங்கு காட்டுவார்கள் இவர்கள்......

கோதபாய ஒரு ஆர்கானிக் தோட்ட முயற்சிலேயே நாட்டைக் கவிழ்த்தார். இவர்களிடமிருந்து பல ஆர்கானிக் முன்னெடுப்புகளை நாங்கள் எதிர்பார்க்கலாம்...........🫢.

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எப்பிடியும் டக்கரின் 50 ஆயிரம்  வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் நரிணிலுக்கு விழும். இன்னும் கொஞ்ச முடிவுகள் வந்திருக்கு உத்தியோகப்பற்றற்ற முடிவுகளை தொடர்ந்து போடுவது அழகல்ல.
    • இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை லங்காசிறியின் நேரலை ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம். மேலும் உங்கள் கருத்துக்களுடன் நீங்களும் நேரலையில் இணைந்துகொள்ளலாம். https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-live-updates-1726934857#google_vignette திருவுளச்சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாம் சுற்றுவாக்கு எண்ணப்படும்  இவ்வாறு இரண்டாம் சுற்று வாக்கு எண்ணப்படும் போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குறிப்பாக இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச்சீட்டு முறையின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தால் அப்போதும் திருவுளச்சீட்டு முறைமை பின்பற்றப்பட உள்ளது.  https://tamilwin.com/article/two-scenarios-where-a-tie-could-occur-in-1726924469#google_vignette
    • அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பது அதிகம்..... ரணில் மாத்தையாவே அவர்களின் விருப்பமாக இருக்கும்...... சம்பளம் கூடுதல்லே.....
    • சங்குக்கு விழுந்த தொகையை கேட்டுட்டு போர்த்து மூடிக் கொண்டு படுத்துடுவாங்கள்.
    • தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். அப்பாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.