Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
04 OCT, 2024 | 10:52 AM
image

இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   

யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (03)  ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.      

மேலும் தெரிவிக்கையில்,  

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் சேர விரும்புவோரை சேருமாறு பொதுவான அழைப்பினை விடுத்துள்ளோம். அதில் சேருமாறு மாவை சேனாதிராசாவிற்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.  

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த கூட்டமைப்பாக இருக்கிறது. தமிழரசு கட்சி தனித்து இருக்கிறது. 

அவர்கள் எமது கூட்டமைப்புடன் இணைவது தான் சரியானது. அதனை விடுத்து, தங்களில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைப்பது சரியானது அல்ல.  

ஆகவே ஐக்கியத்தை விரும்பும் பட்சத்தில் அவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஒருமித்து போவதே சரியானது.   

தம்மில் இருந்து பிரிந்து போனவர்களை மீள வருமாறு அழைத்துள்ளனர். அதிலும்  யாரை அழைக்கின்றார்கள் என குறிப்பிடவில்லை.   

அதுமாத்திரமின்றி அவர்களுக்கு பொது சின்னமோ பொது கட்சியோ இல்லை தேர்தல் காலத்தில் மாத்திரம் தமது கட்சியில் தமது சின்னத்தில் போட்டியிடுமாறு கோருகின்றனர். அது சரியானதல்ல.   

தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யுமாறு நாம் பல தடவைகள் கோரியும். அதனை செய்யவில்லை.  

தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கியப்பட்ட விரும்பினால், அதனை எமக்கு அறிவிக்கலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/195447

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7158.jpeg.0e6b86b39399823f6894

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையோடு பொருத்தமான சின்னமாக இருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது ஐந்து கட்சிகள் சேர்ந்த கூட்டமைப்பாக இருக்கிறது. தமிழரசு கட்சி தனித்து இருக்கிறது

சரி தனித்துப் போட்டியிடுத்தான் பாருங்களேன்! நாங்க பட்டாசு போட ரெடி!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் தாங்கள் தான் தலையாரி என்று உங்களை பிரிச்சுவிட்டவை, இப்போ உங்களுக்கு அடங்கி சேவையாற்ற உடன்படுகினமே? அவர்கள்தான் முன்னிலை மற்றவரெல்லாம் அவர்கள் சொற்கேட்டு வாய்பொத்தி இருக்க வேணும். நீங்கள் பாருங்கோ.... உங்களின் திமிர், இருக்கிற கட்சிகள் போதாதென்று இன்னொரு கட்சியை உருவாக்கி, பின்னாளில் அதற்கு தூது விட வேண்டிய நிலை உருவாக்கப்போகுது. தமிழ் மக்களின் சனத்தொகை குறைவு, அதற்கு எத்தனை கட்சி தலைமை. அத்தனை பெருமையும் தமிழரசுக் கட்சியையே சாரும்.

2 hours ago, வாலி said:

சரி தனித்துப் போட்டியிடுத்தான் பாருங்களேன்! நாங்க பட்டாசு போட ரெடி!

கட்டுக் காசும் தேறாது இந்த மண்டையன் குழு தலைவருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஜோக்கராக மாறி வருகிறார் சுரேஷ்! கூட்டமைப்பின் அடையாளம் இல்லா விட்டால் எப்பவோ இவர்கள் அரசியல் மேடையில் இருந்து மறைந்திருப்பர் என்பது கூட விளங்காமல்😂?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மண்டையோடு பொருத்தமான சின்னமாக இருக்கும். 🤣

அதெப்படி??

அநுரா செய்தவற்றை அவரது கட்சி இதுவரை செய்தவற்றை மறக்க மன்னிக்க மற்றும் பழையதை தோண்டவேண்டாம் என்று பக்கம் பக்கமாக எழுதுவது சரியாக இருக்கும் போது இவர் செய்த பழையவற்றை ஏன் நீங்கள் தோண்டுகிறீர்கள்??? ஓ அவரும் நீங்களும் தமிழர் ஆச்சே? ஆச்சரியமாக இல்லைதான். தமிழன் என்று ஒரு இனமுண்டு அதற்கு தனியே ஒரு குணமுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நல்ல ஜோக்கராக மாறி வருகிறார் சுரேஷ்! கூட்டமைப்பின் அடையாளம் இல்லா விட்டால் எப்பவோ இவர்கள் அரசியல் மேடையில் இருந்து மறைந்திருப்பர் என்பது கூட விளங்காமல்😂?

உடுக்கடிக்க நிலாந்தன் மாஸ்டர்,  யதீந்திரா,  தமிழரசு பேர்வழிகள்  இந்த ஜோக்களுக்கு இருக்கிறார்களே!😂

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

அதெப்படி??

அநுரா செய்தவற்றை அவரது கட்சி இதுவரை செய்தவற்றை மறக்க மன்னிக்க மற்றும் பழையதை தோண்டவேண்டாம் என்று பக்கம் பக்கமாக எழுதுவது சரியாக இருக்கும் போது இவர் செய்த பழையவற்றை ஏன் நீங்கள் தோண்டுகிறீர்கள்??? ஓ அவரும் நீங்களும் தமிழர் ஆச்சே? ஆச்சரியமாக இல்லைதான். தமிழன் என்று ஒரு இனமுண்டு அதற்கு தனியே ஒரு குணமுண்டு. 

சுரேஷ் தமிழர் என்பதால் தான் பேச வேண்டியிருக்கிறது.  சிங்களவன் தமிழரைக் கொல்வது புதுமையா? அப்படியிருந்தும் சிங்கள தேசியவாதி அனுரவின் அணி தமிழர்களை நேரடியாகக் கடத்திச் சென்று, சித்திரவதை செய்து, மண்டையில் போட்டு வீதியில் வீசியமை இது வரை நடக்கவில்லை. இனி நடந்தால் அது வேறு கதை.

உங்களைப் பொறுத்தவரை, சுரேஷ் என்ற மண்டையன் குழுத் தலைவரின் கதை, அவர் 2002 இல் புலிகளின் தோட்டாக்களின் மீதான பயத்தால் "புலிகளையும் தமிழ் தேசியத்தையும் சிரமேற் சுமக்க ஆரம்பித்த நாள்" முதல் தான் ஆரம்பிக்கிறது.

எங்கள் போன்றவர்களுக்கு 89 இல் பள்ளிக்கூடத்திற்கும், விளையாட்டு மைதானத்திற்கும் கூட ஒளித்துத் தான் போக வேண்டிய அவல நிலையோடு இவர்களின் கதை ஆரம்பிக்கிறது. என் சமகால பாடசாலை வகுப்பினரிடையே, இந்த ஒட்டுண்ணிகளின் தொல்லையால் படிப்பை விட்டு வெளிநாடு போய் தம் எதிர்காலத்தை இழந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படிப் பல கல்வி ஆர்வத்துடன் இருந்த அப்பாவி இளையோரை ஊரை விட்டுத் துரத்தி விட்டு, பின்னர் தமிழ் தேசியத்தை தலையில்  தூக்கிக் கொண்டு பா.உ ஆன சுரேஷ் ஒரு ஒல்லிப் பித்தானாக இருந்த ஆயுததாரி. இப்ப பா.உ பதவியால், எல்லாப் பக்கத்தாலும் ஊதிப் பருத்து சொகுசாக இருக்கிறார். இவர் போன்றவர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள்!   

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அதெப்படி??

அநுரா செய்தவற்றை அவரது கட்சி இதுவரை செய்தவற்றை மறக்க மன்னிக்க மற்றும் பழையதை தோண்டவேண்டாம் என்று பக்கம் பக்கமாக எழுதுவது சரியாக இருக்கும் போது இவர் செய்த பழையவற்றை ஏன் நீங்கள் தோண்டுகிறீர்கள்??? ஓ அவரும் நீங்களும் தமிழர் ஆச்சே? ஆச்சரியமாக இல்லைதான். தமிழன் என்று ஒரு இனமுண்டு அதற்கு தனியே ஒரு குணமுண்டு. 

மண்டையன் குழுத் தலைவரை மன்னிக்கலாமா  மன்னிக்கக் கூடாதா? 

அதைத் தெளிவாகக் கூறுங்கள்,  அதிலிருந்து தொடருவோம்,.....சொதப்பல் கதை ஒன்றும் வேண்டாம். சரியா,......🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

மண்டையன் குழுத் தலைவரை மன்னிக்கலாமா  மன்னிக்கக் கூடாதா? 

அதைத் தெளிவாகக் கூறுங்கள்,  அதிலிருந்து தொடருவோம்,.....சொதப்பல் கதை ஒன்றும் வேண்டாம். சரியா,......🤣

கேள்விகளுக்கு பதில் 

கேள்விகளுக்கு கேள்வி அல்ல பதில்??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

மண்டையன் குழுத் தலைவரை மன்னிக்கலாமா  மன்னிக்கக் கூடாதா? 

அதைத் தெளிவாகக் கூறுங்கள்,  அதிலிருந்து தொடருவோம்,.....சொதப்பல் கதை ஒன்றும் வேண்டாம். சரியா,......🤣

என்னை மண்டையன் குழு என ஒரு தேசியர் அவதூறு பொழிந்தார். மண்டையன் குழு  தமிழர் என்பதால் அவருக்கு சார்பாக அவரை ஆதரித்து  பேசுகிறார் இன்னொரு தேசியர். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கேள்விகளுக்கு பதில் 

கேள்விகளுக்கு கேள்வி அல்ல பதில்??

எனது கேள்விக்கு இது பதில் இல்லையே? 🤨

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

எனது கேள்விக்கு இது பதில் இல்லையே? 🤨

 

உங்களுக்கு எத்தனை வயது என்று எனக்கு தெரியாது. ஆனால் எனது பொது வாழ்க்கை 1977இல் ஆரம்பித்தது. கூட்டி கழித்து பார்த்தால் எல்லாமே புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது. இதனை முன்னின்று நடத்தியவர்கள் பெருந்தலைவரும் மறைந்த தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன்.

என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியை விட ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரவாயில்லை. சுமந்திரன் இருக்கும் வரை தமிழரசுக் கட்சி பலவீனமான கட்சியாகத்தான் இருக்கும். சிறீதரன் அனைவரையும் அனைத்து செல்ல விரும்புகின்றார். சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அதனை விரும்பவில்லை. 

தற்போதைய தலைவர் மாவை ஐந்து சதத்துக்கும் பிரயோசனமற்றவர்.

இந்தியா இணைந்து கேட்டு அதிகளவு ஆசனங்களை எடுங்கள். பேரம் பேசலுக்கு அதுதான் தேவை. அதனை விடுத்து இந்தியாவின் சொல்லைக் கேட்டு ஆடும் கட்சி எனில் அது தமிழரசுக் கட்சி. சஜித்தோடு இணைந்து கேட்குமாறு விடுத்த கோரிக்கையை சிரமேற் கொண்டு செய்தவர் சுமந்திரன்.

பொதுக்கட்டமைப்பை மிரட்டி பணிய வைத்து பொது வேட்பாளரை அகற்றுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையினை உறுதியாக நின்று எதிர்த்தவர்கள் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்களே.

இங்கே நான் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு செம்பு தூக்கவில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கேட்பது பலம். அதனை அனைத்து இயக்கங்களும் இணைந்து செய்கின்றன. இதனை பாராட்ட வேண்டும்.

போராளி இயக்கங்களின் கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டு இருக்கின்றனர். இது எமது இனத்தின் சாபக்கேடு. தற்போது அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதனை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டுமே தவிர, கடந்த காலங்களைப் பற்றியே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் அதே இடத்தில்தான் நிற்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nirmalan said:

தமிழரசுக் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது. இதனை முன்னின்று நடத்தியவர்கள் பெருந்தலைவரும் மறைந்த தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன்.

என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியை விட ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரவாயில்லை. சுமந்திரன் இருக்கும் வரை தமிழரசுக் கட்சி பலவீனமான கட்சியாகத்தான் இருக்கும். சிறீதரன் அனைவரையும் அனைத்து செல்ல விரும்புகின்றார். சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அதனை விரும்பவில்லை. 

தற்போதைய தலைவர் மாவை ஐந்து சதத்துக்கும் பிரயோசனமற்றவர்.

இந்தியா இணைந்து கேட்டு அதிகளவு ஆசனங்களை எடுங்கள். பேரம் பேசலுக்கு அதுதான் தேவை. அதனை விடுத்து இந்தியாவின் சொல்லைக் கேட்டு ஆடும் கட்சி எனில் அது தமிழரசுக் கட்சி. சஜித்தோடு இணைந்து கேட்குமாறு விடுத்த கோரிக்கையை சிரமேற் கொண்டு செய்தவர் சுமந்திரன்.

பொதுக்கட்டமைப்பை மிரட்டி பணிய வைத்து பொது வேட்பாளரை அகற்றுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையினை உறுதியாக நின்று எதிர்த்தவர்கள் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்களே.

இங்கே நான் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு செம்பு தூக்கவில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கேட்பது பலம். அதனை அனைத்து இயக்கங்களும் இணைந்து செய்கின்றன. இதனை பாராட்ட வேண்டும்.

போராளி இயக்கங்களின் கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டு இருக்கின்றனர். இது எமது இனத்தின் சாபக்கேடு. தற்போது அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதனை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டுமே தவிர, கடந்த காலங்களைப் பற்றியே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் அதே இடத்தில்தான் நிற்க வேண்டும்.

சிறீதரன் என்னும், 

தன்னை தேசியத் தலைவர் என நினைக்கும்

சுயநல கிருமிக்கு சொம்பு தூக்குவது யாரப்பா?

அட

இது பரபரப்பு ரிஷி!

வேறு என்னாத்தை நைனா இவரிடம் இருந்து

எதிர்பார்பது?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

என்னை மண்டையன் குழு என ஒரு தேசியர் அவதூறு பொழிந்தார். மண்டையன் குழு  தமிழர் என்பதால் அவருக்கு சார்பாக அவரை ஆதரித்து  பேசுகிறார் இன்னொரு தேசியர். 😂

தமிழர்களை மண்டையில் போட்ட  குழு தலைவரை அவர் தமிழ் தேசியம் என்று சொன்னதால் அவரை அனுசரித்து செல்வார்கள்- ஆயுதம் தூக்கி  மக்கள் மண்டையில் போடத  சுமந்திரன் போன்றோர் தான் அவர்களுக்கு பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்களை மண்டையில் போட்ட  குழு தலைவரை அவர் தமிழ் தேசியம் என்று சொன்னதால் அவரை அனுசரித்து செல்வார்கள்- ஆயுதம் தூக்கி  மக்கள் மண்டையில் போடத  சுமந்திரன் போன்றோர் தான் அவர்களுக்கு பிரச்சனை.

தமிழர்களை மண்டையில் போட்டதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புழு என்றால் ஜேவிபி முதலை. எனவே அநுராவை மன்னிப்போம் மறப்போம் என்று இங்கே கூவும் அதே நபர்கள் தான் சுரேஸ் பிரேமச்சந்திரனை ஏற்கக்கூடாது என்றும் கூவுகின்றனர். இவர்கள் இரண்டு பேருக்குமான வேறுபாடு ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர் என்பது மட்டுமே. அப்படியானால் இதன் நோக்கம் தமிழர்களை தொடர்ந்து பிரித்தல் சிதைத்தல் மட்டுமே. 

நான் இந்த பிரித்தாளும் நபர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவே செய்கிறேன். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nirmalan said:

தமிழரசுக் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது. இதனை முன்னின்று நடத்தியவர்கள் பெருந்தலைவரும் மறைந்த தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன்.

என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சியை விட ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரவாயில்லை. சுமந்திரன் இருக்கும் வரை தமிழரசுக் கட்சி பலவீனமான கட்சியாகத்தான் இருக்கும். சிறீதரன் அனைவரையும் அனைத்து செல்ல விரும்புகின்றார். சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அதனை விரும்பவில்லை. 

தற்போதைய தலைவர் மாவை ஐந்து சதத்துக்கும் பிரயோசனமற்றவர்.

இந்தியா இணைந்து கேட்டு அதிகளவு ஆசனங்களை எடுங்கள். பேரம் பேசலுக்கு அதுதான் தேவை. அதனை விடுத்து இந்தியாவின் சொல்லைக் கேட்டு ஆடும் கட்சி எனில் அது தமிழரசுக் கட்சி. சஜித்தோடு இணைந்து கேட்குமாறு விடுத்த கோரிக்கையை சிரமேற் கொண்டு செய்தவர் சுமந்திரன்.

பொதுக்கட்டமைப்பை மிரட்டி பணிய வைத்து பொது வேட்பாளரை அகற்றுமாறு இந்தியா விடுத்த கோரிக்கையினை உறுதியாக நின்று எதிர்த்தவர்கள் ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்களே.

இங்கே நான் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு செம்பு தூக்கவில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கேட்பது பலம். அதனை அனைத்து இயக்கங்களும் இணைந்து செய்கின்றன. இதனை பாராட்ட வேண்டும்.

போராளி இயக்கங்களின் கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டு இருக்கின்றனர். இது எமது இனத்தின் சாபக்கேடு. தற்போது அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதனை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டுமே தவிர, கடந்த காலங்களைப் பற்றியே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் அதே இடத்தில்தான் நிற்க வேண்டும்.

நிர்மலனுக்கு வரலாறும் சமகால நிகழ்வுகளும் நேரெதிராகத்தான் புரிந்துகொள்வாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தமிழர்களை மண்டையில் போட்டதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புழு என்றால் ஜேவிபி முதலை. எனவே அநுராவை மன்னிப்போம் மறப்போம் என்று இங்கே கூவும் அதே நபர்கள் தான் சுரேஸ் பிரேமச்சந்திரனை ஏற்கக்கூடாது என்றும் கூவுகின்றனர். இவர்கள் இரண்டு பேருக்குமான வேறுபாடு ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர் என்பது மட்டுமே. அப்படியானால் இதன் நோக்கம் தமிழர்களை தொடர்ந்து பிரித்தல் சிதைத்தல் மட்டுமே. 

நான் இந்த பிரித்தாளும் நபர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவே செய்கிறேன். 

அனுராவை மன்னிப்போம் மறப்போம் என்று கூறியவர்களின் பெயர்களை இங்கே உங்களால் கூற முடியுமா?  

விட்டால் குடுமி, தட்டினால் மொட்டை எனும் தங்களின்  நிலைப்பாடு எல்லா சந்தர்ப்பங்களிலும்   பொருந்தி வராது   என்பதுதான் பலரின் நிலைப்பாடு.  புதிய சூழலுக்கு ஏற்ப எங்கள் தெரிவுகளும் பொருந்தி வரவேண்டும். 

தாங்களோ விட்டேன் கவிழ்த்தேன் பார் என்று நிற்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அனுராவை மன்னிப்போம் மறப்போம் என்று கூறியவர்களின் பெயர்களை இங்கே உங்களால் கூற முடியுமா?  

விட்டால் குடுமி, தட்டினால் மொட்டை எனும் தங்களின்  நிலைப்பாடு எல்லா சந்தர்ப்பங்களிலும்   பொருந்தி வராது   என்பதுதான் பலரின் நிலைப்பாடு.  புதிய சூழலுக்கு ஏற்ப எங்கள் தெரிவுகளும் பொருந்தி வரவேண்டும். 

தாங்களோ விட்டேன் கவிழ்த்தேன் பார் என்று நிற்கிறீர்கள்.

மன்னிக்கவும்

நித்திரை கொள்பவனை மட்டுமே எழுப்ப எனது பொன்னான நேரத்தை செலவழிப்பேன். நடிப்பவனை???? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

தமிழர்களை மண்டையில் போட்டதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புழு என்றால் ஜேவிபி முதலை. எனவே அநுராவை மன்னிப்போம் மறப்போம் என்று இங்கே கூவும் அதே நபர்கள் தான் சுரேஸ் பிரேமச்சந்திரனை ஏற்கக்கூடாது என்றும் கூவுகின்றனர். இவர்கள் இரண்டு பேருக்குமான வேறுபாடு ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர் என்பது மட்டுமே. அப்படியானால் இதன் நோக்கம் தமிழர்களை தொடர்ந்து பிரித்தல் சிதைத்தல் மட்டுமே. 

நான் இந்த பிரித்தாளும் நபர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவே செய்கிறேன். 

எங்கே இருந்து இந்த தகவல்களை எடுக்கிறீர்கள்?  ஜேவிபி தமிழர்களை மண்டையில் போட்டார்களா? உண்மையிலேயே நீங்கள் பிரான்ஸ் போன பின்னர் சின்னத்திரையில் தான் தாயகத்தில் நடந்ததைப் பார்த்தீர்களா? சிறி லங்காவின் இராணுவத்தில் ஜேவிபி ஆதரவாளர்களும் இருந்திருக்கின்றனர். ஆனால், ஜேவிபி என்ற கட்சி தமிழர்களை கடத்திச் சென்று, சுரேஷ், பரந்தன் ராஜன் குழுக்கள் போல கொன்றது நான் அறியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

எங்கே இருந்து இந்த தகவல்களை எடுக்கிறீர்கள்?  ஜேவிபி தமிழர்களை மண்டையில் போட்டார்களா? உண்மையிலேயே நீங்கள் பிரான்ஸ் போன பின்னர் சின்னத்திரையில் தான் தாயகத்தில் நடந்ததைப் பார்த்தீர்களா? சிறி லங்காவின் இராணுவத்தில் ஜேவிபி ஆதரவாளர்களும் இருந்திருக்கின்றனர். ஆனால், ஜேவிபி என்ற கட்சி தமிழர்களை கடத்திச் சென்று, சுரேஷ், பரந்தன் ராஜன் குழுக்கள் போல கொன்றது நான் அறியவில்லை.

நீங்கள் அறிந்து கொள்ள முடியாது. அங்கே தான் இருக்கிறது ஜேவிபி அரசியல்.  ஏன் உங்கள் அரசியலும்.

1983இல் தொடங்கியது நான் கண்ட அனுபவித்த ஜேவிபி அரசியல் மற்றும் இனக்கொலை. 

அதனுடன் ஒப்பிடுகையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புழுவுக்கும் மிக மிக குறைவே. இவற்றை நேரே கண்டவன் அனுபவித்தவன் இதுவரை நீதியோ இழுப்பீடோ கிடைக்காதவன். 

(உங்கள் சின்னத்திரை மற்றும் யூரூப் கதைகளை நிறுத்தி விட்டு கருத்து எழுத முயலுங்கள். உங்கள் படிப்பு மற்றும் பட்டங்கள் வெறும் காகிதங்கள் என்று நிரூபிக்கப்படுகின்றன)

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

நீங்கள் அறிந்து கொள்ள முடியாது. அங்கே தான் இருக்கிறது ஜேவிபி அரசியல்.  ஏன் உங்கள் அரசியலும்.

1983இல் தொடங்கியது நான் கண்ட அனுபவித்த ஜேவிபி அரசியல் மற்றும் இனக்கொலை. 

அதனுடன் ஒப்பிடுகையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் புழுவுக்கும் மிக மிக குறைவே. இவற்றை நேரே கண்டவன் அனுபவித்தவன் இதுவரை நீதியோ இழுப்பீடோ கிடைக்காதவன். 

(உங்கள் சின்னத்திரை மற்றும் யூரூப் கதைகளை நிறுத்தி விட்டு கருத்து எழுத முயலுங்கள். உங்கள் படிப்பு மற்றும் பட்டங்கள் வெறும் காகிதங்கள் என்று நிரூபிக்கப்படுகின்றன)

இதில் அரசியல் என்ன இருக்கிறது? இங்கே நான் கேட்பது தரவுகள், ஆதாரங்கள். ஏன் நாம் அறிந்து கொள்ள முடியாது? ஆதாரங்கள் எங்கேயாவது கொள்ளிமலை இரகசியமாகப் புதைக்கப் பட்டு உங்களுக்கு மட்டும் தெரிகிறதா😎?

 83 கலவரத்தில் பங்கு கொண்டவர்களில் ஜேவிபியினர் முக்கியமானவர்களா? ஜேஆர் அரசு ஒர் கல்லில் இரு மாங்காய்களாக ஜேவிபி தான் பிரதான சூத்திர தாரிகள் என்று தன் கட்சிக் காரரைக் காப்பாற்ற சொன்ன திரிப்பை நீங்கள் இப்போது நம்புகிறீர்கள் - இதற்கு முன்னர் இதைப் பற்றி யாரும் பேசவில்லை.

என் படிப்பை, பட்டத்தை விடுங்கள் , தரவுகளை தேடிச் செல்லும் பழக்கத்தைத் தரும் என் படிப்பு உங்கள் போன்றவர்களின் காலச் சூழ்நிலைக்கேற்ற மாதிரி வசதியான தரவுகளை மட்டும் பொறுக்கிப் பாவிக்கும் நிலையில் இருப்போருக்கு எப்போதும் கீழாகத் தான் தெரியும்.

இங்கே ஜேவிபியை பெரிய கற்பனை முதலையாகக் காட்டி, மோசமான மனித உரிமை மீறல்கள் செய்த மண்டையன் குழுவை சிறு புழுவாகக் காட்டும் உங்கள் நிலை, "தலையில் அந்தப் புழு யாரைச் சுமக்கிறது" என்ற விடயத்தைப் பொறுத்தது என நினைக்கிறேன்.

உங்கள் நிலைப்பாட்டின் நீதி: என்ன அநியாயமும் செய்யுங்கோ, ஆனால் புலிகளையும், தேசியத்தையும் பற்றி வாயளவில் பேசுங்கோ - எங்கள் வாக்கு உங்களுக்கே!😂  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.