Jump to content

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, putthan said:

டெலோ வும் இந்த கூட்டணி என நினைக்கிறேன்

தகவலுக்கு நன்றி புத்தன். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புத்திசாலித்தனம்!!!ஒருத்தன் வேட்புமனுவுக்கு விதானையிடம் குடும்பக் காட் நிரப்பின மாதிரி நிரப்பி வைச்சிருக்கிறான்.....இதிலை 5 வது இடத்திலை மகள். மகள் திருமணம் செய்ததாலை Surname கணவனின் பெயர்...ஆகா!எப்படிப்பட்ட ஜனநாயகநாடு இது!May be an image of ticket stub and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் வெற்றி பெறுவதற்கு ஏறத்தாள் எத்தனை ஆயிரம் வாக்குகள் எடுக்க வேண்டுமென்று யாருக்காவது தெரியுமா?

வடக்கு கிழக்கில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருவர் வெற்றி பெறுவதற்கு ஏறத்தாள் எத்தனை ஆயிரம் வாக்குகள் எடுக்க வேண்டுமென்று யாருக்காவது தெரியுமா?

வடக்கு கிழக்கில்.

ஒரு முறை தேர்தலை புலிகள் பகிஸ்கரிக்க சொல்லிய போது... பெரும்பாலான  மக்கள் வாக்களிக்கவில்லை. அப்போ டக்ளஸ் தேவானந்தா, அண்ணளவாக  200 வாக்குகள் பெற்று பாராளுமன்றம் சென்றார். 
குறிப்பிட்ட அளவுக்கு மேல்தான்... வாக்குகள் பெற வேண்டும் என்று வரைமுறை இல்லை என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

குறிப்பிட்ட அளவுக்கு மேல்தான்... வாக்குகள் பெற வேண்டும் என்று வரைமுறை இல்லை என நினைக்கின்றேன்.

அது டக்ளஸ்க்கு மட்டும் தான்  😂. மற்றவர்களுக்கு வரைமுறை    உண்டு 🤣

On 11/10/2024 at 06:35, யாயினி said:

அர்ச்சனாவின் முதல் சட்ட ஆலோசகாரக இருந்த செலஸ்டீன் அவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கையெப்பமிட்டு இருக்கிறார்.

 

அப்புறம் இன்னுமொரு சட்டக்கல்லூரி பெண் பிள்ளை..

Celestine Stanislaus 

14h  · 
 

இது தமிழ் பெயரா.?? இப்படி பெயரை  முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.  

On 11/10/2024 at 14:07, தமிழ் சிறி said:

கல்வி கற்ற இளையவர்... அரசியலில் முன்மாதிரியாக இருப்பார் என்று பார்த்தால், 
ஆரம்பத்திலேயே  சுத்துமாத்து செய்ய வெளிக்கிட்டு விட்டார். 
போற போக்கில் சுமந்திரனையே... தூக்கி சாப்பிட்டு விடுவார் போலுள்ளது. 
😂

சைக்கிள் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார்    அதாவது மாறிவிடடார.  மழைக்கு பாதுகாக்கவும் இருக்கும் இல்லையா?? 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு முறை தேர்தலை புலிகள் பகிஸ்கரிக்க சொல்லிய போது... பெரும்பாலான  மக்கள் வாக்களிக்கவில்லை. அப்போ டக்ளஸ் தேவானந்தா, அண்ணளவாக  200 வாக்குகள் பெற்று பாராளுமன்றம் சென்றார். 
குறிப்பிட்ட அளவுக்கு மேல்தான்... வாக்குகள் பெற வேண்டும் என்று வரைமுறை இல்லை என நினைக்கின்றேன்.

 தமிழ் சிறி. 1994 ம் ஆண்டு தேர்தலையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். அத்தேர்தல் நடை பெற்ற போது யாழ் மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.  தமது கட்டுப் பாட்டு பிரதேசங்களில் தேர்தல் நடத்த புலிகள் அனுமதிக்கவில்லை. தீவகம் மட்டும் அரச கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்ததால்,  அங்கு ஈபிடிபி 10744 வாக்குகளை எடுத்தது

இந்த வாக்குகள் யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளாக எடுத்து ஈபிடிபி  யாழ் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது.  தேர்தல் பகிஷகரிப்பின் எதிர்மறை விளைவை தமிழர்கள் தெரிந்து கொண்டார்கள். 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி புத்தன். 🙂

ஏதோ போட்டி என்றீர்கள்.  ஒன்றையும் காணவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

 தமிழ் சிறி. 1994 ம் ஆண்டு தேர்தலையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். அத்தேர்தல் நடை பெற்ற போது யாழ் மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.  தமது கட்டுப் பாட்டு பிரதேசங்களில் தேர்தல் நடத்த புலிகள் அனுமதிக்கவில்லை. தீவகம் மட்டும் அரச கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்ததால்,  அங்கு ஈபிடிபி 10744 வாக்குகளை எடுத்தது

இந்த வாக்குகள் யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளாக எடுத்து ஈபிடிபி  யாழ் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது.  தேர்தல் பகிஷகரிப்பின் எதிர்மறை விளைவை தமிழர்கள் தெரிந்து கொண்டார்கள். 

நீங்கள் சொல்லிய மாதிரி  1994´ம் ஆண்டு தேர்தலாக இருக்கலாம் ஐலண்ட்.
அதில் டக்ளஸ் கட்சியை சேர்ந்தவர் ஒருவர் 200 வாக்கு எடுத்து பாராளுமன்றம் போனதாக செய்தியில் வாசித்த நினைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஏதோ போட்டி என்றீர்கள்.  ஒன்றையும் காணவில்லை  

ஓம். யாழ்.கள தேர்தல் கணிப்பு ஒன்றை @கந்தப்பு  அவர்கள் நடத்த இருக்கின்றார்கள்.
தேர்தல் மனுக்கள் விண்ணப்பிக்கும் நாள் நேற்றுடன் நிறைவு பெற்றறாலும், 
இலங்கை தேர்தல் திணைக்களம் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
அநேகமாக நாளை அந்த முடிவு தெரியும் என நினைக்கின்றேன்.
அதற்குப் பின் கந்தப்பு அவர்கள் கேள்விக் கொத்தை தயாரிப்பார் என எண்ணுகின்றேன்.
நீங்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்லிய மாதிரி  1994´ம் ஆண்டு தேர்தலாக இருக்கலாம் ஐலண்ட்.
அதில் டக்ளஸ் கட்சியை சேர்ந்தவர் ஒருவர் 200 வாக்கு எடுத்து பாராளுமன்றம் போனதாக செய்தியில் வாசித்த நினைவு. 

இருக்கலாம்.  மிக குறைந்த வாக்குக்கள் அளிக்கப்பட்டிருக்கையில் 9 ஆசனங்கள் இருக்கையில்  200 வாக்கு ஒரு ஆசனத்துக்கு போதுமானதாக இருந்திருக்கும். 

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்லிய மாதிரி  1994´ம் ஆண்டு தேர்தலாக இருக்கலாம் ஐலண்ட்.
அதில் டக்ளஸ் கட்சியை சேர்ந்தவர் ஒருவர் 200 வாக்கு எடுத்து பாராளுமன்றம் போனதாக செய்தியில் வாசித்த நினைவு. 

1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தான் அது. 9 எம் பிக்களை ஈபிடிபி பெற்றுக் கொண்டது. யாழ் மாவட்டத்தில் தீவகத்தில் மட்டுமே தேர்தல் இடம்பெற்றது. ஒரு சில எம் பி கள் நூற்றுச் சொச்ச வாக்குகளை மட்டுமே பெற்று தேர்வானார்கள்.

அதில் ஒருவர் பிற்காலத்தில் தினமுரசு ஆசிரியராக இருந்த அப்பிள் என அழைக்கப்பட்ட ரமேஷ்.

(பின்னர் 1999 இல் டக்கிளசால்  வெள்ளவத்தையில் ஈபிடிபி வாங்கிய (நெல்சன் வீதி இலக்கம் 15) வீட்டை எவர் வைத்திருப்பது தொடர்பாகவும், ரமேஷ் குமார் பொன்னம்பலத்துடன் இணைய முயற்சித்ததாலும் கொல்லப்பட்டார்.)

புலிகள் தேர்தலை புறக்கணிக்க சொன்னதாக நினைவில்லை. ஆனால் தம் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் சிறி லங்கா வின் தேர்தலை நடாத்த அனுமதிப்பது தனி நாட்டுக் கோரிக்கை யின்  அடிப்படையில் விரோதமானது என்பதால் நடாத்த விடவில்லை. 

 

  • Thanks 3
Link to comment
Share on other sites

 

இலங்கையில் எம்.பி-க்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?

தெற்காசியாவிலேயே மிகச்சிறந்த ஜனநாயகத் தேர்தல் என்று அரசியல் நோக்கர்களால் சொல்லப்படுகிற நடைமுறை கொண்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

Published:Updated:
 
இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம்

 

கொரோனாவால் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 2.17 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அந்த நாட்டில்,1.62 கோடிப்பேர் வாக்களிக்கத் தகுதியடையவர்களாக இருக்கிறார்கள். அதிகமான வாக்காளர்களை, (17,85,964) ஹம்பகா தேர்தல் மாவட்டம் கொண்டுள்ளது . மிகக் குறைந்த வாக்காளர்களை, (2,87,024) வன்னி தேர்தல் மாவட்டம் கொண்டுள்ளது.

நாடு முழுவதும்,12,984 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 பேரும் சுயேட்சை குழுக்கள் சார்பில் 3,800 பேரும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 75,000 போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அங்கு குறைவுதான் என்றாலும், மக்கள் சமூக இடைவெளியுடன் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு மையங்களை அதிகரிப்பட்டுள்ளன. வாக்களிக்கும் நேரமும் ஒருமணிநேரம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 
இலங்கை நாடாளுமன்றம்
 
இலங்கை நாடாளுமன்றம்
 

இலங்கை பாராளுமன்றத்துக்கு ஒட்டுமொத்தமாக 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களில், 196 பேர் வாக்களிப்பின் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தியாவைப் போல, அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி, குறைந்த வாக்குகள் பெற்றவர் தோல்வி என்கிற நடைமுறை இலங்கையில் இல்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவப் படியே உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். அதன்படி, ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஒட்டுமொத்தமாகப் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும். இலங்கையில் 1978-ம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் இப்படி மாறிவிட்டன.

தெற்காசியாவிலேயே ஜனநாயகமான மிகச்சிறந்த தேர்தல் முறையாக இலங்கையில் பின்பற்றப்படும் தேர்தல்முறை கருதப்படுகிறது. அதுகுறித்து, விரிவாகப் பார்ப்போம்.

இலங்கையில் ஒட்டுமொத்தமாக, 9 மாகாணங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன. ஆனால், தேர்தலுக்காக இவை, 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். இப்படிப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 160 தேர்தல் தொகுதிகள் இருக்கும். அதோடு ஒரு மாகாணத்துக்கு கூடுதலாக, 4 உறுப்பினர் என்கிற வகையில் மொத்தமுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு 36 பேர் என ஒட்டுமொத்தமாக 196 பேர் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களில் இருந்தும், மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர் இடங்கள் இருக்கும். குறைந்தபட்சமாக திரிகோணமலை மாவட்டத்தில் இருந்து நான்கு உறுப்பினர்களும் அதிகட்சமாக கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19 உறுப்பினர்களும் தேர்தெடுக்கப்படுகின்றனர்.

 
தேர்தல் மாவட்டங்கள்
 
தேர்தல் மாவட்டங்கள்
 

நம் நாட்டைப் போல, ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் சார்பாக ஒருவர்தான் போட்டியிட முடியும் என்கிற நடைமுறையும் அங்கு இல்லை. உதாரணமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து, 7 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். ஆனல், இந்த மாவட்டத்தில் ஒரு கட்சியில் இருந்தே 10 பேர் போட்டியிடலாம். பத்துக்கும் குறைவாக உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்ட மாவட்டங்களில், 3 பேர் கூடுதல் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். பத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் மாவட்டங்களில், ஆறு பேர் கூடுதல் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். உதாரணமாக, திரிகோணமலை மாவட்டத்தில், ஏழு வேட்பாளர்களையும், கொழும்பு மாவட்டத்தில் 22 வேட்பாளர்களையும் ஒவ்வொரு கட்சி/சுயேச்சை குழுக்கள் சார்பில் நிறுத்தவேண்டும்.

 

 தேர்தல் நடைமுறை:

 

ஒரு வாக்குச் சீட்டில் மேலே கட்சிகளின் பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருக்கும். அதில் நமக்கு விருப்பத்துக்குரிய கட்சிக்கு வாக்களிக்கலாம். அடுத்ததாக, அதே வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில், தாம் ஆதரித்த கட்சியின் சார்பில் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் தாம் விரும்பும் மூன்று பேருக்கு விருப்பு வாக்கையும் அளிக்க முடியும். ஆனால், இது கட்டாயமல்ல. அதாவது, தான் விரும்பும் கட்சிக்கு மட்டுமல்லாது, அந்தக் கட்சிக்குள்ளும் யாரை உறுப்பினராகக் கொண்டு வரவேண்டும் என்பதையும் மக்களே தேர்வு செய்யும் ஜனநாயகமும் இலங்கை தேர்தல் நடைமுறையில் உண்டு.

கீழே உள்ள வாக்குச்சீட்டு யாழ் தேர்தல் மாவட்டத்துக்கானது. ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் பத்துபேர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று முதல் பத்து வரை ஒரு எண் வழங்கப்படும். வேட்பாளர்கள் `நான் இந்தக் கட்சி, என் எண் இது’ என்று சொல்லித்தான் வாக்கு சேகரிப்பார்கள்.

வாக்களிக்கும்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் ஒருவர், கீழே உள்ள பத்து இலக்கங்களில் அகில இந்தியக் காங்கிரஸில் தங்களின் விருப்பத்துக்குரிய 3 வேட்பாளர்ளை டிக் செய்து தேர்வு செய்ய முடியும்.

 
யாழ்ப்பாண தொகுதி வாக்குச் சீட்டு
 
யாழ்ப்பாண தொகுதி வாக்குச் சீட்டு
எழுச்சி முகநூல் பக்கம்
 

தேர்தல் முடிந்தவுடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணிக்கை கணக்கீடுகள் எல்லாம் ஒரு தேர்தல் மாவட்டம் என்கிற அளவில்தான் நடைபெறும். ஒரு மாவட்டத்தில், முதலில், அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். பிறகு சுயேட்சைக் குழுக்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பின்னர் பதிவான வாக்குகளில் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள். அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டு மீதமுள்ள வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அடுத்ததாக, ஒரு மாவட்டத்தில் எந்தக் கட்சி/சுயேச்சை அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களுக்கு ஒரு இடம் முதலில் வழங்கப்பட்டுவிடும்.

 

உதாரணமாக, ஆறு உறுப்பினர்களைத் தேர்வு செய்யவேண்டிய ஒரு தேர்தல் மாவட்டத்தில் 1 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். 5 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளாக, கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற 10,000 வாக்குகள் என வைத்துக்கொண்டால் அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கபப்டும்.

மீதமுள்ள 90,000 வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதில், கட்சி (அ) 17,000 வாக்குகள், கட்சி (ஆ) 38,000 வாக்குகள், கட்சி (இ) 15,000, கட்சி (ஈ) 20,000 வாக்குகள் பெறுகிறார்கள் என வைத்துக்கொண்டால் முதலில், 38 ஆயிரம் வாக்குகள் பெற்ற கட்சி (ஆ) வுக்கு ஒரு உறுப்பினர் வழங்கப்பட்டுவிடும்.

மீதமுள்ள, 5 இடங்களை ஒட்டுமொத்த வாக்குகளான 90 ஆயிரத்தை வகுக்க, 18,000 வரும். இதுதான் ஒரு உறுப்பினரைத் தேர்தெடுக்கத் தேவையான வாக்குகள். அதன்படி, முதல் சுற்றில் கட்சி (அ) வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. கட்சி (ஆ) வுக்கு இரண்டு இடங்கள் கிடைக்கும் (மீதம் 2000), கட்சி (இ) வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்காது. கட்சி (ஈ) வுக்கு ஒரு இடம் கிடைக்கும் (மீதம் 2000). ஒட்டுமொத்தமாக உள்ள 5 இடங்களில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டன. இப்போது மீதமிருக்கும் 2 இடங்களுக்கான தேர்வு.

 
யாழ்ப்பாணம் 2015 தேர்தல் முடிவுகள்
 
யாழ்ப்பாணம் 2015 தேர்தல் முடிவுகள்
 

இப்போது, கட்சி (அ) 17,000 வாக்குகளுடனும், கட்சி (ஆ) 2,000 வாக்குகளுடனும், கட்சி (இ) 15,000 வாக்குகளுடனும் கட்சி (ஈ) 2,000 வாக்குகளுடனும் இருப்பார்கள். இதில் அதிகமான வாக்குகளை வைத்திருக்கும் கட்சிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்படும். அதன்படி கட்சி (அ) வுக்கும், கட்சி (இ) வுக்கும் ஒவ்வொரு இடங்கள் கிடைக்கும்.

இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று முடிவான பிறகு, அந்தக் கட்சிகளின் சார்பில் விருப்ப வாக்குகள் எந்த வேட்பாளருக்கு என்று பார்க்கப்படும். அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கூடுதலாக வாக்குகள் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

அதேபோல 29 தேசிய இடங்கள் தேர்வு செய்யும் முறையைப் பார்ப்போம். இலங்கையில் ஒட்டுமொத்தமாக, 1.62 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில், 1.5 கோடிப்பேர் ஒட்டுமொத்தமாக வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அது அப்படியே 29 ஆல் வகுக்கப்பட்டால், 5,17,241 வாக்குகள் வரும். ஒவ்வொரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளில் இதை வகுக்க எவ்வளவு வருகிறதோ அவ்வளவு இடங்கள் ஒவ்வொரு கட்சி/சுயேச்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும். அதற்குப் பிறகும் இடங்கள் மீதமிருந்தால், மேலே குறிப்பிட்டதைப் போல, அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்கு மேலிருந்து கீழ் வரிசையில் ஒதுக்கப்பட்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.

 

இன்று மாலையில் இருந்தே வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கிவிடும். வாக்குகளை எண்ண, 71 வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதிகளான வடக்கு கிழக்கில், ஒட்டுமொத்தமாக 29 உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். பெரும்பான்மையான இடங்கள் சிங்களப் பகுதிகளில் இருந்தே தேந்தெடுக்கப்படுவதால், சிங்களக் கட்சிகளுக்கிடையேதான் பிரதான போட்டி இருக்கும். இதுவரை ராஜபக்சேவின் அணிக்குத்தான் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுற்றிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த, சஜித் பிரேமதேசா, ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனி அணியாகி, சிறுபான்மை முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகளை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கிறார். சிங்களக் கட்சிகள் மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளும் பல பிரிவுகளாக நின்றே தேர்தலைச் சந்திக்கின்றன. தமிழ்த்தேசிய கொள்கையுடைய கட்சிகளே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலைச் சந்திக்கின்றன.

 
சண் மாஸ்டர்
 
சண் மாஸ்டர்
 

இந்தத் தேர்தல் குறித்து, சென்னையில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் பேசும்போது, ``இராஜபச்சே குடும்பத்தைப் பாதுகாத்து இன்று கோத்தபாய இலங்கையின் அதிபராக வருவதற்கான சூழ்நிலையை சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாக்கிய சூழலில் இந்தத் தேர்தல் எம் மக்கள் முன் வந்துள்ளது. இனப்படுகொலைக்கு நீதியைப் பெறவும், பொதுவாக்கெடுப்பின் வழி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தமது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளவர்களைத்தான் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்ய வேண்டும். அதுவே இலங்கை தீவில் தமிழர்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் உதவும்'' என்றார் அவர்.

 
 

தொடர்ந்து, ஜெனிவாவிலிருந்து, மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ பேசும்போது,

``கடந்தகாலத் தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுத்து, தமிழின அழிப்பை பன்னாட்டு சமூகத்துக்கு எடுத்துச் சொல்லத் தவறிவிட்டனர். இனி வரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாவது தமிழர் நலன் கருதி தமிழ் உணர்வுடன் செயல்பட வேண்டும். தமிழ்த் தேசியத்துக்கு எதிர்த்திசையில் நின்று தமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், நீதிக்கான செயற்பாடுகளையும் கடந்தகாலங்களில் இருந்து இன்றுவரை கொன்றழித்தவர்களையும், சிங்களப் பேரினவாத கட்சிகளையும் அவர்களின் அடிவருடிகளான ஒட்டுக் குழுக்களையும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

அடுத்ததாக, தமிழின அழிப்பு குறித்து தமிழ்நாடு சட்டசபையிலும், இலங்கை வடக்கு மாகாண சபையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பன்னாட்டுப் பாராளுமன்றங்கள் மத்தியில் நாம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழின அழிப்பு, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்த பேரினவாத இலங்கை அரசும் அதன் அரசியல் தலைவர்களும், இராணுவத் தலைவர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிறார் அவர்.

 
பொஸ்கோ
 
பொஸ்கோ
 

பொதுவாக இலங்கையில் அதிபர் தேர்தலோ, பிரதமர் தேர்தலோ, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சிகளுக்குக்கான சிங்களர் ஒருவரை அதிபராகவோ, பிரதமராகவோ தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாகத்தான் இருக்கும். மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமே தமிழருக்கான குறைந்தபட்ச அதிகாரத்துக்கான தேர்தலாக இருக்கும். ஆனால், இந்தத் தேர்தலில் பெரும்பான்மை என்பதைத்தாண்டி, மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்றுவிட வேண்டும் என்பதே ராஜபக்சே சகோதரர்களின் எதிர்பார்ப்பு. அப்போதுதான், ஜனாதிபதிக்கு இருந்த அளவு கடந்த அதிகாரத்தைக் குறைக்க, மைத்திரிபால சிரிசேனா ஆட்சியில் செய்யப்பட்ட 19-வது சட்டத்திருத்தத்தை மாற்ற முடியும்.

அதற்காகவே கொரோனாவை இராணுவத்தின் துணைகொண்டு ஒழித்த கையோடு தேர்தலையும் நடத்திவிடத் துடித்தார்கள்... அவர்கள் விருப்பப்படி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெறுகிறார்களா, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழ் மக்களின் ஆதர்ச அரசியல் அமைப்பாக இருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக களமிறங்கியிருக்கும் அணியினரை தமிழ் மக்கள் தேர்தெடுத்திருக்கிறார்களா என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிந்துவிடும்." என்றார்.

https://www.vikatan.com/government-and-politics/a-detailed-explainer-for-sri-lankas-parliamentary-electoral-process

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நிழலி said:

1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தான் அது. 9 எம் பிக்களை ஈபிடிபி பெற்றுக் கொண்டது. யாழ் மாவட்டத்தில் தீவகத்தில் மட்டுமே தேர்தல் இடம்பெற்றது. ஒரு சில எம் பி கள் நூற்றுச் சொச்ச வாக்குகளை மட்டுமே பெற்று தேர்வானார்கள்.

அதில் ஒருவர் பிற்காலத்தில் தினமுரசு ஆசிரியராக இருந்த அப்பிள் என அழைக்கப்பட்ட ரமேஷ்.

(பின்னர் 1999 இல் டக்கிளசால்  வெள்ளவத்தையில் ஈபிடிபி வாங்கிய (நெல்சன் வீதி இலக்கம் 15) வீட்டை எவர் வைத்திருப்பது தொடர்பாகவும், ரமேஷ் குமார் பொன்னம்பலத்துடன் இணைய முயற்சித்ததாலும் கொல்லப்பட்டார்.)

புலிகள் தேர்தலை புறக்கணிக்க சொன்னதாக நினைவில்லை. ஆனால் தம் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் சிறி லங்கா வின் தேர்தலை நடாத்த அனுமதிப்பது தனி நாட்டுக் கோரிக்கை யின்  அடிப்படையில் விரோதமானது என்பதால் நடாத்த விடவில்லை. 

 

நிழலி… தக்க நேரத்தில் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீங்கள் கூறிய மாதிரி அந்த நேரம் நூற்றுச் சொச்ச வாக்குளை பெற்று பாராளுமன்றம் போனதை பார்த்து சிங்களவர்களே நகைச்சுவையாக பேசிக் கொண்டது நல்ல நினைவில் உள்ளது.

ஒருவர் 120 வாக்குகளுடன் எம்.பி., மற்றொருவர் 150 வாக்குகளுடன் எம்.பி. ஆகினார்கள் என நினைவில் உள்ளது.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் குறைந்த வாக்குகளுடன் பாராளுமன்றம் போனவர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நிழலி said:

புலிகள் தேர்தலை புறக்கணிக்க சொன்னதாக நினைவில்லை. ஆனால் தம் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் சிறி லங்கா வின் தேர்தலை நடாத்த அனுமதிப்பது தனி நாட்டுக் கோரிக்கை யின்  அடிப்படையில் விரோதமானது என்பதால் நடாத்த விடவில்லை. 

நீங்கள் சொல்வது போல்…. புலிகள் தம் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் ஶ்ரீலங்காவின் தேர்தலை நடாத்த அனுமதிக்கது இருந்திருக்கலாம் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன்.

சிலவேளை இது பற்றிய மேலதிக தகவல்கள் @நன்னிச் சோழன் க்கு தெரிந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அதில் ஒருவர் பிற்காலத்தில் தினமுரசு ஆசிரியராக இருந்த அப்பிள் என அழைக்கப்பட்ட ரமேஷ்

அற்புதனா?

அப்பிளா?

Link to comment
Share on other sites

9 minutes ago, ஈழப்பிரியன் said:

அற்புதனா?

அப்பிளா?

ரமேஷ்நடராஜா என்பது சொந்தப் பெயர்

அப்பிள், ஆளின் அழகை பார்த்து சொல்லும் பெயர்.

அற்புதன் நடராஜா என்பது தினமுரசில் அவர் பாவித்த பெயர்

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

ரமேஷ்நடராஜா என்பது சொந்தப் பெயர்

அப்பிள், ஆளின் அழகை பார்த்து சொல்லும் பெயர்.

அற்புதன் நடராஜா என்பது தினமுரசில் அவர் பாவித்த பெயர்

 

இவரின் சொந்த இடம் கோப்பாயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய இனத்திற்குள் இத்தனை கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் என்பது எமது பலவீனத்தையும் எமக்கான புதைகுழியை நாமே தோண்டுவதாகவுமே முடியும். ஒரு குறிப்பிட்ட வாக்குகள் பலவாக சிதறுவதும் மற்றைய வாக்குகள் ஒருமித்து ஒரேயொருவருக்கு செல்வதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை பலவீனமாக்கும். 

Link to comment
Share on other sites

eros.jpg


எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

 

ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

 

அதன்பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கட்சியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். 

தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையினை தெரிவு செய்துள்ளனர். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியம் என்ற நிலைமையினை தக்க வைத்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை. இன்று தமிழ்த் தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர்.

பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்ப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மற்றும் தலைவர் துஸ்யந்தன், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

https://www.pathivu.com/2024/10/euros49949.html

தமிழர் பகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக ஈரோஸ் அறிவிப்பு!

 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று (05.10.2024) இடம்பெற்றுள்ளது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கட்சியின் செயலாளர் எ.இ.ராசநாயகம் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/eealavar-jananayaga-munnani-in-coming-election-1728160954#google_vignette

 

 

Link to comment
Share on other sites

4 hours ago, ஈழப்பிரியன் said:

இவரின் சொந்த இடம் கோப்பாயா?

சரியாகத் தெரியாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

 

கடந்த முறை யாழ் மாவட்டத்தில் 19 கட்சிகளும் 14 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன.. 
அதாவது 330 வேட்பாளர்கள் 7 எம்.பி பதவிக்காக போட்டியிட்டனர்.

இம்முறை யாழ் மாவட்டத்தில் 6 எம்.பி பதவிக்காக 396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழ் மக்களுக்கான போராட்டங்களில் பங்கு பற்றாதவர்கள் எதற்காக தேர்தலில் போட்டியிட முன் வருகின்றனர்?

ஏனெனில் எம்.பி யானால் நல்ல சம்பளம் சலுகைகள் கிடைக்கும். 

அதைவிட சொகுசு வாகனம் விற்று 5 கோடி சம்பாதிக்கலாம். பார் பெர்மிட் விற்று மூன்று கோடி சம்பாதிக்கலாம்.

இப்படி சம்பாதிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிட முன் வருகின்றனரேயொழிய தமிழ் மக்கள் நலனுக்காக அல்ல.

தயவு செய்து இம்முறை இந்த திருடர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.

தோழர் பாலன்

Edited by தமிழ் சிறி
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2024 at 16:07, island said:

....தேர்தல் பகிஷகரிப்பின் எதிர்மறை விளைவை தமிழர்கள் தெரிந்து கொண்டார்கள். 

இந்த தேர்தலில் எனக்கே இலங்கை தேர்தல் பற்றி அறிய அதிக ஆசை வந்துவிட்டது  யாழ்களத்தில் தேர்தல் நிலவரம் பற்றி தேடி படிக்கின்றேன்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, dais and text

 

May be an image of 2 people and text

 

463244661_8809878569034409_3606815134624

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களும், விளம்பரங்களும் மெதுவாக   ஆரம்பிக்கின்றன. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people and text

 

IMG_20241014_200726615_HDR.jpg

சின்னம்: ஊசி. Disposable Medical Syringe PNG & SVG Design For T-Shirts

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ramanathan Archchuna updated his... - Ramanathan Archchuna | Facebook

 

463250886_122096167166577522_40060487245

 

463255905_916417183740790_84361639159107

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் நகர மேயர் பலி இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் லெபனான் மேயர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானின் நபாதிஹ் என்ற நகரத்தின் மேயரே கொல்லப்பட்டுள்ளார். மாநகரசபை கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/196461
    • 2026 ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அண்மையில் அணிக்கு திரும்பினார். இதில் 19, 84, 86 ஆகிய நிமிடங்களில் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். சக அணி வீரர்கள் 2 கோல்கள் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து அவர் உதவினார். அதன் மூலம் தனது அபார ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதில் மெஸ்ஸி பதிவு செய்த இரண்டாவது கோல் கிளாசிக் ரகம். பந்தை டிரிபிள் செய்து இடது காலில் இருந்து வலது காலுக்கு மாற்றி அதனை கோல் கம்பத்தின் வலது பக்கமாக (கீழ்புறம்) தள்ளி கோல் பதிவு செய்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் மூன்றாவது கோலை அவர் பதிவு செய்தார். அர்ஜெண்டினாவின் மார்டினஸ், அல்வரஸ் மற்றும் தியாகோ ஆகியோரும் 45, 45(+3), 69-வது நிமிடங்களில் கோல் பதிவு செய்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 10 அணிகள் அடங்கிய தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் 10 போட்டிகளில் விளையாடி 22 புள்ளிகளை அர்ஜெண்டினா பெற்றுள்ளது. இதன் மூலம் பட்டியலில் அந்த அணி முதலிடத்தில் உள்ளது. அர்ஜெண்டினா நடப்பு உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. https://thinakkural.lk/article/310824
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெப்பக் காற்று தொடர்ந்து கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும் கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் புயல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம். கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும். கடலில் உள்ள வெப்பமான ஈரப்பதம் கொண்ட காற்று கடல் பரப்புக்கு மேல் எழும்பும். அப்படி வெப்பக் காற்று மேல் எழும்பும் போது, அதன் கீழே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். சுற்றியுள்ள அதிக காற்றழுத்தம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குள் நகரும். இந்தப் பகுதிக்குள் வந்த பிறகு, இந்தக் காற்றும் வெப்பமடைந்து மேல் எழும்பும். இப்படித் தொடர்ந்து வெப்பக்காற்று மேலெழும்பும் போது அது மேகங்களாக மாறும். மேகங்களும் காற்றும் சுழலத் தொடங்கும். கடலிலிருந்து மேல் எழும்பும் வெப்பக் காற்று அந்தச் சுழற்சிக்குத் தொடர் உந்துதலாக இருக்கும். இதுவே புயல் எனப்படுகிறது. தொடர்ந்து வெப்பக் காற்று கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும். எனவே தான் புயல் நிலத்தை அடைந்த பிறகு, அது முற்றிலும் ஓய்ந்து விடுகிறது. புயல் வெவ்வேறு கடல் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீனக் கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் 'டைஃபூன்' எனவும், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் 'ஹரிக்கேன்' எனவும், தெற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் 'டோர்னடோ' எனவும், வட மேற்கு ஆஸ்திரேலியாவில் 'வில்லி-வில்லிஸ்' எனவும் அழைக்கப்படுகிறது. புயலின் வகைகள் புயல்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வெப்ப மண்டலப் (tropical) புயல்கள் மற்றும் வெப்ப மண்டலச் சேய்மை (extra tropical) எனப்படும். வெப்ப மண்டலப் புயல் என்பது கடக ரேகை (tropic of cancer) மற்றும் மகர ரேகைக்கு (tropic of Capricorn) இடையில் உருவாகக்கூடியது ஆகும். காற்றின் வேகம் மணிக்கு 63கி.மீ வேகத்தை விட அதிகம் கொண்டதாக இருக்கும். இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் இந்த வகையைச் சார்ந்ததாகும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்குகிறது. வெப்ப மண்டலச் சேய்மைப் புயல்கள் மிதமான வெப்பம் இருக்கும் மண்டலங்களில் உருவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனக் கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் புயலை, டைஃபூன் என அழைக்கிறார்கள் புயலின் தீவிரம் இந்தியாவில், காற்றின் வலிமை, மழைப்பொழிவு, புயலின் எழுச்சி ஆகியவற்றைக் கொண்டு புயல் எவ்வளவு வீரியமானது என வகைப்படுத்தப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 31கி.மீ-க்கு கீழ் இருந்தால் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எனப்படும். காற்றின் வேகம் 31கி.மீ முதல் 49கி.மீ வரை இருந்தால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று வகைக்கப்படுத்தப்படுகிறது. மணிக்கு 49 கி.மீ முதல் 61 கி.மீ வரை காற்றின் வேகம் இருந்தால் அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகியுள்ளது என்று அர்த்தம் அடுத்த நிலை, அதாவது மணிக்கு 61கி.மீ முதல் 88கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்போது அது புயல் என்றழைக்கப்படும். அதை விடவும் காற்றின் வேகம் அதிகமாக, மணிக்கு 88கி.மீ முதல் 117கி.மீ வரை இருந்தால், தீவிர புயல் என்றழைக்கப்படும். அந்த வேகத்தையும் விட அதிகமாக இருக்கும் புயல்கள் சூப்பர் புயல்கள் என்று அழைக்கப்படுகின்றன. புயல் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்து ஒன்று முதல் ஐந்து வரை இந்தியாவில் வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று – குறைந்த சேதம் இரண்டு – மிதமான சேதம் மூன்று – பரவலான சேதம் நான்கு – தீவிர சேதம் ஐந்து – மிக மோசமான சேதம்   புயலின் பாகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019இல் இந்தியாவை நோக்கி வரும் ஃபானி புயல் (கோப்புப் படம்) புயலுக்கு மூன்று பாகங்கள் உள்ளன. நடுப்பகுதி - மேலே திரண்டிருக்கும் மேகங்கள் சுழல ஆரம்பிக்கும் போது அதிலுள்ள கடினமான பகுதிகள் ஓரத்திற்கு சென்றுவிடும். எனவே நடுப்பகுதி காலியாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் செண்ட்ரிஃபியூகல் (centrifugal) என்று சொல்வார்கள். இது தான் புயலின் 'கண்' பகுதி எனப்படும். இது வட்டமாக, நீள்வட்டமாக, அல்லது ஒரே மையத்தைக் கொண்ட அடுத்தடுத்து அடுக்குகளாக இருக்கும். இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் அடுத்தடுத்த அடுக்குகள் கொண்டதாக இருக்கும். இதைச் சுற்றியுள்ள பகுதி ‘eye wall’ எனப்படும் பகுதி அதிவேகக் காற்றைக் கொண்டதாகும். இதுவே புயலின் மிகவும் முக்கிய மற்றும் ஆபத்தான பகுதி. இந்தப் பகுதி கரையை கடக்கும் போது தான் அதிகனமழை, சூறைக்காற்று உருவாகும். இதற்கும் வெளியே இருக்கும் பகுதி மேகக்கூட்டங்களால் ஆனது. இவற்றால் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம். இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் அதிநவீன 'தாட்' வான் பாதுகாப்பு கவசம் - எவ்வாறு செயல்படும்?16 அக்டோபர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களின் படி, தமிழகத்தின் வடக்குப் பகுதியிலேயே அதிக புயல்கள் ஏற்பட்டுள்ளன தென்னிந்தியாவில் புயல்கள் தென்னிந்தியாவில் புயல்கள் வங்கக் கடல் அல்லது அரபிக் கடலில் பருவமழை மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை பொருத்து உருவாகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் வங்கக் கடலில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரம் அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் அதிகரித்துள்ளன. போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஒரு தசாப்தத்தில் 50.5% புயல்கள் உருவாகின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் 49.8% புயல்களும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 28.9% புயல்களும் உருவாகின என்றும் இந்த தரவுகள் தெரிவிக்கின்றன. 2001-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அரபிக் கடலில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாகத் துவங்கியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே அரபிக் கடலில் உருவாகி வந்த நிலையில், 20 ஆண்டுகளில், புயல்கள் அதிகமாகியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் இரண்டு பகுதி அரபிக் கடலில் உருவாகிறது. அதே நேரம் வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ள புயல் பாதிக்கும் இடங்கள் குறித்த வரைபடக் குறிப்பில், இந்தியாவில் கிழக்குக் கடற்கரையோரத்தில் புயலால் பாதிப்படையக்கூடிய நான்கு மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தைக் குறிப்பிடுகிறது. 1891 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களின் படி, தமிழகத்தின் வடக்குப் பகுதியிலேயே அதிக புயல்கள் ஏற்பட்டுள்ளன. இதற்குத் தமிழகத்தின் பூகோள அமைப்பு ஒரு காரணமாகும். வங்கக் கடலில் உருவாகும் புயல்கள், தமிழகத்துக்குத் தென்கிழக்கே அமைந்திருக்கும் இலங்கையின் காரணமாக வடக்கு நோக்கி திருப்பப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz04zmdpez9o
    • (தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:    #AKD தீர்வு தருவார் என அடித்து விடும் அண்டிப்பிழைக்கும் கூட்டத்துக்கும் அதை நம்பும் அப்பாவிகளுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம் https://www.facebook.com/share/v/jrtts7xcA7uBaY37/
    • சின்ராசு.....  நம்ம தமிழ் தேசிய அரசியல் இம்புட்டு நாறு நாறும்னு நான் கனவுல கூட நெனைக்கல்ல 😢
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.