Jump to content

தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

அது சரி  நீங்கள் மற்றவர்களை பார்த்து தான் கருத்துகள் எழுதுகிறீர்களா?? அதாவது உங்கள் கருத்துகள் மற்றவர்கள் கருத்துகளில் தங்கி அல்லது சார்ந்து இருக்கிறதா???   அப்படி என்றால் தயவுசெய்து அதனை மாற்றி விடுவது நல்லது 🙏🙏

உங்களை மாதிரி திரிக்கும், கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாமல் சும்மா அலட்டிக் கொண்டிருக்கத் தான் விருப்பம்! முடியவில்லை, எப்படி முடிகிறது உங்களால்😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

2020 இலும் தனக்கு தேசியப் பட்டியலில் இடம் எடுத்து பின்னர் இழந்திருக்கிறார். இது வரை விலகாமல் இருக்கக் காரணம் தமிழரசை விட்டுத் தனியாகப் போய் இவர் போன்றோர் முகவரி தேட இனி முடியாது. எனவே தான் தமிழரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு " சீட்டுத் தா" என்று அழுகின்றனர்.

இது சுமந்திரனுக்கும் பொருந்தும். அதனாற்தான் மற்றவர்களை மதிக்காமல் தன்னை மட்டும் இறுகப்பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென பொறுப்புணர்ச்சியில்லாமல்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

இது சுமந்திரனுக்கும் பொருந்தும். அதனாற்தான் மற்றவர்களை மதிக்காமல் தன்னை மட்டும் இறுகப்பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென பொறுப்புணர்ச்சியில்லாமல்.

சுமந்திரன் தமிழரசு அல்லது கூட்டமைப்பு  - இந்த இரு கட்டமைப்புகளோடும் ஒரு அதிருப்தியும் தன்னளவில் கொண்டிருக்காத போது அவர் ஏன் வெளியேறி முகவரி தேட வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டும்?  ஏன் கேட்பவர்கள் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்?

ஏதோ "இளைஞர்களை முன்னிறுத்த வேண்டுமென்று" முகமூடியோடு வந்தார்கள் (உண்மை நோக்கம் சுமந்திரனை அகற்றுவது மட்டும் தான், இளைஞர்களில் அக்கறையெல்லாம் கிடையாது!). இப்போது "சீற் தரவில்லை" என்று வெளியேறியோர் எல்லாம் இளைஞர்கள் இல்லையே? 2020 இலேயே இளைஞர்களை புதிதாக கட்சிக்குள் அரசியலில் உள்ளீர்க்க வேண்டுமென்று சுமந்திரன் முயன்று புலம்பெயர் தேசியக் குஞ்சுகளால் அந்த முயற்சி தோற்றது உங்களுக்கு நினைவில்லையா? பெண் வேட்பாளராக அம்பிகாவைக் கொண்டுவர முயன்ற போது என்ன நடந்தது என்று தெரியாமலா இங்கே உரையாடுகிறீர்கள்? சாணக்கியன் என்ற மும்மொழி தெரிந்த ஒரு இளைஞரை அறிமுகம் செய்தது யார்?

எனவே, ஒன்று 4 வருடங்கள் முன்னர் நடந்த வரலாற்றையாவது குறைந்த பட்சம் தெரிந்து கொண்டு உரையாட வாருங்கள். அல்லது சுமந்திரன் வெறுப்பை மட்டும் கட்டிக் கொண்டு இப்படியே இருந்து விட்டுப் போங்கள்! தாயக மக்கள் உங்களை விடப் புத்தி சாலிகளாக நடந்து கொள்வர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுமந்திரன் தமிழரசு அல்லது கூட்டமைப்பு  - இந்த இரு கட்டமைப்புகளோடும் ஒரு அதிருப்தியும் தன்னளவில் கொண்டிருக்காத போது அவர் ஏன் வெளியேறி முகவரி தேட வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டும்? 

ஹிஹி..... சுமந்திரனை எல்லோரும் மதித்தார்கள், அவருக்கு மற்றவரை மதிக்கவும் தெரியாது, மதிப்பை ஏற்றுக்கொள்ளவும் தெரியாது.யாரோடு முரண்பட்டு கட்சியிலிருந்து வெளியேறினார்கள் என்பதை தெரியாதா? அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா? தமிழரசு ஒன்றும் அவரது ஏக சொத்தல்ல. அங்குள்ளவர்களின் கருத்துக்களை ஏற்கவும் அவர்களை மதிக்கவும் கட்சியின் கொள்கைகளை மதித்து நடக்கவும் எல்லோரையும் சமமாக வழிநடத்தவும் தெரிந்திருக்க வேண்டும். அது அங்கே நடந்ததா? ஆம் என்று நீங்கள் சொல்வீர்களானால் உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை. ஒரு தலைவரின் சொல்லுக்கு மதிப்பில்லாமல், தான் தோன்றித்தனமாக நடப்பவரை பாதுகாக்க முனைகிறீர்களென்றால்; உங்கள் குணாதிசயமும் ஒன்றே. தமிழரசு செய்த ஒரே தப்பு, இவரை கட்சிக்குள் புகுத்தியதுமட்டுமல்ல, அவர் செய்த தவறுகளை தட்டிக்கேட்க்காமல், கண்டும் காணாதமாதிரி இருந்து கட்சிக்கு சாவு மணி அடித்தார்கள். இனி மக்கள் பார்த்துக்கொள்வார்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

அக்கம் பக்கம் பார்க்க விடாமல் சுமந்திரன் வெறுப்பு கண்ணை மறைக்கிறது போல😂

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் இருந்து மாவையுடன் சேர்ந்து முடிவெடுப்பவராக இருந்திருந்தால், நிலாந்தன் இத்யாதிகளுடன் சங்கு ஊதப் போய் ஓட்டு மொத்த கட்சியையும் போட்டுடைத்திருப்பார் என்பதை நடக்கும் சம்பவங்களால்  இப்பொழுது அறிய முடிகிறது.

ஒரு கட்சியை நடத்துவதற்கான வல்லமை சிறீதரனிடம் இல்லை. ‘பார் லைசனஸ்விபரங்களை வெளியிடுங்கள் என சுமந்திரனும் கேட்கிறார். டக்ளஸும் கேட்கிறார். சிறீதரன்  photoவுக்குக் கூட சிரிக்க மாட்டேன் என்கிறார். கட்சி மேடையில் நின்றே தன்னை ஓரம்  கட்டப் பார்க்கிறார்கள் என மூக்கால் அழுது அனுதாபம் தேடப் பார்க்கிறார். தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எதற்காக அவர்கள் வெளியேறினார்கள் என்பதைக் காண்கின்றோம்.

ஒருவர் மீது கொண்ட வெறுப்புக் கண்கள்  யதார்த்தத்தை பார்க்க மறுக்கிறது.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி மேடையில் நின்றே தன்னை ஓரம்  கட்டப் பார்க்கிறார்கள் என மூக்கால் அழுது அனுதாபம் தேடப் பார்க்கிறார். தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எதற்காக அவர்கள் வெளியேறினார்கள் என்பதைக் காண்கின்றோம்.]

தமிழசு கட்சியை பிடித்த துஷ்ட ஆவி அவர் ☹️

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

உங்களை மாதிரி திரிக்கும், கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாமல் சும்மா அலட்டிக் கொண்டிருக்கத் தான் விருப்பம்! முடியவில்லை, எப்படி முடிகிறது உங்களால்😂?

அது எனது திறமை     கிறிஸ்துவ பெயரை கொண்ட அனைவரும் கிறித்தவர்கள்.    யோசுவின். புத்திரர்கள்.   அவரை பின்பற்றுகிறார்கள் என்று நான் நம்புவதில்லை.  குறிப்பாக சுமத்திரனுக்கும்.  பைபிள் க்கும் எட்டாம் கட்டை பொருத்தம்         

இந்த கருத்துகள்   திரிக்கு சம்பந்தப்பட்டது 🤣 ஒருவர் என்ன சமயம் என்று பார்த்து அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியை ஆதரிக்க முடியாது   

தேவையெனின் கிறித்தவ  கட்சி என்று ஒன்றை தொங்குவது தான்   

அதற்கு தும்பு. இல்லை   தைரியம் இல்லை    தமிழரசு கட்சியில். அட்டை மாதிரி ஒட்டி கொண்டு   உறிஞ்ச மட்டும் முடியும்    மக்களின் முடிவை 15.11.24.இல்   பார்ப்போம் 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளைஞர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி  இராணுவ பாதுகாப்பு பெற்று வடக்கிற்கு வலம் வந்தவர், சிங்கள மக்களுடன் வாழ்வது எனது அதிஸ்ரம் என்று பேட்டி கொடுத்தவர்,  இன்று எப்படி இளைஞர்களை கட்சியில் சேர்க்கிறாராம், வெட்கமில்லாமல் வடக்கு மக்களிடம் வாக்கு கேட்க்கிறார்?  பேச்சாளர் பதவிகாலம் முடிந்துவிட்டது, அதிலிருந்து விலகவில்லை, தலைவர் பதவியை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார். அவருக்கு தெரியும் இவைகளை விட்டால் தன்னை ஒரு தூசாக கூட யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது. தட்டித்தவறி வருங்காலத்தில், யாரும் தங்கள் கட்சியிலோ, வேறு எந்த குழுவிலோ இவரை சேர்த்து விடாதீர்கள், எல்லோரையும் இரண்டுபடுத்தி, விரட்டி விட்டு அமர்ந்துவிடுவார். பின் இவரை அப்புறப்படுத்துவது மிக மிக கஸ்ரம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

அது எனது திறமை     கிறிஸ்துவ பெயரை கொண்ட அனைவரும் கிறித்தவர்கள்.    யோசுவின். புத்திரர்கள்.   அவரை பின்பற்றுகிறார்கள் என்று நான் நம்புவதில்லை.  குறிப்பாக சுமத்திரனுக்கும்.  பைபிள் க்கும் எட்டாம் கட்டை பொருத்தம்         

இந்த கருத்துகள்   திரிக்கு சம்பந்தப்பட்டது 🤣 ஒருவர் என்ன சமயம் என்று பார்த்து அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியை ஆதரிக்க முடியாது   

தேவையெனின் கிறித்தவ  கட்சி என்று ஒன்றை தொங்குவது தான்   

அதற்கு தும்பு. இல்லை   தைரியம் இல்லை    தமிழரசு கட்சியில். அட்டை மாதிரி ஒட்டி கொண்டு   உறிஞ்ச மட்டும் முடியும்    மக்களின் முடிவை 15.11.24.இல்   பார்ப்போம் 🙏

திருநீற்று பூச்சோடு வலம் வரும் விக்கி ஐயாவும், சீனித்தம்பி யோகேஸ்வரனும் "வதை" செய்யா சைவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பில்லை, அது போல சுமந்திரன் பைபிளைப் பின்பற்ற வேண்டியதில்லை. எல்லாத் தரப்பும் தங்கள் மதங்களை தங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கட்டும், அரசியலில் உள்ளக நேர்மை மட்டும் போதும்.

அது சரி, இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? இதையே நான் பல வருடங்களாகச் சொல்லி, அதற்காகவே யாழ் கள சைவக் காவலர்களிடம் திட்டு வாங்கியது (ஒரு பக்கம் உங்களுக்குப் பச்சை போட்ட சாத்தானுக்கும் டோஸ் கிடைத்தது😎) உங்களுக்குத் தெரியாது என்பதாலா😂?

4 hours ago, satan said:

 பின் இவரை அப்புறப்படுத்துவது மிக மிக கஸ்ரம்.

தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் பிரதிநிதியை பதவியில் இருந்து அகற்றுவது மிக மிக இலகு: மக்களின் வாக்குகள் தான் ஆயுதம். 2015, 2020 இல் உங்களைப் போன்றோர் நின்ற இடத்திலேயே நின்று "சுமந்திரன் ஏன் தேர்தலில் நிற்கிறார்?" என்று புறு புறுத்தது சுமந்திரனை அகற்றவில்லை😂. எனவே என்ன வழி?

புரட்டுகள் - மேலே நீங்கள் சொன்னது போல "சுமந்திரன் பாதுகாப்பு கேட்டுப் பெற்றுக் கொண்டார்" என்பது போன்ற போலித் தகவல்கள்-, சொல் வன்முறை, புலிகளைத் துக்கித் தலையில் வைக்க வேண்டுமென்ற மிரட்டல், இவையெல்லாம் வேலைக்காவாது! மக்களை வாக்களிக்க விடுங்கள். மக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நேர்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் (பிறகு வாக்கை மாற்றி விட்டார், ஆனால் எங்களிடம் ஆதாரம் இல்லை என்று உருட்டாமல்😎!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அது சரி, இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்க

நீங்கள் எப்போதும் அரசியலுக்குள். மதத்தை புகுத்துவதால்.  சொன்னேன்   சுமத்திரனை விட. டக்ளஸ் எவ்வளவோ சிறந்தவர்.  

தனிக்கட்சி தொடங்கி   அதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்   சுமத்தாரன். ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்   பதவிக்காக   சம்பந்தனுக்கு  பின்னால் பைல்களை  பல வருடங்களாக தூக்கி  கொணடு திரிந்து   போனாஸ்   சீற்று மூலம். பதவியை பெற்றவர்.   கடந்த 70 ஆண்டு காலத்தில் தமிழரசுக்கட்சியை அழிந்துகொண்டிருக்கிருக்கும். ஒரே நபர் சுமததிரன். மட்டுமே   பல ஆண்டுகளாக தமிழரசு கட்சியிலிருந்தவர்கள் கடசியிலிருந்து வெளியேறுகிறார்கள் 

வெளியேறுவது அவர்களின்  பல. ஆயிரக்கணக்கானா ஆதரவளாரும் தான்  

கடந்த தேர்தலில் ஒரு ஆசனம்  பெற்ற கட்சி ஐக்கிய  தேசிய கட்சி சுமத்திரனின். தாய்க்கட்சி    இந்த தேரதலில். ஒரு ஆசனம். பெறும் கட்சி   தமிழரசு கட்சியா???   சுமத்திரன். அடத்தாக. பிடிந்த கட்சியா???  காலம் பதில் சொல்லும்   

சுமத்திரன். பைபிளை  பின் பற்றுவதில்லை   என்பதை உறுதி படுத்தியமைக்கு  நன்றி  😀🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

(ஒரு பக்கம் உங்களுக்குப் பச்சை போட்ட சாத்தானுக்கும் டோஸ் கிடைத்தது😎)

இந்த குற்றச்சாட்டை நிர்வாகம்தான் உறுதிப்படுத்தவேண்டும்.

10 hours ago, Justin said:

புரட்டுகள் - மேலே நீங்கள் சொன்னது போல "சுமந்திரன் பாதுகாப்பு கேட்டுப் பெற்றுக் கொண்டார்" என்பது போன்ற போலித் தகவல்கள்-,

ஐயா, முன்னாள் புலி உறுப்பினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி மஹிந்தா இவருக்கு இராணுவ பாதுகாப்பளித்தது. இவர் இராணுவத்துடன் வலம் வந்த படங்களும் பத்திரிகைகளில் வந்தது. என்னால் தேடி எடுக்க முடியவில்லை, முடிந்தவர்கள் இணைப்பார்கள் என நம்புகிறேன். அதன் பின் கொக்கிளாய் தொடங்கி பொலிகண்டி வரை  பேரணி வந்ததை கண்ட அரசு, சுமந்திரனின் குற்றச்சாட்டு பொய்யானது, அப்படி அவரது உயிருக்கு ஆபத்து இருந்தால் எப்படி ஊர்வலம் போக முடியும் என்கிற கேள்வியுடன் அவருக்கு அளிக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2024 at 03:39, Justin said:

இப்போது சில வருடங்களாக அனேகமான தமிழ் அரசியல் வாதிகளை முழுப்பெயர் கொண்டு அழைக்கிற வழக்கம் உருவாகியிருக்கிறது. ஏன் என்று நினைக்கிறீர்கள்? "மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்" என்று ரொய்லெற் ஊடகங்கள் புலத்தில் இருந்து எழுத ஆரம்பித்த  போது "மத அடையாளத்தை நாசூக்காகச் சுட்டிக் காட்ட அப்படி எழுதுகிறார்கள்"

உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ்  நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை.  தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ்  நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை.  தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!

சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் என்னும் கிறிஸ்தவரை சைவசமய மக்கள் தந்தை என்ற செல்லப் பெயர் வைத்து அவர் இறக்கும் வரை உயரிய மரியாதை கொடுத்தே வந்துள்ளார்கள். அவரை கிறிஸ்தவர் என்று ஒதுக்கி வைத்ததே இல்லை. 
இங்கு @Justin,  @Kapithan இருவருக்கு மட்டும் …. ஆபிரகாம் சுமந்திரன் என்றவுடன் இல்லாத ஒன்றை கற்பனை பண்ணி மதப் பிரிவினைக்கு தூபம் போட முனைகிறார்கள். இவர்களின் உள் நோக்கம் என்னவென்று பலரும் அறிந்தே வைத்துள்ளார்கள்.
சுமந்திரனின் சுத்துமாத்துக்களை அம்பலப் படுத்த வெளிக்கிட்டால்… அதற்கு மதச்சாயம் பூசி பிரச்சினையை திசை திருப்பி வெள்ளை அடிக்க முனையும் தந்திரம் இனியும் பலிக்காது.
ஆனபடியால்… இவர்களின் “பருப்பு” இங்கே அவியாது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ்  நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை.  தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!

""கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன்""

 

சாத் மிக விரைவில் மதம் மாறும் அறிகுறி தெரிகிறது. எதற்கும் அடக்கி வாசிப்போம்,...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

இருவர் மட்டும்…. ஆபிரகாம் சுமந்திரன் என்றவுடன் இல்லாத ஒன்றை கற்பனை பண்ணி மதப் பிரிவினைக்கு தூபம் போட முனைகிறார்கள். இவர்களின் உள் நோக்கம் என்னவென்று பலரும் அறிந்தே வைத்துள்ளார்கள்.

கிணறு வெட்ட  பூதம் கிழம்பியதுபோல், தங்களையுமறியாமல், மதத்தை அனுதாபத்திற்கு இழுத்து, விழும் சொற்ப வாக்குகளையும்  இழக்க வாய்ப்பளிக்கிறார்கள்  அதி புத்திசாலிகள்! செயலற்ற வாய் வீரரின் கருவியது.  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Aruதிருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேதிருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்பாளர்n Hemachandra வேட்பு மனு தாக்கல் செய்யப் பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்..    
    • வீட்டில், சேடன், வேதாளம் எல்லாம் புகுந்து விட்டது, இனி என்ன மாற்றம் செய்யப்போகிறீர்கள்? முதலில் அவற்றை வீட்டை விட்டு விரட்டுங்கள். முடியாவிடில்  வீட்டை இடியுங்கள்.
    • அப்போ, இதுவரை இதை திருடி ஒளித்து வைத்திருந்தவர் இவர்தானா? தெரியாமல் மாட்டிக்கினார். இவரை துணிந்து கைது செய்து விசாரணை செய்யலாம். தானாகவே  துணிந்து சாட்சியமளித்துள்ளார்.
    • எழுத நினைத்தேன் எழுதிவிட்டீர்கள், சிங்களவர்களுக்குள் கொள்கைகள் கட்சிகளுக்குள்  பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் தமிழர் விவகாரம் என்று வந்துவிட்டால் அத்தனைபேரும் ஒன்றாகவே நிப்பார்கள், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இனிவரும் காலங்களிலும். தமிழர்களுக்குள்ளும் கொள்கைகள் கட்சிகளுக்குள்  பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் சிங்களவர்களுக்கெதிரான அரசியலில் என்றைக்காவது எல்லோரும் ஒன்றாக நின்றிருக்கோமா?  இந்த லட்சணத்தில் சிங்களவன்  சரியில்லை என்கிறோம், உணர்ச்சிவசபடாது உற்று நோக்கினால் சிங்களவன் எப்போதும் தமிழர் விவகாரத்தில் தன் பக்க வாதத்தில்  சரியாகத்தான் இருக்கிறான், நாம்தான் ஆளுக்காள் ,கட்சிக்கு கட்சி, மாகாணத்துக்கு மாகாணம், தமிழர் விவகாரத்தில் தரமற்று நிக்கிறோம். ஏற்கனவே குறிப்பிட்டதுதான் இருந்தாலும் சொல்ல நினைக்கிறான், அடிப்படை பொருளாதார வசதிகள் அங்கேயே உழைத்து அங்கேயே செலவு செய்யும் அளவிற்கு பொக்கRறில் வங்கி அட்டைகளும் உயர்தர வாகனங்களும் எல்லோருக்கும் வந்து பார்ட்டி கொண்டாட்டம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா எனும் நிலை வந்தால் நிச்சயமாக இளைய சமுதாயம் சிங்களவனுடன் முட்டி மோதுவதை தவிர்த்து, இந்த சிங்கள தலைவன் சொன்ன திசைக்கே செல்லும். அந்த பெருமையெல்லாம்  எம் பிரச்சனைகளை வைத்து தமது பிரச்சனையை மட்டும் கவனித்துக்கொண்ட  தமிழ்கட்சிகளையே சாரும். நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என்பதை முதலில் கவனிப்போம்,  மீனை மூடி வைப்பதுதான் நம் முதல் கடமை பூனைக்கு புத்திமதி சொல்வதல்ல. வெறுமனே புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் கூவி தற்கால இலங்கை அரசியலில் பொழுது ஒருபோதும் விடியாது.    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.