Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-1464.jpg
12 பெண்களை மக்கள்  NPP க்காக தெரிவு செய்துள்ளார்கள்.

இதில் யாழ்ப்பாணத்தில் இருந்து போட்டியிட்ட வெண்ணிலா விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன், மற்ற மூன்று தமிழ் பெண்களும் வெற்றி பெற்றுள்ளார்கள்

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்

466147124_1292009555293193_3444639074355

வடக்கு மாகாணத்தில்... தமிழரசு கட்சிக்கு, இறுதிச் சடங்கு நடத்தி வைக்கப் பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

466147124_1292009555293193_3444639074355

வடக்கு மாகாணத்தில்... தமிழரசு கட்சிக்கு, இறுதிச் சடங்கு நடத்தி வைக்கப் பட்டது. 

இது சம்பிரதாய புதைப்பு...இரகசியமாக எரிப்பு நடக்கவும் ஆலோசனை நடைபெறுகிறதாம்...அதில் கொள்ளி வைக்க பழையா ஆளையே யோசிக்கினமாம்.

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

466147124_1292009555293193_3444639074355

வடக்கு மாகாணத்தில்... தமிழரசு கட்சிக்கு, இறுதிச் சடங்கு நடத்தி வைக்கப் பட்டது. 

யாழ்மாவட்டத்தைப்பொறுத்த வரை நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட கயேந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார் அரசியலமைப்பு வரைபை அக்கு வேறாக பிரித்து மக்களுக்கு கூறக்கூடிய அவரிடம் மக்கள் அதற்கான பொறுப்பை வழங்கியுள்ளனர் அதனை அவர் செய்வார் என நம்புறன் - சுமந்திரன் பேட்டி

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நீர்வேலியான் said:

இதில் யாழ்ப்பாணத்தில் இருந்து போட்டியிட்ட வெண்ணிலா விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன், மற்ற மூன்று தமிழ் பெண்களும் வெற்றி பெற்றுள்ளார்கள்

இதுதான் யாழ்ப்பாணத்தானுக்கு முதல் அடி...இனி படிப்படியாக விழும்...ரப்பர் முத்திரையாக  3 எம்ம்பிக்கள் இருக்க ....மரம் அடியோடு பிரட்டப்படும்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

இது சம்பிரதாய புதைப்பு...இரகசியமாக எரிப்பு நடக்கவும் ஆல்லொசனை நடைபெறுகிறதாம்...அதில் கொள்ளி வைக்க பழையா ஆளையே யோசிகினமாம்.

ஒற்றையாட்சி தமிழர்களை அழிக்கும்! சமஷ்டி ஆட்சியே ஐக்கியமாக வாழ வழி  வகுக்கும்!-தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் - NewMannar நியூ மன்னார் இணையம்

"கெடு குடி, சொல் கேளாது" என்பார்கள்.
மீண்டும் பழைய ஆள் சுமந்திரன்  என்றால்...
தந்தை செல்வா சொன்ன மாதிரி...  "தமிழர்களை கடவுள்தான்  காப்பாற்ற வேண்டும்."

  • கருத்துக்கள உறவுகள்

467212273_983208197157900_21204786701662

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கு பட்டன்..ஓவர் ட்ராப்பிலை போகுது  சிறியர் மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

யாழ்மாவட்டத்தைப்பொறுத்த வரை நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட கயேந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார் அரசியலமைப்பு வரைபை அக்கு வேறாக பிரித்து மக்களுக்கு கூறக்கூடிய அவரிடம் மக்கள் அதற்கான பொறுப்பை வழங்கியுள்ளனர் அதனை அவர் செய்வார் என நம்புறன் - சுமந்திரன் பேட்டி

இது தேசிய பட்டியலுக்கு கட்சி பாராளுமன்ற அமர்வுகளில் புதிய சட்டவமைப்பு தொடர்பான விவாதங்களில் கட்சியினை பிரதிநிதிப்படுத்துவதற்கு தனனை பிரேரிப்பதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம், தமிழரசுக்கட்சிக்கு வேறு நல்ல தெரிவு இருப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

————-

சுப சந்தாஹவக் அப்பே தெமள சகோதரயனி.

ஒபலா அபி வெனுவிங் கொடாக் பலாபுறுத்துவேங் இன்னுவ கியல அப்பிட்ட தன்னுவா.

அபித் ஒபட பொரந்துவக் தெனவா, அபி ஒய் பலாபுறுத்து டிக்க இட்டு கொரணவாய் கியலா.

சிங்கள, தமில, முஸ்லிம், பர்கர் அபி ஒக்கம, எக்சத் லங்காவ அதுளிங், நாதாயக் வாகே இன்ன அளுத் அநாகதயக் அப்பி கொடநகுமு.

பொஹோமஸ் துதி.

எக்சத் சிறி லங்கா வட்ட ஜெயவேவா ! 

 

🤣 எல! (சிங்களத்தில் எனக்கு மிகப் பிடித்தமான வார்த்தை, slang ஆக இருக்குமென நினைக்கிறேன்!)

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

யாழ்மாவட்டத்தைப்பொறுத்த வரை நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட கயேந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார் அரசியலமைப்பு வரைபை அக்கு வேறாக பிரித்து மக்களுக்கு கூறக்கூடிய அவரிடம் மக்கள் அதற்கான பொறுப்பை வழங்கியுள்ளனர் அதனை அவர் செய்வார் என நம்புறன் - சுமந்திரன் பேட்டி

நன்றி விசுகு. சுமந்திரன் அந்தப் பொறுப்பை கஜேந்திரகுமாரிடம் கொடுத்துள்ளார் எனும் போது, ஆரோக்கிய அரசியல் ஆரம்பமாகி விட்டது என நினைக்கின்றேன். இவர்கள் முதலே ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்று வடக்கு கிழக்கில் இருந்து 20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் தெரிவு செய்யப் பட்டிருப்பார்கள்.
ஆனால் என்ன செய்வது.... கையை சுட்ட பின்புதான், புத்தி தெளிய வேண்டும் என்று இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் விபரம்

கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வென்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி - 13

1. ஹரினி அமரசூரிய -655,289
2. சதுரங்க அபேசிங்க -127,166
3. சுனில் வட்டகல -125,700
4. லக்ஸ்மன் நிபுணராச்சி - 96,273
5. அருண பனாகொட -91,081
6. எரங்க குணசேகர -85,180
7. ஹர்ஷன நாணயக்கார - 82,275
8. கௌசல்யா ஆரியரத்ன - 80,814
9. அசித நிரோஷன் -78,990
10. மொஹமட் ரிஸ்வி சாலி - 73,018
10. சுசந்த தொடவத்த - 65,391
11. சந்தன சூரியராச்சி - 63,387
12. சமன்மலி குணசிங்க - 59,657
13. தேவானந்த சுரவீர - 54,680

ஐக்கிய மக்கள் சக்தி - 04

1. சஜித் பிரேமதாச - 145,611
2. ஹர்ஷ டி சில்வா - 81,473
3. முஜிபுர் ரஹ்மான் - 43,737
4. எஸ். எம். மரிக்கார் - 41,482

https://tamil.adaderana.lk/news.php?nid=195961

கம்பஹாவில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் விபரம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
 
திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 16 ஆசனங்கள்

1. விஜிதா ஹெராத் - 716,715
2. அனில் ஜயந்த - 162,433
3. மஹிந்த ஜயசிங்க - 137,315
4. கிரிஷாந்த அபேசேன - 121,725
5. மொஹமட் முனீர் - 109,815
6. அசோக ரன்வல - 109,332
7. தர்மப்பிரிய விஜேசிங்க - 83,061
8. ருவன் மாபலகம - 78,673
9. லசித் பாஷனா - 74,058
10. பிரகீத் மதுரங்க - 70,887
11. சம்பிக்க ஹெட்டியாராச்சி - 70,373
12. ஜெயக்கொடி ஆராச்சிகே ருவன்திலக - 68,210
13. ஹேமலி சுஜீவா - 66,737
14. உபாலி பிரியந்த அபேவிக்ரம- 60,595
15. பிரியன் ஸ்டெபானி பெர்னாண்டோ - 57,634
16. சமிந்த லலித்குமார - 53,451

ஐக்கிய மக்கள் சக்தி - 03

1. ஹர்ஷன ராஜகருணா - 67,004
2. காவிந்த ஜயவர்தன - 37,597
3. அமில பிரசாத் - 23,699

https://tamil.adaderana.lk/news.php?nid=195967

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி விசுகு. சுமந்திரன் அந்தப் பொறுப்பை கஜேந்திரகுமாரிடம் கொடுத்துள்ளார் எனும் போது, ஆரோக்கிய அரசியல் ஆரம்பமாகி விட்டது என நினைக்கின்றேன். இவர்கள் முதலே ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்று வடக்கு கிழக்கில் இருந்து 20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் தெரிவு செய்யப் பட்டிருப்பார்கள்.
ஆனால் என்ன செய்வது.... கையை சுட்ட பின்புதான், புத்தி தெளிய வேண்டும் என்று இருக்குது.

எதற்கும் மனதை கல்லாக்கி வைத்து கொள்ளவும், சுமந்திரனின் சேவை இந்த புதிய பாராளுமன்றத்திலும் இருப்பதாக நினைக்கிறேன், உங்களை வெறுப்பேத்துவதற்காக கூறுவதாக நினைக்காதீர்கள் ஆனால் தமிழரசு கட்சி சார்பில் இருந்து பாருங்கள் புதிய சட்ட திருத்தங்களில் தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியினை பிரதிநிதிப்படுத்துவத்ற்கு சுமந்து நல்ல தெரிவு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

எதற்கும் மனதை கல்லாக்கி வைத்து கொள்ளவும், சுமந்திரனின் சேவை இந்த புதிய பாராளுமன்றத்திலும் இருப்பதாக நினைக்கிறேன், உங்களை வெறுப்பேத்துவதற்காக கூறுவதாக நினைக்காதீர்கள் ஆனால் தமிழரசு கட்சி சார்பில் இருந்து பாருங்கள் புதிய சட்ட திருத்தங்களில் தமிழரசுக்கட்சி சார்பில் கட்சியினை பிரதிநிதிப்படுத்துவத்ற்கு சுமந்து நல்ல தெரிவு.

கட்சியினை பிரதிநிதிப்படுத்துவதற்கு சுமந்திரன்  நல்ல தெரிவாக இருக்கலாம். 
ஆனால்... மற்றவர்களை அரவணைத்து செல்லும் பழக்க வழக்கம், இல்லாதவரை..   கட்சி இன்னும் விட்டு  வைத்திருந்தால்... கட்சியே  காணாமல் போய் விடும். 
தனிமனிதன் முக்கியமா? கட்சி முக்கியமா எனும் போது.... கட்சியே பலரது தெரிவாக இருக்கும்.

கீழே... @zuma எழுதிய அருமையான  பதிவு ஒன்று உள்ளது. அதனைப் பார்த்தீர்களோ தெரியாது. உங்கள் பார்வைக்காக இணைக்கின்றேன். 👇


👉 //யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் தேல்விக்கு முக்கிய காரணம் சுமந்திரனே ஆகும்.

- ஒரு குழுவாக செயற்படாமை, தனது கட்சியின் தலைமை வேட்ப்பாளருக்கு எதிராக நிறுவப்படாத ஊழல் கட்டுக்கதைகளை பரப்பியமை.

- தனது வெற்றிக்காக பிணாமி வேட்ப்பாளர்களை நியமித்தமை, அவர்கள் அனைவரும் ஒரே சமூக அந்தஸ்து ( social status) உடையவர்கள்.

- மக்களின் மனநிலை அறியாமல் மேட்டிக்குடி அரசியல் பேசியமை

- மக்களுக்கும், அநுராவுக்கு இடையில் இடைத்தரகர் அரசியல் செய்ய நினைத்தமை.

- தமிழரசு கட்சியை சமூக இயக்கமாக மாற்றாமல் ( NPP போல் ), தனது இருப்பை தக்க வைக்க செயற்பட்டமை என்று பலவற்றை கூறலாம்.// 👈

  • கருத்துக்கள உறவுகள்

Srilanka Election Results: தமிழர் பகுதியிலேயே தோற்ற தமிழ் கட்சிகள்; இலங்கை தமிழர்கள் கருத்து என்ன?

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸ்ஸநாயக்க பெரும் வெற்றி பெற்று அதிபரான நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது அவரது கட்சி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. 

நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ள நிலையில் 159 ஆசனங்களை அனுர குமாரவின் தேசிய மக்கள் கட்சி வென்றுள்ளது. ராஜபக்ஷவின் குடும்பமும், அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்துள்ளன. 

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் கட்சியும் சஜித் கட்சியும் ஜொலிக்க முடியவில்லை. தமிழர் பகுதிகளில் கூட அநுர கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறிய இலங்கையில் உள்ள சிலரிடம் பேசியது பிபிசி தமிழ்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

158 பேர் உள்ள இடத்தில் இவை என்னத்தை கதைக்கிறது...கன்ரீனிலை சாப்பிட்டுவிட்டு..பார்லிமென்டில் நித்திர கொன்றுவிட்டு வரவேண்டியதுதான்..

என்ன சிறியர் வாயிலை லட்டோ ..அலுவா போடட்டோ

 

பாராளுமன்றத்தில் கதைக்காவிட்டாலும் கட்சி மட்டத்தில் கதைக்கலாம் தானே?

11 hours ago, Kandiah57 said:

தேவையில்லை ஏனெனில் ஏற்கனவே  ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து பத்து பேர்  தெரிவு செய்து விட்டார்கள் ..இவர்களின் ஆலோசனைப்படி தான்  அந்தந்த மாவட்ட பிரச்சனைகள்  அபிவிருத்தி,. போன்ற தீர்க்கப்படும்.  தனியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சை மட்டுமே கேட்க மாட்டார்கள்      நல்லது நடக்கும் என நம்புகிறேன்   மக்கள் தமிழ் மக்கள்  இந்தமுறை தான்  எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார்கள்   சும்மா நாங்கள் தும்புத்தடியை வைத்தாலும் தமிழ் மக்கள் வாக்கு போடுவார்கள்  என்ற காலம் மலையேறிவிட்டது  

தமிழ் மக்களின் தீர்ப்பை மதியுங்கள்.  அதை விட்டுட்டு 

அனுர அலை   யாழிலும் வீசுறது  என்பது அறிவீனம்  🙏

 

மக்களுக்கு வாக்களிக்க தெரியாது என்றுதானே தேசியத்தூண்கள் தற்போது பேசிக்கொள்கின்றார்கள்? மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தேசியத்தூண்கள் தயாரா?

11 hours ago, putthan said:

பேசுவார்கள் பேச வேண்டும் ....சும்மா வரவு செல்வு திட்டத்திற்கு கை தூக்கிற வேலை செய்யாமல்

இவர்களை வாக்களித்த மக்கள் அணுகி தமது தேவைகளை முன்வைக்கும்போது பேசத்தானே வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

1. சுமந்திரன், தாயக மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறார். எனக்கு ஏமாற்றம் தான், ஆனால் நான் அல்லவே வாக்காளன்?  எனவே, மக்கள் முடிவின் படி, அவர் மீள எந்த வழியிலும் தமிழ் அரசியலில் பங்கு பற்றாமல் விலகி விட வேண்டும். இனி பேச்சு, ஏச்சு கேட்க வேண்டியதில்லை. அவருக்கு நிம்மதி😂!

 

தேசியத்தின் காவலர்கள் பெருத்த எடுப்பில் பல வருடங்களாக சுமந்திரன் அவர்களுக்கு எதிராக பாரிய பிரச்சார யுத்தம் நடாத்திய பிற்பாடும் அவருக்கு 15,000 வாக்குகள் மேல் கிடைத்துள்ளதே. இதை ஒரு வெற்றியாக பார்க்க முடியாதா? 🤷‍♂️

சுமந்திரனின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிய ஆவல்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

செல்வம் 5695 வாக்குகள் மட்டும் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டாரா?

பிழையான தகவல். மஸ்தான் 13511 வாக்குகள் எடுத்து தெரிவு செய்யப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நியாயம் said:

 

தேசியத்தின் காவலர்கள் பெருத்த எடுப்பில் பல வருடங்களாக சுமந்திரன் அவர்களுக்கு எதிராக பாரிய பிரச்சார யுத்தம் நடாத்திய பிற்பாடும் அவருக்கு 15,000 வாக்குகள் மேல் கிடைத்துள்ளதே. இதை ஒரு வெற்றியாக பார்க்க முடியாதா? 🤷‍♂️

சுமந்திரனின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிய ஆவல்.

இதன் மூலம் அவரின் அத்தனை தவறுகள் மற்றும் தான் தோன்றிக்தனமான செயற்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

கட்சியினை பிரதிநிதிப்படுத்துவதற்கு சுமந்திரன்  நல்ல தெரிவாக இருக்கலாம். 
ஆனால்... மற்றவர்களை அரவணைத்து செல்லும் பழக்க வழக்கம், இல்லாதவரை..   கட்சி இன்னும் விட்டு  வைத்திருந்தால்... கட்சியே  காணாமல் போய் விடும். 
தனிமனிதன் முக்கியமா? கட்சி முக்கியமா எனும் போது.... கட்சியே பலரது தெரிவாக இருக்கும்.

கீழே... @zuma எழுதிய அருமையான  பதிவு ஒன்று உள்ளது. அதனைப் பார்த்தீர்களோ தெரியாது. உங்கள் பார்வைக்காக இணைக்கின்றேன். 👇


👉 //யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் தேல்விக்கு முக்கிய காரணம் சுமந்திரனே ஆகும்.

- ஒரு குழுவாக செயற்படாமை, தனது கட்சியின் தலைமை வேட்ப்பாளருக்கு எதிராக நிறுவப்படாத ஊழல் கட்டுக்கதைகளை பரப்பியமை.

- தனது வெற்றிக்காக பிணாமி வேட்ப்பாளர்களை நியமித்தமை, அவர்கள் அனைவரும் ஒரே சமூக அந்தஸ்து ( social status) உடையவர்கள்.

- மக்களின் மனநிலை அறியாமல் மேட்டிக்குடி அரசியல் பேசியமை

- மக்களுக்கும், அநுராவுக்கு இடையில் இடைத்தரகர் அரசியல் செய்ய நினைத்தமை.

- தமிழரசு கட்சியை சமூக இயக்கமாக மாற்றாமல் ( NPP போல் ), தனது இருப்பை தக்க வைக்க செயற்பட்டமை என்று பலவற்றை கூறலாம்.// 👈

நீங்கள் கூறுவது சரி, கட்சி தொலைநோக்கு பார்வையுடன் செயற்பட்டால் சுமந்திரனை தேசிய பட்டியலில் தெரிவு செய்யாமல் விடலாம் ஆனால் கட்சி தனது இருப்பை தற்காலிகமாக காட்டிக்கொள்வதற்காக சுமந்திரனை தெரிவு செய்தால் இந்த நிலை தொடரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நியாயம் said:

 

பாராளுமன்றத்தில் கதைக்காவிட்டாலும் கட்சி மட்டத்தில் கதைக்கலாம் தானே?

 

மக்களுக்கு வாக்களிக்க தெரியாது என்றுதானே தேசியத்தூண்கள் தற்போது பேசிக்கொள்கின்றார்கள்? மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தேசியத்தூண்கள் தயாரா?

இவர்களை வாக்களித்த மக்கள் அணுகி தமது தேவைகளை முன்வைக்கும்போது பேசத்தானே வேண்டும்?

எல்லோரும் ..அனுர போல் இருக்கமாட்டார்கள்..அதேநேரம் மேடைப்பேச்சுப்போல் செயற்பாடும் இருக்காது...வெற்றி வெரியில் இருப்பவர்களுக்கு நம்ம்வர் தூசுதான்...இது போகப் போக தெரியும்..அதனை இதனைவிட அழகான அஎஉமையான செயல்பாட்டாளராக இருந்த பிரதம்ரையே மாற்றச் சொல்கின்ற கோசம் அங்கு எழத்தொடங்கிவிட்டது...இது ஆரம்பம் சார் ..பொறுத்திருந்து பாருங்கள்.. நல்லது நடந்தால்

நானும் வரவேற்பேன்...வெள்ளைவேட்டி மைத்திரியாலிம்..வெள்ளைச்சாறீ சந்திரிக்காவாலும் மோசம் போனவர்கள் நாமென்பது மறக்கவில்லைத்தானே

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நியாயம் said:

 

தேசியத்தின் காவலர்கள் பெருத்த எடுப்பில் பல வருடங்களாக சுமந்திரன் அவர்களுக்கு எதிராக பாரிய பிரச்சார யுத்தம் நடாத்திய பிற்பாடும் அவருக்கு 15,000 வாக்குகள் மேல் கிடைத்துள்ளதே. இதை ஒரு வெற்றியாக பார்க்க முடியாதா? 🤷‍♂️

சுமந்திரனின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிய ஆவல்.

 

இந்த பாராளுமன்றத்தில் தேசிய பட்டியலிலாவது பாராளுமன்றத்திற்கு செல்லாவிட்டால் சுமந்திரனின் அரசியல் வாழ்க்கை ஓரளவிற்கு முடிவிற்கு வந்துவிடும் என்றே கருதுகிறேன்.

அது அவரிற்கும் தெரிந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

பிழையான தகவல். மஸ்தான் 13511 வாக்குகள் எடுத்து தெரிவு செய்யப்பட்டார்.

செல்வமும் வென்றதாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.............

Vanni District

NPP
Selvathambi Thilakanathan – 10,652
Arumugam Jegadishwaran – 9,280

ITAK
Thurairasa Ravikumar – 11,215

SJB
Rishad Bathiudeen – 21,018

DTNA
A Adaikkalanathan – 5,695

SLPP
Cader Masthan – 13,511

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

DTNA
A Adaikkalanathan – 5,695

இவ்வளவு வாக்குகளுடன் தெரிவானாரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

ஒபகே பிரத்தனவா இட்டு வேவ கியல மம பிராத்தனா கரனவ. ஒபகே அனாகத்த கட்டியுத்து வலட்ட சுப பத்தும். ஒபட்ட தெருவன் சரணாய்.

 

🤣

 

2 hours ago, island said:

படித்தவுடன் கிழித்துவிடவும் எண்ட கணக்கா படிச்சாச்சு கிழிச்சசாச்சு  என்று போகாம  படிச்சத தமிழ்ள எமக்கெல்லாம் புரியும் படி சொல்லிற்று  போறது. 😂😂😂

இனிய மாலை வணக்கம் தமிழ் சகோதரர்களே,

எம்மை இட்டு நீங்கள் பலத்த எதிர்பார்புக்களுடன் உள்ளதை நாம் அறிவோம்.

இந்த எதிர்பார்புக்களை நிறைவேற்றுவோம் என நாம் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

சிங்கள, தமிழ், முஸ்லீம், பேர்கர் நாம் எல்லோரும் ஒற்றை இலங்கைக்குள், உறவினர் போல் வாழும் புதிய எதிர்காலத்தை கட்டி எழுப்புவோம்.

நன்றி.

ஒற்றை (ஆட்சி) சிறிலங்காவுக்கு வெற்றி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.