Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி.

சீனா இருக்கிறது  

  • Replies 164
  • Views 9.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒ

  • நிழலி
    நிழலி

    சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இத

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்

  • கருத்துக்கள உறவுகள்

சீனா மக்களை அடக்கி ஆள்வதற்கு கம்யூனிசத்தையும் நாட்டை முன்னேற்ற முதலாளித்துவ கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றது. சீன மக்களின் வாழ்கை வசதிகள் ஈரான் உக்ரைனுக்கு கீழே உள்ளது. சிங்கப்பூர் அதிக உயர்தர மக்கள் வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kandiah57 said:

சீனா இருக்கிறது  

சீனாவில் இப்போ இருப்பது கம்யூனிச ஆட்சி அல்ல.

மாவோ தொடங்கி- தியன்மென் படுகொலை நடந்த 1988 வரை அங்கே நடந்தது தான் கம்யூனிச ஆட்சி.

அதன் பின் அங்கே நடப்பது, ஒரு கட்சி, அதிதீவிர முதளாலிதுவ ஆட்சி.

1988 க்கு பின்புதான் சீனா பொருளாதாரத்தில், வர்த்தகத்தில் பெருமளவில் முன்னேற தொடங்கியது.

இலங்கை சனநாயக, சோசலிச குடியரசு என்பது பெயர் ஆனால் அங்கே சனநாயகமும் இல்லை, சோசலிசமும் இல்லை, அது குடியரசு கூட இல்லை அது ஒரு மறைமுக பெளத்த தியோகரசி.

இதே போலத்தான் இப்போ சீன கம்யூனிச கட்சியும். பெயரில் மட்டுமே கம்யூனிஸ்ட்.

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீனா மக்களை அடக்கி ஆள்வதற்கு கம்யூனிசத்தையும் நாட்டை முன்னேற்ற முதலாளித்துவ கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றது. சீன மக்களின் வாழ்கை வசதிகள் ஈரான் உக்ரைனுக்கு கீழே உள்ளது. சிங்கப்பூர் அதிக உயர்தர மக்கள் வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

அது என்ன ஒரு மனிசன் கருத்து சொல்லலாம்னு வந்தா நீங்களே அத முதல்ல சொல்லிடுறது?😝

47 minutes ago, Kandiah57 said:

சீனா இருக்கிறது  

கந்தையா அண்ணை அறிந்த தகவல் தவறானது,

சீனா முதலில் ஒரு அபிவிருத்தியடைந்த நாடல்ல, பிரமாண்ட நகர வளர்ச்சியை கொண்டிருந்தாலும், கிராமப்புறங்கள் இன்னும் சுகாதாரம் வறுமை  மிக குறைந்த ஊதியம், வேலையில்லா திண்டாட்டம் , சேரிப்புற மக்கள் என  மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன.

 விளங்க நினைப்பவன் சொன்னதுபோல் உள்நாட்டு விவகாரங்களில் கம்யூனிச கொள்கையை கடைப்பிடிக்கும் சீனா பொருளாதார விஷயத்தில் முற்று முழுதாக மேற்குலகம் சார்ந்தே செயல்படுகிறது.

உலகின் புகழ்பெற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் சீனாவிற்குள் நிலைகொண்டு சீனர்களின் உழைப்பு பணத்தை முதலீடு என்ற பெயரில் அள்ளி செல்கின்றன,

சீனாவில் நிலைகொண்டுள்ள மேற்குலக  சில உலக புகழ்பெற்ற நிறுவனங்கள்  

https://msadvisory.com/list-of-foreign-companies-operating-in-china/

சீனா எப்படி உலக பொருளாதாரத்தை சுரண்டுகிறதோ அதேபோல் சீன பொருளாதாரத்தையும் உலகம் சுரண்டுகிறது 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான யாழ். இளைஞனுக்கு பிணை

04 DEC, 2024 | 04:43 PM
image
 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - இணுவிலை சேர்ந்த இளைஞனை பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

மாவீரர் நாள் தொடர்பிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்களை தனது முகநூலில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இணுவிலை சேர்ந்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர். 

கைது செய்த இளைஞனை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்தில் சுமார் 72 மணித்தியால விசாரணைகளின் பின்னர், ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் இன்று புதன்கிழமை (04) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை (04) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை, குறித்த நபரை 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் அந்த நபருக்கு பயணத் தடையும் விதித்ததுள்ளது.

https://www.virakesari.lk/article/200411

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, valavan said:

சீனா எப்படி உலக பொருளாதாரத்தை சுரண்டுகிறதோ அதேபோல் சீன பொருளாதாரத்தையும் உலகம் சுரண்டுகிறது 

ஆமாம்  இருந்தாலும்  சீனா உலகெங்கிலும் முதலீடு செய்துள்ளது   

ஒருமுறை அமெரிக்காவில் வங்கிகளில்  பிரச்சனை எற்பட்டபோது   பணம் கொடுத்து மீட்டுயுள்ளது  சீனாவின் சொத்துக்கள் தனிநபர்கள். பெயரில்  உலகம் முழுவதும் உண்டு”  என்று வாசித்துள்ளேன்.  பொய்யா???  உதாரணமாக அவுஸ்திரேலியவில். வீடுகளில் முதலீடு செய்து  வசதிகள் குறைந்த சீனா மாணவர்களுக்கு குறைந்த வாடகைக்கு விட்டுள்ளது என படித்த ஞாபகம் உண்டு” 

மற்றும் முக்கியமாக ஒரு உலகப் போர் வந்தால்  சீனா சமாளித்து கொள்ளும்  அது ஒரு பெரிய விவசாய நாடு  காய்கறிகள் பழங்களை உலகளாவில் ஏற்றுமதி செய்கிறது   ஆனால்  போரானாது ஒரு வருடமாய் நிடிக்குமாயின்  அனைத்து சிங்கப்பூர் மக்களும் உணவுகள் இன்றி இறந்து விடுவார்கள் 

வியட்னாம் என்ற கம்யூனிச நாடு  துரிதமாக வளரத்து வருகிறது   

அங்கே ஓடும் கார்கள் தரம் வாயத்தவை 🙏  கிழக்கு ஜேர்மனி தான் உண்மையான கம்யூனிச நாடு ஆகும்  1991 ஆண்டு  மேற்கு ஜேர்மனிக்கு  எல்லை தாண்டி வந்த கார்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை    தமிழ் சிறி. படங்கள் இணைபபார. 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

அதன் பின் அவர்கள் எங்கேயும் நெருப்பாக நிற்கமுடியாது. முகநூல் கணக்கையே மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்.................

பெயரில் கூட நெருப்பு, அக்னி இப்படி எதுவும் இருந்தால், அதையும் எடுத்து விடவேண்டும்

நல்லவேளை 
இலங்கை குடியுரிமையும், வாக்குரிமையும் வைத்திருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நானும் என் நிலையறிந்து பயரும் விடுவதில்லை அதனால் பெயரில் அக்கினியையும் நெருப்பையும் வைத்திருக்க முடிகிறது.
கொழுப்பெடுத்து போய் பயர்  விட்டால் எந்த நாட்டிலும் பிதுக்கி விடுவார்கள் என்பது உண்மைதான் போலும். அனுர மட்டும்தான் பிதுக்குவார் என்பதில்லை போல 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதே போலத்தான் இப்போ சீன கம்யூனிச கட்சியும். பெயரில் மட்டுமே கம்யூனிஸ்ட்.

இந்த முறையில் இலங்கை ஏன்  முன்னேற்றம் அடைய முடியாது?? 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

ஒருமுறை அமெரிக்காவில் வங்கிகளில்  பிரச்சனை எற்பட்டபோது   பணம் கொடுத்து மீட்டுயுள்ளது  சீனாவின் சொத்துக்கள் தனிநபர்கள். பெயரில்  உலகம் முழுவதும் உண்டு”  

அது என்ன பிரமாதம் கந்தையா அண்ணை, ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்ககூடிய ஒன்றுதான் இருந்தாலும் சொல்றேன், அமெரிக்காவுக்கு அதிக கடன் வழங்கிய நாடு சீனா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1988 க்கு பின்புதான் சீனா பொருளாதாரத்தில், வர்த்தகத்தில் பெருமளவில் முன்னேற தொடங்கியது.

சீனாவின் வளங்களை  ஜேர்மனி  பிரித்தானியா. .......போன்ற நாடுகள்  கடுமையாக கொள்ளை அடித்தவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, Kandiah57 said:

போரானாது ஒரு வருடமாய் நிடிக்குமாயின்  அனைத்து சிங்கப்பூர் மக்களும் உணவுகள் இன்றி இறந்து விடுவார்கள் 

சிங்கப்பூருக்கு மலேசியாதான் தண்ணி காட்டவேண்டும். அரசியலில் சிறு கீறல் வந்தாலும் சிங்கப்பூருக்கு நாக்கு வரண்டு போகும்.😃

25 minutes ago, Kandiah57 said:

அங்கே ஓடும் கார்கள் தரம் வாயத்தவை 🙏  கிழக்கு ஜேர்மனி தான் உண்மையான கம்யூனிச நாடு ஆகும்  1991 ஆண்டு  மேற்கு ஜேர்மனிக்கு  எல்லை தாண்டி வந்த கார்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை    தமிழ் சிறி. படங்கள் இணைபபார. 🤣😂

ddr-oldtimer-autos-modell-trabant-601-0.webp

கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள்  ஏற்றத்தாழ்வு எரிச்சல் பொறாமை இல்லாமல்  ஒரேமாதிரியாக வாழ்ந்தவர்களாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

சிங்கப்பூருக்கு மலேசியாதான் தண்ணி காட்டவேண்டும். அரசியலில் சிறு கீறல் வந்தாலும் சிங்கப்பூருக்கு நாக்கு வரண்டு போகும்.😃

ddr-oldtimer-autos-modell-trabant-601-0.webp

கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள்  ஏற்றத்தாழ்வு எரிச்சல் பொறாமை இல்லாமல்  ஒரேமாதிரியாக வாழ்ந்தவர்களாம் 🤣

ஆமாம் உண்மை  அது வறுமையில்  எல்லைகள் அற்ற. மகிழ்ச்சியான வாழ்க்கை   🙏

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இலங்கை குடியுரிமையும், வாக்குரிமையும் வைத்திருக்கும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை 

நீங்கள் கெத்து தான், அக்னி.....................👍.

இங்கு போனவாரம் ஒரு நீண்ட விடுமுறை. பலர் சில தடவைகள் சந்தித்துக்கொண்டோம். அலசப்பட்ட ஒரு தலைப்பு: இரட்டைக் குடியுரிமை.

ஆனால் ஒருவரும் எடுக்கமாட்டோம்.............. சும்மா ஒரு பொது அறிவுக்காகக் கதைத்தோம்................😜.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் கெத்து தான், அக்னி.....................👍.

இங்கு போனவாரம் ஒரு நீண்ட விடுமுறை. பலர் சில தடவைகள் சந்தித்துக்கொண்டோம். அலசப்பட்ட ஒரு தலைப்பு: இரட்டைக் குடியுரிமை.

ஆனால் ஒருவரும் எடுக்கமாட்டோம்.............. சும்மா ஒரு பொது அறிவுக்காகக் கதைத்தோம்................😜.

பிரியனையும். சந்திததீர்களா?? எடுங்கள் எடுங்கள்   அப்ப  தான்  உங்களை இலங்கையில் கைது செய்யலாம்    🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பிரியனையும். சந்திததீர்களா?? எடுங்கள் எடுங்கள்   அப்ப  தான்  உங்களை இலங்கையில் கைது செய்யலாம்    🤣🤣🤣

🤣............

இல்லை, அண்ணன் இப்போது கிழக்கில் நிற்கின்றார்.

பேச்சு வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும்............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

@ரதி யை மீண்டும் கண்டது சந்தோஷம்🥰

யூடியூப்பர்களை எல்லாம் பின்தொடர்ந்துகொண்டிருந்தால் ஏன் என்று தெரியாமலேயே ஸ்குரோல் செய்வீர்கள். இது brain rot என்று சொல்லப்படுகின்றதாம். மீண்டும் யாழுக்கு வந்து அறிவார்ந்தவர்களுடன் உரையாட ஆரம்பித்தது நல்ல சகுனம்☺️

உங்களை மாதிரி எல்லாம் தெரிந்தவர்களுடம் கருத்தாடும் அளவுக்கு இன்னும் அறிவு  வளரல்ல🙂....இன்னும் சிலர் இப்பவும் பழசையே அரைத்து கொண்டு இருக்கினம்...அனுரா வந்து இன்னும் ஒரு மாசம்  கூட ஆகேல்ல அதுக்குள்ளே அவர் ஒன்றும் செய்ய  மாட்டார்...சிங்களவர்கள் ஒன்றும் தர மாட்டார்கள் என்று நெகடிவாய் எழுதிக் கொண்டு இருக்கினம்.

 எப்படியாவது அவர்களை கைகளுக்குள் போட்டு கொண்டு இணக்க அரசியல் செய்து ஏதாவது  தீர்வு எடுப்போம் என்று யோசிப்பதில்லை ...இங்கிருந்து காசு அனுப்பி அவர்களை[அங்கிருக்கும் தமிழர்களை] தங்கட கால்களுக்குள் வைத்து கொண்டால் சரி  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இந்த முறையில் இலங்கை ஏன்  முன்னேற்றம் அடைய முடியாது?? 

நிச்சயம் முன்னேறலாம்….

நான் இப்போ இந்த முறையில் முன்னேற முடியாது என்று எங்கும் எழுதவில்லை.

1970, 80களில் ஜேவிபி உருவாக்க முனைந்த நாடு இந்தவகை நாடு இல்லை என்றே சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

🤣 இரெண்டு புரட்சிகளின் போதும் எப்படி பட்ட ஒரு நாட்டை தாம் கட்டமைக்கப்போகிறோம் என அவர்கள் கூறியது இப்போதும் எழுத்தில் இருக்கிறது தேடி படியுங்கள்.

நிச்சயம் அவர்கள் ஒரு கியூபா, சோவியத் பாணியிலான அரசை அமைக்கவே போராடினார்கள்.

எமது நாடு கியூபா போல மாறி இருக்கும்.

அதுவும் கெடுதல் இல்லை - உலக தரமான இலவச மருத்துவம் உள்ள நாடு கியூபா.

ஆனால் விஜேவீரவின் ஜேவிபி நாட்டை சிங்கப்பூர் போல ஒரு போதும் ஆக்கியிராது.

இல்லை. புலிகளும், ஜேவிபியும் ஆபத்தை விளைவிக்க நினைக்கவில்லை.

இலங்கையில் இருந்த நிலையை மாற்ற (வேறுபட்ட நிலைகளில்) முயன்றார்கள்.

அதாவது இலங்கையில் நிலவிய status quo வை மாற்ற விழைந்தனர்.

ஆரம்பத்தில் சறுக்கி இருந்தாலும் எப்படியாவது முன்னுக்கு நாட்டை கொண்டு வந்து இருப்பார்கள்...அதிகளவில் ஊழல் இருந்திருக்காது என்று நினைக்கிறன் ..கற்றவர்கள் தொழிலாளிகள் நாட்டை விட்டு ஓடி இருக்க மாட்டார்கள் 
 

22 hours ago, goshan_che said:

உருவாகியது போலி துவாரகா -அவர் ரோவின் பொம்மை. 

ஆனால் புலித்தேவனும் நடேசனும் இப்போ இருந்திருந்தால் - சமஸ்டி நோக்கிய ஒரு அரசியலைதான் முந்தள்ளி இருப்பார்கள் என நினைக்கிறேன்.

 

 

 

சிங்களவன் எல்லாத்தையும் புலியின் தலையில் போட்ட மாதிரி நீங்கள் றோவின் தலையில் போடுங்கோ 🤩


மன்னிக்க வேண்டும் நடேசனும் புலித்தேவனும் இருந்திருந்தாலும் கூட ஒரு மண்ணையும் புடுங்கி இருக்க மாட்டார்கள் 
 

20 hours ago, valavan said:

 

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க

கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி.

அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு?

அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை.

Untitled.png

 

 

 

சிங்கப்பூர் என்பது பிழையான உதாரணம் தான் மன்னித்து விடுங்கோ...அனுராவின் ஆட்சி காலம் 5 வருடம் வரை பொருத்திருந்து பார்ப்போம் ...சந்தர்ப்பம் கொடுப்பதில் தப்பில்லை அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:

ஆச்சரியம் தான், நம்மவர்கள் அநுர மீது காட்டும் பரிவும், ஆதரவும்.

நான் மானசீகத் தேர்தலிலும், களத் தேர்தல் போட்டியிலும் அநுரவையே தெரிந்தெடுத்திருந்தேன். ஆனாலும் தமிழர் பிரதேசங்களில் தமிழரசுக்கட்சியையே தெரிந்தெடுத்திருந்தேன். அப்படித்தான் நடக்கும் என்று முற்றாக நம்பியும் இருந்தேன். நம்மவர்கள் அநுரவை தள்ளியே வைப்பார்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் நடப்பவை தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றன.................😶.

 

இவ்வளவு காலமும் இருந்த ஜனாதிபதிகளில் இளமையாகவும்🥰,தொப்பை இல்லாமல் 🤠ஹான்சமாய்😎 இருக்கிறார்.
பிரதமர் பெண்ணாக இருக்கிறார்.
படித்தவகளாய் இருக்கிறார்கள்.அதுக்காக [படித்தவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை.]
எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

ஆரம்பத்தில் சறுக்கி இருந்தாலும் எப்படியாவது முன்னுக்கு நாட்டை கொண்டு வந்து இருப்பார்கள்...அதிகளவில் ஊழல் இருந்திருக்காது என்று நினைக்கிறன் ..கற்றவர்கள் தொழிலாளிகள் நாட்டை விட்டு ஓடி இருக்க மாட்டார்கள்

ரோகண விஜே வீரவின் இலங்கை போல்பொட்டின் கம்போடியா போலவே இருந்திருக்க வாய்புகள் அதிகம்.

34 minutes ago, ரதி said:

கற்றவர்கள் தொழிலாளிகள் நாட்டை விட்டு ஓடி இருக்க மாட்டார்கள்

இரெண்டு வருடத்தில் அவர்கள் ஆட்சியில் இல்லாமல் ஆனால் அதிகாரம் படைத்து இருந்த காலத்திலேயே, அவர்களால் மேலே போன, மேற்குக்கு போன சிங்கள புத்திசீவிகள் எண்ணிக்கை மிக அதிகம்.

ஆட்சிக்கு வந்திருதால்…

34 minutes ago, ரதி said:

சிங்களவன் எல்லாத்தையும் புலியின் தலையில் போட்ட மாதிரி நீங்கள் றோவின் தலையில் போடுங்கோ

ஓம் வந்தது துவாரகாவேதான். ரோ நாடகம் ஆடவில்லை🤣

34 minutes ago, ரதி said:

மன்னிக்க வேண்டும் நடேசனும் புலித்தேவனும் இருந்திருந்தாலும் கூட ஒரு மண்ணையும் புடுங்கி இருக்க மாட்டார்கள் 

என்னிடம் காலயந்திரம் இல்லை.

ஆனால் அவர்கள் ஒரு அரசியலை முன்னெடுக்க சொல்லித்தான் சரணடைய அனுப்பபட்டார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரதி said:

எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.

https://www.tamilguardian.com/content/end-ceasefire-kick-norway-out-jvp-tells-rajapakse

29 minutes ago, ரதி said:

எமக்கு எதிரான யுத்தத்தில் இவர்கள் பங்கு பற்றியதில்லை.

Senior Janatha Vimukthi Party (JVP) member K D Lalkantha said only his party and one other led by extremist Sinhala monks are responsible for defeating “separatist terrorism” as he boasted of “ending” the island’s conflict “through war,” a day after Tamil Genocide Remembrance Day.

https://www.tamilguardian.com/content/jvp-boasts-ending-separatist-terrorism-tamils-commemorate-genocide 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

சோமவன்சவோ,விமலோ இப்ப பதவிகளிலிருக்கினமா ..ஜேவிபியே அவர்களை தூக்கி எறிந்து விட்டது 

18 minutes ago, goshan_che said:

 

 

 

ஓம் வந்தது துவாரகாவேதான். ரோ நாடகம் ஆடவில்லை🤣

 

 

வந்தது போலி துவாரகா தான் ஆனால் பின் நின்று இயக்கியது புலம் பேர் புலிப் பினாமிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

சோமவன்சவோ,விமலோ இப்ப பதவிகளிலிருக்கினமா ..ஜேவிபியே அவர்களை தூக்கி எறிந்து விட்டது

அந்த ஜேவிபியின் பொது செயலாலர் யார் ?

மேலே நான் தந்த கட்டுரையில் உள்ள லால்காந்த அப்போ ஜேவிபியில் என்ன பதவியில் இருந்தார்?

அப்போ அனுர என்ன பதவியில் இருந்தார்?

5 minutes ago, ரதி said:

வந்தது போலி துவாரகா தான் ஆனால் பின் நின்று இயக்கியது புலம் பேர் புலிப் பினாமிகள் 

அவர்களை இயக்கியது ரோ…

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அந்த ஜேவிபியின் பொது செயலாலர் யார் ?

மேலே நான் தந்த கட்டுரையில் உள்ள லால்காந்த அப்போ ஜேவிபியில் என்ன பதவியில் இருந்தார்?

அப்போ அனுர என்ன பதவியில் இருந்தார்?

அவர்களை இயக்கியது ரோ…

எல்லாத்தையும் நோண்டிக் கொண்டு இருந்தால் புலிகளும் இனவாதிகள் தான் ...தமிழரும் இனவாதிகள் தான் ....முக்கியாய் யாழ்ப்பாண தமிழர்கள் அதுவும் வெள்ளாளர் இனவாதிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் ...இனி மேல் நடக்கிறதே பார்ப்பம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.