நான் நினைக்கிறன், இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் பிழையான தகவல்களை பரப்பி எச்சரிக்கிறார்கள். சைவப்பாடசாலைகளில் கல்வி கற்கும் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு பரிசுத்த பைபிளை வழங்கி வைத்து அவர்களின் சமய அறிவை வளர்க்க உத்தேசித்திருக்கலாம், இவர்கள் பதறியடிக்கிறார்கள். நான் படித்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தை சேர்ந்த பாடசாலையில் வேறு சமயத்தை சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்றார்கள், அருகில் அவர்களின் சமயம் சார்ந்த பாடசாலை இருந்தபோதும் அவர்களின் பெற்றோர் இந்தப்பாடசாலையை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு சமயம் பாடம் இல்லை, அவர்கள் சமய பாட நேரத்தில் வெளியே சென்று விடுவார்கள் அல்லது வகுப்பின் பின் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். அந்த பாடசாலை அதிபர் அவர்களுக்கான சமய ஆசிரியருக்காக கல்வி பணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை, இருந்தபோதும் அந்த பாடசாலையில் விவசாயம் கற்பித்த ஆசிரியரை அதற்காக ஒழுங்கு செய்தார். ஆனாலும் அந்த மாணவரோ பெற்றோரோ ஆர்வம் காட்டவில்லை பின் வரிசையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் அந்த சமயத்தை சேர்ந்த மாணவர்களைவிட அதிக மதிப்பெண்ணை பெற்றனர் சமய பரீட்ச்சையில். வேறு மதங்களை பற்றி அறிவதில் தப்பில்லை, பின்பற்றுவது அவரவர்களின் சுதந்திரம். எங்கள் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் தங்கள் சமய வழிபாடுகள், விழாக்கள் செய்வதற்கு கூட சுதந்திரம், உரிமை, வசதி வழங்கப்பட்டிருந்தது. யாரும் மாணவர் சமயம் மாறி விடுவார் என அச்சப்பட்டதில்லை, அதே சமயத்தை சேர்ந்தவர்கள் கூட ஏனைய மதத்தை கற்று அந்த மாணவர்களுக்கு கற்பித்ததும் எனக்கு நினைவுண்டு. இவர்கள் எந்த நன்மையையும் செய்வதில்லை, மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதும் தவறான கருத்துக்களை பரப்பி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துகிறார்கள். மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இவர்களுக்கு இவர்களது பிரச்சனை.
By
satan ·