Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் ஒரு காலமும் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் தரமாட்டோம் என எப்போதும் தெரிவிக்கவில்லை எனவும் யாழ் மக்கள் அந்தளவிற்கு முட்டாள் இல்லை எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்று (26) இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் யாழிற்கான கிளிநொச்சி இரணைமடுக்குளம் நீர் விநியோகத்திட்டம் குறித்து யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண குடிநீருக்கான இரணைமடுக்குளம் வேலைத்திட்டமானது கடந்த கால அரசாங்களில் இருந்து தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாதமை தொடர்பில் சுட்டிக்காட்டியே அர்ச்சுனா தனது கேள்விகளை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பில் புள்ளி விபரங்களுடன் சிறீதரனை நோக்கி கேள்விகளை சரமாரியாக முன்வைத்த அர்ச்சுனா இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாததன் பின்ணனியில் அன்றைய காலம் முதல் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், அர்ச்சுனா முன்வைத்த கேள்விகளுக்கு சிறீதரன் திருப்திகரமான பதில் வழங்காமல் சுற்றிவளைத்தமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/sridharan-reply-to-archuna-mp-1735208465

  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனா விசர்க்கூத்து ஆடாமல் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களில் கவனம் செலுத்துவராயின் மக்கள் இன்னும் அதிக ஆதரவு தருவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

அருச்சுனா விசர்க்கூத்து ஆடாமல் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களில் கவனம் செலுத்துவராயின் மக்கள் இன்னும் அதிக ஆதரவு தருவார்கள்!

இன்னம் இரண்டு கூட்டத்தோடைத் திருந்தி விடுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாலி said:

அருச்சுனா விசர்க்கூத்து ஆடாமல் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களில் கவனம் செலுத்துவராயின் மக்கள் இன்னும் அதிக ஆதரவு தருவார்கள்!

உண்மை..உண்மை..வேப்பிலை தேவைப்படாத அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்தால் நல்லம் தான்.😀

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறீதரனின் வழக்கமான அரசியல்  பிரச்சாரத்தை இந்தக் கூட்டத்திலேயும் அவிழ்த்துவிடுகிறார்.

🥺

எதிர்காலத்தில் அர்ச்சுனா ரமநாதன் கட்சி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரணைமடு குடிநீர் திட்டத்தையும் மகாவலி விரிவாக்கத்தையும் சாராய சிறியர் விளங்கிக்கொள்ள கனகாலம் எடுக்கும். 😁

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

யாரும் ஒரு காலமும் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் தரமாட்டோம் என எப்போதும் தெரிவிக்கவில்லை எனவும் யாழ் மக்கள் அந்தளவிற்கு முட்டாள் இல்லை எனவும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சொல்வது முழுக்க உருட்டும் பிரட்டும்.  இத்திணைக்களத்தில் வேலை செய்யும் உறவினருடன் பேசிய போது திட்டத்தை தற்காலிகமாக அமல் படுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் சிறிதரன் தான் முட்டுக்கட்டையாக உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சிறீதரனின் வழக்கமான அரசியல்  பிரச்சாரத்தை இந்தக் கூட்டத்திலேயும் அவிழ்த்துவிடுகிறார்.

அவருக்கு வாக்களித்த 15 ஆயிரம் யாழ்பாணத்து மக்களும் அவரது வழக்கமான புலுடா கதைகள் கொண்ட அரசியல் பிரச்சாரத்தை  உணருவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nunavilan said:

சொல்வது முழுக்க உருட்டும் பிரட்டும்.  இத்திணைக்களத்தில் வேலை செய்யும் உறவினருடன் பேசிய போது திட்டத்தை தற்காலிகமாக அமல் படுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் சிறிதரன் தான் முட்டுக்கட்டையாக உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

இப்ப அர்ச்சனா எண்ட பொறுத்த காய்ட்ட மாட்டுப்பட்டு இருக்கினம்...😂

70 வருசமாய் அவிச்ச பருப்புகள் இனி அவியாது எண்டு நினைக்கிறன்.😁

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரில் இருக்கிறன்.. கீரக்கடைக்கும் எதிர்க்கடை வேணும்.. பூனைக்கு யார் மணிகட்டுவாங்கள் எண்டு இவ்வளவு நாளும் சனம் இருந்திச்சு..  நாங்கள் மட்டும் இல்லை எங்கட ஊரே இப்போதைக்கு அர்ச்சுனாவுக்குத்தான் வோட் போடுவம் வேறு இன்னும் புதிதாக யாரும் வரும் வரைக்கும்.. ஒருபோதும் பழைய தமிழ்கட்சிகளுக்கு இனி வோட் போட போவதில்லை.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதை விளங்கிக் கொள்ளமுடியாது.. நாங்கள் ஒவ்வொரு திணைக்களத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் போகும்பொழுது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சொல்லி மாளாது..அரச உத்தியோகத்துக்கு எடுபட்டாலே நிரந்தரம், இனி நான் நினைச்சதுதான், என்னை யார் கேள்வி கேட்டாலும் எனக்கு வேலை போகாது எண்ட திமிர் இருந்தது.. அதால நாங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் கேள்வி கேட்டாலும் எடுபடாது.. செவிடன் காதில் ஊதின சங்குதான்.. ஆனா இப்ப ஒருத்தன் நாங்கள் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் அதிகாரத்தில் இருந்து கொண்டு கேக்கும்பொழுது வரும் சந்தோசம் இருக்கே.. அர்ச்சனா என்ன விசர்க்கூத்து ஆடினாலும் பார்சிறி போன்ற நரியன்களை எதிர்த்து கேள்வி கேட்டு அவங்களின் முகத்திரையை கிளிப்பதும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் திருடர்களை கேள்வி கேட்பதும் அந்த கேள்விகள் ஊடகங்களில் பேசுபொருள் ஆகி வருவதும் மக்களை சென்றடைவதும் மிகப்பெரிய ஒரு மாற்றம்.. தமிழ் தேசிய தமிழ் எம்பிக்களும் தங்களைவிட்டால் தமிழ் மக்கள் ஓட் போட வேறு கட்சிகள் இல்லை என்ற நிலைமையும் இல்லாமல் போவதும் வரவேற்கப்படவேண்டிய விடயம்.. இவற்றுக்கு அர்ச்சுனா ஒரு முதல்க்கல்லாக இருக்கட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லில், செயலில் பொறுமையும் நிதானமும் மரியாதையும் வேண்டும் அர்ச்சுனாவுக்கு. அப்போ கள்வரை மிக இலகுவாக கையாளலாம். இல்லையேல்; அர்ச்சுனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி பொறுமையிழக்கச்செய்து தப்பித்து விடுவார்கள் ஊழல்வாதிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும்?

 

(இனமொன்றின் குரல்)

-----------------------------------------------------------------

 

இரணைமடு குளத்துக்கு கீழ் விவசாயம் செய்யக் கூடிய 42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ளது

 

ஆனால் இதில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச கூடிய நிலை தான் இரணைமடுவில் உள்ளது 

 

அதிலும் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டும் தான் சிறுபோகம் செய்ய கூடியதாக உள்ளது 

 

இது போதாதென்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை 

 

கல்லாறு போன்ற பகுதிகளிலும் கூட குடிநீர் நெருக்கடி தலைவிரித்தாடுகின்றது 

 

அதாவது கிளிநொச்சியில் குடிக்க, விவசாயம் செய்ய போதிதண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு போக போவதாக பல ஆண்டுகளாக அரசியல் செய்கின்றார்கள் 

 

யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். 

 

இங்கு எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 Km to 15 Km களை தாண்டிய தூரங்களில் இல்லை.

 

அந்த வகையில் 40 வீதத்திற்கு அதிக யாழ்ப்பாண கிணறுகளில் உவர் நீர் கலந்து காணப்படுகின்றன. 

 

சுண்ணாம்புத் தட்டுகள் கரைந்து கடலுக்குள் செல்வதால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்குகிறது என்றும் சொல்லுகிறார்கள். 

 

இது தொடர்ந்தால் யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில்குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள்

 

ஆகவே நன்னீர் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியமானது 

 

ஆனால் இதற்கு இரணைமடு நீர் வேண்டும் என யாரும் கேட்கவில்லை 

 

இங்கே நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி கிணறு, புன்னாலைக்கட்டுவன் கிணறு, கீரிமலை கேணி, அல்வாய் குளம், கரவெட்டி குளக் கிணறு, ஊறணிப் பகுதி கிணறுகள், யமுனா ஏரி ஆகிய நீர் நிலைகள் ஊடக குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்

 

அதே போல நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் போதிய உவர் நீர்த் தடுப்பு அணைகள் ஏற்படுத்த பட வேண்டும். 

 

நிலக்கீழ் நீரைக் கடலில் சேர்க்கும் குகை வழிகளை அடையாளம் கண்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட் டு தடுக்கின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

 

யாழ்ப்பாணத்தின் 1,050 குளங்களும் ஆழமாக்கப்பட்டு புனரமைப்புகளுக்கு உட்படுத்த பட வேண்டும்

 

ஆனால் குளங்களைத் தரைக்கீழ் நீர்ப் பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க அனுமதிக்க கூடாது 

 

ஆனையிறவு கடல் நீரேரி, தொண்டைமானாறு கடல் நீரேரி, உப்பாறுஉட்பட்ட நீரேரிகளை நன்னீராக்குகின்ற செயற்திட்டங்கள் மூலம் யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பை அதிகரிக்க முடியும் .

 

 அதே போல மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும். 

 

பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும்.

 

உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும்.

 

அதே போல வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் பல நீர் சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

 

அதே போல யாழ்ப்பாணம் வருடம் ஒன்றுக்கு 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை வீழ்ச்சி பெறுகின்றது 

 

இந்த மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் முயல வேண்டும்

 

குறிப்பாக நிலாவரை கிணற்றில் 10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை இருப்பதாக சொல்லுகிறார்கள். 

 

ஆகவே மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும் . இதன் மூலம் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்க்கூடியதாக இருக்கும் .

 

இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாசன முறைமைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் 

 

மேற்படி விடயங்களை தவிர்த்து விட்டு இரணைமடுவில் தொங்கி கொண்டு இருக்க வேண்டியதில்லை 

 

இது போதாதென்று இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது. 

 

இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும்

 

யாழ்ப்பாண குடிநீரின் அளவு 50,000 கனமீற்றர்/நாள் என சொல்லப்படுகின்றது 

 

இது எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கக்கூடும்.

 

இந்நிலையில் நீண்டகாலத்திற்கான தேவையை நிறைவு செய்வதனையும் நிலைத்திருக்கக் கூடியதான நீர் முறைமை திட்டங்களை உருவாக்க வேண்டும் 

 

நீர் தேவையை முகமூடியாக வைத்து கொண்டு NGO களுக்காக அரசியல் செய்ய வேண்டியதில்லை .

ஒரு முகநூல் பதிவு: https://www.facebook.com/share/1B9T1RHr9B/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, விசுகு said:

இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும்?

 

(இனமொன்றின் குரல்)

-----------------------------------------------------------------

 

இரணைமடு குளத்துக்கு கீழ் விவசாயம் செய்யக் கூடிய 42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலம் உள்ளது

 

ஆனால் இதில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச கூடிய நிலை தான் இரணைமடுவில் உள்ளது 

 

அதிலும் 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டும் தான் சிறுபோகம் செய்ய கூடியதாக உள்ளது 

 

இது போதாதென்று பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பல பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை 

 

கல்லாறு போன்ற பகுதிகளிலும் கூட குடிநீர் நெருக்கடி தலைவிரித்தாடுகின்றது 

 

அதாவது கிளிநொச்சியில் குடிக்க, விவசாயம் செய்ய போதிதண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு போக போவதாக பல ஆண்டுகளாக அரசியல் செய்கின்றார்கள் 

 

யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் சுண்ணக் கற்பாறைகளில் தேங்கியிருக்கின்ற நீரையே கிணறுகள் வாயிலாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். 

 

இங்கு எந்தப் பகுதியில் கிணறுகள் அமையப் பெற்றிருப்பினும் அப் பகுதிகள் கடலிலிருந்து ஏறக்குறைய 10 Km to 15 Km களை தாண்டிய தூரங்களில் இல்லை.

 

அந்த வகையில் 40 வீதத்திற்கு அதிக யாழ்ப்பாண கிணறுகளில் உவர் நீர் கலந்து காணப்படுகின்றன. 

 

சுண்ணாம்புத் தட்டுகள் கரைந்து கடலுக்குள் செல்வதால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுவதாகவும் மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு சமமான அளவு கடல் நீர் நன்னீருடன் கலக்குகிறது என்றும் சொல்லுகிறார்கள். 

 

இது தொடர்ந்தால் யாழ் குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரையே குடிக்க நேரிடும் என்றும் சில சந்தர்ப்பங்களில்குடாநாடு கடலில் மூழ்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அந்த அபபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள்

 

ஆகவே நன்னீர் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியமானது 

 

ஆனால் இதற்கு இரணைமடு நீர் வேண்டும் என யாரும் கேட்கவில்லை 

 

இங்கே நிலாவரைக் கிணறு, குரும்பசிட்டி கிணறு, புன்னாலைக்கட்டுவன் கிணறு, கீரிமலை கேணி, அல்வாய் குளம், கரவெட்டி குளக் கிணறு, ஊறணிப் பகுதி கிணறுகள், யமுனா ஏரி ஆகிய நீர் நிலைகள் ஊடக குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்பது தொடர்பில் கண்டறிய வேண்டும்

 

அதே போல நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் போதிய உவர் நீர்த் தடுப்பு அணைகள் ஏற்படுத்த பட வேண்டும். 

 

நிலக்கீழ் நீரைக் கடலில் சேர்க்கும் குகை வழிகளை அடையாளம் கண்டு நிலக்கீழ் அணைகள் அமைக்கப்பட் டு தடுக்கின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

 

யாழ்ப்பாணத்தின் 1,050 குளங்களும் ஆழமாக்கப்பட்டு புனரமைப்புகளுக்கு உட்படுத்த பட வேண்டும்

 

ஆனால் குளங்களைத் தரைக்கீழ் நீர்ப் பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க அனுமதிக்க கூடாது 

 

ஆனையிறவு கடல் நீரேரி, தொண்டைமானாறு கடல் நீரேரி, உப்பாறுஉட்பட்ட நீரேரிகளை நன்னீராக்குகின்ற செயற்திட்டங்கள் மூலம் யாழ்ப்பாணத்தின் நிலக்கீழ் நீர்வள சேமிப்பை அதிகரிக்க முடியும் .

 

 அதே போல மண்டதீவையும் வேலணையையும் பிரிக்கின்ற கடல் நீரேரியை இலகுவாகவே நன்னீர் ஏரியாக்க முடியும். 

 

பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலமாக நகரத்தின் தென் மேற்குப் பகுதியில் விசாலமானதொரு நன்னீர்த் தேக்கத்தை உருவாக்க முடியும்.

 

உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகளை இணைத்து மேம்படுத்துவதன் ஊடாக ஆணையிறவு முதற்கொண்டு அரியாலை வரையிலான சுமார் 170 சதுர கிலோ மீற்றர் கொண்ட மிகப் பாரிய நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும்.

 

அதே போல வழுக்கியாறு வடிநிலத்திலும் கல்லுண்டாய் வெளியிலும் தீவகப் பகுதிகளிலும் பல நீர் சேமிப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

 

அதே போல யாழ்ப்பாணம் வருடம் ஒன்றுக்கு 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை வீழ்ச்சி பெறுகின்றது 

 

இந்த மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் முயல வேண்டும்

 

குறிப்பாக நிலாவரை கிணற்றில் 10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை இருப்பதாக சொல்லுகிறார்கள். 

 

ஆகவே மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த முடியும் . இதன் மூலம் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்க்கூடியதாக இருக்கும் .

 

இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாசன முறைமைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் 

 

மேற்படி விடயங்களை தவிர்த்து விட்டு இரணைமடுவில் தொங்கி கொண்டு இருக்க வேண்டியதில்லை 

 

இது போதாதென்று இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது. 

 

இரணைமடு தான் தீர்வென்றால் மேற்படி வரட்சியின்போது நீருக்கு யாழ்ப்பாணம் எங்கே போக முடியும்

 

யாழ்ப்பாண குடிநீரின் அளவு 50,000 கனமீற்றர்/நாள் என சொல்லப்படுகின்றது 

 

இது எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கக்கூடும்.

 

இந்நிலையில் நீண்டகாலத்திற்கான தேவையை நிறைவு செய்வதனையும் நிலைத்திருக்கக் கூடியதான நீர் முறைமை திட்டங்களை உருவாக்க வேண்டும் 

 

நீர் தேவையை முகமூடியாக வைத்து கொண்டு NGO களுக்காக அரசியல் செய்ய வேண்டியதில்லை .

ஒரு முகநூல் பதிவு: https://www.facebook.com/share/1B9T1RHr9B/

மேற்கண்ட நன்னீர் சேகரிப்புகளையும்,குளங்களை  ஆழமாக்குதலையும் செய்தாலே இரணைமடுக்குள அரசியல் தேவையும் இல்லை அந்த குள தண்ணீரும் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

75 வருடங்களாக அதாவது மூன்று நான்கு தலைமுறைகளாக இன முரண்பாட்டை மட்டுமே  வைத்து (அதை கூட  தீர்கக வக்கற்று)  மக்களை உசுப்பேற்றி அரசியல் செய்து சுகம் கண்ட  கூட்டத்திற்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்பதை உணர வைத்ததற்கு அர்சனாவின் வருகை ஒரு தூண்டுதற்புள்ளியாக அமைந்துள்ளது மகிழ்சசியே.

ஆனால் அதை தனது சுயவிளம்பரத்துக்காகவும் ஷோ காட்டுவதற்குப்  அர்சனா பாவிக்க முயலாமல் சமூக பொறுப்புடன் செயற்படவேண்டும்.  இவ்வாறான பொறுப்புணர்வுடன் ஏற்கனவே இருப்பவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தான் கூறுவதை சாதிக்க முடியும் என்பதை அர்ச்சனா உணரவேண்டும். அதை விடுத்து தான் மட்டும் தான் புனிதர் என்றும் மற்றயவர்வர்கள் எல்லாம் திருடர்கள், தகுதியற்றவர்கள் என்பது போல் கற்பிதம் செய்யும்  செய்யும் அவரது அரசியல்  அவரது போக்கினால் அவர் அரசியலில் ஜொலிக்கலாம்,  ஆனால் அவர் செய்ய விரும்புவதாக கூறுவதைக்  செய்ய முடியாது.   

மக்கள் பிரச்சனைகளை பேசும்,  புதிய நம்பிக்கை ஊட்டும் இவ்வாறான  அரசியல் கலாச்சாரம் என்பது  என்பிபி  கட்சியை மக்கள் நேரடியாக ஆதரித்து வெற்றி பெற செய்ததன்  விளைவே என்பதையும் மறுக்க முடியாது.  மக்கள் பிரச்சனைகளை பேசாமல் வெறும் தேசியம், அரசியல் தீர்வு என்று வெத்துவெட்டு வீர அரசியலை  இனி   செய்ய முடியாது என்பதை மக்கள் புரியவைத்துள்ளது சிறந்த விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அருச்சுனா மீது இவ்வளவு criticism வைக்கும் நாங்கள் , ஏன் கடந்த காலங்களில் மற்றைய அரசியல்வாதிகளை சீண்டவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தற்போதைய நீர் நெருக்கடி மற்றும் அதன் காரணங்கள் 1. மேற்பரப்பு நீரைப்போல, நிலத்தடி நீரைப்பயன்படுத்தவும் கவனமான மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடுகள் தேவை. 2. நகர்ப்புற, தொழிற்சாலை, சுற்றுலா மற்றும் பிற அபிவிருத்திகள் இந்த மூலத்தை அதிகப்படியாகப் பயன்படுத்துகின்றன. 3.தற்போது, குழாய் கிணறுகளை துவாரம் செய்வதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை, மற்றும் அவற்றின் தாக்கத்தை கண்காணித்து மதிப்பீடு செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. 4. அத்துமீறி துவாரம் செய்யப்பட்ட உழவர் கிணறுகள் காரணமாக நிலத்தடி நீர் உப்புத்தன்மை அதிகமாகிவிட்டது. 5. மேலே குறிக்கப்பட்டுள்ளவைகளை ஆராய்ந்து நீர் வளங்கள் பாதுகாக்கவும், சுத்திகரிக்கவும், பேணவும் கொள்கைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம் நீர் நெருக்கடியின் தற்போதைய நிலை யாழ்ப்பாணத்தின் நீர் நெருக்கடி குடிநீர், தேவை மற்றும் கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றிற்காக ஒரே நிலத்தடி நீரை மிக அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. தேவை பரவலாக விரிவடைவதும், நகர்ப்புறமயமாக்கலும், பெற்றோலிய கழிவுகளும் நிலத்தடி நீரை மேலும் மாசுபடுத்தியுள்ளன. தற்போதைய பிரச்சினைகள்: 1. உப்பு நீரின் உள்வாங்குதல் அதிகமான வெளிப்படைவிலிருந்து, 2. உரங்கள் மற்றும் பூச்சி நாசினி மூலம் மாசுபடுத்தல், 3. பெற்றோலிய தயாரிப்புகள் மூலம் மாசுபடுத்தல், 4. தவறான கழிவுநீர் மேலாண்மை. யாழ்ப்பாணத்தின் நீர் நெருக்கடி சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான பிரச்சினையாகும். நிலையான நீர் மேலாண்மையை உறுதி செய்யவும், பிராந்தியத்தின் நீர் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்யவும், சமூக பங்கேற்பு, மூலோபாய கொள்கை அமலாக்கம் மற்றும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தீர்வுகள் ஒருங்கிணைந்த விரிவான அணுகுமுறையை எடுப்பது அவசியமாகும்.யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கீழே குறிப்பிட்டவைகளைக் குறிக்கலாம்: 1. சுமார் 60% நீர் தேவையை உள்ளமைந்த மேற்பரப்பு நீர்ப்பாசனத் திட்டங்களிலிருந்து, (50% தற்போதைய இரணைமடு போன்ற திட்டங்களிலிருந்தும், 10% புதிய அல்லது மாற்று பாலி ஆறு போன்ற திட்டங்களிலிருந்தும்). 2. சுமார் 15% நீர் தேவையை கடல்நீர் மாற்று ஒஸ்மோசிஸிலிருந்து (Reverse Osmosis), முக்கியமாக வறட்சிகாலங்களில்மட்டும். 3. சுமார் 10% நிலத்தடி நீரிலிருந்து. 4. சுமார் 15% நீர் தேவையை யாழ்ப்பாணம் நதி, தொண்டமான் களப்புத் திட்டம், மாற்றியமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு ஆறு, மற்றும் யாழ்ப்பாணக் கால்வாய் கருத்து (ஆஸ்திரேலிய பொறியாளர்களால் விவாதிக்கப்பட்டது). பரிந்துரை மற்றும் முடிவு இரணைமடுவில்இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளையில், கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது மருதங்கேணியில்உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நீரைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே நெல் சாகுபடி எந்த வகையிலும்பாதிக்கப்படாது. எங்களுடைய சொந்த வளங்களில் இருந்து சொந்த மக்களுக்கு நாமே தண்ணீரைப் பெற்றுக்கொள்வதால், மகாவலியில் இருந்து தண்ணீர் வர வேண்டிய அவசியமில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.