Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

நாடளாவிய பொருளாதார மையங்களில், பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோக்கு 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்த நிலையில், நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று, ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பல சில்லறை விற்பனைக் கடைகளில், 100 கிராம் பச்சை மிளகாயின் விலை 120 ரூபாயிலிருந்து 150 ரூபாயினால் விற்கப்படுகிறது.

https://jettamil.com/the-price-of-green-chilies-has-reached-its-peak

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, Jet Tamil said:

நாடளாவிய பொருளாதார மையங்களில், பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோக்கு 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்த நிலையில், நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று, ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பல சில்லறை விற்பனைக் கடைகளில், 100 கிராம் பச்சை மிளகாயின் விலை 120 ரூபாயிலிருந்து 150 ரூபாயினால் விற்கப்படுகிறது.

https://jettamil.com/the-price-of-green-chilies-has-reached-its-peak

தோட்டம் செய்யிறது மரியாதை இல்லை எண்டதுக்கு நல்ல பரிசு.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

தோட்டம் செய்யிறது மரியாதை இல்லை எண்டதுக்கு நல்ல பரிசு.

தமிழருக்கு எதிரான யுத்தம் காரணமாய் அந்த தீவு பல கடுமையான உழைப்பாளிகளை இழந்து விட்டது மேலும் இழந்து கொண்டு இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தோட்டம் செய்யிறது மரியாதை இல்லை எண்டதுக்கு நல்ல பரிசு.

அதுமட்டுமில்லை சாமியார், சாதாரணமாக இந்த கால பருவத்தில் மரக்கறி, வெங்காயம், மிளகாய் பரவலாக விலை உயர்ந்துதான் இருக்கும். போன வருடம் இதே போன்று பச்சை மிளகாய் ஆயிரம் ரூபா விலைபோனது. மழைக்காலம், மேட்டுநில உற்பத்திகளே வரும். இந்த முறை அளவுக்கதிகமான மழை, காற்று, மேட்டுநில உற்பத்திகளும் பாதிப்படைந்து உள்ளது. இப்போ விவசாயம் செய்வது கொஞ்சம் கஸ்ரம். பசளை, கூலி, எரிபொருள் கொடுத்து செய்வது கட்டுப்படியாவதில்லை. மக்கள் விவசாயம் செய்ய பின்னடிப்பதற்கு இதுவும் காரணிகள். முன்பெல்லாம் உயர் படிப்பு படிக்க முடியாதவர்கள் விவசாயத்தில் இறங்கி விடுவார்கள். இப்போ வெளிநாடு போக வேணும். அந்தரத்தில் அந்நிய தேசத்தில் அந்தரிகிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, satan said:

அதுமட்டுமில்லை சாமியார், சாதாரணமாக இந்த கால பருவத்தில் மரக்கறி, வெங்காயம், மிளகாய் பரவலாக விலை உயர்ந்துதான் இருக்கும். போன வருடம் இதே போன்று பச்சை மிளகாய் ஆயிரம் ரூபா விலைபோனது. மழைக்காலம், மேட்டுநில உற்பத்திகளே வரும். இந்த முறை அளவுக்கதிகமான மழை, காற்று, மேட்டுநில உற்பத்திகளும் பாதிப்படைந்து உள்ளது. இப்போ விவசாயம் செய்வது கொஞ்சம் கஸ்ரம். பசளை, கூலி, எரிபொருள் கொடுத்து செய்வது கட்டுப்படியாவதில்லை. மக்கள் விவசாயம் செய்ய பின்னடிப்பதற்கு இதுவும் காரணிகள். முன்பெல்லாம் உயர் படிப்பு படிக்க முடியாதவர்கள் விவசாயத்தில் இறங்கி விடுவார்கள். இப்போ வெளிநாடு போக வேணும். அந்தரத்தில் அந்நிய தேசத்தில் அந்தரிகிறார்கள். 

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சொந்த தேவைகளுக்கு இயற்கை முறையிலையே வீட்டுத்தோட்டங்கள் மாதிரியாவது செய்யலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சொந்த தேவைகளுக்கு இயற்கை முறையிலையே வீட்டுத்தோட்டங்கள் மாதிரியாவது செய்யலாம் என நினைக்கிறேன்.

அநேகமாக, மாரி காலத்தில்  தோட்ட வயல்களெல்லாம் நீரில் மிதந்துவிடும். மேட்டுக்காணிகள், வீட்டுத்தோட்டங்களில் இருந்தே இவைகள் சந்தைக்கு எடுத்து வருவார்கள். இப்போ வீடுகளுக்குள் வீடு, அதைவிட பாரிய வெள்ளம் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய நிலை. தோட்டக்காரர் சிலவேளைகளில் அதிக லாபம் எடுத்தாலும், பலவேளைகளில் பருவம் பிந்திய முந்திய மழை, வறட்சி அவர்களை நிலையான சந்தோஷத்தில் இருக்க விடுவதில்லை. இயற்கையால் அதிக அழிவுகளை சந்திப்பவர்கள் விவசாயிகளே!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, satan said:

அநேகமாக, மாரி காலத்தில்  தோட்ட வயல்களெல்லாம் நீரில் மிதந்துவிடும். மேட்டுக்காணிகள், வீட்டுத்தோட்டங்களில் இருந்தே இவைகள் சந்தைக்கு எடுத்து வருவார்கள். இப்போ வீடுகளுக்குள் வீடு, அதைவிட பாரிய வெள்ளம் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய நிலை. தோட்டக்காரர் சிலவேளைகளில் அதிக லாபம் எடுத்தாலும், பலவேளைகளில் பருவம் பிந்திய முந்திய மழை, வறட்சி அவர்களை நிலையான சந்தோஷத்தில் இருக்க விடுவதில்லை. இயற்கையால் அதிக அழிவுகளை சந்திப்பவர்கள் விவசாயிகளே!  

Feelings Vadivelu GIF - Feelings Vadivelu - Discover & Share GIFs | Comedy  pictures, Comedy actors, Vadivelu memes

எந்தப்பக்கம் போனாலும் வளைச்சு வளைச்சு அடிக்கிறானுகள்....😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

Feelings Vadivelu GIF - Feelings Vadivelu - Discover & Share GIFs | Comedy  pictures, Comedy actors, Vadivelu memes

எந்தப்பக்கம் போனாலும் வளைச்சு வளைச்சு அடிக்கிறானுகள்....😂

😂

சாடியில் பூ கன்று வளர்ப்பதிற்கு பதில் மிளகாய் கன்று களை வளர்க்களாம்

  • கருத்துக்கள உறவுகள்

போன (2024) ஆடியில்  இஞ்சியை காணவும் கிடைப்பதில்லை என்ற நிலை இருந்தது.

uk இல் இருந்து சென்ற எனது உறவினர், அவர் இலங்கைக்கு வெளிக்கிட  முதல் நாள் தொலைபேசியில் அழைப்புப்பு வந்து, பொதிகளின் நிறையை மிகவும் குறைத்து, அந்த நிறைக்கு நான் நினைக்கிறன் 8-10 kg இஞ்சி uk இருந்து வாங்கி சென்றார்.  

அவரிடம் நான் சொல்லி அனுப்பினேன், உங்கள் கைப்பையில் 1 kg வரை கொண்டு போய்க்கொடுங்கள், நீஙக்ள் கொண்டு போன இஞ்சியை பாவிக்க  தொடங்க முதல் , அந்தக கைப்பையில் இருக்கும் இஞ்சியை விளைவுக்கு விதைக்குமாறு. 

அனால், அங்குள்ளவர்கள் அப்படி வீட்டில் விளைவிக்க விரும்பவில்லை  (ஏனெனில் பஞ்சி?)

 

59 minutes ago, உடையார் said:

சாடியில் பூ கன்று வளர்ப்பதிற்கு பதில் மிளகாய் கன்று களை வளர்க்களாம்

எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?

அங்கெ இருப்பவர்கள், யன்னலை திறப்பதில்லை நுளம்பு வந்து விடும் என்று.

பயன்தரு மரங்கள், செடிகள் (வாடகை வீடு என்றாலும்) தறிக்கிறார்கள், குப்பை வருகிறது என்று, அதை கூட்ட  வேண்டும் என்றும்.  

இப்படி போய்ட்டு வந்தவர் சொன்ன வினோதங்கள் பல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

😂

சாடியில் பூ கன்று வளர்ப்பதிற்கு பதில் மிளகாய் கன்று களை வளர்க்களாம்

70களில் சிறிமாவின் காலத்தில் நடந்தது தானே.

வெளிக்கிடடா விசுவமடுவுக்கு என்று கிளிநொச்சி நோக்கி படையெடுத்த காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

70களில் சிறிமாவின் காலத்தில் நடந்தது தானே.

வெளிக்கிடடா விசுவமடுவுக்கு என்று கிளிநொச்சி நோக்கி படையெடுத்த காலம்.

இந்தக் காலம் பசுமையான நிகழ்வு..அண்ணன்மார் விசுவமடுவில் இருந்தவை ...வரும்போது..சவுதியில் இருந்து வாறவை தோற்றினம்...அவ்வளவு செல்வாக்கா வருவினம் ..நமக்கு விசுவமடுதான் ...வெளிநாடுபோல் தெரியும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

70களில் சிறிமாவின் காலத்தில் நடந்தது தானே.

வெளிக்கிடடா விசுவமடுவுக்கு என்று கிளிநொச்சி நோக்கி படையெடுத்த காலம்.

6 hours ago, alvayan said:

இந்தக் காலம் பசுமையான நிகழ்வு..அண்ணன்மார் விசுவமடுவில் இருந்தவை ...வரும்போது..சவுதியில் இருந்து வாறவை தோற்றினம்...அவ்வளவு செல்வாக்கா வருவினம் ..நமக்கு விசுவமடுதான் ...வெளிநாடுபோல் தெரியும்..

 

தோட்டம் செய்யிறது அருமையான வேலை. மனதுக்கு சந்தோசம் தரக்கூடியது. ஒவ்வொரு பயிரும் வளர்ந்து வரும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.மழை,வெய்யில்,லீவு நாட்கள் ஏதுமில்லாத வேலை என்றாலும் யாருக்கும் அடிமை இல்லாத தொழில் அது.யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.தானதர்மம் செய்வதிலும் தோட்டக்காரனை மிஞ்ச ஆட்கள் இல்லை.

 தோட்டம் என்றால்..... ஐ மீன் மை கார்,மை பெற்றோல், மை றோட்டு சிஷ்ரம் அது. அனுபவிச்சவனுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

😂

சாடியில் பூ கன்று வளர்ப்பதிற்கு பதில் மிளகாய் கன்று களை வளர்க்களாம்

இப்போ, பல வீடுகளில் சாமிக்கு வைக்கவே பூ இல்லை. ஒவ்வொரு சமையல் செடி இளித்துக்கொண்டு நிக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, satan said:

இப்போ, பல வீடுகளில் சாமிக்கு வைக்கவே பூ இல்லை. ஒவ்வொரு சமையல் செடி இளித்துக்கொண்டு நிக்குது.

வடிவுக்கு வைச்சதையெல்லாம் சாத்ஸ் மரக்கறி தோட்டம் எண்டு நம்பிக்கொண்டு....:483:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தானதர்மம் செய்வதிலும் தோட்டக்காரனை மிஞ்ச ஆட்கள் இல்லை.

உண்மைதான் சாமியார். எங்கேயாவது இயற்கை அழிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்தால், எங்கட சனம் வண்டிலிலை வெங்காயம், மிளகாய், அது இதென்று கொண்டுவந்து குவிச்சுப்போடும். காசு, உடை கொடுப்போர் சிலராகத்தான் இருப்பர். யாராவது வீட்டுக்கு வந்தால் அவர்கள் போகும்போது இவற்றை கட்டியனுப்புவர். தாங்கள் உறவினர்களை சந்திக்கபோனாலும் இதே நிலைமைதான். ஞாபகம் வருதே....   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.