Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். .

"விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம்" என்று எம்.பி. ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilmirror Online || ”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்”

  • கருத்துக்கள உறவுகள்

போரின் முடிவில் தமிழருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்திருந்தால்…

நோபல் பரிசும் கிடைத்திருக்கலாம்.

நாடும் வளம் பெற்றிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

போரின் முடிவில் தமிழருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்திருந்தால்…

நோபல் பரிசும் கிடைத்திருக்கலாம்.

நாடும் வளம் பெற்றிருக்கும். 

உது கொஞ்சம் ஒவர்...நோபல் பரிசை கொடுத்து போட்டு , பிறகு மேற்கும்,இந்தியாவும் ,அமேரிக்காவும் எப்படி சிறிலங்காவை அடிபணிய வைப்பது ....நோர்வே மேற்கின் சகுணி ஏஜன்ட் எனப்து யாவரும் அறிந்தது ...மகிந்தா கோஸ்டிக்கு தெரியாது என்றால் நாம் என்ன செய்வது
அடுத்த ஜனாதிபதியாக நீங்க்ள் வந்து நோர்வே யூடாக சிறிலங்காவை அமெரிக்காவுக்கு எழிதி கொடுத்தால் உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம் கிடைக்கும்..
 

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராகவுள்ளோம் ; நாமல் ராஜபக்ஷ

29 JAN, 2025 | 09:06 AM
image
 

(இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் அமைப்புடன் ஒப்பந்தம் செய்திருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். சவால்களை கண்டு அச்சமடைவதாயின் விடுதலை புலிகளுடன் மோதியிருக்கமாட்டோம். 

இதன் தாக்கம் எமக்கும், எமது பிள்ளைகளுக்கும் செல்வாக்கு செலுத்தும் என்பதை நன்கு அறிவோம். அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28)  ' ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் ஒன்றியம்' கிளை அலுவலகம் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015 ஆம் ஆண்டு தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சியினால் தோற்கடிக்கப்பட்டோம். தோல்வியை கண்டு நாங்கள் ஒருபோதும் தளர்வடையவில்லை.  2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மீண்டும் எழுச்சிப் பெற்றோம். 

2019 கொவிட் பெருந்தொற்றுத் தாக்கம் மற்றும் பொருளாதார தாக்கம் உள்ளிட்ட காரணிகளால் மீண்டும் நெருக்கடிக்குள்ளானோம். 

69 இலட்ச மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆகவே மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.

மக்களின் அடிப்படை பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்துக்கு நேரமில்லை. ஏனெனில் எவ்வாறு அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கலாம் என்பதற்கு இரவு வேளைகளில்  ஒன்று கூடி பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம். வேட்புமனுத்தாக்கலுக்கான பணிகள் மற்றும் நேர்காணலை எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுப்போம்.2018 ஆம் ஆண்டை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இருந்து எமது எழுச்சியை ஆரம்பிப்போம்.

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்கு அச்சமடைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியாது என்று பல அரச தலைவர்கள் பின்வாங்கிய போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்காக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

ஏனைய அரச தலைவர்களை போன்று விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்திருந்தால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிந்திருந்தார். அந்த சவால்களை நாங்களும் எதிர்கொண்டுள்ளோம். 

எமது பிள்ளைகளுக்கும் அதன் தாக்கம் செல்வாக்கு செலுத்தும். யுத்தம் முடிவடைந்தாலும் அதன் கொள்கை இன்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளது. 

இவ்வாறான நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு அவர்களை அரச உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். 

https://www.virakesari.lk/article/205148

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஏராளன் said:

69 இலட்ச மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆகவே மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.

உங்களின் குடும்ப ஆட்சியால் ஏமாற்றமடைந்த மக்களே அனுராவை தேர்ந்தெடுத்தனர். ஆகவே அவர்கள் சார்பாக கோரிக்கை வைப்பதற்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள். நாங்கள் ஊழல் செய்திருந்தால் நிரூபியுங்கள் என்று சவால் விட்ட இவர், இப்போ தம்பியை கைது செய்தவுடன், எங்களை கைதுசெய்தால் பொருட்கள் விலையேறுமென பயமுறுத்துகிறார். தந்தையாரோ, எப்போ அரசாங்க வாசஸ்தலத்தை விட்டு நான் வெளியேறவேண்டுமென நேரடியாக எனக்கு அறியத்தாருங்கள், நான் வெளியேறி விடுகிறேன் என கோரிக்கை வைக்கிறார். சரியான நகர்வை நோக்கி பயணிக்கிறாரோ அநுர? தேர்ந்தெடுத்த மக்களே விரட்டி விட்டார்கள், தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்குபோடுவதை நிறுத்திவிட்டார்கள், தொடர்ந்து சிங்கள மக்களும் கைவிட்டுவிட்டார்கள். இவர்கள் இப்போதும் புலிகளை மறக்கமுடியாமல் நோபல் பரிசு எதிர்பார்ப்பில். அரசியல் அரை விசர்களுக்கு மக்களின் நிராகரிப்பு, முழு விசராக்கிவிட்டது போலிருக்கிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அரசியல் அரை விசர்களுக்கு மக்களின் நிராகரிப்பு, முழு விசராக்கிவிட்டது போலிருக்கிறது.   

large.IMG_8082.jpeg.01cb427d4a4c32565ef4

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

உது கொஞ்சம் ஒவர்...நோபல் பரிசை கொடுத்து போட்டு , பிறகு மேற்கும்,இந்தியாவும் ,அமேரிக்காவும் எப்படி சிறிலங்காவை அடிபணிய வைப்பது ....நோர்வே மேற்கின் சகுணி ஏஜன்ட் எனப்து யாவரும் அறிந்தது ...மகிந்தா கோஸ்டிக்கு தெரியாது என்றால் நாம் என்ன செய்வது
அடுத்த ஜனாதிபதியாக நீங்க்ள் வந்து நோர்வே யூடாக சிறிலங்காவை அமெரிக்காவுக்கு எழிதி கொடுத்தால் உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம் கிடைக்கும்..
 

நான் ரெடி…ஏற்பாடுகளை தொடங்குங்கோ….🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, goshan_che said:

போரின் முடிவில் தமிழருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்திருந்தால்…

நோபல் பரிசும் கிடைத்திருக்கலாம்.

நாடும் வளம் பெற்றிருக்கும். 

அமைதிக்கான நோபல் பரிசுவின் மதிப்பு அவ்வளவுதான்.....
பலஸ்தீன விடுதலைக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசின் நிகழ்வுகள் ஞாபமிருக்கா?
நோபல் பரிசு கிடைத்த மண்ணின் நிலைய பார்க்க வயிறு பத்தி எரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அமைதிக்கான நோபல் பரிசுவின் மதிப்பு அவ்வளவுதான்.....
பலஸ்தீன விடுதலைக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசின் நிகழ்வுகள் ஞாபமிருக்கா?
நோபல் பரிசு கிடைத்த மண்ணின் நிலைய பார்க்க வயிறு பத்தி எரியுது.

அப்போ கொடுக்கப்பட்டது சரிதான்.

அதன் பின்னால் நடந்தவை மோசமானவை. 

ராபின்கள் மேலும் இஸ்ரேலில் வந்திருந்தால், ஹமாசை பலஸ்தீனர் ஒதுக்கி இருந்தால் வரலாறு மாறி இருக்கலாம்.

ஒபாமாவுக்கு கொடுத்ததுதான் கேலிகூத்து.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அமைதிக்கான நோபல் பரிசுவின் மதிப்பு அவ்வளவுதான்.....
பலஸ்தீன விடுதலைக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசின் நிகழ்வுகள் ஞாபமிருக்கா?
நோபல் பரிசு கிடைத்த மண்ணின் நிலைய பார்க்க வயிறு பத்தி எரியுது.

அகன்ற இஸ்ரேல் என்ற இஸ்ரேலியர்கள்,அமெரிக்கர்களின் கொள்கை வெற்றி பெற கொடுக்கப்பட்டது அராபத்துக்கு ...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அப்போ கொடுக்கப்பட்டது சரிதான்.

அதன் பின்னால் நடந்தவை மோசமானவை. 

ராபின்கள் மேலும் இஸ்ரேலில் வந்திருந்தால், ஹமாசை பலஸ்தீனர் ஒதுக்கி இருந்தால் வரலாறு மாறி இருக்கலாம்.

ஒபாமாவுக்கு கொடுத்ததுதான் கேலிகூத்து.

இதைப் பற்றி ஒபாமாவே தனது சுய சரிதையில் எழுதியுள்ளார். தனக்கு ஏன் நோபல் பரிசு தந்தார்கள் என்று விளங்கவில்லை என்று கூறியுள்ளார். மனைவியிடமும் காரணம் உனக்காவது தெரியுமா என்றும் கேட்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.