Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண் கண்ட தெய்வம்
----------------------------------

large.APriest.jpg

வரிசை நீண்டு உள் வாசலைத் தாண்டி வெளிவரை வந்திருந்தது. நான் வருவதற்கு கொஞ்சம் சுணங்கிவிட்டது. வேறு வழி இல்லை, இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, வரிசையில் நின்று கடமையை முடித்து விட்டே போவோம் என்று வரிசையின் முடிவில் நின்றேன். வீட்டுக்கு போய் செய்வதற்கும் வேலைகள் என்றும் ஏதும் இல்லை. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு அலைவரிசையில் முன்னரே பார்த்த, பிடித்த படம் ஏதாவது ஓடினால், அதை மீண்டும் பார்க்கலாம், அவ்வளவுதான். இப்பொழுது எல்லாம் புதிதாக எந்தப் படத்தையும் பார்ப்பதற்கு பொறுமை இல்லை.

மனைவி இருந்திருந்தால் சிவராத்திரிக்கு எப்போதோ கோவிலுக்கு வந்திருப்பார். பின்னர் 'நீங்கள் இப்ப வரலாம்...........' என்று ஒரு செய்தியை கோவிலில் இருந்து சரியான நேரத்துக்கு அனுப்பியிருப்பார். வீட்டிலிருந்து ஒரு பதினைந்து நிமிட நேர தூரத்தில் தான் கோவில் இருக்கின்றது. ஒரு இருபத்து ஐந்து வருடங்களின் முன் இது ஒரு தேவாலயமாக இருந்தது. இப்பொழுது கூட கோவிலின் கூரைக்கு மேலால் நீண்டு நிற்கும் ஒரு மெல்லிய நீண்ட கூம்பு வடிவிலான தேவாலயக் கோபுரத்தை பார்க்கலாம். அன்று இங்கு வர்த்தகம் செய்து வசதியாக இருக்கும் குஜராத் மக்கள் இந்த இடத்தை தேவாலயத்துடன் சேர்த்து வாங்கினார்கள். தேவாலயத்தில் சில மாற்றங்களை செய்து அதை ஒரு கோவிலாக மாற்றினார்கள். அதன் அருகிலேயே இன்னொரு பெரிய கோவிலையும், குஜராத் முறைப்படி, கட்டினார்கள். அதை மந்திர் என்று சொல்லுகின்றார்கள்.

சிவபெருமான், அம்மன், பிள்ளையார், முருகன் என்று தென்னிந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களை பழைய கோவிலும், புதிய கோவிலில் வட இந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களையும் வைத்தார்கள். ஒரே ஒரு தடவை இந்த மந்திருக்குள் போயிருக்கின்றேன். அது ஒரு அயலவரின் மகனின் திருமண நிகழ்வு. அவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் தான். மந்திருக்குள் சுவாமியின் முன் பெண்கள் அரைவட்ட வரிசைகளில் அமர்ந்து இருந்தார்கள். அதன் பின் ஒரு சின்ன இடைவெளி விட்டு ஆண்கள் அமர்ந்து இருந்தார்கள். எப்பவுமே, நித்திய பூசையில் கூட, இப்படித்தான் இருப்பார்களாம். பெண்களுக்கும், ஆண்களுக்கும் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன். எங்கே போனாலும் பின்னுக்கு நிற்பது அல்லது இருப்பது என்பது சௌகரியமாக இருக்கின்றது. பின் வரிசைக்கு பின்னால் இருந்து எவரும் கவனிக்காமல் இருப்பது ஒரு சுதந்திரமான உணர்வைக் கொடுக்கின்றது போல.

தென்னிந்தியக் கடவுள்கள் இருக்கும் கோவிலில் ஆரம்பத்தில் ஒரு வட இந்தியரே பூசை வைத்தார். அப்பொழுதெல்லாம் இங்கு இந்தியர்கள் வெகு குறைவு. ஒரு சிலர் மட்டுமே கோவிலுக்கு வந்து போவார்கள். என்னுடைய மனைவி மிகவும் ஒழுங்காகப் போய் வருவார். அங்கிருந்த கடவுள்களுக்கு அந்த வட இந்திய பூசகருக்கு அடுத்தபடியாக மிகவும் பழக்கமானவர் என் மனைவியே. விசேட நாட்களில் மட்டும் என்னை கோவிலுக்கு வரச் சொல்லுவார். அதுவும் ஒரு குறுகிய நேரத்துக்கு மட்டுமே. இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் முட்டி மோதிக்கொண்டதில்லை. 

பின்னர் ஒரு தமிழ் பூசகர் தென்னிந்தியாவில் இருந்து வந்தார். தமிழ் தான் அவருடைய மொழி என்றாலும் வேறு பல மொழிகளும் கதைப்பார். ஆங்கிலத்தைக் கூட தமிழ் போன்ற ஒரு உச்சரிப்பு மற்றும் நிறுத்தங்களுடன் தயக்கமில்லாமல் நீட்டாக கதைப்பார். நல்ல குரல். அருமையாகப் பாடுவார். எல்லோருக்கும் அவரைப் பிடித்துவிட்டது. அத்துடன் இந்தியர்களும் பெருமளவில் இந்த நாட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். வந்தவர்கள் அப்படியே கோவிலுக்கும் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.

பூசகருக்கு என்னைத் தெரியாது. ஆனால் நான் மனைவியுடன் போவதால், 'சார் வாங்கோ..............சௌக்கியமா.............' என்று நன்றாகப் பழகியவர் போலக் கேட்பார். ஓரிரு தடவைகள் மனைவியினால் போக முடியாத போது, பாலோ பழங்களோ திரவியங்களோ கொடுக்க நான் போயிருக்கின்றேன். பூசகர் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. முதல் தடவை ஏமாற்றமாக இருந்தது. அதன் பின்னர் எதிர்பார்ப்பை மிகவும் குறைத்தே வைத்திருந்தேன்.

மனைவியும், பிள்ளைகளும் இன்னொரு நாட்டிற்கு ஒரு குடும்ப விசேடத்திற்கு போயிருந்தனர். என்னால் போக முடியாத நிலை. தை மாதத்தில் இருந்து சித்திரை நடுப்பகுதி வரை எனக்கு வேலை அதிகம். வேலையில் வேலை இல்லாவிட்டாலும், இந்த நான்கு மாதங்களில் விடுமுறை எடுப்பதை தவிர்க்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். மற்றைய மாதங்களில் முழுச் சுதந்திரமும் இருப்பதால், இது ஒன்றும் அநியாயமாகத் தெரியவில்லை. இதனால் குடும்ப விசேடத்தில் பல வருடங்களின் பின் காணும் சிலரின் 'என்ன, உங்களுக்கு இப்படி வயதாகிப் போட்டுதே.............' என்ற அழகியல் விமர்சனங்களையும் கேட்க முடியாமலும் போய்விட்டது.

வரிசை மெதுமெதுவாக அசைந்தது. நான் கோவிலுக்குள் மண்டபத்துக்குள் வந்திருந்தேன். மண்டபத்தின் நடுவே கொடித்தம்பத்திற்கு அருகில் ஒரு சிவலிங்கத்தை வைத்திருந்தார்கள். அதன் அருகே பால் கலன்கள் பல இருந்தன. இன்று எல்லோருமே பால் கொண்டு வருவார்கள். நான் தனியாக இருப்பதால் பால் கொண்டு வரவில்லை. அடுத்த தடவை ஏதாவது ஒரு காரணம் சொல்லி மனைவியிடம் இரண்டு கலன்களாக கொடுத்து விடுகின்றேன் என்று மனதாரச் சொன்னேன். வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் சிவலிங்கத்திற்கு மூன்று தடவைகள் பாலால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சிவலிங்கத்தை சுற்றிக் கும்பிடுவார்கள். சிலர் அதிக நேரம் எடுப்பார்கள். கூட்டமும் இப்ப மிக அதிகம். அதனால் தான் வரிசை நீண்ட பெரிய மலைப்பாம்பு போல அசைந்து கொண்டிருந்தது.

இங்கு வந்து போவர்களுக்கு பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் நன்றாகவே தெரிந்திருக்கின்றது. மந்திரங்கள் கூட தெரிந்திருக்கின்றது. பூசகருடன் சேர்ந்து வடமொழியில் பலரும் சொல்லுகின்றனர். எனக்கு 'வேதம் புதிது' போன்ற சினிமா படங்களில் வந்த சில வரிகளை மட்டும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. மற்றபடி சமஸ்கிருதத்தின் ஓசை நல்லாவே இருக்கின்றது என்ற ஒரு பொதுப்படையான அபிப்பிராயம் மட்டுமே இருக்கின்றது. 

இரவு முழுவதும் தொடர் பூசைகள், யாகங்கள் என்று ஒரே கூட்டமாக இருக்கும். பல பூசகர்களும் வந்திருந்தனர். வழமையான பூசகர் தான் இன்றும் பெரிய ஆள். மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அவரைச் சுற்றி மற்றைய பூசகர்கள் அமர்ந்து யாகம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே குரலில் மந்திரங்களோ சுலோகங்களோ சொல்லிக் கொண்டிருந்தனர். 

அங்கிருந்த சின்னக் கிண்ணத்தில் பாலை வார்த்து சிவலிங்கத்தின் உச்சியில் விட்டேன். அது சிவலிங்கத்தின் எல்லாப் பக்கங்களிலும் வழிந்து ஓடியது. பளிங்கு கறுப்பில் பால் வடிந்து கோடு கோடாக ஓடுவது அழகாக இருந்தது. குனிந்து மூன்றாவது தடவை கிண்ணத்தில் பாலை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, 'என்ன சார்................ அம்மா எங்கே................' என்றபடியே பூசகர் முன்னுக்கு நின்றார். அம்மா ஊரில் இல்லை என்று தட்டுத்தடுமாறி சொன்னேன். கையில் ஒரு மாலை வைத்திருந்தார். அதை என் கையில் திணித்தார். இதே போன்ற மாலைகளை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் நான் பார்த்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

" நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வாய்க்கால் வழியோடி

புல்லுக்குமாங்கே பொசியுமாம் "

இதுக்குத்தான் காலாகாலத்தில் கலியாணத்தை செய்து துலையுங்கோ என்று பெற்றோர்கள் பொடியலைப் பார்த்துக் கத்துவது . ...... கோவிலுக்கோ , விழாக்களுக்கோ மனிசியோடு போகவில்லையென்றால் கோயில் மாடும் ஆண்களை மதிக்காது . ........ எப்போதும் அவள்தான் 1 (ஒன்று ) பின்னால் வரும் பூஜ்யங்கள்தான் புருசன்மார் . ........! 😂

நல்லாயிருக்கு கதை ரசோ .......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

" நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வாய்க்கால் வழியோடி

புல்லுக்குமாங்கே பொசியுமாம் "

இதுக்குத்தான் காலாகாலத்தில் கலியாணத்தை செய்து துலையுங்கோ என்று பெற்றோர்கள் பொடியலைப் பார்த்துக் கத்துவது . ...... கோவிலுக்கோ , விழாக்களுக்கோ மனிசியோடு போகவில்லையென்றால் கோயில் மாடும் ஆண்களை மதிக்காது . ........ எப்போதும் அவள்தான் 1 (ஒன்று ) பின்னால் வரும் பூஜ்யங்கள்தான் புருசன்மார் . ........! 😂

நல்லாயிருக்கு கதை ரசோ .......!

🤣...............

மிக்க நன்றி சுவி ஐயா.

'கணவனே கண் கண்ட தெய்வம்..........' என்று சொல்லும் ஒரு வழக்கு இருந்தது.............. ஆனால் உண்மையில் யார் தான் கண் கண்ட தெய்வம் என்று கொஞ்சம் வேடிக்கையாக எழுத முயற்சி செய்திருந்தேன்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரம் சுய ஆக்கங்கள் பகுதியில் எதுவும் எழுதவில்லையே என்று அவரசரமாக எழுதிப் போட்டதில், இதே கதையில் பதியப்பட்டிருக்க வேண்டிய ஒரு முக்கிய விடயத்தை எழுத மறந்துவிட்டேன். பின்னர் இதே கதையை எப்போதாவது விரித்து எழுதினால், அப்போது அதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இங்கு ஆரம்பிக்கப்பட்ட கோவில்கள் ஆரம்பத்தில் எவ்வாறு ஒரு சமூக நீதியுள்ள கோவில்களாக இருந்தன என்றும், பின்னர் காலப்போக்கில், மக்கள் திரள் அதிகம் ஆக ஆக, அதே கோவில்கள் ஒரு பிரிவினரால் எப்படி கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் எங்காவது பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்தக் கதை அதற்கு மிகவும் பொருத்தமான இடம்.

இவ்வாறான கோவில்களில் ஏற்பட்ட அதிகார மாற்றத்தால் நடந்த சில சம்பவங்கள் முன்பு ஊரில் நடந்தவற்றுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவை..................🫣.

  • கருத்துக்கள உறவுகள்

ரசோதரன், உங்கள் கதை நடை மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருக்கிறது... கோவிலின் வரலாறு, அதில் நிகழ்ந்த மாற்றங்கள், அதனால் ஏற்பட்ட மனிதர்களின் நிலைமைகள் ஆகியவை மிகவும் நுட்பமாக விரித்துரைக்கப்பட்டுள்ளன... “கணவனே கண் கண்ட தெய்வம்” என்பதைக் கொஞ்சம் வேடிக்கையாக எழுதியிருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள சமூக மாற்றங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகள் ஆழமானவை...

அதுவும், வட இந்தியர்களின் பூர்வீக சம்பிரதாயங்கள் தென்னிந்திய சமூகவுடன் எப்படி கலந்துவிட்டன, அந்த கலவையின் தாக்கங்கள், பூசகர் மரபு, அதில் உள்ள ஆண்கள்-பெண்கள் இடையிலான வேறுபாடுகள் போன்றவை நம் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை கண்கூடாக காட்டுகின்றன... இவை அனைத்தும் வாசகனை சிந்திக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது...

“பண்பாட்டில் மாற்றம் ஏற்படும் போது, சமுதாயத்தில் ஏற்படும் ஆதிக்கங்களும் சமநிலையின்மை உள்ள உரையாடல்களும் தழுவிக்கொள்ளும்” என்பது உங்கள் எழுத்தின் தீம் என்று தோன்றுகிறது... இது விரிவாக எழுதப்பட வேண்டிய தலைப்பு...

//“எங்கே போனாலும் பின்னுக்கு நிற்பது அல்லது இருப்பது என்பது சௌகரியமாக இருக்கின்றது. பின் வரிசைக்கு பின்னால் இருந்து எவரும் கவனிக்காமல் இருப்பது ஒரு சுதந்திரமானஉணர்வைக் கொடுக்கின்றது போல.”//

என் இனம் அண்ணை நீங்கள்.. பிளைட்டில்,றெயினில் கூட பின் வரிசையைத்தான் தெரிவு செய்வேன்.. முன் வரிசையில் இருந்தால் எல்லோரும் என்னைப்பார்ப்பது போலவே நெளிவேன்… பின் இருக்கையில் இருக்கும்போது அவ்வளவு கன்பிடன்ஸ் உம் சுதந்திரமும் வரும்.. சிலவேளை நான் தன்னம்பிக்கை இல்லாதவன் அதனால்தான் இப்படியோ என்று என்மேல் நானே கோபப்பட்டதுண்டு..

தொடர்ந்து எழுதுங்கள், வாசகர்கள் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்..!

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை மனிதர்கள் கோயில்களை கட்டி அங்கே இறைவனை,...கடவுளை இருக்க செய்ய முடியும்… என்றால் மனிதர்கள் கடவுளை விட. சக்திவாய்ந்தவர்கள். தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

என் இனம் அண்ணை நீங்கள்.. பிளைட்டில்,றெயினில் கூட பின் வரிசையைத்தான் தெரிவு செய்வேன்.. முன் வரிசையில் இருந்தால் எல்லோரும் என்னைப்பார்ப்பது போலவே நெளிவேன்… பின் இருக்கையில் இருக்கும்போது அவ்வளவு கன்பிடன்ஸ் உம் சுதந்திரமும் வரும்.. சிலவேளை நான் தன்னம்பிக்கை இல்லாதவன் அதனால்தான் இப்படியோ என்று என்மேல் நானே கோபப்பட்டதுண்டு..

மிக்கநன்றி ஓணாண்டியார்................

நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே. இந்த மாற்றங்களை பதிவு செய்தே ஆகவேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். அத்துடன் இந்த வாரம் யாழில் ஒன்றும் எழுதவில்லையே என்பதும், தனிப்பட்டவகையில், எனக்கு ஒரு குறையாக இருந்தது. அவசர அவசரமாக மிகவும் சுருக்கி எழுதிவிட்டேன் என்று பின்னர் புரிந்தது.........

எங்கேயும் பின்னுக்கு இருக்கும் போது கொஞ்சம் ஒட்டாத தன்மை ஒன்று, விலகி நின்று பார்க்கும் போக்கு ஒன்றும் இருக்கின்றது போல என்று நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்........... சரியாகத் தெரியவில்லை, ஆனால் பிடித்திருக்கின்றது...............🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kandiah57 said:

அருமையான கதை மனிதர்கள் கோயில்களை கட்டி அங்கே இறைவனை,...கடவுளை இருக்க செய்ய முடியும்… என்றால் மனிதர்கள் கடவுளை விட. சக்திவாய்ந்தவர்கள். தான்

மிக்கநன்றி அண்ணா.

மனிதர்களின் சக்தி அளவற்றது தானே, அண்ணா...............🤣.

இங்கு பின்னர் ஒரு இலங்கை தமிழர்களின் கோவிலும் ஆரம்பித்தது. என்னுடைய வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம். என்னுடைய மனைவி அவர் எப்போதும் போகும் பழைய கோவிலுக்கே போய்க் கொண்டிருந்தார். நான் என் வழியில் அவர் பின்னால் போய்க் கொண்டிருந்தேன்.............🤣.

நாங்கள் இலங்கை தமிழர்களின் கோவிலுக்கு போவதில்லை என்று ஒரு சமயம் பிரச்சனையை கிளப்பிவிட்டார்கள். முகத்துக்கு நேரே எவரும் எதுவும் சொல்லவில்லை, ஆனாலும் சிலர் ஒன்றாகக் கூடும் போது, தேவைப்பட்டால் இதையும் கதைத்துக் கொண்டார்கள்.

பின்னர் என்னவோ ஏதோ நடந்து, அவர்கள் இரண்டாக உடைந்தார்கள். இன்னொரு கோவிலை ஆரம்பித்தார்கள். அவர்களின் பூசகர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறினார். இன்னொரு பூசகர் வந்தார். கூட்டம் இரண்டாகியது. ஒரு கூட்டம் மறு கோவிலுக்கு போவதில்லை.

இப்பொழுது அந்த இரண்டு கோவில்களும் மூடப்பட்டு விட்டன என்று சொல்கின்றனர்.

கடவுள்களை உருவாக்கி, பிரித்து, அழிக்கும் மனிதர்களின் சக்தி அளவற்றது தானே...........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

கண் கண்ட தெய்வம்
----------------------------------

large.APriest.jpg

அங்கிருந்த சின்னக் கிண்ணத்தில் பாலை வார்த்து சிவலிங்கத்தின் உச்சியில் விட்டேன். அது சிவலிங்கத்தின் எல்லாப் பக்கங்களிலும் வழிந்து ஓடியது. பளிங்கு கறுப்பில் பால் வடிந்து கோடு கோடாக ஓடுவது அழகாக இருந்தது. குனிந்து மூன்றாவது தடவை கிண்ணத்தில் பாலை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, 'என்ன சார்................ அம்மா எங்கே................' என்றபடியே பூசகர் முன்னுக்கு நின்றார். அம்மா ஊரில் இல்லை என்று தட்டுத்தடுமாறி சொன்னேன். கையில் ஒரு மாலை வைத்திருந்தார். அதை என் கையில் திணித்தார். இதே போன்ற மாலைகளை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் நான் பார்த்திருக்கின்றேன்.

இதுதான் சார் ஹைலைட்...ஆணுக்கு ஒளிகொடுப்பது பெண்...ஒத்துக்கொண்டீர்கள்..நானும் ஒத்துக்கொள்கின்றேன்...சின்ன கிளூ.. கோயில் அய்யருக்கு மட்டுமில்லை..அங்கைவாற அழகான பெண்களுக்கும் நம்மைகாட்டிக் கொடுப்பது நம்ம மனைவியால் மட்டுமே முடியும்..

உங்கள் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் எனது பழைய நினைவுகளை கிளறுகின்றது ..அருமை தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

கடவுள்களை உருவாக்கி, பிரித்து, அழிக்கும் மனிதர்களின் சக்தி அளவற்றது தானே...........🤣.

இதோ பிரச்சனைகள் இங்கேயும் உண்டு” வாழிபட. கோவிலுக்கு போகிறவர்கள். கொஞ்ச நாளில் கோவில் நிர்வாகத்தை கைப்பற்ற பலவித. சூழ்ச்சிகளை செய்வார்கள் எப்படியோ நிர்வாகிகள் ஆகி விடுவார்கள் கடவுள் தான் அருள் வழங்கி இருப்பார் 🤣. எங்கள் பிரச்சனை தீராதற்க்கு இதுவும் ஒரு காரணம் [ கவுன்சிலர். ]நகர முதல்வரிடம். போய் முறையீடு செய்வார்கள் எங்கள் மக்களை பற்றி கோவில் கூட்டம் நடந்தால் ஒரே அடிபாடு தான் நான் கோவில் பக்கமே போவதில்லை திருமண விழாக்கள் நடந்தால் மட்டுமே போவேன் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

எங்கே போனாலும் பின்னுக்கு நிற்பது அல்லது இருப்பது என்பது சௌகரியமாக இருக்கின்றது

சிறு வயதில் இருந்து எனக்கும் உந்தப் பழக்கம் உண்டு. முதலாவதாக வெளியேறுவதற்கு வசதி என்பதால் (escape).

நல்லையா சேர், அடேய் லாஸ்ட் பென்ச் என்று செல்லமாகக் கூப்பிடும் அளவுக்கு அந்த இடத்தைக் கைப்பற்றி இருந்தோம்.

20 hours ago, ரசோதரன் said:

எதிர்பார்ப்பை மிகவும் குறைத்தே வைத்திருந்தேன்

புத்தரின் மொத்த தத்துவத்தையும் ஒரு வசனத்தில் சொல்லிட்டிங்கள்.

கதை சிறப்பாக இருந்தது, ஆனால் என்னவோ ஒன்று குறைவது போல், முடிந்தும் முடியாத போல் ஒரு உணர்வு. அதனாற் தான் கொஞ்சம் பொறுத்துப் பார்த்தேன், பின்னுக்கு ஏதும் சேர்ப்பிங்களோ எண்டு. ஒரு தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை சொல்லி....

இந்த கோயிலுக்கு சென்றிருந்தோம்.

இங்கே இளம் வயதினரை அதிகம் கண்டபோது அது பற்றி விசாரித்தபோது இந்தியாவில் இருந்து படிப்பு விசாவில் வரும் இளசுகளுக்கு இக்கோயிலில் வழங்கப்படும் தொடர் அன்னதானம் பெரிய பேறு என்று சொன்னார்கள். இது சரி என்றால் நீங்கள் சொல்லும் கோயிலும் ஒன்றே. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் சிவலிங்கத்தை கும்பிடுவதை வினோதமாக பார்த்துக் கொண்டிருப்பேன்.

முன்னுக்கிருக்கும் நந்தியின் காதுகள் இரண்டுக்கும் ஊடாக இலக்கு பார்ப்பது போல லிங்கத்தைப் பார்ப்பார்கள்.

நீங்களும் அப்படி பார்க்கிறீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

'என்ன சார்................ அம்மா எங்கே................' என்றபடியே பூசகர் முன்னுக்கு நின்றார். அம்மா ஊரில் இல்லை என்று தட்டுத்தடுமாறி சொன்னேன். கையில் ஒரு மாலை வைத்திருந்தார். அதை என் கையில் திணித்தார். இதே போன்ற மாலைகளை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் நான் பார்த்திருக்கின்றேன்.

பூசகர்கள் சிவனை விட சக்திகளை நன்றாகவே அறிந்திருப்பார்கள் ,சக்திகளும் ஐயா,ஐயா என உரையாடுவதால் நன்றாகவே அறிமுகமானவர்களாக இருப்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

ஒரே அடிபாடு தான்

வேறு பல நாடுகளில் வரும் பிரச்சனைகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன், நீங்கள் சொல்லியிருப்பதைப் போலவே...............

ஆனால் இங்கே லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் நாங்கள் சிலர் மட்டுமே இருந்து கொண்டு, இங்கேயும் அதே பிரச்சனை வந்தது என்னும் போது, முதலில் நம்ப முடியாமல் இருந்தது, பின்னர் கொஞ்சம் அதிர்ச்சி ஆகவும் இருந்தது........😌

37 minutes ago, villavan said:

கதை சிறப்பாக இருந்தது, ஆனால் என்னவோ ஒன்று குறைவது போல், முடிந்தும் முடியாத போல் ஒரு உணர்வு. அதனாற் தான் கொஞ்சம் பொறுத்துப் பார்த்தேன், பின்னுக்கு ஏதும் சேர்ப்பிங்களோ எண்டு. ஒரு தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே.

இடையில் சில விடயங்களை தவற விட்டிருந்தேன் என்று பின்னர் தெரிந்து கொண்டேன், வில்லவன். நீங்கள் சொன்ன பின் தான் முடிவிலும் ஒரு நிறைவு இல்லை புரிகின்றது. மனதில் இருந்தது சரியாக வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன்.

பொதுவாகவே எதையும் எழுத ஆரம்பித்தால் ஒரே மூச்சில் எழுதிவிடுவேன். இதை அவசரம் அவசரமாக எழுதும் போது, எண்ணமும் சொல்லும் வேறு வேறாகிப் போய்விட்டது........

ஐயர் குண்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து, அதை செயற்கை நுண்ணறிவுக்கு சொன்ன நான், முதலில் கதை முழுவதையும் எனக்கு சொல்லியிருக்க வேண்டும்..........🤣.

மிக்கநன்றி வில்லவன். உங்களின் ஓவியங்கள், எழுத்து, வாசிப்பு எல்லாமே மிகக் கூர்மையானவை..........❤️.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

மனதில் இருந்தது சரியாக வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன்.

மனதோடு மனம் நிகழ்த்தும் உ ரையாடல் தானே நீங்கள் எழுதுவதை நாங்கள் வாசிப்பது. ஒரு குறையும் இல்லை @ரசோதரன் அண்ணை 🙏. மேலும் அதைப்பற்றிக் கலந்துரையாட ஒரு வாய்ப்புத் தானே 😊.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

38 minutes ago, விசுகு said:

இங்கே இளம் வயதினரை அதிகம் கண்டபோது அது பற்றி விசாரித்தபோது இந்தியாவில் இருந்து படிப்பு விசாவில் வரும் இளசுகளுக்கு இக்கோயிலில் வழங்கப்படும் தொடர் அன்னதானம் பெரிய பேறு என்று சொன்னார்கள். இது சரி என்றால் நீங்கள் சொல்லும் கோயிலும் ஒன்றே. தொடர்ந்து எழுதுங்கள்.

நீங்கள் போயிருந்தது இன்னொரு கோவில் என்று நினைக்கின்றேன், விசுகு ஐயா. அந்தக் கோவிலை பின்னர் மிகப் பெரிதாகக் கட்டினார்கள். அங்கு தான் சுற்றுலா வருபவர்கள் போவார்கள். அதே சுவாமி நாராயணன் கோவில் தான். இந்தப் பெரிய கோவில் என் வீட்டிலிருந்து ஒரு அரை மணி தூரத்தில் இருக்கின்றது. இங்கு குஜராத் மக்கள் மிகவும் வசதியானவர்களாக இருப்பதால், இதே கோவிலை பல இடங்களில் அமைத்திருக்கின்றார்கள்.

மாலிபு கடற்கரையுடன் இன்னொன்று இருக்கின்றது. மேல் கோவில் வெங்கடாசலபதி, கீழே இருக்கும் கோவில் சிவன். 'ஜீன்ஸ்' படத்திலும், வேறு படங்களிலும் இந்தக் கோவில் வந்திருக்கின்றது. இங்கு சுற்றுலா வருபவர்கள் அங்கேயும் போவார்கள்.

37 minutes ago, ஈழப்பிரியன் said:

சிலர் சிவலிங்கத்தை கும்பிடுவதை வினோதமாக பார்த்துக் கொண்டிருப்பேன்.

முன்னுக்கிருக்கும் நந்தியின் காதுகள் இரண்டுக்கும் ஊடாக இலக்கு பார்ப்பது போல லிங்கத்தைப் பார்ப்பார்கள்.

நீங்களும் அப்படி பார்க்கிறீர்களோ?

🤣................

இந்த வழிபாடு எப்படி ஆரம்பாகியது என்பது தான் எப்போதும் தோன்றும் எண்ணம், அண்ணா.......

சிவலிங்கம், சிவனைத் தவிர, எதைக் குறிக்கின்றது என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். இது உலகம் முழுவதும் பல நாடுகளில், பல சமூகங்களில் இருந்த ஒரு வழிபாட்டு முறையே. மனிதர்கள் எப்படி இந்தக் குறியீட்டை தெய்வத்தின் வடிவமாக்கினார்கள் என்று தான் தோன்றிக் கொண்டேயிருக்கின்றது..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பூசகர்கள் சிவனை விட சக்திகளை நன்றாகவே அறிந்திருப்பார்கள் ,சக்திகளும் ஐயா,ஐயா என உரையாடுவதால் நன்றாகவே அறிமுகமானவர்களாக இருப்பார்கள்

🤣.........

அடுப்படி, கோவில் போன்ற இடங்களில் சுதந்திரத்தை உணர்கின்றார்கள் போல.............

ஆனால் சமீபத்தில் சுமே அக்காவின் கதை ஒன்றில் வந்தது போல, அடுப்படியிலும் அவர்களின் சுதந்திரத்திற்கு இப்பொழுது தடைகள் வர ஆரம்பித்துவிட்டன.............

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

அடுப்படியிலும் அவர்களின் சுதந்திரத்திற்கு இப்பொழுது தடை

என் மனைவி கராத்தே பொக்சிங் எல்லாம் பழகிப் பார்ப்பது நான் அடுப்படிப் பக்கம் போய் ஏதாவது கருத்து சொல்லப் போனாத் தான். அதாலை ஏதும் வெட்டிக்கொண்டு இருந்தா அந்தப்பக்கம் போறல்லை 😁.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, villavan said:

என் மனைவி கராத்தே பொக்சிங் எல்லாம் பழகிப் பார்ப்பது நான் அடுப்படிப் பக்கம் போய் ஏதாவது கருத்து சொல்லப் போனாத் தான். அதாலை ஏதும் வெட்டிக்கொண்டு இருந்தா அந்தப்பக்கம் போறல்லை 😁.

இதைச் சொல்லிசொல்லியே அடுப்படி வேலைகளை செய்யாமல் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, villavan said:

என் மனைவி கராத்தே பொக்சிங் எல்லாம் பழகிப் பார்ப்பது நான் அடுப்படிப் பக்கம் போய் ஏதாவது கருத்து சொல்லப் போனாத் தான். அதாலை ஏதும் வெட்டிக்கொண்டு இருந்தா அந்தப்பக்கம் போறல்லை 😁.

நான் அந்த பயத்தில்... வெட்டு கொத்து எல்லாம் என் கையில் ...

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைச் சொல்லிசொல்லியே அடுப்படி வேலைகளை செய்யாமல் இருக்கலாம்.

உண்மையிலேயே எனக்கு கூடமாட உதவி செய்ய விருப்பம் தான் ஆனால்,

1. சமையல் செயற்றிறன் 50% குறைகிறதாம் (100% & 0%).

2.நண்பிகளுடன் ஒலிபெருக்கி உரையாடலில் தடை வருகிறதாம்.

3. வாய் சரியில்லை.

4. நீர் செய்தால் ஆர் சாப்பிடுறது?

நீங்களே சொல்லுங்கள், நானா குற்றவாளி? 😄.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, villavan said:

என் மனைவி கராத்தே பொக்சிங் எல்லாம் பழகிப் பார்ப்பது நான் அடுப்படிப் பக்கம் போய் ஏதாவது கருத்து சொல்லப் போனாத் தான். அதாலை ஏதும் வெட்டிக்கொண்டு இருந்தா அந்தப்பக்கம் போறல்லை 😁.

🤣...................

சமைக்கும் ஆண்கள், சமையலில் கருத்து சொல்லும் ஆண்களை நான் சூப்பர் சிங்கர் போட்டிகளில் வந்து பாடுபவர்களை பார்ப்பது போன்றே, அதே ஆச்சரியத்துடன் பார்க்கின்றேன்........ இது என்ன திறமை, இவர்களுக்கு மட்டும் இது எப்படி அமைந்தது என்ற அதே ஆச்சரியம்.......

உலகத்தில் உள்ள எல்லோரையும் சமையலில் வரிசைப்படுத்தினால், நான் கட்டக் கடைசியில் வருவேன். போட்டியே கிடையாது. என்னளவிற்கு சமையல் பற்றி எதுவுமே தெரியாத ஒருவரை நான் இன்னமும் சந்திக்கவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட என்னை விட சமைப்பார் என்றே நினைக்கின்றேன்...................

பெண்களின் கராத்தே என்றவுடன் ஞாபகத்தில் வந்த விடயம் ஒன்று. அப்போது இங்கு நாங்கள் வந்த புதிது. நான் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியும் இங்கே வந்துவிட்டார். என்னுடன் அதே பல்கலையில் இலங்கையில் இருந்து வந்த பெண்மணி ஒருவரும், அவர் ஆங்கிலத்தில் மேற்படிப்பு, படித்துக் கொண்டிருந்தார். தமிழ்ப் பெண்தான். முதலில் அவர் யாரென்று எனக்குத் தெரியாது. வீட்டுக்கும் வருவார்.

பின்னர் அவர் யாரென்று, அவரின் பின்புலமும் தெரிந்தது. அவர் இலங்கையில் மிகப்பிரபலமான ஒருவர் தான், ஆனால் நான் ஒரு கிணற்றுத் தவளை, என் வீட்டுக்காரி என்னுடன் சேர்ந்த இன்னொரு தவளை.

ஒரு நாள் அவர் வீட்டுக்கு வந்து, 'வாங்கோ, கராத்தே வகுப்புக்கு போவோம்........' என்று கேட்டிருக்கின்றார். வீட்டில் வெருண்டு போய்விட்டார்கள். 'இது என்னணை..........' என்று நான் வந்ததும் சொன்னார். எனக்கு ஒரே சிரிப்பு தான்............... பின்னர் அந்தப் பெண் தனியவே கராத்தே வகுப்புகளுக்கு போனார் என்று நினைக்கின்றேன்.

ஆனால் அது ஒரு காலம்................. இப்ப என் வீட்டுக்காரி ஒரு கராத்தே வகுப்பே நடத்தும் அளவிற்கு முன்னேறிவிட்டார்..................

அந்தப் பெண்மணி இலங்கையில் ஒரு பல்கலையில் ஒரு பேராசிரியராக இருப்பதாக செய்திகளில் பார்த்திருக்கின்றேன். ஆங்கிலத்துடன், கராத்தேயும் கற்றுக் கொடுக்கின்றாரோ தெரியவில்லை............ உண்மையிலேயே மிகவும் துணிந்தவர் அவர்..........👍.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

சமையலில் கருத்து சொல்லும் ஆண்களை நான் சூப்பர் சிங்கர் போட்டிகளில் வந்து பாடுபவர்களை பார்ப்பது போன்றே, அதே ஆச்சரியத்துடன் பார்க்கின்றேன்

அண்ணை, நான் சொல்லும் கருத்து, கிட்டத்தட்ட ஏஐ யில் அந்து சந்தில்லாமல் ஏதாவது செய்யிற போல கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லாமல் இருப்பதால் தான் அடி உதை எல்லாம். நீங்க வேற.... 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, villavan said:

அண்ணை, நான் சொல்லும் கருத்து, கிட்டத்தட்ட ஏஐ யில் அந்து சந்தில்லாமல் ஏதாவது செய்யிற போல கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லாமல் இருப்பதால் தான் அடி உதை எல்லாம். நீங்க வேற.... 🤣

அட ராமா......... எல்லா வகைகளிலும் ஒன்று இன்னொன்றின் பிரதி போலவே தெரிகின்றது.........🤣.

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.