Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

istockphoto-866987706-612x612-1.jpg?resi

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ் என்பவர் மீது அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார்.

அதில், தானும், கணவரும் நெருக்கமாக இருந்ததை தனக்கு தெரியாமல் கணவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர், தனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கும், இதர கிராமத்தினருக்கும் அவர் பகிர்ந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

அதன்பேரில், பிரதும் யாதவ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின்கீழ், பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றில் பிரதும் யாதவ் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது சட்டத்தரணி வாதிடுகையில், புகார் கொடுத்த பெண், பிரதும் யாதவ் சட்டப்படி திருமணம் செய்து கொண்டவர் என்றும், எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவுக்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறினார்.

அதை ஏற்காத கூடுதல் அரச தரப்பு சட்டத்தரணி, சட்டப்படியான கணவர் என்றபோதிலும், அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிடவோ, மற்றவர்களுக்கு பகிரவோ அவருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார்.
இந்த வழக்கில், நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பு அளித்துள்ளார். பிரதும் யாதவ் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி தனது தீர்ப்பில் ,

கணவர் மீது மனைவி வைத்த நம்பிக்கையை, குறிப்பாக நெருக்கமான சந்தர்ப்பத்தில் வைத்த நம்பிக்கையை கணவர் மதிக்க வேண்டும். நெருக்கமான வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததன் மூலம், அவர் திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை மீறிவிட்டார்.

நம்பிக்கையை மீறிய செயல், திருமண பந்தத்தின் அடித்தளத்தையே சிறுமைப்படுத்துகிறது. மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர்.

திருமணம் என்பது மனைவியின் உரிமையாளர் என்ற அந்தஸ்தையோ, அவரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையோ கணவருக்கு அளித்து விடாது. மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமின்றி, தார்மீக கடமையும் ஆகும் என கூறியுள்ளார்.

https://athavannews.com/2025/1426351

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2025 at 08:03, தமிழ் சிறி said:

திருமணம் என்பது மனைவியின் உரிமையாளர் என்ற அந்தஸ்தையோ, அவரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையோ கணவருக்கு அளித்து விடாது. மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமின்றி, தார்மீக கடமையும் ஆகும் என கூறியுள்ளார்.

இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

திருமணம் என்பது மனைவியின் உரிமையாளர் என்ற அந்தஸ்தையோ, அவரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையோ கணவருக்கு அளித்து விடாது. மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமின்றி, தார்மீக கடமையும் ஆகும் என கூறியுள்ளார்.

இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம்.

கால தாமதம்

காரிய நஸ்டம்.

இதையெல்லாம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கால தாமதம்

காரிய நஸ்டம்.

இதையெல்லாம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும்.

பேச்சமல் இசுலாமாக மாறிவிட்டால் 7 கலியாணம் பக்கு பக்கென்று கட்டலாம் ..அலுத்துவிட்டால் ஜிகாத் செய்தால் அங்கும் 72 கன்னியர்கள் கிடைப்பினம் ...பிறகேன் இந்த இந்துசமயத்தில் இருந்து கயிட்டப் படவேணும்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கால தாமதம்

காரிய நஸ்டம்.

இதையெல்லாம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும்.

இப்படி சட்டம் இருப்பது இப்ப தான் தெரியும் ....என்ன செய்ய காலதாமதம். தான் ஆனால் இனியும் தாமதிப்பது கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, alvayan said:

பேச்சமல் இசுலாமாக மாறிவிட்டால் 7 கலியாணம் பக்கு பக்கென்று கட்டலாம் ..அலுத்துவிட்டால் ஜிகாத் செய்தால் அங்கும் 72 கன்னியர்கள் கிடைப்பினம் ...பிறகேன் இந்த இந்துசமயத்தில் இருந்து கயிட்டப் படவேணும்..

இந்து சமயத்தில் இந்த விடயத்தில் இஸ்லாமிய மதம்” போல் மாற்றி விட்டால் எல்லா இந்துக்களும் பயன் அடைவார்கள். அதாவது ஒருவர் 4 கலியாணம். செய்யலாம் என்று .....

7 கூடிப். போச்சு ஏழு பேரிடம் அடி வேண்ட. முடியாது 🤣. மற்ற யாழ் கள உறுப்பினர்கள் ஆலோசனையும் பார்த்து செயயலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம். 🤣

அதேதான்.. அதே போல் ஜீவனாம்ச காசுதா மயிர் மட்டை எண்டு கேக்ககுடாது.. அவன் உடல் அவன் உழைப்பு அவன் காசு அவனுக்கு சொந்தம்..

  • கருத்துக்கள உறவுகள்

என் அண்ணன் தம்பிமார்கள் எவ்வளவு பேர் நொந்து நூலாகி கிடக்கிறார்கள் என்று இத்திரி மூலம் தெரிகிறது 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம். 🤣

மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் இல்லை என்றால்...

நீங்களும் சமையல் செய்து, சீலை தோய்த்து, விட்டு வேலைகள் செய்து,

குழந்தைக்கு "பம்பஸ்" மாத்தி, குளிக்க வார்க்கின்ற வேலைகளையும்

நீங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

டீல்... ஓகேயா. 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் இல்லை என்றால்...

நீங்களும் சமையல் செய்து, சீலை தோய்த்து, விட்டு வேலைகள் செய்து,

குழந்தைக்கு "பம்பஸ்" மாத்தி, குளிக்க வார்க்கின்ற வேலைகளையும்

நீங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

டீல்... ஓகேயா. 😂

சீலை தோய்க்கவில்லை மற்றது எல்லாம் நான் செய்து உள்ளேன் நான் தான் செய்வது… கிட்டதட்ட 25. வருடங்களுக்கு மேலாக செய்துள்ளேன் .....இன்றும் நான் தனி சமையல் மகன் தனிச் சமையல் மனைவியும் தனி சமையல் அவள் பிராமணர் மாதிரி சாப்பாடு 33 ஆண்டுகள் ஆகிறது வேலை தேடியது கிடையாது படிக்க விரும்பியதில்லை விருப்பம் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது முடியாது என்பது உலகில் எதுவும் இல்லை அதுவும் உந்த. வீட்டு வேலை மிகவும் சுகம் அது பழக்கத்தில் வரவேண்டும் எந்த பெரிய வேலையும் சுகமானது ஆகும் அல்லது சுகமாக மாறிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

சீலை தோய்க்கவில்லை மற்றது எல்லாம் நான் செய்து உள்ளேன் நான் தான் செய்வது… கிட்டதட்ட 25. வருடங்களுக்கு மேலாக செய்துள்ளேன் .....இன்றும் நான் தனி சமையல் மகன் தனிச் சமையல் மனைவியும் தனி சமையல் அவள் பிராமணர் மாதிரி சாப்பாடு 33 ஆண்டுகள் ஆகிறது வேலை தேடியது கிடையாது படிக்க விரும்பியதில்லை விருப்பம் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது முடியாது என்பது உலகில் எதுவும் இல்லை அதுவும் உந்த. வீட்டு வேலை மிகவும் சுகம் அது பழக்கத்தில் வரவேண்டும் எந்த பெரிய வேலையும் சுகமானது ஆகும் அல்லது சுகமாக மாறிவிடும்.

நானும் அநேகமான வீட்டு வேலைகளை விரும்பி செய்வேன்.

மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது எமது கடமை.

ஒரு வீட்டில், மூன்று சமையலா தலை சுத்துது.

நீங்கள் சைவத்துக்கு மாறினால் அல்லது மனைவிக்கு... அசைவத்தை பழக்கினால் இரண்டு சமையல் ஆகி விடுமே.

மகன் ஏன்... தனிய சமைக்கின்றார். ஜேர்மன் சமையலா.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

நானும் அநேகமான வீட்டு வேலைகளை விரும்பி செய்வேன்.

மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது எமது கடமை.

ஒரு வீட்டில், மூன்று சமையலா தலை சுத்துது.

நீங்கள் சைவத்துக்கு மாறினால் அல்லது மனைவிக்கு... அசைவத்தை பழக்கினால் இரண்டு சமையல் ஆகி விடுமே.

மகன் ஏன்... தனிய சமைக்கின்றார். ஜேர்மன் சமையலா.

நான் மாறலாம் ஆனால் மனைவி ஒருபோதும் மாறமாட்டாள். அது வளர்ப்பு முறை எனது சமையல் சீனா இலங்கை மற்றும் இணையத்தில் பாரத்தும் செய்வேன் மகன் இத்தாலிய சமையல் செய்வன். நான் சமைபபதையாம் சாப்பிடுவன். மனைவி அனேகமாக பாண். 🤣

அல்லது மரக்கறி. சோறு பழையது எதுவுமே சாப்பிடுவதில்லை நான் இரண்டு மூன்று நாள் வைத்து சாப்பிடுவேன். சமையல் பெரிய வேலை இல்லை இந்த துறையில் இருபது வருடத்திற்கு மேல் அனுபவம் உண்டு” எனக்கு மூன்று பெண் சகோதரிகளுண்டு அவர்களுக்கு சீதனம். கொடுத்து தான் திருமணம் செயதது ...எனக்கும் நிறையவே சீதனம். தர முன் வந்தார்கள்.....சீதனம். தேவையில்லை வேலை செய்தால் சரி என்றேன் ஆனால் நான் விரும்பியது கிடைக்கவில்லை அதாவது 33 ஆண்டுகளில் ஒரு நாள் கூட வேலை செய்யவில்லை ஆனால் நாலு ஏக்கர் தென்னம். தோட்டம் ஏழு பரப்பளவு காணி இரண்டுயரை ஏக்கர் வயல் ஒட்டிசுட்டானில். பேசினார்கள் மனைவிக்கு ஒரு தங்கை உண்டு” 1993 தனக்கு தானே திருமணம் பேசி திருமணம் செய்து கொண்டாள். நானும் 3000 மார்க். அனுப்பி வைத்தேன் மனைவி சொன்னார் கொடுக்கக்கூடாது என்று

மனைவியின் சகோதரி. எங்களுக்கு பேசிய ஏழு பரப்பளவு காணியையும். தனக்கு சீதனமாக எழுதிக் கொண்டாள் இதை 2003 இல் நாங்கள் குடும்பமாக போன போதும் செல்லவில்லை இடையில் நான் இரண்டு முறை போன போதும் சொல்லவில்லை இதற்க்கு இடையில் நீங்கள் ஊருக்கு போகமாட்டீர்கள் பிள்ளைகளும் போகாதுகள். என்று தென்னாம். தோட்டத்தை சுவிஸ் உள்ள தனது மாமாவுக்கு விற்க வேண்டும் என்று என்னுடன் மனைவி அடிக்கடி அடிபடுவாள் நான் கையெழுத்திட முடியாது என்றேன் அவளது தமையன் அவுஸ்திரேலியவில். இருக்கிறார் இலங்கையில் மூன்று மாதம் நின்று சட்டத்தரணி மூலம் எனது கையெழுத்து இன்றி விற்று விடடார்கள். பரப்பளவு 65 ஆயிரம் ருபாய் வீதம் 64 பரப்பளவு ஆனால் இன்று அந்த காணி பரப்பளவு 3 இலட்சம் ருபாய்

நிற்க அந்த ஏழு பரப்பளவு காணியையும். மீண்டும் தனது பெயரில் அடிபட்டு எழுதி விட்டார் மனைவி அதையும் விற்க. தமையனுடன். கதைத்து பரப்பளவு 15 இலட்சத்துக்கு. எற்பாடு செய்து விட்டாள் தமையன் கூறியுள்ளார் நான் கையெழுத்து வைக்க விடடால். தன் சட்டத்தரணி மூலம் செயது தருவேன் எனறு ....எனது மகள் திருமணம் செய்து தனியாக இருக்கிறார் காதல் திருமணம் தான் 16. வயதில் காதலிக்க தொடங்கி விட்டாள். எங்கள் நகரில் பெரும் தெருக்கள் சபையில் பொறியியலாளர் ஆக வேலை செய்கிறாள் தான் இலங்கையில் வீடு கட்டபபோகிறேன. என்று காணி விற்பனையை நிறுத்தி விட்டாள்.

வயலும். பக்கத்து வயல்காரர். வரம்பை அரக்கி அரககி அது இரண்டு ஏக்கர் ஆகி விட்டது அது மொத்தம் 5 ஏக்கர் இரண்டு சகோதரிகளுக்கும். அரைவாசியாகப் பிரித்தது

எங்கள் முன்னேர்கள்

பெண்பார்ப்பது

காணிகள் அளந்து எழுதிய பின். திருமணம் செய்வது… சரியாகும்

நான் மச்சம். இல்லாமல் சாப்பிட மாட்டேன் உந்த. விரதங்கள். அர்ச்சனை எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நமபுகிறேன். ஒரு அர்ச்சகர் அர்ச்சனை செய்வதன் மூலம் எங்கள் கஸடஙகள். தீருமென்றால். ஆயிரக்கணக்கானா. ஐயார்மார. ஏன் வறுமையில் வட வேணடும். இதோ அர்ச்சனை செய்வதன். மூலம் தஙகளின். பிரச்சனைகளை தீர்ககலாம அல்லவா இது எல்லாம் மனிதர்களின் சுய விருப்பம் 🤣🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

நான் மாறலாம் ஆனால் மனைவி ஒருபோதும் மாறமாட்டாள். அது வளர்ப்பு முறை எனது சமையல் சீனா இலங்கை மற்றும் இணையத்தில் பாரத்தும் செய்வேன் மகன் இத்தாலிய சமையல் செய்வன். நான் சமைபபதையாம் சாப்பிடுவன். மனைவி அனேகமாக பாண். 🤣

அல்லது மரக்கறி. சோறு பழையது எதுவுமே சாப்பிடுவதில்லை நான் இரண்டு மூன்று நாள் வைத்து சாப்பிடுவேன். சமையல் பெரிய வேலை இல்லை இந்த துறையில் இருபது வருடத்திற்கு மேல் அனுபவம் உண்டு” எனக்கு மூன்று பெண் சகோதரிகளுண்டு அவர்களுக்கு சீதனம். கொடுத்து தான் திருமணம் செயதது ...எனக்கும் நிறையவே சீதனம். தர முன் வந்தார்கள்.....சீதனம். தேவையில்லை வேலை செய்தால் சரி என்றேன் ஆனால் நான் விரும்பியது கிடைக்கவில்லை அதாவது 33 ஆண்டுகளில் ஒரு நாள் கூட வேலை செய்யவில்லை ஆனால் நாலு ஏக்கர் தென்னம். தோட்டம் ஏழு பரப்பளவு காணி இரண்டுயரை ஏக்கர் வயல் ஒட்டிசுட்டானில். பேசினார்கள் மனைவிக்கு ஒரு தங்கை உண்டு” 1993 தனக்கு தானே திருமணம் பேசி திருமணம் செய்து கொண்டாள். நானும் 3000 மார்க். அனுப்பி வைத்தேன் மனைவி சொன்னார் கொடுக்கக்கூடாது என்று

மனைவியின் சகோதரி. எங்களுக்கு பேசிய ஏழு பரப்பளவு காணியையும். தனக்கு சீதனமாக எழுதிக் கொண்டாள் இதை 2003 இல் நாங்கள் குடும்பமாக போன போதும் செல்லவில்லை இடையில் நான் இரண்டு முறை போன போதும் சொல்லவில்லை இதற்க்கு இடையில் நீங்கள் ஊருக்கு போகமாட்டீர்கள் பிள்ளைகளும் போகாதுகள். என்று தென்னாம். தோட்டத்தை சுவிஸ் உள்ள தனது மாமாவுக்கு விற்க வேண்டும் என்று என்னுடன் மனைவி அடிக்கடி அடிபடுவாள் நான் கையெழுத்திட முடியாது என்றேன் அவளது தமையன் அவுஸ்திரேலியவில். இருக்கிறார் இலங்கையில் மூன்று மாதம் நின்று சட்டத்தரணி மூலம் எனது கையெழுத்து இன்றி விற்று விடடார்கள். பரப்பளவு 65 ஆயிரம் ருபாய் வீதம் 64 பரப்பளவு ஆனால் இன்று அந்த காணி பரப்பளவு 3 இலட்சம் ருபாய்

நிற்க அந்த ஏழு பரப்பளவு காணியையும். மீண்டும் தனது பெயரில் அடிபட்டு எழுதி விட்டார் மனைவி அதையும் விற்க. தமையனுடன். கதைத்து பரப்பளவு 15 இலட்சத்துக்கு. எற்பாடு செய்து விட்டாள் தமையன் கூறியுள்ளார் நான் கையெழுத்து வைக்க விடடால். தன் சட்டத்தரணி மூலம் செயது தருவேன் எனறு ....எனது மகள் திருமணம் செய்து தனியாக இருக்கிறார் காதல் திருமணம் தான் 16. வயதில் காதலிக்க தொடங்கி விட்டாள். எங்கள் நகரில் பெரும் தெருக்கள் சபையில் பொறியியலாளர் ஆக வேலை செய்கிறாள் தான் இலங்கையில் வீடு கட்டபபோகிறேன. என்று காணி விற்பனையை நிறுத்தி விட்டாள்.

வயலும். பக்கத்து வயல்காரர். வரம்பை அரக்கி அரககி அது இரண்டு ஏக்கர் ஆகி விட்டது அது மொத்தம் 5 ஏக்கர் இரண்டு சகோதரிகளுக்கும். அரைவாசியாகப் பிரித்தது

எங்கள் முன்னேர்கள்

பெண்பார்ப்பது

காணிகள் அளந்து எழுதிய பின். திருமணம் செய்வது… சரியாகும்

நான் மச்சம். இல்லாமல் சாப்பிட மாட்டேன் உந்த. விரதங்கள். அர்ச்சனை எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நமபுகிறேன். ஒரு அர்ச்சகர் அர்ச்சனை செய்வதன் மூலம் எங்கள் கஸடஙகள். தீருமென்றால். ஆயிரக்கணக்கானா. ஐயார்மார. ஏன் வறுமையில் வட வேணடும். இதோ அர்ச்சனை செய்வதன். மூலம் தஙகளின். பிரச்சனைகளை தீர்ககலாம அல்லவா இது எல்லாம் மனிதர்களின் சுய விருப்பம் 🤣🙏

கந்தையா அண்ணை உங்கள் கதையைப் போல்

உறவினர்களால் பலர் ஏமாற்றப்பட்டு மனம் வெறுத்த நிலையில் உள்ளார்கள்.

என்ன செய்வது... மற்றவனின் காணிக்கு ஆசைப்படுவது எமது இனத்தில் மிக அதிகம் போலுள்ளது. எல்லைச் சண்டைக்காக சொத்தையே அழித்தவர்கள் பலர் எம்மில் உள்ளார்கள். 😢

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

கால தாமதம்

காரிய நஸ்டம்.

இதையெல்லாம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும்.

இதைதான் ஒவ்வொரு கணவரும் இப்ப யோசிக்கினம்🤔🙆, காலம் தழ்த்திய செய்தி பிந்திக்கிடைத்த நீதி மாதிரி🥲

10 minutes ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை உங்கள் கதையைப் போல்

உறவினர்களால் பலர் ஏமாற்றப்பட்டு மனம் வெறுத்த நிலையில் உள்ளார்கள்.

என்ன செய்வது... மற்றவனின் காணிக்கு ஆசைப்படுவது எமது இனத்தில் மிக அதிகம் போலுள்ளது. எல்லைச் சண்டைக்காக சொத்தையே அழித்தவர்கள் பலர் எம்மில் உள்ளார்கள். 😢

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

பேச்சமல் இசுலாமாக மாறிவிட்டால் 7 கலியாணம் பக்கு பக்கென்று கட்டலாம் ..அலுத்துவிட்டால் ஜிகாத் செய்தால் அங்கும் 72 கன்னியர்கள் கிடைப்பினம் ...பிறகேன் இந்த இந்துசமயத்தில் இருந்து கயிட்டப் படவேணும்..

எந்த சமயத்தில் சேருவதென்றாலும் எப்போதோ முடிவு எடுத்திருக்க வேண்டும்.

முதியோர் என்ற அடைமொழியின் கீழ் என்ன தான் செய்ய முடியும்?

6 hours ago, Kandiah57 said:

இப்படி சட்டம் இருப்பது இப்ப தான் தெரியும் ....என்ன செய்ய காலதாமதம். தான் ஆனால் இனியும் தாமதிப்பது கூடாது

உங்கட பெயர் போகும்

பக்கத்து வீட்டுக்காரனின் உயிர் போகும்

சம்மதமா?சம்மதமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்குள்ள பார்த்த அளவில கந்தையர்ர கதைதான் பெரிய சோகக்கதை போல கிடக்கு...😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை உங்கள் கதையைப் போல்

உறவினர்களால் பலர் ஏமாற்றப்பட்டு மனம் வெறுத்த நிலையில் உள்ளார்கள்.

என்ன செய்வது... மற்றவனின் காணிக்கு ஆசைப்படுவது எமது இனத்தில் மிக அதிகம் போலுள்ளது. எல்லைச் சண்டைக்காக சொத்தையே அழித்தவர்கள் பலர் எம்மில் உள்ளார்கள். 😢

ஆமாம் உண்மை தான்,.நான் இலங்கையில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். பாடசாலைக்கு போக முன்னம். புகையிலை கண்டு மிளகாய். கன்றுகளுக்கு தண்ணீர் வரத்து விட்டு தான் ஓடி ஓடி பாடசாலைக்கு போவதுண்டு இங்கே திருமணத்தின் பின்னர் இருபது ஆண்டுகள் இரண்டு வேலை செய்தேன் எந்தவொரு பாதிப்புமில்லை நன்றாக தான் இருக்கிறேன் ...இன்னும் முப்பது வருடங்கள். இருபேன். என்று சொல்லுகிறார்கள் அது தான் எங்கேயும் அகப்பட்டால். ஒரே அமுக்கில் பிடிக்கும் எண்ணம் உண்டு” 😂😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:

- - -இன்னும் முப்பது வருடங்கள். இருபேன். என்று சொல்லுகிறார்கள் அது தான் எங்கேயும் அகப்பட்டால். ஒரே அமுக்கில் பிடிக்கும் எண்ணம் உண்டு” 😂😀

துருக்கி, ரஸ்சியன், உக்ரைன் காரியள் என்றாலும் ஓகேயா…

ஓம் எண்டால், டக்கெண்டு சொல்லுங்கோ.

2’ம் கலியாணத்தை ஜாம்… ஜாம்… என்று நடத்தி விடலாம். 😂

ஆனால் ஒண்டு… சீதனத்தை, நீங்கள்தான் கொடுக்க வேண்டி வரும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

எந்த சமயத்தில் சேருவதென்றாலும் எப்போதோ முடிவு எடுத்திருக்க வேண்டும்.

முதியோர் என்ற அடைமொழியின் கீழ் என்ன தான் செய்ய முடியும்?

ஏன் நீங்கள் பெரிசு படம் பார்த்திருந்தால்...உந்த எண்ணம் வந்திராது🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.