Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரைச்ச‌ மாவை மீண்டும் அரைக்க‌ தொட‌ங்கி விட்டார் விக்கி மாமா😁.......................

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாம‌லை பாட்டி வ‌டை சுட்ட‌ க‌தை சொல்லுகிறார்

பார்த்து விட்டு வாய் விட்டு சிரியுங்கோ..........................த‌மிழ் நாட்டில் இருக்கும் சில‌ர் இவ‌ர் சொல்வ‌தை ந‌ம்புங்க‌ள்.....................ஈழ‌ ம‌ண்ணில் ஈழ‌த்து போராளிக‌ளிட‌ம் அடி வேண்டி நாடு திரும்பின‌ வ‌ர‌லாற்றை அண்ணாம‌லைக்கு தெரிந்தாலும் தெரியாது போல் வேறு மாதிரி க‌தை சொல்வார்............................

  • கருத்துக்கள உறவுகள்+

பாக்கிஸ்தான் இந்திய பெண் வானோடியை உயிருடன் பிடித்து விட்டது... 🤣🤣

இந்த வாட்டி கொஃவியோ இல்லை பிளேன்டியோ தெரியேலை...

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2025 at 20:15, நிழலி said:

ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எதனால் உருவானது என்று சிந்தித்தீர்களா?

நீங்கள் கூறிய இந்த விடயத்துடன் ஈழத தமிழர் இந்தியாவிற்கு கலாச்சார ரீதியாக எப்போதும் நெருக்கமாக இருந்ததையும் அந்த மக்களை இந்திய இராணுவம் படுகொலை செய்வது தவறு என்பதை விரிவாக விளக்கி ஈழத்தமிழனின் குரலாக இந்த கடிதத்தைப் பிரசுரியுங்கள் என்று 1987 ல் நவம்பர் மாதம் இந்திய இராணுவம்- புலிகள் யுத்தம் தொடங்கிய வேளையில் ஆனந்த விகடன், குமுதம், கல்கி ஆகிய மூன்று இதழ்களுக்கும் கடிதம் எழுதி, கட்டாயமாக போய் சேரவேண்டும் என்பதற்காக பதிவு தபாலில் அதை அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரிக்க கூட இல்லை. அனேகமாக குப்பைத்தொட்டிக்குள் போயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் வரும் வாரங்களில் பற்றிக்ஸ் இந்தியா சென்று முன்னரங்குக்கு செல்ல இருப்பதால் எந்த மீடியாவும் வெளிக்கொண்டராத உண்மைகளை அறியலாம்..

My Next Steps: Heading to the Frontline

In the next two days, I will be flying to India to start reporting from the ground—beginning in Delhi and moving as close to the conflict zone as possible. I plan to speak directly with civilians, soldiers, and local officials to capture the real story—something you won’t see on mainstream Western media.

This isn’t my war, but as always, I believe it’s my duty to bring firsthand, unfiltered reporting from the frontline. I need your help to make this happen. Please consider supporting my trip by donating through the link in the pinned comment or video description.

Final Thoughts

The India-Pakistan conflict is a reminder that wars aren’t just battles between soldiers—they devastate civilian lives, destroy infrastructure, and destabilize entire regions. With two nuclear-armed nations involved, the stakes couldn’t be higher.

I’ll continue to bring you real-time updatesas the situation develops. Please like, share, and subscribe to my channel—and if you can, donate to support this critical frontline reporting.

Stay tuned.

Military Movements and Escalations

India has accused Pakistan of moving military hardware dangerously close to the Line of Control (LoC), a move India interprets as a clear intent to escalate. On the other side, Pakistan has shared images of Indian military assets being repositioned towards the frontline. Over the last 12 hours, social media and official sources have circulated footage of intense fighting, including:

  • Pakistani FATA-1 mobile rocket systems launching strikes into Indian territory.

  • Indian airstrikes reported to have destroyed elements of Pakistan’s E6 squadron at the Nur Khan Air Force Base.

  • Footage showing Pakistani artillery (155mm shells) pounding Indian positions.

  • Claims from Pakistan showing the destruction of an Indian BrahMos cruise missile storage facility.

There are also disturbing reports of Pakistani rockets hitting civilian areas in Kashmir, escalating fears that civilians are increasingly being drawn into the conflict.

Civilians and Religious Sites Under Attack?

While I haven't yet been able to verify these claims personally, reports are coming out of India alleging that religious sites and civilians have been deliberately targeted by Pakistani forces. One particularly gruesome report says militants in Kashmir stripped male tourists to identify non-Muslims (based on circumcision status) before executing them—a chilling and deeply sectarian act that could inflame tensions even further.

Breaking: Ceasefire Declared—But With a Clause

Just as we were wrapping up the latest report, breaking news emerged that a ceasefire has been declared between India and Pakistan. However, the terms are fragile: India has warned that any terrorist attack will be treated as an act of war by Pakistan, triggering immediate retaliation against military and government targets. This means that while open warfare may pause, the underlying tensions—and the potential for renewed violence—remain extremely high.

After announcement of a ceasefire between India and Pakistan and official confirmation by both sides, local fighting continues along the Line of Control.

There are reports of rocket and drone launches, as well as the use of cannon and anti-aircraft artillery.

India has already reported a ceasefire violation by Pakistan.


https%3A%2F%2Fsubstack-post-media.s3.amazonaws.com%2Fpublic%2Fimages%2Fa2b24bc1-b766-4e5e-8349-50f6069a829a_720x720.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அவங்களா இல்ல, வடக்கால இருந்து மேற்கால போய் இவங்களா அடிக்கிறது அண்ணாச்சி?!

இருக்கலாம் எமகாதகன்கள் 🇨🇳

  • கருத்துக்கள உறவுகள்+

காவலரணொன்றில் கொல்லப்பட்ட 22 இந்திய வீரர்கள்... 😢

(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

https://x.com/TecTaco/status/1921093835205046287

அமெரிக்காவின் வேண்டுகோளிற்கிணங்க இந்தியாவில் உள்ளுக்கிருந்து ஏற்படும் கேவலத்தை தடுக்க பெண் வானோடியை வெளிக்காட்ட விரும்பவில்லையாம், பாக். அரசு.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

நீங்கள் கூறிய இந்த விடயத்துடன் ஈழத தமிழர் இந்தியாவிற்கு கலாச்சார ரீதியாக எப்போதும் நெருக்கமாக இருந்ததையும் அந்த மக்களை இந்திய இராணுவம் படுகொலை செய்வது தவறு என்பதை விரிவாக விளக்கி ஈழத்தமிழனின் குரலாக இந்த கடிதத்தைப் பிரசுரியுங்கள் என்று 1987 ல் நவம்பர் மாதம் இந்திய இராணுவம்- புலிகள் யுத்தம் தொடங்கிய வேளையில் ஆனந்த விகடன், குமுதம், கல்கி ஆகிய மூன்று இதழ்களுக்கும் கடிதம் எழுதி, கட்டாயமாக போய் சேரவேண்டும் என்பதற்காக பதிவு தபாலில் அதை அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரிக்க கூட இல்லை. அனேகமாக குப்பைத்தொட்டிக்குள் போயிருக்கும்.

உங்களால் முடிந்ததை முயன்றுள்ளீர்கள்.

இதே போல் ஜெ யுக்கு நல்ல ஆங்கிலம் பிடிக்கும் என நானும் ஒரு கடிதம் எழுதிகொடுத்தேன்.

நம்மால் முயலமட்டுமே முடியும்.


இதை ஒத்த முடிவை நன்னி தற்போது எடுக்கிறார்…

#கண்ணில் படும் வரை பகிரவும்

5 minutes ago, நன்னிச் சோழன் said:

அமெரிக்காவின் வேண்டுகோளிற்கிணங்க இந்தியாவில் உள்ளுக்கிருந்து ஏற்படும் கேவலத்தை தடுக்க பெண் வானோடியை வெளிக்காட்ட விரும்பவில்லையாம், பாக். அரசு.

இந்தியாவை போல் “கராச்சியை கைப்பற்றும்” ஆட்கள் பாகிஸ்தானிலும் உள்ளார்கள் 🤣.

அல்ஜசீரா, இந்த செய்தி இரெண்டுமே பாக் இராணுவ தலைமை சொன்னதாக சொல்கிறது.

ஆனால் யாருக்கும் சொல்லவேண்டாம் என அமெரிக்கா கேட்டதாம்.

அமெரிக்கா என்ன இந்தியாவின் அம்மாவா🤣. பிள்ளை அவமானப்படும் என யோசிக்க.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போரில் தாம் வென்றுள்ளதாக அறிவித்தார் பாக் பிரதமர்!🤣


மோடி ஜி சமைஞ்ச பிள்ளை மாரி வீட்டுக்குள் இருக்காமல் வெளிய வாங்க ஜி.

உங்க வீரம் எல்லாம் இந்தியாவில் வசிக்கும் அப்பாவி முஸ்லிம்கள், அல்லது எதிரணி அரசியல்வாதிகள் மீது மட்டும்தானா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நன்னிச் சோழன் said:

காவலரணொன்றில் கொல்லப்பட்ட 22 இந்திய வீரர்கள்... 😢

(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)

https://x.com/TecTaco/status/1921093835205046287

அமெரிக்காவின் வேண்டுகோளிற்கிணங்க இந்தியாவில் உள்ளுக்கிருந்து ஏற்படும் கேவலத்தை தடுக்க பெண் வானோடியை வெளிக்காட்ட விரும்பவில்லையாம், பாக். அரசு.

இந்திய‌ன் ஆமியில் கூட‌ ஏழை குடும்ப‌த்தில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள் தான் அதிக‌ம்......................நாட்டு ப‌ற்றினால் இணைந்த‌வ‌ர்க‌ள் மிக‌ குறைவு..........................

ஜ‌ரோப்பாவில் ஆமியில் சேருவில் பாட‌சாலை ப‌டிப்பு முடிச்சு இருக்க‌னும்.....................அத‌ற்க்கு பிற‌க்கு தான் ஆமி ப‌யிற்ச்சிக்கு கூப்பிடுவின‌ம்.......................டென்மார்க்கில் 18வ‌ய‌துக்கு பிற‌க்கு க‌ட்டாய‌ம் ஆமி ப‌யிற்ச்சி 6மாத‌ம் எடுத்து இருக்க‌னும்............................

காணொளிய‌ பார்க்க‌ க‌வ‌லையாக‌ தான் இருக்கு.................இந்தியா ஆட்சியாள‌ர்க‌ள் 1987க‌ளில் ம‌ற்றும் 2009க‌ளில் ஈழ‌ ம‌ண்ணில் செய்த‌து இதை விட‌ கொடுமை....................இதை எல்லாம் பார்த்து விட்டு க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு

இந்தியா அதை செய்து விட்ட‌து இதை செய்து விட்ட‌து என்று இணைய‌த்தில் இருந்து குரைக்கும் கூட்ட‌த்துக்கு இப்ப‌டியான‌ காணொளிக‌ளை அனுப்பி வைக்க‌னும்..................அப்ப‌வாவ‌து திருந்த‌ட்டும் போர் என்று வ‌ந்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்று.................................

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது பற்றி எனக்கு இப்போ ஒரு அய்யா சொன்னார் இந்தியா ஈழத்தமிழர்களை தனக்காக பயன்படுத்திய காலத்தில் யுரியுப்புக்கள் இல்லை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் உங்களுக்கு வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் சொல்னவைகளை இப்ப காட்டலாம். தாங்கள் வாழ்கின்ற மேற்குலநாடு ஒரு கண் என்றால் இந்தியா தான் மற்ற கண் என்பார்களாம் இந்தியா தந்தை நாடு அல்லது தாய் நாடு என்பார்களாம் 😂

பாகிஸ்தான் முஸ்லிம் மதவாத நாடு என்கின்றபடியால் அன்பு மதம் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்களுக்கு ஒரு பாசம். 😂

இலங்கை சந்துரு என்பவரின்பயண யுரியுப் 30 வருடங்கள் பின் நிற்கும் பாகிஸ்தான் என்று யுரியுப் வட்சப்பில் பார்த்தேன். 2023 ல் எடுத்தது. 2023ல் இலங்கையையும் பார்த்ததிருக்கின்றோம். பாகிஸ்தானை மதத்தை வைத்து எப்படி ஆக்கி எங்கே வைத்து இருக்கின்றார்கள்

8 hours ago, புலவர் said:

:ழத்தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் சீனா இந்தியா மற்றும் மேற்குலநாடுகள் ஆயுத உதவி உட்பட பல உதவிகளைச் செய்தன.இந்த நாடுகளில் இந்தியாவைத் தவிர மற்றைய நாடுகள் தமிழ்ஈழம் என்று ஒரு நாடு அமைவதை எந்த காலகட்டத்திலும் கூர்க்கமாக எதிர்க்கப் போவதில்லை. ஆனால் இந்தியா ஒரு போதும் அதை அனுமதிக்காது.பிராந்திய வல்லரசு என்பதால் இந்தியாவை மீறி எந்த நாடும் அரசியல்ரீதியாக தலையிட வில்லை. ஆனால் இந்த நிலை தொடர்ந்து இருக்குமா என்று சொல்ல முடியாது.ஒரு வல்லரசு நாடு தன் அண்டை நாடுகளை நட்பு நாடுகளை நட்பு நாடுகளாக வைத்திருக்கும். ஆனால் இந்தியாவுக்கு எந்த ஒருநாடும் நட்பு நாடாக இல்லை. இந்தியாவிடம் இலுந்து பல உதவிகளைப் பெற்ற சிறிலங்காவே இந்த யுத்தத்தில் நடுநிலையாக இருக்கப்போவதாகச் சொல்லிவிட்டது. .இந்த நிலையில் இந்தியாவுக்கு இயற்கையிலேயே நட்பாக இருந்த ஈழத்தமிழர்களை இந்தியா பகைத்துக் கொண்டது இந்தியாவுக்கு அதன் வெளியுறக் கொள்கையில் படுதோல்வியாகும். ஒருவேளை புகோள அரசியல் கட்டாயங்களினால் இந்தியாவே சிpலங்காவைப் பிரித்து தமிழீழத்துப்பிரித்துக்கொடுத்தாலும் ஈழத்தமிழர்கள் இந்தியாவை நேசிக்கமாட்டார்கள். ஒருகாலத்தில் மகாத்மா காந்தி யின்படங்கள் எங்கள் வீடுகளில் இருந்தன.இந்திய பாகிஜ்தான் போரின் போது தந்தை செல்வா தொண்டர்படை சேரத்ததாக வரலாறுகள் உண்டு. அதே வேளை சிறிலங்கா பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள்நிரப்புவதற்கு இடங்கொடுத்தது..இந்த நிலையில் இந்தியா அடிவாங்குவது ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கு இந்தியாவே காரணம்.

காலையில் எழுந்து இரவு நித்திரை செல்லும் வரை நாங்கள் பின்பற்றுவது இந்தியா கலாச்சாரம் ..இதை நாம் மறுக்க முடியாது ...விரும்பியோ விரும்பாமலோ இது தான் ஜதார்த்தம்...

டச்சுக்காரங்கள்,போர்த்துகீஸ்காரங்கள்,வெள்ளைக்காரங்கள் தாயகத்தில் செய்த அட்டுழியங்களை எமது (ஜெனரேசன் ) தலைமுறை மறந்து விட்டது ...இந்தியா செய்த அதே அட்டுழியங்களை செய்திருப்பார்கள் தங்கள் தங்கள் அதிகாரங்களை நிலைநாட்ட ....இன்று சிங்கள அதிகார மையங்களும் அதைத்தான் செய்கின்றனர்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் உண்மையை ம‌றைத்து ம‌த்திய‌ அர‌சுக்கு ஜால்ரா அடிப்ப‌தில் முத‌ல் இட‌ம்...................அணு குண்டை விட‌ ஆவ‌த்தான‌ ஊட‌க‌ம் த‌மிழ் நாட்டு த‌ந்தி ஊட‌க‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

போரில் தாம் வென்றுள்ளதாக அறிவித்தார் பாக் பிரதமர்!🤣


மோடி ஜி சமைஞ்ச பிள்ளை மாரி வீட்டுக்குள் இருக்காமல் வெளிய வாங்க ஜி.

உங்க வீரம் எல்லாம் இந்தியாவில் வசிக்கும் அப்பாவி முஸ்லிம்கள், அல்லது எதிரணி அரசியல்வாதிகள் மீது மட்டும்தானா?

நாளைக்கு வீர‌ வ‌ச‌ன‌ம் பேச‌ ஆர‌ம்பிப்பின‌ம்.................மோடி ஜீ அவ‌ர்க‌ளுட‌ன் ஆலோசித்தார் இவ‌ர்க‌ளுட‌ன் ஆலோசித்தார்

இராணுவ‌த்துக்கு முழு சுசுத‌ந்திர‌ம் வ‌ழ‌ங்கி விட்டார் அவ‌ர்க‌ள் சுய‌மாய் முடிவெடுக்க‌................இதை கேட்டு கேட்டு காது புளிச்சுப் போச்சு😁...........................

19 minutes ago, putthan said:

காலையில் எழுந்து இரவு நித்திரை செல்லும் வரை நாங்கள் பின்பற்றுவது இந்தியா கலாச்சாரம் ..இதை நாம் மறுக்க முடியாது ...விரும்பியோ விரும்பாமலோ இது தான் ஜதார்த்தம்...

டச்சுக்காரங்கள்,போர்த்துகீஸ்காரங்கள்,வெள்ளைக்காரங்கள் தாயகத்தில் செய்த அட்டுழியங்களை எமது (ஜெனரேசன் ) தலைமுறை மறந்து விட்டது ...இந்தியா செய்த அதே அட்டுழியங்களை செய்திருப்பார்கள் தங்கள் தங்கள் அதிகாரங்களை நிலைநாட்ட ....இன்று சிங்கள அதிகார மையங்களும் அதைத்தான் செய்கின்றனர்..

என்ன‌ புத்த‌ன் மாமா இப்ப‌டி எழுதி விட்டீங்க‌ள்

வெள்ளைக் கார‌ன் எங்க‌ளின் ஆச்சி பாட்டிய‌ க‌ற்ப‌ழித்தார்க‌ள் என்று எங்கும் கேள்வி ப‌ட‌ வில்லை

ஆனால் 1987க‌ளில் வ‌ந்த‌ இந்திய‌ன் ஆமி ஈழ‌த்து பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ள்.....................எங்க‌ட‌ க‌லாச்சார‌த்தில் க‌ற்ப‌ழிப்பு என்ப‌து இல்லையே...................இந்த‌ நாச‌கார‌ வேலைய‌ ஈழ‌ ம‌ண்ணில் முத‌ல் செய்த‌து இந்திய‌ன் ஆமி........................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் மட்டும் தங்கியிருக்கும் பாகிஸ்தானால் ஒரு வார யுத்தத்தை நடத்துவதே முடியாத காரியம். அவர்களின் உள்நாட்டு அரசியல் நிலையும் மிகவும் தளம்பலாகவே தொடர்ந்தும் இருக்கின்றது. ஓரிரு வருடங்களின் முன் இலங்கையில் இருந்த அதே பொருளாதார நெருக்கடி பாகிஸ்தானில் சில வருடங்களாகவே இருந்து வருகின்றது. இம்ரானை சிறையில் அடைத்து விட்டு, பாகிஸ்தானில் ஒரு நிழல் இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இராணுவத் தளபதி அசீம் முனீர் தனது நிலையை தக்கவைக்க அங்கிருக்கும் தீவிரவாதக் குழுக்களின் தயவை நாடிக் கொண்டிருக்கின்றார்.

இது இந்தியாவிற்கு கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பம். ஆனால் வழமை போலவே இந்தியா இந்தத் தடவையும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியக் குடியரசு தினத்தன்று டெல்லியின் வீதிகளில் தங்களின் இராணுவ பலத்தை ஊர்வலமாகக் காட்டுவதை விட வேறு எதையும் இந்திய இராணுவத்தால் சாதிக்க முடியுமா என்று தோன்றுகின்றது. நவீன ஆயுதங்கள் மட்டும் போதாது, அதை இயக்குபவர்களும் அதே அளவிற்கு முக்கியமானவர்கள் என்று தோன்றுகின்றது.

இப்பொழுது சீனா இலகுவாக அப்படியே அருணாச்சல் பிரதேசத்தை இரவோடு இரவாக கைப்பற்றலாம். இந்தியாவில் யூடியூப்புகளும், சமூக ஊடகங்களும் மட்டும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை நடத்தும்.

எந்தப் போரும் அழிவைக் கொண்டுவரும். அத்துடன் சம்பந்தப்பட்ட நாடுகளை சில பல வருடங்கள் பின்னுக்கும் கொண்டு செல்லும். ஆனாலும் சில போர்கள் தவிர்க்கப்படக்கூடாதவை. கடந்த 2000 ஆண்டுகளில் 1500 வருடங்களுக்கு மேல் அந்நிய ஆட்சிகளின் கீழ் இருந்ததாலோ என்னவோ, இந்திய, இலங்கைச் சமூகங்களின் சுயமரியாதை சில இடங்களில் கேள்விக்குறியாக இருக்கின்றது. ஓரிருவர்களும், வெகு சில சந்தர்ப்பங்களும் மட்டுமே விதிவிலக்கு, உதாரணம்: எங்களின் தலைவரும் அவருடைய போராட்டமும்.

இந்தப் போர்நிறுத்த அறிவிப்பால் இந்திய, பாகிஸ்தான், ஈழத்தமிழ் யூடியூப்காரர்கள் வருமானத்தை இழக்கப் போகின்றார்கள். யூடியூப் நான் இதுவரை காலமும் நினைத்திருந்ததை விட மிகப் பெரும் ஒரு வியாதி என்று தெரிகின்றது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இப்படியான பலவும் வந்து போயிருக்கின்றன. ஆதலால் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. வரும் சந்ததிகள் இதிலிருந்து பிழைத்துக்கொள்ளும்.

பாகிஸ்தான் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக எந்த பெரிய இராணுவ தாக்குதலையும் செய்யவில்லை...பல பயங்கரவாத தாக்குதல்களை செய்திருக்கின்றது ..ஒர் இறையாண்மையுள்ள நாட்டின் இராணுவம் செய்வது போன்ற செயல்களை செய்யவில்லை...

ஈரானில் இராணுவம் இருக்கின்றது ஆனால் அதை நடத்துவது மத தலைவர்கள்...ஆட்சியும் மததலைவர்களினது...இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை உருவாக்கி பயிற்சியளித்து பயங்கரவாதிகள் ஊடாக‌ பெரும் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேலுக்கு எதிராக நடத்துவது..

பாகிஸ்தானில் இராணுவம் ஆட்சி நடத்துகின்றது ,அரசியல்வாதிகள் அவர்களின் அடிமைகள்.மதவாதிகளை பயங்கரவாதிகளாக உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக தாக்குதலை செய்கின்றது ..

இஸ்லாமிய உலகின் இரண்டு கண்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ புத்த‌ன் மாமா இப்ப‌டி எழுதி விட்டீங்க‌ள்

வெள்ளைக் கார‌ன் எங்க‌ளின் ஆச்சி பாட்டிய‌ க‌ற்ப‌ழித்தார்க‌ள் என்று எங்கும் கேள்வி ப‌ட‌ வில்லை

ஆனால் 1987க‌ளில் வ‌ந்த‌ இந்திய‌ன் ஆமி ஈழ‌த்து பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌வ‌ர்க‌ள்.....................எங்க‌ட‌ க‌லாச்சார‌த்தில் க‌ற்ப‌ழிப்பு என்ப‌து இல்லையே...................இந்த‌ நாச‌கார‌ வேலைய‌ ஈழ‌ ம‌ண்ணில் முத‌ல் செய்த‌து இந்திய‌ன் ஆமி........................

என்ன 1958,77 எல்லாம் மறந்து விட்டிர்கள் போல உள்ளது சிங்களவர்கள் செய்த விடயங்களை ..கந்தளாய் பகுதியில் நடந்தவற்றை ...சரி அதை விடுங்கள் ...

15 வருடங்களுக்கு முன் (2009)நடந்தவற்றையே மறந்து போய் நல்லிணக்க பேசுகின்றோம் ,டச்சுக்காரன் செய்த விடயங்களை ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள் ,மேலும் அந்த விடயங்களை அடுத்த தலமுறைக்கு காவி செல்ல மாட்டார்கள் ..ஆனால் அன்னியர்கள் செய்த அட்டுழியங்களின் செயல்கள் சில தெரிய வருகின்றது..கோவில்களை இடித்து கோட்டைகள் கட்டியிருக்கின்றனர்...கோவில் கற்களை பாவித்து சில வீதிகளை அமைத்திருக்கின்றனர்..

இந்தியா இராணூவம் செய்த அட்டுழியங்களை மறக்க முடியாது ,மன்னிக்கவும் முடியாது..அதேபோல சிங்கள அதிகார வர்க்கம் செய்வதையும் /செய்தவற்றையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது ...

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் 25 நகரங்களில் ட்ரான் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறதாம். அவர்கள் போர்நிறுத்தத்தை மீறிவிட்டதாகள் சீன அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாம் இந்தியா!

வடிவேலுவின் பகிடிதான் ஞாபகம் வருகிறது! பேச்சு பேச்சாத்தான் இருக்கோணும். இந்த எல்லையை தாண்டி நீயும் வரக்க்கூடாது! நாங்களும் வரமாட்டோம்!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வீரப் பையன்26 said:

மிக‌ ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள்

உங்க‌ள் அள‌வுக்கு இந்தியா ப‌ற்றி எழுத‌ என‌க்கு பொறுமை காணாது..................நீங்க‌ள் விப‌ர‌மாய் சுருக்கமாய் எழுதி இருக்கிறீங்க‌ள்....................

உந்த‌ நாட்டை எப்ப‌டியாவ‌து ப‌ழி தீர்க்க‌னும் அல்ல‌து எம் க‌ண் முன்னே உந்த‌ நாடு உடைந்து போக‌னும் என்று ப‌ல‌ வாட்டி நினைத்து இருப்பேன்........................ப‌ழி தீர்க்கும் அள‌வுக்கு எம்மிட‌ம் இப்போது ப‌ல‌ம் இல்லை....................எதிரி நாடு தான் ஹிந்தியாவுக்கு ச‌ரியான‌ ம‌ருந்து🙏அல்லா அக்ப‌ட்...................................

எனக்கும் இந்த வரலாறுகள் பற்றி தெளிவாக தெரியாது.

தற்போதய பிரச்சினைகளின் அடிப்படை காஸ்மீர்.

பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கும் போது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கிழக்கு மேற்கு பாகிஸ்தான் எனவும் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி இந்தியா என இரண்டாக பிரித்து வழங்கியிருந்தார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.

மன்னராட்சி நிலவிய காஸ்மீர் அதனை இந்த இரு நாட்டுடனும் பித்தானியா இணைக்கவில்லை, அதன் முடிவை அந்த காஸ்மீரிய மக்களிடமே விட்டுவிட்டது.

தற்போது காஸ்மீர் 3 நாடுகள் ஆக்கிரமித்துள்ளன இந்தியா, பாகிஸ்தான், சீனா.

கடந்த ஏழு தசாப்தங்களாக காஸ்மீருக்கு இருந்த உரிமைகளை 2019 இல் மோடி அரசு நீக்கி விட்டதாக அது தொடர்பில் வழக்கு ஒன்றினை காஸ்மீர் மக்கள் மேற்கொண்டு தோல்வியுற்றுள்ளதாக நினைவுள்ளது (சரியாக தெரியவில்லை) அது காஸ்மீருக்கான அர்சியல் சட்டமைப்பு மற்றும் காணி அதிகாரம் (மற்ற பகுதியில் உள்ள இந்தியர்கள் காஸ்மீரில் சொத்துக்கள் வாங்க முடியாது) இதனை ஆர்டிகல் 370 எனும் சிறப்பு அதிகாரம் மூலம் பேணப்பட்ட சட்டத்தினை மோடி அரசு நீக்கி யார் வேண்டுமென்றாலும் (இந்தியர்கள்) காஸ்மீரில் சொத்துக்கள் வாங்கலாம் என்பதுடன் மற்ற மானிலங்களுக்குரிய அதிகார உரிமையே காஸ்மீருக்கும் (தனியான அரசியலமைப்பு சட்டம்) எனும் நிலை உருவாக்கப்பட்டது.

இது இலங்கையில் தமிழர் பூர்வீக நிலங்களில் நிகழ்த்தப்படும் குடியேற்றம் போன்ற ஒன்றாக இருந்தமையால் காஸ்மீரிய போராளிகள் வெளி மானிலத்தவர்கள் காஸ்மீரில் சொத்துக்கள் வாங்க விரும்பாத நிலையினை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு காஸ்மீரிற்கு வெளியில் இருந்து வந்து அவர்களது நிலங்களை அபகரிப்பதனை தடுக்க எடுத்த முயற்சிதான் இந்த பயங்கரவாத தாக்குதல்கள்.

அடிப்படையில் மோடி அரசுதான் தற்போதய பயங்கரவாத தாக்குதலுக்கு ஆணி வேராக இருக்கலாம் என கருதுகிறேன்.

இந்தியா இலகுவாக இந்த சச்சரவினை முடிக்காது, முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளி என கருதப்பட்ட சிவராசன் தங்கியிருந்த இடத்தினை அறிந்தவுடன் அவர்கள் மீது உடனே தாக்குதல் நடத்தாமல் ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் வரை காத்திருந்து அதனை செய்தார்களாம், சிவராசனை உயிருடன் பிடிப்பது அவர்களது நோக்கமல்ல எனவும் அதனை குறிப்பிட்டவர் கூறியிருந்தார்.

முன்னால் இந்திய பிரதமரின் மறைந்த தினம் மே 21.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வீரப் பையன்26 said:

இந்திய‌ ஊட‌க‌ங்க‌ள் உண்மையை ம‌றைத்து ம‌த்திய‌ அர‌சுக்கு ஜால்ரா அடிப்ப‌தில் முத‌ல் இட‌ம்...................அணு குண்டை விட‌ ஆவ‌த்தான‌ ஊட‌க‌ம் த‌மிழ் நாட்டு த‌ந்தி ஊட‌க‌ம்...........................

நம்ம "லங்கா புவத்" ...மாதிரி

பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் ஒர் தூண் என்பார்கள் ஆனால் போர் என வந்துவிட்டா ஜனநாயக அரசுகள் எல்லாம் அந்த தூணை துப்பாக்கியினால் மறைத்துவிடுவார்கள் ... பேனாவுக்கு மை போடாமல் துப்பாக்கிக்கு குண்டுகளை போடுவார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

நான் ஏற்றுகொள்ள மாட்டேன்🤣

கூல் டவுண்....கூல் டவுண்.🤣

பாக்கியும் கிந்தியும் சமாதானமாய் போவம் எண்டாலும் சீனாக்காரன் விடான்.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கும் போது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கிழக்கு மேற்கு பாகிஸ்தான் எனவும் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி இந்தியா என இரண்டாக பிரித்து வழங்கியிருந்தார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்.

இஸ்லாமியர்கள் வாழும் பகுதி “இஸ்லாமிய குடியரசு” ஆக. ஏனைய பகுதிகள் “மதச்சார்பற்ற” இந்தியாவாகியது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இஸ்லாமியர்கள் வாழும் பகுதி “இஸ்லாமிய குடியரசு” ஆக. ஏனைய பகுதிகள் “மதச்சார்பற்ற” இந்தியாவாகியது என்பதே உண்மை.

தகவலுக்கு நன்றி, அப்படியே இந்த ஆர்டிக்கல் 370 பற்றியும் அறியத்தாருங்கள் அது பற்றி ஒரு தெளிவான புரிதல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

எனக்கும் இந்த வரலாறுகள் பற்றி தெளிவாக தெரியாது.

அடிப்படையில் மோடி அரசுதான் தற்போதய பயங்கரவாத தாக்குதலுக்கு ஆணி வேராக இருக்கலாம் என கருதுகிறேன்.

முன்னால் இந்திய பிரதமரின் மறைந்த தினம் மே 21.

நான் நினைக்கிறேன் மோடி அரசியலுக்கு வர முதலே இந்த பிரச்சனை இருக்கின்றது...மதப்பிரச்சனை ...1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு ஒர் போர் நடந்து கஸ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து மூன்றில் ஒர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் ..

பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி தாக்குதல் செய்வதினால் மோடி அரசு அந்த நிலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..மோடிக்கு சில அரசியல் நலன்கள் இருந்திருக்கலாம்.

ஜெ.வி.பி யினர் வடக்கு கிழக்கு இணையக்கூடாது ,தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை என இன்றுவரை சொல்வதும் அதற்காக சில இராணுவ,ராஜதந்திர நடவடிக்கைகளை செய்வது போன்று ...மகிந்தா/கோத்தா போன்றோர் எம் நிலத்தை சிதைத்தது போல ...

18 minutes ago, குமாரசாமி said:

கூல் டவுண்....கூல் டவுண்.🤣

பாக்கியும் கிந்தியும் சமாதானமாய் போவம் எண்டாலும் சீனாக்காரன் விடான்.😎

நாங்களும் விட மாட்டோம் 🤣...சியேர்ஸ் ஊத்து மச்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

நான் நினைக்கிறேன் மோடி அரசியலுக்கு வர முதலே இந்த பிரச்சனை இருக்கின்றது...மதப்பிரச்சனை ...1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு ஒர் போர் நடந்து கஸ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து மூன்றில் ஒர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் ..

பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி தாக்குதல் செய்வதினால் மோடி அரசு அந்த நிலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..மோடிக்கு சில அரசியல் நலன்கள் இருந்திருக்கலாம்.

ஜெ.வி.பி யினர் வடக்கு கிழக்கு இணையக்கூடாது ,தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை என இன்றுவரை சொல்வதும் அதற்காக சில இராணுவ,ராஜதந்திர நடவடிக்கைகளை செய்வது போன்று ...மகிந்தா/கோத்தா போன்றோர் எம் நிலத்தை சிதைத்தது போல ...

நான் குறிப்பிட்டது தற்போதய பயங்கரவாத தாக்குதலுக்கான நோக்கமாக ஆர்டிக்கல் 370 நீக்கம் ஒரு காரணியாக இருக்கும் என.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

மன்னராட்சி நிலவிய காஸ்மீர் அதனை இந்த இரு நாட்டுடனும் பித்தானியா இணைக்கவில்லை, அதன் முடிவை அந்த காஸ்மீரிய மக்களிடமே விட்டுவிட்டது.

சுதந்திரத்தின் பின் 80% முஸ்லிம்களுடன் இருந்த கஸ்மீரை சுதந்திர நாடாக விட்டு, இந்தியாவுடனா அல்லது பாகிஸ்தானுடனா இணைவது என்ற முடிவை அதன் இந்து மன்னராகிய ஹரி சிங்கிடம் விட்டனர் ஆங்கிலேயர். ஏதாவது ஒரு நாட்டுடன் இணையும் படி அவருக்கு ஆலோசனையும் வழங்கினர்.

மன்னர் சுவிற்சலாந்து போல் ஒரு குட்டி சுதந்திர அரசை வைத்கிருக்க எண்ணி, பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். அதே போல் ஒரு ஒப்பந்தம் இந்தியாவிடனும் போட வேலை நடந்து கொண்டிருந்தது.

ஆனால் - அதற்குள் மஹராஜாவுக்கு எதிராக உள்ளூரில் கலவரம் வந்து, அதை அடக்க அவர் திண்டாடினார். இதை பாகிஸ்தான் தூண்டியதாக சொல்லபடுகிறது.

அதே சமயம் - பதானிகள் கலக குழு என்ற போர்வையில் வடமேற்கில் இருந்து பாகிஸ்தானிகள் (இரானூவம் மாற்று வடிவில்) உள்ள நுழைந்து இடங்களை பிடிக்க - பீதியாகி போன மஹாராஜா ஒரு விசேட ஒப்பந்தம் மூலம் கஸ்மீரை இந்தியாவுடன் சேர்த்தார்.

இந்த ஒப்பந்த படி - இந்திய படைகள் கஸ்மீரில் நுழைந்து இப்போ இருக்கும் எல்லை கோடு வரை பாகிஸ்தான் படைகளை பின் தள்ளி, காஸ்மீர் 1/3 பாகிஸ்தானில், 2/3 இந்தியாவில் என பிளவுபட்டது.

அப்போதும் கூட ஹரி சிங், இந்தியா, கஸ்மீரி தலைவர் பரூக் அப்துல்லா அனைவரும் - இறுதி முடிவு கஸ்மீரிகள் முடிவின் (சர்வஜன வாக்கெடுப்பு) படியே என கூறினர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அதே சமயம் - பதானிகள் கலக குழு என்ற போர்வையில் வடமேற்கில் இருந்து பாகிஸ்தானிகள் (இரானூவம் மாற்று வடிவில்) உள்ள நுழைந்து இடங்களை பிடிக்க - பீதியாகி போன மஹாராஜா ஒரு விசேட ஒப்பந்தம் மூலம் கஸ்மீரை இந்தியாவுடன் சேர்த்தார்.

இது புளட்டினை வைத்து மாலைதீவை பிடித்தமாதிரியாகவும் இருக்கலாம் அல்லவா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.