Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள தேர்தல் 2007!!

யாழ்கள தேர்தல் 2007!! 44 members have voted

  1. 1. அடுத்த பிரதமரை தெரிவு செய்யவும்!!

    • திரு.கந்தப்பு (லிபரல் பார்ட்டி)
      20
    • திரு.சுண்டல் (லேபர் பார்ட்டி)
      15
    • திரு.புத்தன் (கிரீன் பார்ட்டி)
      3
    • திருமதி.இன்னிசை (நஷனல் பார்ட்டி)
      6
  2. 2. அவுஸ்ரெலிய தேர்தல் 2007!!

    • ஜோன் கவார்ட் !!(லிபரல் பார்ட்டி)
      20
    • கெவின் ருட்!! (லேபர் பார்ட்டி)
      24

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

கள்ள வோட்டா?????? இதென்ன கஷ்டகாலமா இருக்கு

இது சுண்டலின் சதித்திட்டம். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

அவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை என்பதை குறிபிடுவதோடு :lol: ...........மேலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெற மாட்டாது என்பதை நாட்டு மக்களுக்கும் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் வேட்பாளர்க்கும் கூறி கொள்ள விரும்புகிறோம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • Replies 113
  • Views 12.6k
  • Created
  • Last Reply

நீங்கள் என்ன தான் சொன்னாலும் எனது வேட் கந்தப்புக்கு தான், அவர் குந்தியிருந்து கொண்டு மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புகின்றேன். ஆனால் புத்தனை பார்க்க பாவமாக இருக்கு, அவருக்கு கள்ள வேட்டு போடலாமென பார்க்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தோதலில் உறவுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதனாலும் வேட்பாளர்கள் சிலரே 2 க்கும் அதிகமான பெயர்களில் இருப்பதாலும் இந்த தேர்தலை உடணடியாக செல்லுபடியற்றதாக அறிவிக்கவேண்டும் என்று எமது கட்சி கேட்டுகொள்கின்றது....தோல்விகள

இந்த தேர்த்தல் செல்லுபடியற்றது .இத் தேர்தலில் தேர்தல் ஆணையாளராக செயற்பட்ட ஜமுனா பக்கச்சார்பக செயற்பட்டதாக அறிந்த நீதிமன்றம் அவரை அப்பொறுப்பில் இருந்து இடைநிறுத்திவைத்துள்ளது

ஈழவன்

இடைகால தேர்தல் ஆணையாளர்

பேசாமல் இராணுவ ஆட்சியை கொண்டுவாங்கப்பா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆணையாளர் அவர்களே,நீங்கள் சிலந்தியை அனுப்பியதன் மூலம் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தமைக்கு நன்றி.

  • தொடங்கியவர்

நீங்கள் என்ன தான் சொன்னாலும் எனது வேட் கந்தப்புக்கு தான், அவர் குந்தியிருந்து கொண்டு மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புகின்றேன். ஆனால் புத்தனை பார்க்க பாவமாக இருக்கு, அவருக்கு கள்ள வேட்டு போடலாமென பார்க்கிறன்.

ஓ உங்க வாக்கு கந்தப்புவிற்கா கவி அக்கா :o ..........குந்தி இருந்து கொண்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்யலாம் அக்கா எனக்கு தெரியாம போச்சு :lol: !!கள்ளவாக்கு போடமுடியாது யார் தேர்தல் ஆணையாளர் கொனரபல்.ஜம்மு பேபி ஆக்கும் :icon_idea: !!சரி வந்து கைக்கு மையை பூசி கொண்டு போங்கோ கவி அக்கா!!ஆனாலும் புத்து மாமாவின் அந்த வாக்கு தான் ஆட்சியை நிருபிக்குதோ தெரியாது எதற்கும் பொருத்திருந்து பார்போம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இந்த தோதலில் உறவுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதனாலும் வேட்பாளர்கள் சிலரே 2 க்கும் அதிகமான பெயர்களில் இருப்பதாலும் இந்த தேர்தலை உடணடியாக செல்லுபடியற்றதாக அறிவிக்கவேண்டும் என்று எமது கட்சி கேட்டுகொள்கின்றது....தோல்விகள?? கண்டு துவண்டுபோகின்ற கட்சி எமது கட்சி அல்ல..மாறாக தோல்விகளை வெற்றிபடிகளாக ஆக்கி அவற்றின் ஊடே வெற்றிகளை அடைவது தான் எமது கட்சியின் நோக்கம் ஆனால் சதிகள் நடக்கின்றபோது அவற்றை வெளிகொண்டுவருவது இந்த கருத்துசுதந்திரமிக்க நாட்டி;ல சீ களத்தில் எமக்கு இருக்கும் உரிமையாகும்.....

கள்ளு வாங்கி கொடுத்து மக்களின் வரிபனத்தில் ஒட்டு போட சொல்வது ஜனநாயக வரமுறைக்கு அப்பால் பட்டதாகும்...ஆகவே தேர்தல் ஆனையாளர் உடனடியாக இந்த தேர்தலை இரத்து செய்துவிட்டு மறு தேர்தல் ஒன்றை ஜனநாயக வரமுறைகளுக்கு உட்பட்டு களத்தில் ஒரு ஜடி யை மட்டும் வைத்திருப்பவர்களை வேட்பாளர்காக நிறுத்தவேண்டும் என்று எமது கட்சி கேட்டுகொள்கின்றது...

தேர்தலை எக்காரணம் கொண்டு செல்லுபடி அற்றதாக அறிவிக்க முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் அறிய தருகிறோம் :) !!பலத்த எதிர்பார்புகளுக்கு மத்திர்யில் நடைபெறும் இந்த தேர்தலை வெற்றியாக நடத்தி செல்வதே என்னுடைய வேலை :) !!அட தேர்தலில நிற்பாட்டின உடனேயே ஓவரா கதைக்க தொடங்கிட்டார் சுண்டல் அண்ணா...........அது யார் 2 ஜடியில வாற தேர்தல் வேட்பாளர் ???அவரே எவ்வளவு அமைதியாக இருக்கிறார் :lol: நீங்க என்னவென்றா என்னும் 2 நாட்கள் உள்ளன திரு.சுண்டல் அவர்களே ஆகவே உங்கள் வாக்கு வங்கி உயர கூடிய நிலையும் உள்ளது குறிப்பாக "துங்காபி" தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் அறிவிக்கபடும்வரை நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்!! :)

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்

ஜம்முபேபி!!

  • தொடங்கியவர்

இந்த தேர்த்தல் செல்லுபடியற்றது .இத் தேர்தலில் தேர்தல் ஆணையாளராக செயற்பட்ட ஜமுனா பக்கச்சார்பக செயற்பட்டதாக அறிந்த நீதிமன்றம் அவரை அப்பொறுப்பில் இருந்து இடைநிறுத்திவைத்துள்ளது

ஈழவன்

இடைகால தேர்தல் ஆணையாளர்

இப்படியான வதந்திகளை நம்புவதிற்கு இது ஒன்றும் சிறிலங்கா இல்லை அவுஸ்ரேலியா :icon_idea: ஆகவே மக்கள் இவ்வாறான வதந்திகளை பரப்பும் நபர்களை கண்டால் "000" என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்!! :lol:

"அமைதியான முறையில் தேர்தல் நடத்தி செல்வதே எமது குறிகோள்"!!

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

பேசாமல் இராணுவ ஆட்சியை கொண்டுவாங்கப்பா :lol:

வசி அண்ணா இப்படி பப்ளிக்கா சொல்ல கூடாது தேர்தல் முடியட்டும் அன்றைக்கு நாம இரண்டு பேரும் இராணுவ ஆட்சியின் மூலம் கைப்பற்றுவோம்!! :o

அப்ப நான் வரட்டா!!

ஆணையாளர் அவர்களே,நீங்கள் சிலந்தியை அனுப்பியதன் மூலம் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தமைக்கு நன்றி.

நன்றி எல்லாம் எதற்கு இது என்னுடைய கடமை!! :lol:

அப்ப நான் வரட்டா!!

கந்தப்புவுக்கே எனது வாக்குகள்.

அவர் ஒரு அனுபவம் பழம்!

குந்தியிருந்து நிதானமாக நாட்டுமக்களுக்கு சேவை செய்வார்!

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கும் கந்தப்புக்குத்தான்.அவர் பிரதமரானால் வீட்டுத்தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும் எல்லோ :lol: அது சரி ஈழவன் எந்த இடைத்தேர்தலுக்கு ஆனையாளர் :o

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தேர்தல் இரத்து செய்ய பட்டு இராணுவ ஆட்சி பிரகடணபடுத்த படுகினவர்கள்றது....கந்தப்பு அவர்கள் இன்று முதல் வீட்டு காவலில் வைக்க படகின்றார்....ஹிஹிஹி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்புவை இரத்ததிலகமிட்டு வரவேற்கின்றேன் :lol:

  • தொடங்கியவர்

கந்தப்புவுக்கே எனது வாக்குகள்.

அவர் ஒரு அனுபவம் பழம்!

குந்தியிருந்து நிதானமாக நாட்டுமக்களுக்கு சேவை செய்வார்!

சாணக்கியன் அண்ணா வாக்கு போட்டாச்சோ சரி கையை காட்டுங்கோ மையை பூசி விட!! :lol:

அனுபவ பழம் என்று எல்லாம் வாக்கு போட கூடாது நாட்டுக்கு என்ன செய்வார் என்று பார்க்க வேண்டும்...... :D குந்தியிருந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்தா நல்லது தான் என்றாலும் நாளை வரை தேர்தல் நடைபெற இருப்பதால் என்னவும் நடக்கலாம் பொறுத்திருந்து பார்போம்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

எனது வாக்கும் கந்தப்புக்குத்தான்.அவர் பிரதமரானால் வீட்டுத்தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும் எல்லோ :lol: அது சரி ஈழவன் எந்த இடைத்தேர்தலுக்கு ஆனையாளர் :D

வீட்டு தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்குமோ என்ன நுளம்பு தொல்லையில இருந்தோ சகிவன் தாத்தா :lol: ...........ஈழவன் அண்ணா வந்து கள்ளு கொட்டிலிற்கு இடைகால தேர்தல் ஆணையாளர்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இன்று தேர்தல் இரத்து செய்ய பட்டு இராணுவ ஆட்சி பிரகடணபடுத்த படுகினவர்கள்றது....கந்தப்பு அவர்கள் இன்று முதல் வீட்டு காவலில் வைக்க படகின்றார்....ஹிஹிஹி

அவ்வாறன அசம்பாதவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பதை அறியதருகிறோம் :lol: .......தேர்தல் மிகவும் சுறுசுறுப்பாக உச்சகட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது ஆகவே அமைதியான முறையில் தேர்தலை நடத்தி செல்ல உதவுமாறு கேட்டுகொள்கிறோம்!! :D

இது வரை நடந்து முடிந்த வாக்கெடுப்பின் அடிபடையில்!!

லிபரல் பார்ட்டியை சேர்ந்த திரு.கந்தப்பு - 15 வாக்குகள்

லேபர் பார்ட்டியை சேர்ந்த திரு .சுண்டல் - 8 வாக்குகள்

கிரீன் பார்ட்டியை சேர்ந்த திரு.புத்தன் - 1 வாக்கு

நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி .இன்னிசை - 4 வாக்குகள்

அவுஸ்ரெலிய தேர்தல் 2007 யாழ்கள உறவுகள் அளித்த வாக்குகளின் அடிபடையில்!!

லிபரல் பார்ட்டியை சேர்ந்த ஜோன் கவார்ட் - 16 வாக்குகள்

லேபர் பார்ட்டியை சேர்ந்த கெவின் ரூட் - 12 வாக்குகள்

இது தற்போது கிடைக்கபெற்ற முடிவுகள் நாளை வரை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் முடிவுகள் கிடைக்கும் போது அவ்வபோது உடனுகுடன் அறிவிக்கபடும்!! :lol:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

கந்தப்புவை இரத்ததிலகமிட்டு வரவேற்கின்றேன் :lol:

கு.சா தாத்தா வாக்கு போட்டாச்சோ!! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையாக ஆரம்பிக்கப்பட்ட இத்தேர்தலில் எனக்கு ஒன்று இரண்டு வாக்குகளே கிடைக்கும் என நான் முதலில் நினைத்தேன். ஆனால் இரத்தத்திலகமிட்ட குமாரசாமி, விட்டுத்தொல்லையில் இருந்து (ஒருவேளை மனைவியிடம் இருந்தோ?) விடுபட நினைக்கும் சகிவன், அனுபவப் பழம் என்று சொல்லும் சாணாக்கியன், எனது காசில் கசிப்புக் குடிக்க நினைக்கும் சித்தன், என்னுடன் 3ம் வகுப்பில் படித்த தோழி யாழ்கவி ஆகியோரிடமிருந்தும், வேறு பதிவு எழுதாது வாக்களித்த சிலரிடமிருந்தும் 15 வாக்குகள் கிடைத்ததினை இட்டு மகிழ்வடைகிறேன். நன்றிகள். நான் வெற்றி பெற்றால் எனது கட்சியில் வாக்களித்த அனைவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அத்துடன் தேர்தலில் போது சொன்ன கணனிகளும் மக்களுக்கு வழங்கவுள்ளேன். கசிப்பு பிரியர்களுக்கும் உதவி செய்வேன்.

  • தொடங்கியவர்

அப்ப உங்களுக்கு இரண்டு வாக்கு கிடைக்கும் என்று ஏற்கனவே தெரியுமோ கந்தப்பு தாத்தா அப்ப கள்ள வாக்கு போட யோசித்து இருக்கிறியள் போல இருக்கு :wub: !!அதை போட்டாச்சோ...........அட கள்ளு கொட்டிலில் இருக்கும் கு.சா தாத்தா :lol: ................கசிப்பு குடிக்கும் சித்தன் அங்கிள் :D மற்றது 3 வகுப்பு பெயில் கவி அக்கா மற்றது சாணக்கியன் அண்ணாவோ இவை எல்லாம் அமைச்சரவையில் வீற்றிருக்க போகீனம் என்ன கொடுமை இது :lol: ...........அது சரி கந்தப்பு தாத்தாவே பிரதமர் ஆகும் போது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

என்னால் வாக்கு போடவே முடியல்லை. ஏன்? ஆளைத்தெரிவு செய்துட்டு வாக்களி என்பதை அமத்த இபப்டி வருது. ஏன் ஏன் ஏன்? :D

trguf4.jpg

  • தொடங்கியவர்

நிலா அக்கா இது வந்து நீங்க மேல யாழ்கள உறவுகளிள் ஒருவரையும் கீழே இருப்பதில் அவுஸ்ரெலிய வேட்பாளரிள் ஒருவரையும் தெரிவு செய்ய வேண்டும் அக்கா அப்படி செய்தா இப்படி வராது!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

நிலா அக்கா இது வந்து நீங்க மேல யாழ்கள உறவுகளிள் ஒருவரையும் கீழே இருப்பதில் அவுஸ்ரெலிய வேட்பாளரிள் ஒருவரையும் தெரிவு செய்ய வேண்டும் அக்கா அப்படி செய்தா இப்படி வராது!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

எனக்கு அவையை யார் என்று தெரியா.

ஆனால் இப்ப வாக்களிச்சிட்டேன் :wub:

  • தொடங்கியவர்

எனக்கு அவையை யார் என்று தெரியா.

ஆனால் இப்ப வாக்களிச்சிட்டேன் :lol:

அவையோ அவரில "ஜோன்கவார்ட்" என்று இருக்கிறார் அவர் தான் தற்போதைய பிரதமர் சரியோ :D மற்றவர் லேபர் பார்ட்டியை சேர்ந்த அதாவது எதிர்கட்சி தற்போதைய :lol: .............ஓ வாக்கு போட்டாச்சோ சரி வந்து கை காட்டுங்கோ "மை" போட!! :wub:

அப்ப நான் வரட்டா!!

நான் இன்னிசையக்காவிற்கு வாக்கு போட வந்தேன். ஆனால் அதற்குள் எனது வாக்கை யாரோ போட்டு விட்டார்கள். நான் எப்படி வாக்களிப்பது?

தயவு செய்து உடன் பதில் தரவும் ஜம்ஸ் அண்ணா.

ஜம்ஸ் அண்ணா!

இரண்டு பேரின் படம் போட்டுக்கிடக்குது யார் ஆக்கள் இவர்கள்?

ஒருவரைப்பார்த்தால் ஆனைக்கோட்டை ஆஸ்பத்திரியில் பார்த்தமாதிரி இருக்குது.

மற்றவரைப்பார்த்தால் மந்திகை மாங்காய் புடுங்கிறவன் மாதிரி இருக்குது.

யாரப்பா இவர்கள் ? பிளீஸ் ரெல் மீ

  • தொடங்கியவர்

மருமகன் அண்ணா யாரும் உங்களின் வாக்கை போடமுடியாது நீங்கள் தான் போடலாம் :D ஒருவேளை உங்கள் பாஸ்வேர்ட் வேற யாருக்கும் தெரியுமோ நல்லா யோசித்து பாருங்கோ :wub: இல்லை நீங்க வேற யாருக்கும் வாக்கு போட்டுவிட்டு மறந்துட்டியளோ தெரியாது மருமோண் அண்ணா :lol: !!பாவம் இன்னிசை தங்காவிற்கு ஒருவாக்கு குறைய போகுது ஆனாலும் நீங்க ரொம்ப சமத்து அண்ணா!! :lol:

அட அட படத்தில இருக்கிறவைய பார்த்தா ஆணைகோட்டை ஆஸ்பத்திரியில இருக்கிறவையள் மாதிரியும் மந்திகையில மாங்காய் பிடுங்கிறவை மாதிரியுமா இருக்கீனம் என்னால முடியல :D ...........அதில ஒருவர் கொஞ்ச வயசு போயிருகிறார் அவர் தான் ஜோன்கவார்ட் தற்போதைய அவுஸ்ரெலிய பிரதமர் அவருக்கு பக்கத்தில இருக்கிறவர் தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர் கெவின் ரூட் :lol: !!நாளை நடக்க போகும் அவுஸ்ரெலிய தேர்தல் 2007 யில் இவர்கள் இருவரும் களத்தில் குதிக்கின்றனர் சரியோ நீங்க வேண்டும் என்றா நம்ம கந்தப்பு தாத்தாவையும்,சுண்டல் அண்ணாவையும் பார்திருப்பியள் இவர்களை பார்த்திருக்க மாட்டியள்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி.

இவர்கள் இருவரும் களத்தில் குதிக்கின்றனர் :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி.

குளத்தில் குதிக்களாம்

ஆனால் களத்தில் எப்படி குதிக்கிறார்கள்

  • தொடங்கியவர்

குளத்தில் குதிக்களாம்

ஆனால் களத்தில் எப்படி குதிக்கிறார்கள்

குளத்திலும் சரி களத்திலும் சரி குதிக்கலாம் ஆனா கவனமா பார்த்து குதிக்க வேண்டும் பிறகு யோசிக்க கூடாது அல்லோ :lol: !!குளத்தில் குதிப்பது போல தான் களத்திலும் குதிக்கிறார்கள் உது தெரியாதோ :D !!அதற்காக நீங்க குதித்துபோடாதையுங்கோ மருமோண் அண்ணா!! :wub:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

  • தொடங்கியவர்

அவுஸ்ரெலிய தேர்தல் தற்போது முடிவிற்கு வந்துள்ளது மாலை 6 மணியுடன் :( ஆனால் யாழ்கள தேர்தல் அவுஸ்ரெலிய நேரம் இரவு 10 மணி வரை நடக்க இருகிறது :) ஆகவே வாக்குகளை போடாத வாக்கள மக்கள் அனைவரும் விரைந்து சென்று வாக்குகளை போடும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் இன்னும் 4 மணி நேர அவகாசம் மட்டுமே உள்ளது :icon_idea: !!தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதை பார்க்க சந்தோசமாக இருகிறது!! :)

லிபரல் பார்ட்டி வேட்பாளர் திரு .கந்தப்பு தாத்தாவின் பிரதான தேர்தல் தொகுதியான பரமத்தா தேர்தல் தொகுதி வாக்குகள் மற்றும் லேபர் பார்ட்டி வேட்பாளர் திரு.சுண்டல் அண்ணாவின் பிரதான தேர்தல் தொகுதியான துங்காபி தேர்தல் தொகுதி ,கிரீன் பார்ட்டியை சேர்ந்த திரு.புத்தனின் பிரதான தொகுதியான வெஸ்மீட் தேர்தல் தொகுதி மற்றும் நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை தங்காவின் பிரதான தேர்தல் தொகுதியான பிரிஸ்பன் தேர்தல் தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்னும் சில மணித்தியாலங்களிள் ஆரம்பிக்கபடும் என்பதை அறிய தருகிறோம் :D !!இந்த தொகுதியில் ஏற்படும் மாற்றங்கள் தான் தேர்தலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.