Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் என்பதனால் மாணவியை பாடசாலையில் சேர்க்க அனுமதி மறுப்பு

Featured Replies

சிறிலங்காவில் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆவதாக உயர்புள்ளி பெற்ற மாணவிக்கு தமிழர் என்ற காரணத்தினால் பாடசாலையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாணவியின் பெயர் நேத்மி யோகேந்திரா! இந்த பொண்ணு உண்மையிலே தமிழர் என்றால் அவர் ஏன் தனது பெயரை யோகேந்திரா என மாற்ற வேண்டும்? யோகேந்திரன் தானே தமிழ் பெயர்? விசாகா என்பது சிங்கள மொழி மூலம் மட்டுமே கற்ப்பிக்கபடும் பாடசாலை. இலங்கையின் சுய பாஷா சட்டத்தின் படி தமிழர் தமிழில் மட்டும், சிங்களவர் சிஙளத்திலும் மட்டுமே கற்க்க முடியும். முசுலீம்கள் விரும்பிய மொழியில் கற்க்கலாம்.

நான் நினைக்கிறேன் இந்த "சிங்களவராக தன்னை காட்டி கொள்ள விரும்பிய தமிழ் பெண்" இதுவரை எப்படியோ சிங்க்களத்தில் படித்து 5ம் வகுப்புவரை வந்திருக்கவேண்டும்.

இப்போது விசாகாவுக்கு போனதும் விசயம் பிடிபட்டுள்ளது.

தமது சுயத்தை மறைத்து சிங்களராக, பெயர் மாற்றுபவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.

நீங்கள் உங்களை முயற்ச்சித்து சிங்களவர் போல காட்டிக்கொண்டாலும் அவர்கள் உங்களை தமிழராகவே பார்ப்பர்.

இதுக்கு யாழும் புதினமும் வேற முக்கியதுவம் தாறதுதான் வேதனை. வன்னியிலும் திருமலையிலும் தமிழில் பெயர் வைத்த தமிழ் பிள்ளையள் எத்தனியோ வாழ வயில்லாமல் சாகுதுகள் அதப்பற்றி எழுதலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவியின் பெயர் நேத்மி யோகேந்திரா! இந்த பொண்ணு உண்மையிலே தமிழர் என்றால் அவர் ஏன் தனது பெயரை யோகேந்திரா என மாற்ற வேண்டும்? யோகேந்திரன் தானே தமிழ் பெயர்?

சர்வேந்ததிரா யோகேந்திரா ராஜேந்திரா என்றும் யாழ்ப்பாணத்தில் பெயர் வைப்பதுண்டு. தமிழ் பெயர் என்றதும் ஞாபகம் வருகிறது. ஒரு தமிழக எழுத்தாளருடன் பிராங்பேட் விமான நிலையத்தில் நின்றேன். அறிவித்தல்களில் தமிழரது பெயர்கள் வந்துகொண்டிருந்தது. சேகர், மணிவண்ணன் போன்ற ஒரு சில பெயர்களைத்தவிர ஏனைய அனைத்துப் பேர்களும் சந்தேகத்துக்கிடமில்லாமல் இலங்கைத் தமிழர்களது பெயர் என்று சொன்னார். எப்படி என்று கேட்டேன். இலங்கைத் தமிழர்கள்தான் எண் சாதிரம் பார்த்து சமஸ்கிரதம்போல திரிந்த அர்த்தமற்ற பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள் என்றார். தமிழர் விடுதலை தனித் தமிழ் பற்றி பேசும் பல ஐரோப்பிய கனடா தமிழர்கள் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும்போதுதான் அவர்களது தமிழ் பற்று எவ்வளவு போலியானது என்று தெரிகிறது என்று சொன்னார். நான் அவரது கருத்தை ஏற்க்க மறுத்தாலும் வலிய பதில் ஒன்றும் என்னிடம் இருக்கவில்லை. அதுசர் மீ தமிழனது பிள்ளைகளின் பெயர் என்ன என்று கேட்கலாமா? கோபிக்கவேண்டாம் எண்சோதிடம் ஒரு மன நோய் மட்டத்துக்கு நம்மவர் மத்தில் தீவிரப்பட்டு பரவிவருகிறது. நாங்கள் இதுபற்றி சிந்திப்பது நல்லது.

Edited by poet

பொயற் தாயகத்திலோ புலத்திலோ பெயர்கள் வைக்கப்படும்போது எண் சோதிடம் பார்த்து ஒரு பகுதியினர் என்றால் மற்றொரு பகுதியினர் ஸ்டைலுக்காவும் அர்த்தமற்ற பெயர்கள் மாத்திரமல்ல அசிங்கமான அர்த்ததுடனான பெயர்களும் வைக்கப்படுகின்றன.

தமிழகத் தமிழர்களுடன் ஒப்பிடும்போது ஈழத்தமிழர்கள் தமிழ் அல்லாத பெயர்களைச் சூட்டுவதில் நீண்டகாலமாக தீவிரம் காட்டுகின்றனர். தாயகத்தில் தமிழீழ நிதித்துறையின் சில முயற்சிகளின் சலுகைகளின் பின்னர் சில ஆயிரம் குழந்தைகளிற்கு தூய தமிழ்பெயர்கள் அண்மைய ஆண்டுகளில் சூட்டப்பட்டிருக்கின்றன. சூட்டப்பட்டு வருகின்றன. புலத்தில் விரவிட்டு எண்ணக்கூடியவர்களே தமிழ்பெயர்களில் நாட்டம் காட்டுகின்றனர்.

மீ தமிழன் அண்ணை அந்த மாணவியின் பெயரும் தமிழில்லை, தந்தையின் பெயர் யோகேந்திரா எண்டாலும், யோகேந்திரன் எண்டாலும் தமிழில்லை. தமிழிலில்லாத பெயரை அவர்கள் எப்படி மாற்றினாலென்ன?

  • கருத்துக்கள உறவுகள்

யோகேந்திரா துரைசாமி என்ற தமிழரின் பெயருள்ளது ,யோகேந்திரா என்பது தமிழ் பெயராக இல்லாத போதும்.ஆகவே மேற்கூறியாவரின் பெயரும் இருக்கலாம் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெயர் எதுவாயினும் சிங்கள மொழிமூலம் படித்தனினால் தானே விசாகாவுக்கு போகவேண்டி வந்தது? தமிழர் சிங்களத்திலும் சிங்களவர் தமிழிலும் படிக்க கூடாது என்று சட்டம் சொல்லும் போது இவர் மட்டும் எப்படி 5ம் வகுப்புவரை சிங்களத்தில் படித்தார்? நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறுதர்க்காக இன அடையாளத்தை மாற்றிய கேஸ்தான் இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போயற் சொல்வது போல பலபேர் பேரை சுருக்கி வெள்ளை படுத்தீனம்.

ஈஸ்வரன் Warren ஆவதும், சிவதரன் Darren ஆவதும் மார்க்கண்டு Mark ஆவதும்...சொல்லி வேலைஇல்லை.

இதுகளிட்டை ஒருக்கா கேக்கோணும்

"ஏனப்பு உனக்கு வெள்ளைகாரனே அப்பன்?" :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் 96 காலப்பகுதியில் கொழும்பிலைதான் புலமைப்பரிசில் எழுதி படித்த பாடசாலையில் 4வது இடம் வந்தனான். அப்பொழுதும் இதே மாதிரி ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது.. அந்த பரிட்சையில் சித்தி பெற்றதற்கு எனக்கு உதவிப்பணம் தரவேண்டும். அதற்கு நான் இருந்த கொட்டகேன விதானையிடம் போய் கையெழுத்து வாங்கவேண்டும். அங்க அவன் சொன்னான் உங்களுக்குதானே பிரபாகரன் இருக்கிறார் அவரிட்டைபோய் கையெழுத்து வாங்கிகொண்டு வா என்று.. பிறகு என்ன.. அது அவ்வளவுதான்.. எனக்கு அந்த உதவிப்பணம் கடைசிவரை கிடைக்கவேயில்லை..

இந்த விடயத்தை செய்தியாக்கிய புதினம் கூட அடிப்படை உண்மையை மறைத்து தமிழர்களை உருவேற்றி விட நினைக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் அப்படியொன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை புதினம் எப்போது உணரப்போகின்றதோ??

இந்த விடயத்தை செய்தியாக்கிய புதினம் கூட அடிப்படை உண்மையை மறைத்து தமிழர்களை உருவேற்றி விட நினைக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் அப்படியொன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை புதினம் எப்போது உணரப்போகின்றதோ??

சிங் சாங் சிங் சாங் வசம்பு அண்ணா என்ன சொல்லுறிங்கள்? :o

விசாகா வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் வசதி உள்ள்ளது.பம்பலப்பட்டி இந்துகல்லூரியிலும் ஆங்கிலத்தில் கல்வி கற்கும் வசதி உள்ளது

உதுக்கெல்லாம் நீதி கேட்டு ஆராட்சி மணி அடிச்சா... எந்த நாழும் சாகிற எங்கடசனம் எந்தமணியை அடிக்கிறது?

தமிழ் மொழி அமுலாக்கலின் சீத்துவம் தெரியாத ஆக்களுமில்லை ஊருமில்லை... உந்த கேவலத்தில மாகளுக்கு சிங்கள பாடசாலைல இடம் தரேல்லை எண்டு தமிழ் உணர்வை சீண்டிப்பாக்கிறது... சரியாப்படேல்ல.

விசாக இல்லாட்டா இன்னமொண்டு... சிங்களத்தில படிக்கிறெண்டு முடிவெடுத்தாபிறகு பாடசாலைக்கா பஞ்சம்? விசாகா தான் வேண்டுமெறு அடம்பிடிக்க கூடாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.