Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனையும் பொட்டம்மானையும் மன்னிப்பதற்கு அரசு தயாரில்லை - மகிந்த

Featured Replies

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனத்தைச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கன்றது எனத் தெரிவித்த அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, பிரபாகரனையோ அல்லது பொட்டம்மானையோ மன்னிப்பதற்கு அரசாங்கம் தயாராகவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார். அடுத்த ஒன்றரை வருட காலத்துக்குள் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்திமுடிக்கப்பட்டுவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மார்கா நிறுவனத்தைச் சேர்ந்த கொட்பிரி குணதிலக்க, பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ, தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா உட்பட பல அரசுத் தலைவருடனான இந்தச் சந்திப்பில் பங்குகொண்டனர். இந்தச்சந்திப்பில் மேலும் கருத்துவெளியிட்ட அரசுத் தலைவர், அரசியலமைப்புச் சபையை அமைப்பதற்கான எண்ணம் எதுவும் தனக்கு இல்லை எனத் தெரிவித்தார். ஆனால், சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்படும் என அவர் கூறினார்

அரசியலமைப்புச் சபை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் எனக்கோரும் போராட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றது. இருந்தபோதிலும் அது தொடர்பில் தன்னுடைய பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தாத அரசுத் தலைவர், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக தற்போதைய தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவையே நியமிக்கலாம் என்ற யோசனையையும் முன்வைத்தார்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்தவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக கதைகள் அடிபடும் நிலையில், அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ அதனையும் திட்டவட்டமாக மறுத்தார். அடுத்த பொதுத் தேர்தல் 2010 ஆம் ஆண்டுதான் நடைபெறும் எனவும் கூறிய அரசுத் தலைவர், அதற்கு முன்னர் திடீர்த் தேர்தல் எதனையும் நடத்தும் யோசனை தன்னிடம் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் மட்டுமே அரசாங்கம் இப்போது அக்கறையாக இருக்கின்றது எனத் தெரிவித்த அரசுத் தலைவர், அதனைவிட வேறு தேர்தல்கள் எதனையும் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவில்லை எனவும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

மூடப்பட்டுள்ள ஏ-9 வீதியைத் மீண்டும் திறப்பதென்ற முடிவை அரசாங்கம் ஏன் இதுவரையில் எடுக்கவில்லை என சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்குப் பதிலளித்த அரசுத் தலைவர், 'இந்த வீதியைப் பயன்படுத்தி என்னையும் ஏனைய தலைவர்களையும் படுகொலை செய்வதைபப் பார்ப்பதற்கு விரும்புகின்றீர்களா?" எனப் பதில் கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்: http://www.webeelam.com

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனத்தைச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கன்றது எனத் தெரிவித்த அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, பிரபாகரனையோ அல்லது பொட்டம்மானையோ மன்னிப்பதற்கு அரசாங்கம் தயாராகவில்லை" என்று தெரிவித்துள்ளார்

அப்படிதான் அவர்களும் சொல்லுகிறார்கள் இல்லை செயலில் காட்டுகிறார்கள். அதாவது இனவாதிகளுக்கு மன்னிப்பே இல்லை என்று.

பாதையைத் திறந்தா பலி விழுமாம்.. மகிந்த கிலிக்கு அளவே இல்லாமப் போச்சு..

பெரிய காமடி மன்னிப்பே இல்லையாம்.. யார் யார மன்னிக்கிறதெண்டு ஒரு விவஸ்தையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட அரியண்டம் தாங்க முடியாமல் கிடக்குதே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை யார் மன்னிக்கிறது ?

  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டாங்கய்யா............ வந்துட்டாங்க

..........இனி அசத்த போவது யாரு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முகமூடி கும்பல்களை மன்னிக்க கரும்புலிகள் தயாரில்லையாம்.

அவையள் பாடுகினமாம்

சின்ன சின்ன ஆசை கட்டிப்பிடிச்சு முத்தமிட ஆசையாம்.

மகிந்த உங்களுக்கும் ஆசையா?

இவரிடம் தலைவரோ பொட்டம்மானோ தங்களை மன்னிக்கும் படி கேட்டவையோ விரைவில என்னை மன்னியுங்கள் என இருவரிடமும் கேட்கபோகிரார் மகிந்த என்பதுதான் உண்மை

மகிந்தவின் பகிடிகளை சீரியஸா எடுக்காதீங்கோ. உப்படியெல்லாம் பகிடிவிடத் தெரிந்த ஒரு நகைச்சுவையாளன் சிங்கள மக்களுக்கு தலையா கிடைச்சதுக்கு கொடுத்து வைக்க வேணும் கண்டியளே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனையோ அல்லது பொட்டம்மானையோ மன்னிப்பதற்கு அரசாங்கம் தயாராகவில்லை"

அதாவது தமிழராய்ப்பிறந்த எவனையும் மன்னிக்கத்தயாராய் இல்லை

ஏனெனில்இவர்கள் இல்லாது தமிழர் ஏது???

மன்னிப்பு கேட்டாத்தானே மன்னிப்பதற்கு?

யாரை யார் மன்னிக்கிறது ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.