Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்னாங்காணி வறை

Featured Replies

ponnaagkani%20keerai.jpg

இன்று நான் எழுத இருப்பது என் அப்பாச்சியிடம் இருந்து நான் கற்ற ஒரு செய்முறை. பொன்னாங்காணி வறை அப்பாச்சி சமைத்தால், நானும் அப்பப்பாவும் சாப்பிட அழைக்க முன்னரே சாப்பாட்டு தட்டுடன் உட்கார்ந்திருப்பம். அத்தனை சுவை. இதை உண்டவர்களுக்கு தான் அருமை தெரியும். கீரைல அத்தனை சுவையா என கேள்வி கேட்பவர்கள் ஒரு தடவை இதை சமைத்து சாப்பிட்டால் விடை சுலபமா கிடைக்கும்.

பொன்னாங்காணி என பெயர் வர காரணம் என்ன? "பொன் ஆம் காண் நீ" என்பது மருவி தான் பொன்னாங்காணி ஆகிவிட்டதாம். இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் வருமாம். அது எப்படி என எனக்கு தெரியாது. ஆனால் சுவை அதிகம் தான். இந்த கீரைல சுவையை தவிர என்ன பயன்கள் என பார்த்தால்: கண்ணிற்கு நல்லது, பசியை தூண்டும், மலச்சிக்கலை போக்கும். இது தவிர வேறு பல நல்ல பயங்களும் இருப்பதாக அறிந்தேன். தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். பொன்னாங்காணிக்கு ரொம்பவே அதிகமா விளம்பரம் குடுத்திட்டன் என நினைக்கிறேன். இனிமேலாவது செய்முறைக்கு போகலாம்.

எங்க வீட்டில், பின் தோட்டத்தில் பொன்னாங்காணி இருக்கு. இந்த கீரையில் வரும் பூவில் தான் விதை இருக்கும். இந்த விதையை ஈழத்தில் இருந்து எடுத்திட்டு வந்தாங்க. எடுத்திட்டு வந்தது யாருன்னு சொல்ல மாட்டேன். கிகிகிகி. எத்தனை நாட்டு கஸ்டம்கு தண்ணி காட்டிட்டு வந்திருக்கு. அதனால எங்க வீட்டில இதுக்கு ராஜ மரியாதை.

தேவையான பொருட்கள்:

பொன்னாங்காணி கீரை - 1 பிடி

வெங்காயம் சிறிதாக அரிந்தது - 1/2 கப்

மிளகாய் சிறிதாக அரிந்தது - 2 மே.க

கடுகு - 1/2 தே.க

சின்ன சீரகம் - 1/2 தே.க

தேங்காய் பூ - 3 மே.க

நல்லெண்ணய் - 2 தே.க

உப்பு தேவைக்கேற்ப

இனி தோட்டத்தில் கீரையை இழுத்து எடுத்ததில் இருந்து ஆரம்பிக்கலாம்:

1. கீரையை தோட்டத்தில் இருந்து எடுத்துக்குங்க. இல்லேன்னா வாங்கிக்குங்க.

2. ஒவ்வொரு இலையாக பிடுங்கி எடுத்துக்குங்க. நல்ல இலைகளை மட்டும் தான் எடுங்க. இப்போ இங்கு குளிர்காலம் என்பதால் இலைகள் அவ்வளவு நன்றாக இல்லை. ஆனாலும் "பொன்" ஆம் காண் ஆயிற்றே.

3. இலைகளை பிடுங்கிற்றிங்களா? (இது ரொம்பவும் பொறுமையை சோதிக்கிற வேலை. பொறுமையே நிறைந்த செல்வம் என நினைக்கிறவங்க தான் இந்த செய்முறையில வெற்றி அடைய முடியும்) அடுத்து தண்ணில போட்டு நல்லா அலசி எடுத்துக்குங்க. நீரை வார விடுங்க.

4. தண்ணி வார்ந்ததும், இலைகளை பிடியாக எடுத்து அரிந்துகொள்ளுங்க. சிறிதாக அரிய வேண்டிய அவசியம் இல்லை.

5. ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சின்ன சீரகம் போட்டு கிளறுங்க, கடுகு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்குங்க.

6. இப்போ கீரையை போட்டி நன்றாக கிளற வேண்டும். இலைகள் அரைப்பதத்திற்கு அவியும் வரை கிளறுங்க.

7. இதில தேங்காய் பூ, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, அடுப்பில் இருந்து சட்டியை இறக்கினால் பொன்னாங்காணி வறை ஆயத்தம்!

கவனிக்க வேண்டியவை:

1. பொறுமை மிக அவசியம். இலைகளை பிடுங்கும் போது "இதுக்கு வரவனையானின் கவிதை ஒன்றை வாசித்து, அர்த்தம் என்ன என ஆராய்ந்திருக்கலாம்" என நினைப்பதை என்னால் தடுக்க முடியவில்லை.

2. இலைகளை நன்றாக தண்ணியில் அலச வேண்டும். (இங்கு தண்ணி என்பது நீரை மட்டும் குறிக்கின்றது).

மேலதிக படங்களுக்கு:

http://thooyaskitchen.blogspot.com/

Edited by தூயா

ஒரு முறை இந்தக் கீரைக் கட்டினை வாங்கி நாம் பட்ட அவதியை இன்னும் மறக்கமுடியவில்லை......

  • தொடங்கியவர்

ஒரு முறை இந்தக் கீரைக் கட்டினை வாங்கி நாம் பட்ட அவதியை இன்னும் மறக்கமுடியவில்லை......

என்னாச்சு அருவிபபா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...... இந்த பொன்னாங்காணி வறை யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டிலும் கிழமைக்கு மூன்று முறையாவது இதே முறையில் தான் எனது அப்பம்மா சமைப்பார்கள் .

எங்கடை அப்பம்மா உங்கடை அப்பாச்சியிடம் இருந்து கொப்பி அடிச்சாங்களொ அல்லது உங்கடை அப்பாச்சி எங்கடை அப்பம்மாவிடம் இருந்து கொப்பி அடிச்சாங்களொ தெரியாது .

( விசுவின் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல )

விடயத்துக்கு வருவோம் , இந்த வறைக்கு சின்ன சீரகம் தான் முக்கியம் . சாப்பிடும் போது அது கடிபடும் போது அதன் சுவையே தனி .

பொன்னாங்காணி வறை மூலம் எனது அப்பம்மாவை ஞாபகமூட்டியதற்கு நன்றி தூயா .

செய்முறைக்கு நன்றி தூயா. எப்போ சமையல் குறிப்பு புத்தகம் வெளியிடப்போறீங்க? pdf பதிப்பாக செய்யலாமே?

சின்ன வயதில் மரக்கறி உணவுவகைகள் அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் பொன்னாங்காணி வறை சாப்பிடுவேன். கீரை நான் தாயகத்தில் சாப்பிடுவதில்லை. இங்கே frozen கீரையை ஆகா அருமையா இருக்கு என்று சாப்பிடுகின்றேன் ... காலம் ....

அது என்ன வரவனையானின் கவிதை?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பொன்னாங்கானி வறைகுள்ள கொஞ்சம் மாலைதீவு மீனையும்.(மாசி) துண்டுகளையும் போட்டு வறுத்தால் சூப்பாரா இருக்கும் இதுவும் சோறும்,மீன் குழம்பும் போட்டு சாப்பிட்டா....கியல வடக் நா :)

  • கருத்துக்கள உறவுகள்

கியல வடக் நா............என்றால் சொல்லத்தேவையில்லை என்று தானே அர்த்தம் . அதுதானெ பாத்தன் மட்ட தெலுங்கு டிக்க டிக்க தண்ணுவ.

தூயா ... நீங்கள் இன்னொரு வலம்புரி ஜானாக மாறி வருகின்றீர்கள்... அவரும் முன்பு தினமும் ஒவ்வொரு கீரைவகை பற்றி சன் டீவியில் சொல்லுவார்... நீங்கள் சமைச்சு கலக்குறிங்க..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னாங்காணி செய்முறைக்கு நன்றி தூயா

ஊரில் இருக்கும் அநேகமான கீரை வகைகளை ரசித்து ருசித்து சாப்பிட்டவர்களில் நானுமொருவன்.அதிலும் முசுட்டை இலைவறை இன்னும் பிரமாதம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பொன்னாங்கானி வறைகுள்ள கொஞ்சம் மாலைதீவு மீனையும்.(மாசி) துண்டுகளையும் போட்டு வறுத்தால் சூப்பாரா இருக்கும் இதுவும் சோறும்,மீன் குழம்பும் போட்டு சாப்பிட்டா....கியல வடக் நா :)

அதெண்டால் உண்மைதான் தண்ணியடிச்ச வாய்க்கு கொஞ்சம் நாக்கை சுண்டி இழுக்கிற மாதிரி காரசாரமாய் வேணுந்தான் lol2.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் , குமாரசாமியர் சொன்ன மாதிரி முசுட்டை , குறிஞ்சா இலைகளிலும் வறை வீட்டில் செய்வார்கள். பழங்கால தமிழருக்கு உணவே மருந்து.

இங்கு நாங்கள் கரட் இலையில் வறை வைப்போம்.அதுவும் பொன்னாங்காணிக்கு குறைவல்ல.

இணைப்புக்கு நன்றி தூயா, இதே முறையில் தான் நாங்களும் செய்கிறனாங்கள், ஈழத்தில் இருக்கு போது அம்மா செய்து வைத்தா நான் நடந்து நடந்து சும்மா சாப்பிட்டுவிடுவன். அம்மாவந்து பார்க்கும் போது கொஞ்சம் தான் இருக்கும் அப்படி விருப்பம் பொன்னாங்கானியில் . உங்கள்படத்தில் இருக்கும் கீரை நீளமா இருக்கு தூயா ஆனா இங்கு சின்ன சின்ன இலை . அதிக நேரம் வேணும் அதனால் விடுமுறை நாட்க்களில் தான் வீட்டில் பொன்னாங்கானி. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி டமில் ஸ்ரீ நீங்கள் இலைகுழை போட்டு அவிச்ச ஒடியல் புட்டு அதுதான் கீரைப்புட்டு சாப்பிட்டு பாத்தனீங்களோ :)

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது பொன்னாங்காணி சம்பல் செய்வார்கள்.கொழும்பில் இருந்த கொஞ்ச நாட்கள் பொன்னாங்காணியை தூள்தூளாக வெட்டி வெண்காயம் பச்சைமிளகாயயையும் குறுணியாக வெட்டி தேசிக்காய் புளி நிறைய விட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.வல்லாரையும் இப்படி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி :

தம்பி டமில் ஸ்ரீ நீங்கள் இலைகுழை போட்டு அவிச்ச ஒடியல் புட்டு அதுதான் கீரைப்புட்டு சாப்பிட்டு பாத்தனீங்களோ

இல்லை குசா. அண்ணா,

எனக்கு கீரை புட்டு கிடைக்கவில்லை.அதன் செய்முறையை அறியத்தாங்கோவன். யாழ். இந்துவில் படிக்கும் போது மைதனாத்துக்கு பக்கத்தில் (வைரவர் கோவில்) கீரை வடை எமது இடைவேளை உணவு.

என்னாச்சு அருவிபபா?

பொன்னாங்காணி கட்டில பொன்னாங்காணியளோட நடுவில அதற்குப்பதிலா இன்னொன்றும் இருந்தது. அதுதான் அந்த அவதிக்குக் காரணம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாங்காணி வறைக்கு நன்றி

  • தொடங்கியவர்

ஆகா...... இந்த பொன்னாங்காணி வறை யாழ்ப்பாணத்தில் எங்கள் வீட்டிலும் கிழமைக்கு மூன்று முறையாவது இதே முறையில் தான் எனது அப்பம்மா சமைப்பார்கள் .

எங்கடை அப்பம்மா உங்கடை அப்பாச்சியிடம் இருந்து கொப்பி அடிச்சாங்களொ அல்லது உங்கடை அப்பாச்சி எங்கடை அப்பம்மாவிடம் இருந்து கொப்பி அடிச்சாங்களொ தெரியாது .

( விசுவின் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல )

விடயத்துக்கு வருவோம் , இந்த வறைக்கு சின்ன சீரகம் தான் முக்கியம் . சாப்பிடும் போது அது கடிபடும் போது அதன் சுவையே தனி .

பொன்னாங்காணி வறை மூலம் எனது அப்பம்மாவை ஞாபகமூட்டியதற்கு நன்றி தூயா .

:wub: உங்களுக்கு அப்பம்மா..எனக்கு அப்பாச்சி ^_^

செய்முறைக்கு நன்றி தூயா. எப்போ சமையல் குறிப்பு புத்தகம் வெளியிடப்போறீங்க? pdf பதிப்பாக செய்யலாமே?

சின்ன வயதில் மரக்கறி உணவுவகைகள் அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் பொன்னாங்காணி வறை சாப்பிடுவேன். கீரை நான் தாயகத்தில் சாப்பிடுவதில்லை. இங்கே frozen கீரையை ஆகா அருமையா இருக்கு என்று சாப்பிடுகின்றேன் ... காலம் ....

அது என்ன வரவனையானின் கவிதை?

:lol: மதண்ணா ரொம்ப நாளைக்கு பின்னர் :lol: நலம் தானே?

பி.டி.எவ் இல் எழுதும் அளவுக்கு நன்றாக எழுதனுமே?

உங்களுக்கு உடனே கீரை கிடைப்பதேயில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அருமையான பதிவு. நம்மூர் வறைகள் மனதை நிறைக்குது. நன்றி சோதரி!!! :lol::lol:

அந்தக் கீரைவடை ஒன்றும் வைரவர் கோவில் பக்கத்து பைப்பில் வரும் தண்ணீரும் போதும் பத்து மணி இடைவேளைக்கு!!!! :wub:^_^

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுவி அவ்வளவு பெரிய வடை.பசியாற்றிவிடும்.

  • தொடங்கியவர்

தூயா ... நீங்கள் இன்னொரு வலம்புரி ஜானாக மாறி வருகின்றீர்கள்... அவரும் முன்பு தினமும் ஒவ்வொரு கீரைவகை பற்றி சன் டீவியில் சொல்லுவார்... நீங்கள் சமைச்சு கலக்குறிங்க..!

கிகிகி :lol:

பொன்னாங்காணி செய்முறைக்கு நன்றி தூயா

ஊரில் இருக்கும் அநேகமான கீரை வகைகளை ரசித்து ருசித்து சாப்பிட்டவர்களில் நானுமொருவன்.அதிலும் முசுட்டை இலைவறை இன்னும் பிரமாதம். :lol:

முசுட்டை இலை உங்க ஊரில் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முசுட்டை இலை உங்க ஊரில் கிடைக்குமா?

எக்கச்சக்கம் :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயா உங்களின் பொன்னாங்காணி செய்முறைக்கு.

தூயா எந்தக் கீரை வகை என்றாலும் இப்படி நல்லா வதக்க கூடாது.. (படத்தை பார்த்துதான் சொல்லுறன்)

சத்து எல்லாம் போயிடும்.. :lol: ஆனா ருசியா இருக்கும் :D

  • தொடங்கியவர்

எக்கச்சக்கம் :)

அடிக்கடி சமைப்பீர்களா?

ஊருக்கு சென்ற நேரம் மட்டும் முசுட்டை மரத்தை பார்த்த நினைவு..

இங்கு நான் பார்த்ததில்லை.

நன்றி தூயா உங்களின் பொன்னாங்காணி செய்முறைக்கு.

:D:lol:

தூயா எந்தக் கீரை வகை என்றாலும் இப்படி நல்லா வதக்க கூடாது.. (படத்தை பார்த்துதான் சொல்லுறன்)

சத்து எல்லாம் போயிடும்.. :lol: ஆனா ருசியா இருக்கும் :lol:

ம்ம் உண்மை தான் வசிண்ணா

இதில் கூட வெங்காயம் மிளகாய் தான் அதிக நேரம் வதக்கினேன்.

கீரை 1 1/2 நிமிடங்கள் தான்.

அதுவும் கூடிட்டுது போல..

உங்களுக்கும் சமைக்க தெரியும் போல..அப்படியா வசிண்ணா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.