Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனகரின் கதறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வெள்ளிகிழமை கனகர் அடுத்த நாள் வேலைக்கு போக தேவையில்லை என்ற சந்தோசத்தில் உற்சாக பானத்துடன் உறவை வளர்த்து கொண்டி இருக்கும் போது தான் தொலை பேசி மணி அடித்தது,யாராவது அறுக்க போகிறார்கள் என்று யோசித்து கொண்டு தொலைபேசியை எடுத்தார்,அது அவரின் நண்பர் கந்தர் மறுமுனையில் இருந்து என்ன நாளை "உக்கிரேனியன்" மண்டபதிற்கு வாறீர் தானே என்றார்.என்ன விசயம் எப்ப என்று கேட்க கந்தரும் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு கோபத்துடன் கேட்டார் என்ன போட தொடங்கிட்டீரோ.

நாளை எங்களுடைய தமிழ் ஆட்களின் ஒன்று கூடல் இருக்குது வரவில்லையோ அப்பொழுது தான் கனகருக்கு ஞாபகம் வந்தது தமிழர்களின் ஒன்று கூடல் பற்றி இது என்ன இப்படி கேட்டு போட்டீர் நான் இல்லாமல் தமிழர் ஒன்றுகூடல் சிட்னியில நடைபெறுமா?

கட்டாயம் வருவேன் என்று கனகர் உறுதிமொழி அளித்தார்.கலோ கந்தர் போனை வைத்து போடாதையும் உம்மோட கொஞ்சம் கதைக்க வேண்டும் இல்ல சும்மா தான் கேட்கிறன் ஒவ்வொரு கிழமையும் எங்களுடைய தமிழர்கள் ஏதாவது கலை நிகழ்ச்சி வைக்கிறார்கள் ஆனால் எல்லாம் உக்கிரேனியன்,ரஷ்யன்,கங்கேரிய

ன் என்று ஒவ்வொரு தேசிய இனங்களின் மண்டபத்தில் தானே வைக்கிறோம்.நாங்கள் எங்களுக்கு என்று ஒரு மண்டபத்தை கட்டி ஈழ தமிழர் மண்டபம் என்று பெயர் வைக்கலாம் தானே என்றார் மறுமுனையில் கந்தர் என்ன இரண்டு,மூன்று கிளாஸ் போயிட்டுதோ அது தான் செய்ய முடியாத காரியத்தை பற்றி கதைக்கிறீர் ஒரு மண்டபம் கட்டுவது என்றால் எவ்வளவு பணம் செலவாகும் தெரியுமோ அது போக பிறகு நிர்வகிப்பதிற்கு எவ்வளவு செலவும் வரும் இதற்கு எல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கும் என்று கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார்.

கனகரும் பதிலிற்கு எங்களுடைய ஆட்கள் கோயில்கள் பல கட்டீனம் தானே அதுக்கும் சரியான பணம் செலவும் ஆகும் தானே கோயில் கட்டுவதன் மூலம் நாங்கள் இந்து,இந்தியன் என்று தானே எங்களை முத்திரை குத்தி காட்டுகிறோம் ஏன் ஒரு தமிழன் பெயரில் தமிழ் மண்டபம் கட்ட கூடாது என்று கேட்க கந்தருக்கு கடுபாகி,எங்களுடைய மூதாதையோர் என்ன சொல்லி இருக்கீனம்.கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று தானே பிறகென்ன கேள்வி அது போக கோயில் தான் நல்ல வருமானம் வரும் இப்போ உதாரணதிற்கு உம்மிடம் தமிழர் மண்டபம் கட்டுவதிற்கு என்று பணம் கேட்டு நாலு தமிழர்கள் வந்தால் நீர் என்ன சொல்லுவீர்,இப்ப வசதி இல்லை வீட்டு கடன்,கார் கடன்,கிரடிட் கார்ட் ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று புலம்பி தள்ளுவீர் அடுத்த முறை வாங்கோ தாரேன் என்று அடுத்த முறை வந்தாலும் இதை தான் சொல்லுவீர்.

ஆனால் கோயிலிற்கு காசு என்று வந்தால் சத்தம் போடாமல் கொடுத்து போடுவீர் தானே நீரே தமிழ் மண்டபம் கட்டுறது என்றா பணம் கொடுக்க மாட்டீர் பிறகு வந்திட்டீர் பாடம் புகட்ட என்று கந்தர் தொலைபேசியை துண்டித்து கொண்டார் கனகருக்கோ ஏமாற்றம் தான் நியாயமான கருத்தை சொன்னாலும் தண்ணியில் சொன்ன கருத்து என்று கனகர் கண்டுக்காம விட்டதை நினைத்து மனகவலையில் குடிகாரன் பேச்சு விடிந்தா போச்சு என்று இன்னும் உற்சாக பானத்துடன் தனது உறவை பலமாக வளர்த்து கொண்டான்.

:rolleyes::rolleyes::unsure:

புத்துமாமா இப்பிடி எல்லாம் நீங்கள் பிரச்சனைப்படுவீங்கள் எண்டுதான் அந்தக்காலத்திலையே கோயிலுக்க மண்டபம் கட்டினார்கள். இப்பவும் கோயிலுக்க மண்டபங்கள் இருக்கிது தானே. கோயில கட்டினால் கோயிலும் கிடைச்சமாதிரி மண்டபமும் கிடைச்சமாதிரி..

ஆனா... வெறும் மண்டபம் மட்டும் கட்டினால் அதுக்க கோயில் நடத்த ஏலாது தானே? இதுதான் பிரச்சனை.

கனகரின் கதறல் மப்பில் உதித்த கதறல் இல்லை உள்ள குமுறல் :) ..(கனகரின் குமுறலை )..கதையாக்கிய விதம் நன்னா இருக்கு மாமா.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக கூறியுள்ளீர்கள் புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

கனகர் தண்ணி போட்டாலும் நியாத்தை தான் கேட்டிருக்கிறார். :)

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுதோ இல்லை தொடர்ந்ததோ

கனகரின் தண்ணி நல்லதொரு பதிவுக்கு வித்திட்டுள்ளது.

தண்ணி போதையையும் தரும் சில வேளை புத்தியையும் தரும்.. ! அதுக்காக் புத்தியை தர போதையை பாவிக்காதீங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிருக்குள் மீன் அழுதமாதிரி, கனகரின் கண்ணீரும் தண்ணீரில கரைஞ்சுட்டுதோ புத்ஸ்!!! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் புத்து, உந்தக் கந்தர் பாத்திரத்தை என்னை வைச்சு எழுதவில்லைதானே?.

சிட்னியில தான் தமிழர்களுக்கு மண்டபமில்லை. ஆனால் மற்றைய தமிழர்கள் இருக்கிற இடங்களில் தமிழர்களுக்கு மண்டபம் இருக்கிறது. உ+ம் - நோர்வே - அன்னை பூபதி கலைக்கூடம்.

சில இடங்களில் கோவில் மண்டபங்களினை தாயக நிகழ்வுக்கு உபயோகிக்கிறார்கள். உ+ம் - கனடா கந்தசுவாமி கோவில், இலண்டன் டூட்டிங் முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்.

சிட்னியில இப்ப கிறிஸ்தவர்களும் சைவசமயத்தைப் பின்பற்றுபவர்களைப் பார்த்து யேசுவுக்கு கோவில் கட்ட நிதி சேகரிக்கிறார்கள். ஆனால் தாயகத்துக்கு உதவுவதென்றால் ????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.