Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவர்தான் பெரியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் என்றால் மற்றவர்கள் ஆதரவு தர விட்டதில்லை. ஆரிய எதிர்ப்பியல் என்று செய்து கொண்டிருந்தால் அது ஒட்டுமொத்த தமிழர்களைத் தானே பாதிக்கின்றது.

அடுத்த சமுதாயத்தை எதிர்ப்பதன் மூலம், நம் அடையாளங்களைப் பேணலாம் என்பது சுத்த மூடத்தனம். இந்த சமுதாயங்களோடு தான், இந்த உலகத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

இட ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை அனுபவிப்பதற்காக சாதியம் பற்றிச் சிலர் கதைப்பார்கள். அவர்கள் என்றைக்குமே சாதி நீக்கம் பற்றிப் பேசவே மாட்டார்கள். சாதீ நீக்கினால் அனுபவித்து வரும் இன்னாரென்ன தேவைகள் பூர்த்தி செய்யப்படாது இருக்கும்.

திருஸ்டி கழிக்கப் பாவிக்கப்படும் பூசணி போலத் தான் இவர்கள் எடுத்துள்ள பார்ப்பான வாதம். நிச்சயம் இவர்கள் சலுகைகள் அனுபவிப்பதற்காக தமிழைச் சிதைத்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

ஏலவே சொன்னது போலச் சத்தியராஜ் அவர்களை எதிர்ப்பவன் தமிழனில்லை என்ற தமிழனுக்குரிய புதுவரைவிலக்கணமும் வந்திருப்பதால் தமிழனின் அளவு என்னும் சுருங்குமோ தெரியவில்லை

  • Replies 110
  • Views 15.7k
  • Created
  • Last Reply

லக்கிலூக்கும் பகுத்தறிவும் யாழ் களத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி!

தந்தை பெரியார் பற்றி பல ஈழத் தமிழர்களுக்கு தெரியாது இருக்கிறது. பார்ப்பனர்கள் பரப்பிய அவதூறுகளை அவர்கள் நம்பிக் கொண்டு திரிகிறார்கள்.

நீங்கள் இருவரும் தந்தை பெரியார் பற்றி பல விடயங்களை இங்கே தந்து இவர்களை தெளிவு படுத்தும் பணியை செய்ய வேண்டும்

இப்பொழுது விடை பெறுகிறேன். என்னுடைய திருமண வேலைகள் இருப்பதால், திங்கட் கிழமையில் இருந்து நானும் விவாதத்தில் கலந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்டா இங்கே வந்தும் ராமசாமிக்கு தோத்திரம் ஓதுறதற்கு வரவேற்பு நடக்கின்றது.

***

தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்தின் பண்பான சாதி அடக்குமுறை நிறைந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான் ஈழத்தமிழர்கள்.. போராட்டம் வலுப்பெற்ற கடந்த 30 வருடங்கள் பார்ப்பனியத்தின் தாக்கத்தை ஈழத்தில் குறைத்திருக்கலாம். ஆனால் முற்றுமுழுதாக அழிக்கப்படவில்லை. புலம்பெயர்ந்த சூழலில் வசிக்கும் சிலர் தமது சுய அடையாளம் என்று பார்ப்பனியத்தின் எச்சங்களைக் காவித்திரிவதும், அதனைக் காப்பாற்ற முனைவதும் நடைமுறையில் உள்ளது.. இத்தகைய போக்குகளை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், உள்ள பார்ப்பனியத்துடன் நேரடியாக ஒப்பிடமுடியாது..

கிருபன் அண்ணாச்சி எப்படி நான் சொல்ல வறதை முதலே நீங்கள் சொல்ல முடிந்தது?

Edited by இணையவன்
*** உறுப்பினர் தொடர்பான கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

இந்த கேள்வியை நீங்கள் தூயவனிடம் தான் கேட்கவேண்டும். அவர்தான் இதனை விவாதத்துக்குள் கொண்டுவந்தவர்...!

முதலில் நீங்கள் தமிழ் தேசியத்தை விளங்கிக்கொள்ளுங்கள்..! பிறகு திராவிடத்தை பற்றி விளங்கும்...!

உங்களுக்கு கொஞ்சம்ம் கூட தெரியவில்லை என்பதை நசுக்காக சொல்கிறீர்கள்...

தமிழர் தேசியம் என்பது தமிழர் மட்டும் சார்ந்தது... அதில் மக்கள், மொழி, பண்பாடு, நிலத்தொகுதியை குறிக்கும்...

திராவிடம் என்பது தமிழரை அடித்து உதைக்கும் கன்னடர், கிருஸ்ணாவில் இருந்து தமிழருக்கு தண்ணீர் தரமறுக்கும்( 60% சமஸ்கிருதம் கலந்த தெலுங்கின்) ஆந்திரா, தமிழரை பாண்டி என்று அழைக்கும் ( பாண்டி என்பதுக்கு குறைந்தது கேவலமான 1000 அர்த்தங்கள் இருக்கும்) கேரளாவையும் சேர்த்து திராவிட தேசியம் இருக்கு... இதை தூக்கி தலையில் ஆடுபவர்கள் திராவிடம் எண்று மார்தட்டி கொள்வார்கள்...

குறைந்தது டிராவிட் எனும் சமஸ்கிருத சொல்லை தங்களுக்கு சூட்டி கொண்ட தனித்தமிழர் எண்டு உங்களை அழைத்து கொள்ளுங்கள்... கேட்க்க பெருமையாக இருக்குது இல்லை...

நான் கேட்டபடி ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் பார்ப்பனர் யாரையும் நீங்கள் இன்னமும் குறிப்பிடவில்லை. இந்தியாவில் வாழும் மூன்று கோடி பார்ப்பனர்களில் ஒருவரின் பெயரை கூட உம்மால் சொல்ல முடியவில்லையே? என்ன பரிதாபம்?

சிவசேனாவின் தலைவர் பெயர் என்ன...?? பால்தக்கரே தானே...?? :mellow:

தமிழ்நாட்டில் இருந்து ஆதரவுக் கரம் நீட்டுவோரில் பெரும்பான்மையினர் பகுத்தறிவுப் பாசறையில் இருந்தே வந்துள்ளனர். பார்ப்பனிய ஆதரவாளர்கள் மிகவும் சிலரே.. அப்படியானவர்களும் இதயசுத்தியோடு ஆதரவு தந்தார்கள் என்று சொல்லமுடியாது.. எனவே அடக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் எமது போராட்டத்தையும் அத்தகைய ஒன்றாகக் கருதியே ஆதரவு தருகின்றார்கள்.. அவர்களுக்கு நாம் பார்ப்பனியத்தின் ஆதரவாளர்களாக இருப்பது சோர்வைத் தரலாம். அந்த வகையில் இந்த விவாதம் தேவையானதுதான்..

அண்ணை குலம் கோத்திரம் பாக்காமல் தானே கல்யாணம் கட்டினீங்கள் நீங்கள் சொல்லுற அறிவுரையை மற்றவை கேட்ட வேண்டும்தான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். பெரியார் என்ற ராமசாமியின் நாயக்கர் வம்சம் மக்களை அடிமைகளாக வைத்து ஏவல் செய்தும், மலம் அள்ள வைத்ததும் போலவா, பிராமணர்கள் நடந்து கொண்டார்கள். தமிழருக்குள் சாதியம் பற்றிய எண்ணக்கருவை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். ஆனால் பிராமணர்கள், தலித்துக்கள் என்று சாதியத்தை நிலைபெறச் செய்த குற்றத்தை இவர்கள் செய்தார்கள். செய்து கொண்டிருமிருக்கின்றார்கள். இது தமிழனுக்குள் உருவாக்கப்படும் வெடிப்பு என்பதால் தான் இதை எதிர்க்கின்றோம். குற்றம் பார்க்கப் போனால், ஆட்சி செய்த நாயக்கர் தான் பிராமணர்களை விட குற்றவாளிக் கூண்டில் முதலில் நிற்க வேண்டியவர்கள்.

இன்றைக்கு நண்பர் பகுத்தறிவாளர் கட்டுரை இணைக்கின்றார். அவர் இணைத்த கட்டுரைகள் ஒன்று, பிராமணர்களைத் திட்டுகின்ற அர்த்தத்தையும், ராமசாமிப் புகழ்பாடுவதாக மட்டும் தான் இருக்கின்றனவே தவிர, தமிழ்மக்கள் நாளை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஏதாவது இருக்கின்றதா?

ஏனென்றால் எதிர்காலம் பற்றிய கொள்கை எதுவும் திராவிடவாதிகளிடம் கிடையாது. எல்லாத்துக்கும் யாரையும் ஒரு காரணம் சொல்வார்கள். தமிழுக்குத் தாங்கள் ஒன்றும் செய்ததற்குப் பிராமணி தான் காரணம் என்பார்கள், இனம் ஒற்றுமையாகவில்லையா, பிராமணி தான் காரணம், கல்வியைத் தடுப்பது பிராமணி என்று ஏதாவது ஒரு நொண்டிச் சாட்டைச் சொல்லிக் கொள்வார்கள்.

தேசியத் தலைவரைப் பின்பற்றுகின்றோம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்று. அவருக்கு வருகின்ற தடைகள் எல்லாம் நீங்கள் சொல்வதை விட எவ்வவோ பெரிது. அவர் அதற்குக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தால், மூட்டையைக் கட்ட வேண்டியது தான்.

நான் ஏலவே சொன்னது போல வெள்ளையன் இந்தியா வந்தபோது பிராமண சமுதாயமே உச்சசாதியமைப்பில் இருந்ததால், அவர்கள் தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என முடிவு கட்டினான். அவனுக்கு மற்றயவர்கள் செய்த கொடுமைகள் தெரியாது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்ட ராமசாமி தங்கள் சாதி செய்த அடக்குமுறைகளை மறைக்க இதைப் பாவித்தார். அதைப் புரியாதவர்கள் அடி மாறாமல் பின்பற்றுகின்றார்கள்

ஓ அது தான் ரோட்டு முழுக்க சிலை கட்டி மாலையும், பிறந்தநாளுக்கு பாலபிசேகமும் செய்து கொண்டிருக்கின்றீர்களோ? அந்தச் சிலையும் கல் தானே??

ஆமாம். அத்திரியைப் படித்துப் பயன் பெறுவதற்கு அறிவியல் தகவல் தானே எழுதியிருக்கின்றீர்கள்??

***

நீங்கள் சொல்வது மிகவும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கின்றது..... புத்தி மட்டுள்ளவர்களால் இந்த தத்துவம் புரியமுடியாததுதான்.......... அதுதான் அவர்கள் உங்களை எதிர்த்து கருத்து எழுதுகிறார்கள்.

சிங்களவன் தமிழரை கொல்கிறான்.... ஆனால் ஈழதமிழரும் புலிகளும் தங்களை ஏன் தமிழராக அடையாளம் காடடுகிறார்கள்? அப்படி அவர்கள் காட்டாதுவிடின் சிங்களவன் குளப்பம் அடைந்துவிடுவான். ஆரை கொல்வது என்பது சிக்கலான விடயமாகிவிடும் அவனுக்கு . இந்த முட்டாள்கள் தமிழனாக நில்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று தலை நிமிர்த்துவதால் தானே அவன் கொல்கிறான்?????????

சாதியத்தை எதிர்பதென்றால் ...... அவர்கள் ஏன் தமது தொழிலை குறித்து ஒரு சாதியை உருவாக்குவான்? பிரமணர்கள் கூறுவதை கேட்டு அவ்வாறே நடந்திருப்பின் சாதி பிரச்சனையே இல்லாமல் இருந்திக்கும். முட்டாள்கள் நாம் பிரமணரால் நாம் தழ்த்தப்படுகிறோம் என்பதை ஏன் வெளியில் சொல்கிறார்கள். சொலவதால்தானே பிரச்சனையே தொடங்குகின்றது. பின் அப்பாவி பிரமணனை வம்புக்கிழுத்தால் எப்படி? பெரியார் (மன்னிக்கவும்) கன்னட காரனின் கதையை கேட்டு இவர்கள் ஏன் பின்னால் போனார்கள்?

Edited by இணையவன்
*** உறுப்பினர் தொடர்பான கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

சாதியத்தை எதிர்பதென்றால் ...... அவர்கள் ஏன் தமது தொழிலை குறித்து ஒரு சாதியை உருவாக்குவான்? பிரமணர்கள் கூறுவதை கேட்டு அவ்வாறே நடந்திருப்பின் சாதி பிரச்சனையே இல்லாமல் இருந்திக்கும். முட்டாள்கள் நாம் பிரமணரால் நாம் தழ்த்தப்படுகிறோம் என்பதை ஏன் வெளியில் சொல்கிறார்கள். சொலவதால்தானே பிரச்சனையே தொடங்குகின்றது. பின் அப்பாவி பிரமணனை வம்புக்கிழுத்தால் எப்படி? பெரியார் (மன்னிக்கவும்) கன்னட காரனின் கதையை கேட்டு இவர்கள் ஏன் பின்னால் போனார்கள்?

தொழில் முறையால் (( அதாவது பொருளாதார வருகை அடிப்படையில்)) தான் சாதியம் தோண்றியது என்கிறீர்கள்... இதை சபேசன் இல்லை என்கிறார்...!

தொழில் பொருளாதார அடிப்படையில் சாதிகள் தோண்றி இருக்குமானால் அதுக்கு காரணம் முதளாளித்துவமே அண்றி மதம் கிடையாது...

உண்மையில் பார்ப்பணன், துறவிகள் (பௌத்தம்.?) செருப்பு போடுவது கூடாது, முடியை சிரைப்பதும் கிடையாது, வீட்டில் வேலைக்காறன் வைத்தும் இருப்பதில்லை, பனையில் இருந்து கள் இறக்கி குடித்தும் இல்லை, சாவு வீடுகளில் பறை அடிப்பீப்பதும் இல்லை...! இதை எல்லாம் செய்து கொண்டால் அவன் பார்ப்பணன் எண்ற்று நீங்கள் ஒத்து கொண்டதும் இல்லை...

நீங்களே சாதிகளை உருவாக்குவீர்கள்... அதை உலகம் பழிக்கும் போது இன்னும் ஒருவன் மீது சுமத்துவீர்கள்... நீங்கள் எல்லாம் வீரர்கள்தான்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

***

தோமஸ் எடிசனின் தனிபட்ட வாழ்வை முன்நிறுத்தி மின்சார பாவனையை தவிருங்கள் என்று உலகிற்கு பரப்புரை செய்யும் ஒரு கூட்டம் அதை தமிழிலே செய்வது வேதனைக்கு உரியதுதான். என்ன செய்ய போகின்றீர்கள்? மாற்றம் ஏதும் வருமா. ஈர மட்டைகள் புகை மட்டும் கொஞ்சம் வரும்........ அதனால் உங்களின் கண்களில் எரிச்சல் வரும் அவ்வளவுதான்.

தொழில் முறையால் (( அதாவது பொருளாதார வருகை அடிப்படையில்)) தான் சாதியம் தோண்றியது என்கிறீர்கள்... இதை சபேசன் இல்லை என்கிறார்...!

தொழில் பொருளாதார அடிப்படையில் சாதிகள் தோண்றி இருக்குமானால் அதுக்கு காரணம் முதளாளித்துவமே அண்றி மதம் கிடையாது...

உண்மையில் பார்ப்பணன், துறவிகள் (பௌத்தம்.?) செருப்பு போடுவது கூடாது, முடியை சிரைப்பதும் கிடையாது, வீட்டில் வேலைக்காறன் வைத்தும் இருப்பதில்லை, பனையில் இருந்து கள் இறக்கி குடித்தும் இல்லை, சாவு வீடுகளில் பறை அடிப்பீப்பதும் இல்லை...! இதை எல்லாம் செய்து கொண்டால் அவன் பார்ப்பணன் எண்ற்று நீங்கள் ஒத்து கொண்டதும் இல்லை...

நீங்களே சாதிகளை உருவாக்குவீர்கள்... அதை உலகம் பழிக்கும் போது இன்னும் ஒருவன் மீது சுமத்துவீர்கள்... நீங்கள் எல்லாம் வீரர்கள்தான்..

நீங்கள் என்ன எழுதி வைத்துள்ளீர்கள் என்பதை ஒரு முறை படித்து பார்த்துவிட்டாவது இணைத்தால் நல்லம்..... என்கல்ல உங்களது பெயருகே.

Edited by இணையவன்
*** உறுப்பினர் தொடர்பான கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

ஈழத்தில் ஆதிக்க சாதி என்பது அடயாளப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட அடயாளங்களை கொண்டதல்ல. பூணூலும் கிடையாது சமஸ்கிருத ஆழுமையும் கிடையாது. அரசு சார்ந்த அதிகார பதவிகளும் புலம்பெயர் தேசத்தில் தனித்துவத்துடன் இல்லை. அதாவது காலனித்துவ அரசு காலத்திலும் அதன் பின்னான சிங்கள அரசு காலத்திலும் இருந்த அதிகார பாதவிகளுக்கும் சாதியத் தனித்துவத்துக்கும் உள்ள தொடர்பு புலம்பெயர் தேசத்தில் இல்லை.

நீங்கள் எண்றாவது புலம்பெயர்ந்து இருக்கும் குடும்பத்து குழந்தையிடம் அல்லது இளையோரிடம் கேட்டு இருக்கிறீர்களா அவர்கள் சாதிகள் பற்றி அறிந்து இருக்கிறார்களா எண்று...?? இல்லை அவர்களின் நண்ண்பர்கள் வட்டம் சாதிகள் பார்த்து வந்ததா, காதல்கள்..??

இதைத்தான் மாற்றம் என்பது. நீங்கள் எல்லாம் கூவுவது போல பெரிசாக ஒண்டுமே இல்லை... சாதிகள் ஏற்றத்தாள்வுகளையும் அறிந்து கொள்ளாமல் இருக்கும் இளையோரை கூவி அழைத்து " சாதிகள் உள்ளதடி பாப்பா. அதை ஊட்டி வளத்தான் பார்ப்பண்ணன் எண்டு பார்ப்பணன் மீது வெறியையும் சாதி மீது ஈர்ப்பையும் ஊட்டுகிறீர்கள்...

இங்கை எவனாவது (ளாவது)முன் வந்து.. நான் யாழ்ப்பாணத்து வெள்ளாளன் சாதிகளை ஊட்டி வளத்தது எனது பரம்பரையும் தான் எண்டு வந்து ஒத்து கொள்ளுறானா எண்டு நீண்ட காலமாக பாக்கிறன். எந்த நாயும் வரவும் இல்லை சொல்லவும் இல்லை...

இங்க வாறவைக்கு பழக்கம் எப்பிடி எண்டா நான் சுத்தமானவன் ஆனால் மற்றவந்தான் கழுவாமல் திரியுறான் எண்டு.. அப்பிடி சொல்லுறதிலை ஒரு வகை சுகம்...

அதிலை நீங்களும் விதி விலக்கு கிடையாது என்பதை தங்களின் கருத்து சொல்கிறது...!!

Edited by தயா

நீங்கள் என்ன எழுதி வைத்துள்ளீர்கள் என்பதை ஒரு முறை படித்து பார்த்துவிட்டாவது இணைத்தால் நல்லம்..... என்கல்ல உங்களது பெயருகே.

அப்படியான சுகங்களை பெற மற்றவைனை கீழ் படுத்தி வைத்தை செய்த தங்களையும்( உங்கள் பரம்பாரையையும்) தான் சாடுகிறேன்...! பின்னர் முதலிலை இருந்து ஆரம்பிக்காதீர்கள் பார்ப்பணன் பனம்பழம் எண்டு...!

பார்ப்பனன் சொன்னான் எண்டா உங்கட உறவுகளுக்கு எங்கையா போச்சுது அறிவு...??

சொல்லவே வெட்கமா உங்களுக்கு இல்லையா...? மற்றவனின்( பார்ப்பானின்) சொல் கேட்டு வாழ்ந்தோம் எண்டா உங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வாழ்கிற்றீர்கள்...

உங்கட ஆக்களுக்கு அறிவே கிடையாது என்பதுதான் உண்மையா...??

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டது திருத்தப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை குலம் கோத்திரம் பாக்காமல் தானே கல்யாணம் கட்டினீங்கள் நீங்கள் சொல்லுற அறிவுரையை மற்றவை கேட்ட வேண்டும்தான்...

:D கலியாணம் கட்டும்போது கருத்தில் எடுக்கிறேன். background பார்க்காமல் கலியாணம் கட்டிப்போட்டு கோயிலுக்குப் போய்க்கொண்டிருக்க முடியாது! :mellow:

கிருபன் அண்ணாச்சி எப்படி நான் சொல்ல வறதை முதலே நீங்கள் சொல்ல முடிந்தது?

எல்லாம் கூட இருந்த பழக்கம்தான்!

தொழில் பொருளாதார அடிப்படையில் சாதிகள் தோண்றி இருக்குமானால் அதுக்கு காரணம் முதளாளித்துவமே அண்றி மதம் கிடையாது...

முதலாளித்துவ நாடுகளில் சாதி இருக்குதாக்கும். சிலவேளை இந்தியர்களாலும், தமிழர்களாலும் நிரம்பிவழியும் நாடுகளில் இருக்குமாக்கும்!

முதலாளித்துவ நாடுகளில் சாதி இருக்குதாக்கும். சிலவேளை இந்தியர்களாலும், தமிழர்களாலும் நிரம்பிவழியும் நாடுகளில் இருக்குமாக்கும்!

அதுக்கு பதிலாக தானே நிற வெறி இருக்கிறதே...? உங்களை பார்த்து ஒரு வெள்ளையும் FU**ING pakki எண்டு இதுவரை சொல்ல இல்லை எண்டாலும் மனதுக்குள் சொல்ல இல்லை எண்டு சொல்லாதீர்கள்...

இப்ப எல்லாம் முதளாளித்துவ நாடுகளில் சோசலீசம் புகுந்து விட்டது.. அதுவும் 2ம் உலக போருக்கு பிந்தான்... அதுக்கும் முன்னம் Robin Hood, எண்டு எல்லாம் அடக்கு முறைக்கு எதிராக போராடிய பல வீரர்கள் நீங்கள் வாழும் நாடுகளில் இருந்தார்கள்...

வரலாற்று பாடம் எண்ட ஒண்டை கட்டாயம் நீங்கள் கல்யாணம் கட்ட முன்னம் படிக்க வேணும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியான சுகங்களை பெற மற்றவைனை கீழ் படுத்தி வைத்தை செய்த தங்களையும்( உங்கள் பரம்பாரையையும்) தான் சாடுகிறேன்...! பின்னர் முதலிலை இருந்து ஆரம்பிக்காதீர்கள் பார்ப்பணன் பனம்பழம் எண்டு...!

பார்ப்பனன் சொன்னான் எண்டா உங்கட உறவுகளுக்கு எங்கையா போச்சுது அறிவு...??

சொல்லவே வெட்கமா உங்களுக்கு இல்லையா...? மற்றவனின்( பார்ப்பானின்) சொல் கேட்டு வாழ்ந்தோம் எண்டா உங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வாழ்கிற்றீர்கள்...

உங்கட ஆக்களுக்கு அறிவே கிடையாது என்பதுதான் உண்மையா...??

தயா. உங்களால் முடிந்தால் நேரடியாக பதில் தாருங்கள் இல்லாவிடடால் பதில் தரவேண்டாம்.

ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு. ஈராக் பலவீனமாக இருந்ததால்தான் என்பதில் உங்களை போல எனக்கும் படுகின்றது. அதனால் அமெரிக்கா ஈராக்கில் இழைத்த அனைத்து கொடுரங்களுக்கும் ஈராக்கின் பலவீனம்தான் காரணம் என்கின்றீர்களா?????

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

தயா. உங்களால் முடிந்தால் நேரடியாக பதில் தாருங்கள் இல்லாவிடடால் பதில் தரவேண்டாம்.

ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு. ஈராக் பலவீனமாக இருந்ததால்தான் என்பதில் உங்களை போல எனக்கும் படுகின்றது. அதனால் அமெரிக்கா ஈராக்கில் இழைத்த அனைத்து கொடுரங்களுக்கும் ஈராக்கின் பலவீனம்தான் காரணம் என்கின்றீர்களா?????

நேரடியாக வே பதில் இருக்கு... ஈழத்தமிழர் களில் சாதிக்கு யாழ்ப்பாணத்து உயர் குடி வேள்ளாளனே காரணம்.... அவனை உசுப்பி விட்டதாக நீங்கள் சொல்லும் பார்ப்பணன் கிடையாது...

ஏதாவது புரிந்ததா...??? இது உங்ட Oke Wood க்கு புரிந்தா சந்தோசம்...

மற்றவன் (( குறிப்பா பார்ப்பணன்)) மீது பழி போடுற்றதை விட்டு போட்டு உங்கடயளை கழுவுங்கோ... பிறகு மற்றவையின் அழுக்குகளை பார்க்கலாம்...!!

இல்லை மற்றவன் சொல்லிதான் சாதியதை உங்கட பரம்பரை தொடர்ந்தார்கள் எண்டு பெருமையா சொல்லுறதுக்கு பதிலா எங்கட சனத்துக்கு அறிவு இருக்க இல்லை எண்டு சொல்லுங்கோ நம்புற மாதிரி இருக்கும்...!!

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் பார்ப்பனர்களால் இதுபோல டன் கணக்கில் குப்பை கொட்டப்பட்டிருக்கிறது. அந்த குப்பைகளை எல்லாம் இங்கே வந்து கொட்டுவதை விட்டு விட்டும் உங்களுக்கென்றிருக்கும் கருத்தை எடுத்து சொல்லுங்கள்!

***

அவர்களைப் போலதானே நீங்களும் டண் கணக்கில் குப்பை கொட்டிட்டு இருக்கிறீங்கள்.

ஈ வெ ராமசாமியோட ஏன் அண்ணா முரண்பட்டவர் என்று ஒருக்கா விளக்குவீங்களா..???! :D:mellow:

Edited by இணையவன்
*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அது தொடர்பான கருத்து நீக்கப்பட்டுள்ள

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு பதிலாக தானே நிற வெறி இருக்கிறதே...? உங்களை பார்த்து ஒரு வெள்ளையும் FU**ING pakki எண்டு இதுவரை சொல்ல இல்லை எண்டாலும் மனதுக்குள் சொல்ல இல்லை எண்டு சொல்லாதீர்கள்...

இப்ப எல்லாம் முதளாளித்துவ நாடுகளில் சோசலீசம் புகுந்து விட்டது.. அதுவும் 2ம் உலக போருக்கு பிந்தான்... அதுக்கும் முன்னம் Robin Hood, எண்டு எல்லாம் அடக்கு முறைக்கு எதிராக போராடிய பல வீரர்கள் நீங்கள் வாழும் நாடுகளில் இருந்தார்கள்...

வரலாற்று பாடம் எண்ட ஒண்டை கட்டாயம் நீங்கள் கல்யாணம் கட்ட முன்னம் படிக்க வேணும்...

திரைப்படங்களைப் பார்த்து வரலாற்றை அறிய முற்படவேண்டாம்.. நிறையப் புத்தகங்கள் உள்ளன. லண்டனில்தான் எங்கும் நூல்நிலையங்கள் உள்ளனவே.. கொஞ்சம் தேவையான புத்தகங்களையும் படித்துப் பார்த்தால் நல்லது..

மேலும் நிறவெறியும் நமக்குத்தான் அதிகம் உள்ளது. கறுப்பின மக்களை நம்மைவிடத் தாழ்ந்தவர்களாக (அவர்களின் நிறத்தையும், ஆபிரிக்கர் என்பதையும் வைத்து) எண்ணும் தமிழர்கள் அதிகம் உள்ள லண்டனில்தான் நானும் வசிக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
:mellow: இந்த புன் சிரிப்பு நெடுக்ஸ்குதான்...............

திரைப்படங்களைப் பார்த்து வரலாற்றை அறிய முற்படவேண்டாம்.. நிறையப் புத்தகங்கள் உள்ளன. லண்டனில்தான் எங்கும் நூல்நிலையங்கள் உள்ளனவே.. கொஞ்சம் தேவையான புத்தகங்களையும் படித்துப் பார்த்தால் நல்லது..

மேலும் நிறவெறியும் நமக்குத்தான் அதிகம் உள்ளது. கறுப்பின மக்களை நம்மைவிடத் தாழ்ந்தவர்களாக (அவர்களின் நிறத்தையும், ஆபிரிக்கர் என்பதையும் வைத்து) எண்ணும் தமிழர்கள் அதிகம் உள்ள லண்டனில்தான் நானும் வசிக்கிறேன்..

ஆபிரிக்கரை நண்பராக கொண்ட நிறைய தமிழர்களையும் நான் கண்டு இருக்கிறேன்.. ஆபிரிக்க பெண்ணை மணந்த தமிழனும் இருக்கிறான். ஆணை மணந்த பெண்ணும் இருக்கும் லண்டனில் தான் நானும் இருக்கிறேன்...

ஆனால் பயனங்களின்போது கறுப்பாக இருக்கும் எங்களுக்கு அருக்கில் இருகும் இருக்கையில் இருப்பதை கூட விரும்பாம நிண்ற படி வரும் வெள்ளைகளை நானும் கண்டு இருக்கிறே... நீங்கள் காணாதது எனது தவறு இல்லை..

Robin Hood திரைப்படம் அல்ல வரலாறு....

http://en.wikipedia.org/wiki/Robin_Hood

ஆங்கிலேயரால் ஒடுக்கப்பட்ட ஸ்கொட்லாண்ட் சுந்தந்திர போர், வரலாறு

http://en.wikipedia.org/wiki/Scotland#Early_history

ஒடுக்கப்படும் அயர்லாந்தும் போராட்டமும்...

http://en.wikipedia.org/wiki/History_of_th...blic_of_Ireland

http://en.wikipedia.org/wiki/Anglo-Irish_Treaty

ஒடுக்கப்படும் ஆயர்லாந்தவன்

http://en.wikipedia.org/wiki/Irish_Civil_War

http://en.wikipedia.org/wiki/Irish_Republican_Army

இப்படி ஏராளமான வரலாற்றை நான் உங்களுக்கு நூல் நிலையம் போகாமல் தரமுடியும்... உதவிதேவை எண்றால் கூச்சபடாமல் கேழுங்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கூச்சமா............... எங்களுக்கா ?

உங்களுக்கு கொஞ்சம்ம் கூட தெரியவில்லை என்பதை நசுக்காக சொல்கிறீர்கள்...

தமிழர் தேசியம் என்பது தமிழர் மட்டும் சார்ந்தது... அதில் மக்கள், மொழி, பண்பாடு, நிலத்தொகுதியை குறிக்கும்...

திராவிடம் என்பது தமிழரை அடித்து உதைக்கும் கன்னடர், கிருஸ்ணாவில் இருந்து தமிழருக்கு தண்ணீர் தரமறுக்கும்( 60% சமஸ்கிருதம் கலந்த தெலுங்கின்) ஆந்திரா, தமிழரை பாண்டி என்று அழைக்கும் ( பாண்டி என்பதுக்கு குறைந்தது கேவலமான 1000 அர்த்தங்கள் இருக்கும்) கேரளாவையும் சேர்த்து திராவிட தேசியம் இருக்கு... இதை தூக்கி தலையில் ஆடுபவர்கள் திராவிடம் எண்று மார்தட்டி கொள்வார்கள்...

குறைந்தது டிராவிட் எனும் சமஸ்கிருத சொல்லை தங்களுக்கு சூட்டி கொண்ட தனித்தமிழர் எண்டு உங்களை அழைத்து கொள்ளுங்கள்... கேட்க்க பெருமையாக இருக்குது இல்லை...

ஆமாம் உங்களுக்கும் தெரியாது என்பதை ஒப்புகொண்டுவிட்டீர்கள் .

திராவிடம் என்பதுக்கு என்ன விளக்கம் நீங்கள் கொடுத்தீர்களோ அதே விளக்கம் தமிழ் தேசியத்துக்கும் பொருந்தும். மதத்தை, சாதியை, பிரதேச பாகுபாட்டை எல்லாம் பூசலாம். அதை தான் இங்கே சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள். போய் அதை காப்பாற்றப் பாருங்கள்

ஆமாம் உங்களுக்கும் தெரியாது என்பதை ஒப்புகொண்டுவிட்டீர்கள் .

திராவிடம் என்பதுக்கு என்ன விளக்கம் நீங்கள் கொடுத்தீர்களோ அதே விளக்கம் தமிழ் தேசியத்துக்கும் பொருந்தும். மதத்தை, சாதியை, பிரதேச பாகுபாட்டை எல்லாம் பூசலாம். அதை தான் இங்கே சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள். போய் அதை காப்பாற்றப் பாருங்கள்

டிராவிட் எனும் (திராவிடம்) சொல்லே தமிழ் கிடையாது...... அது சமஸ்கிருத சொல்.,.

திராவிடம் என்பது தேசியம் என்பது ஒருமித்த மொழி வேண்டுமே கன்னடம் , தெலுங்கு, மலயாளம், தமிழ் எல்லாம் ஒரே மொழிகள்தான் என்பீர்கள் போல...??

தமிழ் தேசியத்துக்கும் திராவிடத்துக்கும் ஆயிரம் அடிப்படை வித்தியாசங்கள் உண்டு...

ஆந்திராவிலும், கர்ணாடகாவிலும், கேரளாவிலும் திராவிடம் கி்டையவே கிடையாது... தமிழர் மட்டும்தான் காவித்திரிகிறார்கள்... மற்றவர்கள் இனையாதது திராவிடம் கிடையாது...

தமிழ்தேசியத்துக்கும் திராவிடஸ்தானுக்கும் ( பாக்கிஸ்தான் போல ஒண்று) நிறைய வித்தியாசம் உண்ண்டு என்பதை அறிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் செய்யாதீர்.. இரண்டும் ஒண்றுதான் எண்று...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பெரியாரின் திராவிடம் என்ற கோட்பாடு இக்கால சூழ்நிலையில் தேவையில்லாத ஒன்று என்பது என் தனிப்பட்ட கருத்து. முனைவர் சோமஸ்கந்தன் அவர்களின் பேட்டியில் உலக ஓட்டம் எங்ஙனம் இனத்துவ தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு தற்காலத்தில் முன்னெடுக்கப்படுகிறது என்பதை தெளிவாகவே எடுத்துரைத்திருந்தார். அவ்வகையில் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தவேண்டிய தேவை ஒன்று தமிழர் எல்லோருக்கும் உள்ளது.

தந்தை பெரியார் காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள இனங்களை திராவிடக் குடையின் கீழ் சேர்த்து ஆரியரெனக் கருதப்படும் வட இந்தியரின் அரசியலை எதிர்கொள்ளும் தேவை ஒன்று இருந்திருக்கலாம். உதாரணமாக இந்தித் திணிப்பு, வளப் பங்கீடுகள் போன்றவை. அப்போது தமிழர்களுக்கு உலகளாவிய ரீதியில் அவர்களது உறவுகள் குறித்த ஒரு பார்வை மிகக் குறைவாகவே இருந்துள்ளது. அதற்கு இன்றுள்ளது போன்ற தகவலறியும் வளங்கள் இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் அப்போது, உள்ளதை வைத்துக்கொண்டு ஒரு முன்னரங்கை பெரியார் போன்றவர்கள் உருவாக்கினார்கள். பெரியார் மட்டுமல்ல, அண்ணா போன்றவர்களும் திராவிடம் என்ற கோட்பாட்டை ஆதரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றுள்ள காலச் சூழ்நிலையில், தமிழன் எங்கெல்லாம் பரந்து பட்டு வாழ்கிறான் என்பது வெள்ளிடை மலை. இன்று ஈழத்தமிழருக்கு ஆதரவுக்குரல்கள் தென் ஆபிரிக்காவிலும் கூட ஒலிக்கின்றன. இப்படியான ஒரு காலப்பகுதியில் கன்னடரையும், தெலுங்கரையும் மலையாளியையும் கட்டி அழுவதில் எந்த நன்மையும் இல்லை.

எத்தனை கன்னடன் தன்னுடைய கூட்டாளியாகத் தமிழனை நினைக்கிறான்? எத்தனை மலையாளி? எத்தனை தெலுங்கன்? இவர்களெல்லாம் தங்களை கன்னடனாகவோ மலையாளியாகவோ தெலுங்கனாகவோ ஒரு தனிப்பட்ட தேசிய இனமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழன் இவர்களின் பின்னால் பூனையின் பின்னால் தொங்கிக்கொண்டிருக்கும் ஒன்று போலத் தொங்க வேண்டிய அவசியம் இன்று இல்லை. இதைத் தமிழ்நாடு உணராத வரை ஈழப்போராட்டத்துக்கான ஆதரவு அங்கிருந்து இன்றுள்ளது போன்று சிறு சலசலப்பு மட்டுமே கிட்டும்.

இனிப் பார்ப்பனர் பற்றியது. காலங்காலமாக தமிழ்நாட்டு ஏனைய மக்கள் பார்ப்பனரால் கீழ்நோக்கப் பட்டது தெரிந்ததே. அங்கே அவர்களுக்கு எதிராக ஒரு நியாயப் பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இன்றும் உள்ளது. ஆனால் அதற்காக சாதி சான்றிதழை இன்று வரைக்கும் அவர்கள் தயாரித்துக்கொண்டிருப்பது நீண்ட காலத்தில் எதிவினையையே உருவாக்கும். நான் அங்கே பள்ளியில் சேரும்போது என்னிடமும் சாதிச் சான்றிதழ் கேட்டார்கள். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தாலும், ஈழத்தமிழனாய் இருந்தாலும் என் சாதி என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பிறகு "சிறீலங்கன் ஹிண்டு" என்று போட்டுவிட்டார்கள். என்ன சாதி என்று தெரியாதிருந்த என்னை வீட்டுக்குச் சென்று என்ன சாதி என்று கேட்க வைத்து விட்டார்கள்.

தமிழகத்தில் பிராமணர் மிகப் பெரும்பாலோர் பள்ளிச் சான்றிதழில் தாய்மொழி தமிழ் என்று போடுவதிலும் பேசும் மொழியாகத் தமிழை உபயோகிப்பதிலும் மட்டுமே தமிழ் என்ற பதத்தை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தமிழைப் பேசினாலும் மற்றத் தமிழரை தங்களின் மொழிக்குழுமம் சார்ந்த ஒருவராக நோக்குவதில்லை. அவர்களது அரசியல் இந்திய தேசிய அரசியல் சார்ந்தது. பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸ் போன்ற கட்சியுடன் கூட்டு வைக்காவிட்டால் அவற்றுக்கு பிராமண ஓட்டுக்கள் விழாது. முஸ்லீம்கள், சௌராஷ்ட்ரா போன்று இன்னொரு இனத்தொகுதியாக தங்களைக் கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள். இவர்களை ஈழத்திலுள்ள பிராமணருடன் ஒப்பிட முடியாது. ஈழத்தில் உள்ளவர்கள் அவ்வகைப் பிராமணர்கள் அல்லர். அதனால் தந்தை பெரியாரின் பிராமண எதிர்ப்பு வாதம் இன்றும் தமிழகத்துக்குப் பொருந்தும். ஈழத்துக்கு அல்ல.

ஆனால் ஈழப்போராட்டத்தை தமிழர் என்ற குடையின் கீழிருந்து தமிழ் நாட்டவர் ஆதரிக்க வேண்டுமென்று எப்படி நாம் விரும்புகின்றோமோ அதேபோன்று அவர்களின் பிராமண எதிர்ப்பு நிலையை நாம் ஆதரித்தே ஆக வேண்டும். எப்படித் திராவிடர் என்று தம்மை உணராத கன்னடனையும், தெலுங்கனையும், மலையாளியையும் நாம் கட்டி அழ முடியாதோ அவ்வாறே தமிழ்நாட்டுப் பிராமணனையும் தமிழன் என்ற குடையின் கீழ் அரவணைக்க முடியாது. தமிழ் தேசியம் குறித்து உபதேசம் செய்து அவர்களை எம் குடையின் கீழ் கொண்டுவருவது இயலாத காரியம். அது நடக்குமானால் இன்று ஓரளவுக்கேனும் அது நடந்தேறியிருக்க வேண்டும்.

இன்று பிராமண ஆதிக்கமுள்ள இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களினால் ஈழத்தமிழருக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதைக்கருத்தில் கொண்டு எமது தமிழக உறவுகளின் பிராமணவாதத்துக்கு எதிரான சாத்வீகமான போரைக் கொச்சைப்படுத்தாது, ஆதரித்து நின்று, அவர்களை தமிழர் என்ற குடையின் கீழ் கொண்டு வந்து எமது போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்ப்போம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பெரியார் பற்றி வாதாடி நேரத்தை வீணடிப்பது போல் தான் உள்ளது. அதிலும் விவாததை விட விதண்டாவாதம் தான் கூடவாக உள்ளது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

:

முதலாளித்துவ நாடுகளில் சாதி இருக்குதாக்கும். சிலவேளை இந்தியர்களாலும், தமிழர்களாலும் நிரம்பிவழியும் நாடுகளில் இருக்குமாக்கும்!

இந்த தலைப்பில் விவாதிக்க எனக்கு எதுவுமில்லை. ஆனால் இந்த கருத்து ஏதோ முதாலாளிதுவ நாடுகளில் எந்த பாகுபாடும் இல்லை. சாதியும் இல்லை என ஆணிதரமாக சொல்வது போல இருப்பதால் மட்டுமே பதில் எழுதுகிறேன். அதற்காக இதை கொண்டு எம்மிடம் இருக்கும் சாதி பாகுபாட்டை நியாயபடுத்த முற்படவில்லை.

இது இங்குள்ள வெள்ளை இன நண்பர்களுடன் எம்மிடையே இருக்கும் சாதி பாகுபடு பற்றி விபரித்த போது அவர்கள் சொன்னது.

இங்கும் சாதி உள்ளது. ஆனால் நாம் அதை பற்றி கவனிப்பதோ அதிகம் பேசுவதே இல்லை.

இங்கும் சாதி/ உயர்குடி- (நிலை), தாழ் குடி என்ற வெறுபாடு இருக்கிறது. அமெரிக்காவில் இப்போதும் சில பல்கலைகழகங்களில் அனுமதி பெற வேண்டும் என்றால் மாணவர்களின் கல்வி தகுதியை விட அவர்களின் குடும்ப தகுதியை பார்க்கும் வழக்கம் இருக்கிறது. இன்றும் நாம் இருக்கும் நகரத்தில் உயர்குடி மக்கள் வாழும் பகுதி என ஒரு பகுதி இன்றும் உள்ளது. அவர்கள் இயலுமானவரை மற்றவர்களுடன் சேராமல் தமது மேட்டிமையை பேணவே முயல்கிறனர்.

அதற்கப்பால் முன்னர் அஜீவன் அண்ணா சுவிசில் இருந்த சாதி பாகுபாட்டை அடிப்படையாக கொண்ட குடும்ப பெயர்களையும் விளக்கி ஒரு பதிலில் விளக்கியிருந்தார்.

Edited by KULAKADDAN

இந்த தலைப்பில் விவாதிக்க எனக்கு எதுவுமில்லை. ஆனால் இந்த கருத்து ஏதோ முதாலாளிதுவ நாடுகளில் எந்த பாகுபாடும் இல்லை. சாதியும் இல்லை என ஆணிதரமாக சொல்வது போல இருப்பதால் மட்டுமே பதில் எழுதுகிறேன். அதற்காக இதை கொண்டு எம்மிடம் இருக்கும் சாதி பாகுபாட்டை நியாயபடுத்த முற்படவில்லை.

இது இங்குள்ள வெள்ளை இன நண்பர்களுடன் எம்மிடையே இருக்கும் சாதி பாகுபடு பற்றி விபரித்த போது அவர்கள் சொன்னது.

இங்கும் சாதி உள்ளது. ஆனால் நாம் அதை பற்றி கவனிப்பதோ அதிகம் பேசுவதே இல்லை.

இங்கும் சாதி/ உயர்குடி- (நிலை), தாழ் குடி என்ற வெறுபாடு இருக்கிறது. அமெரிக்காவில் இப்போதும் சில பல்கலைகழகங்களில் அனுமதி பெற வேண்டும் என்றால் மாணவர்களின் கல்வி தகுதியை விட அவர்களின் குடும்ப தகுதியை பார்க்கும் வழக்கம் இருக்கிறது. இன்றும் நாம் இருக்கும் நகரத்தில் உயர்குடி மக்கள் வாழும் பகுதி என ஒரு பகுதி இன்றும் உள்ளது. அவர்கள் இயலுமானவரை மற்றவர்களுடன் சேராமல் தமது மேட்டிமையை பேணவே முயல்கிறனர்.

அதற்கப்பால் முன்னர் அஜீவன் அண்ணா சுவிசில் இருந்த சாதி பாகுபாட்டை அடிப்படையாக கொண்ட குடும்ப பெயர்களையும் விளக்கி ஒரு பதிலில் விளக்கியிருந்தார்.

குளம் நீங்கள் மேலே சுட்டிக் காட்டி இருப்பது வர்க்க வேறு பாடு சாதி ரீதியான வேறு பாடு அல்ல.வர்க்க வேறுபாட்டை ஏற்படுத்துவது பொருளாதர ஏற்றத் தாழ்வுகள்.ஆனால் சாதி அப்படியானது அல்ல அதன் அடிப்படை பண்பாடு, இந்து சமயம் குறிப்பாக பார்ப்பனர் உருவாக்கிய வர்ணாச்சிரமதில் இருந்து வருவது.இரண்டையும் ஒன்றென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால் நீங்கள் மற்றவர்கள் போல் வர்க்கத்தையும் சாதியையும் ஒன்றெனச் சொல்லி, இந்து சமயதால் ஆகம மதத்தால் உருவக்கப்பட்ட இந்திய சாதிய வேறுபாட்டை மறுதலிப்பதாகவே கொள்ள வேண்டும்.

மேலும் குழும அரசியலுக்கு பண்பாடு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.இங்கே பொருளாதர மாற்றம் மட்டும் சாதிய வேறுபாடுகளைக் கழைந்து விடப் போவதில்லை.பண்பாட்டுத் தளத்திலும் மாற்றம் நிகழ வேண்டும்.பெரியார் அன்று செய்தது தான் சரி என்றோ அது தான் ஒரே தீர்வென்றோ இங்கே எவரும் வாதிடவில்லை.அன்றைய நிலைக்கு அன்றைய சூழலுக்கு தமிழ் நாட்டின் சாதிய நிலைகளுக்கு பெரியாரின் போராட்டம் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி இருந்தது.அதன் அடிப்படையிலையே பெரியார் உருவாக்கிய திராவிட இயக்கம் மக்கள் மத்தியில் பலம் பெற்று இன்று வரையும் அசைக்க முடியாத ஒரு அரசியற் சக்தியாக இருக்கிறது.

மேலே பலர் சுட்டிக் காடியதைப் போல் இன்றைய நிலையில் தமிழர் என்னும் அடையாளத்தால் ஒன்று பட்டு, எமக்குள் இருக்கும் சாதிய வேற்றுமைகளைக் களைந்து வரலாற்று ரீதியாக ஏற்படுத்தப்பட்ட சாதிய அடக்குமுறைகளை ஏற்றுக் கொண்டு சாதியமற்ற ஒரு தமிழ்ப் பண்பாட்டை மீள நிறுவுவதே சமதர்மாமான ஒரு தமிழ்ச் சமுதயத்தை உருவக்குவதற்கான் முன் நிபந்தனையாக இருக்க முடியும்.இதற்கு முதலில் சாதியம் இல்லை என்றோ சாதியத்தின் தோற்றுவாய் இந்து மதம் என்பதை மறுதலிப்பதோ அல்லது பெரியார் தான் சாதியை உருவக்கினார் என்றோ முழுப் பொய்களை அவிழ்த்து விடுவதனால் ஒரு பயனும் இல்லை.இவ்வாறன பொய்களை எவரும் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.