Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புலிகளுக்கு' கருணாநிதி எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டுக் கூடத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது.

மாநாட்டின் தொடக்கமாக ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார்.

கருணாநிதியின் பேச்சு ..

தமிழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றை சில மாநிலங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தை ஆந்திர அரசு அண்மையில் தொடங்கியிருக்கிறது.

இதுபோன்ற திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுவது காரணம் இந்த அரசு மட்டுமே இதை செம்மையாக நிறைவேற்றி வரும் அதிகாரிகளும் தான் என்பதை நான் நன்கு அறிவேன்.

என்னை நேரடியாக அணுகுங்கள்:

திட்டங்களை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல் படுத்திட வேண்டும். பெரும் திட்டங் களை நடைமுறை படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் அதனை தீர்ப்பதற்காக நீங்கள் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

கடும் குற்றம் புரிவோர், கூலிப்படையினர், பொது மக்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் ஆகியோருக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.

தலைவர்களின் சிலைகளை சிதைத்து சேதப்படுத்தும் சமூக விரோத சக்திகளை இனங்கண்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களை தயாரித்து விற்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் கண்ணியம் தேவை:

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களை கண்ணிய மாகவும், மரியாதையாகவும் நடத்த வேண்டும். முதல் தகவலறிக்கை பதிவு செய்வதில் கால தாமதமோ, அலைக்கழித்தலோ கூடாது.

சொத்து தகராறு நிலமாற்றம் போன்ற உரிமையியல் வழக்குகளில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

வகுப்புவாதமும், சாதிய உணர்வும் தமிழ் மண்ணில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் காலூன்ற எந்த வகையிலும் இடம் அளித்திட காவல்துறை விரைந்து செயல்பட்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிட வேண்டும்.

இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க கூடாது:

அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பவர்களை தமிழ்நாட்டில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது.

போலி குடும்ப அட்டைகளை கண்டுபிடித்து அழித்திடும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும். இலவச கலர் டிவி, இலவச எரிவாயு, நிலம் இல்லாதவர்க்கு நிலம் வழங்கும் திட்டம், வீடு, மனை, வழங்கும் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டம் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும்.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தொடர் கடன்கள் வழங்கும். புதிய குழுக்களை அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க அனைத்து கிராமங்களுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்.

மக்களுக்கு பயன் அளிக்கும் அரசினுடைய பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்புற செயல்படுத்த வேண்டும்.

இதற்காக மாவட்ட கலெக்டர்கள் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கும் அரசுக்கும் இடையே நல்லுறவு பாலமாக அதிகாரிகள் திகழ வேண்டும் என்றார் கருணாநிதி.

மாநாட்டில், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோரும் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உள்ளிட்ட அனைத்துத் துறை செயலாளர்களும் பங்கேற்றனர்.

டிஜிபி ஜெயின், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சேகர், புறநகர் ஆணையர் ஜாங்கிட், ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், டிஎஸ்பி, உதவி எஸ்பிக்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெறும் மாநாட்டில் கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இரு பிரிவினரும் பங்கேற்கின்றனர். நாளை கலெக்டர்கள் மட்டும் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெறுகிறது.

இரண்டு நாள் மாநாட்டையொட்டி தலைமைச் செயலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற தலைப்பு

தேவையோடு கதைப்பு

தேவை என்றால் அணைப்பு

தேவை எமக்கு அரவணைப்பு - அதனால்

தேவையோடு காத்திருப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையற்ற தலைப்பு

தேவையோடு கதைப்பு

தேவை என்றால் அணைப்பு

தேவை எமக்கு அரவணைப்பு - அதனால்

தேவையோடு காத்திருப்பு

எதுவரைக்கும் காத்திருப்போம்?

தமிழிலே ஒரு பழமொழி உண்டு பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று... அப்படி இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன்

Edited by snegi

  • கருத்துக்கள உறவுகள்

கோடிபெறும் கேள்வியிது???

தேவை ஒரு ஊடறுப்பு-சிலவேளை

தேவையது கருணாநிதிக்கு போல் பலருக்கு

தேவையானதை கொடுப்போம் நாம் அவனுக்கு

தேடிவருவார் பலரும் பாரீர் நீர்.....

மு. கா. சொன்னதை விட இதை எழுதியவர் தான் போட்டு தாக்குகிறார்....

  • கருத்துக்கள உறவுகள்

மு. கா. சொன்னதை விட இதை எழுதியவர் தான் போட்டு தாக்குகிறார்....

அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்

தேவையற்ற தலைப்பு என???

உண்மையில் ஏனைய ஊடகங்களில் "அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது" - கருணாநிதி என்ற தலையங்கத்துடனேயே செய்திகள் வந்துள்ளன. ஆனால் தற்ஸ்தமிழ் மட்டும் தான் இப்படித் தலையங்கம் தீட்டியுள்ளது.

உண்மையில் ஏனைய ஊடகங்களில் "அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது" - கருணாநிதி என்ற தலையங்கத்துடனேயே செய்திகள் வந்துள்ளன. ஆனால் தற்ஸ்தமிழ் மட்டும் தான் இப்படித் தலையங்கம் தீட்டியுள்ளது.

தட்ஸ்தமிழ்லும் தலைப்பை மாற்றி விட்டார்கள்

இப்போதைக்கு தமிழ் நாட்டு அமைச்சருக்கு பெரிய தலையிடி புலிகள் இல்லை ஆனால் பேசில சும்மா எடுத்து விட்டு இருக்கிறார்

: கலைஞரையும் புலிகளையும் வேணுமென்றே கொழுவுறதுக்கு வழி நடக்குது இதையெல்லாம் தூக்கிப் புடிச்சுக் கொண்டு இருக்குதுகள்...

அதெல்லாமம் சரி குகனேசன் அண்ணை !

என்ன எப்ப பாhத்ததாலும் கலைஞர் கவி எழுதினமாதிரி கவி எழுதிறியள் கவிஞர் ஆகிற நோக்கமோ??????

:):lol::lol:

இந்திய இறையாண்மைக்கும் அதன் பிராந்திய நலனுக்கும் என்றுமே புலிகள் பங்கம் விளைவிக்க மாட்டார்கள். இது தற்ஸ் தமிழுக்கும் தெரியும். சும்மா கொழுவல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

: கலைஞரையும் புலிகளையும் வேணுமென்றே கொழுவுறதுக்கு வழி நடக்குது இதையெல்லாம் தூக்கிப் புடிச்சுக் கொண்டு இருக்குதுகள்...

அதெல்லாமம் சரி குகனேசன் அண்ணை !

என்ன எப்ப பாhத்ததாலும் கலைஞர் கவி எழுதினமாதிரி கவி எழுதிறியள் கவிஞர் ஆகிற நோக்கமோ??????

:):lol::lol:

இல்லை

எப்படிச்சொன்னால்............

உங்களுக்கு கூட ஏறுமோ???

அப்படிச்சொல்ல முயல்கிறேன்...

தப்பென்றால் அறியத்தரவும்

இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கபோவதில்லை அதனால் இனி இந்தியாவின் செயற்பாடு எமக்கு எதிராகத்தான் இருக்கும் . அதனால் தமிழக அரசை பார்த்து வாயை பிளந்து நின்றாலும் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்க போவதில்லை ... அவர்களே டில்லியின் திசைபார்த்து வாயைபிளக்க வேண்டியுள்ளது...

இந்தியாவைவிட்டு எமக்கு இப்போ வெளிநாடுகளை எம் பக்கம் இழுத்தால் எல்லாம் தானா நடக்கும்......

இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கபோவதில்லை அதனால் இனி இந்தியாவின் செயற்பாடு எமக்கு எதிராகத்தான் இருக்கும் . அதனால் தமிழக அரசை பார்த்து வாயை பிளந்து நின்றாலும் ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்க போவதில்லை ... அவர்களே டில்லியின் திசைபார்த்து வாயைபிளக்க வேண்டியுள்ளது...

இந்தியாவைவிட்டு எமக்கு இப்போ வெளிநாடுகளை எம் பக்கம் இழுத்தால் எல்லாம் தானா நடக்கும்......

அட உங்க யோசனை அந்த மாதிரித்தான் இருக்கிறது. ஆனால்ப் பாருங்கோ இந்தியாவை மீறி எந்த நாடும் எம்ம விடயத்திலை தலையிட மறுக்குதே. நோர்வே கூட இலங்கையில் வந்து பேச்சுவார்த்தை ஏதாவது நடாத்தினால் நடந்தவற்றை டில்லிக்குச் சென்று ஒப்புவித்து விட்டே நோர்வே திரும்புகின்றது. அதாலை உங்க கருத்துக்கு நோ வே தான்.

அட உங்க யோசனை அந்த மாதிரித்தான் இருக்கிறது. ஆனால்ப் பாருங்கோ இந்தியாவை மீறி எந்த நாடும் எம்ம விடயத்திலை தலையிட மறுக்குதே. நோர்வே கூட இலங்கையில் வந்து பேச்சுவார்த்தை ஏதாவது நடாத்தினால் நடந்தவற்றை டில்லிக்குச் சென்று ஒப்புவித்து விட்டே நோர்வே திரும்புகின்றது. அதாலை உங்க கருத்துக்கு நோ வே தான்.

எமது போராட்டத்தை ஆதரிக்கும் தன்மையை வெளிநாடுகளுக்கு ஏற்படுத்தினால் அதன் மூலம் இந்தியாவின் நிலைப்பாடு மாறும், மாறத்தான் வேண்டும் என்பதே உண்மை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட உங்க யோசனை அந்த மாதிரித்தான் இருக்கிறது. ஆனால்ப் பாருங்கோ இந்தியாவை மீறி எந்த நாடும் எம்ம விடயத்திலை தலையிட மறுக்குதே. நோர்வே கூட இலங்கையில் வந்து பேச்சுவார்த்தை ஏதாவது நடாத்தினால் நடந்தவற்றை டில்லிக்குச் சென்று ஒப்புவித்து விட்டே நோர்வே திரும்புகின்றது. அதாலை உங்க கருத்துக்கு நோ வே தான்.

அண்ணாத்தை அதெல்லாம் சம்பிருதாயத்துக்கு தானுங்கோ,

அமெரிக்காவோ , சீனாவோ தங்கள் பயன்களை இலங்கையில் அடைய முற்படும் போதெல்லாம் இந்தியாவிடம் அனுமதி எடுத்துதான் செய்கிறார்களா? :icon_idea:

வாய்வு பறிய இடம் கிடைக்கும் போது றொம்ப சத்தமாயே விடுகிறியள்! :unsure:

அண்ணாத்தை அதெல்லாம் சம்பிருதாயத்துக்கு தானுங்கோ,

அமெரிக்காவோ , சீனாவோ தங்கள் பயன்களை இலங்கையில் அடைய முற்படும் போதெல்லாம் இந்தியாவிடம் அனுமதி எடுத்துதான் செய்கிறார்களா? :)

வாய்வு பறிய இடம் கிடைக்கும் போது றொம்ப சத்தமாயே விடுகிறியள்! :)

அதுசரி ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் செயற்பாடுகள் தானே உடன் ஞாபகத்திற்கு வரும். :icon_idea::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்க யோசனை அந்த மாதிரித்தான் இருக்கிறது. ஆனால்ப் பாருங்கோ இந்தியாவை மீறி எந்த நாடும் எம்ம விடயத்திலை தலையிட மறுக்குதே. நோர்வே கூட இலங்கையில் வந்து பேச்சுவார்த்தை ஏதாவது நடாத்தினால் நடந்தவற்றை டில்லிக்குச் சென்று ஒப்புவித்து விட்டே நோர்வே திரும்புகின்றது. அதாலை உங்க கருத்துக்கு நோ வே தான்.

இந்தியாவை எமது பக்கம் திருப்புவதும் அதே நோவே(no way) தான். கல்லில் நாருரிக்க நினைப்பது ஏனோ?

காலங்கள் இழுபட இழுபட ....

பலஸ்தீன விடுதலைப் போராட்டம் இதற்கொரு நல்ல உதாரணம்! மிக ஆதரவாக இருந்த நாடுகளே(அரபு நாடுகள்) அப்போராட்டத்திற்கு எதிராக திரும்பியமை!!

காலங்கள் இழுபட்டால் இதில் நாமும் விதி விலக்காக மாட்டோம்!!

காலங்கள் இழுபட இழுபட ....

பலஸ்தீன விடுதலைப் போராட்டம் இதற்கொரு நல்ல உதாரணம்! மிக ஆதரவாக இருந்த நாடுகளே(அரபு நாடுகள்) அப்போராட்டத்திற்கு எதிராக திரும்பியமை!!

காலங்கள் இழுபட்டால் இதில் நாமும் விதி விலக்காக மாட்டோம்!!

பொருந்தாத உவமானம்.

PLO எனும் பலஸ்தீன விடுதலை இயக்கம் அமெரிக்காவிடம் விலை போனதால்தான் அந்த நிலையே அண்றி, சரியான வளியில் போராட்டம் போனதால் அல்ல.

அதையும் விட ஈழத்தில் இருந்தது போல பல இயக்கங்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதுவும் அதுக்கு இன்னும் ஒரு காரணம்.

என்ன பொய்கை!

ஒற்றுமை இல்லையெண்டு பிள்ளையானையோ சொல்லுறியழ்? :icon_idea::unsure::)

  • கருத்துக்கள உறவுகள்

சூராவளி,

பிள்ளையான் குழு போராளிக்குழு அல்ல. சிறிலங்கா அரசின் வேட்டை நாய்ப்படை !

அவங்கள் என்ன இழவுக்குளுவா இருந்தாலும் சரி அவங்களுக்குள்ளயும் ஒற்றுமை இல்லைத்தானே...

கருணாவேட இருந்து காலைவாரினவங்கள்தானே?

நான் ஒரு நகச்சுவையா இருக்கட்டுமெண்டுதான் பிள்ளையான் எண்டு சொன்னனான்... வேற ஒண்டுக்குமில்லை ரகுநாதன்.

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: சூராவளி,

இது தெரியாமலா.....? நானும் நகைச்சுவைக்குத்தான் அப்படிச் சொன்னேன். மற்றும்படி இந்தக் குழுவுக்குள்ள பிளவு வாரதெண்டால் எல்லாருக்கும் சந்தோஷம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.