Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடி வாங்குவோர் சங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடி வாங்குவோர் சங்கம்.

எனது அன்பார்ந்த யாழ் உறவுகளே!

இந்த கலிகாலத்தில் பெண்களிடம் சாத்துவாங்கும் ஆண்களுக்காக ஒரு சங்கம் அமைக்க விரும்புகின்றேன்.தயவு செய்து உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.உதாரணத்திற்கு அகப்பையால் வாங்கிக்கட்டியது அல்லது விளக்குமாறால் ஏற்பட்ட அனுபவங்களை எழுதுங்கள்.ஆண் சிங்கங்களாகிய நாங்கள் பெண்களால் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.எனவே சிங்கங்களே நல்லதோ கெட்டதோ உங்கள் ஆலோசனைகளையும் தற்பாதுகாப்பு முறைகளையும் இங்கே அள்ளி வீசுங்கள்.அத்துடன் பெண்சிங்கங்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. :rolleyes: மற்றும் இச்சங்கத்திற்கு வேலை வெற்றிடங்கள் உள்ளன.விரும்பியவர்கள் இங்கேயே விண்ணப்பிக்கலாம் உதாரணத்திற்கு பொருளாளர் :lol:

  • Replies 67
  • Views 9.7k
  • Created
  • Last Reply

கு.சா.. இதுகளைக் கேட்டேன் வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்கள்.. அன்பே வா என்றது போய்.. அத்தான் வாங்க என்றது போய்.. இங்சேங்க வாங்க.. என்றது போய்.. இந்தா வாரும்.. என்றது போய்.. இங்ச வாப்பா என்றது போய்.. இப்ப இந்தா வருது என்றதில நிக்குது..

தீயினால் சுட்ட புண் மாறும் மாறாது

நாவினால் சுட்ட வடு.

:rolleyes::lol:

Edited by sOliyAn

சோழி ரொம்பவே வருந்துகின்றாரே,,யாராவது இதை பற்றி அவர் மனைவிக்கு தெரிவிக்க கூடாதா?;)

திருமணமாகாத பெண்கள் இந்த பக்கம் வர தடை விதிக்கவேணும்.. ஏனென்றால் இதைப் பார்த்து அவங்களும் ஆண்களை அடிக்க.. சீ.. அடக்க பழகிடுவாங்க.. :rolleyes::lol:

திருமணமாகாத பெண்கள் இந்த பக்கம் வர தடை விதிக்கவேணும்.. ஏனென்றால் இதைப் பார்த்து அவங்களும் ஆண்களை அடிக்க.. சீ.. அடக்க பழகிடுவாங்க.. :rolleyes::lol:

ஏன் இந்த கொலைவெறி? :P

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அடங்கி வாசியுங்கோ, விசயம் கேள்விப்பட்டு அடி கொடுப்போர் சங்கத்தை ஆரம்பித்து போகிற இடமெல்லாம் தர்ம அடி கொடுத்தாலும் கொடுப்பினம். என்னால இதற்கு மேலால் வாங்க முடியாது. வலிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடி வாங்கிறேல்லை , பதிவு திருமணம் செய்யும் போது நான் வாங்கிகொடுத்த மோதிரக்கையால் தான் குட்டு வாங்கிறனான்.

நான் அடி வாங்கிறேல்லை , பதிவு திருமணம் செய்யும் போது நான் வாங்கிகொடுத்த மோதிரக்கையால் தான் குட்டு வாங்கிறனான்.

அப்ப கிட்டடியில திருமணம் செய்திருக்கிறீங்கள்போலை.. :rolleyes:

அடி ஏன் வாங்கவேணும். நாலு பேச்சு வாங்கினாவே எல்லாம் நிலைகுலைஞ்சு போயிடுமே. எங்கட வீட்டில அப்பாவுக்கு இப்பிடித்தான் நடக்கிது. ஏதோ நான் அம்மாவிட்ட இருந்து பாதுகாப்பு குடுத்து வாறன். எல்லா வீடுகளிலையும் இப்பிடித்தான் நடக்கும் எண்டு நினைக்கிறன். அடியவிட பேச்சு வாங்கினால் வாற வேதனைய சொல்லில சொல்ல ஏலாது எண்டு சோழியன் மாமாவே சொல்லிப்போட்டார்.

நீங்கள் எல்லாரும் அடி வாங்காமல் இருக்க முன்னம் முதலில பேச்சு வாங்காமல் இருக்கிறதுக்க்கு ஒரு வழியப் பாருங்கோ. பேச்சுக்குப் பிறகுதானே அடிவிழுறபடலம் துவங்கும்? ஹிஹி.. :o:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த சங்கத்தில் கொள்கைபரப்புசெயலாளர் பதவியை தருமாறு கு.சா வை கேட்டுக்கொள்கிறேன்.எனக்கும் சுப்பம்மாக்கும் நடந்த ஒரு கதையை சொல்லுறன் கேளுங்கோ. வேலைக்கு போய் வந்தாலும் நான் தான் சமைக்கவேனும் :lol: அப்படி ஒருநாள் வேலையால வந்து சமைப்பம் என்று சமையலறைக்கு போனேன் அங்கே போய் பார்த்தால் சாப்பிட்ட கோப்பைகூடகழுவாமல் இருக்கு. எனக்கு நல்லா கோவம் வந்திட்டுது :o சுப்பம்மா இங்க வா என்று கூப்பிட்டன் சமயலறைக்கு வர கோப்பையை கையில குடுத்து இது என்ன என்று கேட்டேன் . எனக்கும் வாய் சும்மா இருக்காது தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன் அப்ப சொன்னேன் உன்னையெல்லம் கட்டி என்ன சுகத்தை கண்டேன் என்று? :o கேட்டுவிட்டு புட்டு அவிக்க மாவை எடுத்து போட்டு நிமிர கிபிர் வெளிக்கிட்ட மாதிரி ஒரு சத்தம் கேட்டது என்னவென்று பார்த்தல் கழுவப்போனதட்டு மிச்ச சாப்பாட்டையும் தாங்கிக்கொண்டு பறக்கும் தட்டு போல முகத்தை நோக்கிவருகுது. இதுக்குப்பிறகும் சொல்லவேணுமே. வேலைக்கு ஐந்து நாள் லீவுதான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு சங்கத்தை அமைத்து ஆண்களின் ஆறாத ரணங்களுக்கு அருமருந்திட முனைந்துள்ள கு.சா அண்ணனுக்கு காதல் ஒழிப்பு சங்கம் சார்பில் வாழ்த்துகள்.

கு.சா.. இதுகளைக் கேட்டேன் வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்கள்.. அன்பே வா என்றது போய்.. அத்தான் வாங்க என்றது போய்.. இங்சேங்க வாங்க.. என்றது போய்.. இந்தா வாரும்.. என்றது போய்.. இங்ச வாப்பா என்றது போய்.. இப்ப இந்தா வருது என்றதில நிக்குது..

தீயினால் சுட்ட புண் மாறும் மாறாது

நாவினால் சுட்ட வடு.

:o:lol:

நல்ல பரினாம வளர்ச்சி தெரியுது சோழியண்ணன். கூர்ப்படைச்சிட்டே வந்திருக்கிறீங்க என்ற தகவலைத்தான் அப்படிச் சொல்லிக் காட்டியிருக்கிறாங்க..! பெருமைப் பட்டுக்கோங்கோ..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இட்ட பணியைச் செவ்வனே செய்தால் அடிதடி, சங்கம் எல்லாம் எதற்கு ?

அப்ப அடிமை வாழ்வு தான் தீர்வு என்றீங்களா. இட்ட பணியைச் செவ்வனே செய்தல் என்பது... முதலாளி - கொத்தடிமை உறவை எல்லோ நினைவுபடுத்துது. கணவன் - மனைவி இடையிலான அன்பான உறவையல்லவே இணைஸ். :o

நீங்க ஏண்டா பிரச்சனை என்றிட்டு.. சொல்லுறதெல்லாம் செய்து சமாளிச்சிட்டுப் போறீங்க போல. பாவமா இருக்குது உங்களைப் பார்க்க இணைஸ்..! ஒருவேளை இட்ட பணியைச் செய்ய முடியாத நிலை வந்திச்சு என்று வையுங்க.. என்னாகும்.. உங்கள் நிலை..??! :lol:

Edited by nedukkalapoovan

சுப்பம்மா இங்க வா என்று கூப்பிட்டன்

நல்ல தைரியசாலி தான். வா என்றெல்லாம் கூப்பிடுறியள்.

எனக்கு அடி, பேச்செல்லம் தேவையில்லை. ஒரே ஒரு முறாய்பு போதும். நல்ல பிள்ளயா அடங்கிடுவனாக்கும்.

ஒருவேளை இட்ட பணியைச் செய்ய முடியாத நிலை வந்திச்சு என்று வையுங்க.. என்னாகும்.. உங்கள் நிலை..??! :o

நீங்க சமையல் குறிப்பெல்லாம் தேடி சமைப்பதன் ரகசியம் என்னவோ??

கு.சா

கவலைப் படாதையுங்கோ. உங்கள் சங்கத்திற்கு ஆலோசகராக வேண்டுமானால் நான் வருகின்றேன். பெரும்பாலும் தாக்குதல்களையோ, ஏச்சுக்களையோ தடுத்து நிறுத்த முடியாது. அதனால் அது சம்பந்தமாக எந்த ஆலோசனைகளையும் நான் வழங்க வரவில்லை. ஆனால் இவற்றிலிருந்து எம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாமென்ற ஆலோசனைகளையே நான் தரலாமென நினைக்கின்றேன். உதாரணத்திற்கு இரணடு ஆலோசனைகள் தருகின்றேன். எல்லாம் அனுபவ ஆலோசனைகள் தான். :D என்ன வீட்டிற்கு வீடு வாசற்படி. :D

1) சகிக்க முடியாத படி ஏச்சுக்கள் தொடர்ந்தால்

நன்றாக காதை மூடி முடி வளர்ந்து வைத்திருங்கள். இப்போ மிகச் சிறியளவில் கூட MP3 Player கிடைக்கின்றன. அவற்றில் அதி கூடிய ஒலியளவை கூட்டி வைத்து சோகமான பாடல்களை மட்டுமே கேட்டு இரசியுங்கள். ஆனால் முடிந்தவரை நீங்கள் MP3 Player இல் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது, உங்கள் ஆத்துக்காரிக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். :o:o

2) கையில் கிடைப்பவற்றை வைத்து தாக்குதல் ஆரம்பித்தால்

முன்பு பெரிசுகள் பெரிய துவாய் ஒண்டை எந்த நேரமும் வீட்டிலை இருக்கேக்கை தோளிலை போட்டிருப்பினம். அப்ப எனக்கு அதன் சூட்சுமம் பிடிபடவில்லை. இப்ப தான் எல்லாம் தானாக தெரிய வருகின்றது. :lol::lol:

முடிந்தவரை குறைந்தது 2 மீற்றருக்கப்பால் சென்றுவிடுங்கள். பிறகு தாக்க வருவனவற்றை துவாயை விரித்து (ஸ்பெயினில் மாடு அடக்குவதற்கு பாவிப்பது போல்) தடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து சிவப்பு நிறத் துவாய்களை பாவிக்க வேண்டாம். காரணம் சிவப்பு நிறத்தினால் இன்னும் தாக்குதல் வேகம் அதிகரிக்குமாம். :):D

அட..நன்னா இருக்கே கு.சா தாத்தா அது தான் உந்த சங்கம்..அடி வாங்கினா பிறகு உந்த சங்கம் என்ன செய்ய போது ஆசுபத்திரிக்கு கூட்டி கொண்டு போகுமோ..(இல்ல சங்கத்தின்ட நோக்கம் ஒன்னையும் காணல்ல அது தான் கேட்டனான் தாத்தா)..

எல்லாரும் ஓடி வந்து உங்க இணையிற பாத்தா வீட்ட எல்லாருக்கும் அடி தான் போல அச்சோ பாவம் :) ..அது சரி அவை அடிக்க மட்டும் நீங்க என்ன தான் செய்வியள்..(கடசி ஓட கூடவா மாட்டியள்).. :o

சரி நான் உந்த சங்கதிற்கு கொஞ்சம் யோசனைகளை தாறன்.. :lol:

யோசனை(கள்)..

1)மனிசி அடிக்க வாறா எண்டவுடன அவாவின்ட அம்மாவின்ட பேரை சொல்லி கத்தி கும்பிடுங்கோ..

2)இல்லாட்டி புதுசா வந்த சீலை வாங்க இன்னைக்கு போவோமா எண்டு கேளுங்கோ..

3)அப்படி தான் அதுக்கு மிஞ்சி அடித்தா எண்டா அப்படியே கட்டி பிடித்து உம்மா கொடுங்கோ.. :lol:

இப்போதைக்கு இந்த மூனு யோசனைகளும்..சங்கத்தின்ட வளர்ச்சியை பொறுத்து பல யோசனைகளை சொல்லுவன் கு.சா தாத்தா :D ..(ஆனா என்னையும் சங்கத்தில இணைக்கனும் சொல்லிட்டன்)..ஏன் தெரியுமா றோட்டால போற யாரும் என்னை அடிக்க வந்தா இங்க வந்து ஒழிந்து கொள்ள தான்.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில நீ வாங்கிற அடி ஒன்னும் உன்ன ஒரு அடி மேல எடுத்து வைக்க உதவும்" :o

அப்ப நான் வரட்டா!!

கு.சா

கவலைப் படாதையுங்கோ. உங்கள் சங்கத்திற்கு ஆலோசகராக வேண்டுமானால் நான் வருகின்றேன். பெரும்பாலும் தாக்குதல்களையோ, ஏச்சுக்களையோ தடுத்து நிறுத்த முடியாது. அதனால் அது சம்பந்தமாக எந்த ஆலோசனைகளையும் நான் வழங்க வரவில்லை. ஆனால் இவற்றிலிருந்து எம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாமென்ற ஆலோசனைகளையே நான் தரலாமென நினைக்கின்றேன். உதாரணத்திற்கு இரணடு ஆலோசனைகள் தருகின்றேன். எல்லாம் அனுபவ ஆலோசனைகள் தான். :D என்ன வீட்டிற்கு வீடு வாசற்படி. :D

வசபண்ணா...இப்படி ஒரு சிங்கதிற்குள்ள ஒரு பூஸ் குட்டி இருக்கு எண்டு நேக்கு இன்னைக்கு தான் தெரியும்..ரொம்ப தான் பாவம் நீங்க.. :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா.. இதுகளைக் கேட்டேன் வயித்தெரிச்சலைக் கிளப்புறீங்கள்.. அன்பே வா என்றது போய்.. அத்தான் வாங்க என்றது போய்.. இங்சேங்க வாங்க.. என்றது போய்.. இந்தா வாரும்.. என்றது போய்.. இங்ச வாப்பா என்றது போய்.. இப்ப இந்தா வருது என்றதில நிக்குது..

தீயினால் சுட்ட புண் மாறும் மாறாது

நாவினால் சுட்ட வடு.

:o:lol:

வீட்டிலை உந்த சொல்லை கேட்டு கனகாலமாச்சு :lol:

கு.சா அடங்கி வாசியுங்கோ, விசயம் கேள்விப்பட்டு அடி கொடுப்போர் சங்கத்தை ஆரம்பித்து போகிற இடமெல்லாம் தர்ம அடி கொடுத்தாலும் கொடுப்பினம். என்னால இதற்கு மேலால் வாங்க முடியாது. வலிக்கிறது.

என்னதை செய்யுறது கத்தப்பு ஆம்பிளையளாய் பிறந்தால் எல்லாத்தையும் அனுபவிக்க வேணும் எண்டு தலையெழுத்து :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அடி வாங்கிறேல்லை , பதிவு திருமணம் செய்யும் போது நான் வாங்கிகொடுத்த மோதிரக்கையால் தான் குட்டு வாங்கிறனான்.

சிறித்தம்பி சாத்து வாங்கிறதுக்கான அறிகுறிதான் உந்த குட்டு :o

போகப்போக இருக்கு விளையாட்டு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நல்லா கோவம் வந்திட்டுது :o சுப்பம்மா இங்க வா என்று கூப்பிட்டன்

நீங்கள் கொடுத்து வைச்சனீங்கள். உப்பிடியெல்லாம் கூப்பிட முடியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எல்லாரும் அடி வாங்காமல் இருக்க முன்னம் முதலில பேச்சு வாங்காமல் இருக்கிறதுக்க்கு ஒரு வழியப் பாருங்கோ. பேச்சுக்குப் பிறகுதானே அடிவிழுறபடலம் துவங்கும்? ஹிஹி.. :lol::lol:

இல்லை மாப்பு ஒருசில வீடுகளிலை இடிமுழக்கத்துக்கு பிறகுதான் மிச்ச அலுவல் :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த சங்கத்தில் கொள்கைபரப்புசெயலாளர் பதவியை தருமாறு கு.சா வை கேட்டுக்கொள்கிறேன்.

ஓ பிரச்சனை இல்லை சுப்பண்ணை :lol:

அருமையான ஒரு சங்கத்தை அமைத்து ஆண்களின் ஆறாத ரணங்களுக்கு அருமருந்திட முனைந்துள்ள கு.சா அண்ணனுக்கு காதல் ஒழிப்பு சங்கம் சார்பில் வாழ்த்துகள்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி நெடுக்கு சாமி :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இட்ட பணியைச் செவ்வனே செய்தால் அடிதடி, சங்கம் எல்லாம் எதற்கு ?

அவையள் அடிக்கிறதெண்டு முடிவோடை இருக்கேக்கை இட்டபணியை செவ்வனே செய்தால் என்ன செய்யா விட்டால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சமையல் குறிப்பெல்லாம் தேடி சமைப்பதன் ரகசியம் என்னவோ??

பசிச்சா சாப்பிட சாப்பாடு செய்ய சமையல் அவசியம் தானே..! :o

  • கருத்துக்கள உறவுகள்

அவையள் அடிக்கிறதெண்டு முடிவோடை இருக்கேக்கை இட்டபணியை செவ்வனே செய்தால் என்ன செய்யா விட்டால் என்ன?

நான் கண்டிருக்கிறேன்.. பல வீடுகளில்.. மீனாட்சி ஆட்சிதான். குறிப்பா புலம்பெயர்ந்த நாடுகளில் ஆண்கள் பேசா மடந்தைகளாக இருப்பதை பல இடங்களில் கண்டிருக்கிறேன்..!

ஆண்கள் பேசாமல் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணம்..

1. அதிகம் பேசி பூரிக் கட்டையளால வாங்கிக் கட்டுவான் ஏன் என்று.

2. பதிலுக்கு வாயை.. கையைக்.. கால நீட்ட... எதிர்தரப்பு பகிஸ்ரப்பில இறங்கிட்டு என்றால் திண்டாட்டங்கள் வருவதை தவிர்க்க. :o

நான் கண்டிருக்கிறேன்.. பல வீடுகளில்.. மீனாட்சி ஆட்சிதான். குறிப்பா புலம்பெயர்ந்த நாடுகளில் ஆண்கள் பேசா மடந்தைகளாக இருப்பதை பல இடங்களில் கண்டிருக்கிறேன்..!

ஆண்கள் பேசாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்..

அதிகம் பேசி பூரிக் கட்டையளால வாங்கிக் கட்டுவான் ஏன் என்று.

பல வீடுகளில் பூரி செய்கினமோ இல்லையோ ஆனால் பூரிக்கட்டை இருக்கிறதை நான் பார்த்திருக்கிறன். அதன் மர்மம் உதுதானோ?? :o:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.