Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு வந்து சேர்ந்துள்ள இந்திய பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு தொகுதி

Featured Replies

கொழும்பு வந்து சேர்ந்துள்ள இந்திய பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு தொகுதி

[வியாழக்கிழமை, 24 யூலை 2008, 01:46 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]

சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ள அந்நாட்டு பாதுகாப்பு படைத்தொகுதி ஒன்று ஏற்கனவே சிறிலங்காவுக்கு வந்து சேர்ந்திருப்பதாகவும் இன்னும் ஒரு தொகுதி வரவுள்ளதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.

இந்திய தலைவர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, அவருக்கு அளிக்கப்படும் வழமையான பாதுகாப்பை விட, சிறிது அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கொழும்பு வரவுள்ள பிரதமர் மன்மோகனுக்கு அளிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது கொழும்பு வந்து சேர்ந்துள்ள இந்திய பாதுகாப்பு படைத்தொகுதி விவரம் குறித்து மேலதிக தகவல் எதனையும் வெளியிடாத அமைச்சர், சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த வெளிநாடு செல்லும்போது அவருடன் கூட செல்லும் பாதுகாப்பு பிரிவு போன்றதொரு ஏற்பாடே இது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறிலங்கா செல்லும் இந்தியப் பிரமதருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு கொழும்புக்குச் செல்லும் இந்திய போர்க் கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு தற்போது சிறிலங்கா கடல் எல்லைக்குள் வந்துவிட்டதாகவும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாட்டின்படி சிறிலங்கா செல்லவுள்ள இந்திய உலங்குவானூர்திகள் மற்றும் குண்டு துளைக்காத வாகனங்கள் ஆகியவை இந்த வாரம் கொழும்புக்கு வரவுள்ளன என்றும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதினம்

இந்திய படையினர் கொழும்புக்கு வரவுமில்லை, வரப்போவதுமில்லை

[12 - July - 2008]

* அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென இந்தியாவிலிருந்து 1500 படையினர் இலங்கை வந்துள்ளதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளுமில்லையெனத் தெரிவித்துள்ள அரசு இந்தியப் படை வரவுமில்லை, இனிவரப்போவதுமில்லையெனவும் உறுதிபடக் கூறியுள்ளது.

சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென 1500 இந்தியப் படையினர் வந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டுமென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்னாயக்கா வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கேள்விக்கு அரசு சார்பாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறியதாவது.....

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=427395

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கருத்து என்னவென்றால், சார்க் மாநாட்டிற்காக வடக்கில் மக்ககளைக் கொல்ல அனுப்பப்பட்ட சிங்களப்படைகளை மீளப்பெற வேண்டி வரும் என்பதால் இந்தியப்படைகளை மகிந்த பிச்சையாகக் கேட்டிருப்பார். அவர்களும், சிங்கள மாதுக்களை எண்ணி வந்திருப்பார்கள். ஆக மொத்தம் தமிழைக் கொல்வதில் சிறிலங்காப்படைகள் ஓய்வெடுக்கக்கூடாது என்பதில் இந்தியா மிகவும் அவதானமாகவே இருக்கின்றது.

எவன் பலமடைகின்றானோ, அவனையே சர்வதேசம் நாடும் என்பது விதி. தமிழர் தம்முடைய பலத்தை உயர்த்ததாத வரை உலகம் கண்டு கொள்ளப்போவதில்லை.

அது புலம்பெயர் தமிழர்களின் கையிலும் தங்கியுள்ளது. தொழில்நுட்பரீதியான வளப்படுத்தல் என்பது எம் போராட்டத்திற்கு மிக முக்கியமானது. இதற்கு இளையசமூதாயம் உதவிடல் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்து இருநூறு இலங்கைக் காவல்துறையினர் கொழும்புக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 01:56.42 AM GMT +05:30 ]

யாழ் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த ஆயிரத்து இருநூறு இலங்கைக் காவல்துறையினர் கொழும்புக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். காங்கேசன்துறையில் இருந்து கப்பல் மூலம் நேற்று கொழும்பு நோக்கி இவர்கள் புறப்பட்டுச் சென்றதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொழும்பில் இடம்பெறும் சார்க் உச்சி மாநாட்டிற்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தும் நிமித்தம் இவர்களைக் கொழும்புக்கு இலங்கை அரசாங்கம் மீளப்பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்றது.

tamilwin.com

சார்க் பாதுப்பு நடவடிக்கையில் நாய்களும்!

[ வியாழக்கிழமை, 24 யூலை 2008, 01:40.07 AM GMT +05:30 ]

சார்க் மாநாட்டின் பாதுகாப்பு பணிகளில் 40 மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படவுள்ளன. சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டுள்ள இந்த நாய்கள் சார்க் தலைவர்கள் மற்றும் மாநாடு நடைபெறும் பிரதேச பாதுகாப்புக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.

சார்க் மாநாட்டின் உச்ச பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

tamilwin.com

மொத்தமாக 3040 நாய்கள். . .

;பரணி

எப்படி உங்களால் மட்டும் முடியுது?

  • கருத்துக்கள உறவுகள்

மகா நாட்டுக்கு வாற தலைவர்கள் பேராளர்கள் எல்லாரையும் நாய்கள் போட்டுக் கடிச்சி வச்சுதெண்டால் பாக்க நல்ல பகிடியா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

1987 செப்டம்பர் மாதம் இந்திய இரானுவத்தை வடக்குக்கு வரசெய்து இலங்கை இரானுவத்தை தெற்கு பகுதிக்கு அனுப்பி ஜெ.வி.பியினரின் ஆயுதகிளர்ச்சியை முறியடித்தனர் தெற்காசியாவின் அதிகாரவர்க்கம்.அதுபோல ஒரு முயற்ச்சியை தமிழர்களுக்கு எதிராக முயற்ச்சிக்கிறார்கள் இந்த தெற்காசிய அதிகார வர்க்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு வந்து சேர்ந்துள்ள இந்திய பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு தொகுதி

உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்....

சிங்களவரின் துடுக்குத் தனத்திற்குப் பயந்து செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்.

சிங்களவரின் துடுக்குத் தனத்திற்குப் பயந்து செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்.

அதுக்குத்தான் வாறாங்கள் எண்டு சிங்களவங்களுக்கும் தெரியும்...

உவங்கள் இரண்டு பேரும் உதை தங்கட பேரில செய்யாமல்விடத்தான் புலிகள் யுத்தநிறுத்த அறிக்கையும் விட்டு இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.