Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் நம்மவர் ஒருவர் கலைத்தறையில் ஏதாவது செய்ய முற்பட்டால், //

அண்ணை.. பூக்கள் படத்த பார்த்தாப் பிறகும் அவர் கலைத்துறையில ஏதாவது செய்ய வெளிக்கிடுறாரோ எண்டு பாத்து பகிடி விடுங்கோ..

ஆனா இதில நான் சொல்ல வாறதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அதாவது வசதியும் வாய்ப்பும் கிடைத்த நாங்களே ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் எண்டு மசாலாப் படம் செய்து போட்டு..

பிறகு ஐயோ மணிரத்னம் எங்களை பற்றி படமெடுக்கவில்லை. பாரதிராசா பண்ணவில்லை.. பாலு மகேந்திரா செய்ய வில்லையென மாரடிச்சு அழுவதும் எழுதுறதும் என்ன நியாயம்?

  • Replies 61
  • Views 10.1k
  • Created
  • Last Reply

ஆனா இதில நான் சொல்ல வாறதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அதாவது வசதியும் வாய்ப்பும் கிடைத்த நாங்களே ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் எண்டு மசாலாப் படம் செய்து போட்டு..

பிறகு ஐயோ மணிரத்னம் எங்களை பற்றி படமெடுக்கவில்லை. பாரதிராசா பண்ணவில்லை.. பாலு மகேந்திரா செய்ய வில்லையென மாரடிச்சு அழுவதும் எழுதுறதும் என்ன நியாயம்?

இதை நீங்கள் இயக்குனர் அமீரிடம் இருந்து கடன் வாங்கியது இல்லைத்தானே..?

//ஆனால் நம்மவர் ஒருவர் கலைத்தறையில் ஏதாவது செய்ய முற்பட்டால், //

அண்ணை.. பூக்கள் படத்த பார்த்தாப் பிறகும் அவர் கலைத்துறையில ஏதாவது செய்ய வெளிக்கிடுறாரோ எண்டு பாத்து பகிடி விடுங்கோ..

ஆனா இதில நான் சொல்ல வாறதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அதாவது வசதியும் வாய்ப்பும் கிடைத்த நாங்களே ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் எண்டு மசாலாப் படம் செய்து போட்டு..

பிறகு ஐயோ மணிரத்னம் எங்களை பற்றி படமெடுக்கவில்லை. பாரதிராசா பண்ணவில்லை.. பாலு மகேந்திரா செய்ய வில்லையென மாரடிச்சு அழுவதும் எழுதுறதும் என்ன நியாயம்?

பூக்கள் படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. அப்படம் அவரின் முதல்படம். எம்மவர்கள் சினிமாவை இந்தியச் சினிமாவுடன் ஓப்பிடுவது தவறு. ஒருவர் படிப்படியாகத் தானே முன்னேற முடியும். ஆரம்பத்தில் மசாலாப் படங்களை எடுத்தால்த் தான் கையை சுட்டுக் கொள்வது குறைவாக இருக்கும். ஒரு நிலையான இடத்திற்கு வந்தபின் துணிந்து எதையும் செய்யலாம். ஆனால் பின்பும் ஒரு நிலையான இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லையென்றால் அது அவரின் தவறு. அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அவருக்குத் தானே.

மேலும் மணிரத்னம் எங்களை பற்றி படமெடுக்கவில்லை. பாரதிராசா பண்ணவில்லை.. பாலு மகேந்திரா செய்ய வில்லையென நான் ஒருபோதும் கேட்டதுமில்லை. இக்கேள்வியைக் கேட்டவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

எனக்கு இன்னொரு சந்தேகம் ஐரோப்பாவில் ஒருவர் தன்னை ரஜனியாக்கி, ரஜனி தன் படங்களில் செய்வது போல் விளம்பரத்திற்காக ஏதேதோ எல்லாம் செய்து அதை தன் புகழ் பாட இணையத்தளங்கள் பலவற்றில் உலா விட்டுக் கொண்டிருக்கின்றாரே?? ஏன் அவரை ஒருவரும் விமர்சிக்கவில்லை. தேசியவாதி என்ற போர்வையை போர்த்தி வலம் வருவதனாலேயா??

விமர்சனம் என்பது கூட போலித்தனமாக வேண்டியவர், வேண்டப்படாதவர் என்பதைப் பார்த்தா செய்யப்படுவது??

வசம்பண்ணா உங்கள் நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி. *** சாந்தி அவர்களின் கட்டுரைக்கு நிதானமாக கருத்தெழுத நினைத்தேன். செ.துரை அவர்கள் கூறியதில் சில உண்மைகள் உண்டு ஈழத்தமிழரும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்றவர்களாகவே இருக்கவேண்டும். அது விஜயன் செல்வதற்கு முன்னர் நடை பெற்றிருக்கின்றது.

மற்றையது நமது தேசியத்தலைவரே ஒரு நேர்காணலில் இயற்கை எனது வழிகாட்டி வீரபாண்டிய கட்ட பொம்மன் கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்கள் தன்னுடைய விடுதலை உணர்வை வளர்த்ததாக. தனக்கு சோழர்களின் வீரம் பிடித்தாகவும் கடல்புறா போன்ற நூல்கள் மூலம் சோழர்களின் வீரத்தை அறிந்ததாகவும் அதனால் புலிச்சின்னத்தை தான் தேர்ந்தெடுத்ததாகவும்..

சாந்தி அக்கா உங்களுக்கு செ துரையில் தனிப்பட்ட கோபங்கள் இல்லாவிடின் உங்கள் தவறை உணர்ந்து உங்கள் கருத்தை களத்தில் வைப்பிர்களா?

***

நீங்களும் வசம்பு அவர்களும் சொல்லுவது போல நாங்கள் ஏதோ தொப்புள் கொடி உறவு என சொல்கிறோம். எங்களுக்காக குரல் கொடுங்கள் என்று சொல்கிறோம். தலைவர் பிரபாகரன் அவர்கள் கூட MGR அவர்களின் பரம ரசிகர். தலைவரே ஒரு முறை சொன்ன கருத்தை யாரோ சொன்னார்கள். அதை எழுதினால் அதுவும் பிரச்சனையாகிவிடும் :wub: இது ஒன்றும் தவறல்ல. நாடோடி மன்னன் என்ற படம்தான் MGR ன் கனவை முதல்வராக நனவாக்கியதாக படித்த ஞாபகம். லெனின் மாவோ போன்றவர்களை பின்பற்றுவதை ஏற்றுக் கொள்ளும் நம்மால் ஏனோ நம்மவர்களை ஏற்றுக்கொள்ளப் பிடிக்காதது? அது ஏனோ தெரியவில்லை? காந்தியை உலகமே ஏற்றுக்கொள்கிறது. அதுவும் அரைப்பக்கிரியாய் அலைந்த ஒருவரை... அப்படி இருக்கும் போது.... :lol: ஒரு மனிதன் தன்னால் முடிந்ததை செய்கிறான். அவன் நம்முடையவனாக இருக்கிறான். முடிந்தால் 4 வார்த்தை பாராட்டி விட்டு போவம். அதைவிட்டு அவன் மனதை பெரியவர்களாக இருப்போர் அல்லது நினைப்போர் வருத்துவது அவன் எதிரியாக இருந்தாலும் சரியில்லை.

Edited by வலைஞன்
thanikkai

நான் இப்பதான் அந்த 7லிருந்து பார்த்தேன். அவரது பேச்சில் தவறில்லை. இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேணும். திமுகவின் சாயல்தான் உதய சூரியன் சின்னம். அது ஈழத்துக்காக வாக்கு கேட்ட சின்னம். நாளை நமதே : அச்சம் என்பது மடமையடா இப்படி பாடல்தான் அன்றைக்கு லவுஸ்பீகரில் ஒலித்ததாய் பலர் சொல்லக் கேட்டது உண்டு. தமிழகத்து தமிழர்களே , ஈழத்து தமிழன் ஒருவனையும் அவனது திரைப்படத்தையும் மெச்சும் போது....எம்மில் ஏன் சிலர் கல்லோடும் பொல்லோடும் திரிகிறார்கள் என்பது புரியவில்லை. அவரும் நம்மைப் போல் ஒரு மனிதன்தான். அதை உணர்ந்தால் நம் இனம் உயரும். இல்லையென்றால்..... :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும் இந்திய தமிழ் சினிமாவுடன் தமிழீழ போராட்டத்தை

ஒப்பிட்டது தவறு என்று நான் கூற முனைகிறேன்

தமிழ் சினிமா வெறும் முன்று மணித்தியாலங்களே......ஆனால்

தமிழிழ போராட்டம் என்பது எம் உறவுகளுக்கு சொல்ல வேண்டிய

அவசியம் இல்லை.

கலைச் சேவை செய்பவர்களுக்கும் அது பற்றி கருத்தாடல் செய்பவர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்!

உங்களுக்கு கலை ஆர்வமிருந்தால் உங்களிடம் பணம் இருந்தால் அல்லது கடன் வாங்கி கையை சுட்டுக் கொள்ளும் துணிவிருந்தால் நீங்கள் படம் எடுக்கலாம் அதில் நீங்களே நடித்து ஒடிப்பிடித்து ஆடிப்பாடி மகிழலாம்.அல்லது இளவயதினரை ஒடிப்பிடித்து விளையாட வைத்து பார்த்து மகிழலாம்.நீங்கள் தொலைக்காட்சி வலைக்காட்சி நடத்தலாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல உங்கள் திருவாய் மொழிகளை மறைபொருளாகச் சொல்லி நியாயப்படுத்தலாம்.இணையத்தளம

சாந்தி நீங்கள் சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லை . ஈழத்தமிழர் போராட்டத்தை தங்களது சுய தேவைக்காக யாரும் பயன்படுத்துவதை ஈழத்தமிழர்கள் அனுமதிக்கமுடியாது. இவருடைய பேச்சு முழுவதையும் பார்த்தேன் அதிலிருந்து இவர் தன்னைத்தானே புகழ்ந்து பேசுகின்றார் என்று நன்றாக தெரிகிறது. ஆனால் அப்படி பேசுவது தப்பில்லை அதில் ஈழத்தமிழர் போராட்டத்தை சேர்த்ததுதான் தப்பு .வசம்பர் முதலிருந்தே தமிழக அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்குபவர் அவருக்கு இது தப்பாக தெரியாது ஆனால் உணர்வுள்ள ஈழத்தமிழர்களுக்கு இது தப்பாக தெரியும் . ஈழத்தமிழர் போராட்டம் ஒருவருடைய தனிச்சொத்தல்ல அது ஈழத்தமிழர்களின் சொத்து அதை யாராவது தவறான வழியில் பயன்படுத்தமுனைந்தால் அது எமக்கு தலைகுனிவையே ஏற்படுத்தும் அகவே இவரினுடைய பேச்சும் கருத்துக்களும் கடுமையான கண்டனத்துக்குரியது இவர் தவறு செய்துள்ளார். இவருடைய படைப்புக்களை புறக்கணிக்க வேண்டிய அவசியம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கு தமிழக சினிமாவும் ஒரு சிறிய பங்கை ஆற்றியிருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. தமிழக சினமாவின் எழுச்சி வசனங்களை, எழுச்சிப் பாடல்களை விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

"தோல்வி நிலையென நினைத்தால்" பாடல் ஏற்படுத்திய தாக்கம்குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆனால் விடுதலைப் போராட்டத்திற்கு காரணம் சிங்களப் பேரினவாத அரசு அல்ல, தமிழக சினிமாவே என்பது அபத்தமான ஒரு கருத்து. கண்டிக்கப்பட வேண்டியது.

தமிழக சினிமா இல்லாமல் இருந்தாலும் கூட தமிழீழப் போராட்டம் நடந்துதான் இருக்கும்.

மேடைப் பேச்சுக்களில் சில மிகைப்படுத்தலை செய்வது வழமைதான். ஆனால் துரை செய்த மிகைப்படுத்தல் அபத்தத்தின் உச்சம்.

ஆனால் அதற்காக இவருடைய படங்களை புறக்கணிக்க வேண்டும் என்பதும் சற்று அதிகப்படியானது.

மனிதர்கள் நடிக்கும் கார்ட்டுண் படங்களை தருவதற்கு எமக்கு துரையை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேடைப் பேச்சுக்களில் சில மிகைப்படுத்தலை செய்வது வழமைதான். ஆனால் துரை செய்த மிகைப்படுத்தல் அபத்தத்தின் உச்சம்.

ஆனால் அதற்காக இவருடைய படங்களை புறக்கணிக்க வேண்டும் என்பதும் சற்று அதிகப்படியானது.

மனிதர்கள் நடிக்கும் கார்ட்டுண் படங்களை தருவதற்கு எமக்கு துரையை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?

சபேசன் மனிதர்கள் நடிக்கும் காட்டுண் படங்களை துரையை வி்ட்டால் யார் இருக்கிறார்கள் என்பது எல்லாவற்றையும் விட அதிகம். உங்களை வன்மையாக கண்டிக்கிறது கண்ணகி கழகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்று பதில் சொல்கிறாயே என ஊரில் கேட்பார்கள்.

யாழ் களத்தாரும் இப்படித்தான் விவாதத்தை ஒரு புள்ளியில் தொடக்கினால் அவர்கள் மறு புள்ளியை இட்டு விவாதத்தை வேறு வழிக்கு கொண்டு செல்வது அல்லது வேறு பதிலை அளித்து சமாளிப்பது.

தற்போதும் அதுதான் தொடர்கின்றதோ என்று சந்தோகப்படுகிறேன்.

தமிழக சினிமாவின் வரலாறு இப்பதான் 75 ஆண்டுகள் கொண்டாடினார்கள்.

ஈழப்போராட்மும் அதன் விதைகளும் வெறும் 75 ஆண்டுகள்தானா?

இலங்கைத் தீவின் சுதந்திரத்திற்கு முன்பே இடம்பெற்ற அரசியல் சீாதிருத்தங்களில் டொனமூர் சீர்திருத்தம் எத்தனையாம் ஆண்டு தெரியுமா உங்களுக்கு.

அதன்மீது டொனமூருக்கு எதிரான போராட்டங்களை நடத்திய யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் போராட்டம் எத்தனையாம் ஆண்டு என்று தெரியுமா?

அப்ப எந்த தமிழக சினிமா அப்ப அந்த போராட்டத்தை கற்றுத்தந்தது.

என்ன கதைக்கிறீர்கள்.

கி.செ.துரை கதைத்தது முட்டாள்தனம்தான் நாங்கள் அதனை ஏற்கிறோம் என்று சொல்லிவிட்டு செல்லுங்கள்.

ஆனால் ஈழப்போராட்டத்தை தமிழக சினிமாவுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்தாதீர்கள்.

ஈழப்போராட்டம் அரசியல் கோரிக்கைகளை முன்வைத் வளர்த்தெடுக்கப்பட்டது.

அதற்கு இந்திய சுதந்திரப்போராட்டம், அயர்லாந்து போராட்டம் என்பவை முன்மாதிரிகளாக கொள்ளப்பட்டன.

இந்திய தமிழக அரசியல் தாக்கங்கள் என்பவை வேறு தமிழக சினிமா வழங்கும் உந்துதல் என்பது வேறு.

கி.செ.துரை சினிமா என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்களையும் உதிர்க்கும் வாய்ச்சொற்களையும் விவாதத்திற்கு எடுத்து மறுத்துரைப்பதே பொருத்தமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்பதான் அந்த 7லிருந்து பார்த்தேன். அவரது பேச்சில் தவறில்லை. இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேணும். திமுகவின் சாயல்தான் உதய சூரியன் சின்னம். அது ஈழத்துக்காக வாக்கு கேட்ட சின்னம். நாளை நமதே : அச்சம் என்பது மடமையடா இப்படி பாடல்தான் அன்றைக்கு லவுஸ்பீகரில் ஒலித்ததாய் பலர் சொல்லக் கேட்டது உண்டு. தமிழகத்து தமிழர்களே , ஈழத்து தமிழன் ஒருவனையும் அவனது திரைப்படத்தையும் மெச்சும் போது....எம்மில் ஏன் சிலர் கல்லோடும் பொல்லோடும் திரிகிறார்கள் என்பது புரியவில்லை. அவரும் நம்மைப் போல் ஒரு மனிதன்தான். அதை உணர்ந்தால் நம் இனம் உயரும். இல்லையென்றால்

துரையின் பேச்சில் சுயவிளம்பரம் தான் அதிகம் தெரிகின்றது. தன்னுடைய படத்தை விற்பனை செய்வதற்காக ஈழப்போரைக் கையில் எடுத்துள்ளார். இதை ஏற்கமுடியாது.

இந்தியா போல ஒரு காலத்தில்கட்சிப் பெயர் கொண்டு அரசியல் நடத்தினவர்களும், மேடை நிறைய வாக்குஞதி வழங்கிவிட்டு மக்களை ஏமாற்றிய அரசியல் என்றும் ஒன்று இருந்தது. ஆனால் அது எம் போராட்டத்திற்கு இணையாகாது. எம் போராட்டம் வளர்ந்ததற்கு அது எதிரியிடம் வாங்கிய பாதிப்புக்கள் தான் காரணம்.

தலைவர் எம்ஜிஆரினைத் தனிப்பட்ட விதத்தில் ரசிக்கலாம். ஏன் ஆங்கில நடிகர்கள் சிலரைக் கூடத் தனக்குப் பிடிக்கும் எனவும் சொல்லியிருக்கின்றார். அதற்காக அவற்றைப் பின்பற்றித் தான் போராட்டம் என்றல்ல. அவை இரண்டுமே வேறு தளங்கள். துரைக்கு மண்டை கழண்டுவிட்டது என்றால் அவருக்கு மருத்துவம் பார்க்க நம்மால் முடிந்தது படத்தைப் புறக்கணிப்பது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு கூறியது போல் செல்லத்துரை டென்மார்க்கில் மதிக்கப்படுபவர் அல்ல. அவரிடம் ஒரு சிறிய வட்டம் ஒன்று உள்ளது அது அவரின் குடும்பத்தவர்கள். மற்றது குமாரதுரை குடும்பம். குமாரதுரையின் பிள்ளைகளுக்கு தமிழ் படிபித்த ஆசான் அல்லவா துரை.

2005 ம் ஆண்டு வரை குமாரதுரையின் பிள்ளைகளால் நடாத்தப்பட்ட தமிழ் தேசவிரோத இணையத்தளங்களுக்கு தனது இணையத்தில் இணைப்பும் கொடுத்திருந்தார் இந்த செல்லத்துரை.

தமிழ் மக்களின் போராத்திர்கு டென்மார்க்கில் வாழும் அனைத்து இளைஞர்களும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்யும் வேளையில் செல்லத்துரையின் வாரிசுகள் மட்டுமம் ஒதுங்கியிருப்பது ஏன்.

ஐபிசி என்ற வானொலியில் இருக்கும் சிலரின் தனிபட்ட நட்பை பாவித்து துரை இப்ப ஊடகவியளார் ஆகிவிட்டார். அதனால் இதே துரை இந்தியாவில் விடுதலைப்Nபுhராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டு, ஐரோப்பா வந்ததும் ஐபிசியில் இருந்து எமக்கு எல்லோருக்கும் அரசியல் படிப்பிப்பார். முதலில துரையின் உரை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் ஐபிசி யினர்.

ஒருவரை பற்றி தெரியாவிட்டால் புகழும் போது கூட சொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது வசம்பு அண்ணா அவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

இதையே நான் கூறமுற்பட்டேன் ஆனால் ஏற்கனவே ஒரு பாடல் பெரிய பிரச்சினையை

கிளப்பிவிட்டதால் நான் எனது கருத்தை முன் வைக்கவிரும்பவில்லை

அதனால் நான் விலகிநிற்க விரும்புகிறேன் இருந்தாலும் சிலரது பொழுது போக்கு

இந்த சினிமா தானே

சினிமா எங்கே.................................................................

.

................................................................................

.....................................தமிழீழ விடுதலை போராட்டம் எங்கே

தனது சொந்த லாபத்திற்காக.......................

தமிழிழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தியுள்ளார் என்றே நான் கூறுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு கூறியது போல் செல்லத்துரை டென்மார்க்கில் மதிக்கப்படுபவர் அல்ல. அவரிடம் ஒரு சிறிய வட்டம் ஒன்று உள்ளது அது அவரின் குடும்பத்தவர்கள். மற்றது குமாரதுரை குடும்பம். குமாரதுரையின் பிள்ளைகளுக்கு தமிழ் படிபித்த ஆசான் அல்லவா துரை.

2005 ம் ஆண்டு வரை குமாரதுரையின் பிள்ளைகளால் நடாத்தப்பட்ட தமிழ் தேசவிரோத இணையத்தளங்களுக்கு தனது இணையத்தில் இணைப்பும் கொடுத்திருந்தார் இந்த செல்லத்துரை.

தமிழ் மக்களின் போராத்திர்கு டென்மார்க்கில் வாழும் அனைத்து இளைஞர்களும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்யும் வேளையில் செல்லத்துரையின் வாரிசுகள் மட்டுமம் ஒதுங்கியிருப்பது ஏன்.

ஐபிசி என்ற வானொலியில் இருக்கும் சிலரின் தனிபட்ட நட்பை பாவித்து துரை இப்ப ஊடகவியளார் ஆகிவிட்டார். அதனால் இதே துரை இந்தியாவில் விடுதலைப்Nபுhராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டு, ஐரோப்பா வந்ததும் ஐபிசியில் இருந்து எமக்கு எல்லோருக்கும் அரசியல் படிப்பிப்பார். முதலில துரையின் உரை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் ஐபிசி யினர்.

ஒருவரை பற்றி தெரியாவிட்டால் புகழும் போது கூட சொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது வசம்பு அண்ணா அவர்களே.

இப்படி யாராவது "உள்ளூர்க் காரர்" வந்து உண்மையைச் சொன்னால் தான் ஒருவரின் பின்புலம் வருகிறது. இந்த மாதிரியான பின்னணியை மாற்ற முடியாது. நடு நிலையாக நிற்கிறோம், மாற்றுக் கருத்து ஜன நாயகத்தைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்று திரிபவர்கள் வசதியாக அணிந்து கொள்ளும் முகமூடியாக "கலைஞன்" முகமூடி ஆகி விட்டது. கலைஞன்/எழுத்தாளன் நேர்மையாகப் பேச/எழுத வேண்டும் என்று யாரோ சொன்னதை துரைக்கு ஆதரவாக எழுதிய ஒருவர் மேற்கோள் காட்டினார். பிறகு, அவர் தவறாகப் பேசியிருந்தாலும் நாம் மன்னித்து விட வேண்டும் என்கிற தொனியிலும் கருத்து வைக்கப் பட்டது. நேர்மையான பேச்சில் ஏன் "முகஸ்துதி" வருகிறது? என்று கேட்டால் பதில் என்னவோ தெரியாது. "என் குடும்பத்தை நீங்கள் ஊட்டி வளர்க்கிறீர்கள்!" என்று சொல்லியிருந்தால் அது அவர் குடும்பத்தை விற்ற மாதிரி இருந்திருக்கும். துரை போன்ற முகஸ்துதியாளர்கள் விற்க தேசியப் போராட்டம் இருக்கும் போது, ஏன் தான் அவர்கள் குடும்பத்தை விற்கப் போகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய இணைய வலச்சுற்றில் இங்கு நடைபெறும் விவாதத்துக்கேற்ற பதிவொன்றைக் கண்டேன் பொருத்தம் கருதி இணைக்கிறேன்.

***

இன்றைய விமர்சகர்களின் பரிதாப நிலை!

அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம், சொல்லலாம். அவர்கள் சொல்வதுதான் வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை சொல்லும்போது கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம். இது அந்த “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்றும் கொள்ளலாம்!

ஆனால் இன்று இதெல்லாம் மலையேறி போய்விட்டது. விமரசர்களை விமர்சிக்க வந்துவிட்டார்கள் பொதுமக்களும், வம்பு பேசுபவர்களும், மற்றும் விமர்சகர்கள் விமர்சித்த சப்ஜெக்ட்டில் உள்ள எக்ஸ்பர்ட்களும்! அதனால், இன்றைய விமர்சகர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. தன்னை “ஞாநி” என்று சொல்லிகொள்பவர்கள் ஞாநியும் அல்ல. “பைத்தியக்காரன்” என்று சொல்லிக்கொள்பவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். உண்மையே வெல்லும் என்பதே இன்றைய பேச்சுச் சுதந்திர உலகம்!

...........

thanks:

http://timeforsomelove.blogspot.com/2008/0...og-post_29.html

கலைச் சேவை செய்பவர்களுக்கும் அது பற்றி கருத்தாடல் செய்பவர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்!

உங்களுக்கு கலை ஆர்வமிருந்தால் உங்களிடம் பணம் இருந்தால் அல்லது கடன் வாங்கி கையை சுட்டுக் கொள்ளும் துணிவிருந்தால் நீங்கள் படம் எடுக்கலாம் அதில் நீங்களே நடித்து ஒடிப்பிடித்து ஆடிப்பாடி மகிழலாம்.அல்லது இளவயதினரை ஒடிப்பிடித்து விளையாட வைத்து பார்த்து மகிழலாம்.நீங்கள் தொலைக்காட்சி வலைக்காட்சி நடத்தலாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல உங்கள் திருவாய் மொழிகளை மறைபொருளாகச் சொல்லி நியாயப்படுத்தலாம்.இணையத்தளம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரைக்கேநெருப்பு வைச்ச கண்ணகிக்கே மண்டையை பிய்கிறமாதிரியிருக்கண்ணே வசம்பண்ணை. நீங்கள் பிழையென்று மற்றவை சொல்லிப்பூற விசியங்களை சரியெண்டு பூவைக்கிறியள். சரியெண்டு சொல்லிற விசியங்களை பிழையெண்டு குளிவைக்கிறியள்.

நீங்கள் எங்கினை நிண்டு முறிஞ்சாலும் துரை சொன்னது பிழைதான். அவருடைய பிழையை கேள்விக்கேட்றது சரிதான்.

பூக்களை நானும் பாத்திட்டு நினைச்சன்தான் முதல் முயற்சியை ஏன் முளையில கிள்ளிறான்களெண்டு புயலை கேட்டப்பிறவுதான கி.செ.து வின்ரை முகஸ்துதி விளங்கிச்சு. ஜஸ்ரின் சொன்னது மாதிரி துரை முகஸ்துதிதான் செய்திரக்கிறார். அதுக்காக தமிழீழப்போராட்டத்தை இழுத்து தனக்கு பூமாலை வாங்க முயற்சித்து மூஞ்சியைப்பொத்தி வேண்டிக்கட்டியிருக்கிறார்.

இண்டைக்கு ஒருக்கா மூக்குக்கண்ணாடியையும் போட்டு துரையின்ரை பேச்சை கேட்டுப்பாத்தன் சவம்ாண்ணை சொன்னமாதிரி ஏதும் சரியாயிருக்கோண்டு. அந்த முகத்துச் சிரிப்பிüலையிருந்து சொன்னவார்த்தைகள் முழுக்களும் துதியும் விசமும் தான்.

அதுசரி வசம்பண்ணை இயக்குனர் அமீர் அந்த கீரோ வசந்தைப் பற்றி கனக்க சொன்னவரெல்லோ அதையெல்லாம் ஏனண்ணை கி.செ.துவின்ரை வெப்பில இருட்டிச்சு போட்டிருக்கனம் ?

இன்றைய இணைய வலச்சுற்றில் இங்கு நடைபெறும் விவாதத்துக்கேற்ற பதிவொன்றைக் கண்டேன் பொருத்தம் கருதி இணைக்கிறேன்.

***

இன்றைய விமர்சகர்களின் பரிதாப நிலை!

அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம், சொல்லலாம். அவர்கள் சொல்வதுதான் வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை சொல்லும்போது கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம். இது அந்த “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்றும் கொள்ளலாம்!

ஆனால் இன்று இதெல்லாம் மலையேறி போய்விட்டது. விமரசர்களை விமர்சிக்க வந்துவிட்டார்கள் பொதுமக்களும், வம்பு பேசுபவர்களும், மற்றும் விமர்சகர்கள் விமர்சித்த சப்ஜெக்ட்டில் உள்ள எக்ஸ்பர்ட்களும்! அதனால், இன்றைய விமர்சகர்களின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதாகிவிட்டது. தன்னை “ஞாநி” என்று சொல்லிகொள்பவர்கள் ஞாநியும் அல்ல. “பைத்தியக்காரன்” என்று சொல்லிக்கொள்பவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். உண்மையே வெல்லும் என்பதே இன்றைய பேச்சுச் சுதந்திர உலகம்!

...........

thanks:

http://timeforsomelove.blogspot.com/2008/0...og-post_29.html

சுழியண்ணை நீங்கள் என்னத்த சொல்லவாறியள் ? ஏற்கனவே நீங்கள் ஏதோ சொர்ணலிங்கம் மகாகவியணெ்டு எழுதியிரக்கிறியள். ஒண்டுமா விளங்குதில்ல.

உதைத்தான் சுழிச்சுச் சொல்லிறதா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களின் வலியை பதிவு செய்வேன் - இயக்குனர் அமீர் ஆவேசம்

ilamnet.jpg

இளம்புயல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் பங்காற்றிய கலைஞர்களில் அநேகம் பேர் இலங்கை தமிழர்கள் என்பதால்இ அரங்கம் முழுவதும் தூய தமிழின் மணம்! படத்தின் இயக்குனர் கே.எஸ்.துரையின் வரவேற்புரையே பலரை கிறங்கடித்தது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிடஇ ஆடியோவை அமீர் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு. முன்பாக பேசிய அமீர்இ ‘வாழ்த்துகள்’ என்று ஒரே வார்த்தையில் தனது உரையை முடித்துவிடஇ விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் அதிர்ச்சி.

பின்பு அவரை வற்புறுத்தி பேச வைத்தார் கே.எஸ்.துரை. ‘நான் பேசவே கூடாது போலிருக்கிறது. கடந்த வாரம் ஒரு விழாவில் நான் சில கருத்துக்களை சொல்லப்போகஇ மறுநாளே எல்லா பத்திரிகைகளிலும்இ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்று கொட்டை எழுத்தில் போட்டுவிட்டார்கள். அதனால்தான் இந்த விழாவில் பேச வேண்டாம் என்று நினைத்தேன்’ என்றார்.

‘தமிழை நிஜமாகவே வாழ வைப்பவர்கள் ஈழத் தமிழர்கள்தான். உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் ஒரு படத்தில் பதிவு செய்யாமல் விடமாட்டேன்’ என்றார் அமீர். இதை சொல்லும்போது சற்றே உணர்ச்சிவசப்பட்ட அவரை மேலும் உணர்ச்சிவசப்பட வைத்தது திரண்டிருந்த கூட்டத்தின் கைத்தட்டல்! ‘இப்படியெல்லாம் எதையாவது பேசிவிடுவேன் என்பதால்தான் நான் பேசமாட்டேன்னு சொன்னேன்’ என்றார் அமீர்.

திரையிடப்பட்ட சில பாடல்களில் ஒரு பாடல் மட்டும் தனி ஈழம் குறித்த கதாநாயகனின் கனவை சொன்னது. அந்த வரிகளும்இ படமாக்கப்பட்ட விதமும் சிலிர்ப்பு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D:lol:

Edited by paadai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குநர் அமீரின் பேச்சு பற்றி இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.

நன்றிகள்.

நான் தற்போது தற்ஸ்தமிழ் வெளியிட்ட அமீரின் பேச்சை இணைத்துள்ளளேன் படியுங்கள்.

அமீரின் பேச்சை அலைகளில் வெளியிட்ட கி.செ.துரையின் நேர்மை புரியும்.

ஈழத் தமிழர் பற்றி படம் - அமீர்

திரையுலகை விட்டுப் போவதற்குள் ஈழ மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பைத் தருவேன் என்கிறார் இயக்குநர் அமீர்.

அலைகள் மூவீஸ் சார்பில் டென்மார்க் வாழ் ஈழத் தமிழர் கே.எஸ்.துரை தயாரித்து இயக்க, அவரது மகன் வசந்த் செல்லத்துரை நாயகனாக நடிக்கும் இளம்புயல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிலிம்சேம்பர் திரையரங்கில் நடந்தது.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் சிடியை வெளியிட, அதை அமீர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய தொல் திருமாவளவன், பத்திரிகைகள் ஆதாரமின்றி கிசுகிசுக்களை எழுதி நடிகர் நடிகைகளின் பெயரைக் கெடுப்பதாகக் குறைபட்டார். தான் சினிமாவே கதி என்று கிடக்கவில்லை என்றும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துக்களைச் சொல்லும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார்.

முன்னதாக, விழாவில் அமீர் பேசியதாவது:

சில தினங்களுக்கு முன் ஏஆர் ரஹ்மான் பற்றி எதார்த்தமாக நான் சொன்ன சில கருத்துக்களை, ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்கிற பாணியில் எழுதிவிட்டார்கள். என்னுடைய ஒரு கருத்தைச் சொல்கிறேன். அவரிடம் நான் கேட்க நினைத்த கேள்வியை மேடையில் வைத்தேன். அது கண்டனமல்ல.

அதனால்தான், எந்த விழாவுக்கும் இனி போகவே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் இந்த விழாவுக்கு வந்ததன் காரணம், இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை எடுத்திருக்கும் ஈழத் தமிழர்கள்.

நான் பெர்லினுக்கு பருத்தி வீரன் திரையிடலுக்காகச் சென்றிருந்தேன். அப்போது 50-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தினமும் வந்து படம் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் என்னை தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

நான் தட்டிக் கழிக்கப் பார்த்தேன். ஆனால் அவர்கள் விடாமல் நின்று கூட்டிப் போனார்கள். என்னைப் பார்த்ததும் அந்த குடும்பத்துப் பெண்கள் அழுதனர். எனக்கு சங்கடமாகி விட்டது. இதற்காகவா என்னைக் கூட்டி வந்தீர்கள்? என்றேன்.

இல்லை தம்பி, உங்க பருத்தி வீரன் பார்த்தோம். எங்களுக்கு ஊர் நினைவு வந்துவிட்டது. அதனால்தான் உங்களைப் பார்க்க விரும்பினோம் என்று நெகிழ வைத்தனர்.

இந்த தருணத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நான் இந்தத் திரையுலகை விட்டுப் போவதற்குள் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை, அவர்களுக்கான விடிவு குறித்து விளக்கும் ஒரு அழுத்தமான படைப்பைத் தந்துவிட்டுத்தான் போவேன்.

இந்த நேரத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கும் துரைக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.

முன்பு நடிகர்கள் கையிலிருந்த சினிமாவை கஷ்டப்பட்டு இயக்குநர்கள் மீட்டார்கள். பின்னர் அதைத் தயாரிப்பாளர்கள் ஆர்பி சௌத்ரி போன்றவர்கள் தங்கள் வசமாக்கினார்கள். புதுப்புது இயக்குநர்களை உருவாக்கினார்கள். சௌத்ரி ஒருவர் மட்டுமே 37 இயக்குநர்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்.

ஆனால் தமிழ் சினிமா மீண்டும் நடிகர்கள் கைக்குப் போய்விட்டது. வழக்கமான மசாலா சினிமாவாக மாறிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து சினிமாவை மீட்டெடுக்கும் போராட்டத்தில்தான் என்னைப் போன்ற சிலர் இறங்கியிருக்கிறோம். இந்த நேரத்தில் நீங்களும் அதே பாணி மசாலா கதைகளோடு, படைப்புகளோடு வருகிறீர்களே என்பதுதான் என் ஆதங்கமெல்லாம்.

இது முதல்படம் என்பதால் மன்னிப்போம். ஆனால் அடுத்தடுத்த படைப்புகளில் உங்கள் தனித் திறமையைக் காட்டுங்கள். எதற்காக இந்தத் துறைக்கு வந்தீர்களோ அந்த நோக்கம் சிதையாத மாதிரி படங்களை எடுங்கள், என்றார்.

Edited by தி.ஆபிரகாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதிராஜா நம் மக்களுக்காக படம் செய்யவில்லை பாலு மகேந்திரா செய்யவில்லை என்ற ஒரு புறு புறுப்பு நம்மில் சிலருக்கு உண்டு. இதனை நினைவுபடுத்திக் கொண்டே சொல்ல விழைகிறேன்.

டென்மார்க்கில் இருந்து ஈழத்தமிழர் சிலரின் தயாரிப்பில் உருவான இளம்புயல் என்ற படத்தின் இசை வெளியீடு சென்னையில் அண்மையில் நடந்தது. அதன் ஒளித்துண்டுகளை பார்க்கக் கிடைத்தது. அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தயாரித்த பூக்கள் என்ற சினிமாவினை இடையில் கண்டபடி திட்டிக் கொண்டே எழுந்து செல்லும் வரை பார்த்தேன். (கணணியில்தான்)

ஹீரோயிசம் பாய்ந்தோடும் இளைஞர்கள் அவர்களுக்கு பயந்தோடும் வில்லன்ஸ் அப்புறம் காதலிக்கவும் பாடல்களுக்கும் ஒரு பெண் கொஞ்சம் துப்பாக்கிகள் என நீளும் கதை அது. அந்தப் பெண் வெள்ளைக் காரப் பெண். வெளிநாடுகளில் கமெராவும் கணணியும் கிடைத்தால் தயாராகும் நம்மவரின் மூன்றாம்தரப் படங்களில் கதாநாயகிகள் பெரும்பாலும் வேற்று இன அழகிகளாகத் தான் இருக்கிறார்கள். இதனை நான் தொடர்ச்சியாகக் கவனித்திருக்கிறேன். இதைப் பற்றி கனடாவில் படமெடுத்துத் திரியும் நண்பரிடம் கேட்டிருந்தேன். அவர் நடித்திருந்த ஒரு படத்தில் (அவரது முதலாவது படத்திற்கு நிகழ்ந்த சோகம் சுவாரசியமானது. படத்தின் பாடல்கள் வெளியிட்ட பிறகு பெரும்பாலும் படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின்னர் இயக்குனருடனான வீட்டுச் சண்டையில் இயக்குனரின் மனைவி படத்தின் மூலப் பிரதிகளை தீ மூட்டிக் கொழுத்தி விட்டாராம். அத்தோடு படம் ப்ளாப்) கதாநாயகி கானா நாட்டைச் சேர்ந்தவராயிருந்தார். ஏனெனில் நெருக்கமான காட்சிகளில் நமது இலங்கைத் தமிழ் பெண்களை ஈடுபடுத்துவது நமது கலாசாரத்திற்கு ஒவ்வாதாம். இந்தக் கணத்தில் என் வாயில் வருவதை எழுதினால் அது தமிழ்மணத்தில் **** என்றவாறு இருக்கும்.

மேற்சொன்ன பூக்கள் திரைப்படக் குழு தயாரிக்கும் படம் இளம்புயல். இயக்குனர் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளர் கதாநாயகனாகவும் நடிக்கும்? குடும்பப் படம். (குடும்பப் படம் என்றால் குடும்ப உறுப்பினர்களே தயாரிக்கும் படம்) இசை வெளியீட்டு விழாவில் அமீர் ஆர் பி செளத்ரி உட்பட சில திரை பிரமுகர்கள் வந்திருந்தார்கள். தயாரிப்பாளர் தனது உரையில் இலங்கையில் தமிழர்களின் போராட்டத்திற்கு சிங்கள இராணுவம் காரணமில்லை. தமிழ் நாட்டு திரைப்படங்கள் தான் காரணம் எனச் சொல்லி விட்டு ஒரு லுக் விட்டார். பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறாரோ என்னவோ?

பிறகு வீரபாண்டிய கட்டப்பொம்மனையும் மனோகராவையும் இன்ன பிறவையும் பார்த்துத்தான் நாங்கள் போராட்ட குணம் கொண்டோம் என்றார். நல்ல வேளை இந்த வரிசையில் போக்கிரி குருவி வீராசாமி படங்களைச் சேர்க்காமல் விட்டார். தமிழ் சினிமாவில் நுழைந்து விட்டார். இனி இப்படியெல்லாம் பேசித்தானே தீர்க்க வேண்டும். அவர் தேவை அவருக்கு. அதை விட்டு விடுவோம்.

அந்நிகழ்வில் அமீரின் பேச்சுத்தான் கவனத்திற்குரியது. அமீர் சொல்கிறார். நாயகிகளுக்குப் பின்னால் ஓடித்திரியும் நாயகர்களைக் கொண்ட தமிழ் சினிமாவை கொஞ்சங் கொஞ்சமாக மாற்ற என்னைப் போன்றவர்கள் முயற்சிக்கிறோம். ஆனால் நீங்கள் திரும்பவும் நாயகியைத் துரத்துவது மரத்தைச் சுற்றிப் பாடுவது மாதிரியான ஜிகினா காலத்திற்கு செல்வது கவலை தருகிறது.

அந்த நிகழ்வில் வைத்து அமீர் ஈழத்து மக்களில் வலியை சினிமாவில் பதிவு செய்வேன் என்றார். அவ்வாறு செய்யவில்லையானாலும் அவரை எந்த ஈழத்துக் கொம்பனும் கேள்வி கேட்க முடியாது. தயாரிக்கும் வசதியும் இயக்கும் வசதியும் இசையமைக்கும் வசதியும் நடிக்கும் வசதியும் பெற்ற எங்களாலேயே வலியைப் பதிவு செய்ய வக்கில்லை. இந்த லட்சணத்தில் அமீரும் பாரதிராஜாவும் பாலுமகேந்திராவும் வந்து பதிவு செய்ய வேண்டுமா?

http://blog.sajeek.com/?p=357

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிகழ்வில் வைத்து அமீர் ஈழத்து மக்களில் வலியை சினிமாவில் பதிவு செய்வேன் என்றார். அவ்வாறு செய்யவில்லையானாலும் அவரை எந்த ஈழத்துக் கொம்பனும் கேள்வி கேட்க முடியாது. தயாரிக்கும் வசதியும் இயக்கும் வசதியும் இசையமைக்கும் வசதியும் நடிக்கும் வசதியும் பெற்ற எங்களாலேயே வலியைப் பதிவு செய்ய வக்கில்லை. இந்த லட்சணத்தில் அமீரும் பாரதிராஜாவும் பாலுமகேந்திராவும் வந்து பதிவு செய்ய வேண்டுமா?

http://blog.sajeek.com/?p=357

இந்தியச் சினிமாவுக்கு நிகராக படமெடுக்கும் தரத்தில் எங்கடை நிலமை இருக்க உங்கடை வலியும் நீங்களும்.

எங்கள் துயரத்தை ஈழத்தவரின் வரலாற்றுப் பதிவொன்றை ஆவணப்படமாக்கிய சோமிதரனின் எரியும் நினைவுகளை கி.செல்லத்துரை அவர்களின் சினிமாவென்று சினிமா மொழி பேசியிருக்கிறார் என்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சோமிதரன் போன்ற திறமையாளர்களின் கைகளில் வசதியில்லை ஆனால் காலத்தின் தேவையை பதியும் ஆர்வமும் திறமையும் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- இன்றைய விமர்சகர்களின் பரிதாப நிலை!

அன்று, வலைபூக்களும் கருத்துக்களங்களும் இல்லாத காலத்தில் விமர்சகர்கள் எல்லாம் என்ன வேண்டுமானால் பேசலாம், சொல்லலாம். அவர்கள் சொல்வதுதான் வேதவாக்குபோல் இருந்தது –உண்மைக்கு புறம்பானதை சொல்லும்போது கூட. அவர்கள் கருத்தில் உள்ள தவறுகளை படித்துவிட்டு ஒரு சிலர் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சொல்லி புலம்புவதுதான் வழக்கம். அவர்கள் தவறை அந்த பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பினால் அதை கண்டுகொள்வதும் இல்லை, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவது அந்த பத்திரிக்கை நிர்வாகத்தின் வழக்கம். இது அந்த “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்றும் கொள்ளலாம்!

..........................

இக்கருத்து இங்கு விவாதிக்கப்படும் ஆசிரியர் கிசெது தொடர்பாகவே பொருத்திப் நான் பார்க்கிறேன்.

அவரது ஆசிரியர் பணி தொடர்பாகவே எனக்கு அறிமுகம் கிட்டியிருந்தது. பின் அவரது பல்வேறு ஈடுபாடுகளுடன் தொடர்ந்தது. இந்தவகையில் புக்கள் திரைப்படம் திரையிடப்பட்டபோது குடும்ப அழைப்பிதழ் (திருமண அழைப்பிதழ் போன்றது) கிடைக்கப்பெற்று ஈழத்தமிழ் திரை வளர்ச்சிக்கு ஆர்வம் உள்ள பலருடம் திரையைப்ப்பார்த்த பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன். திரையரங்கின் உள்ளே இருட்டில் பரிதாபகரமாக அங்கும் இங்கும் பார்த்த முகங்களுடன் எனதுமுகமும் பதிவானது. திரையரங்கில் பேசிய வார்த்தைககள் கேட்டு சங்கடப்பட்டவர்கள் பலர். ஆனாலும் இறுக்கமான மெளனத்துடன் அனைவரும் பயணித்தோம். ஏனெனில் இது ஆசிரியர் கிசெது அவர்களின் முதல் முயற்சி.

ஆனால் இப்போது அமீர் அவர்களின் கருத்தானது கிசெது அவர்களின் இரண்டாவது முயற்சி தொடர்பானது. அமீரின் குட்டு ஈழத்தமிழ் திரையின்பால் அக்கறையுடைய பலரது தலையின்மீதும் விழுந்துள்ளது.

அன்று இதை விமர்சிக்காததன் தவறை பெரிய அளவில் இன்று பெற்றிருக்கிறோம்.

பெருமூச்சுதான் மிஞ்சுகிறது.

கிசெது அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு குறுக்காக நாம் எதுவுமே கூறப்போவதில்லை. ஆனால் ஈழத்தமிழர்களின் திரைப் மற்றும் படைப்புகள் தொடர்பாக கருத்துக்கூறும் கடமை அனவருக்கும் உண்டு. இது ஆரோக்கியமானது.

:lol:

சுழியன் அண்ணா உங்களுக்கு கி.செ.துரையை நன்றாக தெரிந்திருக்கிறது. இங்கு விமர்சிக்கப்படுவதுபோல அவர் குமாரதுரை குழுவுடன் தொடர்புள்ளவரா?

இங்கு விமர்சிப்பவர்களுக்காக படமெடுத்தால் படமெடுப்பவர் ஓட்டாண்டியாகவேண்டியதுதான். ஒரு படத்தை வியாபாரரீதியாக எடுத்தால் மட்டும் படத்தயாரிப்பாளர் அடுத்த முயற்சியில் வெற்றிபெற முடியும். படம் வெற்றியடைவதற்கு இலங்கைத்தமிழரும்(புலம்பெயர்) அவசியம். அதற்காகதான் ஒவ்வொருவரும் விடுதலையை ஊறுகாய் போன்று தொட்டுக்கொள்கின்றார்கள். மற்றபடி அவர்கள் வியாபாரிகள் அதற்குமேல் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது.

முழுக்க முழுக்க எம்மவர் பிரச்சனையை வைத்து படமெடுத்து விமர்சன ரீதியில் வேண்டுமானால் அவர்கள் பாராட்டை பெறமுடியும் . ஆனால் பெற்றுக்கொள்ளும் நட்டத்தை ஈடுசெய்ய யார் துணை போவார்கள் இந்த விமர்சகர்கள் அதற்கும் தயாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.