Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்

back-pain.jpg

முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம்.

இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம்.

எப்படி ஆனதோ?

நாரிப்பிடிப்பு ஏன் வருகிறது?

இவ்வாறு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்பிடிப்புக் காரணமான ஏற்படலாம். சவ்வுகளில் சுளுக்குக் வந்ததன் காரணமாக இது ஏற்படலாம். அல்லது எலும்பு மூட்டுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் தோன்றலாம். முள்ளந் தண்டின் இடைத்தட்டம் விலகுவதாலும் ஏற்படலாம்.

913yy7.jpg

இதில் கடைசியாகக் கூறிய இடைத்தட்டம் விலகுவது என்பது சற்று பாரதூரமான பிரச்சனையாகும். விளக்கப் படத்தைப் பாருங்கள் முள்ளந்தண்டு எலும்புகளினிடையே (Vertebra) இருப்பது இடைத்தட்டம் (Disc) ஆகும். சிமென்டு கற்களை முள்ளந்தண்டு எலும்புகளாக கற்பனை பண்ணினால் அவற்றை இணைக்கும் சாந்து போன்றது இடைத்தட்டம். இந்த இடைத்தட்டம் ஊடாக முண்நாணிலிருந்து நரம்பு (Nerve) வெளிவருகிறது தெரிகிறது அல்லவா?

lumbaradranatomy02dl0.jpg

நீங்கள் வழமைக்கு மாறாக குனிந்து வேலை செய்யும்போது அல்லது உங்களுக்குப் பழக்கமற்ற பார வேலை செய்யும்போது எலும்புகளிடையே இருக்கும் இடைத்தட்டம் சற்றுப் பிதுங்கி வெளியே வரக் கூடும். அப்பொழுது அது அருகிலிருக்கும் நரம்பை அழுத்தலாம். பொதுவாக முதுகை வளைத்துத் தூக்கும் போதே இது நிகழ்வதுண்டு. இது திடீரென நிகழும். அந்நேரத்தில் சடுதியான கடுமையான வலி ஏற்படும். எந்தக் கணத்தில் இது நிகழ்ந்தது என்பதை பாதிக்கப்பட்ட நபர் துல்லியமாகக் கூறக்.கூடியதாக இருக்கும்.

ஆனால் இது எப்பொழுதுமே இவ்வாறுதான் நிகழும் என்பதில்லை.

பெரும்பாலனவர்களுக்கு என்ன செய்யும் போது அல்லது எந் நேரத்தில் இது நிகழ்ந்தது என்பது தெரிவதில்லை. படிப்படியாகவும் நாரிப்பிடிப்பு வரலாம். ஆயினும் வலியின் கடுமை எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. பரசிட்டமோல் போட்டு சமாளிக்கக் கூடியளவு லேசாக இருக்கலாம். அல்லது வலியின் உபாதை தாங்க முடியாத அளவிற்கு கடுமையாக இருக்கலாம். உங்களது நாளாந்தக் கடமைகளைச் செய்ய முடியாது படுக்கையில் சில நாட்களுக்குக் கிடத்தவும் கூடும்.

இருந்த போதும் சில இலகுவான நடைமுறைப் பயிற்சிகள் செய்தால் அதிலிருந்து நீங்கள் சுலபமாக விடுபட முடியூம்.

நிற்பதுவூம் நடப்பதுவும் …

இவ்வாறான பிடிப்பு ஏற்படும்போது நீங்கள் எவ்வாறு நிற்கிறீர்கள், படுக்கிறீர்கள், உட்காருகிறீர்கள் என்பன யாவும் முக்கியமானவைதான். படுக்கும்போது உங்கள் பாரத்தை முள்ளந்தண்டில் சுமக்க விடாது பாதுகாப்பது அவசியமாகும்.

இதனை எவ்வாறு செய்வது?

படுக்கும்போது, நேராக நிமிர்ந்து படுங்கள். இப்பொழுது உங்கள் முழங்கால்களுக்கு கீழே, விளக்கப் படத்தில் காட்டியவாறு, ஒரு தலையணையை வையுங்கள். இவ்வாறு முழங்கால்களைச் சற்று மடித்துப் படுப்பது சுகத்தைக் கொடுக்கும்.

தலையணை கிடைக்காவிட்டால் முழங்கால்களைக் குத்தென நிமித்தியபடி மடித்துப் படுங்களேன். (மேலதிகமான உடல் பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.)

exercises-back-pain.gif

overcoming_back_pain_2.jpg

அதுவும் முடியாவிட்டால் தரையில் படுத்தபடி உங்கள் கால்மாட்டில் ஒரு நாற்காலியை வையுங்கள். இப்பொழுது உங்கள் தொடைகள் நிமிர்ந்திருக்க கீழ்கால்களை உயர்த்தி நாற்காலயில் வையுங்கள். இடுப்பும் முழங்கால்களும் இப்பொழுது மடிந்திருப்பதால் முள்ளெலும்பின் பழுக் குறைந்து வலி தணியும். ஓரிரு நாட்களுக்கு இவ்வாறு ஆறுதல் எடுக்க குணமாகும்.

ஆனால் நாரிப்பிடிப்பு எனக் கூறி நீண்ட நாட்களுக்கு படுக்கையிலிருந்து ஆறுதல் எடுப்பது அறவே கூடாது. ஏனெனில் நீண்ட ஆறுதல் எடுத்தல் உங்கள் தசைகளைப் பலவீனப்படுத்திவிடும். அதனால் குணமடைவதும் தாமதமாகும். வலியிருந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு சற்று உலாவுவது நல்லது. மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது எழுந்து அவ்வாறு நடப்பது அவசியம்.

சுடுதண்ணி ஒத்தடம் கொடுப்பது அல்லது சிவப்பு லைட் (Infra Red Light) பிடிப்பதும் வலியைத் தணிக்க உதவும். மாறாக ஐஸ் பை வைப்பதுவும் உதவாலாம். வலி கடுமையாக இருந்தால் அஸ்பிரின், பரசிட்டமோல் அல்லது இபூபுறுவன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை எடுக்க நேரிடலாம்.

நாரிப்பிடிப்புக்கு டொக்டரிடம் செல்ல வேண்டுமா?

நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன போன்ற விடயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் நாரிப் பிடிப்புகள் அனைத்துமே இவ்வாறு உங்கள் சுயமுயற்சியால் குணமாக்கக் கூடியவை அல்ல!

வலி தாங்க முடியாததாக இருக்கலாம்.

அல்லது உங்கள் நாரிப்பிடிப்பிற்கு வேறு பாரதூரமான அடிப்படைக் காரணங்கள் இருக்கலாம். அவ்வாறான தருணங்களில் ஹலோ டொக்டர் என அழைத்து உங்கள் வைத்தியரை நாட வேண்டியதுதான். வேறு வழியில்லை.

அவ்வாறு வைத்திய ஆலோசனை பெற வேண்டிய தருணங்கள் எவை?

உங்கள் நாரிப்பிடிப்பின் வலியானது பிடித்த இடத்தில் மட்டும், மட்டுப்பட்டு நிற்காமல் கால்களுக்கு, அதிலும் முக்கியமாக முழங்கால்களுக்கு கீழும் பரவுமானால் நரம்புகள் முள்ளெலும்புகளிடையே அழுத்தபடுவது காரணமாகலாம். அவ்வாறெனில் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

 உங்கள் கால், பாதம், பிறப்புறுப்புப் பகுதி அல்லது மலவாயிலை அண்டிய பகுதிகளில் உணர்வு குறைந்து மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படுமாயின் அது நரம்புகள் பாதிப்புற்றதால் இருக்கலாம். நீங்கள் நிச்சயம் வைத்தியரை அணுகவேண்டும்.

 அதேபோல உங்களை அறியாது, அதாவது உங்கள் கட்டுப்பாடின்றி மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது மிக பாரதூரமான அறிகுறியாகும். அதாவது மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பது நரம்புகள் பாதிக்கக்பட்டதின் அறிகுறியாகும். கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றே தீரவேண்டும்.

 காய்ச்சல், ஓங்காளம், வாந்தி, வயிற்று வலி, உடற் பலயீனம், கடுமையான வியர்வை போன்ற அறிகுறிகள் நாரிப்பிடிப்புடன் சேர்ந்து வருமாயின் அது தொற்று நோய், சிறுநீரகக் குத்து, சதைய நோய் போன்ற எதாவது ஒன்றின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதால் வைத்திய ஆலோசனை அவசியம் தேவை.

 வீட்டிற்குள்ளேயே நடமாடித் திரிய முடியாதபடி வலி மிகக் கடுமையாக இருந்தாலும் நீங்கள் வைத்தியரைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

 பெரும்பாலான முதுகு, நாரி வலிகள் மேற் கூறிய நடைமுறைச் சிகிச்சைகளுடன் ஓரிரு வாரங்களுக்குள் குணமாகிவிடும். அவ்வாறு குணமடையாவிட்டாலும் வைத்தியரைக் காண்பது அவசியம்.

மாத்திரைகள், வெளிப் பூச்சு மருந்துகள், பயிற்சிகள் முதல் சத்திர சிகிச்சை வரை பல விதமான சிகிச்சைகள் உண்டு. உங்கள் நோயின் நிலைக்கு ஏற்ற சிகிச்சையை வைத்தியர் தீர்மானிப்பார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை வாற பழசுகளுக்கு பிரயோசனமான தகவல்கள் :lol: .நன்றி நுணாவில் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த நாரிபிடிப்பு வருவது குறைவு ஆனால் எப்பொழுதும் முதுகு உளைவு இருக்கும் அதுக்கு என்ன செய்யலாம் யாராவது சொல்லுங்கப்பா? :lol:

இந்த தகவலை இருந்து வாசிக்க..க எனக்கு நாரிகுள்ள பிடித்து போச்சுதுப்பா... :lol: (அப்ப எழுதினவரின்ட பாடு கவலைகிடம் தான் எண்டு நினைக்கிறன்)..நான் சும்மா பகிடிக்கு தகவலிற்கு நன்றி..நுணா அண்ணா..ணா.. :lol:

உடற் பயிற்சி செய்ய நாம உடற்பயிற்சி நிலையங்களுக்கு தான் போவோம்..ம்..அப்ப தான் அங்க..பவற்றை பார்க்க ஏலும் பாருங்கோ.. :o

அதை பார்க்க போய் எல்லாமே பிடித்து கொள்ளுது எண்டா பாருங்கோவன்..நீங்க எல்லாம் எப்படி..சும்மா சொல்ல கூடா எல்லா பொண்ணுகளும் என்னாம உடற்பயிற்சி செய்வாங்க..உடற் பயிற்சி நிலையத்தை சொன்னனான்..!! :rolleyes:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா உடற்பயிற்சி செய்யிறது முக்கியமல்ல மற்றவனின்ட உடலை காயபடுத்தாம இருக்கிறது தான் முக்கியம்" :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து பேரில் , ஒருவருக்கு நாரி வருத்தம் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

நாரிப்பிடிப்பு இப்போ பொதுவாக ஏற்படுகின்ற ஒன்றாகிவிட்டது. குறிப்பாக சுப்பர் மார்க்கட்களில் வேலை செய்யும் போது பாரமான பொருட்களை சரியான வகையில் தூக்கிக் கொள்ளச் சொல்லிக் கொடுத்தும் செய்பவர்கள் குறைவு. இதனால் பல பிரச்சனைகள் வயதாக ஆக தோன்றும்.

நான் அறிந்திருக்கிறேன்.. 25 வயதேயான ஒரு சுப்பர் மார்க்கட் மனேசருக்கு தொடர் முதுகு வலியும் நாரிப்பிடிப்பும். பின்னர் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டது.

லண்டனைப் பொறுத்தவரை குறைந்த கல்வி அறிவோடு புலம்பெயர்ந்து வரும் அநேக தமிழர்களின் வீட்டுக்கு ஒளியேற்றுவதே இந்த சுப்பர் மார்க்கட்டுக்கள் தான். அநேகர் அங்கு தான் தொழில் பார்க்கின்றனர். அவர்களிடம் நல்லா வேலையும் வாங்குகிறார்கள். எம்மவர்களும் மாடா உழைப்பார்கள். காசு காசு என்று. அப்பதானே கார் ஓடலாம். வீடு வாங்கலாம் என்று.

ஆனால்.. அவர்களின் உடலை அவர்கள் சிறுகச் சிறுக சிதைத்துக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை. இதன் பாதிப்புக்கள் இப்போ இளம் வயதிலேயே வர ஆரம்பித்துவிட்டன. பல ஆண்கள் பிள்ளை பெற்ற பெண்களைப் போல.. நாரி நோவு.. முதுகு நோவு.. தோற்பட்டை நோவு.. கழுத்து நோவு என்று வருவதற்கு இதுதான் முக்கிய காரணம்.

வயிற்றில் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கும் இப்படியான நாரி நோவு.. முதுகு நோவு வருவது சாதாரணம். அவர்களின் உடல் நிறைக்கான ஈர்ப்பு மையப் பெயர்வு இதற்கான காரணியாக இருக்கிறது. அதை அவர்கள் காலத்துக்கு காலம் உடற்பயிற்சிகளைச் செய்வதால் போக்கிக் கொள்ளலாம்.

ஆனால் ஆண்கள்.. வேலைக்குப் போவதோடு சரி. வீட்டுக்கு வந்து மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு தூங்கி விடுவார்கள். இதனால்.. உபாதைகள் அதிகரிக்குமே அன்றி குறையாது. இது அவர்கள் சம்பாதிக்கும் பணம்.. சொத்துக்களைக் கூட அவர்கள் சரிவர அனுபவிக்க முடியாத நிலையையே தோற்றிவிக்கும்..! சிந்தியுங்கள்..!

வேலையிடத்தில் நல்ல பெயர் வாங்க என்று சிலர் மேலதிகமாக முறிஞ்சு முறிஞ்சு செய்வார்கள். ஆனால் அது அவர்களுக்குத்தான் ஆபத்தானது. அவர்களிடம் அதிக வேலையை அவர்களின் மேற்பார்வையாளர்கள் எப்போதும் எதிர்பார்க்கச் செய்துவிடும். அப்புறம் இவர்களுக்குத்தான் கெட்ட பெயர் தோன்றும். எனவே முட்டாள் தனமாக முறியாமல்.. தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு.. வழங்கப்படும் நேரத்துக்கு வழங்கப்படும் வேலையை மட்டும் செய்வதோடு.. உடற்பயிற்சியும் செய்து கொள்வது அவசியம். உணவுக்கட்டுப்பாடும் முக்கியம். இதைக் கவனித்தால்.. ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். இன்றேல்.. தொல்லைதான்..! :rolleyes:

எனக்கு இந்த நாரிபிடிப்பு வருவது குறைவு ஆனால் எப்பொழுதும் முதுகு உளைவு இருக்கும் அதுக்கு என்ன செய்யலாம் யாராவது சொல்லுங்கப்பா? :D

முதலில் கணனிக்கு முன்னால் இருக்கும் கதிரையில் இருக்கும் நேரத்தை குறையுங்கோ தாத்தா முதுகு நோ தானாக போய்விடும் :rolleyes::unsure:

முதலில் கணனிக்கு முன்னால் இருக்கும் கதிரையில் இருக்கும் நேரத்தை குறையுங்கோ தாத்தா முதுகு நோ தானாக போய்விடும் :rolleyes::rolleyes:

கணனியில் தான் வேலை என்றால் எதுவும் செய்ய முடியாது என........... :(

நல்லதொரு தகவல் நன்றிகள் இணைப்புக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் கணனிக்கு முன்னால் இருக்கும் கதிரையில் இருக்கும் நேரத்தை குறையுங்கோ தாத்தா முதுகு நோ தானாக போய்விடும் :):lol:

ஐயோ அது மட்டும் முடியாது அதில்தான் வேலையே அதனால தான் பிரச்சனை என்றும் தெரியும் ஆனால் என்ன செய்வது :( . நன்றி செவ்வந்தி உங்கள் ஆலோசனைக்கு.

கணனியில் தான் வேலை என்றால் எதுவும் செய்ய முடியாது என........... :(

நல்லதொரு தகவல் நன்றிகள் இணைப்புக்கு

வெண்ணிலா சரியாக சொன்னிங்க :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ அது மட்டும் முடியாது அதில்தான் வேலையே அதனால தான் பிரச்சனை என்றும் தெரியும் ஆனால் என்ன செய்வது :) . நன்றி செவ்வந்தி உங்கள் ஆலோசனைக்கு.

இருக்கையில் சரியான முறையில் இருந்தால் இந்த பிரச்சனை வராது. முதுகை முற்றிலும் இருக்கையின் back support இல் தொடும் படியாக இருக்கவும். சிலர் இருக்கையின் நுனியில் இருந்தபடி மேல் முதுகை இருக்கையின் மேல் படும் படியாக வளைந்து இருப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த பிரச்சனையே. 20-30 நிமிடங்களுக்கொருக்கா சற்று அசைந்து கண்ணையும் திசை திருப்பினால் கண்ணுக்கும் முதுகு/நாரிக்கும் நல்லதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கையில் சரியான முறையில் இருந்தால் இந்த பிரச்சனை வராது. முதுகை முற்றிலும் இருக்கையின் back support இல் தொடும் படியாக இருக்கவும். சிலர் இருக்கையின் நுனியில் இருந்தபடி மேல் முதுகை இருக்கையின் மேல் படும் படியாக வளைந்து இருப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த பிரச்சனையே. 20-30 நிமிடங்களுக்கொருக்கா சற்று அசைந்து கண்ணையும் திசை திருப்பினால் கண்ணுக்கும் முதுகு/நாரிக்கும் நல்லதே.

நன்றி சபேஷ் :rolleyes: .நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கிலிருந்து கூர்ப்பு அடைந்து வந்தவன் மனிதன் .

இயற்கைக்கு மாறாக அவன் இரு கால்களால் நடக்க தொடங்கும் போது , அவனது இடுப்புக்கு மேல் உள்ள பகுதியின் எடையை முள்ளந்தண்டு தான் தாங்க வேண்டிய நிலைமை .

ஆதலால் ......... மனிதன் குரங்குகளைப்போல் கைகளையும் கால்களாக பாவித்து நடந்தால் நாரிப்பிடிப்பு வராது என்பது என் அபிப்பிராயம் .

ஏனென்றால் , குரங்குகளுக்கு நாரிப்பிடிப்பு வந்ததாக நான் கேள்விப்படவில்லை . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கிலிருந்து கூர்ப்பு அடைந்து வந்தவன் மனிதன் .

இயற்கைக்கு மாறாக அவன் இரு கால்களால் நடக்க தொடங்கும் போது , அவனது இடுப்புக்கு மேல் உள்ள பகுதியின் எடையை முள்ளந்தண்டு தான் தாங்க வேண்டிய நிலைமை .

ஆதலால் ......... மனிதன் குரங்குகளைப்போல் கைகளையும் கால்களாக பாவித்து நடந்தால் நாரிப்பிடிப்பு வராது என்பது என் அபிப்பிராயம் .

ஏனென்றால் , குரங்குகளுக்கு நாரிப்பிடிப்பு வந்ததாக நான் கேள்விப்படவில்லை . :rolleyes:

இது கண்டுபிடிப்பு இதுக்கு உங்களுக்கு ஆதி வாசி தக்க பரிசு வழங்குவார் :unsure::lol:

குரங்கிலிருந்து கூர்ப்பு அடைந்து வந்தவன் மனிதன் .

இயற்கைக்கு மாறாக அவன் இரு கால்களால் நடக்க தொடங்கும் போது , அவனது இடுப்புக்கு மேல் உள்ள பகுதியின் எடையை முள்ளந்தண்டு தான் தாங்க வேண்டிய நிலைமை .

ஆதலால் ......... மனிதன் குரங்குகளைப்போல் கைகளையும் கால்களாக பாவித்து நடந்தால் நாரிப்பிடிப்பு வராது என்பது என் அபிப்பிராயம் .

ஏனென்றால் , குரங்குகளுக்கு நாரிப்பிடிப்பு வந்ததாக நான் கேள்விப்படவில்லை . :(

அட அட அட என்னமா யோசித்திருக்கிறீங்க தமிழ்சிறி மாமா.

அதுசரி மாமா உங்களுக்கு நாரிப்பிடிப்பு வந்ததில்லையோ? ஏன்னா ................................ :wub::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.