Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்

அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். .வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் . என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது .

ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளநீர் தாகம் தீர்க்க குளித்து விட்டு மத்திய சாப்பாடை முடித்தார்கள். ராகவன் அப்பாவுக்கென கொண்டு வந்த இளநீல சேர்ட் , அம்மாவுக்கு சாரி , ஒரு பை நியைய சொக்கிலேட்ஸ் என்று அன்பளிப்புகளை கொடுத்தான் .சொக்கனுக்கென்று மறக்காமல் வாங்கிய நீல சாரத்தை(லுங்கி ) அவன் பிள்ளைகள் ,வரும்போது கொடுக்கும் படி தாயிடம் கொடுத்தான் . ராகவனும் அப்பாவின் சாய்மனையில் இருந்தவாறே பதினாலு வருட கதைகளை சொல்லியவாறே அயர்ந்து விட்டான்

. ரம்யா பிள்ளைகளுடன் பின் வளவில் ஆட்குட்டி ,பிடித்து ,விளையாட்டு காட்டி கொண்டு இருந்தாள் .ராமசாமியார் பின்னும் முன்னும் வந்து ஒன்றே ஒன்று தரமாடீரா என்று நச்சரித்து கொண்டு இருந்தார் . சும்மாபோங்கப்பா . பிள்ளைகள் படுத்த பின் தாரேன் என்று போக்கு காட்டினாள் . இரவும் வந்தது ,சுடச்சுட அவித்த குழல் பிட்டும் பலாப் பழாமும் பேரப்பிள்ளைகள் சாப்பிடார்கள் . இரவு ஒன்பது மணியாகியது . ராமசாமியார் குசினிக்குள் வந்து நான் கேட்டது தர மாடீரா என்றதும் . சாபிட்டு முடியுங்கோ படுக்க முதல் தாரன் என்றாள். அவர் சாபிட்டதும் பேரபிள்ளைகள் தூங்கி விட்டார்கள் . ராகவனும் ரம்யாவும் வேப்பமரத்தின் கீழ் நிலவில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ராமசாமியாரின் ஏக்க பார்வை தீரவே இல்லை. ஒருவாறு பத்து மணியளவில் ஜானகியம்மாள் வந்து அவரிடம் இரண்டு சொக்கலேருக்ளை நீடினாள் . சக்கரை வருத்த காரன் வைச்சு வைச்சு சாபிடுங்கோ என்றாள். அது கிடைத்த சந்தோஷத்தில் அவர் ஜானகியை கட்டி முத்தம் கொடுக்க சீ....... போங்கோ என்று அவள் சினுக்க .....திடுக்கிட்டு எழுந்தாள் .. முன்னுக்கு ராமசாமி படத்தில் சிரித்து கொண்டிருந்தார் . அவளுக்கு எண்ணமெலாம் தாயகம் நோக்கி சென்றது அவர் இறந்தது , தான் மகனிடம் வந்தது , எல்லோரும் வேலைக்கும் பள்ளிகளுக்கும் போக நான்கு சுவர் நடுவே இருப்ப்து என்று ..........கழிவறை சென்று முகம் கழுவி காலை வழிபாடு செய்தபின் , இன்று வார விடுமுறையில் ராகவனிடம் அப்பாவின் கல்லறைக்கு போய் தரிசிக்க வேண்டும் .என கேட்கவேண்டும் என நினைத்தவாறு .... காலண்டரை பார்த்தாள் . கார்த்திகை ,இரண்டாம் நாள் , வந்து நினைவு படுத்தி போயிருக்கிறார் . இளமையில் கிறிஸ்தவ கலூரியில் படித்ததால் அன்டன் ராம சாமி என் பெயார் மாற்றம் செய்து தனது உடலை சேமக்காலையில் ல் அடக்கம் செய்யவேண்டும் என்று இறுதி ஆசையாக கேட்டு இருந்தார் என்பது நான் எழுதாத விடயம் .

கார்த்திகையும் பிறக்க போகிறது நம் மாவீரருக்கு என்ன செய்ய போகிறோம் . ??????.

ம்ம்..நெலா(மதி) அக்கா..கா..!!.. :D

ஒன்றை ஒன்று தாங்கோவன்..ன் எண்டு..டு கதை சொல்ல வெளிகிட்டு..டு..வயோதிப காலத்தில் புலத்தில நாலு சுவருக்குள் அவர்கள் படும் வேதனை வரை..ரை கதை சொல்லி சென்றுள்ளது..து வாழ்த்துகள்..ள்.. :D ஆனால் புலத்தில் வயோதிபர்கள் நாலு சுவரிற்குள்ள..ள் இருந்து கஷ்டபடீனம் என்பதனை என்னால..ல..

முற்று முழுதாக ஏற்று கொள்ள ஏலாது..து :) ஏன் எண்டா..டா..அவையளுக்கு உங்க எல்லா வகையான பொழுது போக்கும் கெடைக்கிறது எண்டு தான் சொல்லாம்..ம்..(குறிப்பாக அவுஸ்ரெலியாவை எடுத்து கொண்டால்)..ஆனா ஊரில பல காலம் இருந்து விட்டு இன்னொரு சூழலிற்கு முகம் கொடுக்கிறது அவைக்கு கஷ்டமாக இருக்கலாமே தவிர..ர..நாலு சுவரிற்குள்ள அவையளிண்ட வாழ்க்கை போது எண்டு எல்லாம்..ம் எடுக்க ஏலாது.. :lol:

மற்றது..து..!!

எனக்கும் ஒண்டும் தாங்கோவன்..ன்..நெலா(மதி)..அக்கா (பயப்பிடாதையுங்கோ)..எனக்கும் ஒரு சொக்கா வேண்டும் எண்டு கேட்டனான்..ன் :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

புல் நுனியில் பனித்துளி போல் வயோதிபக் காதலையும் ஒரு '' டச் ''ஆக கதையில் வைத்தது மிகவும் அழகு.

என் அம்மா, அப்பாவின் வயோதிபக் காதலை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை காரணம் அம்மாவை இளவயதிலே விதவையாக விட்டு விட்டு அப்பா மண்டையைப் போட்டுட்டார், பார்த்து வளர்ந்ததெல்லாம் அம்மாவின் கஸ்ரங்களை, கண்ணீரையும். அதனாலே அவவை இங்கே அழைத்து மேலும் கஸ்ரப்படுத்த விரும்பாமல் சுதந்திரப் பறவையாகவே விட்டுட்டன்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரி! கதை நிஜத்தின் பிரதிபலிப்பாய்! மிக நன்று!!!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் தாங்கோ குறுங்கதைகளை.......நிஜக்கதை நன்று.....

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகையும் பிறக்க போகிறது நம் மாவீரருக்கு என்ன செய்ய போகிறோம் . ??????.

இப்ப புலம் பெயர்ந்த நாடுகளில் முன்பு ஆதரவாளர்களாக இருந்தவர்களில் சிலர் இராணுவப் போராட்டத்தை சிங்களம் அழித்ததினால் போராளிகளின் தியாகங்களைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படியானவர்கள் மாவீரர் தினத்துக்கு செல்வார்களா?. விடுதலைப்புலிகள் வெற்றியடைந்தாலும் , தோற்றாலும் அவர்களின் தியாகங்களுக்கு தொடர்ந்து மதிப்பளிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..நெலா(மதி) அக்கா..கா..!!.. :wub:

ஒன்றை ஒன்று தாங்கோவன்..ன் எண்டு..டு கதை சொல்ல வெளிகிட்டு..டு..வயோதிப காலத்தில் புலத்தில நாலு சுவருக்குள் அவர்கள் படும் வேதனை வரை..ரை கதை சொல்லி சென்றுள்ளது..து வாழ்த்துகள்..ள்.. :D ஆனால் புலத்தில் வயோதிபர்கள் நாலு சுவரிற்குள்ள..ள் இருந்து கஷ்டபடீனம் என்பதனை என்னால..ல..

முற்று முழுதாக ஏற்று கொள்ள ஏலாது..து :) ஏன் எண்டா..டா..அவையளுக்கு உங்க எல்லா வகையான பொழுது போக்கும் கெடைக்கிறது எண்டு தான் சொல்லாம்..ம்..(குறிப்பாக அவுஸ்ரெலியாவை எடுத்து கொண்டால்)..ஆனா ஊரில பல காலம் இருந்து விட்டு இன்னொரு சூழலிற்கு முகம் கொடுக்கிறது அவைக்கு கஷ்டமாக இருக்கலாமே தவிர..ர..நாலு சுவரிற்குள்ள அவையளிண்ட வாழ்க்கை போது எண்டு எல்லாம்..ம் எடுக்க ஏலாது.. :D

மற்றது..து..!!

எனக்கும் ஒண்டும் தாங்கோவன்..ன்..நெலா(மதி)..அக்கா (பயப்பிடாதையுங்கோ)..எனக்கும் ஒரு சொக்கா வேண்டும் எண்டு கேட்டனான்..ன் :lol:

அப்ப நான் வரட்டா!!

பிள்ளைக்குச் சொக்கா பைக்கட் பைக்கட்டா அன்ரியவையும் மாமாவையும் வாங்கி வைச்சிருக்கிறோம். வந்திட்டியள் தானே பாசலில அனுப்பி வைக்கிறோம் யமுனாதம்பி :D

பிள்ளை களத்தில இல்லாமல் களம் கலர்புல் இல்லாதமாதிரி போச்சுது. திரும்ப வந்ததுக்கு நன்றிகள். தனிமடல் ஈமெயில் எதுக்கும் பதில் இல்லாமல் இருந்திட்டீங்கள் யமுனா.

பிள்ளைக்குச் சொக்கா பைக்கட் பைக்கட்டா அன்ரியவையும் மாமாவையும் வாங்கி வைச்சிருக்கிறோம். வந்திட்டியள் தானே பாசலில அனுப்பி வைக்கிறோம் யமுனாதம்பி :D

பிள்ளை களத்தில இல்லாமல் களம் கலர்புல் இல்லாதமாதிரி போச்சுது. திரும்ப வந்ததுக்கு நன்றிகள். தனிமடல் ஈமெயில் எதுக்கும் பதில் இல்லாமல் இருந்திட்டீங்கள் யமுனா.

அவருக்கு இப்பத்தான் முதலாம் வகுப்புக்கு போற சோதனை முடிஞ்சுது

பாவம் யம்மு குட்டி படிச்சு நல்லா களைச்சுப்போட்டுது :wub:

இனி அடிக்கடி வருவார்.

பிற்குறிப்பு: சோதனையிலும் பெயில் விட்டிட்டார்

திரும்பவும் பாலர்வகுப்புத்தான் பாவம் :)

  • கருத்துக்கள உறவுகள்

மேலைத் தேய நாட்டில் வாழும் அனேகமான வயோதிபர்களின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் முற்றிலும் வித்தியாசனமானவை.அதில் இந்த ஒன்றே ஒன்று.....தாங்கோவன்.பலதும் பத்துமாக இருக்கிறது...அதை நாங்கள் முற்றுமுழுதாக பிளை எண்டு சொல்லக் கூடாது.நம் இனத்தவர்களை மட்டும் நாங்கள் அடுப்படிக்குள்ளும்...குழந்தை

Edited by yagini

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.