Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாச்சிமார்கோயிலடி இராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார்கோயிலடி இராஜன்

nachimarrajanjw4.jpg

நாச்சிமார்கோயிலடி இராஜன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து வில்லிசைக் கலைஞர் ஆவார். புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது.

கலையுலக வாழ்வு

இவர் வில்லிசைகளில் வல்லவர். வில்லிசை நிகழ்ச்சிகளை 1968 இல் ஆரம்பித்து இற்றை வரை நடாத்தி வருகிறார். 1972 இலிருந்து "நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவை" நடாத்தி வருகின்கிறார். 1993இல் ஜெர்மனியின் றெயினை ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தின் வாணி விழாவில் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமனால் "ஈழவில்லிசைச் செம்மல்" என்ற பட்டத்தைப் பெற்றார். 1996இல் கனடாவில் நிகழ்ந்த உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் அதன் தலைவர் வீரப்பனால் "வில்லிசைக் காவலர் " என்ற பட்டத்தைப் பெற்றார். ரீ.ரீ.என் தொலைக்காட்சியில் இவரது பல வில்லிசைகள் ஒளிபரப்பாகின.

நாடகத் துறை

நாடகத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. ஜெர்மனியில் 1993, 1994, 1995, 1998 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் நான்கு முறைகளும் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளார். பிறேமன் தமிழ் கலை மன்றத்திற்காக பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். மூன்று தடவைகள் சிறந்த இயக்குனருக்கான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தங்கப்பதக்கம்

1994 இல் இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றம் நடாத்திய நாடகப் போட்டியில் "எதிர்பார்ப்புகள்" நாடகம் இவரது இயக்கத்தில் முதற் பரிசு பெற்றது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டு இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றத்தால் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

1995 இல் இராட்டிங்கனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் "நீர்க்கோலம்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவானது. நீர்க்கோலம் சிறந்த நாடக பிரதியாக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், அந்த நாடகத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், சான்றிதழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கப்பட்டது.

1998 இல் எசன் நகரில் ஈழமுரசு பத்திரிகை நடாத்திய நாடகப் போட்டியில் "சுமைகள்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு ஈழமுரசு பத்திரிகையால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது

திரைப்படத்துறை

புகலிட திரைப்படத்துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. நினைவுமுகம் திரைப்படத்திற்கு திரைக்கதை, உரையாடல் எழுதி இணை இயக்கம், தயாரிப்பு ஆகியற்றில் தடம் பதித்துள்ளார். தொடர்ந்து ஏ.ரகுநாதனின் தயாரிப்பில் பாரிசிலிருந்து தயாரிக்கப்பட்ட தயவுடன் வழிவிடுங்கள் படத்திலும் நடித்துள்ளார். யாரிவர்கள், பொறி, இப்படியுமா? ஆகிய குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார். தற்போது இலண்டனில் தயாராகி வரும் ஈழவர் திரைக் கலை மன்றத்தின் நீர்க்கோலம் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பாரிசிலிருந்து தயாரிக்கப்படும் ஈழத்தவரின் முதல் திரைத் தொடர் நேசங்களுக்காக திரைக்கதை, உரையாடலில் பங்கெடுத்து வருகின்றார்.

வெளிவந்த நூல்கள்

எதிர்பார்ப்புகள் (நாடக நூல்)

http://kalaignarkal.com

  • கருத்துக்கள உறவுகள்

அட இவர் தான் மரதனோட்ட வீரர் சோழியனா?

எங்கட சோழியன் அண்ணாவா??

:unsure:ஆமா அவரே தான் இவர். இவரே தான் அவர். :unsure:
  • கருத்துக்கள உறவுகள்

:unsure:ஆமா அவரே தான் இவர். இவரே தான் அவர். :unsure:

தவறு.

இவர் வில்லிசைக் கலைஞர்.. நாச்சிமார் கோவிலடி ராஜன். (யாழ் களத்தில் முன்னர் எழுதி வந்தவர். மணிதாசன் அங்கிள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.. இவரைப் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..!)

ராஜன் முருகவேல் என்பவரே சோழியான். அவர் வேறு இவர் வேறு. ஒருவேளை இருவரும் நண்பர்களோ தெரியவில்லை. :unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராஜன் முருகவேல் - பல்துறை கலைஞர் - எழுத்தாளர்

தாயகப்பறவைகளின் மாதமொரு கலைஞர்கள் பகுதிக்கு கலைஞர்களை தேடிய போது எமக்குள் இருக்கும் ஒரு கவிஞர் கலைஞரின் நினைவு வரவே அவரைப் பற்றிய தேடல்களும் தேவையாயிற்று. கலைஞர் என்ற எண்ணப்பாடோ, பெருமிதமோ, இன்றி எமக்குள் ஒருவராய் யதார்த்ததை வெளிக்கொணரும் இவரின் பண்பு சிறப்பானது. தாயகத்திலிருந்து எம்மைப்போலவே புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருமிவர், எளிமையும், செழுமைக்கும் பேர் போன யாழ்பாணத்தின் சுழிபுரத்தில் தந்தை முருகவேலுக்கும் தயார் சரோஜியினிதேவிக்கும் மூத்த மகனாக ஐப்பசித் திங்கள் 4ஆம் நாள் 1960 ஆண்டு ராஜன் மகனாகப் பிறந்தார்.

1965ஆம் ஆண்டு சின்ன வயதிலையே சீரிய மாணவனாய் 5ஆம் ஆண்டு படிக்கும் போது விளையாட்டாய், சினிமாப் பாடல் ஒன்றில் வந்த சாலமன் கதையைத் தனது கதை என்று எழுதிய ராஜன் அதை அன்றைய காலத்தில் யாழ் நகரில் வெளி வந்த “சிரித்திரன்” இதழுக்கு அனுப்பியிருக்கிறார். அதன் விளைவு இன்று எழுத்தாளான் உருவாக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. இன்றைய சுயநலப் பத்திரியாளர்கள் போலல்லாது. அன்று “சிரித்திரனின்” ஆசிரியராக இருந்த சுந்தர் அவர்கள் இவரது சொந்த ஆக்கத்தை எழுதி அனுப்புமாறும், அதற்கான அலோசனைகளையும், ஊக்கத்தையும் அழிக்கும் வகையில், ஒரு தபாலட்டையை அனுப்பியுள்ளார். அதிலிருந்து பிறந்த உத்வேகம்தான் இன்றைய படைபாளியின் உருவாக்கம். அந்த உந்து சக்தியை வாழ்த்தி தொடர்கின்றேன்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர் அந்தக் கல்லூரியின் ஆண்டு மன்ற மலரை பொறுப்பேற்று உருவாக்குகினார். தனது பள்ளி அப்பியாசப் புத்தகத்தில் தான் கிறுக்கிய கதைகளே தனக்கு அந்த பொறுப்பை பெற்றுத் ததந்தாகவும், அதற்ககு தனது இரசயனப்பாட ஆசிரியர், திரு கந்தசாமி அவர்கள் வழக்கிய ஊக்கப்படுத்தலை நெகிழ்வுடன் இன்றும் நினைவு கூர்கின்றார். 1980ஆம் ஆண்டு “வசந்தம்” சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த இவர் மிக இளவயதில் எழுத்தாளராக திகழ்ந்தவர். சமுதாய நோக்கம் கொண்ட இவரது கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கற்பனைகளுக்கு அப்பால், நிஜத்தை தொட்டு செல்கின்றன. குறிப்பாக புகலிட வாழ்வைப்பற்றி அவரது படைப்புக்கள் உண்மையை எடுத்தியம்புகின்றன.

இது வரையில் இரு புத்தக தொகுப்புக்களை வெளியிட்ட இவர் இன்றைய இணைய தொழிநுட்பத்தால் கவரப்பட்டு, வெளியீடுகளைத் தவிர்த்து இணைத்தில் எழுத ஆரம்பித்துள்ளார். இவரது இணைய எழுத்தில், யாழ் இணையத்துக்காக, 2003 ம் ஆண்டு காலப்பகுதியில், எழுதிய “ஐஸ்கிறீம் சிலையே நீதானா?” என்ற கதை இளைஞர்களின் நெஞ்சை விட்டகலா ஒரு தொடர் நாவலாகும், அது மட்டுமல்ல தற்போது தாயகப்பறவகள் மாத இதழுக்காக கைக்கெட்டாத மாத்துக்கள் என்னும் தொடர் நாவலை எழுதி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இணையத்தில், புகலிட மக்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், அவர் தம் கட்டுரைகள், ஆக்கங்கள், பாடல்கள், ஒளிப்படங்களை, கொண்டு சீரிய முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டு, வெளிவரும் தமிழமுதம் இணையத்தின் ஆசிரியர் இவராவார்.

கதைகள் எழுதுவதை விட பல கவிதைகளையும் நகைச்சுவை கலந்த, கட்டுரைகளையும் எமக்கு தந்திருக்கின்றார். தான் சொல்ல வரும் விடையங்களை சுவாரசியமாகவும், சலிப்பின்றியும், தொடர்ந்து படிக்க தக்க வகையில், எழுதுவது அனைவராலும் விருப்பப்படுகின்றது. அதை விட தாயகத்துக்கும், புகலிடத்துக்கும் இடையே இருக்கும், இடைவெளியை நன்றாக புரிந்து கொண்ட கவிஞனாய் இருக்கின்றார்.

ஒரு உதாரணமாக அண்மையில் ஒரு கவிதை எழுதியிருந்தார், தொலைக்காட்சி நாடகப்பிரியர்கள் புகலிடத்தில் பெருகியிருப்பதை கோடிட்டு காட்டும் வகையில்,

.. ... செய்தியும் அறியேன் முயற்சியும் நாடேன்

மெய்யாய் உன்னில் விழுந்தேனே

கைதியும் ஆனேன் நீ சிறையும் ஆனாய்

மெய்யும் உருக அமிழ்ந்தேனே!...............................

இப்படி ஏதோ காதல் கவியை எழுதுவது போல, தன்னையே அதற்கு உவமையாக எடுத்து எழுதி இறுதியில்,

,,,,,,,,,,நேற்றும் இன்றும் என்றும் என்னில்

காந்தக் கதிராய் படர்ந்தனையே

மாற்று வழியை மறித்துப் படரும்

'ரீவி சீரியலே' முடிந்துவிடு,,,,,,,,.

இப்படி தொலைக்காட்சி நாடங்களே முடிந்து விடு என பொருள்பட எழுதிருக்கின்றார். இப்படியாகவே இவரது படைப்புக்கள் இருக்கின்றன. யதார்த்தம் இவர் கவி வரி, உண்மை இவர் கதை, நிஜமே இவர் கட்டுரை, இதுவே இராஜன் முருகவேல் அவர்களின் சிறப்பு. ஜேர்மனியில் தற்போது வசித்து வரும் இவர், தனது எழுத்து பணியை தொடர்வதோடு, சமூகப்பணிக்காய், பிறேமன் தமிழ் கலை மன்றத்தின் செயலாளராக இருந்த இவர் அந்த காலப்பகுதியில் 30 மணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழக்கினார். இது தவிர, பட்டிமன்றங்களில் வாதிடுவதிலும், வில்லிசைகளில் பங்கு பற்றுவதிலும், விருப்பு கொண்ட இவர், வானொலிகளிலும், கவிதைகளை படிப்பதுண்டு. தவிர, சில கவிதைகள், பாடல்களாகவும், வானலை ஏறியுள்ளது.

இன்றும் இணையத்தில் எம் போன்றவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும், தந்து கொண்டிருக்கும் இவர் போன்ற கலைஞர்/கவிஞர்களின் உருவாக்கமும், தேவையும் எமது சமூகத்துக்கு தேவையானது என்றால் மிகையாகாது.

ஆக்கம் - நிரோஜன்

_________________

வாழ்க்கை அநுதாபங்களிலோ கவர்ச்சியிலோ அமைந்துவிடக் கூடாது மனங்களின் புரிதலில் அமைய வேண்டும்.

நட்புடன்

இரசிகை

http://thayakaparavaikal.com/forum/viewtopic.php?t=236

தவறு.

இவர் வில்லிசைக் கலைஞர்.. நாச்சிமார் கோவிலடி ராஜன். (யாழ் களத்தில் முன்னர் எழுதி வந்தவர். மணிவாசன் அங்கிள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.. இவரைப் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..!)

ராஜன் முருகவேல் என்பவரே சோழியான். அவர் வேறு இவர் வேறு. ஒருவேளை இருவரும் நண்பர்களோ தெரியவில்லை. :unsure:

ஆம் தவறு தான் மன்னிக்கவும். நெடுக்கு சொல்வது தான் சரியானது. ராஜன் முருகவேல் தான் சோழியான்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

எனது புரிதலில் இவர் சோழியனாக இருக்க முடியாது...சோழியான் ..முல்லைத்தீ்வு பகுதியை சேர்ந்தவர் ... வடமராட்சிபகுதியில் தங்கியிருந்து ஹாட்லி க்ல்லூரியில் படித்ததாக அவரே எங்கையோ யாழ் களத்தில் கூறீயதாக ஞாபகம்

சோழியான் முல்லைத்தீவைச் சேர்ந்தவரா.. இல்லையே. அவர் வலிகாமத்தை (சுழிபுரம்) எல்லோ பிறப்பிடமாகக் கொண்டவர் என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சோழியான் படித்தது ஹாட்லியில் அல்ல.. றோயல் கல்லூரி கொழும்பில்.. என்று அவரே சொல்லி இருக்கிறார் களத்தில்..! :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார்கோயிலடி இராஜன் அறிந்து கொள்ள முடிந்ததில் சந்தோசம்

http://kalaignarkal.com/

வேலை செய்ய வில்லையே நுனாவிளான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனப்பா நீங்களும் குழம்பி மற்ற எல்லாரையும் குழப்புறியள் சோழியண்ணை வேறை இராஜன் அண்ணை வேறை

ஆனால் இரண்டுபேரும் ???????????????? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார்கோயிலடி இராஜன் அறிந்து கொள்ள முடிந்ததில் சந்தோசம்

http://kalaignarkal.com/

வேலை செய்ய வில்லையே நுனாவிளான்

http://kalaignarkal.blogspot.com/

இராஜன் முருகவேல் - பல்துறை கலைஞர் - எழுத்தாளர்

இன்றும் இணையத்தில் எம் போன்றவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும், தந்து கொண்டிருக்கும் இவர் போன்ற கலைஞர்/கவிஞர்களின் உருவாக்கமும், தேவையும் எமது சமூகத்துக்கு தேவையானது என்றால் மிகையாகாது.

ஆக்கம் - நிரோஜன்

ஆகா, நமது சோழியன் அண்ணாவா. கேட்பதற்கு மகிழ்வாக உள்ளது. :unsure:

தகவலுக்கு நன்றி நுணாவிலான், ரசிகை

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார் கோவிலடி இராஜன் பற்றி தலைப்பை இட்டுவிட்டு.. ராஜன் முருகவேல் (சோழியன்) பற்றியே அதிகம் தகவல்களை இணைத்து வருகிறீர்கள். இது நாச்சிமார் கோவிலடி இராஜனை ராஜன் முருகவேலாக தவறாக இனங்காணவே அதிகம் உதவும். எனவே தயவுசெய்து தெளிவாக இங்குள்ள வேறுபாட்டை இனங்காட்டி.. அவர்கள் இருவரின் தனித்துவங்களையும் தனித்துவமாக இனங்காட்டி கெளரவிப்பதும்.. அறிமுகம் செய்து வைப்பதுமே சிறப்பானது. :(

  • கருத்துக்கள உறவுகள்

மணிதாசனும், சோழியன் அண்ணாவும் சேர்ந்து பட்டிமன்றம் செய்த காணொளி ஒன்றை சோழியண்ணா முன்பு தந்த ஞாபகம். தமிழ்ப் புதுவருடத்திற்காக இருக்க வேண்டும்..

இது தான் நாச்சிமார் கோவில் ராஜன்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%...%AE%A9%E0%AF%8D

சோழியன் அண்ணா சுழிபுரத்தைச் சேர்ந்தவர். முன்பு வசந்தனும், சோழியனும் மாதகல், சுழிபுர வேலிச்சண்டை பிடித்த ஞாபகம் :(

ஆகா.. சில நாட்கள் யாழ் பக்கம் வராமல்விட்டால்.. அதற்குள் ஏதேதோ நடந்திட்டுது.. நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் தாயகத்திலும் புகலிடத்திலும் நன்கு அறியப்பட்ட கலைஞர். அவர் மற்றும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் ஆகியோர் பிறேமன் என்னும் நகரில் வசிப்பதனால், இந்த நகரத்திற்கு எனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டவன் நான்.

நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்களுடன் சில வில்லிசை நிகழ்ச்சிகளில் 'ஆமாம்' சாமியாக பங்குபற்றியுள்ளேன். என்ன பாக்கிறியள்.. நோர்வே, சுவிசெல்லாம் போயிருக்கிறனாக்கும்.. :icon_mrgreen: மற்றும் அவருடைய நாடகங்கள் சிலவற்றிலும் பங்குபற்றியுள்ளேன்.

தற்போது தங்களது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். :)

தூயவன்.. மாதகலான் சுழிபுரத்தான் சண்டை நடந்தது மெசன்சரில.. யாழ் உறவுகளை குழப்பாதீங்க.. :lol:

எங்கள் இரண்டு பேருடனும் 'குருவிகள்' மெசன்சரில் உரையாடுவார்.. அந்தத் துணிவில நெடுக்ஸ் 2 பேரும் ஒன்றல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு தகவல் வழங்கிய குருவிகளுக்கும் நன்றி!! :D:lol:

சோழியன் மாமா, நீங்கள் தான் உங்கட படத்தை முன்பு யாழில ஒரு இடத்தில போட்டு இருந்தீங்களே தேர்திருவிழா அண்டு எடுத்தது. அந்தப்படமும், இந்தப்படமும் முகங்கள் வித்தியாசமா இருக்கிறத ஒருவரும் கவனிக்க இல்லையோ. இல்லாட்டிக்கு அது உங்கட படம் இல்லையோ. இந்த முகம் வெளிச்சத்தில எடுக்கப்பட்டு இருக்கிது. அது இருட்டில எடுக்கப்பட்டது மாதிரி இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இரண்டு பேருடனும் 'குருவிகள்' மெசன்சரில் உரையாடுவார்.. அந்தத் துணிவில நெடுக்ஸ் 2 பேரும் ஒன்றல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு தகவல் வழங்கிய குருவிகளுக்கும் நன்றி!! :lol::icon_mrgreen:

எனக்கும் குருவிகள் மெசன்சரில் உரையாடும் போதுதான் சொன்னார். இருவரும் ஒருவரில்லை என்று. அத்துடன் நீங்கள் இருவரும் அவரை யாழ் களத்தில் ஆரம்பகாலத்தில் எழுத ஊக்கிவித்து வழிநடத்தியதாகவும் சொன்னார். மெசன்சருக்கு எத்தனையோ வகையான மனிதர்கள் வருகிறார்கள்.. தேவைகள் முடிய இடம்தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள் அல்லது ஐடியை மாற்றிவிடுகிறார்கள்.

மெசன்சரில் கூட நாலு நல்ல மனிதர்களை சந்திக்க முடிகிறது என்பதற்கு.. நீங்கள் எல்லாம் உலகுக்கு சாட்சி. எனக்கும் உங்களோடு எல்லாம் கதைக்க விருப்பம். ஆனால் நான் மெசன்சரில் அதிகம் பேரோடு கதைப்பதில்லை. ஒரு சில தெரிந்த நண்பர்களோடு மட்டுமே கதைப்பேன். குருவிகளையும் எனக்குத் தெரியும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. சில நாட்கள் யாழ் பக்கம் வராமல்விட்டால்.. அதற்குள் ஏதேதோ நடந்திட்டுது.. நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் தாயகத்திலும் புகலிடத்திலும் நன்கு அறியப்பட்ட கலைஞர். அவர் மற்றும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் ஆகியோர் பிறேமன் என்னும் நகரில் வசிப்பதனால், இந்த நகரத்திற்கு எனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டவன் நான்.

நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்களுடன் சில வில்லிசை நிகழ்ச்சிகளில் 'ஆமாம்' சாமியாக பங்குபற்றியுள்ளேன். என்ன பாக்கிறியள்.. நோர்வே, சுவிசெல்லாம் போயிருக்கிறனாக்கும்.. :icon_mrgreen: மற்றும் அவருடைய நாடகங்கள் சிலவற்றிலும் பங்குபற்றியுள்ளேன்.

தற்போது தங்களது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். :)

தூயவன்.. மாதகலான் சுழிபுரத்தான் சண்டை நடந்தது மெசன்சரில.. யாழ் உறவுகளை குழப்பாதீங்க.. :lol:

எங்கள் இரண்டு பேருடனும் 'குருவிகள்' மெசன்சரில் உரையாடுவார்.. அந்தத் துணிவில நெடுக்ஸ் 2 பேரும் ஒன்றல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு தகவல் வழங்கிய குருவிகளுக்கும் நன்றி!! :D:lol:

குருவிகள் பறந்து போனதாய் அறிந்தேனே.............

என்ன இப்படி சொல்லிட்டீங்க.. எவ்வளவு தூரம் பறந்தாலும் இளைப்பாற பூமிக்கு வரத்தானே வேண்டும்... (அதுக்காக எவ்வளவுதூரம் பெண்களைக் கேலி செய்தாலும் பெண்களை நாடி வரத்தானே வேணும்.. என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீங்க.. பிறகு நெடுக்ஸ் கோபிப்பாரு.. :) )

யாழ் இணைய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்!

களத்தின் புதிய உறவுகள் பலருக்கு மணிதாசனைத் தெரியாது.

மணிதாசன் தான் நாச்சிமார்கோயிலடி இராஜன்

பெரும்பாலும் தினசரி ஒருதடவை களத்தைப் பார்ப்பேன்.

இன்று நாச்சிமார் கோயிலடியைக்கண்டதால்

இராஜபை் பற்றியும் அறிந்தேன் - :D

அறிமுகப்படுத்தியவருக்கும், ஆவலுடன் படித்தவர்களுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணைய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்!

களத்தின் புதிய உறவுகள் பலருக்கு மணிதாசனைத் தெரியாது.

மணிதாசன் தான் நாச்சிமார்கோயிலடி இராஜன்

பெரும்பாலும் தினசரி ஒருதடவை களத்தைப் பார்ப்பேன்.

இன்று நாச்சிமார் கோயிலடியைக்கண்டதால்

இராஜபை் பற்றியும் அறிந்தேன் - :D

அறிமுகப்படுத்தியவருக்கும், ஆவலுடன் படித்தவர்களுக்கும் நன்றி

ம்ம்.. உங்களையே இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. சிரமம் பாராது தொடர்ந்து யாழ் களத்தில் எழுத வேண்டுகின்றேன். :(

நன்றி நுணா அண்ணா..ணா இரு கலைஞர்களை..ளை பற்றி அறிய தந்தமைக்கு..கு.. :( மற்றது சோழியன் அங்கிளிண்ட படைப்புகள்..ள்.. குறிப்பிட்ட காலபகுதி ஆட்களின் ரசனைக்கு இல்லாமல்..ல் எல்லாரிண்ட ரசனைக்கு தக்க வகையில் எழுதுவது தான்..ன்.

அவரின் அந்த ஓட்டத்தின் மகிமை எண்டு நினைக்கிறன்..ன்.. :) என்ன சோழியன் அங்கிள் நான் சொல்லுறது சரியோ ஒருக்கா வந்து எனக்கு "ஆமா" போடுறியளோ..ளோ..(கோவித்துபோடாதை

யுங்கோ).. :)

அப்ப நான் வரட்டா!!

மெசன்சருக்கு எத்தனையோ வகையான மனிதர்கள் வருகிறார்கள்.. தேவைகள் முடிய இடம்தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள் அல்லது ஐடியை மாற்றிவிடுகிறார்கள்.

தாத்தா..தா உதை ரொம்ப கவலைபட்டு சொல்லுற மாதிரி கிடக்கு..கு..ஆனாலும் தாத்தா சொன்னதிலும் உண்மை இருக்கா தான் செய்யுது..து.. :D

அப்படியே எண்ட மனதில இருக்கிறதெல்லாத்தையும் அப்படியே சொல்லுறீங்கள்..ள் தாத்தா..தா..ம்ம் இப்ப தான் உலகத்தை நல்லா வெளங்குது..து.. :D

அப்ப நான் வரட்டா!!

நாச்சிமார்கோயிலடி இராஜன் படங்களை நெட்டில் பார்க்க உண்டா? நல்ல நடிகர் போல முகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.