Jump to content

நாச்சிமார்கோயிலடி இராஜன்


Recommended Posts

நாச்சிமார்கோயிலடி இராஜன்

nachimarrajanjw4.jpg

நாச்சிமார்கோயிலடி இராஜன் (யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து வில்லிசைக் கலைஞர் ஆவார். புலம் பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

இவர் இலங்கையின் யாழ்ப்பாணம், நாச்சிமார்கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் தற்சமயம் ஜேர்மனியில் பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார். பாடசாலையில் பயின்ற காலத்திலேயே இவரது கலை ஆர்வம் வெளிப்பட்டது.

கலையுலக வாழ்வு

இவர் வில்லிசைகளில் வல்லவர். வில்லிசை நிகழ்ச்சிகளை 1968 இல் ஆரம்பித்து இற்றை வரை நடாத்தி வருகிறார். 1972 இலிருந்து "நாச்சிமார்கோயிலடி இராஜன் வில்லிசைக் குழுவை" நடாத்தி வருகின்கிறார். 1993இல் ஜெர்மனியின் றெயினை ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தின் வாணி விழாவில் பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமனால் "ஈழவில்லிசைச் செம்மல்" என்ற பட்டத்தைப் பெற்றார். 1996இல் கனடாவில் நிகழ்ந்த உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் அதன் தலைவர் வீரப்பனால் "வில்லிசைக் காவலர் " என்ற பட்டத்தைப் பெற்றார். ரீ.ரீ.என் தொலைக்காட்சியில் இவரது பல வில்லிசைகள் ஒளிபரப்பாகின.

நாடகத் துறை

நாடகத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. ஜெர்மனியில் 1993, 1994, 1995, 1998 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் நான்கு முறைகளும் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளார். பிறேமன் தமிழ் கலை மன்றத்திற்காக பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். மூன்று தடவைகள் சிறந்த இயக்குனருக்கான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

தங்கப்பதக்கம்

1994 இல் இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றம் நடாத்திய நாடகப் போட்டியில் "எதிர்பார்ப்புகள்" நாடகம் இவரது இயக்கத்தில் முதற் பரிசு பெற்றது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவுசெய்யப்பட்டு இராட்டிங்கன் ஆதவ கிருஸ்ணா கலைமன்றத்தால் இவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

1995 இல் இராட்டிங்கனில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் "நீர்க்கோலம்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவானது. நீர்க்கோலம் சிறந்த நாடக பிரதியாக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், அந்த நாடகத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு தங்கப்பதக்கமும், சான்றிதழும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கப்பட்டது.

1998 இல் எசன் நகரில் ஈழமுரசு பத்திரிகை நடாத்திய நாடகப் போட்டியில் "சுமைகள்" நாடகம் முதற் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டது. அதற்காக சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டு ஈழமுரசு பத்திரிகையால் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது

திரைப்படத்துறை

புகலிட திரைப்படத்துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. நினைவுமுகம் திரைப்படத்திற்கு திரைக்கதை, உரையாடல் எழுதி இணை இயக்கம், தயாரிப்பு ஆகியற்றில் தடம் பதித்துள்ளார். தொடர்ந்து ஏ.ரகுநாதனின் தயாரிப்பில் பாரிசிலிருந்து தயாரிக்கப்பட்ட தயவுடன் வழிவிடுங்கள் படத்திலும் நடித்துள்ளார். யாரிவர்கள், பொறி, இப்படியுமா? ஆகிய குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார். தற்போது இலண்டனில் தயாராகி வரும் ஈழவர் திரைக் கலை மன்றத்தின் நீர்க்கோலம் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பாரிசிலிருந்து தயாரிக்கப்படும் ஈழத்தவரின் முதல் திரைத் தொடர் நேசங்களுக்காக திரைக்கதை, உரையாடலில் பங்கெடுத்து வருகின்றார்.

வெளிவந்த நூல்கள்

எதிர்பார்ப்புகள் (நாடக நூல்)

http://kalaignarkal.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இவர் தான் மரதனோட்ட வீரர் சோழியனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:ஆமா அவரே தான் இவர். இவரே தான் அவர். :unsure:

தவறு.

இவர் வில்லிசைக் கலைஞர்.. நாச்சிமார் கோவிலடி ராஜன். (யாழ் களத்தில் முன்னர் எழுதி வந்தவர். மணிதாசன் அங்கிள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.. இவரைப் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..!)

ராஜன் முருகவேல் என்பவரே சோழியான். அவர் வேறு இவர் வேறு. ஒருவேளை இருவரும் நண்பர்களோ தெரியவில்லை. :unsure:

Link to comment
Share on other sites

இராஜன் முருகவேல் - பல்துறை கலைஞர் - எழுத்தாளர்

தாயகப்பறவைகளின் மாதமொரு கலைஞர்கள் பகுதிக்கு கலைஞர்களை தேடிய போது எமக்குள் இருக்கும் ஒரு கவிஞர் கலைஞரின் நினைவு வரவே அவரைப் பற்றிய தேடல்களும் தேவையாயிற்று. கலைஞர் என்ற எண்ணப்பாடோ, பெருமிதமோ, இன்றி எமக்குள் ஒருவராய் யதார்த்ததை வெளிக்கொணரும் இவரின் பண்பு சிறப்பானது. தாயகத்திலிருந்து எம்மைப்போலவே புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருமிவர், எளிமையும், செழுமைக்கும் பேர் போன யாழ்பாணத்தின் சுழிபுரத்தில் தந்தை முருகவேலுக்கும் தயார் சரோஜியினிதேவிக்கும் மூத்த மகனாக ஐப்பசித் திங்கள் 4ஆம் நாள் 1960 ஆண்டு ராஜன் மகனாகப் பிறந்தார்.

1965ஆம் ஆண்டு சின்ன வயதிலையே சீரிய மாணவனாய் 5ஆம் ஆண்டு படிக்கும் போது விளையாட்டாய், சினிமாப் பாடல் ஒன்றில் வந்த சாலமன் கதையைத் தனது கதை என்று எழுதிய ராஜன் அதை அன்றைய காலத்தில் யாழ் நகரில் வெளி வந்த “சிரித்திரன்” இதழுக்கு அனுப்பியிருக்கிறார். அதன் விளைவு இன்று எழுத்தாளான் உருவாக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. இன்றைய சுயநலப் பத்திரியாளர்கள் போலல்லாது. அன்று “சிரித்திரனின்” ஆசிரியராக இருந்த சுந்தர் அவர்கள் இவரது சொந்த ஆக்கத்தை எழுதி அனுப்புமாறும், அதற்கான அலோசனைகளையும், ஊக்கத்தையும் அழிக்கும் வகையில், ஒரு தபாலட்டையை அனுப்பியுள்ளார். அதிலிருந்து பிறந்த உத்வேகம்தான் இன்றைய படைபாளியின் உருவாக்கம். அந்த உந்து சக்தியை வாழ்த்தி தொடர்கின்றேன்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர் அந்தக் கல்லூரியின் ஆண்டு மன்ற மலரை பொறுப்பேற்று உருவாக்குகினார். தனது பள்ளி அப்பியாசப் புத்தகத்தில் தான் கிறுக்கிய கதைகளே தனக்கு அந்த பொறுப்பை பெற்றுத் ததந்தாகவும், அதற்ககு தனது இரசயனப்பாட ஆசிரியர், திரு கந்தசாமி அவர்கள் வழக்கிய ஊக்கப்படுத்தலை நெகிழ்வுடன் இன்றும் நினைவு கூர்கின்றார். 1980ஆம் ஆண்டு “வசந்தம்” சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த இவர் மிக இளவயதில் எழுத்தாளராக திகழ்ந்தவர். சமுதாய நோக்கம் கொண்ட இவரது கதைகள், கவிதைகள், கட்டுரைகள், கற்பனைகளுக்கு அப்பால், நிஜத்தை தொட்டு செல்கின்றன. குறிப்பாக புகலிட வாழ்வைப்பற்றி அவரது படைப்புக்கள் உண்மையை எடுத்தியம்புகின்றன.

இது வரையில் இரு புத்தக தொகுப்புக்களை வெளியிட்ட இவர் இன்றைய இணைய தொழிநுட்பத்தால் கவரப்பட்டு, வெளியீடுகளைத் தவிர்த்து இணைத்தில் எழுத ஆரம்பித்துள்ளார். இவரது இணைய எழுத்தில், யாழ் இணையத்துக்காக, 2003 ம் ஆண்டு காலப்பகுதியில், எழுதிய “ஐஸ்கிறீம் சிலையே நீதானா?” என்ற கதை இளைஞர்களின் நெஞ்சை விட்டகலா ஒரு தொடர் நாவலாகும், அது மட்டுமல்ல தற்போது தாயகப்பறவகள் மாத இதழுக்காக கைக்கெட்டாத மாத்துக்கள் என்னும் தொடர் நாவலை எழுதி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இணையத்தில், புகலிட மக்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், அவர் தம் கட்டுரைகள், ஆக்கங்கள், பாடல்கள், ஒளிப்படங்களை, கொண்டு சீரிய முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டு, வெளிவரும் தமிழமுதம் இணையத்தின் ஆசிரியர் இவராவார்.

கதைகள் எழுதுவதை விட பல கவிதைகளையும் நகைச்சுவை கலந்த, கட்டுரைகளையும் எமக்கு தந்திருக்கின்றார். தான் சொல்ல வரும் விடையங்களை சுவாரசியமாகவும், சலிப்பின்றியும், தொடர்ந்து படிக்க தக்க வகையில், எழுதுவது அனைவராலும் விருப்பப்படுகின்றது. அதை விட தாயகத்துக்கும், புகலிடத்துக்கும் இடையே இருக்கும், இடைவெளியை நன்றாக புரிந்து கொண்ட கவிஞனாய் இருக்கின்றார்.

ஒரு உதாரணமாக அண்மையில் ஒரு கவிதை எழுதியிருந்தார், தொலைக்காட்சி நாடகப்பிரியர்கள் புகலிடத்தில் பெருகியிருப்பதை கோடிட்டு காட்டும் வகையில்,

.. ... செய்தியும் அறியேன் முயற்சியும் நாடேன்

மெய்யாய் உன்னில் விழுந்தேனே

கைதியும் ஆனேன் நீ சிறையும் ஆனாய்

மெய்யும் உருக அமிழ்ந்தேனே!...............................

இப்படி ஏதோ காதல் கவியை எழுதுவது போல, தன்னையே அதற்கு உவமையாக எடுத்து எழுதி இறுதியில்,

,,,,,,,,,,நேற்றும் இன்றும் என்றும் என்னில்

காந்தக் கதிராய் படர்ந்தனையே

மாற்று வழியை மறித்துப் படரும்

'ரீவி சீரியலே' முடிந்துவிடு,,,,,,,,.

இப்படி தொலைக்காட்சி நாடங்களே முடிந்து விடு என பொருள்பட எழுதிருக்கின்றார். இப்படியாகவே இவரது படைப்புக்கள் இருக்கின்றன. யதார்த்தம் இவர் கவி வரி, உண்மை இவர் கதை, நிஜமே இவர் கட்டுரை, இதுவே இராஜன் முருகவேல் அவர்களின் சிறப்பு. ஜேர்மனியில் தற்போது வசித்து வரும் இவர், தனது எழுத்து பணியை தொடர்வதோடு, சமூகப்பணிக்காய், பிறேமன் தமிழ் கலை மன்றத்தின் செயலாளராக இருந்த இவர் அந்த காலப்பகுதியில் 30 மணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழக்கினார். இது தவிர, பட்டிமன்றங்களில் வாதிடுவதிலும், வில்லிசைகளில் பங்கு பற்றுவதிலும், விருப்பு கொண்ட இவர், வானொலிகளிலும், கவிதைகளை படிப்பதுண்டு. தவிர, சில கவிதைகள், பாடல்களாகவும், வானலை ஏறியுள்ளது.

இன்றும் இணையத்தில் எம் போன்றவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும், தந்து கொண்டிருக்கும் இவர் போன்ற கலைஞர்/கவிஞர்களின் உருவாக்கமும், தேவையும் எமது சமூகத்துக்கு தேவையானது என்றால் மிகையாகாது.

ஆக்கம் - நிரோஜன்

_________________

வாழ்க்கை அநுதாபங்களிலோ கவர்ச்சியிலோ அமைந்துவிடக் கூடாது மனங்களின் புரிதலில் அமைய வேண்டும்.

நட்புடன்

இரசிகை

http://thayakaparavaikal.com/forum/viewtopic.php?t=236

Link to comment
Share on other sites

தவறு.

இவர் வில்லிசைக் கலைஞர்.. நாச்சிமார் கோவிலடி ராஜன். (யாழ் களத்தில் முன்னர் எழுதி வந்தவர். மணிவாசன் அங்கிள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.. இவரைப் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..!)

ராஜன் முருகவேல் என்பவரே சோழியான். அவர் வேறு இவர் வேறு. ஒருவேளை இருவரும் நண்பர்களோ தெரியவில்லை. :unsure:

ஆம் தவறு தான் மன்னிக்கவும். நெடுக்கு சொல்வது தான் சரியானது. ராஜன் முருகவேல் தான் சோழியான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது புரிதலில் இவர் சோழியனாக இருக்க முடியாது...சோழியான் ..முல்லைத்தீ்வு பகுதியை சேர்ந்தவர் ... வடமராட்சிபகுதியில் தங்கியிருந்து ஹாட்லி க்ல்லூரியில் படித்ததாக அவரே எங்கையோ யாழ் களத்தில் கூறீயதாக ஞாபகம்

சோழியான் முல்லைத்தீவைச் சேர்ந்தவரா.. இல்லையே. அவர் வலிகாமத்தை (சுழிபுரம்) எல்லோ பிறப்பிடமாகக் கொண்டவர் என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சோழியான் படித்தது ஹாட்லியில் அல்ல.. றோயல் கல்லூரி கொழும்பில்.. என்று அவரே சொல்லி இருக்கிறார் களத்தில்..! :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார்கோயிலடி இராஜன் அறிந்து கொள்ள முடிந்ததில் சந்தோசம்

http://kalaignarkal.com/

வேலை செய்ய வில்லையே நுனாவிளான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா நீங்களும் குழம்பி மற்ற எல்லாரையும் குழப்புறியள் சோழியண்ணை வேறை இராஜன் அண்ணை வேறை

ஆனால் இரண்டுபேரும் ???????????????? :unsure:

Link to comment
Share on other sites

நாச்சிமார்கோயிலடி இராஜன் அறிந்து கொள்ள முடிந்ததில் சந்தோசம்

http://kalaignarkal.com/

வேலை செய்ய வில்லையே நுனாவிளான்

http://kalaignarkal.blogspot.com/

Link to comment
Share on other sites

இராஜன் முருகவேல் - பல்துறை கலைஞர் - எழுத்தாளர்

இன்றும் இணையத்தில் எம் போன்றவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும், தந்து கொண்டிருக்கும் இவர் போன்ற கலைஞர்/கவிஞர்களின் உருவாக்கமும், தேவையும் எமது சமூகத்துக்கு தேவையானது என்றால் மிகையாகாது.

ஆக்கம் - நிரோஜன்

ஆகா, நமது சோழியன் அண்ணாவா. கேட்பதற்கு மகிழ்வாக உள்ளது. :unsure:

தகவலுக்கு நன்றி நுணாவிலான், ரசிகை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாச்சிமார் கோவிலடி இராஜன் பற்றி தலைப்பை இட்டுவிட்டு.. ராஜன் முருகவேல் (சோழியன்) பற்றியே அதிகம் தகவல்களை இணைத்து வருகிறீர்கள். இது நாச்சிமார் கோவிலடி இராஜனை ராஜன் முருகவேலாக தவறாக இனங்காணவே அதிகம் உதவும். எனவே தயவுசெய்து தெளிவாக இங்குள்ள வேறுபாட்டை இனங்காட்டி.. அவர்கள் இருவரின் தனித்துவங்களையும் தனித்துவமாக இனங்காட்டி கெளரவிப்பதும்.. அறிமுகம் செய்து வைப்பதுமே சிறப்பானது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிதாசனும், சோழியன் அண்ணாவும் சேர்ந்து பட்டிமன்றம் செய்த காணொளி ஒன்றை சோழியண்ணா முன்பு தந்த ஞாபகம். தமிழ்ப் புதுவருடத்திற்காக இருக்க வேண்டும்..

இது தான் நாச்சிமார் கோவில் ராஜன்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%...%AE%A9%E0%AF%8D

சோழியன் அண்ணா சுழிபுரத்தைச் சேர்ந்தவர். முன்பு வசந்தனும், சோழியனும் மாதகல், சுழிபுர வேலிச்சண்டை பிடித்த ஞாபகம் :(

Link to comment
Share on other sites

ஆகா.. சில நாட்கள் யாழ் பக்கம் வராமல்விட்டால்.. அதற்குள் ஏதேதோ நடந்திட்டுது.. நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் தாயகத்திலும் புகலிடத்திலும் நன்கு அறியப்பட்ட கலைஞர். அவர் மற்றும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் ஆகியோர் பிறேமன் என்னும் நகரில் வசிப்பதனால், இந்த நகரத்திற்கு எனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டவன் நான்.

நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்களுடன் சில வில்லிசை நிகழ்ச்சிகளில் 'ஆமாம்' சாமியாக பங்குபற்றியுள்ளேன். என்ன பாக்கிறியள்.. நோர்வே, சுவிசெல்லாம் போயிருக்கிறனாக்கும்.. :icon_mrgreen: மற்றும் அவருடைய நாடகங்கள் சிலவற்றிலும் பங்குபற்றியுள்ளேன்.

தற்போது தங்களது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். :)

தூயவன்.. மாதகலான் சுழிபுரத்தான் சண்டை நடந்தது மெசன்சரில.. யாழ் உறவுகளை குழப்பாதீங்க.. :lol:

எங்கள் இரண்டு பேருடனும் 'குருவிகள்' மெசன்சரில் உரையாடுவார்.. அந்தத் துணிவில நெடுக்ஸ் 2 பேரும் ஒன்றல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு தகவல் வழங்கிய குருவிகளுக்கும் நன்றி!! :D:lol:

Link to comment
Share on other sites

சோழியன் மாமா, நீங்கள் தான் உங்கட படத்தை முன்பு யாழில ஒரு இடத்தில போட்டு இருந்தீங்களே தேர்திருவிழா அண்டு எடுத்தது. அந்தப்படமும், இந்தப்படமும் முகங்கள் வித்தியாசமா இருக்கிறத ஒருவரும் கவனிக்க இல்லையோ. இல்லாட்டிக்கு அது உங்கட படம் இல்லையோ. இந்த முகம் வெளிச்சத்தில எடுக்கப்பட்டு இருக்கிது. அது இருட்டில எடுக்கப்பட்டது மாதிரி இருக்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இரண்டு பேருடனும் 'குருவிகள்' மெசன்சரில் உரையாடுவார்.. அந்தத் துணிவில நெடுக்ஸ் 2 பேரும் ஒன்றல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு தகவல் வழங்கிய குருவிகளுக்கும் நன்றி!! :lol::icon_mrgreen:

எனக்கும் குருவிகள் மெசன்சரில் உரையாடும் போதுதான் சொன்னார். இருவரும் ஒருவரில்லை என்று. அத்துடன் நீங்கள் இருவரும் அவரை யாழ் களத்தில் ஆரம்பகாலத்தில் எழுத ஊக்கிவித்து வழிநடத்தியதாகவும் சொன்னார். மெசன்சருக்கு எத்தனையோ வகையான மனிதர்கள் வருகிறார்கள்.. தேவைகள் முடிய இடம்தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள் அல்லது ஐடியை மாற்றிவிடுகிறார்கள்.

மெசன்சரில் கூட நாலு நல்ல மனிதர்களை சந்திக்க முடிகிறது என்பதற்கு.. நீங்கள் எல்லாம் உலகுக்கு சாட்சி. எனக்கும் உங்களோடு எல்லாம் கதைக்க விருப்பம். ஆனால் நான் மெசன்சரில் அதிகம் பேரோடு கதைப்பதில்லை. ஒரு சில தெரிந்த நண்பர்களோடு மட்டுமே கதைப்பேன். குருவிகளையும் எனக்குத் தெரியும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. சில நாட்கள் யாழ் பக்கம் வராமல்விட்டால்.. அதற்குள் ஏதேதோ நடந்திட்டுது.. நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் தாயகத்திலும் புகலிடத்திலும் நன்கு அறியப்பட்ட கலைஞர். அவர் மற்றும் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் ஆகியோர் பிறேமன் என்னும் நகரில் வசிப்பதனால், இந்த நகரத்திற்கு எனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டவன் நான்.

நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்களுடன் சில வில்லிசை நிகழ்ச்சிகளில் 'ஆமாம்' சாமியாக பங்குபற்றியுள்ளேன். என்ன பாக்கிறியள்.. நோர்வே, சுவிசெல்லாம் போயிருக்கிறனாக்கும்.. :icon_mrgreen: மற்றும் அவருடைய நாடகங்கள் சிலவற்றிலும் பங்குபற்றியுள்ளேன்.

தற்போது தங்களது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். :)

தூயவன்.. மாதகலான் சுழிபுரத்தான் சண்டை நடந்தது மெசன்சரில.. யாழ் உறவுகளை குழப்பாதீங்க.. :lol:

எங்கள் இரண்டு பேருடனும் 'குருவிகள்' மெசன்சரில் உரையாடுவார்.. அந்தத் துணிவில நெடுக்ஸ் 2 பேரும் ஒன்றல்ல என்று உறுதியாக கூறியுள்ளார். அவருக்கு தகவல் வழங்கிய குருவிகளுக்கும் நன்றி!! :D:lol:

குருவிகள் பறந்து போனதாய் அறிந்தேனே.............

Link to comment
Share on other sites

என்ன இப்படி சொல்லிட்டீங்க.. எவ்வளவு தூரம் பறந்தாலும் இளைப்பாற பூமிக்கு வரத்தானே வேண்டும்... (அதுக்காக எவ்வளவுதூரம் பெண்களைக் கேலி செய்தாலும் பெண்களை நாடி வரத்தானே வேணும்.. என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீங்க.. பிறகு நெடுக்ஸ் கோபிப்பாரு.. :) )

Link to comment
Share on other sites

யாழ் இணைய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்!

களத்தின் புதிய உறவுகள் பலருக்கு மணிதாசனைத் தெரியாது.

மணிதாசன் தான் நாச்சிமார்கோயிலடி இராஜன்

பெரும்பாலும் தினசரி ஒருதடவை களத்தைப் பார்ப்பேன்.

இன்று நாச்சிமார் கோயிலடியைக்கண்டதால்

இராஜபை் பற்றியும் அறிந்தேன் - :D

அறிமுகப்படுத்தியவருக்கும், ஆவலுடன் படித்தவர்களுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணைய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்!

களத்தின் புதிய உறவுகள் பலருக்கு மணிதாசனைத் தெரியாது.

மணிதாசன் தான் நாச்சிமார்கோயிலடி இராஜன்

பெரும்பாலும் தினசரி ஒருதடவை களத்தைப் பார்ப்பேன்.

இன்று நாச்சிமார் கோயிலடியைக்கண்டதால்

இராஜபை் பற்றியும் அறிந்தேன் - :D

அறிமுகப்படுத்தியவருக்கும், ஆவலுடன் படித்தவர்களுக்கும் நன்றி

ம்ம்.. உங்களையே இங்கு காண்பதில் மிக்க மகிழ்ச்சி. சிரமம் பாராது தொடர்ந்து யாழ் களத்தில் எழுத வேண்டுகின்றேன். :(

Link to comment
Share on other sites

நன்றி நுணா அண்ணா..ணா இரு கலைஞர்களை..ளை பற்றி அறிய தந்தமைக்கு..கு.. :( மற்றது சோழியன் அங்கிளிண்ட படைப்புகள்..ள்.. குறிப்பிட்ட காலபகுதி ஆட்களின் ரசனைக்கு இல்லாமல்..ல் எல்லாரிண்ட ரசனைக்கு தக்க வகையில் எழுதுவது தான்..ன்.

அவரின் அந்த ஓட்டத்தின் மகிமை எண்டு நினைக்கிறன்..ன்.. :) என்ன சோழியன் அங்கிள் நான் சொல்லுறது சரியோ ஒருக்கா வந்து எனக்கு "ஆமா" போடுறியளோ..ளோ..(கோவித்துபோடாதை

யுங்கோ).. :)

அப்ப நான் வரட்டா!!

மெசன்சருக்கு எத்தனையோ வகையான மனிதர்கள் வருகிறார்கள்.. தேவைகள் முடிய இடம்தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள் அல்லது ஐடியை மாற்றிவிடுகிறார்கள்.

தாத்தா..தா உதை ரொம்ப கவலைபட்டு சொல்லுற மாதிரி கிடக்கு..கு..ஆனாலும் தாத்தா சொன்னதிலும் உண்மை இருக்கா தான் செய்யுது..து.. :D

அப்படியே எண்ட மனதில இருக்கிறதெல்லாத்தையும் அப்படியே சொல்லுறீங்கள்..ள் தாத்தா..தா..ம்ம் இப்ப தான் உலகத்தை நல்லா வெளங்குது..து.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நாச்சிமார்கோயிலடி இராஜன் படங்களை நெட்டில் பார்க்க உண்டா? நல்ல நடிகர் போல முகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நூற்றுக்கும் மேற்பட்ட வடக்கின் பரம்பரை நில உரிமையாளர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் துறை வழக்குத் தாக்கல் Published By: DIGITAL DESK 3 04 MAY, 2024 | 08:53 AM   காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், ஜனாதிபதி "உறுமய” வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சேதப்படுத்தியதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பங்கேற்ற புதுக்குடியிருப்பு கரியல்வயல் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தாம் பரம்பரையாக பயிரிட்டு வந்த காணியை வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்த முயற்சிப்பதோடு, தற்போது தமக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார். “83 வரை நாங்கள் வயல் செய்தோம். அதன் பின்னர் அங்கு போக முடியாமல் போய்விட்டது. பின்னர் 2010 - 2012ற்கு இடையில் நாங்கள் மீள் குடியேறிய பின்னர் காணியை துப்பரவு செய்து விவசாயம் செய்து கொண்டு வருகின்றோம். 2015இல் வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்தது. அதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்தது.” என்றார். சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் அனுமதியின்றி பிரவேசித்தமை, பூங்காவிலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டி அழித்தமை, பாதை  உருவாக்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு, கரியல்வயல் பிரதேச மக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் தாக்கல் செய்த வழக்கு, இரண்டாவது தடவையாக கடந்த மே 2ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக 80களின் முற்பகுதியில் தமது கிராம நிலங்களை விட்டு வெளியேறிய கரியல்வயல் கிராமத்தின் 130 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த கிராம நிலங்களுக்குத் திரும்பி, பரம்பரையாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்திய சுமார் 980 ஏக்கர் காணியில் சுமார் 610 ஏக்கர் நிலப்பரப்பை சுத்தப்படுத்தி விவசாய உற்பத்திகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கின்றனர். 2015ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த காணி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்து, அதனைத் தொடர்ந்து குறித்த கிராம மக்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, வழக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதிக்கு  நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது. வனஜீவராசிகள் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட 130 பேரில் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்திற்கான உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மே 2ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி. எஸ். தனஞ்சயன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “இந்த வழக்குடன் தொடர்படைய மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான, அதாவது பிரிடிஷ் உறுதி என அழைக்கப்படுகின்ற நூற்றாண்டுக்கு முற்பட்ட உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும், அரச அனுமதிபத்திரம், எல்டிஓ அனுமதிப்பத்திரம் (LDO - Land Development Ordinance) பெற்ற மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் குறைகளை சுட்டிகாட்டியிருந்தோம். நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவித்ததாக சடடத்தரணி வி. எஸ். தனஞ்சயன் தெரிவிக்கின்றார். "குறித்த விடயங்கள் தொடர்பாக மீள் பரிசீலனை செய்து, இந்த வழக்குகள் தொடர்பாக,  குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறு, நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்குகளில் ஒரு பகுதி வழக்குகள் எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதிக்கும், இதர திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது." மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரிப்பதாக தொடர்ந்தும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக சுவீகரிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, 1985ல் வனத்துறை உருவாக்கிய வரைபடத்திற்கு அமைய செயற்பட  வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், 2023ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/182630
    • Published By: VISHNU   04 MAY, 2024 | 12:11 AM   (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார். அதற்கமைய இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனம்மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு முயற்சியாக உருவாக்கப்படும் சம்பூரில் அமைந்துள்ள சூரிய சக்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பார்வையிட்டார். கடந்த ஆண்டு ஜூலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்கு விஜயம் செய்த போது, இந்த திட்டத்திற்கான ஆற்றல் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா திருகோணமலை எண்ணெய் தாங்கிகளையும் பார்வையிட்டார். அங்கு லங்கா ஐ.ஓ.பி.எல்.சி.யின் முதலீடுகள் மூலம் ஈர்க்கக்கூடிய அபிவிருத்தி குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. லூப்ரிகண்ட் கலப்பு ஆலை மூலம் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் கிரீஸ் உற்பத்தி ஆலையையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இந்தியா - இலங்கை எரிசக்தி கூட்டாண்மைக்கு பங்களிக்கும், எண்ணெய் தாங்கி அபிவிருத்தி திட்டங்களின் வளர்ச்சியின் சாத்தியக்கூறுகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. இதே வேளை மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு லங்கா ஐ.ஓ.சி.பி.எல்.சி. மருத்துவ உபகரணத்தை வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்ட உயர்ஸ்தானிகர், திருகோணமலை எண்ணெய் தாங்கி முனையத்துக்கு அருகில் வசித்து வரும் மக்களுக்கு உணவுப் பொருட் பொதிகளையும் வழங்கி வைத்தார். இதே வேளை இலங்கை மக்கள் தங்கள் சொந்த வீடுகள் என்ற கனவை நிறைவேற்ற உதவும் வகையில் திருகோணமலையில் இந்தியாவினால் செயல்படுத்தப்பட்ட மாதிரி கிராம வீட்டுத் திட்டத்தையும் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார். இதன் போது மக்களை மையப்படுத்திய திட்டத்திற்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் திருகோணமலையில் உள்ள விமானப்படை தளத்துக்கு விஜயம் செய்த உயர்ஸ்தானிகர், இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றிய இந்திய கடற்படை டோர்னியர் தொழில்நுட்பக் குழுவுடன் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/182625
    • பரீட்சை அனுமதி அட்டையில் பிரச்சினை! 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள சுமார் 11,000 பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்காத விஞ்ஞானப் பாடத்தை மேலதிக பாடமாக அறிவித்து பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த செயற்பாடு பரீட்சை பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை அனுமதி அட்டைகளை கணினி மயமாக்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதி அட்டையில் மேலதிக பாடங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ள போதிலும் அந்த பரீட்சைக்கு தோற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300848
    • இந்திய மீனவர்கள் மூவர் விடுதலை! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் இன்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ். மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் மூவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்தின் இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்த குறித்த மீனவர்கள், 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த மூவரும் படகோட்டிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் இந்திய அரசினால் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விசைப் படகோட்டிகள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பதால், நல்லிணக்க அடிப்படையில் 06 மாத சிறைத்தண்டனையை இரத்து செய்து, யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதற்கிணங்க, இன்று மூன்று இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையும் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாகரன் உத்தரவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300829
    • கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு - வரலாற்றை மாற்றி எழுதிய கொல்கத்தா அணி பட மூலாதாரம்,SPOORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் அனைத்து அணிகளும் 10 ஆட்டங்களை விளையாடிவிட்ட நிலையில் எந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும், வெளியேறும் என்று தெரியாமல் இருந்து வந்தது. அனைத்து அணிகளுக்குமே வாய்ப்புகள் திறந்திருந்ததால், எந்தப் போட்டியிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், நேற்றைய கொல்கத்தா-மும்பை ஆட்டத்தின் முடிவைத் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறவுள்ளது. மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை வான்ஹடே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் பல போட்டிகளில் விளையாடியிருந்தாலும், மும்பை அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது 12 ஆண்டுக்குப் பின் சொந்த மண்ணில் வைத்து மும்பை அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இது 4வது முறை. ஒரே போட்டியில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதற்கு முன் 2018, ஏப். 24 (மும்பை-சன்ரைசர்ஸ்), 2017 ஏப். 23 (கொல்கத்தா-ஆர்சிபி), 2010 ஏப். 5 (டெக்கான்-ராஜஸ்தான்) ஆகிய போட்டிகளில் இரு அணிகளும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளன. அதற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை அணிகள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கின்றன.   கொல்கத்தா அணி 12 ஆண்டுகள் கழித்துப் பெற்ற வெற்றி பட மூலாதாரம்,SPORTZPICS வெற்றிக்குப் பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், “நாங்கள் சரியான நேரத்தில் கதவைத் தட்டியிருக்கிறோம். நாங்கள் தோற்றுவிட்டோம் என தொடக்கத்தில் பேசினார்கள். 12 ஆண்டுகளாக வான்ஹடேவில் கொல்கத்தா வென்றதில்லை. இன்று அந்தப் பெயரை மாற்றியுள்ளோம்," என்றார். தங்களுக்குச் சிறப்பாக உதவியதாகவும் மணிஷ் பாண்டே கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்தியதால் நல்ல ஸ்கோரை எட்ட முடிந்ததாகவும் தெரிவித்தார் ஸ்ரேயாஸ் அய்யர். "எந்த ஸ்கோர் கிடைத்தாலும் டிபெண்ட் செய்ய வேண்டும் என வீரர்களிடம் தெரிவித்தேன். சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அற்புதம். லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறவிட்டனர். வெங்கடேஷ் பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார். வலுப்பெற்ற ப்ளே ஆஃப் வாய்ப்பு இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை நன்கு பிரகாசப்படுத்திக் கொண்டது. இதுவரை 10 போட்டிகளில் ஆடிய கொல்கத்தா 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் 2வது இடத்தில், நிகர ரன்ரேட்டில் 1.098 என வலுவாக இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் உள்ள எந்த அணியையும்விட நிகர ரன்ரேட்டில் வலுவாக இருப்பது கொல்கத்தா என்பதால், இன்னும் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலே கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடும். கொல்கத்தா அணிக்கு இனி லக்னெள(மே 5), மும்பை(மே11) குஜராத்(மே13) ராஜஸ்தான்(மே 19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. இதில் மும்பை அணியுடன் வரும் 11ஆம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது முறையாக மோதுகிறது. இனி வரும் ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னெள அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு சவாலாக இருக்கக்கூடும்.   கலைந்த மும்பையின் ப்ளே ஆஃப் கனவு பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்புக் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய கணக்குப்படி, ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால் டாப்-3 அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகள் தாங்களே முன்வந்து தோற்க வேண்டும், இவையெல்லாம் நடந்தால் மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை. "மோசமான கேப்டன்சி, அணிக்குள் குழுவாகப் பிரிந்திருத்தல், மோசமான வீரர்கள் தேர்வு, பலமான பந்துவீச்சின்மை போன்றவைதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்குக் காரணம்," என்று விமர்சிக்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த பல சீசன்களில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோற்றாலும், மீண்டு வந்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை சென்றுள்ளது. ரோஹித் சர்மா கேப்டன்சியில் இது பலமுறை நடந்துள்ளது. ஆனால், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி "அப்படி மீண்டெழ வேண்டுமென்ற உணர்வற்று இருந்ததே தோல்விக்கான பிரதான காரணம்" என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரும் 3 ஆட்டங்களில் வென்றாலும் 12 புள்ளிகள் மட்டுமே மும்பையால் பெற முடியும். ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்துக்கு இந்த முறை 16 புள்ளிகள் வரை போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மும்பையின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது.   ஆட்டநாயகன் வெங்கடேஷ் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணி 169 ரன்கள் எனும் கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கும், பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வதற்கும் முக்கியக் காரணமாக முதுகெலும்பாக இருந்தவர் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர். கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மணிஷ் பாண்டேவுடன் சேர்ந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெங்கடேஷ் அணியை மீட்டெடுத்தார். இறுதியில் 52 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த வெங்கடேஷ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கொல்கத்தா 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை 5 ஓவர்களில் இழந்தாலும், 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 83 ரன்கள் என ரன்ரேட்டை குறையவிடாமல் வெங்கடேஷ், மணிஷ் பாண்டே பார்த்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. குறிப்பாக வெங்கடேஷ்-மணிஷ் பாண்டே ஆடிய ஆட்டம்தான் ஆட்டத்தின் உயிராக இருந்தது. இருவரும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையாமல் கொண்டு சென்றனர். மணிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தாலும், வெங்கடேஷ் 20வது ஓவர் வரை களத்தில் இருந்து ஆட்டமிழந்தார்.   டிபெண்ட் செய்த பந்துவீச்சாளர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS அதேபோல ஒரு கட்டத்தில் ஆட்டம் கொல்கத்தா அணியின் கையைவிட்டு நழுவுவதுபோல் இருந்தது. களத்தில் சூர்யகுமார், டிம் டேவி என இரு ஆபத்தான பேட்டர்கள் இருந்தபோது மும்பை வெற்றிக்கு 28 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் எந்த நேரத்திலும் மும்பை பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிட்ஷெல் ஸ்டார்க், ரஸல் வீசிய ஓவர்கள் ஆட்டத்துக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின. குறிப்பாக மிட்ஷெல் ஸ்டார்க் 3.5 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐபிஎல் தொடரில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். வருண், நரைன் இருவரும் மும்பை அணியின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து ரன்ரேட்டை சுருக்கினர். இருவரும் 8 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆண்ட்ரே ரஸல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 5 பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு பேட்டர்கள் பலம் அதிகம் இருக்கும் மும்பை அணியை மும்பை மைதானத்தில் கொல்கத்தா சுருட்டியது பாராட்டுக்குரியது.   பும்ரா சரியாக பயன்படுத்தப்படவில்லையா? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியின் 5 விக்கெட்டுகளை ஆட்டத்தின் முதல் 37 பந்துகளிலேயே எடுத்தும்கூட மும்பை அணி தோல்வியடைந்துள்ளது. ஆறாவது விக்கெட்டுக்கு வெங்கடேஷ்-மணிஷ் பாண்டேவை 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டதுதான் மும்பை அணி செய்த மிகப்பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. பும்ரா ஏற்கெனவே ஒரு ஓவரை விளையாட முடியாத அளவுக்கு கட்டுக்கோப்பாக வீசி 2 ரன்கள் மட்டுமே அளித்திருந்தார். துல்லியமாகப் பந்துவீசும் பும்ராவை தொடர்ந்து பந்துவீச வைத்து வெங்கடேஷ்-பாண்டே பார்ட்னர்ஷிப்பை உடைத்து எளிதாக ஆட்டத்தை முடித்திருக்கலாம். வெங்கடேஷ்-பாண்டே செட்டிலான பிறகு நடுப்பகுதி ஓவர்களை வீச பும்ரா அழைக்கப்பட்டபோது, அவரின் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, சிக்ஸரை விளாசினார். ஆனால் டெத் ஓவருக்கு பும்ரா தேவை என்று நினைத்து பும்ராவுக்கு கடைசி ஓவர்களை ஹர்திக் பாண்டியா வழங்கினார். 18வது ஓவரில் 2 ரன்களை மட்டும் வழங்கிய பும்ரா, கடைசி ஓவரில் வெங்கடேஷ் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பும்ராவை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் ஹர்திக் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.   'தொடர்ந்து போராடுவோம்' பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது என்று தெரிந்தபின், பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா கூறுகையில், “நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை பேட்டிங்கில் அமைக்கவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது தோல்விக்கு முக்கியக் காரணம். ஏராளமான கேள்விகள் இருக்கின்றன, அதற்கு பதிலளிக்க அவகாசம் தேவை என்றார். "இப்போது அதுபற்றி கூற முடியாது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை நன்கு பயன்படுத்தினர். நான் தவறு செய்யாமல் இருந்திருந்தால், விக்கெட் நல்ல விக்கெட்டாக இருந்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருந்தது. இந்த ஆட்டத்தில் என்ன தவறுகள் செய்தோம் என்று ஆலோசிப்போம், இன்னும் சிறப்பாக வரும் போட்டிகளில் எவ்வாறு விளையாடுவது எனச் சிந்திப்போம். தொடர்ந்து போராட வேண்டும், அதைத்தான் எனக்கு நானே கூறிக்கொள்வது. வாழ்க்கை என்பது சவாலானது. சவால்களை எதிர்கொண்டால்தான் சுவரஸ்யமாக இருக்கும்,” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS மும்பையின் தோல்விக்கு காரணம் பேட்டர்களா? சூர்யகுமார் யாதவ்(56), டிம்டேவிட் (24) ரன்களை தவிர்த்துப் பார்த்தால் 80 ரன்கள்கூட தேறாது. எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 19.18 ரன்கள் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பையில் விளையாட பிசிசிஐ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாததும் பேசுபொருளாகியுள்ளது. பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணி இஷான் கிஷன்(13), நமன்திர்(11), ரோஹித் சர்மா(11) விக்கெட்டுகளை இழந்தது. நடுவரிசையில் திலக் வர்மா(4), நேஹல் வதேரா(6), ஹர்திக் பாண்டியா(1) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை வான்ஹடே மைதானம் குறித்து நன்கு தெரிந்தும், சொந்த மைதானத்தில்கூட 170 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் மும்பை அணி தோற்றதற்கு தொடக்க வரிசை பேட்டர்களும், நடுவரிசை பேட்டர்களும் செயல்படாமல் போனதே முக்கியக் காரணம். https://www.bbc.com/tamil/articles/cjr7zl7lqp4o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.