Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக கல்லூரி மாணவர்களிடையே பிரபாகரன் ஒரு மாவீரனே: குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு

Featured Replies

தமிழக கல்லூரி மாணவர்களிடையே பிரபாகரன் ஒரு மாவீரனே: குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு

[புதன்கிழமை, 12 நவம்பர் 2008, 08:36 பி.ப ஈழம்] [ப.தயாளினி]

தமிழக கல்லூரி மாணவர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகின்றார் என்பது உண்மை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் குமுதம் ரிப்போர்ட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குமுதம் குழுமத்தின் வெளியிடான குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்த கருத்துக்கணிப்பு விவரம்:

1. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது சரியா? தவறா?

சரி - 53.1% (1000 பேர்)

தவறு - 46.9% (833 பேர்)

2. ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா?

மன்னிக்கலாம் - 35.46% (650 பேர்)

மன்னிக்கக்கூடாது - 64.40% (1,180 பேர்)

கருத்துக்கூற விரும்பாதவர்கள் - 0.16% (3 பேர்)

3. இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியின் செயற்பாடு சரியா? தவறா?

சரி - 43.8% (803 பேர்)

தவறு - 55.7% (1,021 பேர்)

கருத்துக்கூற விரும்பாதவர்கள் - 0.05% (9 பேர்)

4. இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு சரியாக சரியாக நடந்து கொள்கிறதா? பாரபட்சம் காட்டுகிறதா?

சரியாக நடந்துகொள்கிறது - 36.98% (678 பேர்)

பாரபட்சம் காட்டுகிறது - 62.90% (1,153 பேர்)

கருத்துக் கூற விரும்பாதவர்கள் - 0.1% (2 பேர்)

இந்தக் கேள்விகளில் ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா? என்பதற்கு மட்டும் மிக அதிகம் பேர், சோனியா காந்தி மன்னித்து விட்டாலும் கூட எங்களால் அதை மன்னிக்கவே முடியாது!' என்று அடித்துக் கூறினார்கள். அப்படிக் கூறியவர்கள்கூட, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை இங்கே ஆதரித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியதுதான் நமக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும், கல்லூரிப் பருவத்தினரிடையே புலித் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகிறார் என்பதும் உண்மை.

அடுத்ததாக, இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு என்பது நமது முதல்வர் கலைஞருக்கு வேண்டுமானால் திருப்தியளிக்கலாம். ஆனால், பெரும்பான்மையான மக்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவே கூறியுள்ளார்கள்.

அதேபோல், இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கலைஞரின் செயற்பாடும் சரியில்லை என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்தாக இருக்கிறது. அவர்களின் கருத்தைத்தான் மேலேயுள்ள அட்டவணையில் துல்லியமாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்பதே நமது விருப்பம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

2. ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா?

மகாத்மா காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா?

இந்திரா காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா?

போன்ற கேள்விகளையும் கேட்கலாமே .

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில்

5000 பேரைக்கொன்றதை மன்னிக்கலாமா? கூடாதா?

ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்ததை மன்னிக்கலாமா? கூடாதா?...............................................?????

அப்படி எல்லாக்கேள்விகளையும் சேர்த்துக்கேட்டு தெரிந்து கொள்ளும்போதுதான்

நாம் உண்மைத்தரவை அல்லது உண்மையான கணிப்பை பெறலாமே தவிர

இப்படி அவர்களது தலைவரின் இழப்பை மட்டும் கேள்வியாக்கும்போது

ஒருசொல்லிலேயே பதில்வரும்

அது உண்மையை பிரதிபலிக்காது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்விகளில் ராஜீவ் காந்தி கொலையை மன்னிக்கலாமா? கூடாதா? என்பதற்கு மட்டும் மிக அதிகம் பேர், சோனியா காந்தி மன்னித்து விட்டாலும் கூட எங்களால் அதை மன்னிக்கவே முடியாது!' என்று அடித்துக் கூறினார்கள். அப்படிக் கூறியவர்கள்கூட, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை இங்கே ஆதரித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியதுதான் நமக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும், கல்லூரிப் பருவத்தினரிடையே புலித் தலைவர் பிரபாகரன் ஒரு மாவீரனாகவே பார்க்கப்படுகிறார் என்பதும் உண்மை.

இக்கருத்து கணிப்பு ஏன் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்பதற்கான காரணம் தமிழ் நாட்டு மக்களுக்கு செல்லவில்லை என எடுக்கலாமா? தமிழ் நாட்டிலே இந்த கதி எனில் மற்ற மாநிலம் சொல்லி வேலையில்லை.தமிழ் நாட்டு மக்களில் நிலையில் இருந்து சிந்தித்தால் தமது நாட்டு தலைவரை தமது நாட்டில் கொலை செய்ததை சீரணிக்க முடியாமல் கூட இருக்கலாம். மொத்தத்தில் பிரபாகரனை ஒரு மாவீரனாக பார்க்கிறார்கள் என்றால் ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லை வேறு சக்திகள் கொன்றார்கள் என நம்புகிறார்களா?

ஆக மொத்தத்தில் ஒரு முழுமையான கருத்து கணிப்பாக கொள்ளமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களுக்கு சரியான முறையில் பிரச்சாரம் செய்யப்படவில்லை என்பதே இதிலிருந்து தெரிகிறது.பொடா தடா என்று கொடுமையான சட்டங்களினால் வாய்பூட்டுப் போடப் பட்டிருக்கிறார்கள். இப்பொழுது என்றுமில்லாதவாறு தமிழக மக்கள் எழுச்சி அடைந்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சி அனைத்து தடைகளையும் உடைக்கும். ஒரு சீடி இவ்வளவும் செய்ததென்றால் உண்மைகள் மேலும் மேலும் தெரிய வரும் போது மக்கள் கிளர்ந்தெழுவார்கள். இது நிச்சயம் நடக்கும்;. நாங்கள் நம்பிக்கை தளராமல் எங்கள் கடைமையைச் சரிவரச் செய்வோம்.

Edited by pulavar

புலவரே! நாங்கள் என்ன செய்யலாம்?

இதை பற்றி இன்று நேற்றல்ல பல காலமாக கதைத்து வருகின்றோம். அவர்களை பொறுத்தவரையில் ஒரு ஒப்பற்ற தலைவர்..... இந்தியாவை வல்லரசாக்கக்கூடிய பெருந்தலைவர் கொல்லப்பட்டார். எங்களை பொறுத்தவரை குமரப்பா, புலேந்திரன், ஜொனி, விக்டர், ராதா, திலீபன் உட்பட மற்றும் பல வேங்கைகளை விடுதலை தீயில் காணிக்கையாக்க வேண்டிய சூழல் இந்திய பேராதிக்கத்தால் விளைந்தது. எப்படி அவர்களுக்கு வலி இருக்குமோ அதைவிட பலமடங்கு எங்களுக்கு இருக்கிறது. உயிர் எல்லாம் ஒன்று தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை பற்றி இன்று நேற்றல்ல பல காலமாக கதைத்து வருகின்றோம். அவர்களை பொறுத்தவரையில் ஒரு ஒப்பற்ற தலைவர்..... இந்தியாவை வல்லரசாக்கக்கூடிய பெருந்தலைவர் கொல்லப்பட்டார். எங்களை பொறுத்தவரை குமரப்பா, புலேந்திரன், ஜொனி, விக்டர், ராதா, திலீபன் உட்பட மற்றும் பல வேங்கைகளை விடுதலை தீயில் காணிக்கையாக்க வேண்டிய சூழல் இந்திய பேராதிக்கத்தால் விளைந்தது. எப்படி அவர்களுக்கு வலி இருக்குமோ அதைவிட பலமடங்கு எங்களுக்கு இருக்கிறது. உயிர் எல்லாம் ஒன்று தான்.

கொக்குவிலன் அண்ணா

இன்னும் ஒரு ஆளை சொல்ல மறந்து விட்டியள்.. கிட்டு அண்ணா.. அவறையும் உவங்கள் தானே கொன்டது வங்க கடலில வச்சு :rolleyes:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குவிலன் அண்ணா

இன்னும் ஒரு ஆளை சொல்ல மறந்து விட்டியள்.. கிட்டு அண்ணா.. அவறையும் உவங்கள் தானே கொன்டது வங்க கடலில வச்சு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட

எமக்கு தெரியாத?????? எத்தனையோ போராளிகள்

எத்தனையோ ஆயிரம் என்றுதான் சொல்லவேண்டும்அவர்களுக்கு ராஐPவ் காந்தி பெரும் தலைவர் என்றால்

எங்களுக்கு

இவர்கள் ஒவ்வொருத்தரும்பெரும் தலைவர்கள்தான்

பெரும்தலைவர்களாக வரக்கூடியவர்கள்தான்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது அவர்களுக்கு நாடு இருக்கிறது

அதுஇது..................?????????? என்கிறார்கள்

எமக்கு அது இல்லையென்பதால் பூச்சியமாகி விடுவோமா???????

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இதை பற்றி இன்று நேற்றல்ல பல காலமாக கதைத்து வருகின்றோம். அவர்களை பொறுத்தவரையில் ஒரு ஒப்பற்ற தலைவர்..... இந்தியாவை வல்லரசாக்கக்கூடிய பெருந்தலைவர் கொல்லப்பட்டார். எங்களை பொறுத்தவரை குமரப்பா, புலேந்திரன், ஜொனி, விக்டர், ராதா, திலீபன் உட்பட மற்றும் பல வேங்கைகளை விடுதலை தீயில் காணிக்கையாக்க வேண்டிய சூழல் இந்திய பேராதிக்கத்தால் விளைந்தது. எப்படி அவர்களுக்கு வலி இருக்குமோ அதைவிட பலமடங்கு எங்களுக்கு இருக்கிறது. உயிர் எல்லாம் ஒன்று தான்.

விக்டரும், ராதாவும் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள். அவர்கள் இலங்கை இராணுவத்துடனான சண்டையில்தான் வீரமரணம் அடைந்தார்கள்.

Edited by பிரபா

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கேள்வி நாங்கள் எங்கள் பலத்தைக் கூட்ட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.வலிமையே வாழ்வு.

ஈழ மக்களாலும் நடந்தவற்றை மன்னிக்கவோ மறக்கவோ முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜீவ் ராஜீவ் என்று எவ்வளவு நாள் தான் சேடம் இழுக்கபோறிங்கள் நீங்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை கட்டாயம் வரும் அப்பொழுது உங்களுக்கும் விடுதலை என்றால் என்ன போராட்டத்தின் வலி என்ன இழப்புக்களின் துயரம் என்ன எப்படி போராட வேண்டும் யாருக்கு என்ன செய்யவேண்டும் என்று எல்லாம் நிச்சயம் தெரிய வரும் அப்பொழுது எமது பக்க நியாயங்களை நினைத்து பாருங்கள்.(இது அனைவருக்குமானதல்ல ராஜீவ் என்று கத்துபவர்களுக்கு மட்டும்)

உந்தமாதிரி மாதிரி கேள்விகேட்டு அதுக்கு பதில் சொல்லி பட்டியல் போடும் நிலையிலா நாங்கள் உள்ளோம்.....? போராட்டத்தின் வலி அல்ல அல்ல உரிமைகள்ளற்ற கதியற்ற நாடற்ற கேக்க நாதியற்று போராடும் எங்கள் வலியை புரிந்துகொள்ள முடியுமா எவராலும்?

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.