Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அமைச்சர்கள் இராஜினாமா! கருணாநிதி அறிவிப்பு!

Featured Replies

இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தாவிட்டால் தி.மு.க. வின் மத்திய அமைச்சர்கள் இராஜினாமா செய்வார்கள் என தமிழக முதல்வர் கருணாநிதி தெறிவித்துள்ளார்.

---சன் நியூஸ்

நம்பிக்கை கொஞ்சமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
நம்பிக்கை கொஞ்சமும் இல்லை

சென்னை: ராஜபக்சேவின் கருத்தை ஏற்று இந்தியா ஏமாந்து விடக் கூடாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக மீண்டும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

வேதனைப்படுகிறேன்:

கடந்த 12ம் தேதி ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பினோம். தீர்மானத்தை உளத் தூய்மையுடன் நிறைவேற்றி அனுப்பினோம்.

ஆனால், தமிழர்கள் எப்போதும் எப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாம் 12ம் தேதி காட்டிய ஒற்றுமைக்கு மாறாக இன்று (14ம் தேதி) மாறுபட்டு செயல்படுகிறோம். அதற்காக நான் வேதனைப்படுகிறேன்.

இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தப் பிறகு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இங்கே எதிர்க்கட்சித் தரப்பில் பேசியிருக்கிறீர்கள். இதற்கு உன்னுடைய பதில் என்ன என்று என்னை கேட்டிருக்கிறீர்கள்.

எப்படியோ என்னை டெல்லியில் உள்ள ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாக பாவித்து, உன் பதில் என்ன என்று கேட்டதற்கு நன்றி.

என் உயரம் என்ன என்பதை அறிந்துள்ளதால் அதற்கு உட்பட்டே இங்கு பதில் சொல்ல விரும்புகிறேன்.

இலங்கை அதிபரின் கருத்துக்களை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் தொடர்ந்து வேண்டுகோள் விடுவது நமது கடமை.

பன்னீரின் வேகத்தைப் பாராட்டுகிறேன்:

அன்று (12ம் தேதி) வேகமாக பேசத் தவறிய ஓ.பன்னீர்செல்வம் இன்று வேகமாக பேசி, எப்போது ராஜினாமா? என்று கேட்டார். அந்த வேகத்தை பாராட்டுகிறேன்.

தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை.

அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்தின்படி நாங்களும், பாமகவும் மட்டுமே தயாராக இருந்தோம். மற்ற கட்சிகள் தங்கள் தலைமையை கலந்து பேசிதான் ராஜினாமா செய்ய முடியும் என்று கூறிவிட்டன. அதன்பிறகு இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுவிட்டன.

தற்போது இலங்கை அதிபர் முடிந்த முடிவாக தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை சரணடைய செய்வது அல்லது அடக்குவது ஒன்றுதான் முக்கிய நோக்கம்; குறிக்கோள் என்று அறிவித்துவிட்டார்.

தமிழர்களை காக்கும் பொறுப்பை நான் தட்டிக் கழிக்கமாட்டேன் என்றும் ராஜபக்சே சுவைபட சொல்லியிருக்கிறார். தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற கருத்தில்தான் அவர் அப்படி சொல்லியுள்ளார்.

ராஜபக்சேவிடம் எச்சரிக்கை வேண்டும்:

மத்திய அரசு இதனை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்சனையை ராஜபக்சே இரண்டாக பிரித்துப் பார்க்கிறார். தமிழர்கள் மீது எங்கள் படை செல்லாது, குண்டு வீசாது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தர முடியாது என்று அவர்கள் நடத்துகிற யுத்தத்தையே இரண்டாக பிரித்து சொல்கிறார்.

இதனை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று பிரதமரையும், சோனியா காந்தியையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் எப்படி அதை அணுக வேண்டுமோ, அப்படி அவர்களை அணுக வேண்டும். முதலில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிவதை நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் வீடுகள், ஆலயங்கள் எதுவுமே தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது. இதற்கு ராஜபக்சே உத்தரவாதம் தருவதற்கு தயாராக இல்லை.

இரு பிரிவினரையும் அழிக்க முயலும் ராஜபக்சே:

விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினால் இலங்கைத் தமிழர்கள் மீதும், இவர்கள் மீது குண்டு வீசினால் விடுதலைப் புலிகள் மீதும் நிச்சயம் விழும். இரு பிரிவினரையும் ஒரு சேர அழிக்க ராஜபக்சே யுத்தம் புரிகிறார்.

அவர் கெடு கேட்டதன் நோக்கம் புரிகிறது. இதில் பிரதமர் ஏமாந்துவிடக் கூடாது. இந்தியா உட்பட எல்லா நாடுகளிலுமே தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக அந்த நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிகிறார்களா?.

இதை பிரதமர் இந்தியாவின் சார்பாக, இங்கே வேதனைப்படும் தமிழர்களின் சார்பாக இலங்கைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்காவிட்டால் பிறகு என்ன நடவடிக்கை என்பதை நாங்கள் யோசிப்போம் என்று பிரதமர் கூறவேண்டும். அதன் பிறகு நம்முடைய எண்ணங்கள் நிறைவேற நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.

அறப்போர் மீது நமக்கு எப்போதுமே அக்கறை உள்ளது. காந்தி, பெரியார், அண்ணா காலம் முதல் அறப்போர் முறையை நாம் அறிந்துள்ளோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். அந்த முறையில் தமிழர் நலன் காக்க பாடுபடுவோம். அந்த வழியில் ஓ.பன்னீர்செல்வம்

கருத்துப்படி பதவியை துறக்க தயார் என்றார் கருணாநிதி.

http://thatstamil.oneindia.in/news/2008/11...arunanidhi.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச்சொல்லவேண்டாம்

எமக்காக இல்லாவிட்டாலும்

ஏழுகோடித்தமிழனின் சுய கௌரவம் இதில் அடங்கியிருக்கிறது

பார்ப்போம்

என்ன நடக்கிறது என்று????????

கலைஞரின் செயலை உற்று நோக்கும் போது அவரின் அரசியல் முதுமை புரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக பதவியை துறக்க தயார் என்று முதல்வர் கருணாநிதி ஆவேசமாக கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கருத்தை ஏற்று இந்தியா ஏமாந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்தார். சட்டசபையில் இன்று மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

வேதனைப்படுகிறேன்:

கடந்த 12ம் தேதி ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பினோம். தீர்மானத்தை உளத் தூய்மையுடன் நிறைவேற்றி அனுப்பினோம்.

ஆனால், தமிழர்கள் எப்போதும் எப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாம் 12ம் தேதி காட்டிய ஒற்றுமைக்கு மாறாக இன்று (14ந் தேதி) மாறுபட்டு செயல்படுகிறோம். அதற்காக நான் வேதனைப்படுகிறேன்.

இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தப் பிறகு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இங்கே எதிர்க்கட்சித் தரப்பில் பேசியிருக்கிறீர்கள். இதற்கு உன்னுடைய பதில் என்ன என்று என்னை கேட்டிருக்கிறீர்கள்.

எப்படியோ என்னை டெல்லியில் உள்ள ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாக பாவித்து, உன் பதில் என்ன என்று கேட்டதற்கு நன்றி.

என் உயரம் என்ன என்பதை அறிந்துள்ளதால் அதற்கு உட்பட்டே இங்கு பதில் சொல்ல விரும்புகிறேன்.

இலங்கை அதிபரின் கருத்துக்களை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் தொடர்ந்து வேண்டுகோள் விடுவது நமது கடமை.

பன்னீரின் வேகத்தைப் பாராட்டுகிறேன்:

அன்று (12ம் தேதி) வேகமாக பேசத் தவறிய ஓ.பன்னீர்செல்வம் இன்று வேகமாக பேசி, எப்போது ராஜினாமா? என்று கேட்டார். அந்த வேகத்தை பாராட்டுகிறேன்.

தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய

அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை.

அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்தின்படி நாங்களும், பாமகவும் மட்டுமே தயாராக இருந்தோம். மற்ற கட்சிகள் தங்கள் தலைமையை கலந்து பேசிதான் ராஜினாமா செய்ய முடியும் என்று கூறிவிட்டன. அதன்பிறகு இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுவிட்டன.

தற்போது இலங்கை அதிபர் முடிந்த முடிவாக தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை சரணடைய செய்வது அல்லது அடக்குவது ஒன்றுதான் முக்கிய நோக்கம்; குறிக்கோள் என்று அறிவித்துவிட்டார்.

தமிழர்களை காக்கும் பொறுப்பை நான் தட்டிக் கழிக்கமாட்டேன் என்றும் ராஜபக்சே சுவைபட சொல்லியிருக்கிறார். தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற கருத்தில்தான் அவர் அப்படி சொல்லியுள்ளார்.

ராஜபக்சேவிடம் எச்சரிக்கை வேண்டும்:

மத்திய அரசு இதனை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்சனையை ராஜபக்சே இரண்டாக பிரித்துப் பார்க்கிறார். தமிழர்கள் மீது எங்கள் படை செல்லாது, குண்டு வீசாது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தரமுடியாது என்று அவர்கள் நடத்துகிற யுத்தத்தையே இரண்டாக பிரித்து சொல்கிறார்.

இதனை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று பிரதமரையும், சோனியா காந்தியையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் எப்படி அதை அணுக வேண்டுமோ, அப்படி அவர்களை அணுக வேண்டும். முதலில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிவதை நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் வீடுகள், ஆலயங்கள் எதுவுமே தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது. இதற்கு ராஜபக்சே உத்தரவாதம் தருவதற்கு தயாராக இல்லை.

இரு பிரிவினரையும் அழிக்க முயலும் ராஜபக்சே:

விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினால் இலங்கைத் தமிழர்கள் மீதும், இவர்கள் மீது குண்டு வீசினால் விடுதலைப் புலிகள் மீதும் நிச்சயம் விழும். இரு பிரிவினரையும் ஒரு சேர அழிக்க ராஜபக்சே யுத்தம் புரிகிறார்.

அவர் கெடு கேட்டதன் நோக்கம் புரிகிறது. இதில் பிரதமர் ஏமாந்துவிடக் கூடாது. இந்தியா உட்பட எல்லா நாடுகளிலுமே தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக அந்த நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிகிறார்களா?

இதை பிரதமர் இந்தியாவின் சார்பாக, இங்கே வேதனைப்படும் தமிழர்களின் சார்பாக இலங்கைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்காவிட்டால் பிறகு என்ன நடவடிக்கை என்பதை நாங்கள் யோசிப்போம் என்று பிரதமர் கூறவேண்டும். அதன் பிறகு நம்முடைய எண்ணங்கள் நிறைவேற நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.

அறப்போர் மீது நமக்கு எப்போதுமே அக்கறை உள்ளது. காந்தி, பெரியார், அண்ணா காலம் முதல் அறப்போர் முறையை நாம் அறிந்துள்ளோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். அந்த முறையில் தமிழர் நலன் காக்க பாடுபடுவோம். அந்த வழியில் ஓ.பன்னீர்செல்வம்

கருத்துப்படி பதவியை துறக்க தயார் என்றார் முதல்வர் கருணாநிதி

www.tamilwin.vom

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மீண்டும்?????????????????

இந்த முறையாவது ஒன்றும் சொதப்பாதில்ல?? :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் பகிரும் கருத்துகள் அல்லது ஆக்கங்கள்இ எவரையும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வேறு எவ்விதத்திலோ புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல.

இப்படி எழுதிவிட்டு

இந்த முறையாவது ஒன்றும் சொதப்பாதில்ல?? :)

இப்படி எழுதினால் மோகண்ணாவுக்கு பிடிக்குமாக்கும்???????

அதாவது சுற்றி மூக்கைத்தொடுதல்

இங்கு நான் பகிரும் கருத்துகள் அல்லது ஆக்கங்கள்இ எவரையும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வேறு எவ்விதத்திலோ புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல.

இப்படி எழுதிவிட்டு

இப்படி எழுதினால் மோகண்ணாவுக்கு பிடிக்குமாக்கும்???????

அதாவது சுற்றி மூக்கைத்தொடுதல்

நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடாக தான் அப்படி எழுதினேன். முன்பு வாக்குறுதி கொடுத்தவர்கள், அதன்படி நடந்திருந்தால் ஏன் இப்படி சலித்துக்கொள்ள போகிறோம். எல்லாம் சொன்னபடி நடந்தால் மகிழ்ச்சியே.

மற்றது உண்மையில், "மனதை புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை" என்று எழுதியது, கள உறவுகளுக்கே. இணையத்தில் மற்றய கள உறவுகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது சில கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். களத்திலுள்ள எவரையும் புண்படுத்த எழுதவில்லை என்று தெரியப்படுத்தவே அவ்வாறு குறிப்பிட்டேன்.

அதற்காக, அப்ப்டடியானால் களத்துக்கு வெளியிலுள்ளவர்களை புண்படுத்துவீர்களா என்றெல்லாம் கேட்க வேண்டாம். நான் கூடிய வரை தேவையற்ற விவாதங்களை தவிர்க்க விரும்புகிறேன்.

இது பேரனவாத்தின் அகங்காரத்தின் வெளிப்பாடு. இந்த ஆணவப் பேச்சு ஈழத்தவர்களுக்கு விடுத்ததல்ல. தமிழகத்து உறவுகளுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் விடுக்கப்பட்;ட அறைகூவல். இம் முறையாவது செய்வதை அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் ஒன்று சோந்து உறுதியாகச் செய்யுங்கள்.

ஜானா

போர் அது முடிவுக்கு வராது... தமிழகத்தைவிட பல முக்கியமான அரசியல் சக்த்திகளின் ஆதிக்கம்தான் அதிகம், அவர்கள் விரும்புவது போரைமட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடாக தான் அப்படி எழுதினேன். முன்பு வாக்குறுதி கொடுத்தவர்கள், அதன்படி நடந்திருந்தால் ஏன் இப்படி சலித்துக்கொள்ள போகிறோம். எல்லாம் சொன்னபடி நடந்தால் மகிழ்ச்சியே.

மற்றது உண்மையில், "மனதை புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை" என்று எழுதியது, கள உறவுகளுக்கே. இணையத்தில் மற்றய கள உறவுகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது சில கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். களத்திலுள்ள எவரையும் புண்படுத்த எழுதவில்லை என்று தெரியப்படுத்தவே அவ்வாறு குறிப்பிட்டேன்.

அதற்காக, அப்ப்டடியானால் களத்துக்கு வெளியிலுள்ளவர்களை புண்படுத்துவீர்களா என்றெல்லாம் கேட்க வேண்டாம். நான் கூடிய வரை தேவையற்ற விவாதங்களை தவிர்க்க விரும்புகிறேன்.

நான் மோகண்ணாவிடம்தான் கேள்விகேட்டேன்

தங்களிடம் அல்ல

நானும் தங்களைப்போலவே எழுதினேன்

கவிதைமட்டும்தான் ஈழத்தமிழனுக்கு என்று வெட்டுவிழுந்துவிட்டது

அதுதான்????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இன்று தமிழக சட்டசபையில், ஈழத்தமிழர் பிரச்சனை விவகாரம் பெசப்பட்ட போது, கடந்த 12ம் தேதி ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பினோம். தீர்மானத்தை உளத் தூய்மையுடன் நிறைவேற்றி அனுப்பினோம்.தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை. என்றார் முதல்வர்

இது குறித்த கலைஞர் தொலைக்காட்சியின் செய்திக்குறிப்பு:

http://www.4tamilmedia.com/index.php?view=...&Itemid=265

முதலமைச்சர் கலைஞர் உணர்ச்சி வசப்பட்டு மத்திய அரசை வழிக்குக் கொண்டு வர அடிக்கடி இராஜினாமாச் செய்வது பற்றிப் பேசுகின்றார். அது அவரது நிலைப்பாடு. ஆனால் இங்கே பலர் அவர் எப்படா இராஜினாமாச் செய்வார் என்பது போலவே கருத்துக்களை வைக்கின்றார்கள். இன்றைய நிலையில் திமுக மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ இராஜினாமாச் செய்வதால் எமக்கு ஏதாவது சாதகமான நிலைப்பாடுகள் தோன்றுமா என்பதை இவர்கள் விளக்குவார்களா?? எம் இனத்திற்கு விடிவு பிறக்குமோ இல்லையோ, இந்த விடயத்தை வைத்து திமுக அரசை கவிழ்த்து விட்டால்ப் போதும் என்பது போலவே இவர்களது கருத்து உள்ளது. ஆனால் இப்படியான ஒரு நிலை தோன்றினால், அதன் பின் என்ன நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் என்பதை எவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பதெல்லாம் சொல்லவும் முடியாது. சொல்வதெல்லாம் செய்யவும் முடியாது.

நடப்பவை எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு போர் நிறுத்தம் வேணும் எண்டு எழுதுறவையெல்லாம் 2004 இல தலைவர் எப்ப சண்டையை தொடங்குவார் எண்டு எதிர்பார்த்தவைதானே :rolleyes:

இந்த போர்நிறுத்த கதையெண்டது அரசியல். புலிகளுக்கும் அதே அரசியல் பிராந்திய நோக்கு.

மனச்சுத்தியோட அப்பிடியான ஒரு நிலையை... (இதுக்கு மேல நானே சுயதணிக்கை செய்து கொள்கிறன்)

ஆனா ஒண்டு அடிவிழேக்கை திரும்ப சிறிலங்கா போய் இந்தியாவிடம் ஐயோ போர் நிறுத்தம் செய்யுங்கோ எண்டு கேட்டாலும் இந்தியா திரிசங்க நிலையில நிக்கோணும் எண்டதுக்குதான் இந்த நகர்வுகள் எண்டதைமட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

திமுக மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திரும்ப பெற போவதாக அறிவித்தாலே போதுமானது.இப்போதைய நிலமையில் கலைஞர் ஆட்சியில் இருப்பதே நல்லது.அதிமுக கலைஞரை பதவி விலகச் சொல்வது ஈழத்தமிழர் மேல் கொண்ட பாசத்தினால் அல்ல.அது கபட நோக்கம் கொண்டது.கடந்த மாவீரர் நாள் உரையின் போது உலகத் தமிழரை கிளர்ந்தெழுமாறு தலைவர் கேட்டுக் கொண்டது முக்கியமாகத் தமிழக்தை நோக்கித்தான். தமிழகம் இப்பொழுது என்றுமில்லாதவாறு எழுச்சி கொண்டுள்ளது. இந்த எழுச்சியைச் தக்க வைக்கக் கூடிய அரசியல் அதிகாரமும் ஆளுமையும் (சில நெகிழ்வுகளும் அரசியல் மிரட்டல்களும் விட்டு )உள்ள ஒரே தலைவர் கலைஞர் ஒருவர் தான். பல முறை நம்பி ஏமாந்தாலும் ஜெயலிதாவை விட எவ்வளவோ மேலானவர் கலைஞரை ஆதரிப்பவர்களில் பலர் தமிழ்த்தேசியத்தைத் தீவிரமாக ஆதரிப்பவர்களாவார்கள். ஆகவே அவசரப்பட்டு நம்பிக்கையீனத்தை வெளியிடுவதை தவிர்பதே நல்லது.எல்லாம் நல்லதுக்கே என்று எண்ணுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு போர் நிறுத்தம் வேணும் எண்டு எழுதுறவையெல்லாம் 2004 இல தலைவர் எப்ப சண்டையை தொடங்குவார் எண்டு எதிர்பார்த்தவைதானே :rolleyes:

இந்த போர்நிறுத்த கதையெண்டது அரசியல். புலிகளுக்கும் அதே அரசியல் பிராந்திய நோக்கு.

மனச்சுத்தியோட அப்பிடியான ஒரு நிலையை... (இதுக்கு மேல நானே சுயதணிக்கை செய்து கொள்கிறன்)

ஆனா ஒண்டு அடிவிழேக்கை திரும்ப சிறிலங்கா போய் இந்தியாவிடம் ஐயோ போர் நிறுத்தம் செய்யுங்கோ எண்டு கேட்டாலும் இந்தியா திரிசங்க நிலையில நிக்கோணும் எண்டதுக்குதான் இந்த நகர்வுகள் எண்டதைமட்டும்

அடிவிழேக்கை திரும்ப சிறிலங்கா போய் இந்தியாவிடம் ஐயோ போர் நிறுத்தம் செய்யுங்கோ எண்டு கேட்டாலும் இந்தியா வருவதை தமிழ்நாடு அனுமதிக்கக்கூடாது என்றும் சொல்லலாம்

அனமதிக்காது என்றே நினைக்கிறேன்

இன்னும் ஆறுமாதமே இருக்கும் மத்திய அமைச்சு பதவியை விட்டு விலகிறதுக்கு கலைஞருக்கு தயக்கம் இருக்காது...

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே , தயவு செய்து கலைஞரை சந்தேகிக்காதீர்கள் .அவரின் பதவியில் நீங்கள் ஒரு நாள் இருந்து பார்த்தீர்களானால் தெரியும் அதன் பொறுப்பு என்ன ,

எவ்வளவு ஆட்கள் குழி பறிக்க முன் நிற்பார்கள் என்று . ஏன் செயலலிதா , தமிழ்நாட்டில் மழை பெய்தாலும் , பெய்யாவிட்டாலும் ,

தன்னுடைய வீட்டு மாடு கண்டு போட்டாலும் , போடாவிட்டாலும் , கலைஞர் கருணாநிதியை பதவி விலகு என்று ஒப்பாரி வைக்கிறார் .

கலைஞர் கருணாநிதி நிச்சயம் தன் வாழ் நாளில் ஈழத்தமிழருக்கு நல்ல முடிவை ஏற்படுத்தி தருவார் .

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே , தயவு செய்து கலைஞரை சந்தேகிக்காதீர்கள் .அவரின் பதவியில் நீங்கள் ஒரு நாள் இருந்து பார்த்தீர்களானால் தெரியும் அதன் பொறுப்பு என்ன ,

எவ்வளவு ஆட்கள் குழி பறிக்க முன் நிற்பார்கள் என்று . ஏன் செயலலிதா , தமிழ்நாட்டில் மழை பெய்தாலும் , பெய்யாவிட்டாலும் ,

தன்னுடைய வீட்டு மாடு கண்டு போட்டாலும் , போடாவிட்டாலும் , கலைஞர் கருணாநிதியை பதவி விலகு என்று ஒப்பாரி வைக்கிறார் .

கலைஞர் கருணாநிதி நிச்சயம் தன் வாழ் நாளில் ஈழத்தமிழருக்கு நல்ல முடிவை ஏற்படுத்தி தருவார் .

நம்பிக்கை தான் வாழ்க்கை என்ன சிறி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தான் வாழ்க்கை என்ன சிறி அண்ணா

இந்த குட்டிப்பையனுக்கே தெரிவது ,

பெரிய பையன்களுக்கு ஏன் தெரிவதில்லை ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.