Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முனியாண்டி (வயசு வந்தவர்களுக்கு மட்டும்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முனியாண்டிய பாக்கபோய் காது கிளிஞ்சு போச்சுது . :)

ஆனால் , நல்லா இருக்குது , நீங்களுமா .................. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கூடுதலாக அப்பிடி இருக்குது.

  • தொடங்கியவர்

இல்லை தமிழ்சிறீ.. இது இணைச்சதிண்ட இன்னொரு நோக்கம் இஞ்ச இருந்து வாய்வீரம் பேசுற ஆக்களிண்ட இதயத்துடிப்பை பரிசோதிக்கத்தான். அந்தந்த நிலமைகளில இருக்கேக்கதான் ஒவ்வொரு விசயமும் எவ்வளவு திகிலானது எண்டு விளங்கும். இப்பிடி திகிலான இன்னும் பல காணொளிகள் இருக்கிது. நான் இணைக்கவில்ல. இது சும்மா ஒரு சாம்பிள்.

நீங்கள் X-Files எண்டு ஒண்டு ஒரு தொடர் இருக்கிது பாத்து இருக்கிறீங்களோ? இரவில வீட்டில தனியா இருந்து அதைப்பார்த்தால் சொல்லி வேலை இல்லை. அந்தமாதிரி இருக்கும். நான் அது பார்க்கேக்க என்ன செய்யுறது எண்டால் கொஞ்சம் திகிலாக சம்பவங்கள் வரத்துவங்கினோன volume ஐ mute இல போட்டுவிடுறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்த தொடரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை முரளி .

ஏலுமென்றால் இணைத்துவிடுங்கள் . அப்பிடியென்ன திகிலோ ........ ஒரு கை பார்த்து விடுவோம் . :icon_mrgreen:

  • தொடங்கியவர்

ஏன் தமிழ்சிறி இரவில நிம்மதியா நித்தாகொள்ள விருப்பம் இல்லையோ? இப்படியான திகிலான சம்பவங்களை பார்த்து மாரடைப்பு வந்து மரணம் அடைஞ்ச ஆக்கள், மற்றது மூளை குழம்பி நிரந்தரமாக உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்டு எனக்கு தெரிஞ்சே நிறைய சம்பவங்கள் இருக்கிது. பயப்படுற ஆள் எண்டால் இல்லாட்டிக்கு உங்கள் ஆருக்கும் ஏற்கனவே மனத்தில இப்படி சம்பவங்கள் பற்றி பயம் இருந்தால் கீழ இருக்கிற இரண்டாவது காணொளியை பார்க்காமல் தவிர்க்கிறது நல்லது.

முதலில இந்த சாம்பிள ஒருக்கால் பாருங்கோ:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி பயந்து போனன் கடவுளே சரியா உங்கள மாதிரித்தான் இருந்தது

இன்டைக்கு படுத்தமாதிரித்தான் உங்களுக்கு இனைக்க வேற விடயம் ஒண்டும் கிடைக்கேலையோ :unsure:

Edited by puspaviji

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெளிநாட்டுக்கு வந்த புதுசில யுனியால ஒரு பங்களோ கவுஸில இடம் தந்தார்கள். நானும் போய் தங்கினன். அங்கு ஒரு ஈரானியன் பொடியனும் இருந்தான். சில நாட்களில் அவன் வேறு இடம் கேட்டுப் போய்விட்டான். வசதியான இடம் ஏன் இவங்கள் போறாங்கள் என்று தெரியாமல் நான் மட்டும் தங்கினன்.

இரண்டு நாள் போயிருக்கும் மூன்றாம் நாள் இரவு தூக்கத்தில் பயங்கரக் கனவு. ஏதோ சத்தம் கேட்பது போல கனவில் வர பயத்தால் முழித்துக் கொண்டன். முழித்ததுதான் அதிசயம்.. நிஜத்திலும் நான் இருந்த அறையின் கூரை மீதிருந்து அப்படி ஒரு சத்தம் கேட்டது.

நான் எப்பவும் படுக்கும் போது சிறிய மின் விளக்கை (6V) போட்டுவிட்டுத்தான் படுப்பேன். ஆனால் அப்போது அந்த மின் விளக்கு நின்று போய் இருந்தது. அது பவர் கென்வேட்டர் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. இருந்தும் வேலை செய்யவில்லை. (ஆனால் விடிந்து சரியா இருக்கா என்று பார்த்த போது மின்விளக்கு எரியுது. ஒரு பிரச்சனையும் இருக்கல்ல..!)

உடனடியாக தலையடியில் இருந்த ரிமூட் மூலம் ரிவியை ஓன் செய்து வெளிச்சத்தை வரவைத்தேன். அப்போ கூரை மீது ஏதோ பாய் பாய்ந்து ஓடுவது போல சத்தம் கேட்டது. பின்னர் எழுந்து அறை லைட்டை போட்டிட்டு.. இரண்டு தெருவிற்கு அப்பால் இருந்த நண்பனின் கொஸ்டலுக்கு போன் செய்தேன். அறையில் இருந்த போன் வேலை செய்யவில்லை. பின்னர் மொபைல் மூலம் தொடர்பு கொண்டேன். அந்த ராத்திரியில் அவர்கள் நிறைந்த தூக்கத்தில் இருப்பாங்க என்று நினைக்க போனும் இரண்டு தடவை ரிங் பண்ணிட்டு தானாகவே கட்டாகிட்டுது. (ஆனால் விடிய எழுந்து போன் செய்த போது வீட்டு போன் வேலை செய்தது.)

எனக்கு ரெம்ப பயமாப் போச்சுது. அறையை விட்டு வெளியே வந்து பயந்து பயந்து வீட்டில் இருந்த எல்லா லைட்டையும் போட்டிட்டு.. கணணியை ஓன் செய்து கொஞ்ச நேரம் இணையத்தில் உலாவி பயத்தை போக்கிட்டு படுத்திட்டன்.

விடிய எழும்பி எனது அறையின் பின் புறம் போய் பார்த்தேன். சில எலும்புத் துண்டுகளும் பறவை ஒன்றின் பாதி துண்டிக்கப்பட்ட தலையும் கிடந்துது. அப்புறம் தான் நினைச்சன் நரி வந்துதான் இப்படிச் செய்திருக்கும் என்று.

ஆனால் பின்னர் அந்த ஈரானிய மாணவனை சந்தித்த போது தான் அங்கு 3 மாதங்கள் தங்கியதாகவும் இப்படி தனக்கும் பல தடவைகள் நடந்தது என்றும்.. ஒரு பெண் கூச்சலிடுவது போல சத்தம் வருவதாகவும் சொன்னான். தானும் தனிய இருக்கும் போது அடிக்கடி அப்படிச் சத்தம் கேட்டது என்றும்.. தான் குர்ரானை ஓதிட்டு படுத்துவிடுவதாகவும் சொன்னான்.

ஒரு வாரத்தால் நான் அந்த பங்களோ கவுஸில் இருந்து வெளியேறி வேறிடம் கேட்டுப் போய்விட்டேன்.

தனிய பெரிய பங்களோ கவுஸில் இருப்பது என்பது எவ்வளவு பயங்கரமானது திகிலானது என்றதை இப்ப நினைக்க.. திக்கிடுது. ஆனால் இருந்தேன்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஓமோம். பெரிய ஆளில்லாத இடங்களில தனிய இருக்கிறது எண்டால் திலிலான அனுபவம்தான். பேய் என்ன இழவோ இருக்கிதோ இல்லையோ... யாராவது கள்ளன் இல்லாட்டிக்கு யாராவது வந்து கொலை செய்தாலும் தெரியாது. இப்பிடி பயம் காரணமாகத்தான் ஊரில இரவில செக்கியூரிட்டி வேலை செய்யுற ஆக்கள் நல்லா தண்ணியை போடுறது. மப்பிலதான் தனிய இரவில திரிவீனம்.

நான் அப்ப கொக்குவிலில மெடிக்கல் பக்கல்டிக்கு முன்னால இருந்த காலம். அப்ப என்ன எண்டால் நான் விடிய மிக நேரத்தில விடி காலை மூண்டு நாலு மணிக்கு எழும்பி முகம் கழுவி, வீட்டை சுத்தி சின்ன நடை நடந்து (அது பெரிய வீடு) காத்து வாங்கிப்போட்டு பிறகு தியானம் செய்யுறது. அப்ப என்ன எண்டால்...

அண்டைக்கு சரியான குளிரும், கொஞ்சம் மழைக்குணமும்... அப்ப என்ன எண்டால் நான் எழும்பி வெளிமுற்றத்தில வந்து நிண்டன் கொஞ்ச நேரம்... திடீரெண்டு அங்காளப்பக்கம் கிணத்தடிப்பக்கமா இருக்கிற படலை திறக்கப்பட்டிச்சிது. ஒரு கணப்பொழுது இருக்கும் திடீரெண்டு ஒரு உருவம் மிக வேகமாக படலைக்கால வெளியில வந்து அப்பிடியே சைட்டால வேகமாக மூவ் பண்ணி பிறகு அங்கால பூமரங்கள் இருக்கிற சின்ன பொட்டல் வழி ஒண்டுக்கால மறைஞ்சிது. நான் அதைப்பார்க்கேக்க ஆட இல்லை. அசைய இல்லை. அப்பிடியே வச்ச கண்ணை அப்பிடியே அந்த உருவம் போன வழியில குவிச்சு இருந்தன். ஒரு திகிலான உணர்வு உடம்பில தலையில தோன்றி அப்பிடியே உடம்பு முழுதும் பரவிப்போச்சிது.

நான் பிறகு நல்லா சுயநினைவோட யோசிச்சு பார்த்ததில நான் இப்பவும் சந்தேகிக்கிறது என்ன எண்டால் ஒண்டில் அந்த உருவம் ஏதாவது எமக்கு தெரியாத எமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக இருக்கலாம். இல்லாட்டிக்கு அது களவெடுக்க வந்த கள்ளனாக இருக்கலாம். ஏன் எண்டால் அப்ப எங்கட பக்கம் இரவில ஒரே திருட்டு. ஆனாலும் கள்ளனாக இருந்தாலும் அவ்வளவு வேகமாக படலைய திறந்துபோட்டு பிறகு என்னைக்கண்டு போட்டு மறைய ஏலுமோ எண்டு என்னால இப்பவும் நம்ப ஏலாமல் இருக்கிது.

எண்ட நண்பன் ஒரு டாக்குத்தர். அவனிண்ட அப்பா, மற்றது அண்ணாவும் வைத்தியர்கள். அவனும் நானும் பள்ளிக்கூடம் முடிய ஒண்டா வந்து அவன் தண்டவீட்டபோக நான் அப்பிடியே எண்ட வீட்ட வாறது. அவன் சொன்னான் தமையன் காரன் அப்ப மெடிக்கல் பக்கல்டியில படிக்கேக்க உண்மையான மனித எழும்புகள், மண்டை ஓடு இதுகளை ஒரு பெரிய பெட்டி ஒண்டுக்க வச்சு பூட்டி பிறகு அத வெளியில எடுத்து வச்சு புத்தகத்தையும் வாசிச்சி படிக்கிறது. அப்ப அவன் சொன்னான். இரவில பெட்டியுக்க கடார், புடார் எண்டு சத்தம் கேட்கிமாம் இரவில... தனக்கு பயமாய் இருக்குமாம். தான் அண்ணையிட்ட இதுபற்றி சொன்னன். அவர் ஒண்டும் அக்கறைப்பட இல்லை. எண்டு சொன்னார். அவனிண்ட அண்ணா தலையக்குனிஞ்சு கொண்டு மப்பில இருக்கிறவன் மாதிரி ஒரு வன்வேயிலதான் திரிவார். அதால அவருக்கு இப்பிடியான விசயங்கள் ஒரு பொருட்டு இல்லப்போல.

  • கருத்துக்கள உறவுகள்

என்னா முரளி இப்ப கொஞ்ச நாளா வயசுக்கு வந்தவர்களுடன் மட்டும் தான் பேசுறீங்கோ?

என்ன தான் நடந்தது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணல் அவர்கள் வயதுக்கு வந்துவிட்டார்கள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

என்னா முரளி இப்ப கொஞ்ச நாளா வயசுக்கு வந்தவர்களுடன் மட்டும் தான் பேசுறீங்கோ?

என்ன தான் நடந்தது?

எல்லாம் ஒரு தற்பாதுகாப்புத்தான் ஈழப்பிரியன் அண்ணா. இஞ்ச பால்குடிகள் எல்லாம் வாயில சூப்பியோட வலம் வருகிறீனமாம். இதுக்க வந்துதானாம் தமிழ்படிக்கிறீனம். அதான் ஒரு சின்ன எச்சரிக்கை. இல்லாட்டிக்கு தங்கட குழந்தைச் செல்வங்களை நாங்கள் கெடுக்கிறமாம் எண்டு கெட்ட பெயர் அல்லோ வாங்க வேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டினால் இந்தப்பிரச்சனைகள் ஒரு தூசு :)

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டினால் இந்தப்பிரச்சனைகள் ஒரு தூசு :)

உங்கள் வீட்டில அண்ணிய தினமும் பேயாட்டம் போட வைக்கிறியள் போல..! விரக்தியில சொல்லுறாப் போல தெரியுது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டினால் இந்தப்பிரச்சனைகள் ஒரு தூசு

பலருக்கு கல்யாணத்துக்குப் பிறகுதான் பேயே புடிச்சிருக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீட்டில அண்ணிய தினமும் பேயாட்டம் போட வைக்கிறியள் போல..! விரக்தியில சொல்லுறாப் போல தெரியுது..! :wub:

அது இல்லை.பெண் என்றால் பேயும் இரங்குமாம்.அப்ப பெண்களுடன் இருப்பவர்களுக்கும் பாதுகாப்புதானே :blink: (ஒரு மாதிரி சமாளிச்சாச்சு)

Edited by sagevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியானம் கட்டினால் இந்தப்பிரச்சனைகள் ஒரு தூசு :wub:

மனுசன் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு திரியுறான் இந்தமனுசன் இப்பவம் தத்துவம் கதைச்சுக்கொண்டு திரியுது :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.