Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் ஐயா!

உந்த அமாவாசை பறுவத்துக்கு மட்டும் வந்து குலைக்கிறவையாலைதான் பிரச்சனை வருது போலை கிடக்கு :lol: இல்லாட்டி பாவிக்க வேண்டிய குளிசையளை நேரகாலத்துக்கு எடுக்காதவையும் இஞ்சைவந்து கிறுக்கிறதாலையும் பிரச்சனை வருது போலைகிடக்கு :lol:

என்ன கோதாரியோ எனக்கும் பின் வரிசையிலை நிண்டு குலைச்சு குலைச்சு பழகிப்போச்சு :lol: என்ரை வாயும் சும்மா கிடக்காது பழஞ்சீலை கிழிஞ்சமாதிரி எப்ப பாத்தாலும் புறுபுறுத்துக்கொண்டு :(

நீங்க முன்வரிசைக்கு வாங்கோ

  • Replies 163
  • Views 23.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தா மாதிரி இருக்கே.......................

திரு மோகன் அவர்களே........

உங்களின் இந்த முடிவை சற்று நேரத்துக்கு முன் தான் பார்த்தேன். வேதனையாகவும் அதே நேரம் அதிர்ச்சியாகவும் இருந்தது. உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தினமும் வந்து ஒரே இடத்தில் அனைத்து கடந்த, சமகால செய்திகளையும் தெரிந்துகொள்ளும் இடம் தான் யாழ் இணையம். புலம் பெயர் நாடுகளில் சிறீ லங்காவின் குற்றச்சாட்டுக்களால் சில தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் நிறுத்தப்பட்டன. இதனை நீங்களும் அறிவீர்கள். இன்று தமிழர்களை ஒருங்கிணைக்கும் இடமாக திகழும் யாழ் இணையம் நிறுத்தப்பட்டால் அது எமது விடிவுக்கான எதிகால முன்னெடுப்புகளுக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும்.

எமது தாயக அவலங்களை உலக தமிழனுக்கு எடுத்துச்சென்ற ஒரு ஊடகம் தனது செயற்பாட்டினை நிறுத்தினால் எதிர்காலத்தில் சிங்களவர்களின் பரப்புரைகள் மேலோங்கிவிடும். நிச்சயமாக இந்த இணையம் உங்களுக்கு அதிக பாரமாக இருக்கும் இது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் தாயக விடிவுக்கு உங்களின் பணி இன்றி அமையாத ஒன்று. இதனால் தயவு செய்து நிறுத்திவிடாதீர்கள் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

அலட்டல்களுக்கு கருத்துக்களம் ஏற்ற இடம் இல்லை. தயவு செய்து கருத்துக்களத்தில் தலைப்போடு தொடருங்கள். மட்டுறுத்தினருக்கு தலையிடிகளை கொடுக்காதீர்கள். இதனை பயன்படுத்திகொண்டு துரோகிகளும், தமிழின எதிரிகளும் இணையத்தை நிறுத்த முயல்வர். தயவு செய்து நாம் அவர்களுக்கு இடமளிக்க கூடாது.

என்னால் முடிந்தவரை எதிர்காலத்தில் கண்ணியமாக செயற்பட விரும்புகின்றேன்.

உங்கள் முடிவை எமது தாயகத்தில் அல்லலுறும் தாயக உறவுகளையும், ஏதிலிகளாக உலகமெங்கும் அலையும் எம் போன்றவர்களையும் நினைத்து மீள் பரிசீலணை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தின் வேகம் கொஞ்சம் குறைந்தா மாதிரி இருக்கே.......................

பற்ரி (Battery) இறங்கீட்டுதாம் :lol:

இங்கு களத்திலும், தனிமடல், மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் messenger மூலம் கருத்துப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

கருத்துக்களத்தில் நான் செலவு செய்யும் நேரம் மிக அதிகம் அத்துடன் பணம். இவ்வளவு நேரம், பணம் செலவு செய்து எந்தளவுக்கு பயன் எனப் பார்த்தால் அதன் அளவு மிகவும் குறைவு. ஒரு குறிப்பிட்ட அளவு பயனான கருத்துக்களைத் தவிர அதிகமாக தூரநோக்கற்றதும், அரட்டையானதுமான கருத்துக்கள், அவைகளை மட்டுறுத்த வேண்டிய தேவைகள் போன்ற சூழலினாலேயே களத்தினை தொடர்ந்து நடாத்துவதா, விடுவதா என்ற ஒரு மனப் போரட்டம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நேற்று "யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா?" என தெரிவித்திருந்தேன். எனினும் அனைவரினதும் வேண்டுகேளுக்கிணங்க நிச்சயம் சில மாற்றங்களுடன் களம் தொடர்ந்து இயங்கும்.

கருத்துக்களத்தில் உடனடியாக இல்லாதுவிடினும் படிப்படியாக நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு வழி செய்யப்படும். அம் மாற்றங்களை ஏற்படுத்தவும் சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. அதற்கு உங்கள் ஆலோசனைகளை தாராளமாக இங்கோ, அல்லது தனிமடல் மூலமாகவே அறியத் தாருங்கள்.

இங்கு களத்தில் யாரையும் கருத்துக்கள் எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு விடயம் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள், கருத்துக்கள் இருக்கும். கருத்துக்களை எழுதுங்கள். அவற்றை ஆரோக்கியமாக, எழுத்து நாகரீகத்திற்கு உட்பட்டு எழுதுங்கள். நிச்சயமாக அவை வரவேற்கப்படும்.

உங்கள் ஒத்துழைப்புத்தான் சரியான முறையில் களத்தினைக் கொண்டு நடாத்த உதவும். ஒருவர் தவறாகக் கருத்தெழுதினால் அதை நிர்வாகத்திற்கு சுட்டிக் காட்டுங்கள். முன்னர் குறிப்பிட்டது போல தொடர்ச்சியாக களத்தில் மட்டுறுத்துனர் யாரும் இருப்பதில்லை. அதனால் தவறான கருத்து நீக்கப்படுவதற்கு காலதாமதமாகலாம். அதற்கான சந்தர்ப்பத்தினையும் நிர்வாகத்திற்கு வழங்குங்கள்.

அடடா பதிவுகளை முழுமையாக பாருங்க.. யாழ்களம் தொடர்ந்து நூறாண்டு காணும். :lol:

கறுப்பி அக்கா சொன்னமாதிரி வேகம் இண்டைக்கு குறைவாகத்தான் இருக்கிது. நான் நினைச்சன் எனக்கு மாத்திரம்தான் இப்பிடியாக்கும் எண்டு.

Edited by முரளி

நான் களத்திற்கு அடிக்கடி வருபவன், ஆனால் கருத்துக்கள் எதனையும் பதிவு செய்வதில்லை. எனக்கும் மோகன் அண்ணாவின் திடீர் முடிவு கவலையாக இருந்தது....

நான் இணையத்தில் தமிழ் எழுதி அழித்து தவழ்ந்து விளையாடி ஓடி ஆடிய களம் மூடப்பட போகிறது என்ற கதையை இப்பத்தான் பார்த்தன் ...அது தொடர்ந்து இயங்கும் என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி..

(இப்ப தான் பார்த்தன் ...ஏன் இவ்வளவு நாளும் இது தெரியாமால் நீர் கோமாவிலையோ இருந்தனீர் என்று யாரும் ஏச வேண்டாம் :rolleyes: )

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணையத்தில் தமிழ் எழுதி அழித்து தவழ்ந்து விளையாடி ஓடி ஆடிய களம் மூடப்பட போகிறது என்ற கதையை இப்பத்தான் பார்த்தன் ...அது தொடர்ந்து இயங்கும் என்ற செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சி..

(இப்ப தான் பார்த்தன் ...ஏன் இவ்வளவு நாளும் இது தெரியாமால் நீர் கோமாவிலையோ இருந்தனீர் என்று யாரும் ஏச வேண்டாம் :rolleyes: )

ஆஆஆஆஆஆ..........சின்னக்குட்டி சார் வாயில் வருது உங்களை பேசனும் போல.............

தற்போதுதான் மோகனின் இச்செய்தி பார்த்தேன்! முதலில் முழு கருத்தையும் வாசிப்பதற்கு முன் சில .....

என் போன்றோருக்கு கணனியில் தமிழ் எழுதப்பழக்கியதே, யாழ்களம்தான்!! அதை மறவோம்!!!

மோகனின் பெருஞ்சுமைகளில், சிறிதாவது சுமக்க தயார், மோகன் விரும்பினால்!!

மோகன் அண்ணாவிற்கு நன்றி மீண்டும் இயங்கும் என்று வாக்களித்ததற்கு. என்னால் தவறு வராது என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் களத்தில் யாருக்கும் அறிவுரை சொல்ல தெரியாது எனவே மீண்டும் நன்றி மோகன் அண்ணா.

ஆஆஆஆஆஆ..........சின்னக்குட்டி சார் வாயில் வருது உங்களை பேசனும் போல.............

ஹி. ஹி .ஹி.....என்னங்க..நீங்க.... வாயில் வருது என்று கொ்ண்டு :( ..பொதுவாக வாயிலை வருது என்று ....பாவிப்பது? :rolleyes:

ஏதாவது கெட்ட வார்த்தையாலை திட்ட போ்றீங்களா? :D:(

Edited by sinnakuddy

யாழினால்............... எமது தேசிய நலனுக்கு நன்மை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. புலிக்கெதிரான விதண்டாவாதங்களை அனுமதிப்பதையும் இந்தியாவுக்கெதிரான கோபத்தை அழிப்பதும் ஏன் எண்டு புரியவில்லை(!). ஆனால் கணனியில் தமிழ் எழுதப்பழக்கியதே, யாழ்களம்தான்!! அதை மறவோம்!! :rolleyes:

Bye, Bye, Yarl.com.............................

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தான் இந்தச் செய்தியைப் பார்த்தேன். இறுதியில் நல்ல முடிவுக்கு மகிழ்ச்சி. நான் யாழ் களத்தின் பல வருட கால வாசகன். ஆனால் உறுப்பினராகி கொஞ்சக் காலம்தான் நான் பல பேருக்கு இந்தக் களத்தைப் பாரக்குமாறு தூண்டியிருக்கிறேன்.

கு.சா இரண்டு வரியில் பல நூறு கருத்து வர எழுதுபவர். நகச்சுவையாகவும் எழுதுபவர்.அவர் வர மாட்டேன் என்று குழந்தை மாதிரி கண்ணீர் மல்க எழுதியது கவலையைத் தந்தது. மீண்டும் வந்ததற்கு நன்றி.

I am very glad that Mohan has changed his mind.

As a long standing member I never miss to visit yarl.com a single day.

Though I can't write in tamil , Yarl.com is my home page for last few years.

Good job Mohan , Keep it up

-Thevaki Acca-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I am very glad that Mohan has changed his mind.

As a long standing member I never miss to visit yarl.com a single day.

Though I can't write in tamil , Yarl.com is my home page for last few years.

Good job Mohan , Keep it up

-Thevaki Acca-

உங்கட பெயர் தேவகியோ தமிழ் தெரியாதோ உங்களுக்கு இங்கிலீசு தெரியும் ஆனால் எனக்குத் தெரியாது ஒருக்காத் தமிழில பதியுங்கோவன்

பிழையென்டால் மன்னிக்கவும் சகோதரி(ரன்)

வேற ஒண்டும் இல்லை புஸ்பாவிஜி. இஞ்ச நீங்களும் மற்றும் பலரும் யாழில தினமும் எழுதுகின்ற கட்டுரைகளை, அரசியல் ஆய்வுகளை தான் மிகவும் இரசிச்சு படிப்பதாகவும், அவை தொடரவேண்டும் எண்டும், மேலும் அதற்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தேவகி அக்கா சொல்லி இருக்கிறா.

உங்கட பெயர் தேவகியோ தமிழ் தெரியாதோ உங்களுக்கு இங்கிலீசு தெரியும் ஆனால் எனக்குத் தெரியாது ஒருக்காத் தமிழில பதியுங்கோவன்

பிழையென்டால் மன்னிக்கவும் சகோதரி(ரன்)

I am sorry puspaviji,

I did not say I don't know tamil . I said I don't know how to type in Tamil

Thevaki Acca

I am sorry puspaviji,

I did not say I don't know tamil . I said I don't know how to type in Tamil

Thevaki Acca

களத்தில் நீண்ட கால உறுப்பினர், களத்தை தினமும் வாசிப்பதாக சொல்லும் நீங்கள், இதுவரை களத்தில் தமிழில் எவ்வாறு எழுதுவது என பலருக்கும் கொடுக்கப்பட்ட விளக்கங்களை காணாதது ஆச்சரியம். அல்லது உங்களின் ஆர்வமின்மை என்பதா? புலத்தில் தமிழ் படித்து தமிழில் கதை எழுதும் வல்லமையோடு சிலர் உருவாகும் வேளை, தமிழை எப்படி தட்டச்சுவது என்று தெரியாமலும் பலர் இருக்கிறார்கள் என்ற நிதர்சனத்தையும் ஏற்கத்தான் வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே சென்று http://sathesan.tripod.com/tamilkeyboard.html எந்த எந்த எழுத்துக்கு எந்தெந்த தமிழ் எழுத்து என்று தெரிந்து கொண்டு மெது மெதுவாக பழகுங்கள் பிழைவிட்டால் பரவாயில்லை முதலில் எல்லோரும் அப்படித்தான் போகப்போக பழகிவிடும் தமிழச்சியே தமிழ் தெரிவது அவசியம் மற்றதெல்லாம் நமக்குப் பின்னால் வந்தவை

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சென்று http://sathesan.tripod.com/tamilkeyboard.html எந்த எந்த எழுத்துக்கு எந்தெந்த தமிழ் எழுத்து என்று தெரிந்து கொண்டு மெது மெதுவாக பழகுங்கள் பிழைவிட்டால் பரவாயில்லை முதலில் எல்லோரும் அப்படித்தான் போகப்போக பழகிவிடும் தமிழச்சியே தமிழ் தெரிவது அவசியம் மற்றதெல்லாம் நமக்குப் பின்னால் வந்தவை

அது தானே தேவகி ....

இப்ப குட்டிப்பையனே பிச்சு வாங்குறான் .

முயற்சி திருவினையாக்கும் .

இதுக்கெல்லாம் யோசிக்கலாமா ? :lol:

மோகன் அவர்களே உங்கள் செய்தி தற்போதுதான் பார்த்தேன்...மிக கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது...

எந்த சூழ் நிலையிலும் யாழ்களத்தை நிறுத்தவேண்டாம்.. நீங்கள் ஒரு நல்ல நேக்கத்திற்காக பல வருடங்களாக உலகத்தமிழனத்தை ஒருங்கிணைத்து வைத்து சேவை செய்து வரும் யாழ்களம்.

அண்மைக்காலமாக சிலரின் அறியாமை, சுதந்திரத்தை இழக்கப்போகும்வரை அதனை தவறாகபயன்படுத்தும் மனப்பாண்மை, எதிரியின் சூழ்ச்சிக்கு துணைபோகும் திட்டமிட்ட குழப்பிகள்,தற்புகழ்ச்சிபிடி

தொடரனும் மோகன் அண்ணா.

உங்கள் இந்த முடிவு

யாழை உண்மையாக நேசிப்போரை இனம் கானவைத்தது.

தொடர்க உங்கள் பணிகள்..........

  • கருத்துக்கள உறவுகள்

யாழினால்............... எமது தேசிய நலனுக்கு நன்மை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. புலிக்கெதிரான விதண்டாவாதங்களை அனுமதிப்பதையும் இந்தியாவுக்கெதிரான கோபத்தை அழிப்பதும் ஏன் எண்டு புரியவில்லை(!). ஆனால் கணனியில் தமிழ் எழுதப்பழக்கியதேஇ யாழ்களம்தான்!! அதை மறவோம்!!

வெட்டி ஒட்டுவதாக நினைக்க வேண்டாம்

என்கருத்தும் இதுவே

ஆனால் பொறுத்தார் பூமியாழ்வார்

இப்போ உங்கள் சேவையின் மறுபக்கத்தை நாம் சோதிக்கும்வேளைஇது

ஏனெனில் முடிவு எடுத்தபின்பே அறிவிக்கப்பட்டுள்ளது

பொறுத்துப்பாருங்கள் என்பதே என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

யாழினால்............... எமது தேசிய நலனுக்கு நன்மை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. புலிக்கெதிரான விதண்டாவாதங்களை அனுமதிப்பதையும் இந்தியாவுக்கெதிரான கோபத்தை அழிப்பதும் ஏன் எண்டு புரியவில்லை(!). ஆனால் கணனியில் தமிழ் எழுதப்பழக்கியதே, யாழ்களம்தான்!! அதை மறவோம்!! :lol:

Bye, Bye, Yarl.com.............................

இது பனங்காய் , சொன்ன மாதிரி இருக்குது , குகதாசன் .

உண்மை தான் பனங்காய் கொஞ்சம் , பொறுத்திருக்கலாம் .

கவலைப்படாதீர்கள் அவர் மீண்டும் வருவார் ,

என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.