Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழமெங்கும் கடும் மழை. வெள்ளப் பெருக்கு - பலர் உயிர் இழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு , இந்த வருசம் சோதனையான ஆண்டு போல கிடக்குது ..........

  • கருத்துக்கள உறவுகள்

சோகத்தின் மேல் சோகம் :wub:

தமிழீழமக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும்போதுதான், இயற்கையும் அவர்களை வஞ்சிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பாவப்பட்ட ஜென்மங்களா? . கஸ்டத்தின் மேல் கஸ்டம். sorryug8.gif

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் பாவப்பட்ட ஜென்மங்களா? . கஸ்டத்தின் மேல் கஸ்டம். sorryug8.gif
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சலித்துக்கொண்டால் எப்படி??????

சரி

கNஐந்திரன் அவர்கள் இங்கு மாவீரர்நாளில் பேசும்போது கேட்டார்

10 ஆயிரம் பேர்வந்துள்ளீர்கள் சந்தோசம்

ஆனால் மிச்சம் 40 ஆயிரம் எங்கே

நீங்கள் பங்களிக்கின்றீர்கள்

அவர்களை எப்போ gங்களிக்க செய்யப்போகின்றீர்கள் என்று.....???

அதற்கு நாம் ஏதாவது செய்வோமா??????

முதலில் நான்நாளைக்கு 6மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளேன் சிலருடன் பே

நீங்கள்..........................??????????????

Edited by KUGATHASAN

தமிழர் தாயகத்தில் பெய்துவரும் அடை மழையினால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

புகைப்படங்கள்

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

வன்னியிலும் 6 பேரும், யாழ்ப்பாணத்தில் 5 பேரும் வெள்ளம், மற்றும் காற்று காரணமாக உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், ஏனைய இடங்களில் பல இலட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வெள்ளம், காற்றினால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றன.

வன்னியில் மூன்று இலட்சம் வரையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து பெய்யும் அடை மழையினால் மக்கள் சொல்லொன்னா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழீழ காவல்துறையினருடன் இணைந்து உதவிகளைப் புரிந்துவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தொண்டர் பரமேஸ்வரன் பிடித்துள்ள நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

விசுவமடு குளத்தின் அணைக்கட்டுக்கள் சிறீலங்கா வான் படையினரது தாக்குதலில் பலவீனமடைந்திருப்பதால், அவற்றின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

இதேபோன்ற நிலை உடையார்கட்டுக்குளம், கல்மடுக்குளமும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 32,022 குடும்பங்களைச் சேர்ந்த உரு இலட்சத்து 18 ஆயிரத்து 273 பேர் வெள்ளம், மழை காரணமாக இடம்பெயர்ந்துள்னர்.

இவற்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்தும், வீடுகள் இடிந்து வீழ்ந்தும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் குறைந்தது 10 பேரை தாயக விடுதலைக்கு பங்களிப்பதற்கு ஊக்குவியுங்கள்.அந்த 10 பேரும் மேலும் 10 பேரை....................................................................

.................................................................................

.............................................................................

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திலுள்ள எல்லோரும் தயாரா?

சிறுதுளி பெருவெள்ளம்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன யாரும் பதிலளிக்கவில்லை

அதுசரி பங்களிப்பென்றால் பணம் கொடுப்பதுதான் என்று யார் சொன்னது உங்களுக்கு????????

10 பேரில்

8 பேர் ஒரு கிழமையில் ஒருநாள் ஒரு மணத்தியாலம் மட்டும்

உங்கள் புகையிரதவாசலில் நின்று

துண்டு பிரசுரம் கொடுக்கலாமே............????

என்ன யாரும் பதிலளிக்கவில்லை

அதுசரி பங்களிப்பென்றால் பணம் கொடுப்பதுதான் என்று யார் சொன்னது உங்களுக்கு????????

என்னிடம் 200 புகைப்படங்கள் உள்ளன தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும்

isoory86@tamilskynews.com

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு கூடவா வரமாட்டார்கள் உங்கள் சினேகிதர்கள்

உறவினர்கள்????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையுமா?:wub: குழந்தைகள் எப்படி தாங்குவார்கள்..

இதே கேள்விதான் தூயா எனக்கும் எழுந்தது?!!!

'நிலப்பறிப்பை சிங்களம் செய்கிறது எதிர் கொள்வோம்!! எம் நிலை அறிந்தும் மழை பொழிந்தால்!!?!! என்ன பண்ணுவோம்?!! இயற்கையே உன்னை நம்பிய நம்கதியும் நிர்க்கதியா?!!!!!!!!!!!! தமிழன் எப்போதுமே அகதியா?!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்ககளுக்கு யாழ் நேசக்கரத்தின் ஊடாக ,

எனது சார்பாக 100 ஐரோ கொடுக்க முடிவு எடுத்துள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கொடுக்கின்றேன்

எங்கே ஒப்படைப்பது என்று சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீர்களா

எல்லாம் வாயோடு சரி

ஆனால் நான் சொன்னபடி கொடுப்பேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கொடுக்கின்றேன்

எங்கே ஒப்படைப்பது என்று சொல்லுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showforum=137

upp1.gif

இங்கே சென்றால் உங்கள் ஆதங்கத்திற்கு விடை கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.