Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என விமர்சித்த சரத் பொன்சேகா 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமதாஸ் எச்சரிக்கை

Featured Replies

தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

அப்பிடிப்போடு !!!

இது தமிழகத்து அரசியலுக்கு அழகு :blink:

இத்துடன் ஓய்ந்து விடாமல் தொடர்ந்து அடிக்கோணும், அப்பவாவது தவளை வாயை பொத்திக்கொள்ளுதா எண்டு பாப்பம் :wub:

Edited by யசி

அவரது இந்த நாக்கொழுப்பு தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால்,

சிறிலங்கா இதற்காக பகிரங்கமான மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும். எனவே, சரத் பொன்சேகா கோமாளித்தனமான தனது விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முப்படைகளின் தலைவர் என்ற முறையில் மகிந்த ராஜபக்சவும், பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் இங்குள்ள சிறிலங்கா தூதுவரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் .

இனி தான் தமிழ் நாட்டு தமிழர்களின் இன்னொரு பக்கதை சிங்களவர்கள் பார்க்க போகின்றார்கள்.

இலங்கையரசாங்கத்தினால் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இந்தச் செயற்பாடுகள் மத்திய அரசையும் மாநில அரசையும் தூண்டிவிட்டு குளிர்காயும் தந்திரம். நமக்கே இது புலப்படும் போது மாநில, மத்திய அரசுகளுக்குப் புரியாமலா போய்விடும். இருந்தாலும் சிறிலங்கா அரசு நன்றாகத்தான் விளையாடுகிறது இந்தியாவுடன்.

பொன்சேக மாத்தையா பொறுவட்ட கியன்ன நத்த, நேய்த?

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை:தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று விமர்சனம் செய்துள்ள இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழம் கொந்தளிக்கும் என இலங்கைக்கு மத்திய அரசு உடனடியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என கூறியிருப்பதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான இலங்கைப் படையினரின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியா எச்சரிக்கை விட வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.

பொன்சேகாவின் நாக்கொழுப்பு

இதனால், ஆத்திரமடைந்துள்ள சிங்களப் போர்ப்படை தளபதி சரத் பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக, அரசியல் கோமாளிகள் எனத் தரம் தாழ்ந்து துடுக்குத்தனமாக விமர்சனம் செய்து தனது சிங்கள இனவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இந்த நாக்கொழுப்பு தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.

இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம். அதில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள்தான் என்றும், சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழ்வதற்கு தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொக்கரித்தவர் இவர்.

இப்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதன் மூலம் தனது சிங்கள இனவெறியை மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியிருக்கிறார் சிங்களப் போர்ப்படை தளபதி.

இலங்கையைப் பொறுத்த வரையில் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்தாலும், போர்ப்படை தளபதியான சரத் பொன்சேகா தான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போன்று பேசியும், செயற்பட்டும் வருகின்றார்.

எனவே, அவர் பேசியிருப்பதைத் தனிப்பட்ட ஒருவரின் விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இலங்கையின் குரலாகவே, சிங்கள அரசின் குரலாகவே அவரது விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, சரத் பொன்சேகா கோமாளித்தனமான தனது விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

முப்படைகளின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சவும், பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதனை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகம் கொந்தளிக்கும்

இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால், இங்குள்ள இலங்கைத் தூதரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.

சிங்களப் படைத் தலைவரின் இந்த காட்டுமிராண்டித்தன விமர்சனத்தை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரின் கவனத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இலங்கை பகிரங்கமான மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் எனத் டெல்லிக்கு எடுத்துக் கூற வேண்டும்.

அத்துடன் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இன்னும் காலம் தாழ்த்தாமல் 48 மணி நேரத்திற்கு உள்ளாக கொழும்புக்கு அனுப்பி நேரிலும் எச்சரிக்கைவிடச் செய்வதுடன், அங்கு தமிழினப் படுகொலைக்குக் காரணமான சண்டை நிறுத்தப்படுவதன் மூலம் தமிழர்களின் தன்மானத்திற்கு இலங்கை போர்ப்படைத் தளபதியால் விடப்பட்டுள்ள அறைகூவலுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

அது ஒன்றுதான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் எனத் டெல்லிக்கு எடுத்து கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்

ஒரு சிங்கள இனவாதிக்கும் தமிழன் எப்பொதுமே அற்பமானவர்கள்தான்.... இதிலை கோமாளி எண்று அவன் தமிழனை வர்ணிப்பது ஆச்சரியம் இல்லை...

தமிழக தலைவர்களையே கோமாளி எண்று வர்ணிப்பவன், ஈழத்து தமிழர்களை எப்படி அற்பமாக நினைப்பான் என்பதுக்கு இது நல்ல உதாரணம்...

நான் இப்படி எழுதுவதாக கோபிக்காதீர்கள்... தமிழகம் கொந்தளிக்கும்...அந்த கோபத்தை..புரட்சித்தீயை... சரத்பொன்சார எதிர்ப்பு போராட்டநிதி சேகரிப்பு என்று ஒன்று ஆரம்பித்தே அணைத்துவிடுவார்கள்...ஈழத்தமி

ஒருவேளை இந்திய மத்திய அரசுதான் சரத்துக்கு உந்தக்கதை சொனதோவுந்தெரியாது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்து இங்கே நீக்கப்படுள்ளது.

அனால் thatstamil பதில் பகுதியில் எனது கருத்தை ஒத்த 90% வீதமான கருத்துக்கள் பதியப்பட்டுள்ள்ளன. நானும் எனது கருத்தை அங்கே பதிந்துள்ளேன்.

Thatstamil Reply Link

யாழ் களம் அவசியமில்லாமல் தணிக்கை செய்கிறது. இது ஆரோக்கியமான நிலை இல்லை.

கள்ளச்சாமி

Edited by samiyar

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கால அவகாசம் விதித்து எல்லாமே பிசு பிசுத்துப்போன நிலையில், இன்னொரு கால அவகாசத்தை விதிப்பது என்னத்தைக் கொண்டுவரப் போகிறது? தமிழகத் தலைவர்களை அவர்களின் மத்திய அரசே கிள்ளுக்கீரைகளாகப் பார்க்கும்போது சிங்களத்தின் தளபதி(இவர்களின் போராட்டங்களும் எதிர்ப்புக்களும் தம்மை எதுவுமே செய்து விடாது என்று இந்திய மத்திய அரசினால் உத்தரவாதமளிக்கப்பட்ட நிலையில்) இவர்களை அரசியல்க் கோமாளிகளாகப் பார்ப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இந்த நிலைக்குக் காரணம் அவர்களின் மத்திய அரசேயன்றி வேறு எவருமில்லை. கலைஞர் அவர்களின் 2 வார கால அவகாசத்துக்குப் பிறகும் கூட, "இலங்கைக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்வோம், இது எமது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது" என்று மத்திய அரசின் அமைச்சரே பகிரங்கமாக அறிக்கை விட்டபோது தமிழகத் தலைவர்களால் என்ன செய்ய முடிந்தது ? ஒன்றுமில்லையல்லவா ? ஆத்திரப்பட்டு அறிக்கை விடுவதோடு வேறு எதுவுமே அவர்களால் இப்போதைக்குச் செய்ய முடியாது.

தமிழகத் தலைவர்களை அரசியல் கோமாளிகளாக முதன் முதலாக வெளியில் அடையாளப்படுத்தியது இந்திய மத்திய அரசுதான். இப்போது நடந்தது ரெண்டாவது முறை.

உண்மையில், இவர்கள் ஆத்திரப்பட வேண்டியது மத்திய அரசின் மீதுதான். ஏனென்றால் அதுதான் சிங்களத்தைச் செல்லப்பிள்ளையாகவும், தமிழகத்தை வேண்டாதவர்களாகவும், தேர்தல்க் கால உறவுகளாகவும் வைத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இனி தான் தமிழ் நாட்டு தமிழர்களின் இன்னொரு பக்கதை சிங்களவர்கள் பார்க்க போகின்றார்கள்.

இலங்கையரசாங்கத்தினால் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இந்தச் செயற்பாடுகள் மத்திய அரசையும் மாநில அரசையும் தூண்டிவிட்டு குளிர்காயும் தந்திரம். நமக்கே இது புலப்படும் போது மாநில, மத்திய அரசுகளுக்குப் புரியாமலா போய்விடும். இருந்தாலும் சிறிலங்கா அரசு நன்றாகத்தான் விளையாடுகிறது இந்தியாவுடன்.

எங்கள் கவலையெல்லாம் பொன்சேகா மன்னிப்புக்கேட்டவுடன்

இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கான எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்து

எமை கைவிடாது இருக்கவேண்டும் தமிழகம்

மரியாதை அணிவகுப்பில் நாட்டின் உயர் தலைவரை (பிரதமமந்திரியை) துவக்கு பிடியாலை அடிச்சதை மயங்கி விழுந்தது என்று சமாளித்த சிங்கள இராசதந்திரத்துக்கு இது (மாநில அரசியல்வாதிகளை கோமாளிகள் என்றதை சமாளிப்பது) ஒன்றும் பெரிய சவால் இல்லை.

பார்க்கப் போனால் பிராந்தியத்தில் சிங்களம் தான் யூதர்கள் போல் இயங்குகிறார்கள்.

பார்க்கப் போனால் பிராந்தியத்தில் சிங்களம் தான் யூதர்கள் போல் இயங்குகிறார்கள்.

நாங்கள் விரும்பாவிட்டாலும் நடக்கிறதை வைச்சு பாக்கும் பொளுது இது ஒரளவுக்கு உண்மைதான்....

நாங்கள் எங்கட மனச்சாந்திக்கு வேணுமெண்டா மோட்டுசிங்களவனெண்டு சொல்லுவம்.

ஆனா இந்தப்பிராந்தியத்தில அவங்கள் தான் எல்லாருக்கு அல்வா குடுக்கிறாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.