Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்க பூசணிக்காய் சமைச்சிருக்கேன்

Featured Replies

சில வருடங்களாக நண்பர்கள்/உறவுகளாகிவிட்டோமே எப்போதும் தொந்தரவு குடுப்பது நியாயம் இல்லை என நினைத்து சில வாரங்களாக செய்முறைகள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனால் விதி வலியது என்பது எனக்கு சில நாட்களாக புரிகின்றது. காரணம் தொடர்ந்து என்னை சமையல் செய்முறைகளை எழுத சொல்லி வரும் கருத்துக்களும், மின்னஞ்சல்களுமே. இனிமேல் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என சொல்லியபடியே மறுபடி சமையல்கட்டிற்குள் போகின்றேன்.

புதிதாக சமையல்கட்டிற்குள் நுழைந்திருக்கும் அன்பு அண்ணன் ஜோசப் பால்ராஜுக்காக [யாழ் கள சகோதரர்]ஒரு செய்முறை. [இந்த வாய்ப்பை விட்டால் ஜோண்ணா சமைக்க ஆரம்பித்திருப்பதை எப்படி தான் உலகிற்கு சொல்வது! கிகிகி] இச்செய்முறை விரைவில் செய்யக்கூடியது மட்டுமில்லாது உடலிற்கும் சத்துள்ள ஒரு உணவு.

Thooyas%20Kitchen%20Pumpkincurry.jpg

250கிராம் பூசணிக்காய்

1 பெரிய வெங்காயம்

3 பச்சை மிளகாய்

1 கெட்டு கறிவேப்பிலை

1/2தே.க கடுகு

1/2தே.க பெரிய சீரகம்

தேவையான அளவு உப்பு சேர்த்துக்குங்கன்னு அடிக்கடி சொல்ல முடியாது. புரியுதா?! கிகிகிகி

1. பூசணிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி,சுத்தம் செய்து, நீரில் கழுவி எடுங்கள்.

2. சிறிதளவு நீரில் உப்பு போட்டு பூசணிக்காயை அவித்தெடுங்கள். ரொம்ப அவிக்க வேண்டாம். இதை மைக்ரோஅவனில் வைத்து கூட எடுக்கலாம். அது உங்க இஸ்டம்.

3. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் அதில் கடுகு, சீரகம், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை முறையே போட்டு தாளியுங்கள்.

4. தாளித்து முடிந்ததும், அதில் ஏற்கனவே அவித்து வைத்துள்ள பூசணிக்காயை போட்டு கிளறி 2 நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்குங்கள்.

கறி ஆயத்தமாகிவிட்டது!

இதில் உறைப்பை/காரத்தை தருவது பச்சை மிளகாய் தான். நீங்கள் காரப்பிரியர் எனில் பூசணிக்காயுடனேயே மிளகாயையும் போட்டு அவிக்கலாம். தப்பேயில்லை. சாமி குற்றம் ஆகிவிடாது.

அதென்ன தங்க பூசணி என கேட்கின்றிங்களா? [கேட்கலைன்னா கூட நான் சொல்லி தான் தீருவேன்] இது எங்க வீட்டில் காய்த்த பூசணிக்காயில் செய்தது. அதனால் தான் அது 'தங்க' பூசணிக்காய். பூசணிக்காய் என்றால் நினைவுக்கு வருவது ஹலொவீன் தானே? இனி அதை விட பயம் தரும் என் செய்முறை உங்கள் நினைவுக்கு வரட்டுமே! [இனிமேல் யாராச்சும் என்னை செய்முறை போட சொல்லி கேட்பீர்களா?கிகிகி]

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் பூசனிக்காய் என்றால் சுரக்காயா :wub::wub:

சமையல் குறிப்புக்கு நன்றி. முயற்சித்துப் பார்க்கிறேன்.

நானும் பூசணிக்கறி செய்திருக்கிறேன். மைசூர் பருப்பையும் கலந்து சமைப்பேன். நீண்ட நேரம் பிடிக்கும், கூழ் பதத்தில் தான் அடுப்பை விட்டு இறக்குவேன். இல்லாவிட்டால் சாப்பிடமுடியாது.

இனிமேல் யாராச்சும் என்னை செய்முறை போட சொல்லி கேட்பீர்களா?

உங்கள் செய்முறையை நாங்கள் பரிசோதித்துப் பார்க்கும் மட்டும் கேட்டுக்கொண்டேயிருப்போம். பரிசோதித்தால் தானே வம்பு. :wub:

Edited by Mallikai Vaasam

  • தொடங்கியவர்

எனக்கு ஒரு சந்தேகம் பூசனிக்காய் என்றால் சுரக்காயா :wub::wub:

அது தெரியவில்லை

ஆனால்

பம்ப்கின் = பூசணி

உங்கள் செய்முறையை நாங்கள் பரிசோதித்துப் பார்க்கும் மட்டும் கேட்டுக்கொண்டேயிருப்போம். பரிசோதித்தால் தானே வம்பு. :wub:

உசாரா தான் இருக்கிங்க.. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா சமைத்துப்பார்த்தனியலோ வீட்டில யாரு மாட்டுப்பட்டது :rolleyes:

பூசணிக்காய்க்கை மரவள்ளிக் கிழங்கு அல்லது இறால் கருவாடு போட்டுச் சமைச்சால்தான் நான் சாப்பிடுவன்.. :lol: அதோடு வெள்ளைப்பூடு (உள்ளி) போடவேணும்.. அது போடாட்டி வாயுத் தொல்லையால அவதிப்பட முடியாது. :))

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் புகைப்பவர்களின் , உடலில் உள்ள நிகோட்டின் என்னும் நச்சுப்பொருளை பூசனிக்காய்க்கு நீக்கும் சக்தி உள்ளது என்று வாசித்த ஞாபகம் .

  • தொடங்கியவர்

தூயா சமைத்துப்பார்த்தனியலோ வீட்டில யாரு மாட்டுப்பட்டது :D

லண்டனில் இருந்து வந்திருக்கும் பெரியப்பா தான் :lol::)

தவிர

வழமையாக சிக்குபவர்களும் அடக்கம்./ :)

பூசணிக்காய்க்கை மரவள்ளிக் கிழங்கு அல்லது இறால் கருவாடு போட்டுச் சமைச்சால்தான் நான் சாப்பிடுவன்.. :D அதோடு வெள்ளைப்பூடு (உள்ளி) போடவேணும்.. அது போடாட்டி வாயுத் தொல்லையால அவதிப்பட முடியாது. :D)

இது சைவகறி சோழிஸ் :P

சிகரெட் புகைப்பவர்களின் , உடலில் உள்ள நிகோட்டின் என்னும் நச்சுப்பொருளை பூசனிக்காய்க்கு நீக்கும் சக்தி உள்ளது என்று வாசித்த ஞாபகம் .

தகவலுக்கு நன்றி சிறி

இப்போது தான் கேள்விப்படுகின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பூசனிக்காய் பிடிக்காது

  • தொடங்கியவர்

எனக்கு பூசனிக்காய் பிடிக்காது

ஆனால் வளரும் போது அழகாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தூயா இதற்குள் மாசிக்கருவாடு (சிறிய துண்டுகளாக்கி போட வேணும்.. பூசணியோடு சேர்த்து சமைக்க முன்..நல்லா தண்ணீரில் ஊற விட வேண்டும். இல்ல கடிப்பதற்கு கடினமாக இருக்கும்.) அல்லது சிறிய இறால் போட்டு சமைச்சுப் பாருங்கள். ருசி அமோகமாக இருக்கும்..! நான் செய்திருக்கிறன் அப்படி..! :lol:

டோகாப் பூசணிக்காய்க்கு நான் சொன்ன முறை சரிவராது. ஏனெனில் அது சமைக்க கூழாகிடும். வட்டப்பூசணிக்காய் (ஊர்ப் பூசணிக்காய்) க்கு நான் சொன்ன முறை நன்று. மரவள்ளிக்கிழங்கும் சேர்த்து சமைக்கலாம்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தூயா இதற்குள் மாசிக்கருவாடு (சிறிய துண்டுகளாக்கி போட வேணும்.. பூசணியோடு சேர்த்து சமைக்க முன்..நல்லா தண்ணீரில் ஊற விட வேண்டும். இல்ல கடிப்பதற்கு கடினமாக இருக்கும்.) அல்லது சிறிய இறால் போட்டு சமைச்சுப் பாருங்கள். ருசி அமோகமாக இருக்கும்..! நான் செய்திருக்கிறன் அப்படி..! :lol:

ஆகா

இறாலுக்கு இத்தனை ரசிகர்களா இங்கு?

நெடுக்ஸ் நானும் சமைத்திருக்கேன்..அதுவும் மரவள்ளிகிழங்கு+பூசணிக்காய்+க

ருவாடு....நல்ல சுவையாக வரும் தானே..

ஆனால் வெள்ளிகிழமை என்றால் என்ன செய்வது?

கிகிகிகி

அதுக்கு தான் இது.. ;)

  • கருத்துக்கள உறவுகள்

இறால் பொரிச்சா இன்னும் விருப்பம். எனக்கு மீன் (கிங் பிஸ்) பேக் பண்ணிச் சாப்பிடுவது ரெம்பப் பிடிக்கும். இறால் பேக் பண்ணிறதை விட. நான் அடிக்கடி செய்வேன். செய்முறையும் இலகு. பொரிச்சுக் கொண்டு நிற்கத் தேவையில்லை. கிச்சனும் மணக்காது..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இறால் பொரிச்சா இன்னும் விருப்பம். எனக்கு மீன் (கிங் பிஸ்) பேக் பண்ணிச் சாப்பிடுவது ரெம்பப் பிடிக்கும். இறால் பேக் பண்ணிறதை விட. நான் அடிக்கடி செய்வேன். செய்முறையும் இலகு. பொரிச்சுக் கொண்டு நிற்கத் தேவையில்லை. கிச்சனும் மணக்காது..! :lol:

எனக்கும் மீன் பேக் பண்ணினால் பிடிக்கும் (பேக்=வெதுப்பியதா?)

போன்லெஸ் விட போன் உள்ள மீன் தான் சுவையா இருக்கும். இல்ல நெடுக்ஸ்?

எனக்கு பெரிய மீன்களை விட சின்ன மீன்கள் பேக் பண்ணும் போது சுவை அதிகம் என தோன்றும்..நீங்க வேறு என்ன மீன் பேக் பண்ணுவிங்க?

இறால் b.b.q க்கு தான் சுவையாக இருக்கும்

இல்லை என்றால் உடாங் சம்பல்...

  • கருத்துக்கள உறவுகள்
அதென்ன தங்க பூசணி என கேட்கின்றிங்களா? [கேட்கலைன்னா கூட நான் சொல்லி தான் தீருவேன்] இது எங்க வீட்டில் காய்த்த பூசணிக்காயில் செய்தது. அதனால் தான் அது 'தங்க' பூசணிக்காய். பூசணிக்காய் என்றால் நினைவுக்கு வருவது ஹலொவீன் தானே? இனி அதை விட பயம் தரும் என் செய்முறை உங்கள் நினைவுக்கு வரட்டுமே! [இனிமேல் யாராச்சும் என்னை செய்முறை போட சொல்லி கேட்பீர்களா?கிகிகி] 

[/codebox]

"தங்க பூசினி" என்று உண்மையிலேயே ஒன்று உள்ளது. அதனை "கோல்டன் சச்சினி" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால் அது கறிகாய்ச்ச உதவாது. பிஞ்சிலேயே பறித்துச சலாட் போடுவார்கள். மிகவும் அழகிய தங்க அதாவது மஞ்சள் நிறத்தில் அந்தக் காய்கள் இருக்கும். நமது முறைப்படி அதையும் சுவையாகச் சமைத்துப் பார்க்கலாம். ட்றை பண்ணிப் பாருங்கள்.

Edited by karu

  • தொடங்கியவர்

"தங்க பூசினி" என்று உண்மையிலேயே ஒன்று உள்ளது. அதனை "கோல்டன் சச்சினி" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால் அது கறிகாய்ச்ச உதவாது. பிஞ்சிலேயே பறித்துச சலாட் போடுவார்கள். மிகவும் அழகிய தங்க அதாவது மஞ்சள் நிறத்தில் அந்தக் காய்கள் இருக்கும். நமது முறைப்படி அதையும் சுவையாகச் சமைத்துப் பார்க்கலாம். ட்றை பண்ணிப் பாருங்கள்.

நீங்கள் சொல்லும் கோல்டன் சுக்கினி சாம்பாருக்கு சுவையாக இருக்கும்... பச்சையாக சலடுக்கு போடுவதை விட

லேசாக பேக் பண்ணி போட்டால் அருமை..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மீன் பேக் பண்ணினால் பிடிக்கும் (பேக்=வெதுப்பியதா?)

போன்லெஸ் விட போன் உள்ள மீன் தான் சுவையா இருக்கும். இல்ல நெடுக்ஸ்?

எனக்கு பெரிய மீன்களை விட சின்ன மீன்கள் பேக் பண்ணும் போது சுவை அதிகம் என தோன்றும்..நீங்க வேறு என்ன மீன் பேக் பண்ணுவிங்க?

இறால் b.b.q க்கு தான் சுவையாக இருக்கும்

இல்லை என்றால் உடாங் சம்பல்...

ஆம் வெதுப்பியது. ஸ்பைஸ் எல்லாம் சேர்ந்த கலவை பூசி வெதுப்ப வேண்டும்.

கிங் பிஸ்.. சீலா (நீண்ட மீன் அதை வட்டமாக வெட்டித் தருவார்கள்).. நெத்தலி (சிறிய மீன்) போன்றவை அடிக்கடி பேக் செய்வேன்..! :lol:

உடாங் சம்பலுக்கு இறால் கருவாடு தூளாக்கி சேர்த்தால் சுவையோ சுவை. அதை கொஞ்சம் சூடுகாட்டி எடுக்கனும். நான் செய்து போத்தலில் போட்டு பாதுகாத்து பாணுடன் சாப்பிடுவேன்..! விடிய அவசரமா வேலை.. அல்லது யுனிக்குப் போறவைக்கு சிரமின்றிய சாப்பாடு.. சுவையும் இருக்கும்..! அத்தோடு ஒரு பழமும் சாப்பிட்டால் நன்று..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஆம் வெதுப்பியது. ஸ்பைஸ் எல்லாம் சேர்ந்த கலவை பூசி வெதுப்ப வேண்டும்.

கிங் பிஸ்.. சீலா (நீண்ட மீன் அதை வட்டமாக வெட்டித் தருவார்கள்).. நெத்தலி (சிறிய மீன்) போன்றவை அடிக்கடி பேக் செய்வேன்..! :lol:

உடாங் சம்பலுக்கு இறால் கருவாடு தூளாக்கி சேர்த்தால் சுவையோ சுவை. அதை கொஞ்சம் சூடுகாட்டி எடுக்கனும். நான் செய்து போத்தலில் போட்டு பாதுகாத்து பாணுடன் சாப்பிடுவேன்..! விடிய அவசரமா வேலை.. அல்லது யுனிக்குப் போறவைக்கு சிரமின்றிய சாப்பாடு.. சுவையும் இருக்கும்..! அத்தோடு ஒரு பழமும் சாப்பிட்டால் நன்று..! :)

நெத்தலிக்கு தந்தூரி மசாலா போட்டு வெதுப்பி பாருங்க....சுவையோ சுவை..அதில் கொஞ்சம் எலுமிச்சை புளி சேர்த்தால்..ஆகா..

உடாங் சம்பல் யோசனை அருமை தான். என்ன காலையில் அத்தனை உறைப்பாக உண்பது தான் என்னால் முடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலிக்கு தந்தூரி மசாலா போட்டு வெதுப்பி பாருங்க....சுவையோ சுவை..அதில் கொஞ்சம் எலுமிச்சை புளி சேர்த்தால்..ஆகா..

உடாங் சம்பல் யோசனை அருமை தான். என்ன காலையில் அத்தனை உறைப்பாக உண்பது தான் என்னால் முடியாது...

உறைப்பை தேங்காய் துருவல் சேர்த்து குறைக்கலாம். நான் மிளகாயை குறைத்து துருவலை அதிகப்படுத்துவேன். தேங்காய் துருவல் உலர்த்தியது கடையில் இருக்கிறது. அதைவிட நீங்களும் உலர்த்த வேண்டும். இன்றேல் விரைவாக பழுதாகிடும். மிளகாய் காய்ந்த பொடியாக்கியது நன்று..! எல்லாவற்றையும் கலந்து கொஞ்சம் வறுத்து எடுக்க வேண்டும். அப்பதான் பாதுகாக்கலாம் நீண்ட நாளைக்கு..!

உங்கள் உடாங் சம்பலின் முன்னேற்றிய வேர்சன் இது..! வாழைப்பழம் சாப்பிடுவது உறைப்பைக் கட்டுப்படுத்தும்.அல்லது தயிரோடும் அல்லது நசுறல் யோர்கட் கூடவும் சேர்த்துச் சாப்பிடலாம். :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உறைப்பை தேங்காய் துருவல் சேர்த்து குறைக்கலாம். நான் மிளகாயை குறைத்து துருவலை அதிகப்படுத்துவேன். தேங்காய் துருவல் உலர்த்தியது கடையில் இருக்கிறது. அதைவிட நீங்களும் உலர்த்த வேண்டும். இன்றேல் விரைவாக பழுதாகிடும். மிளகாய் காய்ந்த பொடியாக்கியது நன்று..! எல்லாவற்றையும் கலந்து கொஞ்சம் வறுத்து எடுக்க வேண்டும். அப்பதான் பாதுகாக்கலாம் நீண்ட நாளைக்கு..!

உங்கள் உடாங் சம்பலின் முன்னேற்றிய வேர்சன் இது..! :lol:

முயற்சித்து பார்க்கின்றேன்...இன்று மீண்டும் வலைப்பூவில் உடாங் சம்பல் போட்டேன்.. http://thooyaskitchen.blogspot.com/2008/12/blog-post_23.html

இங்கு ஏற்கனவே இருப்பதால் போடவில்லை..

உங்கள் செய்முறையையும் எழுதி தந்தீர்கள் என்றால் உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சித்து பார்க்கின்றேன்...இன்று மீண்டும் வலைப்பூவில் உடாங் சம்பல் போட்டேன்.. http://thooyaskitchen.blogspot.com/2008/12/blog-post_23.html

இங்கு ஏற்கனவே இருப்பதால் போடவில்லை..

உங்கள் செய்முறையையும் எழுதி தந்தீர்கள் என்றால் உதவியாக இருக்கும்.

என்ர உடாங் சம்பல் கொஞ்சம் வித்தியாசமானது. நீண்ட நாளைக்கு என்று தயாரிப்பதால் செய்முறைகளை மாற்றி அமைத்திருக்கிறேன்..!

நீங்கள் செய்ய வேண்டியது...

தேவையான பொருட்கள்.

வறுத்த மிளகாய்த்தூள்

வெங்காயம் சிறியது அல்லது பெரியது (தேவையான அளவு)

பச்சை மிளகாய் ஒரு சில.

பூடு (சில)

இஞ்சி சிறுதுண்டு (நறுக்கியது)

தேங்காய் துருவல் (உலர்த்தியது/ உலர்த்தாது. வசதிக்கு ஏற்ப பயன்படுத்தலாம்) -ஒரு கப் (றைஸ் குக்கரோடு வரும் சிறிய அளவிலான கப் (மிகச் சிறியதல்ல)

மாசிக் கருவாடு தூளாக்கியது. அல்லது இறால் கருவாடு தூளாக்கியது ( சைவ ஆக்கள் இதைத் தவிர்க்கலாம்) - விரும்பிய அளவு.

செய்முறை.

சுத்தமான பொரி பானில் சிறிதளவு சன்பிளவர் ஒயிலை இட்டு சூடாக்கிய பின்.. கடுகு.. பெருஞ்சீரகம்.. கொண்ட கலவையில் ஒரு தேக்கரண்டி இட்டு தாழிக்கவும். அதன் பின்னர் சிறிதாக நறுக்கிய வெங்காயம்.. பச்சைமிளகாய்.. பூடு.. இஞ்சி எல்லாவற்றையும் போட்டு வதக்கி எடுக்கவும்.(கறிவேப்பிலை போட விரும்புபவர்கள் சிறிதாக அரிந்த கறிவேப்பிலையும் போட்டு வதக்கலாம்)

அதன் பின்னர் இரண்டு மேசைக்கரண்டி மிளகாய்த் தூளை சேர்த்து வறுக்கவும். அத்தோடு பொடியாக்கிய கருவாடு அல்லது இறால் போட்டு சில நிமிடங்கள் வறுத்து எடுத்த பின்.. தேங்காய் துருவலைக் கொட்டி வறுக்கவும். தேவையான உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.

சில நிமிடங்கள் வறுக்க.. எல்லாம் பொன்னிறமாகி.. வரும். அப்போது இறக்கி விடவும்.

ஆற வைத்த பின்.. போத்தலில் அடைத்து வைத்து உணவோடு சாப்பிடலாம். சாப்பிடும் போது தேசிப்புளி சேர்க்கலாம். விரும்பியவர்கள். அவசியம் என்றில்லை. செய்யும் போதே சிறிதளவு வினிகர் விட்டால் அதுவும் தேவையில்லை..!)

(அதிகம் எண்ணை விட்டால் குழையும். உலர்த்தாத தேங்காய் துருவல் வைத்திருந்தால் அதை தனியே உலர்த்தி எடுக்கவும்) :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயா! உங்களின் பூசனி செய்முறை நன்று.

இதேபோன்ற ஒரு செய்முறை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன்.

அதில் எண்ணை இல்லாமல் செய்தார்கள்.

வாணலியில் அரைக் கிளாஸ் தண்ணீர் விட்டுக் கொதி வந்ததும் அதில் கொஞ்சம் சீரகம் தேவைப்பட்டால் சிறிது உள்ளியும் அரிந்துபோட்டு சதுரங்களாக நறுக்கிய பூசனித் துண்டங்களைப் போட்டு அத்துடன் நீளவாட்டில் அரிந்த வெங்காயம் ஒன்றும் ஒரு ப.மிளகாயும் நீளவாக்கில் அரிந்துபோட்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின் அதில் அளவாக பாலும் சேர்த்து பூசனித் துண்டங்களை அளவாக மசிக்கவும். மசிக்கும்போது முழுதுமாக மசிக்காமல் ஒவ்வொரு துண்டிலும் அரைவாசிப் பக்கத்தை கரண்டியால் நருவல் நொருவலாக( ஆஹா நல்லதொரு தமிழ்) மசிக்கவும். இறக்கும்போது கொத்தமல்லித் தழை கிள்ளிப் போட்டு பின் பரிமாறவும். இச் செய்கையில் எண்ணைக்குத் தடா!!!

எனக்கு இப்ப ஏழரைச்சனி பிடித்திருக்கு இனி பூ சனி பிடித்தால் ...

தெரியவில்லை அதன் விளைவுகளை முனிவரிடம்தான் கேட்க வேண்டும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப ஏழரைச்சனி பிடித்திருக்கு இனி பூ சனி பிடித்தால் ...

தெரியவில்லை அதன் விளைவுகளை முனிவரிடம்தான் கேட்க வேண்டும்!!!

ஆமா இதுக்கு தேங்காய் பூ போட்டு சுண்டினால் நம்ம யாழ்கள் சுண்டல் மாதிரி இருக்குமோ :lol::)

ஓய் சுவீயாரே உங்களுக்கு பூ சனி பிடித்தால் நடு மண்டையில ஒரு பூசனிக்காயை வைத்து வெட்ட வேண்டியதுதான் ஏற்படும் விளைவுகளுக்கு தூயாதான் பொறுப்பு நான் இல்லை :D:D

நானும் இதை பார்த்துவிட்டு ஒரு பூசனிக்காயை எடுத்து கொண்டு போய் என் சிஷ்யைகளிடம் கொடுக்க அவர்கள் சொன்னார்கள் பூசனிக்காய் குளிராம் நீங்கள் சாப்பிட்டால் இடுப்புக்க பிடித்து விடுமாம்[ஒரு வேலையும் செய்ய முடியாதாம்] என்று சொல்ல அதை ஒரு மூலையில் போட்டு விட்டு அதையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் :):D:D

  • தொடங்கியவர்

என்ர உடாங் சம்பல் கொஞ்சம் வித்தியாசமானது. நீண்ட நாளைக்கு என்று தயாரிப்பதால் செய்முறைகளை மாற்றி அமைத்திருக்கிறேன்..!

நீங்கள் செய்ய வேண்டியது...

தேவையான பொருட்கள்.

வறுத்த மிளகாய்த்தூள்

வெங்காயம் சிறியது அல்லது பெரியது (தேவையான அளவு)

பச்சை மிளகாய் ஒரு சில.

பூடு (சில)

இஞ்சி சிறுதுண்டு (நறுக்கியது)

தேங்காய் துருவல் (உலர்த்தியது/ உலர்த்தாது. வசதிக்கு ஏற்ப பயன்படுத்தலாம்) -ஒரு கப் (றைஸ் குக்கரோடு வரும் சிறிய அளவிலான கப் (மிகச் சிறியதல்ல)

மாசிக் கருவாடு தூளாக்கியது. அல்லது இறால் கருவாடு தூளாக்கியது ( சைவ ஆக்கள் இதைத் தவிர்க்கலாம்) - விரும்பிய அளவு.

செய்முறை.

சுத்தமான பொரி பானில் சிறிதளவு சன்பிளவர் ஒயிலை இட்டு சூடாக்கிய பின்.. கடுகு.. பெருஞ்சீரகம்.. கொண்ட கலவையில் ஒரு தேக்கரண்டி இட்டு தாழிக்கவும். அதன் பின்னர் சிறிதாக நறுக்கிய வெங்காயம்.. பச்சைமிளகாய்.. பூடு.. இஞ்சி எல்லாவற்றையும் போட்டு வதக்கி எடுக்கவும்.(கறிவேப்பிலை போட விரும்புபவர்கள் சிறிதாக அரிந்த கறிவேப்பிலையும் போட்டு வதக்கலாம்)

அதன் பின்னர் இரண்டு மேசைக்கரண்டி மிளகாய்த் தூளை சேர்த்து வறுக்கவும். அத்தோடு பொடியாக்கிய கருவாடு அல்லது இறால் போட்டு சில நிமிடங்கள் வறுத்து எடுத்த பின்.. தேங்காய் துருவலைக் கொட்டி வறுக்கவும். தேவையான உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.

சில நிமிடங்கள் வறுக்க.. எல்லாம் பொன்னிறமாகி.. வரும். அப்போது இறக்கி விடவும்.

ஆற வைத்த பின்.. போத்தலில் அடைத்து வைத்து உணவோடு சாப்பிடலாம். சாப்பிடும் போது தேசிப்புளி சேர்க்கலாம். விரும்பியவர்கள். அவசியம் என்றில்லை. செய்யும் போதே சிறிதளவு வினிகர் விட்டால் அதுவும் தேவையில்லை..!)

(அதிகம் எண்ணை விட்டால் குழையும். உலர்த்தாத தேங்காய் துருவல் வைத்திருந்தால் அதை தனியே உலர்த்தி எடுக்கவும்) :lol:

நெடுக்ஸ்,

இதை சுவையருவியிலும், என் வலைப்பூவிலும் சேர்க்கலாமா?

வணக்கம் தூயா! உங்களின் பூசனி செய்முறை நன்று.

இதேபோன்ற ஒரு செய்முறை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன்.

அதில் எண்ணை இல்லாமல் செய்தார்கள்.

வாணலியில் அரைக் கிளாஸ் தண்ணீர் விட்டுக் கொதி வந்ததும் அதில் கொஞ்சம் சீரகம் தேவைப்பட்டால் சிறிது உள்ளியும் அரிந்துபோட்டு சதுரங்களாக நறுக்கிய பூசனித் துண்டங்களைப் போட்டு அத்துடன் நீளவாட்டில் அரிந்த வெங்காயம் ஒன்றும் ஒரு ப.மிளகாயும் நீளவாக்கில் அரிந்துபோட்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின் அதில் அளவாக பாலும் சேர்த்து பூசனித் துண்டங்களை அளவாக மசிக்கவும். மசிக்கும்போது முழுதுமாக மசிக்காமல் ஒவ்வொரு துண்டிலும் அரைவாசிப் பக்கத்தை கரண்டியால் நருவல் நொருவலாக( ஆஹா நல்லதொரு தமிழ்) மசிக்கவும். இறக்கும்போது கொத்தமல்லித் தழை கிள்ளிப் போட்டு பின் பரிமாறவும். இச் செய்கையில் எண்ணைக்குத் தடா!!!

எனக்கு இப்ப ஏழரைச்சனி பிடித்திருக்கு இனி பூ சனி பிடித்தால் ...

தெரியவில்லை அதன் விளைவுகளை முனிவரிடம்தான் கேட்க வேண்டும்!!!

மசிக்காமல் இதே செய்முறையில் சமைத்துள்ளேன்....மசிப்பது இப்போது தான் அறிகின்றேன்........நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

இதை சுவையருவியிலும், என் வலைப்பூவிலும் சேர்க்கலாமா?

இதென்ன கேள்வி.. நம்ம தங்கச்சிண்ட வலைப்பூவில.. போடுறதுக்கு... அனுமதி வேறையா.. முடியல்ல. :lol::)

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..

(செய்முறையின் போது தேவையென்றால்.. எண்ணெயின் அளவைக் குறைத்து (தாழிக்க எண்ணெய் அவசியம்) கொஞ்சம் தண்ணீர் கலந்து சற்று அவிய விட்டும் வறுத்தெடுக்கலாம். தேசிப்புளி விட்டும் இறக்கலாம். சாப்பிட முதல் விடுவது எனது வழமை.காரணம் சூடாக்கும் போது சில விற்றமின்கள் எளிதில் ஆவியாகி விடக்கூடியவை.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.