Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பற்றாளர் ரவி மரணம்

Featured Replies

இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி.

2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்த்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை ரவி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கை அம்மையநாயக்கனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ரவி விவகாரம் குறி்த்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாரி கூறுகையில், வாலிபர் ரவி இலங்கை தமிழருக்காக தீக்குளிக்கவில்லை. 2 வழக்குகளில் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர். இன்னும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் தீக்குளித்துள்ளார் என்றார்.

இதற்கிடையே, மாவட்ட ஆட்சித் தலைவர் வாசுகி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இலங்கை தமிழருக்காக பள்ளப்பட்டி வாலிபர் ரவி தீக்குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2009/02...madurai-gh.html

Edited by Kuddi thampi

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.

தமிழ் தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள் , அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆழ்த்த அனுதாபங்கள் .

தமிழக உறவுகளே .... ரவியின் தீக்குளிப்பு இறுதியானதாக இருக்க உங்களை அன்பாக வேண்டுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் பற்றாளர் ரவிக்கு வீரவணக்கம்!!!உறவுகளே தயவு செய்து உயிரைவிடாதீர்கள்.போராட வேறுவழிகள் நிறைய உண்டு.தேர்தலில் தகுதியானவர்களை இனம் காணுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவிக்கு எனது வீரவணக்கங்கள்

தியாகி ரவிக்கு வீர வணக்கங்கள்.

தமிழக உறவுகளுக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள்.

தயவு செய்து யாரும் இனிமேலும் தற்கொலை முயற்சிகளில் இறங்காதீர்கள். முத்துக்குமரன் மூட்டிய தீயே போதும் தமிழக சுயநலவாத அரசியல்வாதிகளையும் மத்திய அரசையும் எரிப்பதற்கு.

நீங்கள் உடல்களில் தீயை பற்ற வைக்காதீர்கள்.மக்கள் மனங்களில் கருத்துக்களில் செயற்பாடுகளில் தீயினை பற்ற வையுங்கள். அதன் மூலம் தமிழீழ தமிழர்களின் பிணங்கள் மீது ஏறி நின்று கபட நாடகம் போடும் கருணாநிதி ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியினரை வீட்டுக்கு அனுப்புங்கள்.

தமிழர் மீது உண்மையாகவே அன்பு கொண்ட தமிழீழ போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் கட்சிகளை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள். அதுவே தமிழகத்திற்கும் தமிழீழத்திற்கும் விடிவினையும் விமோசனத்தையும் கொண்டுவரும்.

அதுவரை தியாகி முத்துக்குமரன் மூட்டிய தீயினை அணைய விடாது போராடுங்கள்.

இவர் மண்ணெண்ணை அடுப்பு வெடித்ததினால்தான் தீக்காயம் அடைந்தார் ஈழத்தமிழர்களுக்காக அவர் தன்னை எரித்து கொள்ள இல்லை எண்று மாவட்ட காவல்துறை ஆணையாளர் தெரிவிக்கிறார் எண்டு சண் நியூசில் காட்டினார்கள்.... அந்த அவதூறை எதிர்த்து விடுதலைச்சிறுத்தைகள் உட்பட பல அமைப்பினர் வைத்திய சாலை முன்னர் போராட்டத்தில் ஈடு பட்டதாகவும் காட்டினார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

ரவி குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..!

தமிழக அரசின் அழுத்தம் காரணமாக இவரின் தியாக மரணம் திசைதிருப்ப தமிழக காவல் துறை முயன்றுள்ளது.

சகோதரனே உன் தியாத்திற்கு எனது அஞ்சலிகள்.

இவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஜானா

அன்னார் இரவி அவர்கள் ஈழத்தின் மீதிருந்த பற்றுக்காரண்மாக தனது மகனுக்கு பிரபாகரன் என்று பேயர் வைத்திருந்தார்..... இரவி அவர்களின் தற்கொடைக்கு களங்கம் கட்ட எடுக்கும் முயற்சிக்கு முடிவுகட்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் மாவட்டம் பள்ளம் பட்டி ரவிக்கு என் அஞ்சலிகள் .........போதும் தமிழக உறவுகளே ..........பெறுமதியான் உங்கள் உயிரை வீணாக்காதீர்கள் . இன்னும் இன்னும் சாதிக்க வேண்டும் .....உங்கள் வீர மரணம் களங்க படுத்த படலாம் உணர்ச்சி வசப்படாதீர்கள் .உத் வேகமுடன் உழைத்து அமைதி போராட்டத்தை முன்னெடுங்கள்.

ரவி அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்

ரவி அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சத்திய வீரர்களின் சாவு சரித்திரமாகும்!

உண்மயான போரளிகள்=பயங்கரவாதிகள்

பதவிப்பேராசை பிடித்த அரசியல்வாதிகள் =மகாத்மாக்கள்

இது தான் உண்மையான இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

ரவி அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

ravi_20090202003.jpg

என்ன கைமாறு செய்யப் போகிறோம்???????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.