Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தமிழர்களுக்கு 40 ஆயிரம் சிப்பங்கள் நிவாரணப் பொருட்கள்: தமிழக அரசு

Featured Replies

இலங்கை தமிழர்களுக்கு 40 ஆயிரம் சிப்பங்கள் நிவாரணப் பொருட்கள்: தமிழக அரசு

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 40 ஆயிரம் சிப்பங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுத்துறை, கைத்தறி, கைவினை, துணி நூல் மற்றும் கதர்த்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கழகம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் 40 ஆயிரம் சிப்பங்களில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் தலைமைச்செயலாளர் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு 15.4.09க்கு முன்னர் அனுப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5667

வணங்கா மண் கப்பல் போய் சேர்வதுக்கு முன் அனுப்பி வைக்க போகினமாம்...

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி அனுப்பினதில முக்காவாசிக்கு மேல சிங்களவனுக்குத் தான் போய்ச் சேர்ந்தது

சிப்பங்களில் தமிழருக்கு உணவென்ற போர்வையில் சிங்களவனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்போயினமோ யார் கண்டது.

வாக்குப் பொறுக்கிகளின் கோமாளித்தனம். கொலைவெறியர்களால் உயிரிழந்து கொண்டிருப்பவர்க்கு நிவாரணம்....? முட்டாள்களே போதும் உங்கள் அரசியல் பொறுக்கித்தனங்கள். ஈழத்தமிழர்கள் உங்கள் முகமூடிகளைக் கிழித்து பல மாதங்களாகிவிட்டன. கொலை வெறி சிங்களவனுக்கு ஏதேனும அனுப்பவேண்டும் என்றால் நேரடியாகவே அனுப்பபுங்கள். ஈழத் தமிழருக்கு என்று பம்மாத்துப் பண்ணாமல்.

ஜானா :(

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் தலைமைச்செயலாளர் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு 15.4.09க்கு முன்னர் அனுப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அது என்ன 15.04.09 .

ஆ...... தேர்தலுக்கு முன் .

ஈழத்தமிழனை வைத்து வாக்கு சேகரிக்க இது உதவும் .

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் வாய்க்கரிசி அனுப்புங்கோ அது போதும் :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

யானைப்பசிக்கு சோளப்பொரியா? சோழியன் குடும்பி சும்மா ஆடாது , எங்கள் மரணத்தில் உங்கள் பிழைப்பு........

சோழியன் இல்லையப்பா, இது சுழியன். விலாங்கு அதுவும் கிழட்டு விலாங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

புல்மோட்டையில் உள்ள இந்திய இராணுவத்தினருக்கு பொருள் அனுப்பி சோனியாவின் மார்மை சுரக்க வைக்கும் வேலை.

புல்மோட்டையில் உள்ள இந்திய இராணுவத்தினருக்கு பொருள் அனுப்பி சோனியாவின் மார்மை சுரக்க வைக்கும் வேலை.

அப்பிடி ஒன்று இருந்தாத்தானே சுரக்கிறதுக்கு,

இந்தக் கிழடு எங்களவைத்து மானாட மயிலாட நடத்துது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பும் உணவுப் பொருட்கள் யாருக்குச் சென்று சேர்கிறது?: தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் கேள்வி

[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2009, 12:27.23 PM GMT +05:30 ]

தமிழக அரசு இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஏற்கனவே நிதி திரட்டி உணவுப் பொருட்களை அனுப்பியது. அவை தமிழர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அறிவித்தது. எனினும் அவை உரியவர்களுக்குத்தான் சென்று சேர்கிறதா? என தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தமீழ் மக்கள் பண்பாட்டு கழகம் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக அரசு இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஏற்கனவே நிதி திரட்டி உணவுப் பொருட்களை அனுப்பியது. அவை தமிழர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அறிவித்தது. தற்போதும், அதே போல உணவு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அவை உரியவர்களுக்குத்தான் சென்று சேர்கிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

ஏற்கனவே அனுப்பப்பட்ட பொருட்களில் பாதியளவுகூட பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சென்று சேரவில்லையென்றும், அவை நாள்தோறும் தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்களவர்களுக்கே சென்று சேர்வதாகவும் தகவல்கள் வருகின்றன. அவை தவறான தகவல்களாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம்.

இந்த சந்தேகம் எழுவதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. தினமும் குண்டுவீசப்படும் அப்பகுதிகளில் ஐ.நா. பார்வையாளர்களோ, செஞ்சிலுவைச் சங்கங்களோ, தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளோ யாரும் இல்லை. அவர்கள் இனைவரையும் சிங்கள அரசு வெளியேற்றிவிட்டது.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை அனுப்பும் அதே நேரத்தில், அனுப்பப்படும் பொருட்கள் உரியவர்களுக்குச் சென்று சேர்ப்பதில் தமிழக அரசு அக்கறையோடு இருக்க வேண்டும் என விரும்புகின்றோம். சிங்கள அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ என்ற பெயரில் உலக நாடுகளிடம் கையேந்தி வருவதையும், அந்த உதவிகள் அனைத்தையும் தனது தமிழின அழிப்புப் படுகொலைக்குமே பயன்படுத்தி வருவதையும் பார்க்கின்றோம்.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியிலிருந்தும் பார்வையாளர்கள், சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், நம் நாட்டில் இயங்கும் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொருட்கள் விநியோகம் செய்வதைக் கண்காணிக்கும் வகையில் உணவுப் பொருட்களை அனுப்புவதை மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் வாழம் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பொருட்களைத் திரட்டி வருகின்றனர். இன்று புறப்படவுள்ள அக்கப்பல், தனது என்லையில் நுழைந்தால் தாக்குவோம் என சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது. எனவே, தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத்தான் சென்று சேர்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்காக, ஏற்கனவே உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்ட விதம், அதற்காகப் பெறப்பட்ட அனுமதி, தற்போது அனுப்பப்படவுள்ள விதம், ஆகியவற்றைக் குறித்துத் சரியான தகவல்களைப் பெற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசிற்கு மனு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 27-3-2009. கேட்கப்பட்டுள்ள கேள்விகள்

1. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை தமிழக அரசு ஏற்கனவே அனுப்பி வைத்தது. அவை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்று சேர்ந்தது என்பதை யார் உறுதிப்படுத்தியது?

2.முல்லைத் தீவில் சிங்கள அரசு குண்டுவீசும் பகுதிகளில் ஐ.நா. தொண்டு அமைப்புகளோ, செஞ்சிலுவைச் சங்கமோ செயல்படாத பட்சத்தில், யாரைக்கொண்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன? அப்பாவி மக்கள் மீது குண்டுவீசும் சிங்கள அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் உணவுகளை வழங்குகிறது என்று கூறுவதை எப்படி நம்புவது? அப்படியானால் உணவுப் பொருட்களை அனுப்புவது யாருக்கு?

3. ஒரு அன்னிய நாட்டில் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப உள்நாட்டில் என்னென்ன அனுமதிகளைப் பெறவேண்டும்? அதுபோல் பெறப்பட்டதா?

4.புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பொருட்களைத் திரட்டி வருகின்றனர். இன்று புறப்படவுள்ள அக்கப்பல், தனது என்லையில் நுழைந்தால் தாக்குவோம் என சிங்கள இனவெறிஅரசு அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தமிழக அரசு அனுப்பும் பொருட்கள் பாதிக்கப்படும் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்த தமிழகத்திலிருந்து நடுநிலைப் பார்வையாளர்கள் யாராவது அனுப்பப்படுகின்றார்களா? அப்படி அனுப்ப தமிழக அரசிடம் ஏதாவது திட்டமுள்ளதா?

5. தமிழக முதல்வர் அண்மையில், தோணிகளைத் தயார்செய்து அதில் படைகளை ஏற்றிச்சென்று ராஜபக்சவை கைதுசெய்து கொண்டுவரட்டும். யார் தடுக்கிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டதாக செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது. அப்படி அன்னிய நாட்டு மக்களைக் கைதுசெய்ய மக்கள் போகலாமா? குறைந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்காவது தமிழக அரசு அனுமதிக்குமா?

6. அனுமதி வழங்கப்படுவதாக இருந்தால் அது எழுத்துமூலமாகத் தரப்படுமா?

என கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

http://tamilwin.com/view.php?2a26QV14b34Z9...3g2hF2ccdFj0o0e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.