Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப் புலிகள் ஒருதலைபட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு

Featured Replies

அனைத்துலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப் புலிகள் ஒருதலைபட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தினை தடுத்து நிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண்டுதல்களை ஏற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்துகின்றனர்.

இதனடிப்படையில் நாம் அனைத்து வலிந்து தாக்குதல் நடவடிக்கைகளையும் காலவரையறையற்ற முறையில் இடைநிறுத்துவதற்கு முடிவுசெய்துள்ளோம்.

சிறிலங்கா அரசு படைகள் வன்னியில் தொடர்ந்து நடத்திவரும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணான போர் நடவடிக்கைகளினால் எமது மக்கள் அனுபவிக்கும் துன்பம் அதியுச்ச அளவினை எட்டியுள்ளது.

ஒருபுறம் முல்லைத்தீவு கரையோரங்களில் உள்ள எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளை சுற்றிவளைத்து குவிக்கப்பட்டுள்ள சிங்களப் முப்படைகளினதும் தாக்குதல்களிற்குள் அகப்பட்டுள்ள 165,000 க்கும் அதிகமான மக்கள் நாளாந்தம் எறிகணை வீச்சு, வான் குண்டுத் தாக்குதல் மற்றும் பலவித போர் அச்சுறுத்தல்களிற்குள்ளாகி உயிரிழப்புக்களையும், படுகாயங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த பல மாதங்களாக திட்டமிட்ட முறையில் சிறிலங்கா அரசினால் இம் மக்களுக்கான உணவு, மருந்து மற்றும் பிற மனிதாபிமான வழங்கல்கள் இடைநிறுத்தப்பட்டமையால் பட்டினி அபாயம் ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், இப்பகுதிகளில் இருந்து பலவழிகளிலும் வெளியேறிய போது சிங்களப்படைகளிடம் அகப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் அனைத்துலக விதிகளுக்கு முரணாக தடுப்பு முகாம்களிலும், இராணுவ வதைமுகாம்களிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்கள் அனைத்துலக விதிகளுக்குட்பட்ட பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாது துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் சொந்த இடங்களிற்கு சென்று குடியமர்வதற்கு சிறிலங்கா படையினர் அனுமதிக்காமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையி

தலைவர் அரசியலிலும் கைதேர்ந்தவர் என்பதை நிருபிக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் தந்திரோபாயமான ஒரு நடவடிக்கை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தீபன். உங்களூர் நிலவரம் எப்படியிருக்கு? சிறிது சிறிதாக சூடு பிடிகிறது போலத் தெரியுது? அம்பாறை தாக்குதலைச் சொன்னேன். கிழக்கு மாகாணம் இனிக் கொஞ்சம் கொதிநிலையில் இருக்கும்போலத்தான் தெரிகிறது. உள்ளூர் விசயங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகப் பொருத்தமான தருணத்தில் அறிவிக்கப்பட்ட சரியான முடிவு.

தலைவர் சர்வதேசத்திற்கு கொடுத்த சாட்டை அடி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தீபன். உங்களூர் நிலவரம் எப்படியிருக்கு? சிறிது சிறிதாக சூடு பிடிகிறது போலத் தெரியுது? அம்பாறை தாக்குதலைச் சொன்னேன். கிழக்கு மாகாணம் இனிக் கொஞ்சம் கொதிநிலையில் இருக்கும்போலத்தான் தெரிகிறது. உள்ளூர் விசயங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

யோவ் ரகுநாதன் வாயை தொறந்தால் வெடி விழும் போல் உள்ளது :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் ரகுநாதன் வாயை தொறந்தால் வெடி விழும் போல் உள்ளது :):lol:

:D:(

மக்களை பொறுத்த வரையில் இடங்களை பிடித்தசெய்தி மட்டும் தான் தெரியும் மக்களின் இழப்பு பற்றி 5 வீதம் கூட தெரியாது.******************************பாதுகாப்

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகப் பொருத்தமான தருணத்தில் அறிவிக்கப்பட்ட சரியான முடிவு.

ஆம் இனியும் விடுதலைப்புலிகள் மீது பழியை போடாது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசை சர்வதேசம் வற்புறுத்தவேண்டும் இல்லையேல் தமிழரை பிரிந்து தனி அரசை அங்கீகரிக்க வேண்டும்

ஆம் இனியும் விடுதலைப்புலிகள் மீது பழியை போடாது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசை சர்வதேசம் வற்புறுத்தவேண்டும் இல்லையேல் தமிழரை பிரிந்து தனி அரசை அங்கீகரிக்க வேண்டும்

மீண்டும் ஒருமுறை DC முன்னால் கூடினால் தானாக நடக்கும்

அப்படிப்போடு அருவாள..

நல்ல ஒரு முடிவு... இருந்தாலும் இதனுடைய பிரதிபலிப்புக்கள் சர்வதேச நாடுகளிடம் எவ்வாறு பிரதிபலிக்குமென்று தற்போது சொல்ல முடியாது. காரணம் சர்வதேசம் பல விடயங்களில் கோட்டை விட்டுள்ளது இல்லை இல்லை கை விட்டுவிட்டதென்பதே பொருந்தும். அவர்களுக்கான இரண்டாம் வாய்ப்பாகவும் இதை பார்க்கலாம்.

மீண்டும் இந்தியாவை நம்பி எங்களை ஒதுக்குவார்களா அல்லது இந்தியாவையும் திருத்தி நிலமைகளை சரிக்கட்டுவார்களா? இனி பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுநாள் வரையிலும் எமது போராட்டத்தை தொடர்வோம். அதுவே எமக்குண்டான பணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் சாணக்கியன் என்பதை மீண்டும் ஒருமுறை தலைவர் நிருபித்திருக்கிறார் இதை சொறிலங்கா தப்பாய் எடுக்கும் அதுவழமை இதையெல்லாம் கணக்கில எடுக்கப்படக்கூடாது இவற்றைப்போலபலவற்றை பார்த்திட்டம்

தலைவர் சர்வதேசத்திற்கு கொடுத்த சாட்டை அடி

இலங்கை, இந்தியாவுக்காக இவ்வளவுகாலம் செய்த அரசியல் தந்திரோபாயம்

(இவர்கள் நல்லாக நம்மை இன்று இந்த நிலமையில் நய்ய புடைக்கலாம் ஆனால்)

இப்போ உலகத்துக்கே.. அருமை அருமை.... :):lol:

இதில் இருந்து இந்த நவீன நம் உலகம் எப்படி நகரப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போம். :(

இது எமது தமிழர் யுகம் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்ளத்துக்கு சிரிப்பாய் இருக்கும்.உலகத்துக்கு திகைப்பாய் இருக்கும்.

"போர் நிறுத்தத்துக்கு எவ்வித தேவையும் இல்லை": புலிகளின் அறிவிப்பை கோத்தபாய நிராகரிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2009, 06:46 பி.ப ஈழம்] [கு.பாலசுப்பிரமணியம்]

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக அறிவித்திருக்கும் போர் நிறுத்தத்தை திட்டவட்டமாக நிராகரித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "போர் நிறுத்தத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை" எனவும், "விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

'ஸ்கை' காணொலி நிறுவனத்தின் ஆசிய செய்தியாளர் அலெக்ஸ் க்ராஃபோட் விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது இவ்வாறு தெரிவித்த கோதாபாய, "அவர்கள் (விடுதலைப் புலிகள்) எம்முடன் சண்டையிடவில்லை; எம்மிடம் இருந்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்துலக அமைப்புக்கள் பலவும் இரு தரப்புக்களையும் தொடர்ச்சியாகக் கோரி வரும் நிலையில், விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகி இரண்டு மணி நேரத்துக்குள் கோத்தபாயவின் இந்த நிராகரிப்பு வெளியாகியிருக்கின்றது.

இருந்த போதிலும், "பாதுகாப்பு வலய" பகுதி மீதான வான் தாக்குதல்களை சிறிலங்கா வான்படை இன்று ஞாயிற்றுக்கிழமை தீவிரப்படுத்தியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி புதினம்: http://www.puthinam.com/full.php?2b34OOA4b...cf1e02cceocYU3e

புலிகள் சண்டைஇடவில்லையாம் ஓடிக்கொண்டுள்ளார்களாம்... அவ்வாறாயின் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தரப்பைப் பார்த்து சர்வதேசம் எவ்வாறு யுத்தத்தை நிறுத்தச்சொல்லி கேட்க முடியும்?

அமரிக்காவும் ஏனைய நாடுகளின் கட்டமைப்புக்களும் கோத்தபாயாவின் கருத்தை கருத்தில் எடுப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அரசு இப்போர் நிறுத்தத்தை எள்ளி நகையாடுவதோடு மட்டுமல்லாமல் முன்னேறி மக்களை பிடிப்பதில் கூடிய ஆர்வம் காட்டும். உலக நாடுகளும் வேடிக்கை பார்க்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்பதை எவராலுமே ஊகிக்க முடியாது என்பதற்கு மீண்டும் ஓர் எடுத்துக்காட்டு, பந்தி பந்தியாக இராணுவ ஆய்வு தொட்டு எல்லாவகையான ஆய்வு எழுதியவர்களுக்கும் எமது தலைவன் இவை எல்லாவற்ருக்குமே அப்பாற்பட்ட ஓர் பரம்பொருள் என்று சொல்லக்கூடிய ஒருவராலுமே ஊகிக்க முடியாத ஓர் இராஜதந்திர நகர்வு, இப்படியான ஓர் இராஜதந்திரியின் தலைமையில் ஓர் நாடு உருவாகினால் அது இஸ்ரேலை மிஞ்சும் தேசமாக வளரும் என்பதுதான் உலக நாடுகளின் தற்போதைய கவலை.

இதையெல்லாம் விட ஏற்கனவே வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கும் நிலையிலுள்ள இலங்கைக்கு இந்த நகர்வு வயிற்றாலேயே போகவைத்துவிடும் என்பதற்கு கோத்தபாயவின் உடனடி அறிக்கை ஓர் உதாரணம். எப்படியோ உலக நாடுகளின் சொல்லிற்கு இணங்க போர் நிறுத்தம், இப்போது உலக நாடுகளுக்கு யார் யுத்தத்தை விரும்புகிறார்கள் என்பது தெரிந்துவிடும், இதற்குப் பதில் நடவடிக்கை எங்களுக்கு எப்படி வலுச்சேர்க்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

இனிய நண்பர்களே "சந்தோச மேகங்கள் வந்தாடும் நேரத்தில் செந்தூர பூமழை தூறியதே."

மிக விரைவில்.

  • தொடங்கியவர்

ஏற்புடைய அனைத்து வழிகளும் பிரயோகிக்கப்படுகின்றது. இப்படியொரு நிகழ்ச்சிநிரலை சிங்களம் எதிர்பார்த்திருக்காது. ஆனாலும் நடைமுறைக்குக் கொண்டுவருவது சர்வதேசத்தின் வேலை. அவர்கள் பதிலளிக்கமாட்டார்கள் பாராமுகமாக இருந்தும்விடலாம். இப்போது முடியாதநிலையிலிருக்கின்ற இந்தியாவை, இனிமேல் ஓரங்கட்ட சிறிலங்கா திட்டங்களை வகுத்திருக்கும்.

இந்தியப் பிராந்திய வல்லரசுத்தனத்திற்கு இது ஒரு பெருஞ் சவால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.