Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியா கவிதைகள்

Featured Replies

கவிதை நன்றூ:

  • Replies 220
  • Views 28.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை நன்றி

கவிதை சூப்பர்...

அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்

காதல..உன் வருகைக்காய்

இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்

காதலா..உன்னவளின் வருகைக்காய் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

என்ன சின்னதிரையிலை சீரியலா காட்டினம் ....உந்த அழுகிறாய் பிள்ளை... :lol:

ம் அப்படி பார்க்கும் போது சரியாக தான் இருக்கின்றது, இது எனக்கு தோணலை,

எனக்குத்தோணி இருக்கே :lol:

                                                                                           என்ன சின்னதிரையிலை சீரியலா காட்டினம் ....உந்த அழுகிறாய் பிள்ளை... :lol:

காத்திருப்பு கவிதையின் சோகமான வரிகளும் அதனுடன் இணைந்த மெல்லிய இசையும் மனதை வருடும் அதேவேளை கேட்பவர்களை சோகத்தில் அழுத்தவும் செய்கின்றது. அந்த கவிதை முடிந்த பின்பும் 15 செக்கன்களுக்கு மேல் ஒலிக்கும் நமக்கு மிக மிக பரிச்சயமான கண்ணே கலைமானே பாடலின் இசை, கவிதையின் சோகமான கருப்பொருளை உணரவும் கவிதையை மீண்டும் ஒரு முறை சிந்திக்கவும் உதவுகின்றது.

அந்த அமரத்துவம் அடையாத கண்ணதாசன் வரிகளை இந்த கவிதையுடன் இணைந்து நினைத்து பார்த்தல் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். (இது இளையராஜாவுடன் இணைந்து கண்ணதாசனின் கடைசி திரையிசை பாடல் என்று இணையத்தில் படித்தேன்)

படம்: மூன்றாம் பிறை

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ ஓராரிரோ

ராரிராரோ ஓராரிரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்

உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

இந்த இணைப்பில் பாடலை தரவிறக்கம் செய்து கேட்கலாம் ....

http://web.music.coolgoose.com/music/song....d=192726

அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்

காதலா, உன் வருகைக்காய்

இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்

காதலா, உன்னவளின் வருகைக்காய்

ம் இந்த வரிகள் நன்றாக தான் இருக்கின்றன. அதுவும் பாடலில் ஒரு பெருமூச்சை தொடர்ந்து இந்த வரிகள் வரும் போது கவிதையில் வரும் காதலியின் ஏக்கத்தை சிறப்பாக வெளிக்காட்டுகின்றது.

எனக்கு பிடித்தவை என்ற வலைப்பூவில் இருக்க வேண்டியது போல இருக்கே. :wink:

நன்றி மதன் அண்ணா பாடலுக்கும் விளக்கத்துக்கும் :P

கே ஜே ஜேசுதாஸ் பாடிய அன்புள்ள அப்பா திரைப்பட பாடலான மரகதவல்லிக்கு மணக்கோலம் ...................என்ற பாடலை எங்காவது தரவிறக்க முடியுமா? :?:

  • தொடங்கியவர்

நித்தியாவின் இன்னொரு கவிதை.

[url=http://www.vannithendral.net/soundclips/suvaasam.mp3]சுவாசம்

நன்றி நித்தியா, நன்றி இளைஞன்.

  • தொடங்கியவர்

எல்லாமாக நீ எனக்கு

என்னவாக நான் உனக்கு?

என்று தன்னவனை தவிப்போடு கேக்குறார் நித்தியா.

[url=http://www.vannithendral.net/soundclips/ellamahe_nan_unnaku.mp3]எல்லாமாக நீ எனக்கு

நீ

இமயமாக இருந்தால்- நான்

உன் மார்பு தொட்டுப் போகும்

கார் முகிலாக இருப்பேன்..

நீ

காற்றாக இருந்தால் - நான்

உன் கன்னம் தொட்டுப் பேசும்

பூவாக இருப்பேன்..

நீ

கண்ணாக இருந்தால் - நான்

உன்னைக் கட்டிக் காக்கும்

இமையாக இருப்பேன்..

நீ

உடலாக இருந்தால் - என்

உயிர் தந்து காக்கும் ஒரு

பிறவியாக இருப்பேன்..

எல்லாமாக நான் உனக்கு

என்னவாக நீ எனக்கு..???

நீ கண்களாக இருந்தால்

நான் உனைக் கட்டிக்காக்கும்

இமையாக இருப்பேன்

சூப்பர் கவிதை. அவரின் வாசிப்பும் வாசிக்கும் போதுள்ள வெட்கத்துடன் கூடிய சிரிப்பும் சூப்பர். வெட்கம் வாசிப்பிலேயே தெரியுது. இசையும் அருமையாக இருக்கு. மேலும் தொடர வாழ்த்துக்கள் நித்தியாக்கா. :P :P

எல்லாமாக நான் உனக்கு

என்னவாக நீ எனக்கு..???

சூப்பர் கவிதை ...குரலும் சூப்பர் .. நல்லா வாசிக்கிறா..மேலும் தொடர வாழ்த்துக்கள் ... :P

சூப்பர் கவிதை ...குரலும் சூப்பர் .. நல்லா வாசிக்கிறா..மேலும் தொடர வாழ்த்துக்கள் ... :P

தொடர்ந்து வாசிக்க சொல்லுங்க வாசிப்புக்கு நன்றி.

நித்தியா

மேலே சொன்ன வசனங்களின் பாணியில் ஒரு பாடல் இருக்கிறதல்லவா?

எல்லாமாக நான் உனக்கு

என்னவாக நீ எனக்கு..???

இது நியாயமான கேள்வி :lol:

கவி நன்றாக இருக்கு நித்தியா வாழ்த்துக்கள்.

நித்தியாவின் இன்னொரு கவிதை.

[url=http://www.vannithendral.net/soundclips/suvaasam.mp3]சுவாசம்

காதலை மறப்பது எவ்வளவு கடினம் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றார்.

எல்லாமாக நீ எனக்கு

என்னவாக நான் உனக்கு?

என்று தன்னவனை தவிப்போடு கேக்குறார் நித்தியா.

[url=http://www.vannithendral.net/soundclips/ellamahe_nan_unnaku.mp3]எல்லாமாக நீ எனக்கு

தான் எப்படியெல்லாம் காதலனை தாக்குவேன் என்று சொல்லி நீ என்ன செய்வாய் என்று கேக்கும் கவிதை குரல் வடிவில் கேட்க நல்லாயிருக்கின்றது.

இது நியாயமான கேள்வி :lol:

அது தான் காதலன் தான் கவிதையில் காதலிக்கு சொந்தமான இமயமாகவும் காற்றாகவும் கண்ணாகவும் உடலாகவும் இருக்கின்றானே. இதைவிட வேறு என்ன வேண்டும் குளக்ஸ் :P

[

அது தான் காதலன் தான் கவிதையில் காதலிக்கு சொந்தமான இமயமாகவும் காற்றாகவும் கண்ணாகவும் உடலாகவும் இருக்கின்றானே. இதைவிட வேறு என்ன வேண்டும் குளக்ஸ் :P

அப்பிடியா நித்தியா சொல்லி இருக்கங்க மதன் வடிவா கேட்டு வாசியுங்க

  • தொடங்கியவர்

காதலா

kathalaa_136.jpg

ஏய் காதலா

நில்! ஏன் ஓடுகிறாய்?

திரும்பிப் பார்க்காமல் -என்னை

தொட்டுப் பார்க்காமல்

நான் தொடத் தகாதவள் அல்ல

நுனிவிரல் தீண்டிப்பார் -என்

தேகமும் சூடாய் இருக்கும்..

தோல் உரித்துப்பார் -எனக்கும்

இரத்தம் வரும்..

ஓர் சூடு போட்டுப்பார் -என்

உடலும் கருகும்..

அழவைத்துப்பார் -என்

கண்ணீரிலும் உப்புக் கரிக்கும்..

அணுக விரும்பவில்லை என்றால்

தூர நின்று புன்னகைத்துப் பார் -என்

புன்னகையிலும் மனிதம் இருக்கும்

நான் வேற்றுலகக் காரியில்லை -உன்னால்

வேறுபடுத்தப்பட்டவள்..

வெறுப்புடன்

நித்தியா

வாவ் சூப்பர் கவிதை.."எல்லாமா நான் உனக்கு"

பாடல் இசையும் சூப்பர்...

கவிதை சுப்பர் .தொடருங்கள்

என்ன இளைஞன், நித்தியா குரலை காணலை :lol:

கவிதை என்ன காதலனிலை வெறுப்பா வருதா இல்லை........வெறுப்பென்று பேச்சிலும் உள்ளத்தில் பாசத்துடனும் வருதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.