Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிருந்தனின் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

அடெ பெடியா என்னை மாதிரியே நீரும் கவிதை எல்லாம் நல்ல எழுதிறிர் எப்படி?

எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் அண்ணா.

வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.

  • Replies 101
  • Views 11k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கவிதைக் காதலை சுவைத்தோம் பிருந்தன். தொடருங்கள்.

"வாலி போடுவார் அவளுக்கு வேலி" என்கிற வரிகளின் கருத்தோடு உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? கவிதைக்கு வேலி போட முடியுமா? வாலி என்கிற சொல்லுக்காக வேலியை பயன்படுத்தியிருக்கிறீர்கள், ஆனால் கருத்து பொருத்தமாக இருக்குமா என்பது குழப்பமாகவே உள்ளது.

நன்றி.

அந்த வார்த்தைகள் எதுகைமோனைக்காக எழுதப்பட்டிருந்தாலும், ஒவ்வொருகவிஞனும் கவிதை தம் வசப்படவேண்டும் என்றே விரும்புகிறான் எழுதுகிறான், எமதுகாணியை சுற்றி வேலிபோட்டால் அது எமக்கு சொந்தம், காணிக்குபோடலாம் கவிதைக்கு போடலாமா? போட்டாலும் அது அடங்குமா? என்பதுதான் நான் சொல்லவந்த கருத்து.

உங்கள் கருத்துக்கு நன்றி இளைஞன்.

மீண்டும் களத்தில் பிருந்தன் அண்ணாவை கண்ணுற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. அண்ணா நலமா? கவிதையோடு வந்திருக்கிறீங்க. உங்கள் காதல் கவிதை நாயகியோடு சந்தோசித்திருக்க வாழ்த்துகிறேன் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அழகா இருக்கு பிருந்தன்........தொடர்ந்து எழுதுங்க....

பிரிந்தன் உங்கள் கவி நல்லாயிருந்தது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கூறிய மாதவன்,அனித்தா,வெண்ணிலாவுக்க

பிருந்தன்... உங்கட கவிதை எல்லாம் நல்லா இருக்கு,

வாழ்த்துக்கள்..

தொடர்ந்து எழுதுங்கோ....

Birundan --கவி¨¾ நல்லாயிருந்தது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பவான், ரேனுகா வாழ்த்துக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுப்புதுக் கருக்களை எடுத்து புதுமையான வகையில்

புதுக்கவிதைகளை வடிக்கும் பிருந்தனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

பிறப்பாலே இவர் ஒரு கவிஞர்தான் சந்தேகமில்லை!

  • தொடங்கியவர்

புதுப்புதுக் கருக்களை எடுத்து புதுமையான வகையில்

புதுக்கவிதைகளை வடிக்கும் பிருந்தனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

பிறப்பாலே இவர் ஒரு கவிஞர்தான் சந்தேகமில்லை!

ஜயா செல்வமுத்து ஆசிரியரே உங்கள் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தை கொடுத்தாலும், பிறப்பாலே கவிஞர் என்பது கொஞ்சம் ஓவர்போல் இருக்கிறது. :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கால நதி

காதலெனும் தீவினிலே

நான் ஓடமாய் காத்திருந்தேன்!

ஓடம் நான் ஓட்டிடவே

கடல் தன்னை கானவில்லை!

தண்ணீர் இல்லா ஓடமெதற்கு

காதல் இல்லா வாழ்வெதற்கு!

காத்திருந்தேன் தீவினிலே

உனை நான் பாத்திருந்தேன்!

காத்திருந்தும் நீ வரவில்லை

கடல் மட்டும் வந்து சேர்ந்தது!

வந்த கடல் கதை கூறி சென்றது

அது உன் கண்ணீரென்று சொன்னது!

கடல் அளவு கண்ணீர் வடித்திடவே

உனக்கு என்ன துன்பம் நேர்ந்துவிட்டது!

ஓடத்திலே ஓடிவந்தேன் உனைதேடி

ஓடி வந்த ஓடம் தன்னும் நின்றுவிட்டது!

ஓடிய ஓடம் நின்றதேன்

உன் கண்ணீரும் உறைந்ததேன்!

உப்புப் பாறையில் நான்

துக்கப் பார்வையில் நீ!

தூள் தூளாகாதோ இப்பாறை

திறந்திடாதோ உன் சிறை.

அவளின் சிறை திறந்து விட வாழ்த்துக்கள். பிருந்தன் இந்தக் கவிதையும் அருமை.

  • தொடங்கியவர்

நன்றி ரமா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

  • 2 months later...
  • தொடங்கியவர்

சொந்தம் ஆகிவிட்ட காதல்.

உன் பார்வை எனக்கு கிடைத்துவிட

என் பாதையை நான் மறந்து விட்டேன்!

அவ்வழி நீபோவது கண்டால்

இவ்வழி நான் ஏங்குவது உண்டு!

சேர்ந்து நீ உன் அண்ணனுடன் போகையில்

சோர்ந்து இருப்பேன் அன்று முழுதும்!

கடைக்கண் பார்வை கிடைத்திடவே

கடை வீதியில் காத்திருப்பேன்!

தூரத்தில் நீ வருதல் கண்டால்

ஓரத்தில் நான் பார்த்திருப்பேன்!

பார்வைதன்னும் கிடைத்து விட்டால்

பாரயே வென்றவன் போலாவேன்!

இன்று கிடைத்தது உன் பார்வை

அன்று பெற்றேன் நான் ஜனித்த பலனை!

பார்த்திருந்தேன் நாளை விடியலுக்காக

போர்த்திருந்தேன் இரவுமுழுதும் போர்வைக்குள்ளே!

கடிதமொன்று தந்து விட்டாய்

படி எல்லாம் தடுமாறி நிலைமாறுதே!

படித்து விட்டேன் உன் கடிதத்தை

முடித்து விட்டாய் என் வாழ்கையை!

கொடுத்து விட்டேன் நீ அண்ணனுக்கு எழுதியகடிதத்தை

கொழுந்து விட்டு எரியுதே என் நெஞ்சக்கணல்!

பொறுத்து விட்டேன் நீ

என் அண்ணி என்பதால்.

அச்சோ பாவம் காதலி அண்ணி ஆகிட்டாவா

கவிதை நல்லாயிருக்கு பிருந்தன் அண்ணா

பிருந்தன் கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

சொல் சிக்கனமும் கவிதைக்கு அழகு...

எல்லாவற்றையும் விபரித்து விட வேண்டுமென்பதல்ல.....

சொல்லாமல் வாசகர் ஊகத்திற்கு விடுவதும் கவிதைக்கு அழகு சேர்க்கும்.....

தேர்ந்தெடுத்த வார்த்தகள் கவிதையைச் சிகரத்திற்கு கூட்டிச் செல்லும்....

வார்த்தைகளின் அழகும் கவிதை தான் ....ஆனால் நல்ல உட்பொருளும் இருந்தால் அது நல்ல கவிதை.....

உதாரணம்: // முகிலினங்கள் அலைகின்றன....முகவரிகள் தொலைந்ததுவோ?

முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ.. அது மழையோ?// - வைரமுத்து

இது நல்ல சொற்கட்டுக்கு உதாரணம் ஆனால் மேலோட்டமான விடயம் ....அதற்கு மேல் இது கிலாகிக்கப் பட மாட்டாது....

//காத்திருக்கும் வரை நமது பெயர் காற்றாய் இருக்கட்டும்...

புறப்பட்டு விட்டால் புரிய வைப்போம் புயலென்று...// மேத்தா.

இதில் சொல்கட்டும் உட்பொதிந்த ஆழமான பொருளும் இருக்கின்றது.

காலமெல்லாம் நிலைத்திருக்கக் கூடியவை இவைகள்.... :idea: :idea:

தொடருங்கள்.... தொடர்ந்த பயிற்சி சிறப்பைத் தரும்....

கவி எழுதத் துடிக்கும் -எல்லாள மஹாராஜா-

ஐயோ பாவம் அந்தக் காதலன். கவிதை நன்றாக இருக்கு பிருந்தன். தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகளுக்கு மீண்டும் எனது நன்றிகள்.

உங்கள் கவிகளில் ண, ன இவைகளைக் கவனித்து எழுதவும்.

கால நதி

உணை நான் பாத்திருந்தேன்!

ஓடி வந்த ஓடம் தன்னும் நிண்றுவிட்டது!

சொந்தம் ஆகிவிட்ட காதல்.

சேர்ந்து நீ உன் அன்னனுடன் போகையில்

பாரயே வெண்றவன் போலாவேன்!

கடிதமொண்று தந்து விட்டாய்

கொடுத்து விட்டேன் நீ அண்ணுக்கு எழுதியகடிதத்தை

மற்றைய எழுத்துப் பிழைகளையும் கவனிக்கவும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வாழ்த்துக்கூறிய நித்திலா,ரசிகைக்கும். பயிற்சி தந்த எல்லாளனுக்கும், குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியருக்கும் நன்றிகள்.

  • 10 months later...
  • தொடங்கியவர்

போராட்டம்

பேறுகாலத்தில்

பிள்ளைகளை,பிரசவிக்க

தாய் நடத்துவாள்,

ஈழத்தில்

தாயைப் பிரசவிக்க

பிள்ளைகள் நடத்துகிறார்கள்.

பிரசவம்.. அருமையான சிந்தனை

வாழ்த்துகள் பிருந்தன்..

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைப் பூங்காட்டினுள் காலிடறி நானுழைந்தேன்!

கண்ட மலர்களெல்லாம் பொன் மலராய் மின்னுதம்மா!

வண்ணங்களோ ஏராளம் சிந்துவதோ தேன் துளிகள்!

பறந்துவந்த வண்டார்ரெலாம் பார்வையினாள் பருகுகின்றார்!

வேண்டுமட்டும் நானுமுண்டு நினை வாழ்த்திப் பறக்கின்றேன் !!!

கவிதைகள் இருக்குது உணர்வோடு

படிக்கிறோம் நமதை மகிழ்வோடு

இணைக்கனும் தினமும் யாழோடு

இனிதே உரைக்கிறோம் வாழ்த்தோடு...

பிருந்தன், உங்கள் கவிதை அற்புதம்.

இதுவரை:

அம்மா

லிபரேஷன் ஒப்பரேஷன்

காதல் அவஸ்த்தை

வெளிநாடு

அக்கரை

இயற்கை காதல்

இழப்பு

இயந்திர மனிதன்

கவிதைக் காதல்

கால நதி

சொந்தம் ஆகிவிட்ட காதல்

போராட்டம்

என்று அடுக்கடுக்காக உங்கள் கவிதைகள் கிடைக்கப்பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி.

சற்றுத் தாமதமாகவே உங்கள் கவிதைகளைக் கண்ணுற்றேன் எனினும் ஒன்றுவிடாமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டுமென்ற ஆர்வமாயிருந்தது.

தொடர்ந்து வழங்க எனது வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.