Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்கினிச் சிறையுடைக்கும் மீட்பர்களுக்காக மானுட உய்வு காத்துக் கிடக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aftermath_IDP_TamilNational_07.jpg

அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை

மீட்பர்களற்ற வதைமுகாம்கள்

மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட

அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.

பசி மயக்கத்தில் கேட்பாரற்று

உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில்

சருகாகின தனிமைக் கூடுகள்.

அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள்

உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கிறது.

கூடி அழ ஆளின்றி

மானிட மரணங்கள் மலினப்படுகின்றன.

தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து

சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது.

ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி

பெண்மை கறையுற்று நனைகிறது.

மறைப்புகள் அற்ற திறந்த வெளி

இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது

அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை

அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன.

நைந்த ஆடையின் கிழிசல்களுக்குள்ளால்

வதையின் ரணங்களை வானமே பார்க்கிறது.

வற்றிய உடல்களை விரித்தும் ஒடுக்கியும்

சுவாசம் பிடிவாதமாய் ஒட்டி அசைக்கிறது.

அக்கினிச் சிறையுடைக்கும் மீட்பர்களுக்காக

மானுட உய்வு காத்துக் கிடக்கிறது.

Edited by valvaizagara

சாகரா அக்கா,

உங்களின் கண்ணீருக்கு விடை இங்கு 'துரோகி பட்டம் என ஆன பின்' வாழ்வில் மிஞ்சியது எது? நான் மறந்தேனும் வன்னி மக்களை பற்றி சிந்திப்பதை தவிர்த்து கொள்கின்றேன்.... 5ஆம் ஈழப் போர் அல்லது 5 ஆம் ஓயாத அலைகள் பற்றி சிந்திப்பதே தமிழ் தேசிய விடுதலை ஆதரவாளன் என்று ஆன பின் மக்கள் பற்றி சிந்திக்க பயப்படுகின்றேன்

அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை

அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை

அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன.

நைந்த ஆடையின் கிழிசல்களுக்குள்ளால்

வதையின் ரணங்களை வானமே பார்க்கிறது.

இதன் பின்னாலான் சோகம் பற்றி கதைப்பதால் நீங்கள் கூட துரோகி ஆகலாம். நைந்த ஆடையின் கிழிசல்களுக்குள்ளால் தெரிவது எம் அரசியல் வங்குரோத்தனமும் வெற்றிடமும் மட்டுமே

அக்கினிச் சிறையுடைக்கும் மீட்பர்களுக்காக

மானுட உய்வு காத்துக் கிடக்கிறது.

மீட்பர்கள் எல்லாம் சமாதியில்....அடுத்த தலைமுறை வரும் வரையில் முள் முடி தரித்தன்வனை விடுவிக்க முனைந்தவனையும் மறக்கும் சமூகத்தில் மீட்பர்கள் வால் நட்சத்திரம் வரும் வரை காத்திருப்பார்களாம். எம் வால் நட்சத்திரம் முள்ளி வாய்க்காலில் நாமே தொலைத்த பின் இப்போ வெற்று வெளியில் தேடுகின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வு ததும்பும் கவிதைக்கு சகாரா அக்காவுக்கு பாராட்டு!

கவிதையை மட்டு இல்ல இல்ல உண்மய நீங்க சொன்னது சுட்டது! என் மன சாட்சியை....

முள்ளிவாய்க்காலில் எம் உறவுகள் முகமிழந்தனர்....

முல்லைத்தாண்டிய போது அவர்கள் முகவரியிழந்தனர்...

முள்வேலிக்குள் இன்று முகாரி பாடுகின்றனர்...

முடிவு 'யார்" கையில்....!

நிழலி அண்ணாஇ உங்களை துரோகியாக்கும் அதிகாரம் யாரிடமும் இல்லை. அதே நேரம் தமிழீழம் என்ற தலைவனின் மூச்சை மறந்து கிடைப்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் இன்டைக்கு தமிழினமும் ஏன்இ தலைவரால் நியமிக்கப்பட்டவரும் நிக்கினம்.

உண்மையில ஆயுதப்போரை நாம் விரும்பவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லுறதுஇ நாங்க இதுவரைக்கும்இ இயக்கம் வெருட்டி தான் அவர்களுக்கு ஆதரவளிச்சனாங்கள் என்று சொல்லுற உலகத்தின் செய்திக்கு சமனானதாக தான் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வதைபடும் மனங்களின் வலியும் வேதனையும் வரிகளாய்.............. உண்மையைச் சமாதிகட்டிடும் உலகுக்கு இதனை எடுத்துச் செல்லவேண்டும்.

சிறிலங்கா புரிந்துகொள்ளப் போவதில்லை. ஏனென்றால் நாமே இன்னும் புரிந்து கொள்ளாதபோது எப்படி........... எம்மையழிக்கின்ற இனம்................. துடிக்கின்ற நாடுகள்........... ????????

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல கவிதை அக்கா நன்றிகள்.

பிரியமுடன்: யாயினி கனா.

  • கருத்துக்கள உறவுகள்

அக்னி சிறை யுடைக்கும் மீட்பர்களுக்காய் ................காத்துக்கிடக்கும் தேசத்துக்கு நாம் என்ன செய்கிறோம் ?

ஒவ்வொருவாரும் நெஞ்சை தொட்டு கேட்வேண்டிய கேள்வி ....நெஞ்சை தொட்டு செல்லும் கவிதை.நன்றி சகாரா ..........

முள்ளிவாய்க்காலில் எம் உறவுகள் முகமிழந்தனர்....

முல்லைத்தாண்டிய போது அவர்கள் முகவரியிழந்தனர்...

முள்வேலிக்குள் இன்று முகாரி பாடுகின்றனர்...

முடிவு 'யார்" கையில்....!

முடிவு கையில் இருப்பதாக தெரியவில்லை. பையில் இருப்பதாக தெரிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, பறவைகள், நொச்சி, யாகினி, நிலாமதி, கலைஞன் உங்கள் அனைவருடைய கருத்துகளுக்கும், கவனத்திற்கும் நன்றிகள்.

இதன் பின்னாலான் சோகம் பற்றி கதைப்பதால் நீங்கள் கூட துரோகி ஆகலாம். நைந்த ஆடையின் கிழிசல்களுக்குள்ளால் தெரிவது எம் அரசியல் வங்குரோத்தனமும் வெற்றிடமும் மட்டுமே

மீட்பர்கள் எல்லாம் சமாதியில்....அடுத்த தலைமுறை வரும் வரையில் முள் முடி தரித்தன்வனை விடுவிக்க முனைந்தவனையும் மறக்கும் சமூகத்தில் மீட்பர்கள் வால் நட்சத்திரம் வரும் வரை காத்திருப்பார்களாம். எம் வால் நட்சத்திரம் முள்ளி வாய்க்காலில் நாமே தொலைத்த பின் இப்போ வெற்று வெளியில் தேடுகின்றோம்

நிழலி,

தொலைத்தவர்கள் நாமென்றால் தேடி எடுக்க வேண்டியவர்களும் நாம் தான்.

ஓசோவின் தத்துவத்தை மீளப்பார்க்கவேண்டும்.

தொலைத்த இடத்திலேயே தேடுவோம். உரிய விடை கிடைக்கும் வரைக்கும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மனிதப்பேரவலம் மீட்சி பெற்று உயிர்த்து உயிர்த்து ஏவி விட்டோரையும், ஏவல் செய்தோரையும் விரட்ட வேண்டும். நாம் அவற்றை வெளிக் கொணரும் பெரும்பணியைச் செய்வோம்.

உணர்வு ததும்பும் கவிதைக்கு சகாரா அக்காவுக்கு பாராட்டு!

கவிதையை மட்டு இல்ல இல்ல உண்மய நீங்க சொன்னது சுட்டது! என் மன சாட்சியை....

முள்ளிவாய்க்காலில் எம் உறவுகள் முகமிழந்தனர்....

முல்லைத்தாண்டிய போது அவர்கள் முகவரியிழந்தனர்...

முள்வேலிக்குள் இன்று முகாரி பாடுகின்றனர்...

முடிவு 'யார்" கையில்....!

நிழலி அண்ணாஇ உங்களை துரோகியாக்கும் அதிகாரம் யாரிடமும் இல்லை. அதே நேரம் தமிழீழம் என்ற தலைவனின் மூச்சை மறந்து கிடைப்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் தான் இன்டைக்கு தமிழினமும் ஏன்இ தலைவரால் நியமிக்கப்பட்டவரும் நிக்கினம்.

உண்மையில ஆயுதப்போரை நாம் விரும்பவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லுறதுஇ நாங்க இதுவரைக்கும்இ இயக்கம் வெருட்டி தான் அவர்களுக்கு ஆதரவளிச்சனாங்கள் என்று சொல்லுற உலகத்தின் செய்திக்கு சமனானதாக தான் இருக்கு

பறவைகள்,

இராணுவப் பிடியில் சிக்கியிருப்போர் வதைகளுக்குப் பயந்து வெளிப்படையாகபட பேச முடியாது ஆனால் புலம்பெயரிகள் ?

வதைபடும் மனங்களின் வலியும் வேதனையும் வரிகளாய்.............. உண்மையைச் சமாதிகட்டிடும் உலகுக்கு இதனை எடுத்துச் செல்லவேண்டும்.

சிறிலங்கா புரிந்துகொள்ளப் போவதில்லை. ஏனென்றால் நாமே இன்னும் புரிந்து கொள்ளாதபோது எப்படி........... எம்மையழிக்கின்ற இனம்................. துடிக்கின்ற நாடுகள்........... ????????

நொச்சி,

வலியறியாத மக்களல்ல அவர்கள். அவர்களைப் போல் நாம் எவருமே இதுவரை வதைகளை அனுபவித்தவர்களும் அல்ல. அவ்வளவு சீக்கிரம் உண்மைகளை சமாதி கட்டிவிட முடியாது ஆனால் சமாதி கட்டப் பெரும் பிரயத்தனம் செய்வார்கள். நாம்தான் எழமுடியாத கோழைகள் அவர்கள் எழுவார்கள். இப்போது அவர்கள் வலிப்பட்டு வலிப்பட்டு வைரம் பாய்கிறார்கள். அடக்கு முறையால் எந்த ஒரு உயிரையும் நீண்டகாலத்திற்கு ஆள முடியாது.

அக்னி சிறை யுடைக்கும் மீட்பர்களுக்காய் ................காத்துக்கிடக்கும் தேசத்துக்கு நாம் என்ன செய்கிறோம் ?

ஒவ்வொருவாரும் நெஞ்சை தொட்டு கேட்வேண்டிய கேள்வி ....நெஞ்சை தொட்டு செல்லும் கவிதை.நன்றி சகாரா ..........

நிலாமதியக்கா,

அவர்களின் வலிகளுக்கான மருந்து இலக்கு மாறாத எங்கள் பணிதான். வலிக்குந்தான் வலிக்குப் பயந்து பிரசவ நேரத்தில் குழந்தையைச் சாகடிக்கும் தவறிழைத்து விடக்கூடாது.

முடிவு கையில் இருப்பதாக தெரியவில்லை. பையில் இருப்பதாக தெரிகின்றது.

கலைஞன், இலக்கற்றதான பயணம் தொடர்ந்தால் பையும் காலியாக, பாசமும் போலியாக புலம்பெயர் சமூகத்தால் தாயக உறவுகளை கைவிடும் அவல நிலை தோன்றும். அதைத்தானே சிங்களம் எதிர்பார்க்கிறது.

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.