Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற புஷ்பகந்தன் 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற புஷ்பகந்தன் 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை:

pushpakanthan.jpg

கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 700 க்கும் மேட்பட்ட வைத்தியர்களிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ஈ.ஜே.புஷ்பகாந்தன் எனும் தமிழ் மாணவன்.

மட்டக்களப்பு சிவானந்த பாடசாலையில் உயர் கல்வி கற்ற புஷ்பகந்தன், உயர் கல்வியை யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்தார். அங்கே பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு, தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும், இலங்கையில் பல்வேறு வசதிகள் கொண்ட மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமிழ், சிங்கள மாணவர்களோடு போட்டி போட்டு முதல் இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு வைத்திய பேராசிரியர் கூட இல்லாத நிலையில், இறுதியாண்டு கற்பித்தல் செயற்பாடுகள் முற்று முழுதாக யாழ் வைத்திய சாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பல்வேறுபட்ட துறை சார்ந்த பேராசிரியர்களால் பயிற்றப்பட்ட வேறு பல்கலைக் கழக மாணவர்களோடு போட்டி போட்டு புஷ்பக்காந்தனால் முதல் இடம் பெற முடிந்துள்ளது என்றால் நிச்சயமாக இவரை பயிற்றுவித்த குறிப்பிட்ட சில வைத்திய நிபுணர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் நாம் பாராட்ட வேண்டும்.

சென்ற வருடம் மொத்தமாக 700க்கும் மேட்பட்ட வைத்தியர்கள் பட்டம் பெற்றுள்ளார்கள், இதிலே தமிழ் மாணவர்கள் மொத்தமாக வெறும் 200க்கும் குறைவாகத்தான் இருக்கும் (மாவட்டத்தில் இருந்து விகிதாசார அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுவதால் இந்த எண்ணிக்கையில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை) எஞ்சியவர்கள் அனைவரும் சிங்கள மாணவர்களாகும்.

அத்தோடு கொழும்பு பல்கலைக் கழக மாணவரான பாலசிங்கம் பாலகோபி என்பவரும் மருத்துவக் கல்லூரியின் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் மருத்துவம் பயிலும் தமிழ் மாணவர்கள் அனைவரும் யாழ்ப்பாண மற்றும் கொழும்பு மருத்துவக் கல்லோரிகளிலேயே உள்வாங்கப் பட்டுள்ளார்கள். (தற்போது சில வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலும் ஒரு கல்லூரி ஆரம்பிக்கப் பட்டுள்ளது)

ஆக, அகில இலங்கை ரீதியாக மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தமிழ் மாணவர்களே முதல் இடத்தைப் பெற்று எமக்கு பெருமை தேடித்தந்து உள்ளார்கள். இவ்வாறான சாதனையாளர்களை சமுகத்துக்கு வெளிக் கொண்டு வருவது சமூகத்தில் இருந்து மேலும் பல சாதனையாளர்களை உருவாக்குவதற்கு வழிகாட்டியாக அமையும்.

யாழ் பல்கலைக்கழகம் இன்னமும் உயிர்ப்புடன்தான் இருக்கிதென்பதற்கு இந்த மாணவனின் சாதனை சான்றாதாரமாக அமைகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news....11084&cat=1

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மேன் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் புஷ்பகாந்தன் .

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் என்னதான் வசதி வாய்ப்பு இருந்தாலும் பரீட்சை எழுதுபவர்கள் எல்லோரும் பல்கலைக்கழகம் போக வாய்ப்பிருந்தாலும்.. சாதனைகள் புரியப்பட்டாலும் அது வெளியில் தெரியுற அளவுக்கு அமைவதில்லை. அந்தளவுக்கு திறமையாளர்கள் போட்டிகள் அதிகம்.

தாயகத்தில் கடும் போர் மற்றும் இராணுவ நெருக்குவாரங்களின் கீழ் கல்வி கற்பதென்பது மிகக் கடுமையான ஒரு செயல் என்பதை அனுபவத்தால் உணர்ந்தவர்கள் நாம். அந்த வகையில் இவர்களின் சாதனை என்பது மேற்குலகில் ஒருவர் நிகழ்த்தும் சாதனையை விட பல மடங்கு அதிகம் என்றே சொல்லலாம்.

தென் தமிழீழத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் இந்தச் சாதனைச் செய்திருப்பது இன்னொரு சாதனையாகும்..! :mellow:

Edited by nedukkalapoovan

படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் படிக்கும் என்று சொல்வார்கள்... அதற்க்கு ஈ.ஜே.புஷ்பகாந்தன் ஒரு நல்ல எடுத்துக்காட்டு... வாழ்த்துக்கள் பல...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்துகள் புஸ்பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் தம்பி

தமிழனாய் உயர்க!.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட மாணவர்கள் மருத்துவத்தில் கற்பதற்கு இன்னும் நிறையவே உண்டு.

புலம்பெயர்ந்த மக்கள் அவர்களுக்கு உதவ ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.

என்னால் முடிந்தவரையில் என் பங்களிப்பை நான் செய்வேன்.

வாத்தியார்

.....................

இயற்கை......

தம்பி புஸ்பகாந்தன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

அவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் குழாமுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

அவருடைய பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தம்பி

தமிழனாய் உயர்க!.

வாழ்த்துக்கள். தொடரட்டும் இவர் சாதனைகள்.

வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சாதனை

மண்வாசனை.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.