Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும் புலிகளின் சாம்பலில் இருந்து உயிர்தெழுவோம்!!!!!!!!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரும் புலிகளின் சாம்பலில் இருந்து

உயிர்தெழுவோம்!!!!!!!!!!!!

கரும்புலிகள் எங்கள் கவசங்கள்!

கந்தகத்தைச் சுமந்து சென்று

களமதிர வெடிப்பவர்கள்!

வந்த பகை முடித்து

வாழ்க்கை தனைக் கொடுத்தவர்கள்!

சந்தன மரமாக

தம் தேகம் எரிப்பவர்கள்!

எந்த இடம் என்றாலும்

எதிரிகளை எரித்தவர்கள்!

சந்ததம் தங்கள்

தலைவனையே நினைத்தவர்கள்!

சொந்த பந்தமெல்லாம்

தூர வைத்துவிட்டு-தாயகத்தில்

குந்த வந்த எதிரிக்கு

குலைப்பனைக் கொடுத்தவர்கள்!

தமிழீழத்தின் தடை நீக்கிகள்!

தலைவன் கண்டு பிடித்த

அணுக்குண்டுகள்.

ஈழத்தமிழனின் இறுதி ஆயுதங்கள்!

ஆம்

நிலம் வீழலாம்!-எங்கள்

நெஞ்சம் வீழாது!

களம் மாறலாம்-எங்கள்

உளம் மாறாது!

எல்லாம் முடிந்தது என்று

இறுமாந்திருக்காதே பகையே!

காலம் வரும்வரை பொறுத்திருப்போம்

கரும் புலிகளின் சாம்பலில் இருந்து

உயிர்தெழுவோம்!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் முற்றிலும் உண்மையான கவிவரிகள் புலவர்.

அவர்களை அன்பு செய்ய அம்மா....அப்பா, சகோதரங்கள்,காதலன்,காதலி என்று ஆயிரம் உறவுகள் இருந்தும். அனைத்தையும் மறந்தவர்களாய்,துறந்தவர்களாய

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான வரிகள் அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

நிலம் வீழலாம்!-எங்கள்

நெஞ்சம் வீழாது!

களம் மாறலாம்-எங்கள்

உளம் மாறாது!............

.ஆணித்தரமாக் உறுதியான வார்த்தைகள். என்றும் எம் நெஞ்சில் இருக்கவேண்டும்.நன்றி புலவர். உங்கள் கவிதைக்கு .......

புலவர்! எளிமையான, உண்மையான வரிகள்.

கரும்புலிகள் நம் காவல்தெய்வங்கள். தெய்வத்தினினும் மேலானவர்கள்.இவர்களை வரிக்க வரிகள் போதாது.

நம் தேசவிடுதலைக்காக தம் சந்தோசமெல்லாம் துறந்து தம் மேனி பிய்த்தெறிந்தவர்கள்.

மகாத்மாக்கள் தியாகிகள் எல்லாம் இவர்களின் பின்னால்தான்.

என்னைப் பொறுத்தவரையில்... சர்வதேசத்தின் எதிர்காலத் தீர்மானங்கள் தமிழருக்கு ஒரு தீர்வை பெற்றுத்தரத் தவறும் பட்சத்தில்... கரும்புலிகளின் மீள்வரவு தவிர்க்கமுடியாததாகிவிடும்.

இப்பொழுது மெளனமாயிருக்கும் சர்வதேசம் அப்பொழுது தன் நிலையிழக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.

இனிமேலும் வெடிக்கும்! புதிதாய் தமிழினம் பிறக்கும்!

சிங்களம் தெறிக்கும்! சர்வதேசமெங்கும் அந்த செய்தி பறக்கும்!

"எல்லாம் முடிந்தது என்று

இறுமாந்திருக்காதே பகையே!

காலம் வரும்வரை பொறுத்திருப்போம்

கரும் புலிகளின் சாம்பலில் இருந்து

உயிர்தெழுவோம்!!!!!!!!!!!!"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட யாயினி குட்டிப்பையன்26 நிலாமதி அக்கா நான் அடிமையில்லை ஆகியோருக்கு எனது நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலவர் உங்கள் எழிமையான இனிமையான கவிதை பென்மன் மனதை தொட்ட கவிதை. நன்றி. முதற் கரும்புலி மில்லர் மற்றும் அவர் வழிதொடர்ந்த வீர வேங்கைகைள் எங்கள் விடுதலைப்போரின் சரித்திரம் படைத்த மண்ணின் மைந்தர்கள்.

நன்றி

பென்மன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி பென்மன்.

  • கருத்துக்கள உறவுகள்

இறுமாந்திருக்கும் பகைக்கு இடிவிழும்.

காற்றில் கரைந்தவர்கள் மனஊற்றில் பிறப்பெடுப்பார்கள்.

உங்கள் கவிதையை வாசிக்கும்போது நெஞ்சில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி வல்வை சகாரா.

அற்புதமான நெஞ்சை உருக்கும் காவிய வரிகள்

கரும்புலிகளுக்கு நிகர் அவர்களே தான்...........

இந்த காவிய நாயகர்களின் கனவு நனவாக

எல்லாத் தமிழர்களும் ஒற்றுமை என்ற ஆயுதத்தை

மனதில் சுமக்க வேண்டும்!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வரிகள் என்று வாய்திறக்க கூட பயமாக இருக்கின்றது. மக்கள் காப்பாளர்கள் இங்கால வந்தார்கள் என்றால் நன்றாக வேண்டி கட்ட போகின்றீர்கள்..... அது ஒன்றுதான் இப்போதைக்கு உறுதியாக சொல் முடியும். இன்னொரு போரா? மக்களை யார் காப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

நிலம் வீழலாம்!-எங்கள்

நெஞ்சம் வீழாது!

களம் மாறலாம்-எங்கள்

உளம் மாறாது!

எல்லாம் முடிந்தது என்று

இறுமாந்திருக்காதே பகையே!

காலம் வரும்வரை பொறுத்திருப்போம்

அற்புதமான வரிகள். நன்றி புலவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைச் சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்.

மருதங்கேணி தமிழனுக்கு புலத்திலேயே கருத்துச் சுதந்திரம் இல்லாமல் போய் விட்டது என்னும் கருத்தை விட்டு விடுவோம். குலைப்பவர்கள் குலைக்கட்டும். நாய் கடித்தால் திருப்பி கடிப்பவன் மனிதனாக முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான வரிகள்

  • 4 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை கருதி புதுப்பிக்கப்படுகிறது.கரும்புலிகளுக்கு வீரவணக்கம்!!!!

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் தடை நீக்கிகள்!
தலைவன் கண்டு பிடித்த 
அணுக்குண்டுகள்.
ஈழத்தமிழனின் இறுதி ஆயுதங்கள்!
ஆம்
நிலம் வீழலாம்!-எங்கள்
நெஞ்சம் வீழாது!
களம் மாறலாம்-எங்கள்
உளம் மாறாது!
எல்லாம் முடிந்தது என்று
இறுமாந்திருக்காதே பகையே!
காலம் வரும்வரை பொறுத்திருப்போம்
கரும் புலிகளின் சாம்பலில் இருந்து
உயிர்தெழுவோம்!!!!!!!!!!!! 

 

நன்றி ஐயா

ஆன்மாவை சிலிர்த்தெழச்செய்யும் அற்புதமான கவி வரிகள் புலவரே.

 

கரும்புலிகளை வர்ணிக்க முடியாமல் மொழிகளும் வார்த்தைகளும் ஊமையாகி மௌனிக்கும். அவர்கள் கடவுள் தன்மைக்கும் அப்பாற்பட்ட உன்னதமானவர்கள். பிரபாகரனின் உயிரில் உறைபவர்கள். தமிழீழ தேசிய ஆன்மாவே கரும்புலிகள் தான். மௌனித்த அந்த மகா புருஷர்கள் தலைவன் வரும் போது மீண்டும் வருவார்கள். இது சத்தியமான வார்த்தை.  

 

கரும்புலி மறவர் களத்திலே உண்டு
நிச்சயம் வருவார் தலவரை நம்பு
தகவல் தொடர்பு சரியாய் இருக்கு
சந்தேகம் எதுக்கு மீசை முறுக்கு.
தலைவர் உலகம் வியக்க வருவார். 
ஒரு நொடியில் ஈழம் பெறுவார். 
புதிய முறையில் போர் தொடுப்பார்கள்
புலிகள் பூமியை மீட்டெடுப்பார்கள்
ஆயுதம் கொடுத்தவர் அடிபணிவார்கள்
அப்போது கொழும்பையும் அடித்தெடுப்பார்கள்
விலை போன நரிகளின் சாயம் வெளுக்குது  
 
ஆஹா மெய் சிலிர்க்கும் உன்னதமான வரிகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.