Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை நிலைப்படுத்துவது எப்படி?!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதை நிலைப்படுத்துவது எப்படி?

உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்...

இது இன்று உறவினர் ஒருவருடன் விவாதித்த ஒரு விடயம். எங்கோ தொடங்கி கதை இதில் வந்து நின்றது...

எனது கூற்று - "நிலைப்படுத்த என்று- நாங்கள் வில்லங்க படுத்தி மனதை நிலைப்படுத்த முடியாது...மனம் என்பதும் தானாக நிலைப்படும் என்பதும் சாத்தியாமான விடயம் அல்ல... - எதுவுமே நிலையின்றி நிரந்தரமின்றி மாறி மாறி வந்து போய் கொண்டு இருக்கும் உலகில் - எப்படி ஒருவரின் மனம் மட்டும் நிலைப்படுத்தலுக்கு உட்படும்?

சில விடயங்கள் தானாக கூட வருகிறது - பல பரிமாணங்களை தாண்டினாலும் பெற்றோரில் உள்ள பாசம், தாய் நாட்டில் உள்ள பற்று என்று.... சிறு வயதில் பழகிய நல்ல பழக்கங்கள் சிலது, விரும்பி பற்றி கொண்ட கொள்கைகள் சிலது என்று.... ஆனால் இவற்றை கூட விரும்பியே தீர வேண்டும் என்று நாங்கள் எங்கள் மனதிற்கு கட்டளை போட்டு நிலைப்படுத்தி வைத்து இருக்கவில்லை...

இது தவிர்த்து அநேகமான விடயங்கள் மாற்றங்களுக்கு நின்று பிடிப்பது இல்லை...

ஏன்???" :icon_idea:

"மனதை நிலைப்படுத்தி வைத்து இருக்க தெரியாத படியால் தான் இந்த பிரச்சனை!" என்றார் என்னுடன் விவாதித்து கொண்டு இருந்தவர்.

"everything is dynamic in this world.. - எல்லாமே இந்த உலகத்தில் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கும் போது, மனதை மட்டும் வில்லங்கத்திற்கு வரிந்து கட்டி நிலைப்படுத்துவது என்பது எவ்வாறு?" என்று நான் வினவ...

சற்றே கடுப்பானவர் பதில் அளித்தார் - "எல்லாவற்றிற்கும் இல்லை.....ஆனால் நிச்சயமாக சில விடயங்களில் விருப்புடன் வரிந்து கட்டி மனதை நிலைப்படுத்தியே தீர வேண்டும்..... பிறகு விருப்பு உண்டோ இல்லையோ அதில் நிலைத்து இருக்க வேண்டும்!" என்று...

"ஏன்? ஏன் அது கட்டாயமாகிறது? எவ்வாறு அப்படி மனதை நிலைப்படுத்துவது?" - என்று மீண்டும் நான் கேட்க இன்னும் அதிகம் கடுப்பானவர் - "வள்...வள்..வள்..வள்...வள்...வள்..வள

்..வள்...வள்!!!!!"

என்று ஏதோ சொல்லி இருக்க வேணும் - எனக்கு விளங்கவில்லை!!!

சரி ஏற்கனவே நான் பேச்சு வங்கி நொந்து போய் இருப்பதால் - இங்கும் யாரும் கடுப்பேறி வள் வள் என்று குலைக்காமல் - விளங்கிற மாதிரி எடுத்து சொல்லுங்க!!

:D

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

மனதை ஒரு நிலைபடுத்தல் .......ரொம்ப கஷ்டமான விசயமுங்க.........அமைதி தேவை அதையே சிந்தனையில் இருத்தி அதற்காக் கடும் முயற்சி பண்ண வேண்டும். ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும் அதற்கான் முயற்சி வேண்டும் ஒரு தடவை பரீட்சையில் கோட்டை விட்டவன் அடுத்த தடவை பாஸ் பண்ணிடவேண்டுமேன்று ...அதற்காக் இடை விடாது .முயற்சிக்க வேண்டும் .......தொடர்ச்சியான முயற்சி .வேறு எந்த சிந்தனயும் வரக் க்கூடாது . இது என் சிறிய விளக்கம் .மேலும் பலர் வருவார்கள் சொல்ல .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிலாமதி அக்கா.

தேர்வுக்கு ஆயுத்த படுத்துவதை போல குறிப்பிட்ட காலம் மனதை தாராளமாய் ஒருநிலை படுத்தலாம்.... ஒரு குறிகோளுடன் இருக்கும் போதும் அதை அடையும் வரை மனதை ஒருநிலைப்படுத்தலாம்... அதுவும் கஷ்டம் என்றால் வாழ்கை என்று எதற்கு!

நான் குறிப்பிடுவது தூரநோக்குடன் ஆனது. எடுத்துகாட்டிற்கு, தெரியாத ஒரு இடத்தை இலக்காய் வைத்து பிரயாணிக்கும் போது, போய் சேருமிடம் தான் நிரந்தரம் என்று எவ்வாறு முன்னரே தீர்மானித்து நிலைப்படுவது? போய் இருந்து பார்க்க, இடம் நினைத்தது போல் இல்லாமல் போகலாம்/ இருந்தும் பிடிக்காமல் போகலாம் / அந்த இலக்கை தேர்வு செய்ததற்கான காரணங்கள் மாற்றங்கள் பெறலாம். இதில்- மனதை நிலைப்படுத்தி - ஏன் வைக்க வேண்டும்.. எவ்வாறு வைக்க வேண்டும்?!

(20 மார்க்ஸ் கேள்வி. ஜோசிச்சு பதில் எழுதுங்கோ :icon_idea: .)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எத்தனையோ முறை...... மனதை நிலைப்படுத்த முயற்சி பண்ணி பார்த்தேன் முடியவில்லை .

அந்த நேரம் தான் அதிகமாக குறுக்காலை போற யோசனைகள் வந்து தொலைக்குது .

சில வேளை ஏதாவதாவது ஆச்சிரமங்களில் சேர்ந்தால் மனதை நிலைப் படுத்தலாமோ ..... என்னவோ ...... ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் எத்தனையோ முறை...... மனதை நிலைப்படுத்த முயற்சி பண்ணி பார்த்தேன் முடியவில்லை .

அந்த நேரம் தான் அதிகமாக குறுக்காலை போற யோசனைகள் வந்து தொலைக்குது .

சில வேளை ஏதாவதாவது ஆச்சிரமங்களில் சேர்ந்தால் மனதை நிலைப் படுத்தலாமோ ..... என்னவோ ...... ?

மச்சான் இது உங்களை போன்ற என்னை போன்ற ஆக்களுக்கான திரி அல்ல ஆறுமுகநாவலருக்கான திரி. வாங்கோ நாங்கள் போவம்.ஆச்சிரமம் கேட்குதோ? அங்க போனால் இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதயும் போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் ஆச்சிரமம் கேட்குதோ? அங்க போனால் இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதயும் போயிடும்.

உண்மை தான் மச்சான் ஆச்சிரம் போனால் .... இருக்கிற நிம்மதியும் போய் விடும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான் இது உங்களை போன்ற என்னை போன்ற ஆக்களுக்கான திரி அல்ல ஆறுமுகநாவலருக்கான திரி. வாங்கோ நாங்கள் போவம்.ஆச்சிரமம் கேட்குதோ? அங்க போனால் இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதயும் போயிடும்.

:lol:

ஆறுமுக நாவலர் இப்ப நிழலிட "பெரிய இச்சை" தோட்டத்துக்குள்ள தான் மினக்கடுறாராம் தன்ட பெரிய புராணத்தை விட்டுட்டு என்று கேள்வி...(ஓ! அது நான் தொடக்கின வதந்தியா?! :icon_idea: சரி எதோ ஒண்டு...). மிஸ்டர் நாவலர் இங்க வந்து எனக்கு பதில் சொல்ல போறது இல்லை....சொன்னாலும் எனக்கு விளங்க போறது இல்லை..!

ஆசிரம ஜோசினைக்கு நன்றி. ஆனால் நான் நினைக்கிறேன் - ஆச்சிரம வாழ்கையும் பாதில அலுக்கலாம், இல்லையா?!

சரி கொஞ்ச நாள் யாரும் ஆன்மிகம் படிச்ச ஆக்களிட்ட மனதை நிலைபடுத்திரதை மட்டும் படிச்சு அறிஞ்சாலும் - மனம் அப்படி வில்லங்கத்துக்கு நிலைப்படுத்து பட வேண்டிய ஒன்றா?? தமிழ்ல என்ன வார்த்தை சரியானது என்று தெரியேல்லை - ஆனால் தானாக இயங்க வேண்டிய மனதை நிலைப்படுத்தி விட்டால் அதிட "sensitivity" குறைஞ்சு விடாதா?!

நெடுக்கு எங்க? ஏதாவது புதுசா ஒரு கோணத்தில இருந்து பதில் சொல்றதுக்கு - நான் கிளறி விடுறதுக்கு - பிறகு என்னையே குழப்புறதுக்கு!! :D

பின்வரும் 3 மிகச் சாதாரண விடயங்களில் எப்படி மனசை கட்டுப் படுத்துவது என்பதை முதலில் யாராவது சொல்லுங்கோ

1. அலுவலகத்தில் வேலை செய்யும் சக பெண் அலுவலகர் பெரிய V வடிவில் மேலாடை அணிந்து வந்து எனக்கு முன் குனிந்து நின்று ஏதேனும் தேடும் போது

2. பக்கத்து சீட்டில் இருப்பவன் கொண்டு வந்த புரியாணி உனவின் வாசனை மூக்கை துளைக்கையில், அவனின் உணவை பார்க்க ஆசை வரும் போது

3. மகனதும் மகளினதும் காபரே டான்ஸினை பிறந்த நாள், கல்யாண வைபவம் போன்ற ஒன்றில் நடாத்தி களைத்து , அதனை போக்க நல்லா தண்ணி அடித்த பின், "புலிகள் விட மாட்டாங்கள்" என்று வீர வசனம் பேசுபவர்களின் மூஞ்சியில் ஓங்கி குத்த மனம் நாடும் போது

:நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பின்வரும் 3 மிகச் சாதாரண விடயங்களில் எப்படி மனசை கட்டுப் படுத்துவது என்பதை முதலில் யாராவது சொல்லுங்கோ

1. அலுவலகத்தில் வேலை செய்யும் சக பெண் அலுவலகர் பெரிய V வடிவில் மேலாடை அணிந்து வந்து எனக்கு முன் குனிந்து நின்று ஏதேனும் தேடும் போது

2. பக்கத்து சீட்டில் இருப்பவன் கொண்டு வந்த புரியாணி உனவின் வாசனை மூக்கை துளைக்கையில், அவனின் உணவை பார்க்க ஆசை வரும் போது

3. மகனதும் மகளினதும் காபரே டான்ஸினை பிறந்த நாள், கல்யாண வைபவம் போன்ற ஒன்றில் நடாத்தி களைத்து , அதனை போக்க நல்லா தண்ணி அடித்த பின், "புலிகள் விட மாட்டாங்கள்" என்று வீர வசனம் பேசுபவர்களின் மூஞ்சியில் ஓங்கி குத்த மனம் நாடும் போது

:நிழலி

முதலாவது சுலபம்:

v neck சட்டை போட்டாலும், w neck சட்டை போட்டாலும் - உள்ளுக்க கிட்டத்தட்ட baked beans tin ஐ கவிட்டு கொட்டியதை போல இருக்கும்!

baked_beans.jpg

bakedbeans காட்சியை மனதில் நிறுத்த, கண்ணுக்கு முன்னால இருக்கிறதில புலன் போகாது...

இரண்டாவது:

இந்த கொடுமை எனக்கும் தெரியும். வேற வழி இல்லை :( . சடார் என்று அடுத்தவனின் சாப்பாட்டில் கை வைத்து விட்டு... அவன் கொலை வெறியுடன் உங்களை பார்த்தால் - "oh sorry! ரமடான் பழக்கம்... dubaiயின் பாதிப்பு" என்று சொல்லிக்கொண்டே ஒரு பிடியை அள்ளி கொண்டு மாறிவிடுங்கள்... :lol:

dscn1409.jpg

மூன்றாவது:

பிரச்சனை பெருசாகும் என்று மூக்கில குத்த கூடாது என்றால்...வேற ஏதும் நரி வேலை செய்திட்டு வந்தால் உங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். :icon_idea:

- எங்கட drink இல நாங்களே காறி துப்பிட்டு "மச்சான் இதை ஒருக்கா குடிச்சு பார் - சோக்கா இருக்கு"...என்று!!!! :lol:^_^

- அதுக்கும் கோவம் அடங்காட்டி நாலு சனம் எங்களை பற்றி என்ன நினைக்குது என்று ஜோசிகாம - வில்லங்கத்துக்கு ஒன்காளிச்சு என்றாலும் அவனுக்கு மேல சத்தி எடுத்திட்டு "really sorry மச்சான்.. sorry!!" என்று சொல்லி கொண்டே துடைக்கிற மாதிரி இன்னும் அவன்ட கோட் இல அப்பிட்டு தான் வரோணும் :D !! (சின்ன பிள்ளையள் இருந்தால் - அவையளிட்ட கெஞ்சி கேட்டு பார்க்கலாம் - அச்சா பிள்ளை மாதிரி அந்த மாமாக்கு மேல ஓடி போய் சத்தி எடுத்திட்டு வாங்கோ செல்லம்! எண்டு.. :lol: ..)

விடக்கூடாது இவங்களை... :lol:

-------

இதில இருந்து ஆக மொத்தம் மனதை கட்டுப்படுத்த எனக்கு தெரியாது...திசை திருப்ப தான் ஏலும்... :(

மனதை கட்டுபடுத்திறதை பற்றி உங்கட விளக்கம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்திரை தூக்கத்தில கேள்வியே மறக்குது..

"மனதை நிலை படுத்திறது எப்படி?" தான் கேள்வி.

(கட்டுபடுத்திறதுக்கும், கட்டுப்படுத்தி நிலைபடுத்திறதுக்கும் வித்தியாசம் இருக்கு என்று நினைக்கிறன்.... என்ன கறுமமோ...எனக்கே கண்ணை கட்டுது...!! :icon_idea:

ஏன் மனதை நிலைப் படுத்த வேண்டும் என்று நினைக்கிறியல்??? நீங்கள் சொன்னது போல எல்லாமே "everything is dynamic in this world.. ஆகத்தான் இருக்கு...

ம்ம்ம்... மேல இருக்கிறவர் ஏழாம் நாள் தான் ஓய்வு எடுகிறதுக்காக, ஆறாம் நாள் மனுசரைப் படைச்சு விட்டுட்டார்... :D அதுகள் எங்கட உருவத்தில இஞ்ச வந்து படுற பாடு யாருக்கு விளங்கப் போகுது??? :lol:

படைச்சது தான் படைச்சார், மனுசரை ஒரு தசையும் எலும்புகளாலும் சேர்ந்த கோர்வைபோல படிச்சிருந்தால் இப்படியான கேள்விகளே மனுசருக்கு வராது... :icon_idea: ஆனால் அப்படிப் படைக்க இல்லையே... மனுசரின்ர உணர்ச்சிகள் மனதிலும், யோசனைகளை மூளையிலும் உருவாகிற மாதிரித்தானே படைச்சிருக்கிறார்... அதனால, மனதில் உருவாகும் உணர்வுகளை சரியா, பிழையா என்று (நல்லது, கெட்டதுகளை) ஆராய்வதற்கு, எமக்கு இருக்கும் மூளையைப் பாவித்து :( காலத்திற்கு ஏற்ப அதன் படி அமைத்துக் கொள்(ல்)வது பிரயோசனமா இருக்குமென்று நினைக்கிறன்...

கொஞ்சம் பொறுங்கோ இளையபிள்ளை... எழுதினதைத் திருப்பி வாசிக்க எனக்கே தலை சுத்துது... :lol: கோதாரி...!! :lol:

பின்வரும் 3 மிகச் சாதாரண விடயங்களில் எப்படி மனசை கட்டுப் படுத்துவது என்பதை முதலில் யாராவது சொல்லுங்கோ

1. அலுவலகத்தில் வேலை செய்யும் சக பெண் அலுவலகர் பெரிய V வடிவில் மேலாடை அணிந்து வந்து எனக்கு முன் குனிந்து நின்று ஏதேனும் தேடும் போது

அலுவலகத்தில் உங்கள் கைக்கு எட்டக் கூடிய இடத்தில வைத்து இருங்கள்... அடுத்தமுறை முன்னால் அப்படி வரும் போது, ஒன்றும் சொல்லாமல் சடார் என்று stapler ஐ எடுத்து பெரிய V வடிவில் மேலாடையை சேர்த்து மறைத்து அடித்து விடுங்கள்...

அல்லது ஒரு scrap paper கசக்கி உள்ள போட்டு விட்டுட்டு, sorry dust-bin க்கு aim பண்ணி எறிஞ்சனான்... நீங்கள் முன்னால நின்டபடிய உள்ளபோட்டுது என்று சர்வசாதரணமா சொல்லிப் பாருங்கோ...

2. பக்கத்து சீட்டில் இருப்பவன் கொண்டு வந்த புரியாணி உனவின் வாசனை மூக்கை துளைக்கையில், அவனின் உணவை பார்க்க ஆசை வரும் போது

இளையபிள்ளையின் பதில்/ உங்களுக்கு மூக்கு நோண்டும் பழக்கம் இருக்குத் தானே... பிறகென்ன??? ஆள் இருக்கும் பக்கமாகப் பார்த்து double தும்மல்.... sorry... spice அதிகமாக இருக்குப் போல என்று சாமளிக்கலாம்... :icon_idea:

3. மகனதும் மகளினதும் காபரே டான்ஸினை பிறந்த நாள், கல்யாண வைபவம் போன்ற ஒன்றில் நடாத்தி களைத்து , அதனை போக்க நல்லா தண்ணி அடித்த பின், "புலிகள் விட மாட்டாங்கள்" என்று வீர வசனம் பேசுபவர்களின் மூஞ்சியில் ஓங்கி குத்த மனம் நாடும் போது

எந்த party எண்டாலும், குடிச்சுப் போட்டு அது முடியும் நேரம் சத்தி எடுக்கிறது தான் ஐதீகம்.... துணிஞ்சு செய்யலாம் நீங்களும்... தப்பே இல்லை! :D

:நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு எங்க? ஏதாவது புதுசா ஒரு கோணத்தில இருந்து பதில் சொல்றதுக்கு - நான் கிளறி விடுறதுக்கு - பிறகு என்னையே குழப்புறதுக்கு!! :D

முதலில் சொன்னவரிடம் கேளுங்கள்.. மனசு என்ற ஒன்று உடலில் எங்கு இருக்கிறது என்று. அதைக் கண்டுபிடிச்சால் தானே அதுக்கு வைத்தியம் பார்க்கலாம்...! அதைவிட்டிட்டு..??!

மனசு என்ற ஒன்று கிடையாது என்பது எனது எண்ணம். எண்ணம் என்ற ஒன்றுதான் இருக்கிறது. அது மூளையில் இருக்கிறது. மூளையின் செயற்பாடுகள் பல இச்சையின்றிய செயற்பாடுகள். அவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாது. இச்சையுள் செயற்பாடுகளை வேண்டுமானால் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். எண்ணம் இச்சையுள் இச்சையில் இரண்டும் கலந்தது.

ஆனால் உடலின் இயக்கத்துக்கும் மூளையின் செயற்பாட்டிற்கும் தொடர்பு இருப்பது போல.. இயற்கையின் இயக்க நிலைக்கும் உயிர்களின் இயங்கு நிலைக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது. மாற்றங்கள் இயற்கையானவை. ஏனெனில் இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சக் கொள்கைகளின் பிரகாரம்.. விரிந்து கொண்டிருக்கிறது.. பிறந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப கூறுகள் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். உயிரினங்களும் அப்படியே..!

ஆனால் தனி மனித எண்ணம் என்பது இயற்கையின் மாற்றங்களை வேண்டி மட்டும் செயற்படவில்லை. அது மனிதன் தானே உருவாக்கி வைத்துள்ள செயற்கைச் சூழலையும் உள்வாங்கி இயங்க வேண்டி இருக்கிறது. இயற்கையில் துப்பாக்கி இல்லை. ஆனால் எண்ணத்துக்கு துப்பாக்கியை அறிமுகப்படுத்தி.. அதற்கு அஞ்ச வைத்ததால் தான் ஆயுதத்தால் மனிதனே மனிதனை ஆள முடிகிறது... கட்டுப்படுத்த முடிகிறது.

கவர்ச்சி.. பெண்கள் கவர்ச்சியாகத் தெரிகிறார்கள் என்கின்றோம். அது எண்ணத்தில் தான். ஏனெனில் திறந்த புத்தமாக இயற்கை உருவாக்குவதை.. மூடி வைத்து மனிதன் தான் கவர்ச்சிப் பொருளாக்கினான். இயற்கையல்ல. இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப எமது உடலில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்கள் எமது உடலில் மாற்றங்களாக பதியப்படுகின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

ஆக எண்ணம் என்பது எமது உடலை இயக்கத்தை ஒழுங்கமைக்கும்.. கட்டுப்படுத்தும்.. வழிநடத்தும் ஒரு கட்டுப்பாட்டகம். அது விரிந்து பரந்து செல்லினும்.. கட்டுப்படுத்துவது என்பது கடினமல்ல. நஞ்சை கண்டு சாப்பிடாமல் விடுகிறோம்.. இல்ல சாப்பிட்டு பார்த்திடுவோம் என்றால் என்னாவது. அங்கு எண்ணம் கட்டுப்படவில்லையா. தினமும் உங்களை அறியாமலே உங்கள் எண்ணங்கள் பலவற்றை கட்டுப்படுத்துகிறீர்கள். ஆனால் கட்டுப்படுத்தனும் என்று நினைக்கிற எண்ணத்துக்குத்தான் கட்டுப்பட மறுக்கிறார்கள் பலர்.

அதையும் பயிற்சியால் முடியும் என்று நினைக்கிறேன்..!

நாம் வாழ்ந்த வளர்ந்த வாழ்கின்ற சுழல் எமது எண்ணத்தின் கோலத்தில் செல்வாக்குச் செய்கிறது. அதன் பொருட்டு அதனைக் கட்டுப்படுத்தும் இயல்பும் ஆளாளுக்கு மாறுபடுகிறது. எமது எண்ணத்துக்கு தவறானது.. இன்னொருவருக்கு சரியாகப்படும் போது.. கட்டுப்படுத்து என்று எதனை எப்படி வரையறுப்பது. பொதுவாக உடலுக்கு செயலுக்கு சிந்தனைக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதை கட்டுப்படுத்தச் சொல்லலாம். ஆனால் மாறுபட்ட வரையறுக்கக் கடினமான எண்ணங்களை மற்றும் ஒருவருள் தோன்றும் பலவகையான பலவேறு எண்ணங்களையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எண்ணங்கள் செயல்வடிவமாவதை கட்டுப்படுத்தலாம்.. (உதாராணத்துக்கு ஒரு பிள்ளை ஒரு பொருளைக் கேட்டு அழுகிறது. ஒன்றில் அந்தப் பொருளை தருவித்துக் கொடுக்க வேண்டும்.. அல்லது அந்தப் பொருளின் கிடைத்தற் தகவு சாத்தியமில்லை என்பதை பிள்ளைக்குப் புரிய வைக்க வேண்டும்.. இன்றேல்.. அதற்கு மாற்றீடாக அதன் எண்ணத்தை வேறு திசைப்படுத்த வேண்டும். அன்றில்.. குழந்தையின் அழுகையை நிறுத்துவது அதன் உடல்.. மூளை களைப்படையும் வரை சாத்தியமில்லை.)

எண்ணம் இன்றி செயல் என்பது (இச்சையின்றிய செயல்கள் தவிர.. உதாரணத்துக்கு இதயத்தை எங்கள் விருப்பப்படி இயக்க முடியாது. அது இயக்கிவிட்டபடிதான் இயங்கும். இதயத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பிறப்பினும்.. எம்மால் அது ஆகாது. அதனால் அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றோம்.)

நாம் பலவற்றை எண்ணுகின்றோம். அதில் பாதி செய்யத்தாகதவை.. அல்லது செய்ய முடியாதவை. அவற்றிற்கு நாமே நமது இயலாமைகளால் கட்டுப்படுகின்றோம். எண்ணத்தைக் கட்டுப்படுத்தவது தவறல்ல.. ஆனால் எண்ணம் பிறப்பதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால் பிறந்த எண்ணம் செயல்வடிவமாவதை கட்டுப்படுத்தலாம். ஆனால் வளமான எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமல்ல. வளமற்ற எண்ணங்களால்.. உடலும் இயக்கமும் தேசப்படுவதை தடுக்க.. வளமற்ற எண்ணங்களைக் (எண்ணங்கள் தோன்றுவதை கட்டுப்படுத்த முடியாது.. எண்ணம் தோன்றிய பின்.. அது செயலாவதைக் கட்டுப்படுத்துதல் நன்று.. அதை பயிற்சியியால் செய்யலாம்.) கட்டுப்படுத்துவது நன்று..!

இப்போ ஒரு பெண்ணைப் பார்கிறோம். அவளின் அழகை எண்ணம் ரசிக்கிறது. அதற்காக அவளை எண்ணம் அதற்கு மேல் கையாள நினைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். பார்ப்பதோடு செயல் முடிந்து போய்விடும்.. ஆனால் இதே இன்னொருவரின் எண்ணத்தில் அவளின் அழகு அவரை சுண்டி இழுக்கிறது. அவளை தொட்டுப்பார்க்க விருப்பமாகக் கூட அவர் எண்ணம் எழலாம். ஆனால் அதை சாத்தியப்படுத்த அவர் இயங்குவாராயின்.. விளைவு விபரீதமாகுவும் முடியலாம்.. அனுகூலமாகவும் முடியலாம். அந்தப் பெண்ணின் எண்ணமும் அவரின் எண்ணமும் ஒன்றாயின்.. அப்புறம் என்ன டூயட் தான்..! ஆனால் அங்கு செருப்படிக்கான செயற் தகவும் இருக்கு என்பதை அவர் எண்ணம் உள்வாங்க.. அவர் வாழ்ந்த வளர்ந்த காலம் சூழல்.. முக்கியம்.

எண்ணத்தைக் கட்டுப்படுத்த சரியான வழி.. செயற் தகவு. அதாவது எண்ணம் செயற்பாடாக மாறக் கூடிய சந்தர்ப்பத்தை அளிப்பதும்.. தவிர்ப்பதும். இப்போ ஒரு நூலை படிக்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது. வாங்கிப் படிக்கிறீர்கள். ஆனால் எண்ணம் அதற்கு அடிமையாகி அதையே சுற்றிச் சுற்றி வருகிறதா.. என்ன செய்வது. நூல் கிடைக்கும் தகவை இல்லாமல் செய்வதால் தான் அந்த எண்ணத்தை கட்டுப்படுத்த உதவும்.

எல்லோரும் விமானம் ஓட்ட ஆசை இருக்குது. ஆனால் சாத்தியப்படாத போது.. அடங்கிப் போகிறோம். எல்லோருக்கும் காதலிக்க ஆசை இருக்கும். ஆனால்.. சாத்தியப்பட்டும்.. ஏமாறிப் போனால் பலர் விலகிப் போகிறோம். சிலர்.. மரணித்தே போகின்றனர். எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியாமையே பலவீனமான முடிவுகளுக்குக் காரணம். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட சூழலில் எண்ணத்தைக் கட்டுப்படுத்தி அச்சூழலில் இருந்து வெளிவந்த பின்.. ஆகா.. இதுதானா.. இந்தளவு இலகுவான சூழலையா நான் சந்திக்கப் பயந்தேன் என்று நினைத்து உங்களை பற்றி நீங்களே வியந்து கொள்வீர்கள்.

மரணம் என்பது கூட ஒரு எண்ணத்தின் பிரதிபலிப்பே. இயங்காத உடல்நிலையை மரணம் என்பதாக எண்ணிக் கொள்கின்றோம். ஆனால் இயற்கைக்கு மரணித்த உடலும் ஒரு கூறு. உயிருள்ள உடலும் ஒரு கூறே. மரணம் என்பது எமது எண்ணத்திற்கும்.. உடலின் ஒரு இயக்க நிலைக்கும் தான். மரணித்த பின்னும் எமது உடலுக்கு ஒரு இயக்கம் இருக்கிறது. ஆனால் அது உணர்வால் உணர முடியாதது. இறந்த உடல் உக்கிப் போகிறது. அது இயக்கமின்றி நிகழாது. அங்கு இரசாயன.. பெளதீக.. கூற்றியல் இயக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆக எண்ணம்.. செயலாவது கட்டுப்படுத்தக் கூடியது.. மட்டுமல்ல.. கட்டுப்படவும் கூடியது.. ஆனால் பிறப்பு முதல் மரணம் வரை செயற்படு மூளை இருப்பின்.. எண்ணம் பிறப்பெடுப்பதை கட்டுப்படுத்த முடியாது. அது இச்சையில் திசையிலேயே அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது..!

எனி எண்ணத்தை ஒருங்குவிக்கும்.. ஒரு எளிமையான முறை பற்றி சொல்லுறன்..

எனக்கு எனது சின்ன வகுப்பு ஆசிரியரும் (பின்னர் யாழ் இந்துக்கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி விலங்கியல்.. பின்னர் உயிரியல் ஆசிரியராக இருந்த ஈஸ்வரதாசன் (ஈசன்) அவர்களும் சொல்லித்தந்தது.) சொல்லித்தந்த எண்ணத்தை கட்டுப்படுத்தும் வழியைச் சொல்கிறேன்..

கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டு.. உங்கள் முகத்தை அந்த இருண்ட உலகில் கண்டு கொண்டு... அதன் நெற்றின் மையப்பகுதியை (பொட்டு வைக்கும் இடம்) நோக்குவதனால்.. உங்கள் எண்ணத்தை ஒருங்குவிக்கலாம். இப்படிப் பழகினீர்கள் என்றால்.. அலையலையாக எழும் எண்ணத்தைக் கட்டுப்படுத்தி.. ஓர் எண்ணத்தோடு.. எண்ண அமைதியை மூளைக்கு வழங்கலாம். இது எனக்கு சாதாரணமாக வரும். சிறுவயதில் இருந்தே செய்ய ஆரம்பித்துவிட்டதால்...! இதனால் கோபம்.. ஆத்திரம்.. தேவையற்ற சிந்தனைகள் வாறது குறைவு.

இவ்வாறே நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு இருண்ட உலகில் இருந்து கொண்டு நீங்கள் அன்றாட படிக்கும் பாடங்களை வரிசையாக எண்ணத்தில் கொண்டு (படிப்படை எண்ணத்துக்கு கொண்டு வர படிப்பது விளங்க வேண்டும்.. விளங்காததை மீட்டி விளங்கிக் கொண்டு இதனைச் செய்ய வேண்டும்.) வந்து படித்தீர்கள் என்றால்.. அவை ஞாபகத்தில் அதிகம் இருக்கும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

ஆறுமுக நாவலர் இப்ப நிழலிட "பெரிய இச்சை" தோட்டத்துக்குள்ள தான் மினக்கடுறாராம் தன்ட பெரிய புராணத்தை விட்டுட்டு என்று கேள்வி...(ஓ! அது நான் தொடக்கின வதந்தியா?! :icon_idea: சரி எதோ ஒண்டு...). மிஸ்டர் நாவலர் இங்க வந்து எனக்கு பதில் சொல்ல போறது இல்லை....சொன்னாலும் எனக்கு விளங்க போறது இல்லை..!

ஆசிரம ஜோசினைக்கு நன்றி. ஆனால் நான் நினைக்கிறேன் - ஆச்சிரம வாழ்கையும் பாதில அலுக்கலாம், இல்லையா?!

சரி கொஞ்ச நாள் யாரும் ஆன்மிகம் படிச்ச ஆக்களிட்ட மனதை நிலைபடுத்திரதை மட்டும் படிச்சு அறிஞ்சாலும் - மனம் அப்படி வில்லங்கத்துக்கு நிலைப்படுத்து பட வேண்டிய ஒன்றா?? தமிழ்ல என்ன வார்த்தை சரியானது என்று தெரியேல்லை - ஆனால் தானாக இயங்க வேண்டிய மனதை நிலைப்படுத்தி விட்டால் அதிட "sensitivity" குறைஞ்சு விடாதா?!

நெடுக்கு எங்க? ஏதாவது புதுசா ஒரு கோணத்தில இருந்து பதில் சொல்றதுக்கு - நான் கிளறி விடுறதுக்கு - பிறகு என்னையே குழப்புறதுக்கு!! :D

ஆறுமுகத்தார் பற்றி கனக்க கதைக்கவேண்டாம் அந்தாள் வந்தால் கையில கத்திகள் பொல்லுகள் வைத்திருக்கிற படத்தோடயும் ஒரு பாட்டோடயும் வந்து இருக்கிற நிம்மதியையும் போக செய்திடுவார்,நீங்கள் எல்லாரும் ஏன் மனதை நடுநிலைபடுத்தனும் என்று நினைக்கிறிங்கள் ? காரணத்தை சொல்லுங்கோ பார்ப்பம்,இப்ப என்ன மனதை நடுநிலைபடுத்தி இருநூறு வருசமே வாழப்போறிங்கள்,வாழுறது ஐம்பதோ அறுபது வருஷம் அதுவும் நிச்சயம் இல்லை அதுமட்டும் விரும்புறபடி மற்றவனுக்கு கரைச்சல் குடுக்காமல் வாழ்ந்திட்டு போங்கோவன். மனம் ஒரு குரங்கு நீங்கள் என்ன சொன்னாலும் அந்த குரங்கு கேட்காது கேட்கவும் கூடாது அப்படி கேட்டால் சொன்னவன் ஒரு பெரிய தாட்டான் குரங்கு,வாழ்க்கையை அனுபவி ராஜா எவனோ சொல்லுறான் எண்டு இல்லாததை தேடி காலத்தை அனியாயமாக்காதீங்கோ.

...... இப்ப என்ன மனதை நடுநிலைபடுத்தி இருநூறு வருசமே வாழப்போறிங்கள்,வாழுறது ஐம்பதோ அறுபது வருஷம் அதுவும் நிச்சயம் இல்லை அதுமட்டும் விரும்புறபடி மற்றவனுக்கு கரைச்சல் குடுக்காமல் வாழ்ந்திட்டு போங்கோவன். மனம் ஒரு குரங்கு நீங்கள் என்ன சொன்னாலும் அந்த குரங்கு கேட்காது கேட்கவும் கூடாது அப்படி கேட்டால் சொன்னவன் ஒரு பெரிய தாட்டான் குரங்கு,வாழ்க்கையை அனுபவி ராஜா எவனோ சொல்லுறான் எண்டு இல்லாததை தேடி காலத்தை அனியாயமாக்காதீங்கோ.

வேத வாக்குகள் :D:D:D என்ர பொலிசியோட யாழ் களத்தில் இன்னொருத்தரும் இருக்கின்றார் என அறிந்த பின் நெஞ்சில் பால் வார்த்த மாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1.சுவாமி சிவானந்தரின் "மனமும் அதன் ரகசியங்களும் அதை அடக்கி ஆளும் வழி முறைகளும்",

2.ரமண மகரிஷியின் "நான் யார்?",

3. சுவாமி விவேகானந்தரின் "ராஜ யோகம்",

இந்த மூன்று புத்தகங்களும் உங்களுக்கு தேவையான எல்லா விடைகளையும் அளிக்கும், நீங்கள் உண்மையிலேயே ஆர்வமுடனிருந்தால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுமையாக இருந்து நீண்ட விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி நெடுக்கு!

மனசு என்ற ஒன்று கிடையாது என்பது எனது எண்ணம். எண்ணம் என்ற ஒன்றுதான் இருக்கிறது. அது மூளையில் இருக்கிறது. மூளையின் செயற்பாடுகள் பல இச்சையின்றிய செயற்பாடுகள். அவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாது. இச்சையுள் செயற்பாடுகளை வேண்டுமானால் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். எண்ணம் இச்சையுள் இச்சையில் இரண்டும் கலந்தது.

-சரி... ஒத்துகொள்கிறேன்.

ஆனால் உடலின் இயக்கத்துக்கும் மூளையின் செயற்பாட்டிற்கும் தொடர்பு இருப்பது போல.. இயற்கையின் இயக்க நிலைக்கும் உயிர்களின் இயங்கு நிலைக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது. மாற்றங்கள் இயற்கையானவை. ஏனெனில் இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சக் கொள்கைகளின் பிரகாரம்.. விரிந்து கொண்டிருக்கிறது.. பிறந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப கூறுகள் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். உயிரினங்களும் அப்படியே..!

-universe - mind ரெண்டையும் தொடுக்கும் கூற்றுகளை படித்தது உண்டு. அந்த அடிப்படையில் உங்கள் வாதத்தை காண்பது சரி. உங்களுக்கு நல்ல தமிழ் இருப்பதால் விளங்கபடுத்துவது சுலபமாக இருக்கிறது போல. எனது தமிழறிவு கவலைக்கிடம் :( .

ஆனால் தனி மனித எண்ணம் என்பது இயற்கையின் மாற்றங்களை வேண்டி மட்டும் செயற்படவில்லை. அது மனிதன் தானே உருவாக்கி வைத்துள்ள செயற்கைச் சூழலையும் உள்வாங்கி இயங்க வேண்டி இருக்கிறது. இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப எமது உடலில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்கள் எமது உடலில் மாற்றங்களாக பதியப்படுகின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

-- இருக்கிறது என்பது எனது கருத்து. கவலைகள்/ ஜோசனைகளுடன் உள்ளவர்களது internal chemical balance வித்தியாசப்படும் தானே சாதாரணமாய் சந்தோசமாக postive ஆன சிந்தனைகளுடன் உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது...

- அத்துடன் எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்கள் எமது உடலில் மாற்றங்களாக பதியப்படுகின்றனவா என்றால் ....எல்லாருக்கும் தெரிந்த ஒரு x-rated விளக்கம் :D - அதை சொல்ல தேவை இல்லை! :)

ஆக எண்ணம் என்பது எமது உடலை இயக்கத்தை ஒழுங்கமைக்கும்.. கட்டுப்படுத்தும்.. வழிநடத்தும் ஒரு கட்டுப்பாட்டகம். அது விரிந்து பரந்து செல்லினும்.. கட்டுப்படுத்துவது என்பது கடினமல்ல. நஞ்சை கண்டு சாப்பிடாமல் விடுகிறோம்.. இல்ல சாப்பிட்டு பார்த்திடுவோம் என்றால் என்னாவது. அங்கு எண்ணம் கட்டுப்படவில்லையா. தினமும் உங்களை அறியாமலே உங்கள் எண்ணங்கள் பலவற்றை கட்டுப்படுத்துகிறீர்கள். ஆனால் கட்டுப்படுத்தனும் என்று நினைக்கிற எண்ணத்துக்குத்தான் கட்டுப்பட மறுக்கிறார்கள் பலர்.

-ம்ம்ம்....உண்மை :D

நாம் வாழ்ந்த வளர்ந்த வாழ்கின்ற சுழல் எமது எண்ணத்தின் கோலத்தில் செல்வாக்குச் செய்கிறது. அதன் பொருட்டு அதனைக் கட்டுப்படுத்தும் இயல்பும் ஆளாளுக்கு மாறுபடுகிறது. எமது எண்ணத்துக்கு தவறானது.. இன்னொருவருக்கு சரியாகப்படும் போது.. கட்டுப்படுத்து என்று எதனை எப்படி வரையறுப்பது. பொதுவாக உடலுக்கு செயலுக்கு சிந்தனைக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதை கட்டுப்படுத்தச் சொல்லலாம். ஆனால் மாறுபட்ட வரையறுக்கக் கடினமான எண்ணங்களை மற்றும் ஒருவருள் தோன்றும் பலவகையான பலவேறு எண்ணங்களையும் கட்டுப்படுத்த முடியாது.

-true. -எண்ணம் செயல் வடிவம் ஆவதை கட்டுபடுத்தலாம்.... கட்டுப்படுத்துதல் சிலவேளைகளில் அவசியம். சரி, ஆனால் அதன் உள்தாக்கம் என்ன? ஒரு எண்ணத்தின் பலனை தனிப்பட்ட முறையில் இல்லாவிட்டாலும் பிறர் மூலமாக தெளிந்து அறிவது - தாக்கத்தை உண்டாக்கும் எண்ணத்தை தவிர்க்க உதவும். எடுத்து காட்டுக்கு நீங்கள் சொன்ன நஞ்சு உண்ணும் விளக்கம். அப்படி செய்ய வெளிக்கிடும் பலர் பெரும்பாலும் சாகிறார்கள் என்றதை அறிந்து இருப்பது, அந்த எண்ணத்திற்கு இலகுவான முட்டுகட்டையாகிறது. ஆனால் சிலவிடயங்கள் அப்படி அல்லவே - எடுத்து காட்டுக்கு வெள்ளைக்காரன் தனது கலாச்சாரத்தை விட்டு காப்பிலியை கட்டினால் கூட பறவாய் இல்லை என்ற நிலை. ஆனால் எங்கட கலாச்சாரத்தில தமிழ்பிள்ளை இன்னொரு தமிழ் பொடியனை விரும்பினாலே அதுக்குள்ளே 1008 சிக்கல். எனெவே செய்ய கூடாது என்று ஒராள் கட்டுபடுத்தும் சிந்தனை அடுத்தாளுக்கு ஒரு பிரச்சனையாக தோணாது....இரண்டும் மனித எண்ணம் தான்...மனித மூளை தான்...

-அடிப்படையில் மனிதன் என்று பார்க்கும் போது - கலாச்சாரங்களுக்கு அப்பால் உடற்செயற்பாடுகள்/ இயக்கங்கள் என்பன ஒரே மாதிரி தான் இருக்கின்றன. உடல் வருத்தங்கள் பெரும்பாலும் (எல்லாம் அல்ல) ஒரே மாதிரியாக தான் பாதிக்கின்றன. மனோதத்துவ ரீதியாக பார்ப்பின், எமது அறிவுக்கு எட்டிய/எமது கலாச்சாரத்திற்கு/ எமது சூழலுக்கு ஏற்ப தாக்கங்களை தான் எம்மால் வெளிப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் வெளிப்படுத்த முடியாத தாக்கங்கள் - எமது சிந்தனைகளின் மூலம்/ அவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் - எம்மால் விளங்கி கொள்ள முடியாத ஒரு dimension இல இருக்கலாம் என்பது எனது அறிவு... - உங்கள் விளக்கம் என்ன?

எண்ணம் இன்றி செயல் என்பது (இச்சையின்றிய செயல்கள் தவிர.. உதாரணத்துக்கு இதயத்தை எங்கள் விருப்பப்படி இயக்க முடியாது. அது இயக்கிவிட்டபடிதான் இயங்கும். இதயத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பிறப்பினும்.. எம்மால் அது ஆகாது. அதனால் அந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றோம்.)

- :unsure: -இதயம் என்று இருதயத்தை (organ-heart ஐ) தானே சொல்கிறீர்கள்? desires of the heart என்று மனதில் தோன்றும் ஆசைகளை இல்லை தானே?

நாம் பலவற்றை எண்ணுகின்றோம். அதில் பாதி செய்யத்தாகதவை.. அல்லது செய்ய முடியாதவை. அவற்றிற்கு நாமே நமது இயலாமைகளால் கட்டுப்படுகின்றோம். எண்ணத்தைக் கட்டுப்படுத்தவது தவறல்ல.. ஆனால் எண்ணம் பிறப்பதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால் பிறந்த எண்ணம் செயல்வடிவமாவதை கட்டுப்படுத்தலாம். ஆனால் வளமான எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமல்ல. வளமற்ற எண்ணங்களால்.. உடலும் இயக்கமும் தேசப்படுவதை தடுக்க.. வளமற்ற எண்ணங்களைக் (எண்ணங்கள் தோன்றுவதை கட்டுப்படுத்த முடியாது.. எண்ணம் தோன்றிய பின்.. அது செயலாவதைக் கட்டுப்படுத்துதல் நன்று.. அதை பயிற்சியியால் செய்யலாம்.) கட்டுப்படுத்துவது நன்று..!

-உண்மை தான்!

-மரணத்தை பற்றியும் உங்கள் விளக்கத்தை கூறி உள்ளீர்கள்.... அதை பற்றி இன்னொரு திரியே தொடங்கி ஆயலாம் என்று நினைக்கிறேன்!

மேலும் உங்களது செய்முறையான "கண்ணைமூடி.... .... .... " well, கண்ணை மூடினது தான் - நித்திரை சுழற்றி... கதிரையால விழாத குறை :) ....பழக பழக சரியாகும் என்று நினைக்கிறேன். எனக்குள் ஒரு பசாசு இருந்து (வேற யார் அதுவும் நான் தான் :D !) எனது சிந்தனையை நிலைப்படுத்த விடாமற் பண்ணுது என்று நினைக்கிறேன்!

சரி, உங்கள் அலட்டலுக்கு நன்றி....எனது அலட்டலை படித்ததற்கு நன்றி. மேலும் அறிய அவா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுமுகத்தார் பற்றி கனக்க கதைக்கவேண்டாம் அந்தாள் வந்தால் கையில கத்திகள் பொல்லுகள் வைத்திருக்கிற படத்தோடயும் ஒரு பாட்டோடயும் வந்து இருக்கிற நிம்மதியையும் போக செய்திடுவார்,நீங்கள் எல்லாரும் ஏன் மனதை நடுநிலைபடுத்தனும் என்று நினைக்கிறிங்கள் ? காரணத்தை சொல்லுங்கோ பார்ப்பம்,இப்ப என்ன மனதை நடுநிலைபடுத்தி இருநூறு வருசமே வாழப்போறிங்கள்,வாழுறது ஐம்பதோ அறுபது வருஷம் அதுவும் நிச்சயம் இல்லை அதுமட்டும் விரும்புறபடி மற்றவனுக்கு கரைச்சல் குடுக்காமல் வாழ்ந்திட்டு போங்கோவன். மனம் ஒரு குரங்கு நீங்கள் என்ன சொன்னாலும் அந்த குரங்கு கேட்காது கேட்கவும் கூடாது அப்படி கேட்டால் சொன்னவன் ஒரு பெரிய தாட்டான் குரங்கு,வாழ்க்கையை அனுபவி ராஜா எவனோ சொல்லுறான் எண்டு இல்லாததை தேடி காலத்தை அனியாயமாக்காதீங்கோ.

:D

தீபத்தை பற்றி சொன்னால் சிறி அண்ணைக்கும்.... ஆறுமுகத்தாரை பற்றி சொன்னால் உங்களுக்கும் கோவம் வாறதை பார்த்தல் சிரிப்பாய் இருக்கு!

நீங்கள் எல்லாரும் ஏன் மனதை நடுநிலைபடுத்தனும் என்று நினைக்கிறிங்கள் எண்ட கேள்விக்கு உண்மையான பதில்.... நான் நானாய் இருக்கிறதில் எனக்கு பிரச்சனை இல்லை....- ஆனால் என்ன- வேலையிடத்தில் எல்லாத்தையும் அடக்கி வாசிச்சு அம்பி மாதிரி இருந்திட்டு - சுத்தி உள்ள ஆக்களோட அந்நியன் மாதிரி எரிஞ்சு விழுறன்... போதாகுறைக்கு - எதிர்கால வாழ்கை துணை என்று வாறதுக்கு இருக்கிற சீவனோட கதைக்கேக்க அது ஒரு கதை சொன்னால் நான் பல்குழல் பீரங்கி கணக்கிற்கு போட்டு தாக்கி - பாவம் அது.. :D .! என்னால நிதானமாய் பதில் சொல்றதே பெரும் பாடாய் இருக்கு... முன்நாள் வரை ஒரு தனிபோக்காய் இருந்தது இப்படியான சூழ்நிலைகளை தவிர்த்து வந்தது... இப்ப அடுத்த அடி எடுத்து வைக்க பெரும்ஜோசனையா இருக்கு... என்னால தாக்கு பிடிக்க ஏலுமா என்று...வரும் மாற்றங்களுக்கு ஏற்ப மனம்/சிந்தனைகள் மாறுமா? இல்லை வரிந்து கட்டி மாற்றவேண்டுமா? என்று...! மாற்ற வேண்டும் என்கிறார்கள் சிலர். "எல்லாரும் இப்படி தான் இருக்கினம் - பார்த்து நீயும் இரு" ...என்ற விளக்கம் நான் ஏற்றுக்கொள்ள கூடியது இல்லை....இதை பற்றி விவாதிக்க போய் தான் இந்த வில்லங்கம் பிடிச்ச தலைப்பு எழுத வேண்டி வந்தது...

என்றாலும் நீங்கள் எழுதிய ஆசிரமத்திற்கு போ... ஆறுமுகத்தாரிட்ட கேள் என்பதெல்லாம் படிக்க சிரிப்பு என்றாலும் வந்தது! :unsure:

1.சுவாமி சிவானந்தரின் "மனமும் அதன் ரகசியங்களும் அதை அடக்கி ஆளும் வழி முறைகளும்",

2.ரமண மகரிஷியின் "நான் யார்?",

3. சுவாமி விவேகானந்தரின் "ராஜ யோகம்",

இந்த மூன்று புத்தகங்களும் உங்களுக்கு தேவையான எல்லா விடைகளையும் அளிக்கும், நீங்கள் உண்மையிலேயே ஆர்வமுடனிருந்தால்

நன்றி சிறினிவாசன்...

நிழலியின் பேரீச்சை தொடர் முடிந்ததும் - இந்த புத்தகங்களை வாங்கி படிக்க முயற்சி செய்கிறேன்...

:D

  • கருத்துக்கள உறவுகள்

-----

-----

நன்றி சிறினிவாசன்...

நிழலியின் பேரீச்சை தொடர் முடிந்ததும் - இந்த புத்தகங்களை வாங்கி படிக்க முயற்சி செய்கிறேன்...

:D

இளையபிள்ளை , நிழலியின் பேரீச்சை தொடர் நடக்கும் போது .....

1.சுவாமி சிவானந்தரின் "மனமும் அதன் ரகசியங்களும் அதை அடக்கி ஆளும் வழி முறைகளும்",

2.ரமண மகரிஷியின் "நான் யார்?",

3. சுவாமி விவேகானந்தரின் "ராஜ யோகம்",

போன்ற புத்தகங்களை படித்தால் மனம் ஒருமுகப்பட்டு , டுபாய் ஜில்மால் விளையாட்டுக்களை வாசிக்க இடைஞ்சல் ஏற்பட்டுவிடும் என்று பயம் வந்துவிட்டதோ ......... :D

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் 3 மிகச் சாதாரண விடயங்களில் எப்படி மனசை கட்டுப் படுத்துவது என்பதை முதலில் யாராவது சொல்லுங்கோ

1. அலுவலகத்தில் வேலை செய்யும் சக பெண் அலுவலகர் பெரிய V வடிவில் மேலாடை அணிந்து வந்து எனக்கு முன் குனிந்து நின்று ஏதேனும் தேடும் போது

2. பக்கத்து சீட்டில் இருப்பவன் கொண்டு வந்த புரியாணி உனவின் வாசனை மூக்கை துளைக்கையில், அவனின் உணவை பார்க்க ஆசை வரும் போது

3. மகனதும் மகளினதும் காபரே டான்ஸினை பிறந்த நாள், கல்யாண வைபவம் போன்ற ஒன்றில் நடாத்தி களைத்து , அதனை போக்க நல்லா தண்ணி அடித்த பின், "புலிகள் விட மாட்டாங்கள்" என்று வீர வசனம் பேசுபவர்களின் மூஞ்சியில் ஓங்கி குத்த மனம் நாடும் போது

:நிழலி

பெண் மார்புக்குள் ஒரு மனசு உண்டு அதையும் பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் மார்புக்குள் ஒரு மனசு உண்டு அதையும் பாருங்கள்.

:lol: இவர் இன்னும் டீப்பா எட்டி பார்த்து இருப்பார் போல!

நிழலி அண்ணா..

இவர் சொல்றார் எண்டு நீங்கள் இன்னும் எட்டி பார்த்து அந்த மனுசிட்ட அடி வாங்கி போடாதையுங்கோ... மார்புக்குள்ள இல்லை மனசு....

ஏன் இவ்வளவு இடம் இருக்க மார்புக்குள்ள தான் மனசு இருக்கு எண்டுது சனம்? "ம" வரிசையில தான் முழங்காலும் இருக்கு.... - முழங்காலுக்க மனசு இருக்கு எண்டலாமே!!! :rolleyes:

இளையபிள்ளை , நிழலியின் பேரீச்சை தொடர் நடக்கும் போது .....

1.சுவாமி சிவானந்தரின் "மனமும் அதன் ரகசியங்களும் அதை அடக்கி ஆளும் வழி முறைகளும்",

2.ரமண மகரிஷியின் "நான் யார்?",

3. சுவாமி விவேகானந்தரின் "ராஜ யோகம்",

போன்ற புத்தகங்களை படித்தால் மனம் ஒருமுகப்பட்டு , டுபாய் ஜில்மால் விளையாட்டுக்களை வாசிக்க இடைஞ்சல் ஏற்பட்டுவிடும் என்று பயம் வந்துவிட்டதோ ......... :lol:

:unsure:

:D

எல்லாம் ஒரே சைவகோடியல்ற புத்தகமா வாசிக்க சொன்னார்.... அதான் தப்புறதுக்கு.... இதெல்லாம் விளங்கி கொடுப்புக்குள்ள மட்டும் சிரிச்சு போட்டு மறந்திரோனும்... quote பண்ணி காட்டி கொடுக்க கூடாது சிறி அண்ணா. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் என்ன- வேலையிடத்தில் எல்லாத்தையும் அடக்கி வாசிச்சு அம்பி மாதிரி இருந்திட்டு - சுத்தி உள்ள ஆக்களோட அந்நியன் மாதிரி எரிஞ்சு விழுறன்...

எனக்கும் உதே பிரச்சனைதான். ஏதும் வழி கிடைச்சால் சொல்லுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

தீபத்தை பற்றி சொன்னால் சிறி அண்ணைக்கும்.... ஆறுமுகத்தாரை பற்றி சொன்னால் உங்களுக்கும் கோவம் வாறதை பார்த்தல் சிரிப்பாய் இருக்கு!

நீங்கள் எல்லாரும் ஏன் மனதை நடுநிலைபடுத்தனும் என்று நினைக்கிறிங்கள் எண்ட கேள்விக்கு உண்மையான பதில்.... நான் நானாய் இருக்கிறதில் எனக்கு பிரச்சனை இல்லை....- ஆனால் என்ன- வேலையிடத்தில் எல்லாத்தையும் அடக்கி வாசிச்சு அம்பி மாதிரி இருந்திட்டு - சுத்தி உள்ள ஆக்களோட அந்நியன் மாதிரி எரிஞ்சு விழுறன்... போதாகுறைக்கு - எதிர்கால வாழ்கை துணை என்று வாறதுக்கு இருக்கிற சீவனோட கதைக்கேக்க அது ஒரு கதை சொன்னால் நான் பல்குழல் பீரங்கி கணக்கிற்கு போட்டு தாக்கி - பாவம் அது.. :rolleyes: .! என்னால நிதானமாய் பதில் சொல்றதே பெரும் பாடாய் இருக்கு... முன்நாள் வரை ஒரு தனிபோக்காய் இருந்தது இப்படியான சூழ்நிலைகளை தவிர்த்து வந்தது... இப்ப அடுத்த அடி எடுத்து வைக்க பெரும்ஜோசனையா இருக்கு... என்னால தாக்கு பிடிக்க ஏலுமா என்று...வரும் மாற்றங்களுக்கு ஏற்ப மனம்/சிந்தனைகள் மாறுமா? இல்லை வரிந்து கட்டி மாற்றவேண்டுமா? என்று...! மாற்ற வேண்டும் என்கிறார்கள் சிலர். "எல்லாரும் இப்படி தான் இருக்கினம் - பார்த்து நீயும் இரு" ...என்ற விளக்கம் நான் ஏற்றுக்கொள்ள கூடியது இல்லை....இதை பற்றி விவாதிக்க போய் தான் இந்த வில்லங்கம் பிடிச்ச தலைப்பு எழுத வேண்டி வந்தது...

என்றாலும் நீங்கள் எழுதிய ஆசிரமத்திற்கு போ... ஆறுமுகத்தாரிட்ட கேள் என்பதெல்லாம் படிக்க சிரிப்பு என்றாலும் வந்தது! :unsure:

இல்லை இளையபிள்ளை ஆறுமுகத்தார் மனதை எப்பிடி ஒருநிலைப்படுத்தி வைத்திருக்கிறார் என்று பாருங்கோ,நீங்கள் என்ன தன திட்டினாலும் பக்கத்தில இருக்கிறவன் செத்து விழுந்தாலும் அவர் தேவாரம் பாடிக்கொண்டேதன் இருப்பார்.

நீங்கள் சொல்லுற அறிகுறிகள் எனக்கும் இருக்கு இதைபற்றி கவலைப்படவே தேவையில்லை,இப்பிடி இருந்தால் தான் மனுஷன் எல்லாத்திலையும் நூறு வீதம் சரியா இருந்தால் அந்த வாழ்கை வாழ்க்கை அல்ல,காலங்கள் சூழ்நிலைகள் மாறும் போது எம்மையறியாமலே அதற்கு இசைந்துபோகவேண்டிய நிலை ஏற்படும் அதை நாம் எம்மை மாற்றவேண்டும் என்று நினைத்து மாற்றுவது கடினமானது,எதிர்கால துணைவி என்று சொன்னிங்கள் அவவை கட்டினபிறகு இப்பிடி நீங்களாவே அடிக்கடி கதைக்கமாட்டிங்கள் அப்பிடி நீங்கள் ஒருவேளை கதைத்தாலும் அவ அதை பெரிதாக எடுக்கமாட்டா,ஓன்று நீங்கள் மாறியிருப்பிங்கள் அல்லது அவ மாறியிருப்பா,ஆகவே இதை எல்லாம் பெரிய விடயமாக நினைத்து மனதை அலட்டிகொள்ளாதேங்கோ.அடிப்பது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேத வாக்குகள் :rolleyes::unsure::lol: என்ர பொலிசியோட யாழ் களத்தில் இன்னொருத்தரும் இருக்கின்றார் என அறிந்த பின் நெஞ்சில் பால் வார்த்த மாதிரி இருக்கு

ஒ நீங்களும் அப்பிடியே,அப்புறம் என்ன இந்த உலகத்தில உள்ளது எல்லாம் எங்களுக்கு தான் மற்றவனின்டைய எடுக்காமல் அனுபவிப்பம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை இளையபிள்ளை ஆறுமுகத்தார் மனதை எப்பிடி ஒருநிலைப்படுத்தி வைத்திருக்கிறார் என்று பாருங்கோ,நீங்கள் என்ன தன திட்டினாலும் பக்கத்தில இருக்கிறவன் செத்து விழுந்தாலும் அவர் தேவாரம் பாடிக்கொண்டேதன் இருப்பார்.

:lol::lol: ம்ம்ம்....உண்மை தான்...அங்கால முழு ஆங்கிலத்தில் ஏதோ விட்டு விளாசுறார் போல...

மற்ற ஆலோசனைகளுக்கும் நன்றி சுப்பண்ணை. ஆனால் அடிக்கிறது அது இது என்று பயப்பிடுத்தாதையுங்கோ.. அடிக்கவும் கூடாது...அடி வாங்கவும் கூடாது.

எதுவாய் இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளோணும்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.